search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "96 தெலுங்கு ரீமேக்"

    ‘96’ படத்தின் தெலுங்கு ரீமேக்குக்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இயக்குநர், தயாரிப்பாளர் இடையேயான மோதலால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. #96TheMovie #96TeluguRemake
    விஜய்சேதுபதி, திரிஷா நடித்த ‘96’ படம் ரிலீஸ் அன்றே பைனான்ஸ் சிக்கல் முதல் தயாரிப்பாளர் இல்லாமல் நூறாவது நாள் கொண்டாடியது வரை பல சர்ச்சைகளைச் சந்தித்து வருகிறது.

    தமிழில் இந்த படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தெலுங்கிலும் ரீமேக் செய்யப்படுகிறது. தெலுங்கு படத்தில் சர்வானந்த், சமந்தா ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள். படத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணிகளில் ஒன்று, இசை.



    படத்தின் தெலுங்கு ரீமேக்கில், தமிழ்ப் படத்துக்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இடம்பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவரை மாற்றிவிட்டு, தெலுங்கு இசையமைப்பாளர் ஒருவரை இசையமைக்க வைக்கலாம் எனத் தயாரிப்பாளர் கூறிவருகிறார்.

    இதனால், ‘தயாரிப்பாளர் ‘தில்’ ராஜு மற்றும் இயக்குனர் பிரேம் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாகவும், இதனால் ‘96’ படத்தின் தெலுங்கு ரீமேக் தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது’ எனவும் செய்திகள் வருகின்றன. அனேகமாக இயக்குனர் மாற்றப்படலாம் என்கிறார்கள். #96TheMovie #96TeluguRemake #Sharwanand #Samantha #PremKumar #GovindVasantha

    பிரேம் குமார் இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற 96 படத்தின் தெலுங்கு பதிப்பு விரைவில் உருவாகவிருக்கும் நிலையில், அதுகுறித்த பரவிய வதந்திக்கு பிரேம் குமார் விளக்கமளித்துள்ளார். #96TheMovie #96TeluguRemake
    விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற படம் 96. இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் திரிஷா கதாபாத்திரத்தில் சமந்தாவும், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ‌ஷர்வானந்த்தும் நடிக்கிறார்கள்.

    பிரேம் குமாரே தெலுங்கிலும் இந்தப் படத்தை இயக்குகிறார். 96 படத்தில் கதை 22 ஆண்டுகள் பின்னோக்கி நகர்ந்து கதை பயணித்ததால் அதற்கேற்ப நடிகர்களை தேர்வு செய்து இருந்தார்கள். விஜய் சேதுபதி, திரிஷாவின் சிறு வயது கதாபாத்திரங்களில் ஆதித்யா பாஸ்கர் மற்றும் கவுரி கி‌ஷன் ஆகியோர் நடித்து இருந்தனர்.



    ஆனால் தெலுங்கு பதிப்பில் கதையின் பிளாஷ்பேக் 2009-ஆம் ஆண்டுடன் நின்றுவிட உள்ளதாகவும், அதாவது பள்ளிக்காதலுக்குப் பதிலாக கல்லூரி காதலை படமாக்க இருப்பதாகவும் செய்திகள் வந்தன. எனவே ‌ஷர்வானந்த், சமந்தா இருவரும் தங்கள் இளமைத் தோற்ற கதாபாத்திரங்களிலும் நடிக்கின்றனர் என்றும் கூறப்பட்டது.

    இந்த செய்திக்கு பிரேம் குமார் விளக்கம் அளித்துள்ளார். ‘96 தெலுங்கு ரீமேக்கில் சமந்தாவுக்காக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தமிழில் இருந்த பள்ளிக்காதல் தான்’ என்று கூறி உள்ளார். #96TheMovie #96TeluguRemake #PremKumar #Sharwanand #Samantha

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே திருமணத்திற்காக வைத்திருந்த 96 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த கோட்டைப்பட்டினம் தாஜ்மகால் தெருவை சேர்ந்தவர் நூர்தீன் (வயது 48). மைக்செட் கடை வைத்துள்ளார்.

    மாவட்டம் முழுவதும் நடைபெறும் மாநாடு, பொதுக்கூட்டம், திருமண நிகழ்ச்சி உள்ளிட்ட அனைத்திற்கும் மைக்செட் அமைத்து பெயர் பெற்றவர். இந்த நிலையில் நூர்தீன் தனது மனைவியின் தங்கை மகள் திருமணத்திற்காக 96 பவுன் நகையை வாங்கி வைத்திருந்தார்.

    இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் நடக்க இருந்த நிலையில் சிறிது சிறிதாக இந்த நகைகளை சேர்த்திருந்தார். நேற்று மனைவிக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவால் அவரை அழைத்துக்கொண்டு மருத்துவ பரிசோதனைக்காக புதுக்கோட்டை சென்றிருந்தார்.

    இன்று அதிகாலை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியபோது அவரின் வீட்டு கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதிர்ச்சியடைந்த நூர்தீன் வீட்டிற்குள் சென்றார். அங்கு வீடே அலங்கோலமாக காட்சி அளித்தது. அனைத்து பொருட்களும் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன.

    மேலும் தனி அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 96 பவுன் நகை மற்றும் ரூ.30 ஆயிரம் பணம் கொள்ளை போயிருந்தது. நகை, பணம் திருட்டு போனதால் நூர்தீன் மற்றும் அவரது மனைவி கதறி அழுதனர். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டு முன்பு திரண்டனர்.

    பின்னர் இதுகுறித்து நூர்தீன் கோட்டைப்பட்டினம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வீட்டில் நகை இருப்பதை முன்கூட்டியே அறிந்தவர்கள்தான், இந்த துணிகர திருட்டில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்றும், அவர்கள் உறவினர்களா? அல்லது நூர்தீன் மைக் செட் கடையில் வேலை பார்க்கும் நபர்களா? என்பது உள்ளிட்ட கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.20 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
    சி.பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் உருவாகி இருக்கும் `96' படத்தின் விமர்சனம். #96TheMovieReview #VijaySethupathi #Trisha
    எத்தனை முறை சொன்னாலும் திகட்டாதது காதல். அந்த காதலை ஒரு முழு படமாக எடுத்து நம்மை பரவசப்படுத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரேம் குமார். இயக்குனராக முதல் படம் போல தெரியவில்லை.

    விஜய் சேதுபதி (ராம்) ஒரு டிராவல் போட்டோகிராபர். அழகாக செல்லும் அவர் வாழ்க்கையில், ஒருநாள் எதிர்பாராதவிதமாக தான் 10-ஆம் வகுப்பு வரை படித்த பள்ளிக்கு செல்கிறார். பள்ளிகால நண்பர்களுடன் பேசுகிறார். மீண்டும் சந்திக்க திட்டம் போடுகின்றனர். 96 ரீயூனியன் இணைகிறது. அங்கே விஜய் சேதுபதி பள்ளிகாலத்தில் காதலித்து சந்தர்ப்ப சூழ்நிலையால் பிரிந்த திரிஷாவும் (ஜானு) வருகிறார்.



    அந்த ஒரு நாள் இரவு விஜய் சேதுபதி - திரிஷா வாழ்க்கையில் ஏற்படுத்தும் மாற்றம் என்ன? இருவரும் தங்களது காதலை எவ்வாறு நினைவுகூர்ந்தார்கள்? என ஒட்டுமொத்த படமும் நமக்குள் ஏற்படுத்தும் தாக்கம் என்ன? என்பது தான் படத்தின் கதை.

    விஜய் சேதுபதி ஒரு இடத்தில் கூட விஜய்சேதுபதியாக தெரியவில்லை. கூச்சம், வெட்கம், நளினம் ஆங்காங்கே தனது பாணி நக்கல் வசனங்கள் என்று படத்தை சுவாரசியமாக நகர்த்துகிறார். போலீசாகவும், தாதாவாகவும் பார்த்த விஜய்சேதுபதியா இது? என தோன்ற வைக்கிறது.



    திரிஷா அறிமுகமான முதல் படத்தில் பார்த்தது போலவே இருக்கிறார். தன்னை பார்க்க வந்த ராமை தவறவிட்டதை நினைத்து, அவர் அழும் அந்த ஒரு காட்சி போதும். தமிழ் சினிமாவில் காதலிக்கவும், காதலிக்க வைக்கவும் திரிஷாவுக்கு நிகர் அவரே.

    தற்போதைய ராம், ஜானுவுக்கு போட்டியாக நடித்திருக்கிறார்கள், ஆதித்யா பாஸ்கரும், கவுரி கி‌ஷனும். சிறுவயது தேவதர்ஷினியாக நடித்திருப்பவரும் சரியான தேர்வு தான். 

    நாத்தனாரே என்று திரிஷாவை கிண்டலடிக்கும் போதும், விஜய் சேதுபதியும், திரிஷாவும் எல்லை மீறிவிடுவார்களோ என்று பயப்படும்போதும் தேவதர்ஷினி பின்னி எடுக்கிறார். பகவதி பெருமாள், ஜனகராஜ், ஆடுகளம் முருகதாஸ் ஆகியோர் ரசிக்க வைக்கிறார்கள்.



    விஜய்சேதுபதி போட்டோ எடுக்கும் அழகான காட்சியமைப்புடன் படம் தொடங்குகிறது. அவர் பள்ளிக்குள் நுழைந்து பள்ளிகால வாழ்க்கைக்குள் நுழையும்போது நாமும் நமது பள்ளிகால வாழ்க்கைக்குள் நுழைகிறோம். நீண்டகாலம் கழித்து கை பிடித்து இளவயது நினைவுகளுக்கு கூட்டி சென்றிருக்கும் பிரேமுக்கு நன்றிகள்.

    ஒரு சின்ன தவறுதலில் காதல் மீண்டும் கைகூடாமல் போவதும், தன்னை வெறுத்த காதலியின் பின்னாலேயே அவருக்கு தெரியாமல் ஒளிந்துகொண்டு தொடர்வதும் எல்லோருடைய வாழ்க்கையிலும் நடந்திருக்க கூடிய தருணங்கள். படத்தின் ஒவ்வொரு காட்சியும் நமது வாழ்க்கையுடன் இணைக்கிறது. அதுதான் படத்தின் வெற்றி.



    படம் முடியும்போது அனைவரும் எழுந்து நின்று கைதட்டுகிறார்கள். அந்த கைதட்டலில் ஒவ்வொருவரின் கைகூடாத பள்ளிப்பருவ காதல் ஒளிந்திருக்கிறது.

    படத்தில் காதலை கூட்டுவது மகேந்திரன், சண்முகசுந்தரம் இருவரின் ஒளிப்பதிவுதான். ஒலிப்பதிவும் அதற்கு துணை நிற்கிறது. கோவிந்தின் இசை காதலை இசையால் சொல்கிறது. இசையால் காதலை கண்முன் நிறுத்தியிருக்கிறார். கோவிந்தராஜின் படத்தொகுப்பு கச்சிதம்.

    மொத்தத்தில் `96' காவியம். #96TheMovieReview #VijaySethupathi #Trisha

    முதியோர் கல்வி திட்டத்தில் படித்து 96 வயதில் மூதாட்டி ஆர்வமுடன் தேர்வெழுதிய சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. #KarthiyaniAmma
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் முதியோர் கல்வித்திட்டத்தின் கீழ் படித்து வரும் முதியோருக்கு தேர்வுகள் நடந்து வருகிறது.

    மாநிலம் முழுவதும் இத்தேர்வை 40 ஆயிரம் முதியோர் எழுதினர். இதில் செப்பேடு, கனிச்சநல்லூர், அரசு தொடக்கப்பள்ளியில் கார்த்தியாயினி அம்மா என்ற 96 வயது மூதாட்டி தேர்வு எழுதினார். இவர் தான் இத்தேர்வை எழுதியவர்களில் அதிக வயது உடையவர்.

    வகுப்பறையில் கார்த்தியாயினி அம்மா தேர்வு எழுதிய போது அவருக்கருகில் ராமச்சந்திரன் என்ற 76 வயது முதியவர் இருந்தார். அவர் கார்த்தியாயினி அம்மாவின் விடைத்தாளை பார்த்து எழுதினார்.

    இதனை தேர்வு கண்காணிப்பாளர் பார்த்து கண்டித்தார். அப்போது தான் கார்த்தியாயினி அம்மாவுக்கு 96 வயது ஆவதும், அவரை பார்த்து எழுதிய ராமச்சந்திரனுக்கு 76 வயது என்பதும் தெரிய வந்தது.

    ராமச்சந்திரனை தேர்வு கண்காணிப்பாளர் கண்டித்ததை பார்த்து கார்த்தியாயினி அம்மாள் சிரித்தார்.

    முதியோர் தேர்வில் முதலில் நடந்த புத்தகங்கள் படிக்கும் தேர்வு நடந்தது. இதில் கார்த்தியாயினி அம்மாவுக்கு 30க்கு 30 முழு மதிப்பெண் கிடைத்தது.

    எழுத்து தேர்வில் கோடிட்ட இடங்களை நிரப்புவது உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. அவை படித்த பாடங்களில் இருந்து வரவில்லை, தெரியாத கேள்விகள் கேட்கப்பட்டதாக கார்த்தியாயினி அம்மா குறைப்பட்டுக்கொண்டார்.

    96 வயதாகும் கார்த்தியாயினி அம்மா இதுவரை உடல் நலக்குறைவுக்காக ஆஸ்பத்திரிக்கு சென்றதில்லை. கண் பார்வை குறைபாடுக்காக ஆபரே‌ஷன் செய்து கொள்ள மட்டும் ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளார்.

    கார்த்தியாயினி அம்மா தினமும் 4 மணி நேரம் நடைபயிற்சி செய்கிறார். இளம் வயதுடையோர் நடப்பதை காட்டிலும் வேகமாக நடக்கிறார். இவரது ஆரோக்கியத்திற்கு இதுவே காரணம் என்றும் கூறுகிறார்.

    இவரது மகள்கள் கோவில்களில் துப்புரவு பணி செய்து வருகிறார்கள்.  #KarthiyaniAmma

    ×