என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தஞ்சையில் மீண்டும் விமான சேவை தொடங்க வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்
தஞ்சாவூர்:
தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் வக்கீல் கோ.அன்பரசன் மத்திய விமான போக்குவத்துத்துறை மந்திரி சுரேஷ்பாபுவுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
இரண்டாம் உலகப் போரில் ஆங்கிலேயர்கள் போர் விமானங்களில் பெட்ரோல் நிரப்புவதற்காக தஞ்சையிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாப்பிள்ளை நாயக்கன் பட்டியில் விமான நிலையம் ஒன்றை நிறுவினார்கள். 30 வருடங்களுக்கு முன்பு தஞ்சையிலிருந்து சென்னைக்கு செல்வதற்காக சிறிய ரக விமானமான வாயுதூத் என்கிற விமான சேவையை மத்திய அரசு துவங்கியது. பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் இரண்டு ஆண்டுகளில் மத்திய அரசு மேற்படி விமான சேவையை தற்காலிகமாக நிறுத்த வைத்தது.
தற்போது தஞ்சை மற்றும் தஞ்சையை சுற்றியுள்ள ஊர்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான பேர் கணிப் பொறியாளர்களாக இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வேலை பார்த்து வருகின்றனர். தினசரி தஞ்சையிலிருந்து சென்னைக்கு ஆயிரக்கணக்கானோர், பேருந்து மற்றும் ரெயிலில் பயணம் செய்கின்றனர்.
ஆகவே இன்றைய சூழ்நிலையில் தஞ்சையில் 30 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்ட விமான சேவையை மீண்டும் தொடங்கினால் தஞ்சை மற்றும் தஞ்சையை சுற்றியுள்ள மக்களுக்கும், தஞ்சைக்கு வருகின்ற சுற்றுலாப்பயணிகள் மற்றும் யாத்திரிகர்களுக்கும் பேருதவியாக இருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்