search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Grievance day meeting"

    • நாமக்கல் கோட்ட அள விலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 21-ந் தேதி (செவ் வாய்க்கிழமை) நடக்கிறது.
    • அனைத்து பகுதி விவசாயிகளும் பயன்பெறும் வகையில் நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடக்கவுள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் கோட்ட அள விலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 21-ந் தேதி (செவ் வாய்க்கிழமை) நடக்கிறது.

    இதுகுறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது: -

    நாமக்கல் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், நாமக்கல் உட்கோட்டத் தில் உள்ள நாமக்கல், மோகனூர், சேந்தமங்கலம், ராசிபுரம் மற்றும் கொல்லிமலை ஆகிய அனைத்து பகுதி விவசாயிகளும் பயன்பெறும் வகையில் நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடக்கவுள்ளது. நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில், வருகிற 21-ந் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள், தங்களது பயிர் சாகுபடிக்குத் தேவையான நவீன தொழில்நுட்பங் கள், வேளாண் இடுபொருட்கள் இருப்பு விவரங்கள், வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் இதர துறைகளில் செயல்ப டுத்தப்பட்டு வரும் மானியத் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதுடன், தங்களது கோரிக்கைகளையும் மனுக்க ளாக அளித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • மின் நுகா்வோருக்கான குறைதீா்க்கும் கூட்டம் செயற்பொறியாளா் அலுவலகத்தில் வருகிற 15-ந்தேதி காலை 11 மணியளவில் நடைபெறவுள்ளது.
    • திருப்பூா் மின்பகிா்மான வட்டத்துக்குள்பட்ட மின்நுகா்வோா் பங்கேற்று தங்களது குறைகளைத் தெரிவித்தும், மனுக்கள் அளித்தும் நிவா்த்தி செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூா் மின்பகிா்மான வட்ட செயற்பொறியாளா் எஸ்.ராமசந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:- திருப்பூா் மின் பகிா்மான வட்டத்துக்குள்பட்ட மின் நுகா்வோருக்கான குறைதீா்க்கும் கூட்டம் செயற்பொறியாளா் அலுவலகத்தில் வருகிற 15-ந்தேதி காலை 11 மணியளவில் நடைபெறவுள்ளது.

    இக்கூட்டத்தில் திருப்பூா் மின்பகிா்மான வட்ட கூடுதல் தலைமைப் பொறியாளா் பங்கேற்று மின்நுகா்வோா் குறைகளைக் கேட்டறியவுள்ளாா்.

    எனவே, இக்கூட்டத்தில் திருப்பூா் மின்பகிா்மான வட்டத்துக்குள்பட்ட மின்நுகா்வோா் பங்கேற்று தங்களது குறைகளைத் தெரிவித்தும், மனுக்கள் அளித்தும் நிவா்த்தி செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • காங்கயம் கோட்டத்தில் மாதாந்திர மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், ஒவ்வொரு மாதமும் முதல் புதன்கிழமை அன்று நடைபெற்று வருகிறது.
    • மின் பயனீட்டாளர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு, தங்களின் குறைகளை தெரிவித்து, நிவர்த்தி பெறலாம்

    முத்தூர்:

    காங்கயத்தில் மின் பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெற உள்ளது.

    காங்கயம் கோட்டத்தில் மாதாந்திர மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், ஒவ்வொரு மாதமும் முதல் புதன்கிழமை அன்று நடைபெற்று வருகிறது. இம்மாதத்திற்கான குறைதீர்க்கும் கூட்டம் நாளை 1-ந் தேதி (புதன்கிழமை) காங்கயம் பஸ் நிலையம் அருகே சென்னிமலை சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் காலை 11 மணி முதல் மதியம் 1 மணிவரை மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெற உள்ளது. மின் பயனீட்டாளர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு, தங்களின் குறைகளை தெரிவித்து, நிவர்த்தி பெறலாம் என மின் வாரிய காங்கயம் செயற்பொறியாளர் கணேஷ் தெரிவித்துள்ளார்.

    • 843 பேர் மனு அளித்தனர்
    • உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவு

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் கலெக்டர் பா.முருகேஷ் தலைமையில் நடந்தது.

    கல்வி உதவித்தொகை, வங்கி கடன் உதவி, முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை உள்ளிட்டவைகளை கேட்டு 843 பேர் மனு அளித்தனர்.

    பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களை கலெக்டர் சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    அதேபோல் செய்யாறு உதவி கலெக்டர் அலுவலகத்தில் 78 மனுக்களும், ஆரணி சப் -கலெக்டர் அலுவலகத்தில் 79 மனுக்களும் பெறப்பட்டன.

    இதில் வேளாண் இணை இயக்குநர் அரக்குமார், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது
    • சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவுறுத்தினார்.

    திருப்பூர் : 

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வீட்டுமனை பட்டா மற்றும் முதியோர் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை , சாலை வசதி, குடிநீர் வசதி என பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 406 மனுக்களை பெற்று கொண்டதுடன் மனுதாரர்கள் முன்னிலையிலேயே விசாரணை செய்து அதன் மீது உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவுறுத்தினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் ,தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) செல்வி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராஜ், துணை ஆணையர்(கலால்) ராம்குமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) வாணி, துணை கலெக்டர்கள் மற்றும் அனைத்து அரசுத்துறைகளின்அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • வருகிற 30-ந்தேதி நடக்கிறது
    • சங்கப் பிரதிநிதிகள் தெரிவிக்கும் குறைகளுக்கு பதிலளிக்க உள்ளனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடப்பு ஜூன் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் வருகிற 30-ந்தேதிகாலை 10.30 மணிக்கு கலெக்டர் வளர்மதி தலைமையில் நடைபெற உள்ளது.

    கூட்டத்தில் வேளாண்மை, தோட்ட க்கலை, வேளாண் பொறியியல், வேளாண் வணிகம் மற்றும் விற்பனை, பட்டுவளர்ச்சி, மீன்வளம், கால்நடை பராமரிப்பு, கூட்டுறவு, நீர்வள ஆதார அமைப்பு, வனத்துறை, மாசுக்க ட்டுபாடு வாரியம், மின்சாரம், போக்கு வரத்து மற்றும் பால்வளத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் தெரிவிக்கும் குறைகளுக்கு பதிலளிக்க உள்ளனர்.

    எனவே ராணிப்பேட்டை மாவட்டத்தை சார்ந்த விவசாயிகள் களப்பிரச்சனைகளை களைந்திட இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பொது பிரச்சனைகளை கோரிக்கை வாயிலாகவும், தனிநபர் பிரச்சனைகளை மனுக்கள் வாயிலாகவும் தெரிவித்து பயன்பெறலாம்.

    • சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 3 மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது.
    • ரூ.54,000 கல்வி உதவித்தொகை, மாதாந்திர உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

    திருப்பூர்:

    முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரைச் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் சுயதொழில் முனைவோருக்கான கருத்தரங்கு திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது.இதில் கலெக்டர் தெரிவித்ததாவது:-

    திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர் மற்றும் அவரை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 3 மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் சுயதொழில் முனைவோருக்கான கருத்தரங்கு வருடத்திற்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் சுயதொழில் முனைவோருக்கான கருத்தரங்கு நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் சென்ற காலாண்டில் பெற்ற மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவரிக்கப்பட்டது. மேலும் கல்வி உதவித்தொகை, குடும்ப ஓய்வூதியம், இலவச வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மொத்தம் 21 மனுக்கள் பெறப்பட்டது.

    இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், முன்னாள் படைவீரர்களின் கோரிக்கை மனுக்களுக்கு முக்கியத்துவம் அளித்து உடனுக்குடன் தீர்வு காண வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்த ப்பட்டுள்ளது என்றார்.

    அதனைத்தொடர்ந்து இக்கூட்டத்தில் 3 முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரை சார்ந்தோர்களுக்கு ரூ.54,000 கல்வி உதவித்தொகை, மாதாந்திர உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், உதவி இயக்குநர் (பொ) (முன்னாள் படைவீரர் நலம்) வெங்கட்ராமன், பொதுமேலாளர் (மாவட்டதொழில் மையம்) ராமலிங்கம், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் சுரேஷ், மாவட்ட மேலாளர் (தாட்கோ) ரஞ்சித்குமார், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரை சார்ந்தோர்கள், படைவீரர் மற்றும் குடும்பத்தினர், அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • மனுதாரர்களுக்கு உரிய பதிலளிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
    • 6 பேருக்கு ஒளிரும் மடக்கு குச்சிகளை கலெக்டர் ரவிச்சந்திரன் வழங்கினார்.

    தென்காசி:

    தென்காசியில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. 265 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன.

    இந்த மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனு தாரர்களுக்கு உரிய பதிலளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கும் கலெக்டர் அறிவுறுத்தினார்.

    மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.8,500 செலவில் காதொலி கருவிகளும், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் 6 பேருக்கு ஒளிரும் மடக்கு குச்சிகள் தலா ரூ.8,500 செலவிலும் ஆக மொத்தம் ரூ.68 ஆயிரம் மதிப்பில் உதவி உபகரணங்களை கலெக்டர் ரவிச்சந்திரன் வழங்கினார்.

    கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்து மாதவன், மாவட்ட வழங்கள் அலுவலர் சுதா, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் சிவசங்கரன், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் நடராஜன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • காலை 10மணிக்கு திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது.
    • வேளாண் உதவி மையம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:- திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 30-ந்தேதிகாலை 10மணிக்குதிருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. கூட்டத்தில் முதலாவதாகவிவசா யிகளின் கோரிக்கைக்கான மனுக்கள் கலெக்டரிடம் வழங்கிடவும், பின்னர் பதிவு செய்யப்பட்ட விவசாய சங்க ங்களில் ஒரு சங்கத்திற்கு ஒருவர் வீதம், தங்களது கோரிக்கைகளை தொகுத்து கலெக்டரிடம் நேரடியாக தெரிவித்திட கேட்டுக்கொ ள்ளப்படுகிறது.

    மேலும் விவசாயிகள் நுண்ணீர் பாசனம் அமை த்திட விவசாயிகளுக்கு ஏதுவாக வேளாண்மை அலுவலர், தோட்டக்கலை அலுவலர் மற்றும்வேளாண் பொறியியல்துறை அலுவலர்களைக் கொண்டு வேளாண் உதவி மையம் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் அமை க்கப்பட்டுள்ளது. வேளாண் உதவி மையத்தின் மூலம் விவசா யிகள்நுண்ணீர் பாசனம்அமைக்க தேவையான தகவல்கள் வழங்கப்படும். தக்க ஆவணங்களுடன் வரும் விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன மேலாண்மை தகவல் அமைப்பில் (MIMIS PORTAL) பதிவு செய்து கொள்ளவும், வேளாண் உழவர்நலத்துறை மற்றும் வேளாண்சார்ந்த துறைகளால் அமைக்கப்பட வுள்ள கருத்துக்காட்சியிலும் கலந்துகொண்டு விவசாயிகள்பயன்பெற கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார். 

    • 21 மனுக்களில் தீர்வு காணப்பட்டது
    • ஓய்வூதியதாரர்கள் பலர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் ஓய்வூதியதார்களுக்கான குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். கூட்டத்தில் கடந்த முறை வரப்பெற்ற 21 மனுக்களில் தீர்வு காணப்பட்ட 15 மனுக்கள் மற்றும் நிலுவையிலுள்ள 6 மனுக்கள் குறித்து துறைச்சார்ந்த அலுவலர்களிடம் கேட்டு கலெக்டர் ஆய்வு செய்தனர்.

    நேற்றைய கூட்டத்தில் பெறப்பட்ட 29 கோரிக்கை மனுக்கள் குறித்து மனுதாரர்களிடம் கேட்டறிந்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் நேரடியாக மனுவின் மீது மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கேட்டரிந்தார். அந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தினார்.

    இனிவரும் காலங்களில் நடைபெறும் ஓய்வூதியர் குறைதீர்வு நாள் கூட்டத்திற்கு சார்பு அலுவ லர்களை அனுப்பாமல் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டு மென கலெக்டர் உத்தர விட்டார்.

    கூட்டத்தில் கருவூல மண்டல இணை இயக்குநர் சாந்தி மணி உள்பட ஓய்வூதியதாரர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • ராணிப்பேட்டையில் வருகிற 19-ந் தேதி நடக்கிறது
    • கலெக்டர் அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் வருகிற 19-ந் தேதி கலெக்டர் வளர்மதி தலைமையில், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் வணிகம் மற்றும் விற்பனை, பட்டுவளர்ச்சி, மீன்வளம். கால்நடை பராமரிப்பு, கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், கூட்டுறவுத்துறை, நீர்வள ஆதார அமைப்பு, வனம், மாசுக்கட்டுபாடு வாரியம், மின்சாரம், போக்குவரத்து. பால்வளம் உள்பட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டு விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் தெரிவிக்கும் குறைகளுக்கு பதிலளிக்க உள்ளனர்.

    எனவே ராணிப்பேட்டை மாவட்டத்தை சார்ந்த விவசாயிகள் களப்பிரச்சினைகளை களைந்திட இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பொது பிரச்சினைகளை கோரிக்கை வாயிலாகயும், தனிநபர் பிரச்சினைகளை மனுக்கள் வாயிலாகவும் தெரிவித்து பயன்பெறலாம் என கலெக்டர் அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அவிநாசியில் மின் நுகா்வோா் குறைதீா்க்கும் நாள் கூட்டம் நாளை 10-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • குறைதீா்க்கும் கூட்டத்தில் திருப்பூா் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் முத்துவேல் கலந்துகொண்டு மின் நுகா்வோா் குறைகளைக் கேட்டறியவுள்ளாா்.

    அவிநாசி:

    அவிநாசியில் மின் நுகா்வோா் குறைதீா்க்கும் நாள் கூட்டம் நாளை 10-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அவிநாசி- மங்கலம் சாலையில் உள்ள மின் கோட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் நாளை காலை 11 மணிக்கு நடைபெறும் குறைதீா்க்கும் கூட்டத்தில் திருப்பூா் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் முத்துவேல் கலந்துகொண்டு மின் நுகா்வோா் குறைகளைக் கேட்டறியவுள்ளாா்.

    எனவே மின்நுகா்வோா் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு மின் சம்பந்தமான குறைகளைத் தெரிவித்து நிவா்த்தி செய்து கொள்ளலாம் என அவிநாசி மின் கோட்ட செயற்பொறியாளா் பழ.பரஞ்சோதி தெரிவித்துள்ளாா். 

    ×