என் மலர்

    நீங்கள் தேடியது "kodai vizha"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இடையர்காடு கிராமத்தில் முத்தாரம்மன் கோவில் கொடை விழா கடந்த 19-ந்தேதி கால்நாட்டு விழாவுடன் தொடங்கியது.
    • நேற்று இரவு சாமகொடையில் முத்தாரம்மனுக்கு சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    தென்திருப்பேரை:

    ஏரல் அருகே உள்ள இடையர்காடு கிராமத்தில் முத்தாரம்மன் கோவில் கொடை விழா கடந்த 19-ந்தேதி கால்நாட்டு விழாவுடன் தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை திரு விளக்கு பூஜையும், திங்கட் கிழமை சுமங்கலி பூஜையும், அதைத்தொடர்ந்து நவீன வில்லிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    நேற்று காலை தாமிரபரணி ஆற்றிலிருந்து பக்தர்கள் மேளதாளத்துடன் புனித நீர் தீர்த்தம் எடுத்து வந்தனர். கோவில் வளாகத்தில் கணபதி ஹோமம், யாக பூஜைகள் செய்யப்பட்டு புனிதநீர் அம்மன் மற்றும் கோவில் கோபுர கலசங்களில் ஊற்றப்பட்டு தீபாராதனை, வருஷாபிஷேக சிறப்பு பூஜை நடைபெற்றது. பக்தர்கள், பொதுமக்களுக்கு காலை, மதியம், இரவு அன்னதானம் வழங்கப் பட்டது.

    இரவு பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து கும்மியடித்து அம்மனை வழிபட்டனர். அதைத் தொடர்ந்து வில்லிசை நிகழ்ச்சியும், கரகாட்டம், நையாண்டி மேளம், செண்டை மேளம் நிகழ்ச்சி யும் நடைபெற்றது.

    கொடைவிழா

    இரவு சாமகொடையில் முத்தாரம்மனுக்கு சிறப்பு அலங்கா ரத்தில் தீபாரா தனை மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    இன்று அதிகாலையில் உற்சவர் முத்தாரம்மன் சப்பரத்தில் எழுந்தருளி வானவேடிக்கை, கர காட்டம், மேளதாளத்துடன் வீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு காட்சி யளித்து அருள்பாலித்தார்.

    பொதுமக்கள் தேங்காய் பழம் படைத்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் மதியம் 12 மணியளவில் மதிய கொடைவிழா நிறைவு பெற்றது. இன்று இரவு ஆடல்- பாடல் கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    விழாவி ற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்கள் அனைவருக்கும் சேலை மற்றும் பூஜை பொருட்கள் வழங்கப்பட்டது.
    • இன்று மாலை 6 மணிக்கு சுமங்கலி பூஜையும், அதை தொடர்ந்து 9மணிக்கு நவீன வில்லிசை நிகழ்ச்சியும் நடை பெறுகிறது.

    தென்திருப்பேரை:

    ஏரல் அருகே உள்ள இடை யற்காடு கிராமத்தில் முத்தா ரம்மன் கோவில் கொடைவிழா நேற்று மாலை 6 மணிக்கு திரு விளக்கு பூஜையுடன் தொடங்கியது.

    திருவிளக்கு பூஜை

    கொடை விழாவை முன்னிட்டு 308 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. குத்து விளக்கு பூஜையை கோவை தொழிலதிபர் அஜித்ராஜ், அவரது மனைவி மகேஸ்வரி மற்றும் கோவை மேற்கு மாவட்ட நாடார் சங்க செயலாளர் பாஸ்கர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி அம்மனை வழிபட்டனர். குத்துவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்கள் அனைவருக்கும் சேலை மற்றும் பூஜை பொருட்கள் வழங்கப்பட்டது. இரவு 8 மணிக்கு ஆன்மீக சொற்பொழிவு நடை பெற்றது. இன்று மாலை 6 மணிக்கு சுமங்கலி பூஜையும், அதை தொடர்ந்து 9மணிக்கு நவீன வில்லிசை நிகழ்ச்சியும் நடை பெறுகிறது.

    கொடைவிழா

    நாளை (செவ்வாய்க் கிழமை )கொடை விழாவை முன்னிட்டு காலை 7 மணிக்கு புனித தீர்த்தம் எடுக்க செல்லுதல், 10 மணிக்கு கணபதி ஹோமம், சுதர்ஷண ஹோமம், மகாலட்சுமி ஹோமம், கோபுர கலச பூஜை, கோபுர அபிஷேகம், அம்மனுக்கு கலக அபிஷேகம், சிறப்பு பூஜை நடைபெறுகிறது. பகல் 1மணிக்கு மதிய பூஜை நடைபெறுகிறது.

    இரவு 7 மணிக்கு நையாண்டி மேளம், முளைப்பாரி எடுத்து வருதல் நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்து கரகாட்டம், வில்லிசை நிகழ்ச்சியும், செண்டை மேளம் நிகழ்ச்சியும் நடை பெறுகிறது.

    இரவு 12மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் பூஜை மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது. இரவு 2.30 மணிக்கு சாமக்கொடை நடைபெறுகிறது.

    அதைத்தொடர்ந்து உற்சவர் முத்தாரம்மன் வான வேடிக்கையுடன் சப்பரத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். பக்தர்கள், பொதுமக்கள் தேங்காய் பழம் படைத்து அம்மனை வழிபடு வார்கள். அன்று காலை, மாலை, இரவு 3 வேளையும் , வழங்கப்படுகிறது. நாளை மறுநாள் (புதன்கிழமை )மதியம் 12மணிக்கு மதிய கொடையும், இரவு 7 மணிக்கு ஆடல், பாடல் இசை நிகழ்ச்சியும் நடை பெறுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விழாவை முன்னிட்டு தினமும் முளைப்பாரி கும்மி அடித்து பெண்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர்.
    • இன்று காலையில் அம்மனுக்கு நேர்த்தி கடனாக சிறுவர்கள் பூ பெட்டி எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.

    கடையம்:

    கடையம் அருகே உள்ள பாப்பாங்குளம்- மயிலப்பபுரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற முப்புடாதி அம்மன் கோவில் ஆவணி கொடை விழா கடந்த 5-ந்தேதி கால் நாட்டுதலுடன் தொடங்கியது. தினமும் முளைப்பாரி கும்மி அடித்து பெண்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர். நேற்று மதியம் சிறப்பு பூஜையும், அன்னதானமும் நடைபெற்றது. மாலையில் பால்குட ஊர்வலமும், பெண்கள் முளைப்பாரி எடுத்து கும்மியடித்தும் சாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று காலையில் அம்மனுக்கு நேர்த்தி கடனாக சிறுவர்கள் பூ பெட்டி எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிறப்பு பூஜையுடன் கிடா வெட்டும் நிகழ்வும், மஞ்சள் பானையில் நீராடும் நிகழ்ச்சி நடை பெற்றது. விழா விற்கான ஏற்பாடு களை மயிலப்பபுரம் கிராமத்தை சேர்ந்த விழாக் கமிட்டியினர் செய்தி ருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நேற்று காலை 11 மணிக்கு மேள வாத்தியங்களுடன் சாமி ஊர்வலத்துடன் பால்குடம் எடுத்து வருதல் நடைபெற்றது.
    • இரவில் வில்லிசை நிகழ்ச்சி, நாதஸ்வரம், கரகாட்டம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    தென்திருப்பேரை:

    மாவடிபண்ணை முத்தாரம்மன் கோவிலில் சிவன், சக்தி மற்றும் முத்தாரம்மன் ஆகி யோர் தனித்தனி சன்னதி களில் அமர்ந்து அருள்பா லித்து வருகிறார்கள்.

    ஆண்டுதோறும் ஆவணி மாதம் கடைசி செவ்வாய்க் கிழமை கொடை விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஆவணி கொடை விழாவை முன்னிட்டு கடந்த 5-ந்தேதி அம்மனுக்கு சிறப்பு அபி ஷேகம் தீபாராதனையை தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு பூஜை செய்து கால் நாட்டு விழா நடைபெற்றது.

    அன்று முதல் பக்தர்கள் விரதம் கடைபிடித்து வரு கின்றனர். திங்கட்கிழமை இரவு குடி அழைப்பு மற்றும் அம்மனுக்கு தீபாராதனை பூஜைகள் நடைபெற்றது.

    மேலும் நேற்று காலை 11 மணிக்கு மேள வாத்தியங்க ளுடன் சாமி ஊர்வலத்துடன் பால்குடம் எடுத்து வருதல், மதியம் 1 மணிக்கு சிறப்பு பூஜை அலங்காரத்துடன் மதியக் கொடை, இரவு 8 மணிக்கு முளைப்பாரி எடுத்து வருதல், நேர்த்தி கடன் ஆகியவை நடை பெற்றது. இரவில் வில்லிசை நிகழ்ச்சி, நாதஸ்வரம், கரகாட்டம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    காலை, மதியம் மற்றும் இரவு அன்னதானம் நடை பெற்றது. இரவு 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை, தீபாரா தனையும் நடைபெற்றது.

    அதைதொடர்ந்து முத்தாரம்மன் பொன் சப்பரத்தில் எழுந்தருளி வாணவேடிக்கையுடன் வீதி உலா சென்று பக்தர்கள், பொதுமக்கள் தேங்காய் பழம் உடைத்து அம்மனை வழிபட்டனர்.

    இன்று மதியம் பொங்க லிடுதல் மற்றும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. ஏரா ளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை கோவில் நிர்வாக கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நாராயணன் தனது உறவினர் சுடருடன் கொடை விழா பார்த்துக் கொண்டிருந்தார்.
    • ஸ்ரீராமன் உள்பட மூவரும் சேர்ந்து நாராயணனை கத்தியால் முதுகில் குத்தினர்.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள ஸ்ரீரெங்கராஜபுரம் வடக்குத் தெருவை சேர்ந்தவர் மத்தியாஸ் மகன் நாராயணன் (வயது25). இவர் மும்பையில் உள்ள கப்பல் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது குடும்பத்தினருக்கும், அதே ஊரைச் சேர்ந்த லெட்சுமணன் குடும்பத்தினருக்கும் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வருகிறது.

    இந்நிலையில் ஸ்ரீரெங்கராஜ புரத்தில் உள்ள முத்தாரம்மன் கோவிலில் கொடை விழா நடந்தது. இதற்காக நாராயணன் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார்.

    சம்பவத்தன்று நாராயணன் தனது உறவினர் சுடருடன் கோவில் கொடை விழா பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த லெட்சுமணன் மகன்கள் ஸ்ரீராமன், ஹரிராம், ராமசுந்தரம் மகன் குமார் ஆகியோருக்கும், நாராயண னுக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த ஸ்ரீராமன் உள்பட மூவரும் சேர்ந்து நாராயணனை கத்தியால் முதுகில் குத்தினர். இதனால் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி நாங்குநேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, இதுதொடர்பாக ஸ்ரீராமன் உள்பட 3 பேரையும் தேடி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்ற பின் பக்தர்களுக்கு இரவு சிற்றுண்டி வழங்கப்பட்டது.
    • 5-ந் தேதி காலை தீர்த்தக்கரை சென்று புனிதநீர் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி முள்ளக்காடு இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட வடபத்திரகாளி அம்மன் கோவில் கொடைவிழா நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு கடந்த 29-ந் தேதி கால்நாட்டு விழா நடைபெற்றது. 31 -ந் தேதி முதல் கொடை விழா நிகழ்ச்சிகள் தொடங்கியது.

    தினசரி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்ற பின் பக்தர்களுக்கு இரவு சிற்றுண்டி வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை மாவிளக்கு பூஜையும், அம்மனுக்கு விசேஷ சிறப்பு பூஜைகளும், திங்கட்கிழமை அம்மனுக்கு மாகாப்பு அலங்கார பூஜையும் நடைபெற்றது.

    தொடர்ந்து 5-ந் தேதி காலை நையாண்டி மேளத்துடன் தீர்த்தக்கரை சென்று புனிதநீர் எடுத்து வருதல், நையாண்டி மேளத்துடன் வாடிப்பட்டி பழனிசாமி தம்பா மேலத்துடன் செண்டா மேளத்துடன் அம்பாளுக்கு ஓமகுண்ட பூஜையம் சிறப்பு அபிஷேகங்களும் விசேஷ தீபாராதனையும் சிறப்பாக நடைபெற்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இரவு வில்லிசை, கரகாட்டமும், ராஜா ராணி ஆட்டமும தொடர்ந்து நேமிசம் முளைப்பாரி எடுத்து வருதல், இரவு 10 மணிக்கு அம்பாளுக்கு விசேஷ தீபாராதனைக்கு பின்னர் இரவு 12.5 மணிக்கு 4 வகையான மேள தாளங்களுடன் வானத்தில் வர்ணஜாலம் காட்டும் கண்கவர் வானவேடிக்கையுடன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்பாள் நகர் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை 7 மணி வரை நடைபெற்றது. தொடர்ந்து காலை 9 மணிக்கு பொங்கலிடுதல், 11 மணிக்கு மஞ்சள் நீராடுதலுடன் விசேஷ பூஜை, பகல் 12 மணிக்கு முளைப்பாரி கரைத்தலுடன் கொடை விழா நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றது.

    விழாவை முன்னிட்டு தினசரி சிற்றுண்டி தொடர்ந்து 8 நாட்களும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. கொடை விழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா சேகர் என்ற சந்திரசேகர் மற்றும் விழாக்குழு வினர் செய்திருந்தனர்.

    விழாவில் தமிழ்நாடு மதசார்பற்ற ஜனதாதள மாநில துணைத்தலைவர் வக்கீல் சொக்கலிங்கம், நாடார் சமுதாய குழு தலைவர் தங்ககுட்டி நாடார், அருணாச்சல பாண்டியன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. வக்கீல் பிரிவு அமைப்பாளரும் மாவட்ட கவுன்சிலருமான வக்கீல் செல்வகுமார், காண்ட்ராக்டர்ஸ் அழகேசன், பொன்மாடசாமி பிரதர்ஸ், ஜெயபாண்டியன் நாடார், விஜயா மெடிக்கல் செந்தில்குமார், காந்திநகர் பாஸ்கர் ஜெயராஜ் நாடார், ஜெயக்குமார், முள்ளக்காடு வியாபாரிகள் சங்க தலைவர் முனியதங்கம் நாடார், முள்ளக்காடு ஊராட்சிமன்ற தலைவர் கோபிநாத் நிர்மல், தூத்துக்குடி மாநகர தெற்கு மண்டல பாரதிய ஜனதா கட்சி விளையாட்டுப் பிரிவு தலைவர் ஏ.வி.பிரபாகர், தூத்துக்குடி பாராளுமன்ற இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் எஸ்.எம். சகாயராஜ், இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் ஸ்டாலின், உப்பு உற்பத்தியாளர்கள் அழகேசன் நாடார், தங்கராஜ் நாடார், ஞானவேலன், முகேஷ் சண்முகவேல், பொன்ராம், பத்மநாதன், கணேசன், முருகேசன், லட்சுமணன் ராஜா சால்ட், குருத்து டிரேடர்ஸ் மற்றும் எல்.ஆர். பாண்டியன் ஸ்போட்ஸ் அகாடமி நிறுவனர் எல்.ஆர். சிவாகர், ஆறுமுகம் ஜூவல்லர்ஸ் அதிபர் பலவேச கார்த்திகேயன், முல்லை லதா சவுண்ட் சர்வீஸ் உரிமையாளர் முத்துராஜா, முத்துக்குமார், கேபிள் காண்டிராக்டர் பொன்ராஜ், முத்துவிஜய், பி.பி.ஜி. சவுண்ட் சர்வீஸ் உரிமையாளர் ஈசாக், பாவா ஹோட்டல் செல்வகுமார் மற்றும் தி.மு.க. நிர்வாகி சில்வர் சிவா, காந்திநகர் முருகேசன் நாடார், சுந்தரம், சுப்பிரமணியன், நடராஜன். கோவை பொன்பாண்டியன் மற்றும் பக்தர்கள் உட்பட கோவில் நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் ஆயிரக்கணக்கா னோர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இன்று காலை 8 மணிக்கு மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பொது மக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    தென்திருப்பேரை:

    குரும்பூர் அருகே உள்ள அழகப்பபுரத்தில் ஸ்ரீ முத்தாரம்மன், ஸ்ரீ உச்சினி மாகாளியம்மன் கோவில் கொடை விழா கடந்த 3-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை நடைபெற்றது.

    கிருஷ்ண ஜெயந்தி

    கொடைவிழாவிற்கு முந்தைய நாளான 2-ந் தேதி கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாலை 7 மணிக்கு குரும்பூர் ஸ்ரீ ஆதிநாராயண பெருமாள் கோவிலில் இருந்து சிறுவர்- சிறுமியரின் ராதாகிருஷ்ணர் கோபியர் சூழ ஸ்ரீ கிருஷ்ண பகவான் சப்பரம் புறப்பட்டு வீதி உலாவாக அழகப்பபுரம் கிருஷ்ணர் கோவில் வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து அன்று இரவு உறியடி திருவிழா, வழுக்கு மரம் ஏறுதல், தீபாராதனை, பிரசாதம் வழங்கப்பட்டது.

    3-ந் தேதி மாலை 6.15 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 9 மணிக்கு இன்னிசை கச்சேரி நடைபெற்றது. 4-ந் தேதி இரவு 7 மணிக்கு குரும்பூர் ஶ்ரீ ஆதிநாராயண பெருமாள் கோவிலில் இருந்து கும்பம் ஏற்றுதல், குடி அழைப்பு, இரவு 11 மணிக்கு மாகாப்பு, மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

    கொடை விழா

    கொடை விழாவை முன்னிட்டு குரும்பூர் ஸ்ரீ தர்மசுந்தர விநாயகர் கோவிலில் இருந்து நேற்று காலை 8 மணிக்கு பால்குடம் எடுத்து வருதல், நேமிசம் எடுத்து வருதல், காலை 10 மணிக்கு யாகசாலை பூஜை, கும்ப பூஜை, சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பகல் 12 மணிக்கு மதியக்கொடை, தீபாராதனை இரவு 8.30 மணிக்கு முளைப்பாரி எடுத்து வருதல், இரவு 11 மணிக்கு அலங்கார தீபாராதனை, இரவு 12 மணிக்கு படைப்பு சாமக்கொடை, தீபாராதனை நடைபெற்றது.

    இன்று (புதன்கிழமை) காலை 6 மணிக்கு பொங்கலிடுதல், 8 மணிக்கு மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. கொடை விழாவில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பொது மக்கள் அனைவருக்கும் ஞாயிற்றுக்கிழமை முதல் புதன்கிழமை வரை அன்னதானம் வழங்கப்பட்டது. கொடை விழா ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் அழகப்பபுரம் ஊர் பொதுமக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கொடை விழாவில் அழகியநம்பி, கோபி ஆகியோர் விசில் அடித்ததாக கூறப்படுகிறது.
    • அவதூறாக பேசியதை பார்த்த ரமேஷ்ராம் அதனை தட்டிக் கேட்டார்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள கீழதேவநல்லூரில் கோவில் கொடை விழா நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    அப்போது அதே ஊரை சேர்ந்த அழகியநம்பி, கோபி ஆகியோர் விசில் அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் கோவில் தர்மகர்த்தா முருகன், அவரது மனைவி சீதாலெட்சுமி ஆகியோர் இருவரையும் சத்தம் போட்டனர்.

    இதையடுத்து அழகிய நம்பியும், கோபியும், முருகனையும், அவரது மனைவியையும் அவதூறாக பேசினர். இதைப்பார்த்த சங்கரசுப்பிரமணியன் மகன் ரமேஷ்ராம் (27) தட்டிக் கேட்டார்.

    இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த அழகியநம்பி, கோபி, சந்தனசெல்வம், சுடலைமுத்து, நம்பிராஜன், மாயாண்டி, சூர்யா ஆகிய 7 பேரும் சேர்ந்து ரமேஷ்ராம், மகாலிங்கம், முத்துபாண்டி, முருகன் ஆகிய 4 பேரையும் கம்பியால் சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இது தொடர்பாக வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி அழகியநம்பி உள்பட 7 பேரையும் தேடி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விழா நாட்களில் சமையல் போட்டி, மெகந்தி போட்டி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.
    • அற்புத வினாயகர் கோவிலில் இருந்து பால்குட ஊர்வலம் புறப்பட்டு கோவிலை அடைந்தது.

    திசையன்விளை:

    திசையன்விளை வடக்குத் தெரு சுடலை ஆண்டவர் கோவில் கொடைவிழா 20-ந் தேதி தொடங்கியது.

    விழா நாட்களில் விளையாட்டு போட்டிகள், கோல ப்போட்டி, சமய சொற்பொழிவு, இன்னி சை கச்சேரி, நாடகம், 1008 மாங்கல்ய பூஜை, திருவிளக்கு பூஜை, கம்ப்யூட்டர் போட்டி, சமையல் போட்டி, மெகந்தி போட்டி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.

    நேற்று இரவு பள்ளி மாணவ -மாணவிகளின் பரத நாட்டியம், சுடலை ஆண்டவர் இந்து புது எழுச்சி மன்றம் சார்பில் இன்னிசை கச்சேரி, கரகாட்டம் மற்றும் கலைநிகழ்ச்சி கள், வில்லிசை நாதஸ்வர கச்சேரி உள்ளிட்ட பல்வேறு நிகழ்சிகள் நடந்தது.

    நள்ளிரவில் அற்புத வினாயகர் கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க பால்குட ஊர்வலம் புறப்பட்டு கோவிலை அடைந்தது. தொடர்ந்து சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்ய ப்பட்டு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று காலை முதல் அதிகாலை வரை கோவில் வளாகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி சேம்பர் செல்வராஜ் மற்றும் விழா குழுவினர் செய்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முதல் நாள் காலை சுடலைமாடசுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு  வருஷாபிஷேகம்,சிறப்பு பூஜை    நடந்தது.     
    • 3-ம் நாள் கோவிலில்  பொங்கல் இடுதல், கலை நிகழ்ச்சி, போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்குதல்  நடந்தது.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம்    தச்சமொழி    சுடலைமாட சுவாமி கோவில் கொடை விழா   10-ந்தேதி தொடங்கி 12-ந்தேதி வரை 3 நாள்கள் நடந்தது. முதல் நாள் காலை உவரி ஸ்ரீசுயம்புலிங்க சுவாமி கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல், சுடலைமாடசுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு  வருஷாபிஷேகம், அதனைத் தொடர்ந்து அபிஷேக அலங்கார தீபாராதனை, இரவு மாகாப்பு, அலங்கார தீபாராதனை, வில்லிசை, சிறப்பு பூஜை    நடந்தது.     

    2-ம் நாள் சிறப்பு அபிஷேகம், வில்லிசை, பொங்கல் இடுதல், சுவாமி மஞ்சள் நீராடுதல், சிறப்பு அலங்கார பூஜை, மாலை திருவிளக்கு பூஜை, இரவு வில்லிசை, சாமக் கொடை நடந்தது. 3-ம் நாள் கோவிலில்  பொங்கல் இடுதல், கிடா வெட்டி சாமிக்கு உணவு படைத்தல், மாலை சிறுவர்- சிறுமியர் விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சி, போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்குதல்  நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர், கமிட்டியினர் செய்திருந்தனர்.

    • Whatsapp
    • Telegram