search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "10 years jail"

    தலீபான் பயங்கரவாத அமைப்புக்காக நிதி திரட்டிய பாகிஸ்தானை சேர்ந்த இஸ்மாயில்கானுக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். #Karachi #CollectingFund
    கராச்சி:

    பாகிஸ்தானை சேர்ந்தவர் இஸ்மாயில்கான். இவர் அங்கு தலீபான் பயங்கரவாத அமைப்புக்காக நிதி திரட்டிக்கொண்டு இருந்தார். இது தொடர்பாக புகார் எழுந்தது. பயங்கரவாத தடுப்பு படையினர் இஸ்மாயில் கானை கைது செய்தனர்.

    அவர் மீது கராச்சியில் உள்ள பயங்கரவாத தடுப்பு கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர். மேலும், 1997-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பயங்கரவாத தடுப்பு சட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

    வழக்கு விசாரணை முடிவில், இஸ்மாயில் கான் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளது என நீதிபதி கண்டு, அவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். அபராதம் செலுத்தத் தவறினால், மேலும் 6 மாதம் கடுங்காவல் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.  #Karachi #CollectingFund  #tamilnews 
    ஆவணங்கள் மாய மானதால் தேவை யில்லாமல் 10 ஆண்டுகள் தொழிலாளி ஒருவர் சிறையில் இருந்துள்ளார். இதுகுறித்து சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. விளக்கம் அளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    சென்னையைச் சேர்ந்த தொழிலாளி ஜெயபால் என்பவர் கடந்த 1989-ம் ஆண்டு ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 15 மாதங்கள் சிறையில் இருந்த அவர், ஜாமீனில் விடுவிக்கப் பட்டார். விசாரணைக்கு பின்பு அவருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டதால் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

    7 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த கைதிகளை விடுவிக்க கடந்த 2008-ம் ஆண்டு தமிழக அரசு உத்தரவிட்டது. அந்த நேரத்தில், ஜெயபால் 7 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறைவு செய்திருந்த போதிலும் அவரை சிறைத்துறை அதிகாரிகள் விடுவிக்கவில்லை. விசாரித்தபோது, ஆயுள் தண்டனை விதிக்கப்படுவதற்கு முன்பாக ஜெயபால் 15 மாதங்கள் சிறையில் இருந்த ஆவணங்கள் சென்னை மத்திய சிறையில் நடந்த கலவரத்தின் போது மாயமானது தெரியவந்தது. இதன் காரணமாகவே அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்படவில்லை என்பதும் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து ஜெயபாலின் மகன், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, ஜெயபாலை சிறையில் இருந்து விடுவிக்க 22.11.2017 அன்று உத்தரவிட்டது. இருந்த போதிலும் சிறைத்துறை அதிகாரிகள் அவரை விடுவிக்கவில்லை. கடுமையான போராட்டத்துக்கு பின்பு சமீபத்தில் தமிழக அரசு உத்தரவுப்படி 10 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்தவர்கள் விடுவிக்கப்பட்டபோது ஜெயபாலும் விடுவிக்கப்பட்டுள்ளார்.

    ஜெயபால் 15 மாதங்கள் சிறையில் இருந்தது தொடர்பான ஆவணங்கள் காணாமல் போனதால் அவர் தேவையில்லாமல் 10 ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக பத்திரிகையில் செய்தி வெளியானது.

    இந்த செய்தியை சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து (சூமோட்டோ) வழக்காக எடுத்தது. பின்னர், இதுதொடர்பாக சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. 4 வாரத்துக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று நீதிபதி டி.ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார். 
    காஷ்மீர் செக்ஸ் ஊழல் வழக்கில் முன்னாள் எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எப்.) துணை ஐ.ஜி. பதி உள்பட 5 பேருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். #JammuKashmir #DIGBSF
    சண்டிகர்:

    காஷ்மீரில் சிறுமிகளை விபசாரத்தில் ஈடுபடுத்தி, உயர் அதிகாரிகளுக்கு விருந்தாக்கிய சம்பவம் கடந்த 2006-ம் ஆண்டு மாநில அரசில் மிகப்பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் சாதாரண போலீசார் முதல் மந்திரிகள் வரை பலரது பெயர்கள் அடிபட்டன. இந்த செக்ஸ் ஊழலில் அப்போதைய முதல்-மந்திரி உமர் அப்துல்லாவின் பெயரும் அடிபட்டதால், அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் அவரது ராஜினாமா கடிதத்தை கவர்னர் என்.என்.வோரா நிராகரித்தார்.

    உயர் அதிகாரிகள் உள்பட 56 பேரை இந்த வழக்கில் சேர்த்து போலீசார் விசாரித்து வந்தனர். மாநிலத்தில் உயர்மட்ட அளவில் நடந்த இந்த செக்ஸ் ஊழலை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்தனர். இந்த வழக்கின் விசாரணையை சண்டிகருக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    இந்த விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் முன்னாள் எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எப்.) துணை ஐ.ஜி. பதி, மாநில போலீஸ் துணை சூப்பிரண்டு முகமது அஷ்ரப் மிர் உள்பட 5 பேருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி ககன்ஜீத் கவுர் தீர்ப்பு வழங்கினார். மேலும் பதி, மிர் ஆகியோருக்கு தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. 
    மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் டிரைவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
    ஈரோடு:

    கரூர் கிருஷ்ணராயபுரம் சிந்தலவாடி வீரணாம்பட்டியை சேர்ந்தவர் கருப்பணன். இவருடைய மகன் திருப்பதி (வயது 23). பொக்லைன் டிரைவராக உள்ளார். இவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் வேலைக்காக சென்றபோது அங்குள்ள ஒரு வங்கியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த சிவசங்கிரி (21) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

    அவர்கள் 2 பேரும் கடந்த 4-6-2014 அன்று ஈரோடு மாவட்டம் கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். அதன்பின்னர் ஈரோடு திண்டல் மாருதி நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தனர்.

    திருப்பதிக்கு குடிப்பழக்கம் உண்டு. இதனால் அடிக்கடி அவர் மது குடித்துவிட்டு வீட்டிற்கு செல்வதால் அவருக்கும், சிவசங்கிரிக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டது. கடந்த 7-1-2015 அன்று வழக்கம்போல் திருப்பதி மதுஅருந்திவிட்டு வீட்டிற்கு சென்றார். அப்போது மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இந்த பிரச்சினையில் மனவேதனை அடைந்த சிவசங்கிரி தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

    இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மேலும், ஈரோடு ஆர்.டி.ஓ. நர்மதாதேவியும் மேல்விசாரணை நடத்தினார். அதைத்தொடர்ந்து சிவசங்கிரியை தற்கொலைக்கு தூண்டியதாக திருப்பதியை போலீசார் கைது செய்தனர்.

    திருப்பதியின் மீது ஈரோடு மகளிர் கோர்ட்டில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி (பொறுப்பு) ராமகிருஷ்ணன் நேற்று தீர்ப்பு கூறினார். அந்த தீர்ப்பில், சிவசங்கிரியை தற்கொலைக்கு தூண்டிய குற்றத்துக்காக திருப்பதிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதத்தை செலுத்த தவறினால் கூடுதலாக ஒரு ஆண்டு சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் அரசு வக்கீல் ஜி.டி.ஆர்.சுமதி ஆஜரானார். 
    ×