search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "airport service"

    தஞ்சையில் மீண்டும் விமான சேவை தொடங்க கோரி மத்திய விமான போக்குவத்துத்துறை மந்திரி சுரேஷ்பாபுவுக்கு காங்கிரஸ் மனு அனுப்பியுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் வக்கீல் கோ.அன்பரசன் மத்திய விமான போக்குவத்துத்துறை மந்திரி சுரேஷ்பாபுவுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    இரண்டாம் உலகப் போரில் ஆங்கிலேயர்கள் போர் விமானங்களில் பெட்ரோல் நிரப்புவதற்காக தஞ்சையிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாப்பிள்ளை நாயக்கன் பட்டியில் விமான நிலையம் ஒன்றை நிறுவினார்கள். 30 வருடங்களுக்கு முன்பு தஞ்சையிலிருந்து சென்னைக்கு செல்வதற்காக சிறிய ரக விமானமான வாயுதூத் என்கிற விமான சேவையை மத்திய அரசு துவங்கியது. பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் இரண்டு ஆண்டுகளில் மத்திய அரசு மேற்படி விமான சேவையை தற்காலிகமாக நிறுத்த வைத்தது.

    தற்போது தஞ்சை மற்றும் தஞ்சையை சுற்றியுள்ள ஊர்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான பேர் கணிப் பொறியாளர்களாக இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வேலை பார்த்து வருகின்றனர். தினசரி தஞ்சையிலிருந்து சென்னைக்கு ஆயிரக்கணக்கானோர், பேருந்து மற்றும் ரெயிலில் பயணம் செய்கின்றனர்.

    ஆகவே இன்றைய சூழ்நிலையில் தஞ்சையில் 30 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்ட விமான சேவையை மீண்டும் தொடங்கினால் தஞ்சை மற்றும் தஞ்சையை சுற்றியுள்ள மக்களுக்கும், தஞ்சைக்கு வருகின்ற சுற்றுலாப்பயணிகள் மற்றும் யாத்திரிகர்களுக்கும் பேருதவியாக இருக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மத்திய அரசின் உதன் திட்டத்தின் கீழ் 2-வது கட்டமாக திருப்பதியில் இருந்து வேலூருக்கு சென்னை வழியாக விமான போக்கு வரத்து சேவை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. #Airportservice

    சென்னை:

    மத்திய விமான போக்குவரத்து துறை உதன் திட்டத்தின் கீழ் பல்வேறு நகரங்களுக்கு இடையே விமான போக்கு வரத்து சேவையை ஏற்படுத்தி வருகிறது.

    அதன்படி சமீபத்தில் சென்னை - சேலம் இடையே விமான சேவை தொடங்கப்பட்டது. தனியார் விமான நிறுவனம் விமானங்களை இயக்கி வருகிறது.

    மேலும் சென்னை- வேலூர், சென்னை-தஞ்சாவூர் இடையே விமான சேவை தொடங்க பணிகள் நடந்து வருகிறது. வேலூரில் உள்ள அப்துல்லாபுரம் என்ற இடத்தில் விமான நிலையம் அமைகிறது.

    இதற்கிடையே உதன் திட்டத்தின் கீழ் 2-வது கட்டமாக திருப்பதியில் இருந்து வேலூருக்கு சென்னை வழியாக விமான போக்கு வரத்து சேவை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதனால் வேலூர் விமான நிலையத்தில் 70 இருக்கைகள் கொண்ட விமானம் தரை இறங்கும் வகையிலான ஓடுபாதை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதலில் 20 இருக்கைகள் கொண்ட சிறிய விமானங்கள் தரை இறக்கும்படியான ஓடுபாதை அமைக்க முடிவு செய்யப்பட்டு இருந்தது.

    இதுகுறித்து விமான போக்குவரத்து துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “சென்னைக்கு அருகே உள்ள வேலூரில் விமான நிலையம் அமைவது மிகவும் வசதியானதாகும். அங்கு விமானங்களை பார்க்கிங் செய்து கொள்ளலாம். வேலூர் விமான நிலையத்தில் 70 இருக்கைகள் கொண்ட விமானங்களை கையாளும் வகையில் ஓடுபாதை தரம் உயர்த்த வேண்டும் என்றார்.

    கடந்த 4 ஆண்டுகளில் வேலூரில் கல்வி நிறுவனங்கள், தொழில் வளர்ச்சி காரணமாக சென்னைக்கு போக்குவரத்து சேவை அதிகரித்து இருக்கிறது.

    அதன்படி உதன் திட்டத்தில் வேலூர் - சென்னை இடையே விமான போக்குவரத்து சேவைக்கு ஓப்புதல் அளிக்கப்பட்டது. தற்போது திருப்பதி செல்லும் பக்தர்கள் வசதிக்காக திருப்பதி-வேலூர் இடையே விமான சேவை விரிவாக்கம் செய்யப்படுகிறது. #Airportservice

    ×