search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அம்பையில் அ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
    X

    அம்பையில் அ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

    • ஆலோசனை கூட்டத்திற்கு இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
    • கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரவணன் சிறப்பு அழைப்பா ளராக கலந்து கொண்டார்.

    கல்லிடைக்குறிச்சி:

    அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ. அலுவலக வளாகத்தில் நெல்லை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோ சனை கூட்டம் நடைபெற்றது.

    புறநகர் மாவட்ட செயலா ளர் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன், முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் நாராயண பெருமாள், அமைப்பு செயலாளர் ஏ.கே.சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அ.தி.மு.க. மருத்துவ அணி இணை செயலாள ரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பி னருமான டாக்டர் சரவணன் சிறப்பு அழைப்பா ளராக கலந்து கொண்டு வருகிற பாராளுமன்ற தேர்தலில் பூத் கமிட்டி நிர்வாகிகள் எவ்வாறு செயல்பட வேண்டும், அவர்களது பணிகளை ஒருங்கிணைப்பது உள்ளிட்டை குறித்து விரி வாக எடுத்துரைத்தார்.

    கூட்டத்தில் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கூனியூர் மாடசாமி, மாவட்ட துணைசெயலாளர் செவல் முத்துசாமி, ஞானபுனிதா, பொதுக்குழு உறுப்பினர் பார்வதி பாக்கியம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செய லாளர் பெரிய பெருமாள், ஒன்றிய செயலாளர்கள் அம்பை விஜய பாலாஜி, சேரை மாரி செல்வம், களக்காடு வேல்சாமி, ராதா புரம் அந்தோணி அமல் ராஜ், செல்வராஜ், முத்து குட்டிப்பாண்டியன் நகரச் செயலாளர்கள் அம்பை அறிவழகன், வி.கே.புரம் கண்ணன், களக்காடு செல்வராஜ் சாமிநாதன், கல்லிடை முத்துகிருஷ்ணன், சேரை பழனிகுமார், நாங்குநேரி சங்கரலிங்கம், அம்பை நீர் பாசன கமிட்டி தலைவர் மாரிமுத்து, மணி முத்தாறு முன்னாள் நகர பஞ்சாயத்து தலைவர் சிவன்பாபு, அம்பை ஒன்றிய துணை செயலாளர் பிராங்க ளின், வக்கீல்கள் சுரேஷ், ஸ்டாலின் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×