என் மலர்
நீங்கள் தேடியது "உதான் திட்டம்"
- SJ 100 விமானம் 98 பயணிகள் வரை பயணம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டது.
- மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ் இந்த விமானம் தயாரிக்கப்பட உள்ளது.
புதுடெல்லி:
சுகோய் சூப்பர் ஜெட் SJ 100 என்பது ரஷியாவில் உருவாக்கப்பட்ட ஒரு இரட்டை எஞ்சின் கொண்ட குறுகிய தூர பயணிகள் விமானம்.
இது முன்னர் 'சுகோய் சூப்பர்ஜெட் 100' (SSJ100) என அழைக்கப்பட்டது.
தற்போது பொருளாதாரத் தடைகள் காரணமாக SJ-100 பதிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய SJ-100 விமானம் 98 பயணிகள் வரை பயணிக்கலாம்.
இந்நிலையில், இந்தியாவின் மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் ஹெச்.ஏ.எல். நிறுவனம் ரஷியாவின் யுனைடெட் ஏர் கிராப்ட் நிறுவனமும் இணைந்து SJ 100 பயணிகள் விமானங்களை தயாரிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது.
மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட உள்ள இந்த பயணிகள் விமானம் உள்நாட்டு பயணத்துக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்படுகிறது.
சென்னை:
மத்திய வர்த்தகம், தொழில் மற்றும் விமான போக்குவரத்து துறை மந்திரி சுரேஷ் பிரபுவுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-
உதான் திட்டத்தின் கீழ் சேலத்தில் விமான நிலையம் அமைக்கப்பட்டு இருப்பது மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இதே போல உதான் திட்டத்தின் கீழ் தொழில் நகரமான ஓசூரிலும் விமான சேவை அமைக்க வேண்டும். இதேபோல் நெய்வேலி விமான நிலையத்திலும் விமான சேவை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னை:
மத்திய விமான போக்குவரத்து துறை உதன் திட்டத்தின் கீழ் பல்வேறு நகரங்களுக்கு இடையே விமான போக்கு வரத்து சேவையை ஏற்படுத்தி வருகிறது.
அதன்படி சமீபத்தில் சென்னை - சேலம் இடையே விமான சேவை தொடங்கப்பட்டது. தனியார் விமான நிறுவனம் விமானங்களை இயக்கி வருகிறது.
மேலும் சென்னை- வேலூர், சென்னை-தஞ்சாவூர் இடையே விமான சேவை தொடங்க பணிகள் நடந்து வருகிறது. வேலூரில் உள்ள அப்துல்லாபுரம் என்ற இடத்தில் விமான நிலையம் அமைகிறது.
இதற்கிடையே உதன் திட்டத்தின் கீழ் 2-வது கட்டமாக திருப்பதியில் இருந்து வேலூருக்கு சென்னை வழியாக விமான போக்கு வரத்து சேவை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால் வேலூர் விமான நிலையத்தில் 70 இருக்கைகள் கொண்ட விமானம் தரை இறங்கும் வகையிலான ஓடுபாதை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதலில் 20 இருக்கைகள் கொண்ட சிறிய விமானங்கள் தரை இறக்கும்படியான ஓடுபாதை அமைக்க முடிவு செய்யப்பட்டு இருந்தது.
இதுகுறித்து விமான போக்குவரத்து துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “சென்னைக்கு அருகே உள்ள வேலூரில் விமான நிலையம் அமைவது மிகவும் வசதியானதாகும். அங்கு விமானங்களை பார்க்கிங் செய்து கொள்ளலாம். வேலூர் விமான நிலையத்தில் 70 இருக்கைகள் கொண்ட விமானங்களை கையாளும் வகையில் ஓடுபாதை தரம் உயர்த்த வேண்டும் என்றார்.
கடந்த 4 ஆண்டுகளில் வேலூரில் கல்வி நிறுவனங்கள், தொழில் வளர்ச்சி காரணமாக சென்னைக்கு போக்குவரத்து சேவை அதிகரித்து இருக்கிறது.
அதன்படி உதன் திட்டத்தில் வேலூர் - சென்னை இடையே விமான போக்குவரத்து சேவைக்கு ஓப்புதல் அளிக்கப்பட்டது. தற்போது திருப்பதி செல்லும் பக்தர்கள் வசதிக்காக திருப்பதி-வேலூர் இடையே விமான சேவை விரிவாக்கம் செய்யப்படுகிறது. #Airportservice






