என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
உடுமலையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 16-ந்தேதி நடக்கிறது
- உடுமலை கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாதம்தோறும் நடத்தப்படுகிறது.
- காலை 11 மணிக்கு உடுமலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் முதல் தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடக்கிறது.
உடுமலை:
உடுமலை, மடத்துக்குளம் தாலுகா விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் உடுமலை கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாதம்தோறும் நடத்தப்படுகிறது. நடப்பு மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 16-ந் தேதி காலை 11 மணிக்கு உடுமலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் முதல் தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடக்கிறது. இக்கூட்டத்தில், உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவிற்குட்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறுமாறு, வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் தெரிவித்துள்ளார்.
Next Story






