என் மலர்
நீங்கள் தேடியது "234 constituency"
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் தே.மு.தி.க.வுக்கு மக்கள் ஆதரவு உள்ளது என்று பண்ருட்டியில் நடந்த திருமண விழாவில் பிரேமலதா விஜயகாந்த் பேசினார். #DMDK #Premalatha #Vijayakanth
பண்ருட்டி:
பண்ருட்டியில் தே.மு.தி.க. பிரமுகர் இல்ல திருமண விழாவில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கடலூர் மாவட்டம் தே.மு.தி.க.வின் கோட்டையாக திகழ்கிறது. தி.மு.க., அ.தி.மு.க. ஊழல் கட்சிகளாகும். அவர்கள் ஊழல் செய்த பணத்தில்தான் கட்சி நடத்துகின்றனர். விஜயகாந்த் தனது சொந்த பணத்தில் கட்சி நடத்துகிறார்.
விஜயகாந்த்தின் துரோகிகள் கூட அவரை கெட்டவர் என்று கூறமுடியாது. தமிழகத்தில் தற்போது எல்லா துறைகளிலும் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெறுகிறது.
ஓ.பி.எஸ். மீதான வழக்கை விசாரணை நடத்தும் போலீஸ் அதிகாரி முருகன், பாலியல் புகாரில் சிக்கியுள்ளார். அவரின் வழக்கை விசாரணை நடத்தும் போலீஸ் அதிகாரி ராஜேந்திரன் ஊழல் புகாரில் சிக்கியுள்ளார். முதல்-அமைச்சர் சி.பி.ஐ. விசாரணையில் சிக்கியுள்ளார்.

அ.தி.மு.க. சுக்கு நூறாக உடைந்து விட்டது. தி.மு.க. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டெபாசிட் இழந்து விட்டது. தே.மு.தி.க. மட்டும் தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் மக்கள் ஆதரவு பெற்ற இயக்கமாக வளர்ந்து வருகிறது. விஜயகாந்த் இந்த இயக்கத்தை நடத்தி மக்கள் பணி செய்து வருகிறார்.
தீபாவளி அன்று ஒருநாள் மட்டும் பட்டாசு வெடிப்பதால் சுகாதாரக் கேடு ஏற்படாது. பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கப்படுவதால் பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
தமிழகத்தில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலால் பொதுமக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அமைச்சர்கள் சோதனை (ரெய்டு) பயத்தில் உள்ளனர். மக்கள் பணியை அவர்கள் சரிவர செய்யவில்லை. தமிழக அரசு முடங்கி உள்ளது.
மத்திய அரசு சார்பில் ரூ.3 ஆயிரம் கோடியில் வல்லபாய் படேலுக்கு சிலை வைத்ததை சாதனை படைத்ததாக பிரதமர் மோடி கூறுகிறார். மத்தியிலும், மாநிலத்திலும் நல்லாட்சி வரவேண்டும்.
வருகின்ற சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் அனைத்து தேர்தல்களிலும் தே.மு.தி.க. அமோக வெற்றிபெறும்.
இவ்வாறு அவர் பேசினார். #DMDK #Premalatha #Vijayakanth
பண்ருட்டியில் தே.மு.தி.க. பிரமுகர் இல்ல திருமண விழாவில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கடலூர் மாவட்டம் தே.மு.தி.க.வின் கோட்டையாக திகழ்கிறது. தி.மு.க., அ.தி.மு.க. ஊழல் கட்சிகளாகும். அவர்கள் ஊழல் செய்த பணத்தில்தான் கட்சி நடத்துகின்றனர். விஜயகாந்த் தனது சொந்த பணத்தில் கட்சி நடத்துகிறார்.
விஜயகாந்த்தின் துரோகிகள் கூட அவரை கெட்டவர் என்று கூறமுடியாது. தமிழகத்தில் தற்போது எல்லா துறைகளிலும் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெறுகிறது.
ஓ.பி.எஸ். மீதான வழக்கை விசாரணை நடத்தும் போலீஸ் அதிகாரி முருகன், பாலியல் புகாரில் சிக்கியுள்ளார். அவரின் வழக்கை விசாரணை நடத்தும் போலீஸ் அதிகாரி ராஜேந்திரன் ஊழல் புகாரில் சிக்கியுள்ளார். முதல்-அமைச்சர் சி.பி.ஐ. விசாரணையில் சிக்கியுள்ளார்.
தமிழகத்திலேயே தே.மு.தி.க.தான் பெரிய கட்சியாகும். இந்த கட்சி 3-வது இடத்தில் உள்ளது என்று சொல்கிறார்கள். தே.மு.தி.க.தான் முதலிடத்தில் உள்ளது.

தீபாவளி அன்று ஒருநாள் மட்டும் பட்டாசு வெடிப்பதால் சுகாதாரக் கேடு ஏற்படாது. பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கப்படுவதால் பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
தமிழகத்தில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலால் பொதுமக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அமைச்சர்கள் சோதனை (ரெய்டு) பயத்தில் உள்ளனர். மக்கள் பணியை அவர்கள் சரிவர செய்யவில்லை. தமிழக அரசு முடங்கி உள்ளது.
மத்திய அரசு சார்பில் ரூ.3 ஆயிரம் கோடியில் வல்லபாய் படேலுக்கு சிலை வைத்ததை சாதனை படைத்ததாக பிரதமர் மோடி கூறுகிறார். மத்தியிலும், மாநிலத்திலும் நல்லாட்சி வரவேண்டும்.
வருகின்ற சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் அனைத்து தேர்தல்களிலும் தே.மு.தி.க. அமோக வெற்றிபெறும்.
இவ்வாறு அவர் பேசினார். #DMDK #Premalatha #Vijayakanth