search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல் அஷ்டலட்சுமி கோவில் கும்பாபிஷேகம்
    X

    கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது.

    திண்டுக்கல் அஷ்டலட்சுமி கோவில் கும்பாபிஷேகம்

    • திண்டுக்கல்-நத்தம் சாலையில் குடகனாறு இல்லம் எதிரில் அஷ்டலெட்சுமி கோவில் உள்ளது.
    • அஷ்டலட்சுமி அம்மன் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல்-நத்தம் சாலையில் குடகனாறு இல்லம் எதிரில் 24 மனை தெலுங்கு செட்டியார்கள் சமூகத்திற்கு பாத்தியப்பட்ட அஷ்டலெட்சுமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் இன்று கும்பாபிஷேகம் விழா சிறப்பு பூஜையுடன் தொடங்கியது.

    இன்று காலை 6.30 மணி அளவில் மங்கள இசையுடன் நான்காம் காலம் ஆரம்பம்,வேதி கார்ச்சனை, விஷ்ணுசகஸ்ரநாம பாராயணம், தன பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் செய்து ஹோமங்கள் நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து காலை 9:30 மணி அளவில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட புனித நீர் கலசம் யாகசாலையை வலம் வந்து ஆலய கோபுர கலசத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

    பின்னர் அஷ்டலட்சுமி அம்மன் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது.அதனை தொடர்ந்து மூலஸ்தான மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை அடுத்து அம்மனுக்கு மஞ்சள், சந்தனம்,திருநீறு உள்ளிட்ட பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்கார தீபாராதனை நிகழ்ச்சி நடந்தது.

    இவ்விழாவில் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ்,துணை மேயர் ராஜப்பா,வார்டு கவுன்சிலர்கள் ஜோதிபாசு,தி.மு.க மாநகர பொருளாளர் சரவணன், சபரி இந்திரகோபால்,அரசியல் பிரமுகர்கள்,தொழில் அதிபர்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அஷ்டலெட்சுமி கோவில் அறங்காவலர் குழு நிர்வாகிகள் தொழிலதிபர்கள் ரவிச்சந்திரன், ராமையா,செயலாளர் தில்லை நடராஜன்,பொருளாளர் மாரிமுத்து, வழக்கறிஞர் குப்புசாமி மற்றும் நிர்வாகிகள்,உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×