

அவிநாசி :
கொங்கேழு சிவாலயங்களில் முதன்மையான அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், தல வரலாற்றில் இடம் பெற்ற முதலை வாய்ப்பிள்ளை உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி, கோவில் திருக்கல்யாண உற்சவ மண்டபத்தில், கருணாம்பிகை அம்மனுடன், லிங்கேஸ்வரர் எழுந்தருளினார்.
ஓதுவா மூர்த்திகள், அவிநாசி தேவாரம் பாட, சிவாச்சார்யார்கள் வேத பாராயணம் செய்ய முதலை வாய்ப்பிள்ளை உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.