search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ashtalakshmi Temple"

    • லட்சுமி தேவியின், எட்டு அவதாரங்களை இக்கோவிலில் தரிசிக்கலாம்.
    • அஷ்டலட்சுமியின் அவதாரங்களை ஒருசேர வணங்குவது விசேஷமாகும்.

    சென்னை பெசன்ட் நகர் கடற்கரைப் பகுதியில் எழுந்துள்ளது, அஷ்டலட்சுமி கோவில். செல்வத்துக்கும் செழிப்புக்கும் வழிகாட்டும் கடவுளாக பூஜிக்கப்படும் லட்சுமி தேவியின், எட்டு அவதார கோலங்களை இக்கோவிலில் தரிசிக்கலாம்.

    விஷ்ணுவின் துணைவியே லட்சுமி தேவி என்பது யாவரும் அறிந்ததே. தனம், தான்யம், கஜம், சந்தானம், வீரம், விஜயம், வித்யா போன்ற பாக்கியங்களை அருளும் அஷ்டலட்சுமியின் அவதாரங்களை ஒருசேர வணங்குவது விசேஷமாகும். கடற்கரையை ஒட்டியே வீற்றிருக்கும் இந்தக் கோவில் நான்கு அடுக்குகளைக் கொண்டுள்ளது. இவற்றில் எட்டு அவதார வடிவங்களும் வெவ்வேறு பிரிவுகளில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

    முதல் தளத்தில் ஆதிலட்சுமி, தைரியலட்சுமி மற்றும் தான்ய லட்சுமி ஆகியோர் அருள்புரிகின்றனர். ஆனால் இரண்டாவது தொகுதியில் உள்ள மகாலட்சுமி மற்றும் மகாவிஷ்ணுவை வணங்கிய பின்னரே, மற்ற தெய்வ வடிவங்களை வணங்கவேண்டும் என்ற ஐதீகம் பின்பற்றப்படுகிறது. எனவே மூன்றாவது தளத்தில் உள்ள சந்தானலட்சுமி, விஜயலட்சுமி மற்றும் கஜலட்சுமியையும், நான்காவது தளத்தில் தனலட்சுமியையும் வழிபட்ட பின்னர் முதல் தளத்தில் உள்ள லட்சுமிகளை வழிபடலாம்.

    • திண்டுக்கல்-நத்தம் சாலையில் குடகனாறு இல்லம் எதிரில் அஷ்டலெட்சுமி கோவில் உள்ளது.
    • அஷ்டலட்சுமி அம்மன் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல்-நத்தம் சாலையில் குடகனாறு இல்லம் எதிரில் 24 மனை தெலுங்கு செட்டியார்கள் சமூகத்திற்கு பாத்தியப்பட்ட அஷ்டலெட்சுமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் இன்று கும்பாபிஷேகம் விழா சிறப்பு பூஜையுடன் தொடங்கியது.

    இன்று காலை 6.30 மணி அளவில் மங்கள இசையுடன் நான்காம் காலம் ஆரம்பம்,வேதி கார்ச்சனை, விஷ்ணுசகஸ்ரநாம பாராயணம், தன பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் செய்து ஹோமங்கள் நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து காலை 9:30 மணி அளவில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட புனித நீர் கலசம் யாகசாலையை வலம் வந்து ஆலய கோபுர கலசத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

    பின்னர் அஷ்டலட்சுமி அம்மன் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது.அதனை தொடர்ந்து மூலஸ்தான மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை அடுத்து அம்மனுக்கு மஞ்சள், சந்தனம்,திருநீறு உள்ளிட்ட பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்கார தீபாராதனை நிகழ்ச்சி நடந்தது.

    இவ்விழாவில் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ்,துணை மேயர் ராஜப்பா,வார்டு கவுன்சிலர்கள் ஜோதிபாசு,தி.மு.க மாநகர பொருளாளர் சரவணன், சபரி இந்திரகோபால்,அரசியல் பிரமுகர்கள்,தொழில் அதிபர்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அஷ்டலெட்சுமி கோவில் அறங்காவலர் குழு நிர்வாகிகள் தொழிலதிபர்கள் ரவிச்சந்திரன், ராமையா,செயலாளர் தில்லை நடராஜன்,பொருளாளர் மாரிமுத்து, வழக்கறிஞர் குப்புசாமி மற்றும் நிர்வாகிகள்,உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

    ×