search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பணிகளை விரைந்து செய்து அவினாசி கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் பக்தர்கள் கோரிக்கை
    X

    அவினாசி கோவில் 

    திருப்பணிகளை விரைந்து செய்து அவினாசி கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் பக்தர்கள் கோரிக்கை

    • தமிழகத்தில் 3-வது பெரிய தேரான அவினாசி கோவில் தேரோட்டம் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் நடைபெறும்.
    • 14 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் கோவில் கோபுரங்கள் மங்கி பொலிவிழந்து காணப்படுகிறது.

    அவினாசி :

    திருப்பூர் மாவட்டம் அவினாசியில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதாகவும் முதலையுண்ட பாலகனை சுந்தரர் பதிகம்பாடி உயிருடன் மீட்டெடுத்த வரலாற்று சிறப்புமிக்கதாகவும் பெருங்கருணை நாயகி உடனமர் அவினாசிலிங்கேசுவார் கோவில் உள்ளது. அவினாசியப்பருக்கு ஏழுநிலை கோபுரமும், கருணாம்பிகை அம்மனுக்கு ஐந்து நிலை கோபுரமும் கலைநயத்துடன் மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 3-வது பெரிய தேரான அவினாசி கோவில் தேரோட்டம் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் நடைபெறும். இக்கோவிலுக்குசாமிதரிசனம் செய்வதற்காக தமிழகத்தில் பல பகுதிகளிலிருந்தும், கர்நாடகா கேரளம் உள்ளிட்ட பிற மாநிலங்களிலிருந்தும் அதிக அளவில் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். முகூர்த்த நாட்களில் இங்கு ஏராளமான திருமணங்கள் நடக்கிறது.

    இவ்வாறு பல சிறப்பு பெற்ற இக்கோவிலில். கடந்த 2008ம் ஆண்டு ஜூலை மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்று 14 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் கோவில் கோபுரங்கள் மங்கி பொலிவிழந்து காணப்படுகிறது. ஆகமவிதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோவில் பராமரிப்பு பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்.

    வரலாற்று சிறப்புமிக்க அவினாசிலிங்கேசுவரர் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இந்து அறநிலையத்துறையினருக்கு பலமுறை கோரிக்கை மனு கொடுத்த நிலையில் கடந்த ஜூலை மாதம் கோவில் நிர்வாகத்தினர் ஆலோசனை கூட்டம் நடத்தி கும்பாபிஷேக ஏற்பாடுகள் விரைந்து செய்வதென முடிவு செய்தனர். ஆனால் பல மாதங்களாகியும் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான எந்த வேலையும் நடைபெறாதது வருத்தமளிக்கிறது என்று பக்தர்கள் தெரிவித்தனர்.

    இதேபோல் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆகாசராயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேரத்திகடன் செலுத்துவதற்காக ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் அவினாசி அருகே உள்ள ராயம்பாளையம் மற்றும் கருணை பாளையம் ஆகிய கிராமங்களில் இருந்து பக்தர்கள் அழகிய மண்குதிரைகளை சுமந்துவந்து இக்கோவிலில் வைத்து வழிபடுவார்கள். மேலும் ஏராளமானோர் தங்களது குழந்தைகளுக்கு இங்கு முடி எடுத்து காதுகுத்தி, கிடாய் வெட்டி விஷேசம் செய்வது ஆண்டாண்டுகாலமாய் நடந்துவருகிறது. பழமை வாய்ந்த இக்கோவில் பல பகுதிகளில் பழுதடைந்தும்சுற்றுச்சுவர் விரிசல் ஏற்பட்டு சாய்ந்த நிலையில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் நடந்து 15 ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையில் இக்கோவில் திருப்பணிகள் செய்து இதற்கும் விரைவில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    இதுகுறித்து கோவில் நிர்வாக தரப்பில் கூறுகையில், கோவில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்துவதற்காக அரசுக்கு கருத்துரு அனுப்பிஅனுமதி கேட்கப்பட்டு அதற்கு அரசிடம் இருந்து அனுமதியும் கிடைத்துள்ளது. இருப்பினும் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் பராமரிப்பு பணிகள் மற்றும் கும்பாபிஷேக பணிகளுக்கு செலவினம் அதிகம் தேவைப்படுவதால் உபயதாரர்களுக்காக எதிர்பார்ப்பில் உள்ளது. அதற்கு உண்டான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கூடியவிரைவில் கோவில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கு அனைத்து பணிகளும் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

    Next Story
    ×