search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Additional Coaches"

    • கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு சனிக்கிழமை மாலை ெரயில் இல்லை.
    • பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு 6 முறை ெரயில்விட வேண்டும்.

    உடுமலை:

    பொள்ளாச்சி ரெயில் நிலையத்தை ஆய்வு செய்ய வந்த, தெற்கு ெரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங்கை சந்தித்து பொள்ளாச்சி ெரயில் பயணிகள் நலச்சங்கத்தினர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    உடுமலை வழியாக பொள்ளாச்சி - கோவை இடையே காலை மற்றும் மாலை இயக்கப்படும் ெரயிலை வாரத்தின் அனைத்து நாட்களும் இரு திசைகளில் இருந்தும் இயக்க வேண்டும்.தற்போது கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு சனிக்கிழமை மாலை ெரயில் இல்லை.பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு ஞாயிறு காலை ெரயில் இல்லை. கோவை - மதுரை ெரயில் கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு வர 58 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக்கொள்கிறது. பொள்ளாச்சி - கோவை இடையே காலை மற்றும் மாலை இயக்கப்படும் ெரயில் வேகத்தையும், மதுரை - கோவை - மதுரை ெரயிலின் வேகத்தை அதிகப்படுத்த வேண்டும்.பொள்ளாச்சி - கோவை இடையே பயண நேரத்தை, 50 நிமிடங்களாக குறைக்க வேண்டும்.

    பொள்ளாச்சி - மேட்டுப்பாளையம் இடையே நேரடி ெரயில்கள் இயக்க வேண்டும். பொள்ளாச்சியில் இருந்து சென்னை எழும்பூர் அல்லது தாம்பரம் ஆகிய ஊர்களுக்கு பழநி, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம் வழியாக வந்தே பாரத் அல்லது விரைவு ெரயில்கள் தினமும் இயக்க வேண்டும்.பொள்ளாச்சி - பாலக்காடு வழித்தடத்தில் கூடுதல் ெரயில்கள் இயக்க வேண்டும். எர்ணாகுளம் - பாலக்காடு மின்சார ெரயிலை, பொள்ளாச்சி வரை நீட்டிக்க வேண்டும்.பொள்ளாச்சி, பழநி, மதுரை வழியாக குருவாயூர் - ராமேஸ்வரம் வந்தே பாரத் ெரயிலை இயக்க வேண்டும்.

    பொள்ளாச்சி ெரயில் நிலையத்தில் மீட்டர் கேஜ் காலங்களில் இருந்தது போன்று,ெரயில் பராமரிப்பு கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி, இங்கு இருந்து நேரடியாக பல்வேறு இடங்களுக்கு ெரயில்களை இயக்க வேண்டும்.பொள்ளாச்சி அல்லது கோவையில் இருந்து, காரைக்கால் அல்லது வேளாங்கண்ணி ஆகிய ஊர்களுக்கு பழநி, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை வழியாக விரைவு ெரயில்களை இயக்க வேண்டும்.

    இது குறித்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கொடுத்த மனுவில், பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு கல்வி, மருத்துவம், தொழில் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் சென்று வருகின்றனர். இதற்காக, பொது போக்குவரத்துக்கு பஸ்சை பயன்படுத்துகின்றனர். எனவே பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு 6 முறை ெரயில்விட வேண்டும்.

    பொள்ளாச்சியில் இருந்து சென்னை செல்ல கோவை வழியாக ெரயில் இயக்கிட வேண்டும். கேரளா துறைமுக நகரமான கொச்சியில் இருந்து தமிழக துறைமுக நகரமான துாத்துக்குடிக்கு தினசரி ெரயில் இயக்க வேண்டும்.முன்பு இருந்துள்ள பாலக்காடு - பொள்ளாச்சி பயணிகள் ெரயில் தினசரி இயக்க வேண்டும். கோவையை தலைமையிடமாகக்கொண்டு, பொள்ளாச்சி ெரயில்வே நிலையத்தை உள்ளடக்கிய புது ெரயில்வே கோட்டம் உருவாக்கிட வேண்டும்.

    தமிழ்நாடு பனை, தென்னை தொழிலாளர் சங்கத்தினர் கொடுத்த மனுவில், குறைவான பெட்டிகளுடன் இயங்கி கொண்டு இருக்கும் பாலக்காடு - திருச்செந்தூர் ெரயிலில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும். மதுரை - கோவை - மதுரை இயக்கப்படும் ெரயிலை, திருச்செந்தூர் வரை நீட்டிக்க வேண்டும். சென்னைக்கு அதிவிரைவு ெரயில் இயக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

    • கோவையில் இருந்து சேலம் வழியாக செவ்வாய், வியாழன், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் கோவை- திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 22616) இயக்கப்படுகிறது.
    • இந்த ரெயில்களில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக ரெயில்வே நிர்வாகம் தற்போது 2-ம் வகுப்பு சேர் கார் பெட்டிகள் 3 கூடுதலாக இணைத்துள்ளது.

    சேலம்:

    கோவையில் இருந்து சேலம் வழியாக செவ்வாய், வியாழன், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் கோவை- திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 22616) இயக்கப்படுகிறது. மறு மார்க்கத்தில் திருப்பதியில் இருந்து, சேலம் வழியாக திங்கள், புதன், வியாழன், சனிக்கிழமை ஆகிய நாட்களில் திருப்பதி- கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 22615) இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில்களில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக ரெயில்வே நிர்வாகம் தற்போது 2-ம் வகுப்பு சேர் கார் பெட்டிகள் 3 கூடுதலாக இணைத்துள்ளது. அதன்படி ஒரு ஏ.சி., சேர்கார் பெட்டி, 2-ம் வகுப்பு பெட்டி, பொதுப்பெட்டி, லக்கேஜ் கம் பிரேக் வேன் 2 பெட்டி களுடன் இயக்கப்படுவதாக சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் தெரிவித்து உள்ளது.

    • செங்கோட்டை- மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் இயக்கத்தால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    • ரெயிலில் கூடுதலாக 4 பெட்டிகள் இணைத்து 16 பெட்டிகளுடன் இயங்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சங்கரன்கோவில்:

    தெற்கு ரெயில்வே பொது மேலாளருக்கு ரெயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் ராஜா எம்.எல்.ஏ. அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    தென்காசி மாவட்டத்திற்கு தீபாவளி பரிசாக கிடைத்த செங்கோட்டை- மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் இயக்கத்தால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தென்காசி மாவட்டத்தில் இருந்து டெல்டா மாவட்ட ங்களை இணைக்கும் வகையில் பகல் நேர ரெயில் வேண்டும் என்று நாம் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் மயிலாடுதுறை - திண்டுக்கல் இடையே இயங்கி வந்த 16847/16848 ரெயிலையும், மதுரை - செங்கோட்டை 06665/06662 ரெயிலையும் ஒன்றாக இணைத்து ஒரே ரெயிலாக இணைத்து தீபாவளி முதல் இயங்க தொடங்கியது.

    செங்கோட்டை - மயிலாடுதுறை ரெயில் பயணிக்கும் வழித்தடம் அனைத்தும் வரலாற்று சிறப்புமிக்க கோவில்களும், சுற்றுலா தலங்களும் அமைந்துள்ளன. தற்போது 12 பெட்டிகளுடன் இயங்கி வரும் இந்த ரெயிலில் கூடுதலாக 4 பெட்டிகள் இணைத்து 16 பெட்டிகளுடன் இயங்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    செங்கோட்டையில் இருந்து திருத்தங்கல் வரை உள்ள ரெயில் நிலையங்களில் ஏறும் பயணிகள் தற்போது திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறைக்கு நேரடியாக செல்ல முடிகிறது. அதைபோல் டெல்டா மாவட்ட பகுதிகளை சார்ந்தோர் சிவகாசி, ராஜபா ளையம், சங்கரன்கோவில். தென்காசி சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு வருவதற்கு நல்ல இணைப்பாக இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×