search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ambasamuthiram"

    • மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கிருஷ்ணகுமார் பார்வையிட்டார்.
    • விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள துணை வேளாண்மை விரிவாக்க மையத்தையும் கிருஷ்ணகுமார் ஆய்வு செய்தார்.

    அம்பை:

    அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் தொடர் மழையின் காரணமாக நெற்பயிர் நீரில் மூழ்கி பாதிப்புக்குள்ளாகி உள்ளது.

    அவ்வாறு பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கிருஷ்ணகுமார் பார்வை யிட்டார். குறிப்பாக ஆலடியூர்-2 கிராமத்தில் சமீபத்தில் பெய்த மழை யினால் சாய்ந்த நெல் வயல்களை பார்வையிட்டார்.

    அங்கு இருந்த விவசாயிகளிடம் பாதிப்பு குறித்த விபரங்கள் கேட்டறிந்தார். உடன் அம்பாசமுத்திரம் வேளாண்மை உதவி இயக்குநர் கற்பகராஜ்குமார், வேளாண்மை துணை வேளாண்மை அலுவலர் திவான் பக்கீர் முகைதீன், உதவி வேளாண்மை அலுவ லர் சாமிராஜ், கிராம நிர்வாக அலுவலர்கள் திருமலைக்குமார், இசக்கி முத்து, கிராம உதவியாளர் ரபீக் மற்றும் அப்பகுதி விவசாயிகள் உடனிருந்தனர். வேளாண் மைத்துறை மற்றும் வருவாய்துறை அலுவலர்களை பாதிப்பு குறித்து விவசாயிகள் வாரி யாக கணக்கெடுக்க உத்தரவிட்டார்.

    மேலும் அவர் விக்கிரமசிங்க புரத்தில் உள்ள துணை வேளா ண்மை விரிவாக்க மையத்தை ஆய்வு செய்தார். தொடர்ந்து விதைகள் விநியோகம் மற்றும் இருப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மாவட்ட கலெக்டரின் உத்தரவுப்படி அம்பாசமுத்திரத்தில் உள்ள சில்லரை உரவிற்பனை கடையினை திடீர் ஆய்வு மேற்கொண்டார். உரங்கள் விற்பனை மற்றும் இருப் பினை ஆய்வு செய்தார். இருப்பு வித்தியாசம் இருந்த உரக்கடைக்கு விற்பனை தடை விதிக்கப் பட்டது.

    ஆய்வின் போது வேளாண்மை உதவி இயக்குநர் மற்றும் வேளாண்மை அலு வலர் ஷாஹித் முகையதீன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • ஆலோசனை கூட்டத்திற்கு இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
    • கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரவணன் சிறப்பு அழைப்பா ளராக கலந்து கொண்டார்.

    கல்லிடைக்குறிச்சி:

    அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ. அலுவலக வளாகத்தில் நெல்லை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோ சனை கூட்டம் நடைபெற்றது.

    புறநகர் மாவட்ட செயலா ளர் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன், முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் நாராயண பெருமாள், அமைப்பு செயலாளர் ஏ.கே.சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அ.தி.மு.க. மருத்துவ அணி இணை செயலாள ரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பி னருமான டாக்டர் சரவணன் சிறப்பு அழைப்பா ளராக கலந்து கொண்டு வருகிற பாராளுமன்ற தேர்தலில் பூத் கமிட்டி நிர்வாகிகள் எவ்வாறு செயல்பட வேண்டும், அவர்களது பணிகளை ஒருங்கிணைப்பது உள்ளிட்டை குறித்து விரி வாக எடுத்துரைத்தார்.

    கூட்டத்தில் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கூனியூர் மாடசாமி, மாவட்ட துணைசெயலாளர் செவல் முத்துசாமி, ஞானபுனிதா, பொதுக்குழு உறுப்பினர் பார்வதி பாக்கியம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செய லாளர் பெரிய பெருமாள், ஒன்றிய செயலாளர்கள் அம்பை விஜய பாலாஜி, சேரை மாரி செல்வம், களக்காடு வேல்சாமி, ராதா புரம் அந்தோணி அமல் ராஜ், செல்வராஜ், முத்து குட்டிப்பாண்டியன் நகரச் செயலாளர்கள் அம்பை அறிவழகன், வி.கே.புரம் கண்ணன், களக்காடு செல்வராஜ் சாமிநாதன், கல்லிடை முத்துகிருஷ்ணன், சேரை பழனிகுமார், நாங்குநேரி சங்கரலிங்கம், அம்பை நீர் பாசன கமிட்டி தலைவர் மாரிமுத்து, மணி முத்தாறு முன்னாள் நகர பஞ்சாயத்து தலைவர் சிவன்பாபு, அம்பை ஒன்றிய துணை செயலாளர் பிராங்க ளின், வக்கீல்கள் சுரேஷ், ஸ்டாலின் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • மகளிர் தின விழாவிற்கு அம்பை கலைக்கல்லூரி முதல்வர் சவுந்திரராஜா தலைமை தாங்கினார்.
    • சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்.பி. விஜிலா சத்தியானந்த் கலந்து கொண்டு பேசினார்.

    கல்லிடைக்குறிச்சி:

    அம்பாசமுத்திரம் கலைக்கல்லூரியில் சர்வதேச மகளிர் தினவிழா கல்லூரி உள் அரங்கத்தில் நடந்தது. விழாவிற்கு அம்பை கலைக்கல்லூரி முதல்வர் சவுந்திரராஜா தலைமை தாங்கினார். உதவி பேராசிரியர் தீபாலட்சுமி வரவேற்றார். கல்லூரி செயலர் டாக்டர் தங்கபாண்டியன் முன்னிலை வகித்தார்.

    சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்.பி.யும், தி.மு.க. மாநில மகளிர் தொண்டரணி துணைச் செயலாளருமான விஜிலா சத்தியானந்த் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியை தங்க செல்வி தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஆயிஷாள் பீவி நன்றி கூறினார். கல்லூரி சுயநிதி பிரிவு இயக்குனர் டாக்டர் வேலையா, உதவிப் பேராசிரியர் தனலெட்சுமி, பேராசிரியர் சிவக்குமார் மற்றும் கல்லூரியின் ஏனைய பேராசிரியர்கள், அலுவலர்கள் உட்பட நூற்றுக்கணக்கான மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • இந்த ஆண்டுக்கான மாசி மகா ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
    • ஊர்வலத்திற்கு முன்பாக சிறுவர், சிறுமிகளின் கோலாட்டம் நடைபெற்றது.

    சிங்கை:

    அம்பை அருகே உள்ள வாகைக்குளம் வாகைபதியில் ஒவ்வொரு ஆண்டும் அய்யா அவதார தினத்தன்று மாசி மகா ஊர்வலம் நடத்துவது வழக்கம். இந்த ஆண்டுக்கான மாசி மகா ஊர்வலம் நேற்று மாலை தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    அம்பை கிருஷ்ணன் கோவிலில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தை உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் கொடியசைத்து தொடங்கி வைத்தார். வகைபதி அய்யா வைகுண்டர் அனுமன் வாகனத்தில் எழுந்தருளினார்.

    ஊர்வலம் தொடங்கி மேற்கு நோக்கி அம்பாசமுத்திரம் பூக்கடை பஜார் வழியாக அகஸ்தியர் கோவில், வண்டி மறிச்சி அம்மன் இராணிஸ் ஸ்கூல் வழியாக தென்காசி சாலை யில் வாகைக்குளம் விலக்கு வழியாக வாகைக்குளம் வாகைபதிக்கு சென்றடைந்தது.

    இந்த மகா ஊர்வலத்தில் அம்பாசமுத்திரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 32 பதிகளில் இருந்துஅய்யா வைகுண்டர் அனுமன்,பல்லக்கு,தொட்டில்,கருடன், காளி,காளை,நாகம்,வேல், பூம்பல்லக்கு போன்ற பல வாகனங்களில் அய்யா வைகுண்டர் எழுந்தருளி மக்களுக்கு அருள் ஆசி வழங்கி ஊர்வலமாக வந்தார். ஊர்வலத்திற்கு முன்பாக சிறுவர், சிறுமிகளின் கோலாட்டமும், இளைஞர்களின் செண்டை மற்றும் சிங்காரி மேளமும், அய்யா ஹர ஹர என்ற கோஷம் முழங்கஊர்வலம் நடைபெற்றது. அம்பாச முத்திரம் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

    ஊர்வலம் வாகைக்குளம் வாகைபதி வந்தடைந்ததும் அங்கு சிறப்பு பணிவிடைகள் செய்யப்பட்டு அனை வருக்கும் அன்னதர்மம் வழங்கப்பட்டது. தொடர்ந்து ஒவ்வொரு பதிகளுக்கும் வாகன வசதி செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வாகைபதி அய்யாவழி அன்பு கொடி மக்களும், சுற்றுவட்டார அன்பு கொடிமக்களும் செய்திருந்தனர்.

    • மகா சிவராத்திரியை முன்னிட்டு அம்பாசமுத்திரம் பிரம்மதேசம் உள்ளிட்ட இடங்களில் உள்ள சிவாலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
    • சிவராத்திரி பூஜைகள் இன்று அதிகாலை வரை நடந்தது.

    கல்லிடைக்குறிச்சி:

    மகா சிவராத்திரியை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் உள்ள பாபநாசம், அம்பாசமுத்திரம் பிரம்மதேசம் உள்ளிட்ட இடங்களில் உள்ள சிவாலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கல்லிடைக்குறிச்சி மானேந்தியப்பர் மற்றும் வடிவாம்பிகை அம்பாள் கோவில் மகா சிவராத்திரி பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கி, இன்று அதிகாலை வரை சிவன் கோவில்களில் சிவராத்திரி பூஜைகள் நடந்தது. இதற்காக பக்தர்கள் இரவு முழுவதும் சிவாலயங்களில் இருந்து விடிய, விடிய நடந்த 4 கால பூஜைகளில் கலந்து கொண்டனர்.

    • சூழல் சரக வனக்குழு உறுப்பினர்களுக்கு வாழ்வாதார திறன் மேம்பாட்டிற்காக ஆரி எம்பிராய்டரிங்க் ஒர்க் தையல் பயிற்சி நடைபெற்றது.
    • நிகழ்ச்சிக்கு புலிகள் காப்பக சூழல் மேம்பாட்டு அலுவலர் அன்பு தலைமை தாங்கினார்

    கல்லிடைக்குறிச்சி:

    களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பை மற்றும் பாபநாசம் சூழல் சரக வனக்குழு உறுப்பினர்களுக்கு வாழ்வாதார திறன் மேம்பாட்டிற்காக ஆரி எம்பிராய்டரிங்க் ஒர்க் தையல் பயிற்சி நடைபெற்றது.

    அம்பையில், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக சூழல் மேம்பாட்டு அலுவலர் அன்பு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வனச்சரக அலுவலர் கிருஷ்ண மூர்த்தி, வனவர் மோகன்தாஸ், பயிற்சி நிலைய நிறுவனர் பிரியா மற்றும் சூழல் மேம்பாட்டு தன்னார்வலர்கள், பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.

    ×