search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Avinashi Temple"

    • 50 பணியாளர்கள் வாயிலாக தொடர்ந்து 45 நாட்களாக யாகசாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றது.
    • இக்கோவிலுக்கு கடந்த 1980 மற்றும் 1993 என 2 முறை யாகசாலை அமைக்கும் பாக்கியம் எங்கள் குடும்பத்தினருக்கு கிடைத்துள்ளது.

    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 2-ந்தேதி விமரிசையாக நடைபெற உள்ளது. இதற்காக கோவில் அருகே பிரமாண்டமாக யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவில் யாகசாலை பணிகள் தொடர்ந்து 45 நாட்களாக நடைபெற்று பணிகள் நிறைவடைந்துள்ளது.

    இதில் மூலவர், அம்பாள், முருகப்பெருமானுக்கு நவகுண்ட யாகசாலை, பாதிரி அம்மன், காலபைரவர் ஆகிய மூர்த்திகளுக்கு பஞ்ச குண்ட யாகசாலை மற்றும் 37 பரிவார வேதிகை என யாகசாலை ஆகம விதிகள்படி அமைக்கப்பட்டுள்ளது.

    யாகசாலை குறித்து அதன் அமைப்பாளர் மயிலாடுதுறையை சேர்ந்த செல்வம் கூறியதாவது:-

    அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் அமைக்கப்பட்டுள்ளது அரண்மனை யாகசாலை எனப்படும். 220 அடி நீளம், 100 அடி அகலத்தில் 79 குண்டங்கள், 43 வேதிகைகள் என அமைக்கப்பட்டுள்ளது. அனைத்தும் ஆகமவிதிகள்படி அமைக்கப்பட்டுள்ளது. 50 பணியாளர்கள் வாயிலாக தொடர்ந்து 45 நாட்களாக யாகசாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றது.

    இக்கோவிலுக்கு கடந்த 1980 மற்றும் 1993 என 2 முறை யாகசாலை அமைக்கும் பாக்கியம் எங்கள் குடும்பத்தினருக்கு கிடைத்துள்ளது. தற்போது 4-வது தலைமுறையாக யாக சாலை அமைக்கும் பணிகளை செய்து வருகின்றோம்.

    கோவை கோனியம்மன் கோவில், திருவாடுதுறை ஆதீனம், தர்மபுரி ஆதீனம், திருக்கடையூர், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில் போன்ற பிரசித்தி பெற்ற கோவில்களிலும் கும்பாபிஷேகத்துக்கு யாகசாலை அமைத்த புண்ணியம் கிடைத்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிவன் ஆலயத்தில் கடந்த 1990ம் ஆண்டு ஒரு சம்பவம் நடைபெற்றது.
    • வரும் ஜூலை 30 ந் தேதி இந்து முன்னணி சார்பில் அவிநாசியில் மாநாடு நடத்தப்படவுள்ளது.

    பல்லடம் :

    பல்லடம் இந்து முன்னணி அலுவலகத்தில் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் மாநில செயலாளர் தாமு வெங்கடேசன் முன்னிலையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பின்னர் காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாள ர்களிடம் கூறியதாவது :- தி.மு.க. இந்து விரோத கட்சியாக செயல்படுகிறது. இந்து கோயில்களை இடிக்க முயல்கிறது. புண்ணிய தலமாக அவிநாசி விளங்குகிறது. அங்குள்ள சிவன் ஆலயத்தில் கடந்த 1990ம் ஆண்டு ஒரு சம்பவம் நடைபெற்றது. யாரோ பீடி பிடித்து வீசி தான் தீவிபத்து நிகழ்ந்தது என்றனர். அதன் பின்னர் 2000ம் ஆண்டில் தற்கொலை நடைபெற்ற போது அங்கு ஒரு பைபிள் கிடந்தது. அவர் மனநோயாளி என்று சொல்லி முடித்து விட்டனர். தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடைபெற்று ள்ளது. இதனையும் பைத்தியக்காரன் என்று சொல்லி முடிக்கின்றனர். தொடர்ந்து அவிநாசி கோயிலில் இது போன்ற விரும்பதகாத சம்பவங்கள் நடைபெற்று வருவதை விசாரிக்க சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். இதனை வலியுறுத்தி வரும் ஜூலை 30 ந்தேதி இந்து முன்னணி சார்பில் அவிநாசியில் மாநாடு நடத்தப்படவுள்ளது. பட்டினபிரவேசம் என்பது பல நூற்றாண்டு காலமாக நடைபெற்று வரும் வைபவம். இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது தேவையற்றது. மதம் சார்ந்த நம்பிக்கைகளில் மதசார்பின்மை கொள்கை கொண்ட அரசியல் கட்சிகள் தலையிடுவது கூடாது. இந்து மதத்திற்கு என்று பல நூற்றாண்டு வழிபாட்டு மரபு , நடைமுறைகள் உள்ளன. இந்து கோயில்களில் அரசியல்வாதிகள் தலையீடு கூடாது.

    கடவுள் பக்தி நம்பிக்கையுடையவர்களை தான் கோயில்களுக்கும் செயல்அலுவல ர்களாகவும், அறங்காவலர்க ளாகவும் நியமனம் செய்ய வேண்டும். இந்து கோயில் வருமானம் அனைத்தும் இந்து கோயில்களுக்கு மட்டுமே செலவிட வேண்டும் என்றார். மாவட்ட செயலாளர்கள் லோகநாதன், சர்வேஸ்வரன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • பொதுமக்கள் அனைத்து சுகங்களும் பெற்று நலமுடன் வாழ வேண்டும்.
    • பக்தா்கள் பங்கேற்று அவிநாசி பதிகம் பாடினா்.

    அவிநாசி :

    அவிநாசிலிங்கேஸ்வரா் கோவிலில் விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற வேண்டியும், பொதுமக்கள் அனைத்து சுகங்களும் பெற்று நலமுடன் வாழ வேண்டியும் 10,008 முறை அவிநாசி பதிகம் பாராயணம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் அவிநாசிலிங்கேஸ்வரா் கோவில் சிவாச்சாரியாா் ஆரூா் சுப்பிரமணியம், சிவன்மலை சந்திரசேகரன் ,பழனி ,விக்னேஷ், அமுத கணேசன், தாரமங்கலம் முத்துகிருஷ்ணன் உள்பட பல்வேறு பகுதிகளை சோ்ந்த சிவனடியாா்கள், பக்தா்கள் பங்கேற்று அவிநாசி பதிகம் பாடினா். 

    • தேரோட்டம் 2-ந் தேதி முதல் 3 நாட்கள் நடக்கிறது.
    • திருமண மண்டபங்களில் கட்டாயமாக கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும்.

    அவினாசி :

    அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் சிகரம் தொடும் நிகழ்ச்சியான தேரோட்டம் 2-ந் தேதி முதல் 3 நாட்கள் நடக்கிறது. தேர்த்திருவிழாவின் போது பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். எனவே அது தொடர்பான ஆலோசனை கூட்டம் அவினாசி பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். கோவில் செயல் அலுவலர் பெரிய மருதுபாண்டி, உணவு பாதுகாப்பு துறை அலுவலர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அவினாசியை சேர்ந்த மண்டபம் உரிமையாளர்கள், நிர்வாகிகள், அன்னதான கமிட்டியினர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுரைகள் வருமாறு:- திருமண மண்டபங்களில் கட்டாயமாக கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும். அவசியம் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். பொது மக்களுக்கு பாதுகாப்பான முறையில் உணவு தயாரித்து வழங்க வேண்டும். கொரோனா அறிகுறிகள் மற்றும் தொற்றுநோய் பாதிக்கப்பட்ட பணியாளர்களை உணவு சமைக்க, பரிமாற அனுமதிக்க கூடாது. உணவு தயாரிக்க தரமான சமையல் பொருட்கள் மற்றும் குளோரினேசன் செய்யப்பட்ட தண்ணீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    தேர் செல்லும் நான்கு ரத வீதிகளில் வாகனங்கள் மூலம் அன்னதானம் வழங்கக்கூடாது. உணவு தயாரிக்க பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் அனுமதி சீட்டு பெற்று குடிநீர் பெற்றுக்கொள்ளலாம். மீதமான உணவுப் பொருட்களை எக்காரணம் கொண்டும் வடிகால்களிலோ, சாலைகளிலோ, பொது இடங்களிலோ கொட்ட கூடாது. உணவு பாதுகாப்பு துறை மூலம் உணவு மாதிரிகள் சேகரிக்கப்படுவதால் தரமான பொருட்களை அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் கொள்முதல் செய்து பயன்படுத்தி அன்னதானம் வழங்க வேண்டும். திருமண மண்டபங்களில் தேர்வரும் நேரங்களில் ஆண்கள் மற்றும் பெண்கள் பயன்படுத்த கழிவறைகளை அன–மதிக்க வேண்டும். இவ்வாறு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

    • திருமுருகநாத சுவாமி, அணைப்புதூரில் உள்ள ஸ்ரீ சுந்தரமூர்த்தி விநாயகர் கோவிலில் எழுந்தருளினார்.
    • அபிஷேகம், அலங்காரம் ஆகியவை திருமுருகநாத சாமிக்கு நடைபெற்றது.

    அவிநாசி :

    அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழாவை முன்னிட்டு திருமுருகநாதர் வருகை நிகழ்ச்சி நேற்றிரவு நடைபெற்றது.இதையொட்டி திருமுருகன்பூண்டியில் உள்ள திருமுருகநாத சுவாமி, அணைப்புதூரில் உள்ள ஸ்ரீ சுந்தரமூர்த்தி விநாயகர் கோவிலில் எழுந்தருளினார்.

    அபிஷேகம், அலங்காரம் ஆகியவை திருமுருகநாத சாமிக்கு நடைபெற்றது. தொடர்ந்து அவிநாசி போஸ்ட் ஆபீஸ் வீதியில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலில், ஸ்ரீசந்திரசேகர சுவாமி, திருமுருகநாதரை எதிர்கொண்டு அழைக்கும் சிறப்பு பூஜை நடைபெற்றது.தொடர்ந்து பழைய பஸ் நிலையம் எதிரில் உள்ள ஊமையஞ் செட்டியார் தண்ணீர் பந்தல் மண்டபத்தில் கட்டளைதாரர்கள் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன்பின் திருமுருகநாத சுவாமி, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலுக்கு வருகை புரிந்தார்.

    • கோவில் சித்திரைத் தோ்த் திருவிழா ஏப்ரல் 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    • கோவில் சுற்றுப்பிரகாரம், பிரகார மேடை ஆகிய வற்றில் உள்ள குப்பைகளை அகற்றினா்.

    அவினாசி :

    அவிநாசிலிங்கேஸ்வரா் கோவில் தோ்த்திருவிழாவை முன்னிட்டு சிவனடியாா்கள் சாா்பில் உழவாரப்பணி நடைபெற்றது.கருணாம்பிகையம்மன் உடனமா் அவிநாசிலி ங்கேஸ்வரா் கோவில் சித்திரைத் தோ்த் திருவிழா ஏப்ரல் 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதை யொட்டி, சிவனடியாா்கள் கோவிலில் உழவாரப்பணி மேற்கொண்டனா். கோவில் சுற்றுப்பிரகாரம், தளம், பிரகார மேடை ஆகிய வற்றில் உள்ள குப்பைகளை அகற்றினா். இதையடுத்து பட்டி அரசமர விநாயகா், அவிநாசி லிங்கேஸ்வரா், கருணாம்பிகையம்மன், முருகன், விநாயகா் , சண்டிகேஸ்வரா், காலபைரவா் கோவில்கள், அா்த்தமண்டபம், கனகசபை, மகா மண்டபம் உள்ளிட்ட பகுதிகளை தூய்மைப்படுத்தினா்.

    இதைத்தொடா்ந்து மூலவா், உற்சவமூா்த்தி, பஞ்சலிங்கம், நந்திதேவா், கொடிக்கம்பம், பலிபீடம் ஆகியவற்றையும் கழுவி தூய்மைப்படுத்தினா். சுவாமிக்கு அணிவி க்கக்கூடிய அனைத்து வஸ்திரங்களையும் சலவை செய்து உலரவைத்து தூய்மை செய்தனா். உழவா ரப்பணியில் பெண்கள் உள்பட 100 க்கும் மேற்ப ட்டோா் பங்கேற்றனா். பிறகு தெப்பக்குளத்தையும் சுத்தம் செய்தனா். மதியம் அவிநாசி லிங்கேஸ்வரருக்கு அபிஷேகம், அலங்காரம், மகாதீபாராதனைகள் நடைபெற்றன. நிறைவாக சிவனடியாா்கள் தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட பஞ்சபுராணத்துடன் அனைவரும் கூட்டு பிராா்த்தனை செய்தனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலில் வருகிற 25ந் தேதி கொடியேற்ற நிகழ்ச்சியுடன் தேர் திருவிழா தொடங்குகிறது.
    • மே 2, 3, 4 ஆகிய மூன்று நாட்கள் தேரோட்டம் நடக்கிறது.

    அவினாசி :

    அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு தேரோட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று தாலுகா அலுவலகத்தில நடந்தது.திருப்பூர் மாவட்டம் அவினாசியில் ஏழு கொங்கு சிவாலயங்களில் முதன்மை பெற்ற கோவில், காசிக்கு நிகரான கோவில் என்ற பெருமை பெற்றதும், தமிழகத்திலேயே மூன்றாவது பெரிய தேர் உடையது என பல்வேறு சிறப்புகள் பெற்ற அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலில் வருகிற 25ந் தேதி கொடியேற்ற நிகழ்ச்சியுடன்தேர் திருவிழா தொடங்குகிறது. மே 2, 3, 4 ஆகிய மூன்று நாட்கள் தேரோட்டம் நடக்கிறது.விழாவை முன்னிட்டு தேரோட்டம் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் அவினாசி தாலுக்கா அலுவலகத்தில் சப் கலெக்டர்.ஸ்ருதன் ஜெயநாராயணன் தலைமையில் நடந்தது. இதில்பொதுப்பணித்துறை, மின்வாரியம் , காவல்துறை, நெடுஞ்சாலை துறை, ஊரக வளர்ச்சி துறை ,உணவு பாதுகாப்பு துறை உள்ளிட்ட பல துறைகளை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் தேரோட்டத்தின் போது தேரோடும் பாதையில் மின் வினியோகத்தை துண்டிப்பு செய்ய வேண்டும்,தேரோட்டம் முடியும் வரை பாதுகாப்புக்கு பணியாளர் ஒருவரை நியமிக்க வேண்டும், தேரோடும் பாதையில் வருவாய் துறையின்மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றப்படும் பொழுதுஉடனிருந்து தக்க உதவிகளை செய்ய வேண்டும், தேரோடும் போது தேரின் சக்கரத்திற்கு அருகில் வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் வராமல் இருப்பதற்கு தகுந்த அறிவிப்பினை அவ்வப்போது ஒலி பெருக்கி மூலம் தெரிவிக்க வேண்டும்.

    பக்தர்கள் எவரும் தேருக்கு அருகில் வராமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தேரோட்டத்தின் போது தடை செய்யப்பட்ட பொருட்களைக் கொண்டு ஒலி எழுப்புதல், தேரோடும் சாலையில் வண்டிகளில் உணவு வைத்து விநியோகம் செய்வது தடுக்கப்பட வேண்டும்,மீட்பு பணிகள் துறை தீயணைப்பு ஊர்தியுடன் வீரர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

    தேரோட்டத்தின் போது சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் .அசம்பாவிதம் ஏதும் ஏற்பட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி வழங்கிட ஏதுவாக மூன்று அவசர ஊர்திகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தேரோட்ட சாலைகளில் வேகத்தடைகள் இருந்தால் அவற்றை அப்புறப்படுத்த வேண்டும்.சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தேரோடும் சாலைகளின் குறுக்கே செல்லும் கேபிள் வயர்கள் போன்ற அனைத்து கம்பிகளையும் அப்புறப்படுத்த வேண்டும், குடிநீர் வசதி மற்றும் தற்காலிக கழிவறைகள் அமைக்க வேண்டும்,தனி நபர்களால் வழங்கப்படும் அன்னதானம் தரமானதாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. 

    • தமிழகத்தில் மூன்றாவது பெரிய தேர் என்ற சிறப்பு பெற்றது இந்தக் கோவில் தேர்.
    • ஷெட்டை பிரிக்கும் பணிகள் கடந்த இரு நாட்களாக நடந்தது.

    அவிநாசி :

    அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரைத் தேரோட்டம் வருகிற 25ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தமிழகத்தில் மூன்றாவது பெரிய தேர் என்ற சிறப்பு பெற்றது இந்தக் கோவில் தேர். கோவில் வளாகத்தில் தகர ஷெட்டால் பாதுகாப்பாக மூடி வைக்கப்பட்டுள்ள தேரை தயார்படுத்து வதற்காக ஷெட்டை பிரிக்கும் பணிகள் கடந்த இரு நாட்களாக நடந்தது. கோவில் சிவாச்சாரியார்கள் தேர் விழாவிற்கான முகூர்த்த ஆயக்கால் பூஜை நடந்தது.

    செயல் அலுவலர் பெரிய மருது பாண்டியன் கூறிய போது,தொடர்ந்து தேரை தயார்படுத்தி அலங்காரம் செய்யும் பணிகள் நடைபெறும் என்றார்.

    • கருணாம்பிகை அம்மனுடன், லிங்கேஸ்வரர் எழுந்தருளினார்.
    • சிவாச்சார்யார்கள் வேதபாராயணம் செய்ய உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.

    அவிநாசி :

    கொங்கேழு சிவாலயங்களில் முதன்மையான அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், தல வரலாற்றில் இடம் பெற்ற முதலை வாய்ப்பிள்ளை உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி, கோவில் திருக்கல்யாண உற்சவ மண்டபத்தில், கருணாம்பிகை அம்மனுடன், லிங்கேஸ்வரர் எழுந்தருளினார்.

    ஓதுவா மூர்த்திகள், அவிநாசி தேவாரம் பாட, சிவாச்சார்யார்கள் வேத பாராயணம் செய்ய முதலை வாய்ப்பிள்ளை உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • கோபுரத்துக்கு வர்ணம் தீட்ட 11 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கோவை ராமானந்தா அடிகளார் அறக்கட்டளையினர் முன்வந்துள்ளனர்.
    • திருப்பணி வேலைகள் தொடர்ந்து நடைபெறும்.

    அவிநாசி ூ

    அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த அம்மன் ராஜகோபுரம் பாலாயம் செய்யப்ப ட்டுள்ளது. கோபுரத்துக்கு வர்ணம் தீட்ட 11 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கோவை ராமானந்தா அடிகளார் அறக்கட்ட ளையினர் முன்வந்து ள்ளனர்.

    இதனால் அம்மன் ராஜகோபுரத்துக்கு மூங்கில் சாரம் அமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளன. திருப்பணி வேலைகள் தொடர்ந்து நடைபெறும் என செயல் அலுவலர் பெரிய மருது பாண்டியன் தெரிவித்தார்.

    • காசிக்கு நிகரான கோவில் என்ற பல்வேறு சிறப்பு பெற்றதாக விளங்குகிறது.
    • கற்பகவிருட்ச வாகனம் கோவிலில் புறப்பட்டு நான்கு ரதவீதிவழியாக வலம் வந்தது.

    அவினாசி :

    திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள கருணாம்பிகை உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதும் காசிக்கு நிகரான கோவில் என்ற பல்வேறு சிறப்பு பெற்றதாக விளங்குகிறது.

    இந்தநிலையில் கருணாம்பிகா டிரஸ்ட் சார்பாக அவினாசிலிங்கேசுவரருக்கு இலுப்பை, அத்தி, மாவுலிங்கம் ஆகிய மரங்களினால் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் மரத்தினால் மயில், கிளி, அன்னப்பறவை, மற்றும் வாழை, மாதுளை, பலா, ஆப்பிள், திராட்சை உள்ளிட்ட கனிவகைகளுடன் கூடிய புதிதாக கற்பகவிருட்ச வாகனம் கலைநயத்துடன் நேர்த்தியாக அமைக்கப்பட்டது. இந்த புதிய கற்பகவிருட்ச வாகனத்தின் பாலாலயம் மற்றும் வெள்ளோட்ட நிகழ்ச்சி அவினாசிலிங்கேசுவரர் கோவிலில் நடந்தது. கூனம்பட்டி ஆதீனம் நடராஜ சாமிகள், அவினாசி காமாட்சி தாச சாமிகள் ஆகியோர் தலைமையில் நடந்த கற்பகவிருட்ச வாகன வெள்ளோட்டத்திற்கு செங்குந்த ஹோத்ரம் கருணாம்பிகை அம்மன் டிரஸ்ட் தலைவர் ஆண்டவர் ராமசாமி, செயலாளர் குமரேசன், பொருளாளர் திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கற்பகவிருட்ச வாகனம் கோவிலில் புறப்பட்டு நான்கு ரதவீதிவழியாக வலம் வந்தது. இதில் திரளான பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    இது குறித்து கருணாம்பிகா டிரஸ்ட் தலைவர் ஆண்டவர் ராமசாமி கூறுைகயில், கடந்த 40 ஆண்டுகளாக அவினாசிலிங்கேசுவரர் தேர்த்திருவிழா நிகழ்ச்சியின்போது டிரஸ்ட் மூலம் கருணாம்பிகை உடனமர் அவினாசிலிங்கேசுவரர் சாமிகளுடன் கற்பகவிருட்ச வாகனம் ரதவீதிகள் வழியாக வலம்வரும். இதற்கு முன்பு இருந்த கற்பகவிருட்ச வாகனம் பழுதடைந்துபோனதால் டிரஸ்ட் மூலம் புதிதாக கற்பக விருட்ச வாகனம் வடிவமைக்கப்பட்டு தற்போது வெள்ளோட்ட நிகழ்ச்சி நடந்துள்ளது.

    • அவினாசிலிங்கேசுவரர் கோவிலில் தீபம் ஏற்றும் திருவிழா நடந்தது.
    • கடந்த ஒருவாரமாக கோவில் வளாகம் முழுவதும் தூய்மைபடுத்தும் பணி நடந்தது.

    அவினாசி :

    அவினாசி அவினாசிலிங்கேசுவரர் கோவிலில் கடந்த 2015ம் ஆண்டு லட்சத்து எட்டு தீபம் ஏற்றும் திருவிழா நடந்தது.இதையடுத்து இந்த ஆண்டு கார்த்திகை மாதத்தில் அறநிலையத்துறை ஒத்துழைப்புடன். இரண்டாம் முறையாக லட்சத்து எட்டு தீபத் திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இதற்காக கடந்த ஒருவாரமாக கோவில் வளாகம் முழுவதும் தூய்மைபடுத்தும் பணி நடந்தது. இதில் பக்தர்கள் ,சமூக ஆர்வலர்கள், வழிபாட்டு குழுவினர் திரளானோர் ஆர்வமுடன் கோவில் பணிகளில் ஈடுபட்டனர். விருந்தாச்சலத்திலிருந்து லட்சத்து எட்டு அகல்விளக்குகள் கொண்டுவரப்பட்டது. தீபத்திருவிழாவிற்காக ஏராளமானோர் எண்ணை, திரி ஆசியவற்றை வழங்கினர். லட்சத்து எட்டு விளக்குகளில் பெண்கள் உள்ளிட்ட பலர் எண்ணை ஊற்றினர்.

    இதையடுத்து கோவில் சபா மண்டபம், திருக்கல்யாண உற்சவம் மண்டபம், கனகசபை கோயில்பிரகாரங்கள், தீபஸ்தம்பம், நடராசர் சன்னதி, அம்மன் சன்னதி. உள்பிரகார வழிநெடுகிலும் மற்றும் தெப்பக்குளம் உள்ளிட்ட கோவில் வளாகம் முழுவதும், லிங்க வடிவம், நந்தி வடிவம் விளக்கு , வேல் உள்ளிட்ட பலவடிவங்களில் தீபம் பிரகாசித்து ஒளிர்ந்தது பக்தர்களை மிகவும் கவர்ந்தது.

    லட்சத்து எட்டு தீப திருவிழாவை காண அவினாசி,தெக்கலூர், கருவலூர், பழங்கரை, சேவூர், அன்னூர், திருமுருகன்பூண்டி, திருப்பூர், உள்ளிட்ட பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் திரண்டனர்.முன்னதாக கோவை கவுமார மடாலய ஆதினம் குமரகுருபர சுவாமிகள் தீபம் ஏற்றும் நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார்.இதையடுத்து கோவில் முன் | உள்ள தீபஸ்தம்பத்தில் கோவில் அர்ச்சகர் தீபம் ஏற்றிவைத்தார்.

    ×