என் மலர்
கோவில்கள்
காலையில் சரஸ்வதியாகவும், மதியம் மகாலட்சுமியாகவும், மாலையில் துர்க்கையாகவும் நினைத்து வழிபடும் அம்மன் வீற்றிருக்கும் ஆலயம், ஏமூர் பகவதியம்மன் கோவிலாகும்.
காலையில் சரஸ்வதியாகவும், மதியம் மகாலட்சுமியாகவும், மாலையில் துர்க்கையாகவும் நினைத்து வழிபடும் அம்மன் வீற்றிருக்கும் ஆலயம், கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஏமூர் பகவதியம்மன் கோவிலாகும்.
தல வரலாறு :
குரூர் மற்றும் கைமுக நம்பூதிரி ஆகிய இருவர், துர்க்கையம்மன் வழிபாட்டுப் பகுதியாக இருந்த வடமலைக் காட்டுப்பகுதிக்குள் சென்று, அம்மனை நினைத்து வழிபட்டுத் திரும்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஒருநாள் அம்மனை வழிபட்டுத் திரும்பும்போது, அவர் களுக்கு களைப்பு அதிகமாகத் தோன்றியதால், அவர்கள் இருவரும் அங்கிருந்த ஒரு மரத்தின் கீழ் அமர்ந்து ஓய்வெடுத்தனர். அப்போது, அங்கு வந்த வயதான பெண்மணி ஒருவர், அவர்களுக்குச் சில இனிப்பான பழங்களை வழங்கினார். அந்தப் பழங்களைச் சாப்பிட்ட அவர்களுக்கு களைப்பு மறைந்து புத்துணர்ச்சி ஏற்பட்டது.
மறுநாள் அவர்கள் இருவரும் அம்மன் வழிபாட்டிற்குச் சென்ற போது, முதல் நாள் அவர்கள் ஓய்வெடுத்த மரத்தின் அடியில் யானை ஒன்றும், அதன் பின்புறம் தங்க நிறத்திலான அம்மன் உருவம் ஒன்றும் தோன்றி மறைந்தது. அதனைக் கண்ட இருவரும், முதல் நாள் வயதான தோற்றத்தில் வந்து தங்களுக்குப் பழங்களை வழங்கியது அம்மனே என்பதை உணர்ந்து கொண்டனர். அதன் பிறகு, அம்மன் காட்சியளித்த இடத்தையும் வணங்குவது அவர்களின் வாடிக்கையாகிப் போனது.
இந்நிலையில் வயது முதிர்ந்த குரூருக்கு, காட்டிற்குள் சென்றுவருவது கடினமாக இருந்தது. அதை நினைத்து அவர் வருத்தமடைந்தார். இந்நிலையில், அவரது கனவில் தோன்றிய அம்மன், அருகிலுள்ள குளத்தில் அவருக்குக் காட்சியளிப்பதாகத் தெரிவித்தார். குரூரும் மகிழ்ச்சி யடைந்தார். மறுநாள் அங்கிருந்த குளத்திற்குச் சென்ற அவர் அம்மனைக் காண்பதற்காகக் காத்திருந்தார். சிறிது நேரத்தில் அந்தக் குளத்தின் நடுவில் இருந்து அம்மனின் கைகள் வெளிப்பட்டன. அதனைக் கண்ட ஆர்வத்தில், குளத்திற்குள் இறங்கிய குரூர் நீந்திச் சென்று அம்மனின் கைகளைப் பற்றிக் கொள்ள, அம்மனின் உருவம் முழுவதும் தெரியாமல் மறைந்து போனது. தெரிந்த கையும் கல்லாய் மாறிப் போனது. தனது செயலுக்காக வருத்தமடைந்த குரூர், அம்மனிடம் மன்னிப்பு கோரினார்.
பின்னர் குரூர், அப்போதைய பாலக்காடு அரசர் சேகரி வர்மா வலிய ராசாவிடம் சென்று, நடந்ததைத் தெரிவித்து அம்மனுக்குக் கோவில் கட்ட வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார். அரசரும் குரூர் வேண்டுகோளை ஏற்று, அங்கு அம்மனின் கைகளையே வழிபாட்டுக் குரியதாகக் கொண்டு கோவிலைக் கட்டுவித்தார் என்று ஆலய தல வரலாறு சொல்கிறது.
ஒரு துறவியின் வேண்டுகோளுக்காக, அங்கிருக்கும் குளத்தில் அவருக்குக் காட்சி தருவதாகச் சொன்ன அம்மன், அவ்வேளையில் அங்கு வேறு யாரும் இருக்கக் கூடாது என்கிற கட்டுப்பாட்டையும் விதித்தாள். மறுநாள் அவருக்குக் காட்சி தருவதற்காக அங்கிருந்த குளத்தில் அம்மன் எழுந்தருளிய போது, முதலில் அம்மனின் கைகள் மட்டும் நீரிலிருந்து வெளிப்பட்டிருக்கிறது. அம்மன் விதித்த கட்டுப்பாட்டை மீறி அங்கு பலரும் கூடியிருப்பதை அறிந்த அம்மன், முழுமையாகக் காட்சி தராமல் மறைந்து விட்டார் என்றும், அதன் பின்னர், அம்மனின் கைகளை மட்டும் வழிபாட்டுக்குரியதாகக் கொண்டு கோவில் அமைக்கப்பட்டது என்று இத்தல வரலாற்றைச் சொல்வதுண்டு.

கை வடிவத்தில் பகவதி அம்மன்
பாலக்காடு அரச குடும்பத்தினரின் குலக் கோவிலாக இருந்து வரும் இந்த ஆலயத்தை ‘கைப்பதி அம்பலம்’ என்றும் சொல்கின்றனர். இக்கோவிலில் இருக்கும் அம்மனைப் பக்தர்கள் காலையில் சரஸ்வதியாகவும், மதியம் மகா லட்சுமியாகவும், மாலையில் துர்க்கையாகவும் நினைத்துத் தங்களுக்குத் தேவையானதை வேண்டி வழிபாடு செய்கின்றனர்.
இத்தலத்தில் மலையாள நாட்காட்டியின்படி கும்பம் (மாசி) மாதம் வரும் சிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இவ்விழாக் காலத்தில் மலையாள மரபு வழியிலான ஓட்டந்துள்ளல், சாக்கியர்கூத்து, கதகளி, கழச்ச சீவேலி உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
இதே போல் மீனம் (பங்குனி) மாதத்தில் வரும் அம்மன் நிறுவப்பட்ட நாளில் (பிரதிஷ்டா தினம்) லட்சார்ச்சனையும், கன்னி (புரட்டாசி) மாதத்தில் வரும் நவராத்திரி திருநாட்களில் சிறப்பு வழி பாடுகளும் செய்யப்படுகின்றன. விருச்சிகம் (கார்த்திகை) மாதம் ‘தாரிகா வதம்’ நிகழ்வு சிறப்பாகக் நடக்கிறது.
மேஷம் (சித்திரை) மாதத்தில் வரும் விசு நாள் மற்றும் சிங்கம் (ஆவணி) மாதம் வரும் ஓணம் பண்டிகை நாட்களிலும், கேரளாவில் ராமாயண மாதம் என்று சொல்லப்படும் கரிகடகம் (ஆடி) மாதம் முழுவதிலும் அம்மனுக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.
இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் பக்தர்கள் வழி படுவதற்காக திறந்திருக்கும்.
நான்கு அம்பிகைகள் :
பரசுராமரால் தோற்றுவிக்கப்பட்டது கேரள மாநிலம் என்கிறது புராணம். இதனால் தான் கேரளத்தை இறைவனின் பூமி என்கிறோம். தான் தோற்றுவித்தக் கேரள நிலப்பகுதியை கடல் நீரில் இருந்து பாதுகாப்பதற்காக, 4 இடங்களில் அம்மனை பிரதிஷ்டை செய்து வழிபட்டாராம், பரசுராமர். அந்த நான்கு அம்மன்களும் கன்னியாகுமரியில் பாலாம்பிகா, லோகனார் காவுவில் லோகாம்பிகா, மங்களூரில் மூகாம்பிகா, பாலக்காடு (ஏமூர்) ஹேமாம்பிகா என்று கோவில் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
அமைவிடம் :
கேரள மாநிலம், பாலக்காடு நகரில் இருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் இருந்து இந்த ஆலயத்திற்கு இரண்டு வழிகளில் செல்ல முடியும். பாலக்காடு - மலம்புழா அல்லது பாலக்காடு - தோணி செல்லும் சாலையில் பயணித்துக் கல்லேக்குளங்கரா பஸ் நிறுத்தத்தில் இறங்கிக் கோவிலுக்குச் செல்லலாம். பாலக்காட்டிலிருந்து இத்தலத்திற்குச் செல்லப் பேருந்து வசதிகள் உள்ளன.
தல வரலாறு :
குரூர் மற்றும் கைமுக நம்பூதிரி ஆகிய இருவர், துர்க்கையம்மன் வழிபாட்டுப் பகுதியாக இருந்த வடமலைக் காட்டுப்பகுதிக்குள் சென்று, அம்மனை நினைத்து வழிபட்டுத் திரும்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஒருநாள் அம்மனை வழிபட்டுத் திரும்பும்போது, அவர் களுக்கு களைப்பு அதிகமாகத் தோன்றியதால், அவர்கள் இருவரும் அங்கிருந்த ஒரு மரத்தின் கீழ் அமர்ந்து ஓய்வெடுத்தனர். அப்போது, அங்கு வந்த வயதான பெண்மணி ஒருவர், அவர்களுக்குச் சில இனிப்பான பழங்களை வழங்கினார். அந்தப் பழங்களைச் சாப்பிட்ட அவர்களுக்கு களைப்பு மறைந்து புத்துணர்ச்சி ஏற்பட்டது.
மறுநாள் அவர்கள் இருவரும் அம்மன் வழிபாட்டிற்குச் சென்ற போது, முதல் நாள் அவர்கள் ஓய்வெடுத்த மரத்தின் அடியில் யானை ஒன்றும், அதன் பின்புறம் தங்க நிறத்திலான அம்மன் உருவம் ஒன்றும் தோன்றி மறைந்தது. அதனைக் கண்ட இருவரும், முதல் நாள் வயதான தோற்றத்தில் வந்து தங்களுக்குப் பழங்களை வழங்கியது அம்மனே என்பதை உணர்ந்து கொண்டனர். அதன் பிறகு, அம்மன் காட்சியளித்த இடத்தையும் வணங்குவது அவர்களின் வாடிக்கையாகிப் போனது.
இந்நிலையில் வயது முதிர்ந்த குரூருக்கு, காட்டிற்குள் சென்றுவருவது கடினமாக இருந்தது. அதை நினைத்து அவர் வருத்தமடைந்தார். இந்நிலையில், அவரது கனவில் தோன்றிய அம்மன், அருகிலுள்ள குளத்தில் அவருக்குக் காட்சியளிப்பதாகத் தெரிவித்தார். குரூரும் மகிழ்ச்சி யடைந்தார். மறுநாள் அங்கிருந்த குளத்திற்குச் சென்ற அவர் அம்மனைக் காண்பதற்காகக் காத்திருந்தார். சிறிது நேரத்தில் அந்தக் குளத்தின் நடுவில் இருந்து அம்மனின் கைகள் வெளிப்பட்டன. அதனைக் கண்ட ஆர்வத்தில், குளத்திற்குள் இறங்கிய குரூர் நீந்திச் சென்று அம்மனின் கைகளைப் பற்றிக் கொள்ள, அம்மனின் உருவம் முழுவதும் தெரியாமல் மறைந்து போனது. தெரிந்த கையும் கல்லாய் மாறிப் போனது. தனது செயலுக்காக வருத்தமடைந்த குரூர், அம்மனிடம் மன்னிப்பு கோரினார்.
பின்னர் குரூர், அப்போதைய பாலக்காடு அரசர் சேகரி வர்மா வலிய ராசாவிடம் சென்று, நடந்ததைத் தெரிவித்து அம்மனுக்குக் கோவில் கட்ட வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார். அரசரும் குரூர் வேண்டுகோளை ஏற்று, அங்கு அம்மனின் கைகளையே வழிபாட்டுக் குரியதாகக் கொண்டு கோவிலைக் கட்டுவித்தார் என்று ஆலய தல வரலாறு சொல்கிறது.
ஒரு துறவியின் வேண்டுகோளுக்காக, அங்கிருக்கும் குளத்தில் அவருக்குக் காட்சி தருவதாகச் சொன்ன அம்மன், அவ்வேளையில் அங்கு வேறு யாரும் இருக்கக் கூடாது என்கிற கட்டுப்பாட்டையும் விதித்தாள். மறுநாள் அவருக்குக் காட்சி தருவதற்காக அங்கிருந்த குளத்தில் அம்மன் எழுந்தருளிய போது, முதலில் அம்மனின் கைகள் மட்டும் நீரிலிருந்து வெளிப்பட்டிருக்கிறது. அம்மன் விதித்த கட்டுப்பாட்டை மீறி அங்கு பலரும் கூடியிருப்பதை அறிந்த அம்மன், முழுமையாகக் காட்சி தராமல் மறைந்து விட்டார் என்றும், அதன் பின்னர், அம்மனின் கைகளை மட்டும் வழிபாட்டுக்குரியதாகக் கொண்டு கோவில் அமைக்கப்பட்டது என்று இத்தல வரலாற்றைச் சொல்வதுண்டு.

கை வடிவத்தில் பகவதி அம்மன்
பாலக்காடு அரச குடும்பத்தினரின் குலக் கோவிலாக இருந்து வரும் இந்த ஆலயத்தை ‘கைப்பதி அம்பலம்’ என்றும் சொல்கின்றனர். இக்கோவிலில் இருக்கும் அம்மனைப் பக்தர்கள் காலையில் சரஸ்வதியாகவும், மதியம் மகா லட்சுமியாகவும், மாலையில் துர்க்கையாகவும் நினைத்துத் தங்களுக்குத் தேவையானதை வேண்டி வழிபாடு செய்கின்றனர்.
இத்தலத்தில் மலையாள நாட்காட்டியின்படி கும்பம் (மாசி) மாதம் வரும் சிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இவ்விழாக் காலத்தில் மலையாள மரபு வழியிலான ஓட்டந்துள்ளல், சாக்கியர்கூத்து, கதகளி, கழச்ச சீவேலி உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
இதே போல் மீனம் (பங்குனி) மாதத்தில் வரும் அம்மன் நிறுவப்பட்ட நாளில் (பிரதிஷ்டா தினம்) லட்சார்ச்சனையும், கன்னி (புரட்டாசி) மாதத்தில் வரும் நவராத்திரி திருநாட்களில் சிறப்பு வழி பாடுகளும் செய்யப்படுகின்றன. விருச்சிகம் (கார்த்திகை) மாதம் ‘தாரிகா வதம்’ நிகழ்வு சிறப்பாகக் நடக்கிறது.
மேஷம் (சித்திரை) மாதத்தில் வரும் விசு நாள் மற்றும் சிங்கம் (ஆவணி) மாதம் வரும் ஓணம் பண்டிகை நாட்களிலும், கேரளாவில் ராமாயண மாதம் என்று சொல்லப்படும் கரிகடகம் (ஆடி) மாதம் முழுவதிலும் அம்மனுக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.
இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் பக்தர்கள் வழி படுவதற்காக திறந்திருக்கும்.
நான்கு அம்பிகைகள் :
பரசுராமரால் தோற்றுவிக்கப்பட்டது கேரள மாநிலம் என்கிறது புராணம். இதனால் தான் கேரளத்தை இறைவனின் பூமி என்கிறோம். தான் தோற்றுவித்தக் கேரள நிலப்பகுதியை கடல் நீரில் இருந்து பாதுகாப்பதற்காக, 4 இடங்களில் அம்மனை பிரதிஷ்டை செய்து வழிபட்டாராம், பரசுராமர். அந்த நான்கு அம்மன்களும் கன்னியாகுமரியில் பாலாம்பிகா, லோகனார் காவுவில் லோகாம்பிகா, மங்களூரில் மூகாம்பிகா, பாலக்காடு (ஏமூர்) ஹேமாம்பிகா என்று கோவில் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
அமைவிடம் :
கேரள மாநிலம், பாலக்காடு நகரில் இருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் இருந்து இந்த ஆலயத்திற்கு இரண்டு வழிகளில் செல்ல முடியும். பாலக்காடு - மலம்புழா அல்லது பாலக்காடு - தோணி செல்லும் சாலையில் பயணித்துக் கல்லேக்குளங்கரா பஸ் நிறுத்தத்தில் இறங்கிக் கோவிலுக்குச் செல்லலாம். பாலக்காட்டிலிருந்து இத்தலத்திற்குச் செல்லப் பேருந்து வசதிகள் உள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தில் எத்தனை அம்மன் கோவில்கள் இருந்தாலும், அவற்றுள் பழமையானதாகவும், ராமாயண காலத்தோடு தொடர்புடையதாகவும் விளங்குகிறது குரங்கணி முத்துமாலையம்மன் திருக்கோவில்.
10-7-2018 ஆலயத் திருவிழா
தூத்துக்குடி மாவட்டத்தில் எத்தனை அம்மன் கோவில்கள் இருந்தாலும், அவற்றுள் பழமையானதாகவும், ராமாயண காலத்தோடு தொடர்புடையதாகவும் விளங்குகிறது குரங்கணி முத்துமாலையம்மன் திருக்கோவில்.
ராமாயண காலத்தில் சீதாதேவியை, ராவணன் சிறைபிடித்துச் சென்றான். சீதாதேவியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட ராமனுக்கு வானரங்கள் உதவின. இலங்கைக்குச் செல்ல ராமபிரான் தன் வானரச் சேனையை அணிவகுத்து நிற்கச் செய்த இடம் இது என்று கூறப்படுகிறது. குரங்குகள் அணிவகுத்து நின்றதால் இவ்வூர் ‘குரங்கணி’ என பெயர் பெற்றதாக புராண வரலாறு கூறுகிறது.
ராவணன், சீதாதேவியை கடத்திச் சென்றபோது, ராமனுக்கு அடையாளம் காட்ட தன் கழுத்தில் கிடந்த முத்து மாலையை கழற்றி வீசினாள், சீதாதேவி. புஷ்பக விமானத்தில் இருந்து வீசப்பட்ட முத்து மாலை தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள குரங்கணியில் விழுந்தது. தரையில் விழுந்த முத்துமாலை ஜோதியாக ஒளி வீசியது. அப்போது அந்த வழியாக வந்த பனையடியான் என்பவர், முத்து மாலையின் ஒளி வீச்சை காண முடியாமல் கண்கள் கூச, அருகில் கிடந்த மண் சட்டியை எடுத்து அந்த முத்துமாலையை மூடினார். பின்பு ஊர் மக்கள் கூடி முத்து மாலை கிடந்த இடத்தில் சீதாதேவியின் பெயரால் வழிபாடு நடத்தினர். முத்து மாலை கிடந்த இடமானதால் இங்கு அமைக்கப்பட்ட அம்மனுக்கு ‘முத்துமாலையம்மன்’ என்றே பெயரிட்டனர் என்கிறது தல வரலாறு.
பழங்காலத்தில் இத்திருக்கோவிலில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடை திறக்கப்பட்டு மதியம் மற்றும் இரவு பூஜை மட்டும் நடந்து வந்தது. அப்போது அம்மனுடைய மண் திருமேனிக்கு அபிஷேகம் மற்றும் நைவேத்தியங்கள் இல்லாமல் இருந்தது. இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்த சீதாதேவி உண்ணாமல் தவம் இருந்ததை நினைவு கூரும் விதமாக, இவ்வாறு தீப, தூபம் மட்டும் காட்டி வழிபட்டு வந்தனர்.
கோவிலில் 1957-ம் ஆண்டு கோவில் கும்பாபிஷேகம் நடந்த போது, அம்மனின் முத்துமாலையை மூடி இருந்த ஒட்டு சீலை விலக்கப்பட்டு, கல்லினால் ஆன திருமேனி பிரதிஷ்டை செய்யப்பட்டது. அன்று முதல் தினமும் கோவில் நடை திறக்கப்பட்டு, அபிஷேகம் மற்றும் நைவேத்தியங்கள் படைக்கப்பட்டு பகல், இரவு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
முத்துமாலையம்மன் சன்னிதியின் இடப்புறமும், வலப்புறமும் பரிவார மூர்த்திகளின் சன்னிதிகள் அமைந்திருக்கின்றன. இதில் அம்மனுக்கு இடப்புறம் நாராயணர், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களின் கோபுரத்துடன் கூடிய சன்னிதி உள்ளது.
சீதாதேவியை காணாமல் ராமரும், லட்சுமணனும் காட்டில் தேடி அலைந்தார்கள். அப்போது வெட்டுப்பட்டு கிடந்த ஜடாயு பறவை ராவணன் தான் சீதாதேவியை கடத்தி சென்றான் என கூறியது. அனுமனுடன் வானரப்படைகள் சீதாதேவியை தேடிச் சென்றபோது, ஒரு இடத்தில் ஏதோ மினுமினுப்பாக மிளிர்ந்தது. அனுமன் அதன் அருகே சென்று பார்த்தபோது ‘அது சீதையின் முத்து மாலை’ என ராமர் கூறினார். அந்த முத்துமாலையை ராமன் கிழக்கே நின்று மேற்கு முகமாக பார்த்ததால் இங்கு நாராயணர் கோவில் மேற்கு முகமாக இருக்கிறது.
முப்பிடாதி அம்மன், சப்த கன்னிகைகள், பார்வதி அம்மன், பிரம்ம சக்தி, மாரியம்மன், சந்தன மாரியம்மன், பைரவர், வீரபத்திரர் முதலியோருக்கு இங்கு தனித்தனி சன்னிதிகள் உள்ளன. மேலும் விநாயகர், காசிநாதர், விசாலாட்சி, நவக்கிரகங்கள் ஆகியோர் இங்கு அருள்பாலிக்க, மூலவராக முத்துமாலை அம்மன் கிழக்கு முகமாக அமர்ந்தபடி அருளாட்சி புரிந்து வருகிறாள்.
குரல் கொடுத்த அம்மன்
நவாப் ஆட்சி செய்த காலத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையை நேராக அமைக்க எண்ணினார். அதற்கு கோவிலின் சுற்றுச்சுவர் இடையூறாக இருப்பதாக நினைத்த அவர், அதிகாரி ஒருவரை அனுப்பி கோவில் சுற்றுச்சுவரை அகற்ற உத்தரவிட்டார். அதன்படி ஒரு அதிகாரி குதிரையில் வந்தார். அவருடைய செயலை அவ்வூரைச் சேர்ந்த நான்கு சகோதரர்கள் வம்சா வழியினர் தடுத்தனர். அப்போது அந்த அதிகாரி ‘இந்த அம்மனுக்கு சக்தி இருக்குமானால், நான் கூப்பிடுகிறேன், அது பதில் சப்தம் தருமா?’ என கேட்க, அதற்கு அவர்கள் ‘நிச்சயம் தரும்’ என்றனர்.
‘முத்துமாலை அம்மன், முத்துமாலை அம்மன்’ என 3 முறை கூப்பிட்டார் அந்த ஆங்கிலேய அதிகாரி.
‘என்ன?’ என்ற சப்தம் இடி போன்று கோவில் கருவறைக்குள் இருந்து கேட்டது. சப்தத்தை கேட்ட அதிர்ச்சியில் அந்த அதிகாரி மயங்கி கீழே விழுந்தார். உடன் குதிரையும் மயங்கி விழுந்தது. கூடி இருந்தவர்கள் பயபக்தியுடன் நின்றார்கள். அம்மன் தீர்த்தம் தெளித்து எழுப்பியதும் அதிகாரிக்கும், குதிரைக்கும் சுய உணர்வு வந்தது. கோவிலை இடிக்காமல் விட்ட அதிகாரி, 2 மண் குதிரைகள் செய்து கோவிலில் வைக்க உத்தரவிட்டார். அந்த குதிரைகளை இன்றும் கோவிலில் பெரிய சுவாமி சன்னிதியில் காணலாம்.
ஆற்றில் மிதந்து வந்த பெரியசாமி
குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில், அம்மனுக்கு தென்புறம் வடக்கு நோக்கி பெரியசாமி சன்னிதி உள்ளது. இந்த சன்னிதி அமைய தனிக்காரணம் உண்டு. கோவில் பூசாரி மற்றும் இவ்வூர் நான்கு சகோதரர்கள் கனவில் முத்துமாலை அம்மன் தோன்றினாள். ‘கேரளாவில் இருந்து எனது காவல் வீரன் பெரியசாமி, நாளை தாமிரபரணி வெள்ளப் பெருக்கில் சிலை வடிவில் மிதந்து வருகிறான். அவனை நல்ல முறையில் வரவேற்று எனது கோட்டைக்குள் எனக்கு வலது புறம் வடக்கு நோக்கி நின்ற கோலத்தில் அவனது திரு உருவை அமைத்து விடுங்கள்’ என அருளினாள். அம்மன் அருளாணையின்படி தாமிரபரணி வெள்ளத்தில் வந்த பெரியசாமியை வரவேற்று கோவில் அமைத்து வழிபட்டு வந்தனர். பெரியசாமி காவல் தெய்வமாக விளங்கி வருகிறார்.
விழாக்கள்
குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஆனி பெருந்திருவிழா, தைத் திருமாலை பூஜை விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும். கோவிலின் முக்கியமான விழா ஆனி மாதம் கடைசி செவ்வாய்க் கிழமை நடைபெறும். அப்போது முத்துமாலை அம்மனுக்கு சொக்கத் தங்கத்தால் திருமேனி அலங்காரம் செய்யப்படும்.
ஆனி திருவிழாவிற்கு 15 நாட்களுக்கு முன்னால் திருக்கால் நாட்டு வைபவம் நடைபெறும். முத்துமாலையம்மன் சன்னிதியின் தென்புறம் முப்பிடாதி அம்மன் முன்னிலையில் அன்று மதியம் அம்மன் மற்றும் பரிவார மூர்த்தங்களுக்கு மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடத்தி கால் நடப்படும். அப்போது வானில் கருடன் வட்டமிடும் இந்த அதிசய காட்சி இன்றும் நடைபெற்று வருகிறது.
இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் பகல் 1.30 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும்.
அமைவிடம்
தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்து உள்ளது குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில். திருநெல்வேலி-திருச்செந்தூர் சாலையில் அமைந்து உள்ள தென்திருப்பேரை என்ற ஊரில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சென்றதும் இக்கோவிலை அடையலாம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் எத்தனை அம்மன் கோவில்கள் இருந்தாலும், அவற்றுள் பழமையானதாகவும், ராமாயண காலத்தோடு தொடர்புடையதாகவும் விளங்குகிறது குரங்கணி முத்துமாலையம்மன் திருக்கோவில்.
ராமாயண காலத்தில் சீதாதேவியை, ராவணன் சிறைபிடித்துச் சென்றான். சீதாதேவியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட ராமனுக்கு வானரங்கள் உதவின. இலங்கைக்குச் செல்ல ராமபிரான் தன் வானரச் சேனையை அணிவகுத்து நிற்கச் செய்த இடம் இது என்று கூறப்படுகிறது. குரங்குகள் அணிவகுத்து நின்றதால் இவ்வூர் ‘குரங்கணி’ என பெயர் பெற்றதாக புராண வரலாறு கூறுகிறது.
ராவணன், சீதாதேவியை கடத்திச் சென்றபோது, ராமனுக்கு அடையாளம் காட்ட தன் கழுத்தில் கிடந்த முத்து மாலையை கழற்றி வீசினாள், சீதாதேவி. புஷ்பக விமானத்தில் இருந்து வீசப்பட்ட முத்து மாலை தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள குரங்கணியில் விழுந்தது. தரையில் விழுந்த முத்துமாலை ஜோதியாக ஒளி வீசியது. அப்போது அந்த வழியாக வந்த பனையடியான் என்பவர், முத்து மாலையின் ஒளி வீச்சை காண முடியாமல் கண்கள் கூச, அருகில் கிடந்த மண் சட்டியை எடுத்து அந்த முத்துமாலையை மூடினார். பின்பு ஊர் மக்கள் கூடி முத்து மாலை கிடந்த இடத்தில் சீதாதேவியின் பெயரால் வழிபாடு நடத்தினர். முத்து மாலை கிடந்த இடமானதால் இங்கு அமைக்கப்பட்ட அம்மனுக்கு ‘முத்துமாலையம்மன்’ என்றே பெயரிட்டனர் என்கிறது தல வரலாறு.
பழங்காலத்தில் இத்திருக்கோவிலில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடை திறக்கப்பட்டு மதியம் மற்றும் இரவு பூஜை மட்டும் நடந்து வந்தது. அப்போது அம்மனுடைய மண் திருமேனிக்கு அபிஷேகம் மற்றும் நைவேத்தியங்கள் இல்லாமல் இருந்தது. இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்த சீதாதேவி உண்ணாமல் தவம் இருந்ததை நினைவு கூரும் விதமாக, இவ்வாறு தீப, தூபம் மட்டும் காட்டி வழிபட்டு வந்தனர்.
கோவிலில் 1957-ம் ஆண்டு கோவில் கும்பாபிஷேகம் நடந்த போது, அம்மனின் முத்துமாலையை மூடி இருந்த ஒட்டு சீலை விலக்கப்பட்டு, கல்லினால் ஆன திருமேனி பிரதிஷ்டை செய்யப்பட்டது. அன்று முதல் தினமும் கோவில் நடை திறக்கப்பட்டு, அபிஷேகம் மற்றும் நைவேத்தியங்கள் படைக்கப்பட்டு பகல், இரவு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
முத்துமாலையம்மன் சன்னிதியின் இடப்புறமும், வலப்புறமும் பரிவார மூர்த்திகளின் சன்னிதிகள் அமைந்திருக்கின்றன. இதில் அம்மனுக்கு இடப்புறம் நாராயணர், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களின் கோபுரத்துடன் கூடிய சன்னிதி உள்ளது.
சீதாதேவியை காணாமல் ராமரும், லட்சுமணனும் காட்டில் தேடி அலைந்தார்கள். அப்போது வெட்டுப்பட்டு கிடந்த ஜடாயு பறவை ராவணன் தான் சீதாதேவியை கடத்தி சென்றான் என கூறியது. அனுமனுடன் வானரப்படைகள் சீதாதேவியை தேடிச் சென்றபோது, ஒரு இடத்தில் ஏதோ மினுமினுப்பாக மிளிர்ந்தது. அனுமன் அதன் அருகே சென்று பார்த்தபோது ‘அது சீதையின் முத்து மாலை’ என ராமர் கூறினார். அந்த முத்துமாலையை ராமன் கிழக்கே நின்று மேற்கு முகமாக பார்த்ததால் இங்கு நாராயணர் கோவில் மேற்கு முகமாக இருக்கிறது.
முப்பிடாதி அம்மன், சப்த கன்னிகைகள், பார்வதி அம்மன், பிரம்ம சக்தி, மாரியம்மன், சந்தன மாரியம்மன், பைரவர், வீரபத்திரர் முதலியோருக்கு இங்கு தனித்தனி சன்னிதிகள் உள்ளன. மேலும் விநாயகர், காசிநாதர், விசாலாட்சி, நவக்கிரகங்கள் ஆகியோர் இங்கு அருள்பாலிக்க, மூலவராக முத்துமாலை அம்மன் கிழக்கு முகமாக அமர்ந்தபடி அருளாட்சி புரிந்து வருகிறாள்.
குரல் கொடுத்த அம்மன்
நவாப் ஆட்சி செய்த காலத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையை நேராக அமைக்க எண்ணினார். அதற்கு கோவிலின் சுற்றுச்சுவர் இடையூறாக இருப்பதாக நினைத்த அவர், அதிகாரி ஒருவரை அனுப்பி கோவில் சுற்றுச்சுவரை அகற்ற உத்தரவிட்டார். அதன்படி ஒரு அதிகாரி குதிரையில் வந்தார். அவருடைய செயலை அவ்வூரைச் சேர்ந்த நான்கு சகோதரர்கள் வம்சா வழியினர் தடுத்தனர். அப்போது அந்த அதிகாரி ‘இந்த அம்மனுக்கு சக்தி இருக்குமானால், நான் கூப்பிடுகிறேன், அது பதில் சப்தம் தருமா?’ என கேட்க, அதற்கு அவர்கள் ‘நிச்சயம் தரும்’ என்றனர்.
‘முத்துமாலை அம்மன், முத்துமாலை அம்மன்’ என 3 முறை கூப்பிட்டார் அந்த ஆங்கிலேய அதிகாரி.
‘என்ன?’ என்ற சப்தம் இடி போன்று கோவில் கருவறைக்குள் இருந்து கேட்டது. சப்தத்தை கேட்ட அதிர்ச்சியில் அந்த அதிகாரி மயங்கி கீழே விழுந்தார். உடன் குதிரையும் மயங்கி விழுந்தது. கூடி இருந்தவர்கள் பயபக்தியுடன் நின்றார்கள். அம்மன் தீர்த்தம் தெளித்து எழுப்பியதும் அதிகாரிக்கும், குதிரைக்கும் சுய உணர்வு வந்தது. கோவிலை இடிக்காமல் விட்ட அதிகாரி, 2 மண் குதிரைகள் செய்து கோவிலில் வைக்க உத்தரவிட்டார். அந்த குதிரைகளை இன்றும் கோவிலில் பெரிய சுவாமி சன்னிதியில் காணலாம்.
ஆற்றில் மிதந்து வந்த பெரியசாமி
குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில், அம்மனுக்கு தென்புறம் வடக்கு நோக்கி பெரியசாமி சன்னிதி உள்ளது. இந்த சன்னிதி அமைய தனிக்காரணம் உண்டு. கோவில் பூசாரி மற்றும் இவ்வூர் நான்கு சகோதரர்கள் கனவில் முத்துமாலை அம்மன் தோன்றினாள். ‘கேரளாவில் இருந்து எனது காவல் வீரன் பெரியசாமி, நாளை தாமிரபரணி வெள்ளப் பெருக்கில் சிலை வடிவில் மிதந்து வருகிறான். அவனை நல்ல முறையில் வரவேற்று எனது கோட்டைக்குள் எனக்கு வலது புறம் வடக்கு நோக்கி நின்ற கோலத்தில் அவனது திரு உருவை அமைத்து விடுங்கள்’ என அருளினாள். அம்மன் அருளாணையின்படி தாமிரபரணி வெள்ளத்தில் வந்த பெரியசாமியை வரவேற்று கோவில் அமைத்து வழிபட்டு வந்தனர். பெரியசாமி காவல் தெய்வமாக விளங்கி வருகிறார்.
விழாக்கள்
குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஆனி பெருந்திருவிழா, தைத் திருமாலை பூஜை விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும். கோவிலின் முக்கியமான விழா ஆனி மாதம் கடைசி செவ்வாய்க் கிழமை நடைபெறும். அப்போது முத்துமாலை அம்மனுக்கு சொக்கத் தங்கத்தால் திருமேனி அலங்காரம் செய்யப்படும்.
ஆனி திருவிழாவிற்கு 15 நாட்களுக்கு முன்னால் திருக்கால் நாட்டு வைபவம் நடைபெறும். முத்துமாலையம்மன் சன்னிதியின் தென்புறம் முப்பிடாதி அம்மன் முன்னிலையில் அன்று மதியம் அம்மன் மற்றும் பரிவார மூர்த்தங்களுக்கு மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடத்தி கால் நடப்படும். அப்போது வானில் கருடன் வட்டமிடும் இந்த அதிசய காட்சி இன்றும் நடைபெற்று வருகிறது.
இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் பகல் 1.30 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும்.
அமைவிடம்
தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்து உள்ளது குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில். திருநெல்வேலி-திருச்செந்தூர் சாலையில் அமைந்து உள்ள தென்திருப்பேரை என்ற ஊரில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சென்றதும் இக்கோவிலை அடையலாம்.
திருவையாறுக்கு அருகே இருக்கும் தலம் தான் பெரும்புலியூர் வியாக்ரபுரீஸ்வரர் ஆலயம். இன்று இந்த கோவிலின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
சிவபெருமான் மேல் தீராத பக்தி கொண்டவர் புலிக்கால் முனிவர். இவரை வியாக்ரபாதர் என்று அழைப்பார்கள். இந்த முனிவர் இறைவனுக்கு எளிதாக பூப்பறிக்க தன் கால்களை புலிக்காலாக மாற்றிக் கொண்டாராம். அதனாலேயே அந்த முனிவரின் உண்மை பெயர் மறைந்து ‘புலிக்கால் முனிவர்’ என அழைக்கப்பட்டார்.
இவர் ஐந்து தலங்களில் பூஜித்து அருள் பெற்றவர். பெரும் பெற்ற புலியூர் (சிதம்பரம்), எருகத்தம் புலியூர் (ராஜேந்திரபட்டினம்), ஓமாம் புலியூர், திருப்பாதிருபுலியூர் என்பன அவர் பூஜித்த நான்கு தலங்கள்.
ஐந்தாவது தலம்தான் இப்போது நாம் பார்க்க இருக்கும் பெரும்புலியூர். திருவையாறுக்கு அருகே இருக்கும் தலம் இது. இங்கு வியாக்ரபுரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இத்தல இறைவன் பெயர் வியாக்ரபுரீஸ்வரர். இறைவியின் திருநாமம் சவுந்திர நாயகி. ஆலயத்தின் கிழக்குப் பிரகாரத்தில் உமா சகித மூர்த்தியின் திருமேனிகள் உள்ளன.
கணவனின் பழக்க வழக்கங்கள் பிடிக்காமல், அவனை விட்டுப் பிரிந்து வாழும் ஒரு பெண் இந்த ஆலயத்திற்கு வந்தாள். அவள், அன்னை உமாதேவியின் முன்பாக மண்டியிட்டு அமர்ந்து பிரார்த்தனை செய்கிறாள். ‘தாயே என் கணவனுக்கு நல்ல புத்தியைக் கொடு. அவர் திருந்தி என்னுடன் மீண்டும் வாழ அருள்புரிவாய்’ என கண்கள் கலங்க மன்றாடுகிறாள்.
இன்னொரு பெண். தன்னை விட்டு பிரிந்து வாழும் கணவன் தன்னுடன் மீண்டும் இணைந்து வாழ வேண்டும் என மனமுருக அன்னையிடம் மன்றாடுகிறாள். பெண்கள் மட்டுமா? ஆண்களும் கூட.
கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்குச் சென்ற மனைவியை, அவள் கணவன் அங்கே போய் எத்தனை முறை அழைத்தாலும் வர மறுக்கிறாள். என்ன செய்வது என்று புரியாத கணவன் இங்கே வருகிறான். உமா சகித மூர்த்தியின் முன் நின்று மனமாற பிரார்த்தனை செய்கிறான்.
இவர்கள் அனைவரின் பிரார்த்தனைகளும் நிறைவேறுகின்றன. தம்பதிகள் இணைகின்றனர். இணைந்தவுடன் தம்பதியர்களாக இங்கு வருகின்றனர். இணைந்து காட்சி தரும் உமா சமேத மூர்த்திக்கு அபிஷேக, ஆராதனை செய்து தங்கள் நன்றிக் கடனை செலுத்துகின்றனர்.
இது மட்டுமல்ல நீதிமன்றம் வரை சென்ற விவாகரத்து வழக்குகள் கூட, உமா சமேத மூர்த்தியை பிரார்த்தனை செய்ததால், இடையிலேயே திரும்பப் பெறப்பட்ட சம்பவங்கள் ஏராளம் என இங்குள்ள பக்தர்கள் சிலிர்ப்போடு கூறுகின்றனர்.
பல நூற்றாண்டுகளைக் கடந்த இந்த ஆலயத்தின் முகப்பில், மூன்று நிலை ராஜகோபுரம் உள்ளது. வண்ணமயமாய் ஜொலிக்கும் கோபுரத்தைத் தாண்டினால் விசாலமான பிரகாரம் உள்ளது. பலிபீடம், நந்திமண்டபம், கொடிமரம் இவைகளை தாண்டியதும் அலங்கார மண்டபமும் இதை அடுத்து மகாமண்டபமும் உள்ளன. மகா மண்டபத்தின் நடுவே கருவறையின் எதிரே நந்தியும், பலி பீடமும் உள்ளன.

சவுந்திரநாயகி, வியாக்ரபுரீஸ்வரர்
அடுத்து உள்ள அர்த்த மண்டப நுழைவுவாசலின் இடதுபுறம் பிள்ளையாரும், வலது புறம் ஆஞ்சநேயரும் அருள்பாலிக்கின்றனர். கருவறையில் இறைவன் வியாக்ரபுரீஸ்வரர் லிங்கத்திருமேனியில் கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். ஆலயமும் கீழ் திசை நோக்கியே அமைந்துள்ளது. இறைவனின் தேவக்கோட்டத்தில் தென்புறம் விநாயகர், தட்சிணாமூர்த்தி, மேற்கில் அர்த்தநாரீஸ்வரர் ஆகியோரது திருமேனிகள் உள்ளன. வடக்கு பிரகாரத்தில் இறைவி சவுந்திர நாயகியின் தனி சன்னிதி இருக்கிறது. சன்னிதியின் முன் அழகிய மண்டபமும், அர்த்த மண்டப நுழைவுவாசலில் துவாரபாலகிகளின் திருமேனிகளும் உள்ளன.
கருவறையில் இறைவி நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அன்னையின் மேல் இரண்டு கரங்களில் பத்மமும், ெஜபமாலையும், கீழே ஒரு கரத்தில் அபய ஹஸ்த முத்திரையுடன் காட்சி தரும் அன்னை, தனது இன்னொரு கரத்தை பூமியை நோக்கி தொங்க விட்ட நிலையில் காட்சி தருகிறாள். அன்னை இங்கு சதுரபீடத்தில் எழுந்தருளியிருப்பது தனிச்சிறப்பு. இங்கு மூலவராய் நின்று அருள்புரியும் அன்னையும் இவளே. துர்க்கையாய் நின்று மங்கையரைக் காப்பவளும் இவளே. அளப்பரிய சக்தி கொண்ட அன்னை இவள். எனவே இந்த ஆலயத்தில் துர்க்கை பிரதிஷ்டை செய்யப்படவில்லை.
ஆலயப் பிரகாரத்தில் தெற்கில் நால்வர், மேற்கில் விநாயகர், வள்ளி-தெய்வானை சமேத முருகப்பெருமான், வடக்கில் சண்டீஸ்வரர் ஆகியோர் தனி சன்னிதிகளில் அருள்பாலிக்கின்றனர்.
இத்தலத்தில் வீற்றிருக்கும் இறைவனின் விமான அடித்தளம், தாமரைப் பூ வடிவில் அமைந்திருப்பது கண்கொள்ளாக் காட்சியாகும். சமயக்குரவர்களில் ஒருவரான திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற தலம் இது.
தினசரி ஒரு காலம் மட்டுமே இங்கு பூஜை நடைபெறுகிறது. பொங்கல், நவராத்திரி, சிவராத்திரி, சோம வாரங்கள், மார்கழி 30 நாட்கள் என இறைவனுக்கும் இறைவிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. இத்தலத்து இறைவனையும் இறைவியையும் தரிசனம் செய்வது, சிதம்பரம் நடராஜர் - சிவகாமி அம்பாளை தரிசனம் செய்வதற்கு சமம் என பக்தர்கள் கூறுகின்றனர்.
இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
மன ஒற்றுமைக்காக ஏங்கும் தம்பதிகள் ஒரு முறை இத்தலம் சென்று இறைவன், இறைவியை தரிசிப்பதுடன் உமா சகித மூர்த்தியையும் தரிசித்து அருள் பெறலாமே.
திருவையாறில் இருந்து வடக்கே 3 கி.மீ. தொலைவில் உள்ளது பெரும்புலியூர் என்ற இந்த தலம்.
இவர் ஐந்து தலங்களில் பூஜித்து அருள் பெற்றவர். பெரும் பெற்ற புலியூர் (சிதம்பரம்), எருகத்தம் புலியூர் (ராஜேந்திரபட்டினம்), ஓமாம் புலியூர், திருப்பாதிருபுலியூர் என்பன அவர் பூஜித்த நான்கு தலங்கள்.
ஐந்தாவது தலம்தான் இப்போது நாம் பார்க்க இருக்கும் பெரும்புலியூர். திருவையாறுக்கு அருகே இருக்கும் தலம் இது. இங்கு வியாக்ரபுரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இத்தல இறைவன் பெயர் வியாக்ரபுரீஸ்வரர். இறைவியின் திருநாமம் சவுந்திர நாயகி. ஆலயத்தின் கிழக்குப் பிரகாரத்தில் உமா சகித மூர்த்தியின் திருமேனிகள் உள்ளன.
கணவனின் பழக்க வழக்கங்கள் பிடிக்காமல், அவனை விட்டுப் பிரிந்து வாழும் ஒரு பெண் இந்த ஆலயத்திற்கு வந்தாள். அவள், அன்னை உமாதேவியின் முன்பாக மண்டியிட்டு அமர்ந்து பிரார்த்தனை செய்கிறாள். ‘தாயே என் கணவனுக்கு நல்ல புத்தியைக் கொடு. அவர் திருந்தி என்னுடன் மீண்டும் வாழ அருள்புரிவாய்’ என கண்கள் கலங்க மன்றாடுகிறாள்.
இன்னொரு பெண். தன்னை விட்டு பிரிந்து வாழும் கணவன் தன்னுடன் மீண்டும் இணைந்து வாழ வேண்டும் என மனமுருக அன்னையிடம் மன்றாடுகிறாள். பெண்கள் மட்டுமா? ஆண்களும் கூட.
கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்குச் சென்ற மனைவியை, அவள் கணவன் அங்கே போய் எத்தனை முறை அழைத்தாலும் வர மறுக்கிறாள். என்ன செய்வது என்று புரியாத கணவன் இங்கே வருகிறான். உமா சகித மூர்த்தியின் முன் நின்று மனமாற பிரார்த்தனை செய்கிறான்.
இவர்கள் அனைவரின் பிரார்த்தனைகளும் நிறைவேறுகின்றன. தம்பதிகள் இணைகின்றனர். இணைந்தவுடன் தம்பதியர்களாக இங்கு வருகின்றனர். இணைந்து காட்சி தரும் உமா சமேத மூர்த்திக்கு அபிஷேக, ஆராதனை செய்து தங்கள் நன்றிக் கடனை செலுத்துகின்றனர்.
இது மட்டுமல்ல நீதிமன்றம் வரை சென்ற விவாகரத்து வழக்குகள் கூட, உமா சமேத மூர்த்தியை பிரார்த்தனை செய்ததால், இடையிலேயே திரும்பப் பெறப்பட்ட சம்பவங்கள் ஏராளம் என இங்குள்ள பக்தர்கள் சிலிர்ப்போடு கூறுகின்றனர்.
பல நூற்றாண்டுகளைக் கடந்த இந்த ஆலயத்தின் முகப்பில், மூன்று நிலை ராஜகோபுரம் உள்ளது. வண்ணமயமாய் ஜொலிக்கும் கோபுரத்தைத் தாண்டினால் விசாலமான பிரகாரம் உள்ளது. பலிபீடம், நந்திமண்டபம், கொடிமரம் இவைகளை தாண்டியதும் அலங்கார மண்டபமும் இதை அடுத்து மகாமண்டபமும் உள்ளன. மகா மண்டபத்தின் நடுவே கருவறையின் எதிரே நந்தியும், பலி பீடமும் உள்ளன.

சவுந்திரநாயகி, வியாக்ரபுரீஸ்வரர்
அடுத்து உள்ள அர்த்த மண்டப நுழைவுவாசலின் இடதுபுறம் பிள்ளையாரும், வலது புறம் ஆஞ்சநேயரும் அருள்பாலிக்கின்றனர். கருவறையில் இறைவன் வியாக்ரபுரீஸ்வரர் லிங்கத்திருமேனியில் கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். ஆலயமும் கீழ் திசை நோக்கியே அமைந்துள்ளது. இறைவனின் தேவக்கோட்டத்தில் தென்புறம் விநாயகர், தட்சிணாமூர்த்தி, மேற்கில் அர்த்தநாரீஸ்வரர் ஆகியோரது திருமேனிகள் உள்ளன. வடக்கு பிரகாரத்தில் இறைவி சவுந்திர நாயகியின் தனி சன்னிதி இருக்கிறது. சன்னிதியின் முன் அழகிய மண்டபமும், அர்த்த மண்டப நுழைவுவாசலில் துவாரபாலகிகளின் திருமேனிகளும் உள்ளன.
கருவறையில் இறைவி நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அன்னையின் மேல் இரண்டு கரங்களில் பத்மமும், ெஜபமாலையும், கீழே ஒரு கரத்தில் அபய ஹஸ்த முத்திரையுடன் காட்சி தரும் அன்னை, தனது இன்னொரு கரத்தை பூமியை நோக்கி தொங்க விட்ட நிலையில் காட்சி தருகிறாள். அன்னை இங்கு சதுரபீடத்தில் எழுந்தருளியிருப்பது தனிச்சிறப்பு. இங்கு மூலவராய் நின்று அருள்புரியும் அன்னையும் இவளே. துர்க்கையாய் நின்று மங்கையரைக் காப்பவளும் இவளே. அளப்பரிய சக்தி கொண்ட அன்னை இவள். எனவே இந்த ஆலயத்தில் துர்க்கை பிரதிஷ்டை செய்யப்படவில்லை.
ஆலயப் பிரகாரத்தில் தெற்கில் நால்வர், மேற்கில் விநாயகர், வள்ளி-தெய்வானை சமேத முருகப்பெருமான், வடக்கில் சண்டீஸ்வரர் ஆகியோர் தனி சன்னிதிகளில் அருள்பாலிக்கின்றனர்.
இத்தலத்தில் வீற்றிருக்கும் இறைவனின் விமான அடித்தளம், தாமரைப் பூ வடிவில் அமைந்திருப்பது கண்கொள்ளாக் காட்சியாகும். சமயக்குரவர்களில் ஒருவரான திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற தலம் இது.
தினசரி ஒரு காலம் மட்டுமே இங்கு பூஜை நடைபெறுகிறது. பொங்கல், நவராத்திரி, சிவராத்திரி, சோம வாரங்கள், மார்கழி 30 நாட்கள் என இறைவனுக்கும் இறைவிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. இத்தலத்து இறைவனையும் இறைவியையும் தரிசனம் செய்வது, சிதம்பரம் நடராஜர் - சிவகாமி அம்பாளை தரிசனம் செய்வதற்கு சமம் என பக்தர்கள் கூறுகின்றனர்.
இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
மன ஒற்றுமைக்காக ஏங்கும் தம்பதிகள் ஒரு முறை இத்தலம் சென்று இறைவன், இறைவியை தரிசிப்பதுடன் உமா சகித மூர்த்தியையும் தரிசித்து அருள் பெறலாமே.
திருவையாறில் இருந்து வடக்கே 3 கி.மீ. தொலைவில் உள்ளது பெரும்புலியூர் என்ற இந்த தலம்.
உத்தரபிரதேசம் கான்பூர், பிதார்கவான் பெஹதா என்ற இடத்தில் உள்ளது ஜகன்னாதர் ஆலயம். இந்தக் கோவிலை ‘மழைக்கோவில்’ என்றும் அழைக்கிறார்கள்.
நமது இந்திய மண்ணில் எத்தனையோ அதிசயங்கள் நிறைந்த, மகத்தான கோவில்கள் கண்டறியப்பட்டுள்ளன. நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் என்ற பஞ்ச பூதங்கள் மற்றும் நவக்கிரகங்களின் சக்திகளை வெளிப்படுத்தும் விதத்தில் முன்னோர்களால் கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை காலம் காலமாக மக்களின் பல்வேறு சிக்கல்களை, நம்பிக்கை மற்றும் பிரார்த்தனைகளின் மூலம் தீர்ப்பதை அன்றாட வாழ்வில் பலரும் உணர்ந்திருக்கிறார்கள். நமது தென்னக பகுதியில் உள்ள கோவில்கள் கட்டமைப்பு மற்றும் ஆன்மிகச் சூழல், பூஜை முறைகள் ஆகிய நிலைகளை ஒப்பிடும்போது, வட மாநிலங்களில் உள்ள கோவில்களின் கட்டமைப்பு, இதர வழிபாடுகள் மற்றும் பூஜை முறைகளில், மாறுபட்ட நிறைய வித்தியாசங்கள் இருப்பதை கவனிக்க முடியும்.
மழைக்கோவில் :
அந்த அடிப்படையில் உத்தரபிரதேசம் கான்பூர், பிதார்கவான் பெஹதா என்ற இடத்தில் உள்ளது ஜகன்னாதர் ஆலயம். இந்தக் கோவிலை ‘மழைக்கோவில்’ என்றும் அழைக்கிறார்கள். ஏனெனில் ஒரு வருடத்தில் அந்தப் பகுதியில் பெய்யும் மழை அளவு பற்றிய தகவல்களை அந்த ஆலயம் குறிப்பிடுவதாக தெரியவந்துள்ளது. அக்கோவில் பற்றிய சிறப்புகளை காணலாம்.
பொதுவாக, நமது பகுதிகளில் குறிப்பிட்ட வருடத்தில் பெய்யவேண்டிய மழையின் அளவு குறைவது அல்லது இல்லாமல் போவது ஆகிய காரணங்களை முன்னிட்டு சுவாமிக்கு பொங்கல் வைப்பது, கிராம மக்கள் மண் சோறு சாப்பிடுவது என்பது போன்ற நம்பிக்கை சார்ந்த வித்தியாசமான முறைகளை கடைப்பிடிப்பது வழக்கம். வருண பகவானின் அருளைப்பெற ‘அமிர்தவர்ஷினி’ என்ற ராகத்தை சங்கீத வல்லுனர்கள் அல்லது வாத்திய கலைஞர்களை கொண்டு நதிக்கரை அல்லது கடற்கரையில் இசைக்க வைப்பதும் பல நேரங்களில் நடப்பது உண்டு.
ஆனால் இவை எதுவும் இல்லாமல், மேற்கண்ட கோவில் மூலம் அறியப்படும் மழை பெய்வது பற்றிய குறிப்புகள், அப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு பெரும் உதவியாக இருக்கிறது. அதன் அடிப்படையில் விதை விதைப்பது, அறுவடை உள்ளிட்ட விவசாய பணிகளை அவர்கள் மேற்கொள்கிறார்கள்.

மழைக்கான முன்னறிவுப்புகள் :
ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதத்தில் நடை பெறும் தேர்த்திருவிழா சமயத்தில், கோவிலின் மேற்கூரையில் நீர்த்துளிகள் உருவாகும் விதத்தைக் கணக்கில் கொண்டு அந்த வருடத்தின் மழைப்பொழிவு எவ்வாறு இருக்கும் என்பதை அறிந்துகொள்கிறார்கள்.
தேர்த்திருவிழா சமயத்தில் கோவிலின் மேற்கூரையில் வெறும் ஈரப்பதம் மட்டும் இருந்தால், மழையின் அளவு சாதாரணமாக இருக்கும் என்றும், நீர்த்திவலைகள் உருவாகி நின்றால் நல்ல மழைப்பொழிவு இருக்கும் என்றும், நீர்த்திவலைகள் உருவாகி கீழே சொட்டுச்சொட்டாக விழுந்தால் அந்த வருடத்தில் பெரும் மழை பெய்யும் என்றும் அப் பகுதி மக்களால் நம்பப்படுகிறது. இதில் உள்ள அதிசயம் என்னவென்றால், கிட்டத்தட்ட நூறு ஆண்டு களாக அந்த நம்பிக்கைக்கு மாறாக மழையின் அளவுகள் பொய்த்து விட்ட சம்பவங்கள் எதும் இதுவரை நடைபெறவில்லை என்பது தான். இதனை அந்தப் பகுதியில் உள்ள மக்களும், கோவிலில் பூஜை செய்பவர்களும் குறிப்பிடுகிறார்கள்.
ஈரப்பதம் அல்லது நீர்த்திவலைகள் ஏதும் தோன்றவில்லை என்றால் அந்த வருடத்தில் மழை இருக்காது என்பதும் ஆச்சரியமான நடப்பாக இருந்து வருகிறது. பொதுவாக, மழை பெய்வதற்கு ஒரு வாரம் முன்பாகவே மேற்கண்ட அறிகுறிகள் தென்படத் தொடங்குமாம்.
மின்காந்த சக்தியுள்ள சக்கரம் :
அந்த கோவிலில் கடந்த ஏழு தலைமுறைகளாக பூஜையில் ஈடுபட்டு வரும் தலைமை பூசாரியான தினேஷ் சுக்லா என்பவர் குறிப்பிடும்போது, அசோகர் காலத்தில் ஸ்தூபி வடிவத்தில் இந்த கோவில் வடிவமைக்கப்பட்டது. இது போன்ற அமைப்பு இப்பகுதியில் வேறு எங்கும் இல்லை. அதோடு, கோவிலின் மேற் கூரையில் உள்ள சக்கர வடிவ அமைப்பில் மின்காந்த சக்தி இருப்பதால், மழைக்காலங்களில் ஏற்படும் இடி, மின்னல் போன்ற இயற்கை சீற்றங்களால் ஒருவர் கூட பாதிக்கப்பட்டதில்லை’ என்கிறார்.
வித்தியாசமான கட்டமைப்பு கொண்ட இந்த மழைக்கோவில், இப்போது அந்த மாநில தொல்பொருள் பாதுகாப்பு துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. அதன் ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்ட பலரும் கோவிலின் மேற்கூரையில் உருவாகும் நீர்த்திவலைகளுக்கான அறிவியல் பூர்வமான காரணத்தை அறிய முயற்சிகள் மேற்கொண்டார்கள். ஆனால், இதுவரையில் யாராலும் அதுபற்றிய மர்மத்தை கண்டறிய இயலவில்லை.
மழைக்கோவில் :
அந்த அடிப்படையில் உத்தரபிரதேசம் கான்பூர், பிதார்கவான் பெஹதா என்ற இடத்தில் உள்ளது ஜகன்னாதர் ஆலயம். இந்தக் கோவிலை ‘மழைக்கோவில்’ என்றும் அழைக்கிறார்கள். ஏனெனில் ஒரு வருடத்தில் அந்தப் பகுதியில் பெய்யும் மழை அளவு பற்றிய தகவல்களை அந்த ஆலயம் குறிப்பிடுவதாக தெரியவந்துள்ளது. அக்கோவில் பற்றிய சிறப்புகளை காணலாம்.
பொதுவாக, நமது பகுதிகளில் குறிப்பிட்ட வருடத்தில் பெய்யவேண்டிய மழையின் அளவு குறைவது அல்லது இல்லாமல் போவது ஆகிய காரணங்களை முன்னிட்டு சுவாமிக்கு பொங்கல் வைப்பது, கிராம மக்கள் மண் சோறு சாப்பிடுவது என்பது போன்ற நம்பிக்கை சார்ந்த வித்தியாசமான முறைகளை கடைப்பிடிப்பது வழக்கம். வருண பகவானின் அருளைப்பெற ‘அமிர்தவர்ஷினி’ என்ற ராகத்தை சங்கீத வல்லுனர்கள் அல்லது வாத்திய கலைஞர்களை கொண்டு நதிக்கரை அல்லது கடற்கரையில் இசைக்க வைப்பதும் பல நேரங்களில் நடப்பது உண்டு.
ஆனால் இவை எதுவும் இல்லாமல், மேற்கண்ட கோவில் மூலம் அறியப்படும் மழை பெய்வது பற்றிய குறிப்புகள், அப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு பெரும் உதவியாக இருக்கிறது. அதன் அடிப்படையில் விதை விதைப்பது, அறுவடை உள்ளிட்ட விவசாய பணிகளை அவர்கள் மேற்கொள்கிறார்கள்.

மழைக்கான முன்னறிவுப்புகள் :
ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதத்தில் நடை பெறும் தேர்த்திருவிழா சமயத்தில், கோவிலின் மேற்கூரையில் நீர்த்துளிகள் உருவாகும் விதத்தைக் கணக்கில் கொண்டு அந்த வருடத்தின் மழைப்பொழிவு எவ்வாறு இருக்கும் என்பதை அறிந்துகொள்கிறார்கள்.
தேர்த்திருவிழா சமயத்தில் கோவிலின் மேற்கூரையில் வெறும் ஈரப்பதம் மட்டும் இருந்தால், மழையின் அளவு சாதாரணமாக இருக்கும் என்றும், நீர்த்திவலைகள் உருவாகி நின்றால் நல்ல மழைப்பொழிவு இருக்கும் என்றும், நீர்த்திவலைகள் உருவாகி கீழே சொட்டுச்சொட்டாக விழுந்தால் அந்த வருடத்தில் பெரும் மழை பெய்யும் என்றும் அப் பகுதி மக்களால் நம்பப்படுகிறது. இதில் உள்ள அதிசயம் என்னவென்றால், கிட்டத்தட்ட நூறு ஆண்டு களாக அந்த நம்பிக்கைக்கு மாறாக மழையின் அளவுகள் பொய்த்து விட்ட சம்பவங்கள் எதும் இதுவரை நடைபெறவில்லை என்பது தான். இதனை அந்தப் பகுதியில் உள்ள மக்களும், கோவிலில் பூஜை செய்பவர்களும் குறிப்பிடுகிறார்கள்.
ஈரப்பதம் அல்லது நீர்த்திவலைகள் ஏதும் தோன்றவில்லை என்றால் அந்த வருடத்தில் மழை இருக்காது என்பதும் ஆச்சரியமான நடப்பாக இருந்து வருகிறது. பொதுவாக, மழை பெய்வதற்கு ஒரு வாரம் முன்பாகவே மேற்கண்ட அறிகுறிகள் தென்படத் தொடங்குமாம்.
மின்காந்த சக்தியுள்ள சக்கரம் :
அந்த கோவிலில் கடந்த ஏழு தலைமுறைகளாக பூஜையில் ஈடுபட்டு வரும் தலைமை பூசாரியான தினேஷ் சுக்லா என்பவர் குறிப்பிடும்போது, அசோகர் காலத்தில் ஸ்தூபி வடிவத்தில் இந்த கோவில் வடிவமைக்கப்பட்டது. இது போன்ற அமைப்பு இப்பகுதியில் வேறு எங்கும் இல்லை. அதோடு, கோவிலின் மேற் கூரையில் உள்ள சக்கர வடிவ அமைப்பில் மின்காந்த சக்தி இருப்பதால், மழைக்காலங்களில் ஏற்படும் இடி, மின்னல் போன்ற இயற்கை சீற்றங்களால் ஒருவர் கூட பாதிக்கப்பட்டதில்லை’ என்கிறார்.
வித்தியாசமான கட்டமைப்பு கொண்ட இந்த மழைக்கோவில், இப்போது அந்த மாநில தொல்பொருள் பாதுகாப்பு துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. அதன் ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்ட பலரும் கோவிலின் மேற்கூரையில் உருவாகும் நீர்த்திவலைகளுக்கான அறிவியல் பூர்வமான காரணத்தை அறிய முயற்சிகள் மேற்கொண்டார்கள். ஆனால், இதுவரையில் யாராலும் அதுபற்றிய மர்மத்தை கண்டறிய இயலவில்லை.
ஆந்திராவில் ஸ்ரீகாக்குளம் மாவட்டம், ஸ்ரீகூர்மம் என்ற ஊரில், கூர்ம அவதாரத்துக்கான கோவில் இருக்கிறது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
ஆபத்து வருங்காலத்தில் ஆமை, தன் உடலை ஓட்டுக்குள் இழுத்துக் கொண்டு தற்காத்துக் கொள்வதைப் போல, மனிதனும் தன் ஐம்புலன்களான கண், காது, மூக்கு, வாய், மெய் ஆகியவற்றை அடக்கப் பழக வேண்டும் என்பதை, ‘ஒருமையுள் ஆமை போல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப்புடைத்து..’ என்கிறார் வள்ளுவர்.
இந்த அரிய தத்துவத்தை ஆமை (கூர்ம) அவதாரம் எடுத்ததன் மூலம், உலகுக்கு விளக்கினார் விஷ்ணு. ஆமையின் வடமொழிச் சொல்லே ‘கூர்மம்.’ ஆந்திராவில் ஸ்ரீகாக்குளம் மாவட்டம், ஸ்ரீகூர்மம் என்ற ஊரில், கூர்ம அவதாரத்துக்கான கோவில் இருக்கிறது. கருவறையில், ஆமை வடிவில் அருள்பாலிக்கிறார் பெருமாள். தசாவதாரத்தில் இரண்டாவது அவதாரம் கூர்ம அவதாரம். மகாவிஷ்ணுவின் பிற அவதாரங்கள் யாவும் தீயவர்களை அழிப்பதற்காக எடுக்கப்பட்ட அவதாரங்களாகும். ஆனால் கூர்ம அவதாரம் யாரையும் அழிக்காமல், பல அரிய பொருட்களை தேவர்களுக்கும் மக்களுக்கும் வழங்குவதற்காக எடுக்கப்பட்ட அவதாரமாகும்.
தேவலோகத்துப் பெண் ஒருத்தி, அலைமகள் கொடுத்த மலர் மாலையைத் தனது வீணையில் சுற்றிக் கொண்டு பிரம்ம லோகம் வழியாக சென்றாள். அப்போது வழியில் துர்வாச முனிவரைச் சந்தித்தாள். அவரை வணங்கியவள், தன்னிடமுள்ள மாலையை அவரிடம் கொடுத்தாள். அதைப் பெற்றுக்கொண்ட முனிவர், அந்த மாலையுடன் தேவலோகம் நோக்கிச் சென்றார்.
எதிரே தேவேந்திரன் யானை மீது அமர்ந்து வந்து கொண்டிருந்தான். அவனிடம் அந்த மலர் மாலையைக் கொடுத்தார் முனிவர். தேவேந்திரனோ அந்த மாலையை அலட்சியமாக வாங்கி, யானையின் தலையில் வைத்தான். யானையோ தன் துதிக்கையால் அந்த மாலையை எடுத்துக் கீழே போட்டு காலால் மிதித்தது. துர்வாசருக்கு கடும் ஆத்திரம். லட்சுமி தேவியின் பிரசாதத்தை அவமதித்ததால், மூன்று உலகங்களிலும் லட்சுமி கடாட்சம் அழியட்டும் என சாபமிட்டார்.
இந்திரன் பதறிப் போய் முனிவரின் காலில் விழுந்தான்; ஆனால், துர்வாசர் கண்டுகொள்ளவில்லை. லட்சுமி கடாட்சம் இல்லாததால், உலகமே வறுமையில் ஆழ்ந்தது. இதனை அறிந்த அசுரர்கள் தேவேந்திரனின் கோட்டைக்குள் புகுந்து போர் புரியலானார்கள். போரில் அசுரர்கள் வீழ்ந்தாலும், அசுர குருவான சுக்ராச்சாரியாரின் சஞ்சீவி மந்திரத்தால், அவர்கள் மீண்டும் மீண்டும் உயிர் பெற்று எழுந்தார்கள். ஆனால் தேவர்களில் இறந்தவர்களை உயிர்ப்பிக்க வழியில்லை. இதனால் தேவர்களின் எண்ணிக்கை குறைந்தது. இதனைக் கண்ட தேவேந்திரன், பிரம்மன் தயவை நாடினான். பிரம்மன், மகா விஷ்ணுவிடம் தேவேந்திரனை அழைத்துச் சென்றார்.
விஷ்ணுவோ, ‘தேவர்கள் வலிமை பெற்று, அரக்கர்களை அடக்கி ஆள வேண்டுமானால், பாற்கடலைக் கடைந்து அமிர்தம் எடுக்க வேண்டும். அதைப் பருகுவோர் சாகாநிலை பெறுவர்; ஆனால், அதைப் பெறுவது சாதாரணமானதல்ல. தேவர்கள் ஒரு பகுதியாகவும், அரசுரர்கள் ஒரு பகுதியாகவும் இருந்து கடைந்தால் மட்டுமே அமிர்தம் கிடைக்கும்’ என்றார்.
அசுரர்களுக்கும் அமிர்தம் தருவதாகக் கூறியதால் அவர்கள் இதற்கு ஒப்புக்கொண்டனர். பாற்கடலைக் கடைவதற்கு நாள் குறிக்கப்பட்டது. ஆனால் அவ்வளவு பெரிய கடலை கடைய பெரிய மத்து வேண்டுமே!. மேரு மலையை மத்தாக்கினார்கள். மத்தை இழுக்கும் கயிறாக மாற, வாசுகி என்ற பாம்பு சம்மதித்தது. அரக்கர்கள் தங்கள் வீரத்தை வெளிக்காட்டும் வகையில், தலைப் பகுதியைப் பிடித்துக் கொண்டனர். தேவர்கள் வாலைப் பிடித்துக் கொண்டு கடலைக் கடைய ஆரம்பித்தனர்; ஆனால், மலை அசையவில்லை. கடலின் அடிப்பகுதிக்குள் நன்றாகச் சிக்கிக் கொண்டது.
உடனே விஷ்ணு, ஆமையாக உருமாறி கடலுக்குள் சென்றார். மலையைத் தூக்கி, தன் முதுகில் வைத்துக் கொண்டார். அதைத் தொடர்ந்து தேவர்களும், அசுரர்களும் எவ்வித சிரமமும் இன்றி கடலைக் கடைந்தனர். ஒரு கட்டத்தில் வலி தாங்காத வாசுகி, ஆலகால விஷத்தை கக்கியது. அந்த விஷத்தால் உலக உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பதால், அந்த விஷத்தை சிவபெருமானே உண்டார். அந்த விஷம் ஈசனின் வயிற்றுக்குள் இறங்காமல் இருக்க, அவரது கழுத்தைப் பிடித்தார் பார்வதிதேவி. இதனால் விஷமானது, ஈசனின் கழுத்திலேயே நீல நிறத்தில் தங்கிப்போனது. இதனால் அவர் ‘நீலகண்டன்’ என்று பெயர் பெற்றார்.
தொடர்ந்து மீண்டும் பாற்கடல் கடையப்பட்டது. அப்போது காமதேனு என்ற பசு வெளிப்பட்டது. இது பார்வதியிடம் சேர்ந்தது. அடுத்து பொன்மயமான ஒளியுடன் உச்சைசிரவஸ் என்ற ஏழு தலை குதிரை தோன்றியது. இது பறக்கும் ஆற்றல் படைத்தது. அடுத்ததாக ஐராவதம் என்ற நான்கு தந்தங்கள் கொண்ட வெண்மை நிற யானை தோன்றியது. இது இந்திரனின் வாகனம் ஆனது. பின்னர் பஞ்ச தருக்கள் எனப்படும் அரிசந்தனம், கற்பகம், சந்தனம், பாரிஜாதம், மந்தாரம் ஆகிய மரங்கள் தோன்றின. இவற்றில் கற்பக மரத்தின் கீழ் இந்திரன் அமர்ந்தான். கேட்பதைக் கொடுக்கும் சக்தி கொண்டது கற்பகம். அடுத்து கவுஸ்தூபம் (உத்திரியம்) தோன்றியது. இது அணிபவர்களுக்கு ஆற்றலையும் வெற்றியையும் தரக்கூடியது. இதனை திருமால் அணிந்தார்.
அதற்குப்பின் ஜேஷ்டாதேவி என்னும் மூத்த தேவி தோன்றினாள். (மூத்த தேவியே மூதேவி ஆனாள்.) இவளை யாரும் ஏற்காததால் பூலோகம் சென்றாள். இவளுக்கு அடுத்து மிக அழகான அறுபது கோடி தேவலோகப் பெண்கள் (அப்சரஸ்) தோன்றினார்கள். இவர்களை தேவர்கள் ஏற்றுக் கொண்டனர். அடுத்து தோன்றியவர் வருணி. இவர் மது போன்ற போதை தரும் பானங்களின் அதிபதி ஆவார். இவருடன் அதிதேவதையான சுராதேவியும், மதியை மயக்கும் கணக்கற்ற அழகு மங்கையர்களும் தோன்றினார்கள். அவர்களை அசுரர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.
இதற்குப் பின் தோன்றியவள் தான் இளையதேவி, ஸ்ரீதேவி எனப்படும் மகாலட்சுமி. மலர் மாலையை ஏந்தியவளாய் அவதரித்த இவள், தனக்குத் தகுந்த மணாளன் மகாவிஷ்ணுவே என்பதனை அறிந்து, மகாவிஷ்ணுவிற்கு மாலை அணிவித்து திருமாலின் நெஞ்சில் அமர்ந்தாள். அடுத்து விஷக்கொடுமையை நீக்கும் மூலிகையுடன் சந்திரன் வெளிப்பட்டான். அவன் கைகளில் நீலோத்பல மலர், மோக சாஸ்திரச் சுவடிகள் இருந்தன. அடுத்துத் தோன்றியது ஸ்யமந்தகமணி. இதனைச் ‘சிந்தாமணி’ என்றும் சொல்வர். அதைச் சூரியன் ஏற்றான்.
கடைசியில் அவதரித்தவர் தன்வந்திரி. நான்கு கைகளுடன் அவதரித்த இவர் கைகளில் சீந்தில்கொடி, அட்டைப்பூச்சி, அமிர்த கலசம், கதாயுதம் தரித்திருந்தார். இவர் மருத்துவர்களின் தேவதை ஆனார். இவரது கையிலிருந்த அமிர்த கலயத்தில் இருந்து துளசி தோன்றியது. தன்வந்திரியின் கையிலிருந்த அமிர்த கலயத்தைப் பெறுவதில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் பலத்த போட்டி ஏற்பட்டது. அமிர்தத்தை அசுரர்கள் பருகினால் நீண்ட ஆயுள் பெற்று தேவர்களை தொடர்ந்து கொடுமைப்படுத்துவார்கள் என்பதை உணர்ந்து, அதை அவர்களுக்கு கிடைக்க விடாமல் செய்ய மோகினி அவதாரம் எடுத்தார் திருமால்.
அவரது அழகில் அசுரர்கள் மயங்கினர். அப்போது அமிர்தத்தை தானே பங்கிட்டுத் தருவதாக மோகினி சொன்னாள். யார் மோகினியிடம் இருந்து அமிர்தத்தை பெறுவது என்பதில் அசுரர்களுக்குள் மோதல் வெடித்தது. அதை சாதகமாக பயன்படுத்திய மோகினி, அமிர்தத்தை தேவர்களுக்கு பகிர்ந்து கொடுத்தாள். அப்போது ஒரு அசுரன், சூரிய- சந்திரர்களுக்கு இடையில் அமர்ந்து அமிர்தம் பெற்று பருகினான். அதை சூரியன் சுட்டிக்காட்ட, மோகினியானவள் அமிர்தம் வழங்கிய சட்டுவத்தால் அவனது தலையை வெட்டினாள். தலைவேறு, உடல் வேறாக பிரிந்த அந்த அசுரனே இரண்டு உருவாக மாறி ராகு, கேது என்று அழைக்கப்படுகிறார்கள்.
இப்படி பல பொருட்களும், பல நிகழ்வுகளும் நடந்தது திருமாலின் கூர்ம அவதாரத்தின் போது தான். இந்த கூர்ம அவதார நிகழ்வுகள் அனைத்தும் கம்போடியாவில் உள்ள அங்கோர்வாட் ஆலயத்தில் கருங்கல் சிற்பமாகவும், பாங்காங்கின் விமான நிலையத்தில் வண்ணமிகு சுதைச் சிற்பமாகவும் அமைக்கப்பட்டுள்ளன.
சுவேதபுரத்து அரசன் சுவேதனின் மனைவி விஷ்ணுபிரியா. அவள் திருமாலின் பக்தை. அவள் ஒரு ஏகாதசி திதியன்று விரதமிருந்து பெருமாளுக்கு பூஜை செய்து கொண்டிருந்தாள். அப்போது சுவேத மன்னன், மனைவியை காதலுடன் பார்த்தான். விரதத்தில் இருக்கும்போது மன்னன் இப்படி நடந்து கொள்கிறாரே என்று நினைத்த விஷ்ணு பிரியா, திருமாலை மனதார நினைத்துக் கொண்டாள். அப்போது தம்பதியர் இருவருக்கும் இடையே ஒரு நதி பிரவாகம் எடுத்து ஓடியது.
அதைக் கண்டு திடுக்கிட்ட மன்னன், அப்போதும் தாபம் குறையாமல், “மாதவா! நான் இந்த ஆற்றைக் கடந்து என் தேவியை அடைய, என்னைத் தாங்கிச் செல்லும் கூர்மமாகத் தாங்கள் வரவேண்டும்” என வேண்டினான். அப்படியே திருமாலும் கூர்மமாக மாறி நதியில் மிதந்து வர, பளிச்சென்று மன்னனுக்கு ஞானம் பிறந்தது. அந்த கூர்ம அவதாரத் திருவுருவிலேயே திருமாலுக்கு அங்கு ஒரு ஆலயம் எழுப்பினான். பெருமாள் மிதந்து வந்த நதி சுருங்கி, சுவேத புஷ்கரணியாக மாறியது. மேலும் சுவேதபுரம் என்னும் அத்தலம் அன்று முதல் ‘ஸ்ரீகூர்மம்’ எனப் பெயர் பெற்றது. சுவேத மன்னனால் கட்டப்பட்ட இவ்வாலயம் அதன் பின் வந்தவர்களால் திருப்பணி செய்யப்பட்டது.
சுவேத மன்னனுக்கு அருளிய திருமால், இத்தலத்தில் ஸ்ரீகூர்ம நாயகி தாயாருடன் ஸ்ரீகூர்மநாதராக அருள்புரிகிறார். இறைவனின் திருமுகத்தில் உள்ள திருநாமம் வெள்ளித் தகட்டிலும், விழிகள் தங்கத்தாலும், வால்பகுதி சாளக்ராமத்தாலும் அமையப்பெற்றிருக்கிறது. அழகிய சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட இந்த ஆலயத்தில் ஆமைகளும் வளர்க்கப்படுகிறது. கூர்மாவதாரத்திற்கு என உலகில் உள்ள ஒரே கோவில் இதுதான். சுவாமி தேசிகன் இயற்றிய தசாவதார துதியில் இந்த கூர்மமூர்த்தி, சனி தோஷம் தீர அருள்பவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
திசை மாறிய கூர்மமூர்த்தி
இத்தலம் முன்பு கூர்ம லிங்கேஸ்வரம், பஞ்சலிங்க ஆத்மேஸ்வரம் என்னும் பெயர்களால் அழைக்கப்பட்டு சைவாகம பூஜை விதிமுறைப்படி பூஜைகள் நடைபெற்றுள்ளது. ராமானுஜர் தனது திக்விஜயத்தின்போது இத்தலம் வந்தார். அங்கு திருமாலே சாளக்ராம (ஆமை) வடிவில் அருள்வதை உணர்ந்தார். உலகோருக்கு அதை அறியவைக்க வேண்டி, அந்த ஆலயத்தின் கிழக்கு வாசல் எதிரில் கொடிமரம் அமைந்திருந்த இடத்தின் அருகில் சென்று நெடுஞ்சாண் கிடையாக வணங்கி வலம் வந்தார். அவர் தெற்கு திசை நோக்கித் திரும்பியபோது, கருவறையில் வீற்றிருந்த கூர்மமூர்த்தியும் அத்திசை நோக்கித் திரும்பி நிலைகொண்டது. கொடிமரமும் மேற்கில் திரும்பி விட்டது. இதைக் கண்டு வியந்த மக்கள் அன்றிலிருந்து கூர்மமூர்த்தியை திருமாலாக எண்ணி ஆராதிக்கத் தொடங்கினர் என்று கூறப்படுகிறது.
அமைவிடம்
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் நகரில் இருந்து சுமார் நூறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஸ்ரீகாகுளத்தை அடைந்து, அங்கிருந்து நெடுஞ்சாலையில் அம்புக் குறியிடப்பட்ட பாதையில் 10 கி.மீ. தொலைவு சென்றால் ஸ்ரீகூர்மம் ஊருக்கான கிளைச்சாலை பிரியும். அதனுள் 3 கி.மீ. தொலைவு பயணித்தால் ஸ்ரீகூர்மநாதர் ஆலயத்தை அடையலாம். ஸ்ரீகாகுளத்தில் இருந்து அடிக்கடி நகரபேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்த அரிய தத்துவத்தை ஆமை (கூர்ம) அவதாரம் எடுத்ததன் மூலம், உலகுக்கு விளக்கினார் விஷ்ணு. ஆமையின் வடமொழிச் சொல்லே ‘கூர்மம்.’ ஆந்திராவில் ஸ்ரீகாக்குளம் மாவட்டம், ஸ்ரீகூர்மம் என்ற ஊரில், கூர்ம அவதாரத்துக்கான கோவில் இருக்கிறது. கருவறையில், ஆமை வடிவில் அருள்பாலிக்கிறார் பெருமாள். தசாவதாரத்தில் இரண்டாவது அவதாரம் கூர்ம அவதாரம். மகாவிஷ்ணுவின் பிற அவதாரங்கள் யாவும் தீயவர்களை அழிப்பதற்காக எடுக்கப்பட்ட அவதாரங்களாகும். ஆனால் கூர்ம அவதாரம் யாரையும் அழிக்காமல், பல அரிய பொருட்களை தேவர்களுக்கும் மக்களுக்கும் வழங்குவதற்காக எடுக்கப்பட்ட அவதாரமாகும்.
தேவலோகத்துப் பெண் ஒருத்தி, அலைமகள் கொடுத்த மலர் மாலையைத் தனது வீணையில் சுற்றிக் கொண்டு பிரம்ம லோகம் வழியாக சென்றாள். அப்போது வழியில் துர்வாச முனிவரைச் சந்தித்தாள். அவரை வணங்கியவள், தன்னிடமுள்ள மாலையை அவரிடம் கொடுத்தாள். அதைப் பெற்றுக்கொண்ட முனிவர், அந்த மாலையுடன் தேவலோகம் நோக்கிச் சென்றார்.
எதிரே தேவேந்திரன் யானை மீது அமர்ந்து வந்து கொண்டிருந்தான். அவனிடம் அந்த மலர் மாலையைக் கொடுத்தார் முனிவர். தேவேந்திரனோ அந்த மாலையை அலட்சியமாக வாங்கி, யானையின் தலையில் வைத்தான். யானையோ தன் துதிக்கையால் அந்த மாலையை எடுத்துக் கீழே போட்டு காலால் மிதித்தது. துர்வாசருக்கு கடும் ஆத்திரம். லட்சுமி தேவியின் பிரசாதத்தை அவமதித்ததால், மூன்று உலகங்களிலும் லட்சுமி கடாட்சம் அழியட்டும் என சாபமிட்டார்.
இந்திரன் பதறிப் போய் முனிவரின் காலில் விழுந்தான்; ஆனால், துர்வாசர் கண்டுகொள்ளவில்லை. லட்சுமி கடாட்சம் இல்லாததால், உலகமே வறுமையில் ஆழ்ந்தது. இதனை அறிந்த அசுரர்கள் தேவேந்திரனின் கோட்டைக்குள் புகுந்து போர் புரியலானார்கள். போரில் அசுரர்கள் வீழ்ந்தாலும், அசுர குருவான சுக்ராச்சாரியாரின் சஞ்சீவி மந்திரத்தால், அவர்கள் மீண்டும் மீண்டும் உயிர் பெற்று எழுந்தார்கள். ஆனால் தேவர்களில் இறந்தவர்களை உயிர்ப்பிக்க வழியில்லை. இதனால் தேவர்களின் எண்ணிக்கை குறைந்தது. இதனைக் கண்ட தேவேந்திரன், பிரம்மன் தயவை நாடினான். பிரம்மன், மகா விஷ்ணுவிடம் தேவேந்திரனை அழைத்துச் சென்றார்.
விஷ்ணுவோ, ‘தேவர்கள் வலிமை பெற்று, அரக்கர்களை அடக்கி ஆள வேண்டுமானால், பாற்கடலைக் கடைந்து அமிர்தம் எடுக்க வேண்டும். அதைப் பருகுவோர் சாகாநிலை பெறுவர்; ஆனால், அதைப் பெறுவது சாதாரணமானதல்ல. தேவர்கள் ஒரு பகுதியாகவும், அரசுரர்கள் ஒரு பகுதியாகவும் இருந்து கடைந்தால் மட்டுமே அமிர்தம் கிடைக்கும்’ என்றார்.
அசுரர்களுக்கும் அமிர்தம் தருவதாகக் கூறியதால் அவர்கள் இதற்கு ஒப்புக்கொண்டனர். பாற்கடலைக் கடைவதற்கு நாள் குறிக்கப்பட்டது. ஆனால் அவ்வளவு பெரிய கடலை கடைய பெரிய மத்து வேண்டுமே!. மேரு மலையை மத்தாக்கினார்கள். மத்தை இழுக்கும் கயிறாக மாற, வாசுகி என்ற பாம்பு சம்மதித்தது. அரக்கர்கள் தங்கள் வீரத்தை வெளிக்காட்டும் வகையில், தலைப் பகுதியைப் பிடித்துக் கொண்டனர். தேவர்கள் வாலைப் பிடித்துக் கொண்டு கடலைக் கடைய ஆரம்பித்தனர்; ஆனால், மலை அசையவில்லை. கடலின் அடிப்பகுதிக்குள் நன்றாகச் சிக்கிக் கொண்டது.
உடனே விஷ்ணு, ஆமையாக உருமாறி கடலுக்குள் சென்றார். மலையைத் தூக்கி, தன் முதுகில் வைத்துக் கொண்டார். அதைத் தொடர்ந்து தேவர்களும், அசுரர்களும் எவ்வித சிரமமும் இன்றி கடலைக் கடைந்தனர். ஒரு கட்டத்தில் வலி தாங்காத வாசுகி, ஆலகால விஷத்தை கக்கியது. அந்த விஷத்தால் உலக உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பதால், அந்த விஷத்தை சிவபெருமானே உண்டார். அந்த விஷம் ஈசனின் வயிற்றுக்குள் இறங்காமல் இருக்க, அவரது கழுத்தைப் பிடித்தார் பார்வதிதேவி. இதனால் விஷமானது, ஈசனின் கழுத்திலேயே நீல நிறத்தில் தங்கிப்போனது. இதனால் அவர் ‘நீலகண்டன்’ என்று பெயர் பெற்றார்.
தொடர்ந்து மீண்டும் பாற்கடல் கடையப்பட்டது. அப்போது காமதேனு என்ற பசு வெளிப்பட்டது. இது பார்வதியிடம் சேர்ந்தது. அடுத்து பொன்மயமான ஒளியுடன் உச்சைசிரவஸ் என்ற ஏழு தலை குதிரை தோன்றியது. இது பறக்கும் ஆற்றல் படைத்தது. அடுத்ததாக ஐராவதம் என்ற நான்கு தந்தங்கள் கொண்ட வெண்மை நிற யானை தோன்றியது. இது இந்திரனின் வாகனம் ஆனது. பின்னர் பஞ்ச தருக்கள் எனப்படும் அரிசந்தனம், கற்பகம், சந்தனம், பாரிஜாதம், மந்தாரம் ஆகிய மரங்கள் தோன்றின. இவற்றில் கற்பக மரத்தின் கீழ் இந்திரன் அமர்ந்தான். கேட்பதைக் கொடுக்கும் சக்தி கொண்டது கற்பகம். அடுத்து கவுஸ்தூபம் (உத்திரியம்) தோன்றியது. இது அணிபவர்களுக்கு ஆற்றலையும் வெற்றியையும் தரக்கூடியது. இதனை திருமால் அணிந்தார்.
அதற்குப்பின் ஜேஷ்டாதேவி என்னும் மூத்த தேவி தோன்றினாள். (மூத்த தேவியே மூதேவி ஆனாள்.) இவளை யாரும் ஏற்காததால் பூலோகம் சென்றாள். இவளுக்கு அடுத்து மிக அழகான அறுபது கோடி தேவலோகப் பெண்கள் (அப்சரஸ்) தோன்றினார்கள். இவர்களை தேவர்கள் ஏற்றுக் கொண்டனர். அடுத்து தோன்றியவர் வருணி. இவர் மது போன்ற போதை தரும் பானங்களின் அதிபதி ஆவார். இவருடன் அதிதேவதையான சுராதேவியும், மதியை மயக்கும் கணக்கற்ற அழகு மங்கையர்களும் தோன்றினார்கள். அவர்களை அசுரர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.
இதற்குப் பின் தோன்றியவள் தான் இளையதேவி, ஸ்ரீதேவி எனப்படும் மகாலட்சுமி. மலர் மாலையை ஏந்தியவளாய் அவதரித்த இவள், தனக்குத் தகுந்த மணாளன் மகாவிஷ்ணுவே என்பதனை அறிந்து, மகாவிஷ்ணுவிற்கு மாலை அணிவித்து திருமாலின் நெஞ்சில் அமர்ந்தாள். அடுத்து விஷக்கொடுமையை நீக்கும் மூலிகையுடன் சந்திரன் வெளிப்பட்டான். அவன் கைகளில் நீலோத்பல மலர், மோக சாஸ்திரச் சுவடிகள் இருந்தன. அடுத்துத் தோன்றியது ஸ்யமந்தகமணி. இதனைச் ‘சிந்தாமணி’ என்றும் சொல்வர். அதைச் சூரியன் ஏற்றான்.
கடைசியில் அவதரித்தவர் தன்வந்திரி. நான்கு கைகளுடன் அவதரித்த இவர் கைகளில் சீந்தில்கொடி, அட்டைப்பூச்சி, அமிர்த கலசம், கதாயுதம் தரித்திருந்தார். இவர் மருத்துவர்களின் தேவதை ஆனார். இவரது கையிலிருந்த அமிர்த கலயத்தில் இருந்து துளசி தோன்றியது. தன்வந்திரியின் கையிலிருந்த அமிர்த கலயத்தைப் பெறுவதில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் பலத்த போட்டி ஏற்பட்டது. அமிர்தத்தை அசுரர்கள் பருகினால் நீண்ட ஆயுள் பெற்று தேவர்களை தொடர்ந்து கொடுமைப்படுத்துவார்கள் என்பதை உணர்ந்து, அதை அவர்களுக்கு கிடைக்க விடாமல் செய்ய மோகினி அவதாரம் எடுத்தார் திருமால்.
அவரது அழகில் அசுரர்கள் மயங்கினர். அப்போது அமிர்தத்தை தானே பங்கிட்டுத் தருவதாக மோகினி சொன்னாள். யார் மோகினியிடம் இருந்து அமிர்தத்தை பெறுவது என்பதில் அசுரர்களுக்குள் மோதல் வெடித்தது. அதை சாதகமாக பயன்படுத்திய மோகினி, அமிர்தத்தை தேவர்களுக்கு பகிர்ந்து கொடுத்தாள். அப்போது ஒரு அசுரன், சூரிய- சந்திரர்களுக்கு இடையில் அமர்ந்து அமிர்தம் பெற்று பருகினான். அதை சூரியன் சுட்டிக்காட்ட, மோகினியானவள் அமிர்தம் வழங்கிய சட்டுவத்தால் அவனது தலையை வெட்டினாள். தலைவேறு, உடல் வேறாக பிரிந்த அந்த அசுரனே இரண்டு உருவாக மாறி ராகு, கேது என்று அழைக்கப்படுகிறார்கள்.
இப்படி பல பொருட்களும், பல நிகழ்வுகளும் நடந்தது திருமாலின் கூர்ம அவதாரத்தின் போது தான். இந்த கூர்ம அவதார நிகழ்வுகள் அனைத்தும் கம்போடியாவில் உள்ள அங்கோர்வாட் ஆலயத்தில் கருங்கல் சிற்பமாகவும், பாங்காங்கின் விமான நிலையத்தில் வண்ணமிகு சுதைச் சிற்பமாகவும் அமைக்கப்பட்டுள்ளன.
சுவேதபுரத்து அரசன் சுவேதனின் மனைவி விஷ்ணுபிரியா. அவள் திருமாலின் பக்தை. அவள் ஒரு ஏகாதசி திதியன்று விரதமிருந்து பெருமாளுக்கு பூஜை செய்து கொண்டிருந்தாள். அப்போது சுவேத மன்னன், மனைவியை காதலுடன் பார்த்தான். விரதத்தில் இருக்கும்போது மன்னன் இப்படி நடந்து கொள்கிறாரே என்று நினைத்த விஷ்ணு பிரியா, திருமாலை மனதார நினைத்துக் கொண்டாள். அப்போது தம்பதியர் இருவருக்கும் இடையே ஒரு நதி பிரவாகம் எடுத்து ஓடியது.
அதைக் கண்டு திடுக்கிட்ட மன்னன், அப்போதும் தாபம் குறையாமல், “மாதவா! நான் இந்த ஆற்றைக் கடந்து என் தேவியை அடைய, என்னைத் தாங்கிச் செல்லும் கூர்மமாகத் தாங்கள் வரவேண்டும்” என வேண்டினான். அப்படியே திருமாலும் கூர்மமாக மாறி நதியில் மிதந்து வர, பளிச்சென்று மன்னனுக்கு ஞானம் பிறந்தது. அந்த கூர்ம அவதாரத் திருவுருவிலேயே திருமாலுக்கு அங்கு ஒரு ஆலயம் எழுப்பினான். பெருமாள் மிதந்து வந்த நதி சுருங்கி, சுவேத புஷ்கரணியாக மாறியது. மேலும் சுவேதபுரம் என்னும் அத்தலம் அன்று முதல் ‘ஸ்ரீகூர்மம்’ எனப் பெயர் பெற்றது. சுவேத மன்னனால் கட்டப்பட்ட இவ்வாலயம் அதன் பின் வந்தவர்களால் திருப்பணி செய்யப்பட்டது.
சுவேத மன்னனுக்கு அருளிய திருமால், இத்தலத்தில் ஸ்ரீகூர்ம நாயகி தாயாருடன் ஸ்ரீகூர்மநாதராக அருள்புரிகிறார். இறைவனின் திருமுகத்தில் உள்ள திருநாமம் வெள்ளித் தகட்டிலும், விழிகள் தங்கத்தாலும், வால்பகுதி சாளக்ராமத்தாலும் அமையப்பெற்றிருக்கிறது. அழகிய சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட இந்த ஆலயத்தில் ஆமைகளும் வளர்க்கப்படுகிறது. கூர்மாவதாரத்திற்கு என உலகில் உள்ள ஒரே கோவில் இதுதான். சுவாமி தேசிகன் இயற்றிய தசாவதார துதியில் இந்த கூர்மமூர்த்தி, சனி தோஷம் தீர அருள்பவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
திசை மாறிய கூர்மமூர்த்தி
இத்தலம் முன்பு கூர்ம லிங்கேஸ்வரம், பஞ்சலிங்க ஆத்மேஸ்வரம் என்னும் பெயர்களால் அழைக்கப்பட்டு சைவாகம பூஜை விதிமுறைப்படி பூஜைகள் நடைபெற்றுள்ளது. ராமானுஜர் தனது திக்விஜயத்தின்போது இத்தலம் வந்தார். அங்கு திருமாலே சாளக்ராம (ஆமை) வடிவில் அருள்வதை உணர்ந்தார். உலகோருக்கு அதை அறியவைக்க வேண்டி, அந்த ஆலயத்தின் கிழக்கு வாசல் எதிரில் கொடிமரம் அமைந்திருந்த இடத்தின் அருகில் சென்று நெடுஞ்சாண் கிடையாக வணங்கி வலம் வந்தார். அவர் தெற்கு திசை நோக்கித் திரும்பியபோது, கருவறையில் வீற்றிருந்த கூர்மமூர்த்தியும் அத்திசை நோக்கித் திரும்பி நிலைகொண்டது. கொடிமரமும் மேற்கில் திரும்பி விட்டது. இதைக் கண்டு வியந்த மக்கள் அன்றிலிருந்து கூர்மமூர்த்தியை திருமாலாக எண்ணி ஆராதிக்கத் தொடங்கினர் என்று கூறப்படுகிறது.
அமைவிடம்
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் நகரில் இருந்து சுமார் நூறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஸ்ரீகாகுளத்தை அடைந்து, அங்கிருந்து நெடுஞ்சாலையில் அம்புக் குறியிடப்பட்ட பாதையில் 10 கி.மீ. தொலைவு சென்றால் ஸ்ரீகூர்மம் ஊருக்கான கிளைச்சாலை பிரியும். அதனுள் 3 கி.மீ. தொலைவு பயணித்தால் ஸ்ரீகூர்மநாதர் ஆலயத்தை அடையலாம். ஸ்ரீகாகுளத்தில் இருந்து அடிக்கடி நகரபேருந்துகள் இயக்கப்படுகின்றன.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது துர்வாசபுரம் என்ற திருத்தலம். இங்கு திருப்பாதாளேஸ்வரர் என்ற ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது துர்வாசபுரம் என்ற திருத்தலம். இங்கு திருப்பாதாளேஸ்வரர் என்ற ஆலயம் அமைந்துள்ளது. துர்வாசபுரம், திருமா, துருமா என்ற பெயர்களிலும் வழங்கப்படுகின்றன. ‘துருமா’ என்பது துர்வாச முனிவரை குறிப்பது என்று சொல்லப்படுகிறது. அவர் இந்தப் பகுதியில் வாழ்ந்து தவம் புரிந்ததாகவும், இத்தல இறைவனை இங்கேயே தங்கியிருந்து இன்றளவும் வணங்கி வருவதாக கூறப்படுகிறது. துர்வாச முனிவர் தவ நிலையில் இருப்பதால் இந்த ஊரில் பேரொலி எழுப்பும் வெடிகளை யாரும் வெடிப்பதில்லை என்கிறார்கள்.
திருப்பாதாளேஸ்வரர் ஆலயம் உருவானதற்கு, ஒரு கதை கூறப்படுகிறது. அதாவது, துர்வாசபுரத்தில் இருந்து நாள்தோறும் ஒருவன் ராசசிங்கமங்கலத்துக்குப் (ராங்கியம்) பால் கொண்டு சென்றான். அவன் பால் கொண்டு செல்லும் போது, குறிப்பிட்ட இடத்திற்கு வந்ததும், கால் தடுமாறியோ பிறவாறோ கலயத்திலிருந்து பால் கொட்டிப் போவது வாடிக்கையானது. கலயமும் உடைந்து போய்விடுமாம். வழக்கமாகிப் போன இந்த நிகழ்வுக்கு, அந்த பகுதி தூய்மையில்லாமல், கரடும் முரடுமாக இருப்பது தான் காரணம் என்று நினைத்த அவன், மண்வெட்டி, கோடரியுடன் அந்தப் பகுதிக்கு வந்தான்.
பின்னர் அந்த இடத்தைச் செம்மைப்படுத்தும் பணியில் இறங்கினான். அங்கிருந்த ஒரு மேட்டுப் பகுதியை சீர்செய்தபோது, ஒரு கல்லைக் கண்டான். அந்தக் கல்லே தான் கொண்டு செல்லும் பாலைக் கவிழ்த்துவிட காரணம் என்பதை உணர்ந்த அவன், அந்தக் கல்லை அடியோடு தோண்டி எடுக்க வேண்டும் என்று நினைத்தான். ஆனால் அவன் தோண்டத் தோண்ட பள்ளம்தான் பெரிதாகிக் கொண்டே போனதே தவிர, கல்லின் அடிப் பாகத்தை காண முடியவில்லை.
பிறகு தான் அது ஒரு சிவலிங்கம் என்பதைக் கண்டான். ஈசன் தான் திருவிளையாடல் மூலமாக தினமும் தான் கொண்டு வரும் பாலை தடுத்து வாங்கிக்கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்தான். அன்று முதல் தினமும் இந்தப் பகுதி வழியாக செல்லும் போது, சிவலிங்கத்தின் மீது தான் கொண்டு வரும் பாலில் ஒரு பகுதியை அபிஷேகித்துவிட்டுச் செல்வான். இந்த தினசரி வழிபாடு காரணமாக, அந்த பால் வியாபாரி செல்வச் செழிப்பு மிகுந்தவனாக மாறினான். அவனிடம் இருந்து ஆடு மாடுகள் பெருகின. நிலத்தில் விளைச்சல் அதிகரித்தது. அவன் கோடீஸ்வரனாக மாறிப்போனான். இதையடுத்து அந்தப் பகுதியில் சுயம்புலிங்கத்திற்கு ஆலயம் எழுப்பப்பட்டது என்று தல புராணக் கதை சொல்லப்படுகிறது.
துர்வாசபுரத்தில் எழுந்தருளியிருக்கும் திருப்பாதாளேஸ்வரர், தானே தோன்றி உருவான சுயம்புலிங்க மூர்த்தியாவார். இந்த சுயம்பு லிங்கத்திற்கு இன்னும் பல கதைகள் சொல்லப்படுகிறது. இங்கே கருவறை கட்டப்பட்டபோது விநாயகர், சகஜரிநாயகி, சண்டிகேஸ்வரர், சூரியன், சந்திரன் ஆகியவைகள் நிறுவப் பெற்றிருக்க வேண்டும். திருக்கோவிலின் இரண்டாவது கால கட்ட வளர்ச்சியில் பைரவர் சன்னிதி, அம்மன் சன்னிதி, கோவில் மண்டபம் ஆகியவை கட்டப்பட்டிருக்கலாம் என்பது கல்வெட்டு மூலமாக அறியமுடிகிறது. அதன்பிறகு வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியர் சன்னிதி, பெரிய மண்டபம் போன்றவை அமைக்கப்பட்டிருக்கின்றன. கோவில் அர்த்த மண்டபத்தில் உள்ள மேல் விதானத்தில் உள்ள கற்கள் ஒவ்வொன்றிலும் இரட்டை மீன் சின்னங்கள்
செதுக்கப்பட்டுள்ளன.

பைரவர் கோவில், கோவில், பைரவர், திருப்பாதாளேஸ்வரர் கோவில்,
முன்காலத்தில் ஆலயத்தில் குடிகொண்டிருக்கும் திருப்பாதாளேஸ்வரரின் நேரடிப் பார்வை பட்டு, எதிரே இருந்த வயல்வெளிகள் கருகிப்போயினவாம். சிவபெருமான் சீற்றமாக இருப்பதை அறிந்த மக்கள், அவரது கோபத்தைத் தணிக்க அவரது மூத்த மைந்தனான விநாயகப்பெருமானை அவருக்கு முன்பாக ஆலயத்தில் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். அதன்பிறகு அதுபோன்ற சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை என்று கூறுகிறார்கள்.
பொது மக்களால் இக்கோவில், ‘பாதாளேஸ்வரர் கோவில்’ என வழங்கப்பெற்றாலும், ஆலயத்திற்குள் ‘சுந்தரேஸ்வரர் திருக்கோவில்’ என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆலயத்தில் உள்ள அம்பாளின் திருநாமம் பாகம்பிரியாள் என்பதாகும். முற்காலத்தில் இந்த அம்மனை ‘சகஜரி நாயகி’ என்று அழைத் திருக்கிறார்கள். திருமணத்தடையால் திருமணம் தள்ளிப்போகும் பெண்கள், இந்த ஆலயத்திற்கு வந்து இறைவியை வணங்கிச் சென்றால் விரைவில் திருமணம் நடைபெறும் என்கிறார்கள். அப்படி தங்களது நேர்த்திக்கடன் நிறைவேறிய பெண்கள், தம்பதி சமேதராக இந்த ஆலயத்திற்கு வந்து, அம்மனுக்கு வளையல் காணிக்கை செலுத்திச் செல்கின்றனர்.
சங்கடம் தீர்க்கும் பைரவர் :
இத்தல பைரவர் சக்தி வாய்ந்தவராக கருதப்படுகிறார். இவரிடம் குழந்தைகளுக்காக பூஜை செய்வது மிக, மிக சிறப்பு. அவர்களின் ஆரோக்கியம், கல்வி நலுனுக்காக தனியாக பூஜை செய்ய வேண்டும். இத்தல பைரவர் மிகவும் உக்கிரமானவர் என்பதால், பைரவருக்கு ஆராதனை செய்த கற்பூர ஆரத்தியை பக்தர்களுக்கு தருவதில்லை. திருச்செந்தூரில் முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்த நிகழ்வை சஷ்டி விழாவாக கொண்டாடுவது போல், இத்தல பைரவர், சம்பாசுரனை வதம் செய்த நிகழ்வு ‘சம்பா சஷ்டி விழா’ என்ற பெயரில் கார்த்திகை மாதத்தில் நடத்தப்படுகிறது.
பைரவர் சன்னிதியில் பூசணிக்காயை பாதியாக வெட்டி, உள்ளே உள்ள விதை முதலியவற்றை நீக்கி, அகல் போல் ஆக்கி, அதனுள் நல்லெண்ணையை நிரப்பி, நூல் திரிகளை வைத்து விளக்கேற்றிப் பிரார்த்தனை செய்தால், குடும்பத்தில் ஏற்படும் பில்லி- சூனியங்கள், மாந்திரீகள் எல்லாம் நீங்கிவிடுமாம். அதேபோல் கால பைரவருக்குச் சாம்பிராணி புகை போட்டு வழிபாடு செய்தால், திருடு போன பொருட்களெல்லாம் திரும்பக் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இங்கு நிலவுகிறது. ஒவ்வொரு மாத தேய்பிறை அஷ்டமி நாளில் இங்கே வந்து சிறப்பு அபிஷேகத்தில் கலந்து கொள்வது மிகச் சிறப்பாகும்.
திருப்பாதாளேஸ்வரர் ஆலயம் உருவானதற்கு, ஒரு கதை கூறப்படுகிறது. அதாவது, துர்வாசபுரத்தில் இருந்து நாள்தோறும் ஒருவன் ராசசிங்கமங்கலத்துக்குப் (ராங்கியம்) பால் கொண்டு சென்றான். அவன் பால் கொண்டு செல்லும் போது, குறிப்பிட்ட இடத்திற்கு வந்ததும், கால் தடுமாறியோ பிறவாறோ கலயத்திலிருந்து பால் கொட்டிப் போவது வாடிக்கையானது. கலயமும் உடைந்து போய்விடுமாம். வழக்கமாகிப் போன இந்த நிகழ்வுக்கு, அந்த பகுதி தூய்மையில்லாமல், கரடும் முரடுமாக இருப்பது தான் காரணம் என்று நினைத்த அவன், மண்வெட்டி, கோடரியுடன் அந்தப் பகுதிக்கு வந்தான்.
பின்னர் அந்த இடத்தைச் செம்மைப்படுத்தும் பணியில் இறங்கினான். அங்கிருந்த ஒரு மேட்டுப் பகுதியை சீர்செய்தபோது, ஒரு கல்லைக் கண்டான். அந்தக் கல்லே தான் கொண்டு செல்லும் பாலைக் கவிழ்த்துவிட காரணம் என்பதை உணர்ந்த அவன், அந்தக் கல்லை அடியோடு தோண்டி எடுக்க வேண்டும் என்று நினைத்தான். ஆனால் அவன் தோண்டத் தோண்ட பள்ளம்தான் பெரிதாகிக் கொண்டே போனதே தவிர, கல்லின் அடிப் பாகத்தை காண முடியவில்லை.
பிறகு தான் அது ஒரு சிவலிங்கம் என்பதைக் கண்டான். ஈசன் தான் திருவிளையாடல் மூலமாக தினமும் தான் கொண்டு வரும் பாலை தடுத்து வாங்கிக்கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்தான். அன்று முதல் தினமும் இந்தப் பகுதி வழியாக செல்லும் போது, சிவலிங்கத்தின் மீது தான் கொண்டு வரும் பாலில் ஒரு பகுதியை அபிஷேகித்துவிட்டுச் செல்வான். இந்த தினசரி வழிபாடு காரணமாக, அந்த பால் வியாபாரி செல்வச் செழிப்பு மிகுந்தவனாக மாறினான். அவனிடம் இருந்து ஆடு மாடுகள் பெருகின. நிலத்தில் விளைச்சல் அதிகரித்தது. அவன் கோடீஸ்வரனாக மாறிப்போனான். இதையடுத்து அந்தப் பகுதியில் சுயம்புலிங்கத்திற்கு ஆலயம் எழுப்பப்பட்டது என்று தல புராணக் கதை சொல்லப்படுகிறது.
துர்வாசபுரத்தில் எழுந்தருளியிருக்கும் திருப்பாதாளேஸ்வரர், தானே தோன்றி உருவான சுயம்புலிங்க மூர்த்தியாவார். இந்த சுயம்பு லிங்கத்திற்கு இன்னும் பல கதைகள் சொல்லப்படுகிறது. இங்கே கருவறை கட்டப்பட்டபோது விநாயகர், சகஜரிநாயகி, சண்டிகேஸ்வரர், சூரியன், சந்திரன் ஆகியவைகள் நிறுவப் பெற்றிருக்க வேண்டும். திருக்கோவிலின் இரண்டாவது கால கட்ட வளர்ச்சியில் பைரவர் சன்னிதி, அம்மன் சன்னிதி, கோவில் மண்டபம் ஆகியவை கட்டப்பட்டிருக்கலாம் என்பது கல்வெட்டு மூலமாக அறியமுடிகிறது. அதன்பிறகு வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியர் சன்னிதி, பெரிய மண்டபம் போன்றவை அமைக்கப்பட்டிருக்கின்றன. கோவில் அர்த்த மண்டபத்தில் உள்ள மேல் விதானத்தில் உள்ள கற்கள் ஒவ்வொன்றிலும் இரட்டை மீன் சின்னங்கள்
செதுக்கப்பட்டுள்ளன.

பைரவர் கோவில், கோவில், பைரவர், திருப்பாதாளேஸ்வரர் கோவில்,
முன்காலத்தில் ஆலயத்தில் குடிகொண்டிருக்கும் திருப்பாதாளேஸ்வரரின் நேரடிப் பார்வை பட்டு, எதிரே இருந்த வயல்வெளிகள் கருகிப்போயினவாம். சிவபெருமான் சீற்றமாக இருப்பதை அறிந்த மக்கள், அவரது கோபத்தைத் தணிக்க அவரது மூத்த மைந்தனான விநாயகப்பெருமானை அவருக்கு முன்பாக ஆலயத்தில் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். அதன்பிறகு அதுபோன்ற சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை என்று கூறுகிறார்கள்.
பொது மக்களால் இக்கோவில், ‘பாதாளேஸ்வரர் கோவில்’ என வழங்கப்பெற்றாலும், ஆலயத்திற்குள் ‘சுந்தரேஸ்வரர் திருக்கோவில்’ என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆலயத்தில் உள்ள அம்பாளின் திருநாமம் பாகம்பிரியாள் என்பதாகும். முற்காலத்தில் இந்த அம்மனை ‘சகஜரி நாயகி’ என்று அழைத் திருக்கிறார்கள். திருமணத்தடையால் திருமணம் தள்ளிப்போகும் பெண்கள், இந்த ஆலயத்திற்கு வந்து இறைவியை வணங்கிச் சென்றால் விரைவில் திருமணம் நடைபெறும் என்கிறார்கள். அப்படி தங்களது நேர்த்திக்கடன் நிறைவேறிய பெண்கள், தம்பதி சமேதராக இந்த ஆலயத்திற்கு வந்து, அம்மனுக்கு வளையல் காணிக்கை செலுத்திச் செல்கின்றனர்.
சங்கடம் தீர்க்கும் பைரவர் :
இத்தல பைரவர் சக்தி வாய்ந்தவராக கருதப்படுகிறார். இவரிடம் குழந்தைகளுக்காக பூஜை செய்வது மிக, மிக சிறப்பு. அவர்களின் ஆரோக்கியம், கல்வி நலுனுக்காக தனியாக பூஜை செய்ய வேண்டும். இத்தல பைரவர் மிகவும் உக்கிரமானவர் என்பதால், பைரவருக்கு ஆராதனை செய்த கற்பூர ஆரத்தியை பக்தர்களுக்கு தருவதில்லை. திருச்செந்தூரில் முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்த நிகழ்வை சஷ்டி விழாவாக கொண்டாடுவது போல், இத்தல பைரவர், சம்பாசுரனை வதம் செய்த நிகழ்வு ‘சம்பா சஷ்டி விழா’ என்ற பெயரில் கார்த்திகை மாதத்தில் நடத்தப்படுகிறது.
பைரவர் சன்னிதியில் பூசணிக்காயை பாதியாக வெட்டி, உள்ளே உள்ள விதை முதலியவற்றை நீக்கி, அகல் போல் ஆக்கி, அதனுள் நல்லெண்ணையை நிரப்பி, நூல் திரிகளை வைத்து விளக்கேற்றிப் பிரார்த்தனை செய்தால், குடும்பத்தில் ஏற்படும் பில்லி- சூனியங்கள், மாந்திரீகள் எல்லாம் நீங்கிவிடுமாம். அதேபோல் கால பைரவருக்குச் சாம்பிராணி புகை போட்டு வழிபாடு செய்தால், திருடு போன பொருட்களெல்லாம் திரும்பக் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இங்கு நிலவுகிறது. ஒவ்வொரு மாத தேய்பிறை அஷ்டமி நாளில் இங்கே வந்து சிறப்பு அபிஷேகத்தில் கலந்து கொள்வது மிகச் சிறப்பாகும்.
ஒரு தலத்தில் வழிபட்டால் வீட்டினையும் கட்டிவிடலாம்; கல்யாணத்தையும் நடத்திவிடலாம். ஆம்! அந்தப் பெருமையைத் தாங்கி நிற்பது திருவிடந்தை திருத்தலம் ஆகும்.
5-7-2018 ஆலய கும்பாபிஷேகம்
‘வீ ட்டைக கட்டிப்பார்.. கல்யாணம் பண்ணிப்பார்' என்பது சொல்வழக்கு. ஏனென்றால் இரண்டுமே பலருக்கும் சிரமமான விஷயம். ஆனால், ஒரு தலத்தில் வழிபட்டால் வீட்டினையும் கட்டிவிடலாம்; கல்யாணத்தையும் நடத்திவிடலாம். ஆம்! அந்தப் பெருமையைத் தாங்கி நிற்பது திருவிடந்தை திருத்தலம் ஆகும்.
திரேதாயுகத்தில் மேகநாதன் என்ற அசுரனின் மகனாகிய பலிச்சக்கரவர்த்தி தேவர்களை எதிர்த்துப் போரிட்டான். அந்த பாவம் நீங்க அசுரகுல கால நல்லூர் எனும் பகுதியில் தவமிருந்து பெருமாளை வழிபட்டான். மகாவிஷ்ணு ஆதிவராகர் ரூபத்தில் பலிச் சக்கரவர்த்திக்கு காட்சிகொடுத்து, அவனது பாவங்களைப் போக்கி அருளினார். பின்னர் பலியின் விருப்பத்திற்கு ஏற்ப, அங்கேயே திருக்கோவில் கொண்டார். அது முதல் அத்தலம் ‘வராகபுரி’ என்றானது.
காலவமுனிவர் என்பவர் தமது இல்லறத்தின் பயனாய், தனக்கு பிறந்த 360 பெண் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு, அவர்களை வளர்த்து ஆளாக்க வேண்டி வராகபுரிக்கு வந்தார். 360 பெண் குழந்தைகளும் அழகிலும் அறிவிலும் சிறந்து விளங்கியதுடன், வராகமூர்த்தியிடம் மிகுந்த பேரன்பும் கொண்டு திகழ்ந்தனர்.
தனது பெண்களுக்கு உரிய வயது வந்ததும், தன் பெண்களை மணம் புரிந்து ஏற்றுக்கொள்ளுமாறு வராகமூர்த்தியிடம் வேண்டினார் காலவ முனிவர். அதற்காக கடுமையான தவமும் இருந்தார். ஒருநாள் வராகப்பெருமாள், பிரம்மச்சாரியாக வந்து காலவ முனிவரின் வேண்டுதலை ஏற்று தினமும் ஒரு பெண்ணாக 360 நாட்களில் அனைவரையும் மணம் புரிந்து கொண்டார். கடைசி நாளன்று எல்லோரும் பார்த்துக்கொண்டிருக்க 360 பெண்களையும் ஒன்றாகச் சேர்த்து ‘அகிலவல்லி' எனும் ஒரே பெண்ணாக்கினார். பின்னர் அந்தப் பெண்ணை தனது இடதுபக்கத்தில் வைத்துக்கொண்டு கருவறைக்குள் சென்று ஆதிவராக மூர்த்தியாய், அதுவும் லட்சுமி வராகராய் சேவை சாதித்தருளினார்.
வராகபுரியில் ஆலயக் கருவறையில் ஆதிவராகப்பெருமாள், அகிலவல்லி தாயாரை தாங்கிய வண்ணமும், அதில் வராகப்பெருமாளின் ஒரு திருவடி பூமியில் பதித்தும், மற்றொரு திருவடியின் கீழ் ஆதிசேஷனும், அவரது மனைவியும் உள்ளனர். இங்கு கருவறையில் வராகப்பெருமாள் தமது இடது காலை மடித்து, இடது மடியில் அகிலவல்லி நாச்சியாரை தாங்கி அருள்கிறார். இறைவனின் வலது மேற்கரம் சக்கரமும், இடது மேற்கரம் சங்கும் தாங்கியிருக்கிறது. கீழ் இடது திருக்கரம் அகிலவல்லி தாயாரின் திருவடியை தூக்கிய வண்ணமும், கீழ் வலது திருக்கரம் அகிலவல்லி தாயாரை அணைத்தபடியும் உள்ளது.
ஆலய உள்சுற்றின் கோஷ்டத்தில் விநாயகரும், வைஷ்ணவியும் எழுந்தருளி உள்ளனர். பன்னிரு ஆழ்வார்கள், மணவாள மாமுனிகள், ராமானுஜர் சன்னிதிகளும் உள்ளன. இங்கு தனிக்கோவிலில் நாச்சியாராக எழுந்தருளி இருப்பவர், கோமளவல்லி தாயார் ஆவார். இவர்தான் காலவமுனிவரின் 360 பெண்களில் முதல் பெண் ஆவார். இங்கு ‘திரு’வாகிய லட்சுமியை, எம் தந்தையாகிய பெருமாள் தனது இடது பாகத்தில் தாங்கிக்கொண்டிருப்பதால் இத்தலம் ‘திருஇடவெந்தை’ என்றானது. அது மருவி தற்போது ‘திருவிடந்தை’ என்று அழைக்கப்படுகிறது.
இங்கு வராகமூர்த்தி தினமும் ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டதால், இத்தல உற்சவரின் திருநாமம் ‘நித்திய கல்யாணப்பெருமாள்’ என்றானது. இங்கு உற்சவரின் தாடையில் தாமாகவே தோன்றிய திருஷ்டிப்பொட்டு உள்ளதாம். இதனால் இத்தலத்தில் வழிபட கண் திருஷ்டி அகலும் என்கிறார்கள். அதுமட்டுமல்ல, இங்கு மூலவர் ஆதிவராகரின் காலடியில் ஆதிசேஷனும், அவரது மனைவியும் இருப்பதால், இத்தலம் சகல நாக தோஷங்களுக்கும், பிற கிரக தோஷங்களுக்கும் நிவர்த்தி அளிக்கும் திருத்தலமாகவும் உள்ளது.

இது தவிர காரியத் தடை,திருமணத் தடைகளையும் உடனே உடைத்தெறியும் திருத்தலமாகவும் இந்த ஆலயம் விளங்குகிறது. இங்கு பலி சக்கரவர்த்திக்கு வராகர், ஆதிவராகராக சேவை சாதித்தருளினார். எனவே இங்கு வழிபட்டால் வீடு, நிலம் வாங்கவும், வீடு கட்டவும் யோகம் உண்டாகும் என்கிறார்கள்.
ஆம்! வராகமூர்த்தியின் அவதார நோக்கம், இரண்யாட்சனிடம் இருந்து மறைத்து வைக்கப்பட்ட பூமியை மீட்டு வந்ததுதான். இங்கு வெளிப் பிரகாரத்தில் ஆண்டாள், ரெங்கநாதர், ரெங்கநாயகி சன்னிதிகளும் உள்ளன. சுக்ர தோஷம் அகல இத்தல ரெங்கநாதர் வழிபாடு துணைபுரியும் என்கிறார்கள்.
இங்கு ஆதிவராகமூர்த்தியின் கருவறையில் பசுநெய் சேர்த்து வழிபடுவது, பற்பல கிரக தோஷங்களை அகற்றும் என்கிறார்கள். திருவிடந்தை வராக மூர்த்திதான் திருமலை திருப்பதியிலும் அருள்கிறார் என்கிறார் திருமங்கையாழ்வார்.
திருமண பரிகாரம்
பல்லவ மன்னன் ஒருவன் இத்தலத்தின் மேன்மையை அறிந்து, தினமும் ஒரு பெண்ணுக்கு இங்கு திருமணம் செய்துவைத்தான். ஒருநாள் ஒரு பெண்ணுக்கு வெகு நேரமாகியும் மணமகன் அமையவில்லை. காத்திருந்து காத்திருந்து மனம் நொந்துபோனான். வராகரை வேண்டி அழுதான். அப்போது பேரழகு பொருந்திய மணமகன் வந்து அப்பெண்ணை மணம் செய்து கொண்டு, ‘மன்னா! எம்மைப்பார்’ என்று கூறி வராகராக திருக்காட்சிதந்து கருவறைக்குள் சென்று மறைந்தார். பின்னர் அம்மன்னன் ஆலய திருப்பணிகள் பல செய்தானாம்.
திருமணமாகாத ஆண், பெண் யாரானாலும் திருவிடந்தைக்கு சென்று, அங்குள்ள கல்யாண தீர்த்தத்தில் நீராடி, இரண்டு மாலைகளை வாங்கிச்சென்று பெருமாளுக்கு சமர்ப்பிக்க வேண்டும். பின்னர் அவற்றுள் ஒரு மாலையைப் பெற்று ஒன்பது முறை ஆலயவலம் வந்து, கொடிமரத்தில் விழுந்து வணங்க வேண்டும். பின்னர் வீட்டிற்கு அம்மாலையுடன் வந்து தினமும் பூஜை அறையில் வைத்து வழிபட்டு வரவேண்டும். இப்படிச் செய்வதால் அவர்களுக்கு வெகுவிரைவில் திருமணம் கூடிவரும்.
திருமணம் ஆன பிறகு தம்பதியர்கள் தங்கள் துணைகளுடன் மீண்டும் இங்கு வந்து பெருமாளுக்கு மாலை சமர்ப்பித்து, ஆலயத்தினை மூன்று முறை வலம்வந்து வணங்கிச் செல்லவேண்டும். வீட்டினில் வைத்து வழிபட்டு வந்த பழைய மாலையினை தங்கள் துணைகளுடன் இங்கு வரும்போது எடுத்துவந்து ஆலய தலமரமான புன்னை மரத்தினடியில் சமர்ப்பித்து சேவிக்கவேண்டும்.
சென்னை திருவான்மியூரில் இருந்து 32 கிலோமீட்டர் தூரத்தில் கிழக்குக்கடற்கரை சாலை வழியாக மாமல்லபுரம்- புதுச்சேரி செல்லும் வழியில் கோவளத்திற்கு அடுத்து திருவிடந்தை அமைந்துள்ளது.
‘வீ ட்டைக கட்டிப்பார்.. கல்யாணம் பண்ணிப்பார்' என்பது சொல்வழக்கு. ஏனென்றால் இரண்டுமே பலருக்கும் சிரமமான விஷயம். ஆனால், ஒரு தலத்தில் வழிபட்டால் வீட்டினையும் கட்டிவிடலாம்; கல்யாணத்தையும் நடத்திவிடலாம். ஆம்! அந்தப் பெருமையைத் தாங்கி நிற்பது திருவிடந்தை திருத்தலம் ஆகும்.
திரேதாயுகத்தில் மேகநாதன் என்ற அசுரனின் மகனாகிய பலிச்சக்கரவர்த்தி தேவர்களை எதிர்த்துப் போரிட்டான். அந்த பாவம் நீங்க அசுரகுல கால நல்லூர் எனும் பகுதியில் தவமிருந்து பெருமாளை வழிபட்டான். மகாவிஷ்ணு ஆதிவராகர் ரூபத்தில் பலிச் சக்கரவர்த்திக்கு காட்சிகொடுத்து, அவனது பாவங்களைப் போக்கி அருளினார். பின்னர் பலியின் விருப்பத்திற்கு ஏற்ப, அங்கேயே திருக்கோவில் கொண்டார். அது முதல் அத்தலம் ‘வராகபுரி’ என்றானது.
காலவமுனிவர் என்பவர் தமது இல்லறத்தின் பயனாய், தனக்கு பிறந்த 360 பெண் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு, அவர்களை வளர்த்து ஆளாக்க வேண்டி வராகபுரிக்கு வந்தார். 360 பெண் குழந்தைகளும் அழகிலும் அறிவிலும் சிறந்து விளங்கியதுடன், வராகமூர்த்தியிடம் மிகுந்த பேரன்பும் கொண்டு திகழ்ந்தனர்.
தனது பெண்களுக்கு உரிய வயது வந்ததும், தன் பெண்களை மணம் புரிந்து ஏற்றுக்கொள்ளுமாறு வராகமூர்த்தியிடம் வேண்டினார் காலவ முனிவர். அதற்காக கடுமையான தவமும் இருந்தார். ஒருநாள் வராகப்பெருமாள், பிரம்மச்சாரியாக வந்து காலவ முனிவரின் வேண்டுதலை ஏற்று தினமும் ஒரு பெண்ணாக 360 நாட்களில் அனைவரையும் மணம் புரிந்து கொண்டார். கடைசி நாளன்று எல்லோரும் பார்த்துக்கொண்டிருக்க 360 பெண்களையும் ஒன்றாகச் சேர்த்து ‘அகிலவல்லி' எனும் ஒரே பெண்ணாக்கினார். பின்னர் அந்தப் பெண்ணை தனது இடதுபக்கத்தில் வைத்துக்கொண்டு கருவறைக்குள் சென்று ஆதிவராக மூர்த்தியாய், அதுவும் லட்சுமி வராகராய் சேவை சாதித்தருளினார்.
வராகபுரியில் ஆலயக் கருவறையில் ஆதிவராகப்பெருமாள், அகிலவல்லி தாயாரை தாங்கிய வண்ணமும், அதில் வராகப்பெருமாளின் ஒரு திருவடி பூமியில் பதித்தும், மற்றொரு திருவடியின் கீழ் ஆதிசேஷனும், அவரது மனைவியும் உள்ளனர். இங்கு கருவறையில் வராகப்பெருமாள் தமது இடது காலை மடித்து, இடது மடியில் அகிலவல்லி நாச்சியாரை தாங்கி அருள்கிறார். இறைவனின் வலது மேற்கரம் சக்கரமும், இடது மேற்கரம் சங்கும் தாங்கியிருக்கிறது. கீழ் இடது திருக்கரம் அகிலவல்லி தாயாரின் திருவடியை தூக்கிய வண்ணமும், கீழ் வலது திருக்கரம் அகிலவல்லி தாயாரை அணைத்தபடியும் உள்ளது.
ஆலய உள்சுற்றின் கோஷ்டத்தில் விநாயகரும், வைஷ்ணவியும் எழுந்தருளி உள்ளனர். பன்னிரு ஆழ்வார்கள், மணவாள மாமுனிகள், ராமானுஜர் சன்னிதிகளும் உள்ளன. இங்கு தனிக்கோவிலில் நாச்சியாராக எழுந்தருளி இருப்பவர், கோமளவல்லி தாயார் ஆவார். இவர்தான் காலவமுனிவரின் 360 பெண்களில் முதல் பெண் ஆவார். இங்கு ‘திரு’வாகிய லட்சுமியை, எம் தந்தையாகிய பெருமாள் தனது இடது பாகத்தில் தாங்கிக்கொண்டிருப்பதால் இத்தலம் ‘திருஇடவெந்தை’ என்றானது. அது மருவி தற்போது ‘திருவிடந்தை’ என்று அழைக்கப்படுகிறது.
இங்கு வராகமூர்த்தி தினமும் ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டதால், இத்தல உற்சவரின் திருநாமம் ‘நித்திய கல்யாணப்பெருமாள்’ என்றானது. இங்கு உற்சவரின் தாடையில் தாமாகவே தோன்றிய திருஷ்டிப்பொட்டு உள்ளதாம். இதனால் இத்தலத்தில் வழிபட கண் திருஷ்டி அகலும் என்கிறார்கள். அதுமட்டுமல்ல, இங்கு மூலவர் ஆதிவராகரின் காலடியில் ஆதிசேஷனும், அவரது மனைவியும் இருப்பதால், இத்தலம் சகல நாக தோஷங்களுக்கும், பிற கிரக தோஷங்களுக்கும் நிவர்த்தி அளிக்கும் திருத்தலமாகவும் உள்ளது.

இது தவிர காரியத் தடை,திருமணத் தடைகளையும் உடனே உடைத்தெறியும் திருத்தலமாகவும் இந்த ஆலயம் விளங்குகிறது. இங்கு பலி சக்கரவர்த்திக்கு வராகர், ஆதிவராகராக சேவை சாதித்தருளினார். எனவே இங்கு வழிபட்டால் வீடு, நிலம் வாங்கவும், வீடு கட்டவும் யோகம் உண்டாகும் என்கிறார்கள்.
ஆம்! வராகமூர்த்தியின் அவதார நோக்கம், இரண்யாட்சனிடம் இருந்து மறைத்து வைக்கப்பட்ட பூமியை மீட்டு வந்ததுதான். இங்கு வெளிப் பிரகாரத்தில் ஆண்டாள், ரெங்கநாதர், ரெங்கநாயகி சன்னிதிகளும் உள்ளன. சுக்ர தோஷம் அகல இத்தல ரெங்கநாதர் வழிபாடு துணைபுரியும் என்கிறார்கள்.
இங்கு ஆதிவராகமூர்த்தியின் கருவறையில் பசுநெய் சேர்த்து வழிபடுவது, பற்பல கிரக தோஷங்களை அகற்றும் என்கிறார்கள். திருவிடந்தை வராக மூர்த்திதான் திருமலை திருப்பதியிலும் அருள்கிறார் என்கிறார் திருமங்கையாழ்வார்.
திருமண பரிகாரம்
பல்லவ மன்னன் ஒருவன் இத்தலத்தின் மேன்மையை அறிந்து, தினமும் ஒரு பெண்ணுக்கு இங்கு திருமணம் செய்துவைத்தான். ஒருநாள் ஒரு பெண்ணுக்கு வெகு நேரமாகியும் மணமகன் அமையவில்லை. காத்திருந்து காத்திருந்து மனம் நொந்துபோனான். வராகரை வேண்டி அழுதான். அப்போது பேரழகு பொருந்திய மணமகன் வந்து அப்பெண்ணை மணம் செய்து கொண்டு, ‘மன்னா! எம்மைப்பார்’ என்று கூறி வராகராக திருக்காட்சிதந்து கருவறைக்குள் சென்று மறைந்தார். பின்னர் அம்மன்னன் ஆலய திருப்பணிகள் பல செய்தானாம்.
திருமணமாகாத ஆண், பெண் யாரானாலும் திருவிடந்தைக்கு சென்று, அங்குள்ள கல்யாண தீர்த்தத்தில் நீராடி, இரண்டு மாலைகளை வாங்கிச்சென்று பெருமாளுக்கு சமர்ப்பிக்க வேண்டும். பின்னர் அவற்றுள் ஒரு மாலையைப் பெற்று ஒன்பது முறை ஆலயவலம் வந்து, கொடிமரத்தில் விழுந்து வணங்க வேண்டும். பின்னர் வீட்டிற்கு அம்மாலையுடன் வந்து தினமும் பூஜை அறையில் வைத்து வழிபட்டு வரவேண்டும். இப்படிச் செய்வதால் அவர்களுக்கு வெகுவிரைவில் திருமணம் கூடிவரும்.
திருமணம் ஆன பிறகு தம்பதியர்கள் தங்கள் துணைகளுடன் மீண்டும் இங்கு வந்து பெருமாளுக்கு மாலை சமர்ப்பித்து, ஆலயத்தினை மூன்று முறை வலம்வந்து வணங்கிச் செல்லவேண்டும். வீட்டினில் வைத்து வழிபட்டு வந்த பழைய மாலையினை தங்கள் துணைகளுடன் இங்கு வரும்போது எடுத்துவந்து ஆலய தலமரமான புன்னை மரத்தினடியில் சமர்ப்பித்து சேவிக்கவேண்டும்.
சென்னை திருவான்மியூரில் இருந்து 32 கிலோமீட்டர் தூரத்தில் கிழக்குக்கடற்கரை சாலை வழியாக மாமல்லபுரம்- புதுச்சேரி செல்லும் வழியில் கோவளத்திற்கு அடுத்து திருவிடந்தை அமைந்துள்ளது.
கண் மற்றும் தோல் தொடர்பான நோய்களை தீர்க்கும் ஆலயமாக, கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டத்திலுள்ள ஆதித்யபுரம் சூரியன் கோவில் திகழ்கிறது.
கண் மற்றும் தோல் தொடர்பான நோய்களை தீர்க்கும் ஆலயமாக, கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டத்திலுள்ள ஆதித்யபுரம் சூரியன் கோவில் திகழ்கிறது.
சில நூற்றாண்டுகளுக்கு முன்பு ‘காப்பிக்காடு மரங்காட்டு மனா’ குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், சூரியக்கடவுளை நினைத்துத் தியானம் மற்றும் பாவசங்கீர்த்தனத்தைத் தொடர்ந்து செய்து வந்தார். அதன்பலனாக ஒருநாள், அவருக்குக் காட்சியளித்த சூரியக்கடவுள், நல்லாசி களையும், நன்மைப் பேற்றையும் வழங்கினார். அதனைத் தொடர்ந்து அவர், அங்கு சூரிய தேவன் சிலையை நிறுவிச் சூரியக்கடவுளுக்காகத் தனிக்கோவில் ஒன்றை அமைத்தார்.
பின்னர் அவர், அக்கோவிலுக்கான வழிபாட்டு நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை உருவாக் கியதுடன், அவருக்குப் பின்னால், அவரது குடும்பத்தைச் சேர்ந்த மரபு வழியினர், மேற்காணும் வழிமுறை களைப் பின்பற்றிக் கோவிலை நிர்வகித்துச் சிறப்பாகப் பராமரித்து வரவேண்டும் என்றும் அறிவுறுத்தி இருந்தார். அதன்படி இக்கோவில் காப்பிக்காடு மரங்காட்டு மனா குடும்பத்தினரது மரபு வழியினரால் நிர்வகிக்கப்பட்டு வருவதாக கோவில் வரலாறு சொல்கிறது.
கோவில் அமைப்பு
கேரளாவில் சூரியக் கடவுளுக்கென்று அமைந்த ஒரே கோவில் இதுவாகும். இக்கோவிலில் சூரிய தேவன், நான்கு கரங்களுடன் பத்மாசன நிலையில் மேற்கு நோக்கிப் பார்த்தவாறு அமர்ந்திருக்கிறார். அவரது மேல் இரு கரங்களில் வலது கரத்தில் சக்கரம், இடது கரத்தில் சங்கு உள்ளன. கீழேயுள்ள இரண்டு கரங்களும் தபோ முத்திரையில் இருக்கின்றன. இக்கோவில் வளாகத்தில் துர்க்கை, சாஸ்தா, யட்சி ஆகியோருக்குத் தனிச் சன்னிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
இக்கோவிலில் சூரியதேவனுக்கு உதயபூஜை, எண்ணெய் அபிஷேகம் போன்றவை செய்யப்படுகின்றன. அதே போல் ஆலய வளாகத்தில் துர்க்காதேவி பூஜை, நவக்கிரக பூஜை போன்றவை செய்யப்பட்டு வருகின்றன. கருவறையில் இருக்கு மூலவரான சூரியதேவன் சிலைக்கு எண்ணெய் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டாலும், அடுத்து நீர் கொண்டும் அபிஷேகம் செய்கிறார்கள். அப்படி நீர் கொண்டு அபிஷேகத்த பின்னர், அந்த சிலையில் எண்ணெய் படிந்ததற்கான சுவடே இருக்காது என்பது இந்த ஆலயத்தின் சிறப்பை எடுத்துரைப்பதாக இருக்கிறது.
இத்தல இறைவனான சூரியதேவனுக்கு அடை நைவேத்தியம், ரக்தசந்தன சமர்ப்பணம் செய்து வழிபடுபவர்களுக்குக் கண் மற்றும் தோல் தொடர்பான நோய்கள் நீங்கிவிடும் என்கின்றனர். இதே போல் நவக்கிரக பாதிப்பு இருப்பவர்கள், இங்கு நவக்கிரக பூஜை செய்து சூரியதேவனையும், துர்க்கையையும் வழிபட்டு நற்பலன்களைப் பெறமுடியும்.

விழா நாட்கள்
இக்கோவிலில் மலையாள நாட்காட்டியின்படி மேடம் (சித்திரை) மாதம் மற்றும் விருச்சிகம் (கார்த்திகை) மாதம் வரும் கடைசி ஞாயிற்றுக்கிழமை நாட்கள் சிறப்பு விழா நாட்களாகக் கொண்டாடப்படுகின்றன. இவ்விழாவில் காப்பிக்காடு மரங்காட்டு மனா மரபு வழியினர் ஒருவர், ரக்தசந்தனக் காவடி எடுத்து வந்து சூரியதேவனுக்கு அபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கத்தில் உள்ளது. இவ்விழா நாட்களில், இக்கோவிலுக்கு வந்து சூரியதேவனை வழிபட்டுச் செல்பவர்களுக்கு ஜோதிடத்தின் அடிப்படையில் பல்வேறு சிறப்புகள் வந்தடையும் என்கின்றனர்.
இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கம் வட்டத்தில் உள்ளது கடுந்துருத்தி என்ற ஊர். இங்கிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் இந்த சூரியபகவான் ஆலயம் இருக்கிறது. இக்கோவில் அமைந்திருக்கும் பகுதியை ஆதித்யபுரம் என்று சொல்கின்றனர். இந்த ஆலயத்திற்குச் செல்ல எட்டுமானூர் மற்றும் வைக்கம் நகரங்களில் இருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன.
சில நூற்றாண்டுகளுக்கு முன்பு ‘காப்பிக்காடு மரங்காட்டு மனா’ குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், சூரியக்கடவுளை நினைத்துத் தியானம் மற்றும் பாவசங்கீர்த்தனத்தைத் தொடர்ந்து செய்து வந்தார். அதன்பலனாக ஒருநாள், அவருக்குக் காட்சியளித்த சூரியக்கடவுள், நல்லாசி களையும், நன்மைப் பேற்றையும் வழங்கினார். அதனைத் தொடர்ந்து அவர், அங்கு சூரிய தேவன் சிலையை நிறுவிச் சூரியக்கடவுளுக்காகத் தனிக்கோவில் ஒன்றை அமைத்தார்.
பின்னர் அவர், அக்கோவிலுக்கான வழிபாட்டு நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை உருவாக் கியதுடன், அவருக்குப் பின்னால், அவரது குடும்பத்தைச் சேர்ந்த மரபு வழியினர், மேற்காணும் வழிமுறை களைப் பின்பற்றிக் கோவிலை நிர்வகித்துச் சிறப்பாகப் பராமரித்து வரவேண்டும் என்றும் அறிவுறுத்தி இருந்தார். அதன்படி இக்கோவில் காப்பிக்காடு மரங்காட்டு மனா குடும்பத்தினரது மரபு வழியினரால் நிர்வகிக்கப்பட்டு வருவதாக கோவில் வரலாறு சொல்கிறது.
கோவில் அமைப்பு
கேரளாவில் சூரியக் கடவுளுக்கென்று அமைந்த ஒரே கோவில் இதுவாகும். இக்கோவிலில் சூரிய தேவன், நான்கு கரங்களுடன் பத்மாசன நிலையில் மேற்கு நோக்கிப் பார்த்தவாறு அமர்ந்திருக்கிறார். அவரது மேல் இரு கரங்களில் வலது கரத்தில் சக்கரம், இடது கரத்தில் சங்கு உள்ளன. கீழேயுள்ள இரண்டு கரங்களும் தபோ முத்திரையில் இருக்கின்றன. இக்கோவில் வளாகத்தில் துர்க்கை, சாஸ்தா, யட்சி ஆகியோருக்குத் தனிச் சன்னிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
இக்கோவிலில் சூரியதேவனுக்கு உதயபூஜை, எண்ணெய் அபிஷேகம் போன்றவை செய்யப்படுகின்றன. அதே போல் ஆலய வளாகத்தில் துர்க்காதேவி பூஜை, நவக்கிரக பூஜை போன்றவை செய்யப்பட்டு வருகின்றன. கருவறையில் இருக்கு மூலவரான சூரியதேவன் சிலைக்கு எண்ணெய் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டாலும், அடுத்து நீர் கொண்டும் அபிஷேகம் செய்கிறார்கள். அப்படி நீர் கொண்டு அபிஷேகத்த பின்னர், அந்த சிலையில் எண்ணெய் படிந்ததற்கான சுவடே இருக்காது என்பது இந்த ஆலயத்தின் சிறப்பை எடுத்துரைப்பதாக இருக்கிறது.
இத்தல இறைவனான சூரியதேவனுக்கு அடை நைவேத்தியம், ரக்தசந்தன சமர்ப்பணம் செய்து வழிபடுபவர்களுக்குக் கண் மற்றும் தோல் தொடர்பான நோய்கள் நீங்கிவிடும் என்கின்றனர். இதே போல் நவக்கிரக பாதிப்பு இருப்பவர்கள், இங்கு நவக்கிரக பூஜை செய்து சூரியதேவனையும், துர்க்கையையும் வழிபட்டு நற்பலன்களைப் பெறமுடியும்.

விழா நாட்கள்
இக்கோவிலில் மலையாள நாட்காட்டியின்படி மேடம் (சித்திரை) மாதம் மற்றும் விருச்சிகம் (கார்த்திகை) மாதம் வரும் கடைசி ஞாயிற்றுக்கிழமை நாட்கள் சிறப்பு விழா நாட்களாகக் கொண்டாடப்படுகின்றன. இவ்விழாவில் காப்பிக்காடு மரங்காட்டு மனா மரபு வழியினர் ஒருவர், ரக்தசந்தனக் காவடி எடுத்து வந்து சூரியதேவனுக்கு அபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கத்தில் உள்ளது. இவ்விழா நாட்களில், இக்கோவிலுக்கு வந்து சூரியதேவனை வழிபட்டுச் செல்பவர்களுக்கு ஜோதிடத்தின் அடிப்படையில் பல்வேறு சிறப்புகள் வந்தடையும் என்கின்றனர்.
இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கம் வட்டத்தில் உள்ளது கடுந்துருத்தி என்ற ஊர். இங்கிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் இந்த சூரியபகவான் ஆலயம் இருக்கிறது. இக்கோவில் அமைந்திருக்கும் பகுதியை ஆதித்யபுரம் என்று சொல்கின்றனர். இந்த ஆலயத்திற்குச் செல்ல எட்டுமானூர் மற்றும் வைக்கம் நகரங்களில் இருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன.
நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில் அமைந்துள்ளது, மூவலூர் மார்க்க சகாயேசுவரர் ஆலயம். இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
திரிபுர சம்ஹாரத்தில் திருமாலுக்கும் பிரம்மனுக்கும் ஏற்பட்ட சாபத்தை நீக்கிய இறைவன் வாழும் ஆலயம், மகிஷாசுரனை வதம் செய்த துர்க்கையின் தோஷம் நீக்கிய தலம் என பல்வேறு பெருமைகள் கொண்ட தலமாகத் திகழ்வது, நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில் அமைந்த, மூவலூர் மார்க்க சகாயேசுவரர் ஆலயம்.
ஆதியில் இத்தலம் புன்னை மரங்கள் நிறைந்து காணப்பட்டதால், இது புன்னாகவன ஷேத்திரம் என வழங்கப்பட்டது. இறைவன் ‘புன்னாகவனேசுவரர்’ என்று அழைக்கப்பட்டார்.
ருத்ரன், திருமால், பிரம்மா மூவருக்கும் இத்தலத்து இறைவன் வழிகாட்டி தன்னை வெளிப்படுத்தியதால், இறைவனுக்கு ‘வழிகாட்டிய வள்ளல்’ என்றும், ‘மார்க்க சகாயேசுவரர்’ என்றும் பெயர் வழங்கலானது. இதே போல் மூவரும் வழிபட்ட ஊர் இது என்பதால், ‘மூவரூர்’ என அழைக்கப்பட்டது. இதுவே மருவி தற்போது ‘மூவலூர்’ என்றாகிஇருக்கிறது.
தலபுராணம் :
வித்யுன்மாலி, தாரகாட்சன், கமலாட்சனி என்ற மூன்று அசுரர்களும் முறையே பொன், வெள்ளி, இரும்புக் கோட்டைகளைக் கட்டி, தேவர்களையும் மக்களையும் வாட்டி வதைத்து வந்தனர். தன்னிடம் சரணாகதி அடைந்த தேவர்களையும் மக்களையும் காத்திட திருவுள்ளம் கொண்டார் ஈசன். அதைத் தொடர்ந்து பிரம்மா, திருமால், தேவர்கள் உள்ளிட் டோரைக் கொண்டு தேர் பூட்டி திருவதிகை நோக்கி புறப்பட்டார்.
அப்போது திருமால், பிரம்மா மற்றும் தேவர்கள் உள்ளிட்டோர் ‘அசுரர்களை அழிக்கும் செயல் தங்கள் உதவியினாலேயே நடக்கிறது’ என்று எண்ணி கர்வம் கொண்டனர். இந்த கர்வத்தால் திருமால், பிரம்மா, தேவர்கள் அனைவருக்கும் சாபம் ஏற்பட்டது.
மனம் வருந்திய திருமால், பிரம்மா மற்றும் தேவர்கள் இறைவனிடம் சாப விமோசனம் வேண்டினர். அவரது ஆலோசனைப்படி காவிரி தென்கரையில் உள்ள புன்னாகவனேசுவரரைத் தேடி வந்தனர். இறைவனின் கருணையால் அங்கு சிவலிங்கம் வெளிப்பட்டது. அவரை வணங்கி வழிபட்டு தோஷம் நீங்கினர் என தலபுராணம் கூறுகிறது.
மற்றொரு தல புராணம் :
திரிபுரம் தகனம் ஆன பிறகு திருமாலும், பிரம்மனும், இந்திரனோடு திரிபுரம் எரித்த அம்பைத் தேடி வந்தனர். அப்போது வேடன் உருவில் வந்த மாயூரநாதர், அவர்களை எதிர்கொண்டு அழைத்தார். அவர்களைப் புன்னாக வனத்திற்கு அழைத்துச் சென்று, அங்கே வனத்தில் மறைந்திருந்த இறைவனின் லிங்கத் திருமேனியைக் காட்டி மறைந்தார். அவர்களுக்கு வழிகாட்டியதால் இறைவன் ‘வழிகாட்டிய வள்ளல்’ என்றும், ‘மார்க்க சகாயேசுவரர்’ என்றும் வழங்கப்பட்டார்.
மகிஷாசுரன் தன் தவ வலிமை யால், ‘ஆண்களால் தன் உயிருக்கு எந்த ஆபத்தும் வரக் கூடாது’ என்ற வரத்தை சிவ பெருமானிடம் கேட்டுப் பெற்றான். அவனைப் பொறுத்தவரை, பெண்கள் எல்லாரும் சக்தியற்றவர்கள் என்ற எண்ணம் இருந்தது. அந்த எண்ணத்தால் தேவர்களுக்கும், மக்களுக்கும் தீராத துயரத்தைத் தந்து வந்தான். பாதிக்கப்பட்ட அனைவரும் இறைவனிடம் முறையிட்டனர். அசுரனை வதம் செய்வது பெண் சக்தியால் மட்டுமே இயலும் என்பதால், அன்னை பார்வதியை நாடுமாறு சிவபெருமான் அறிவுறுத்தினார்.
அதன்படி தேவர்கள் அனைவரும், அன்னையிடம் சென்று முறையிட்டனர். அதற்குச் செவி மடுத்த அன்னை துர்க்கையாக வடிவம் பூண்டு, அசுரனை வதம் செய்து அழித்தாள். பிறகு தனது கோர முகம், அழகிய முகமாக மாற, மூவலூரில் தீர்த்தம் உண்டாக்கி, இறைவனை வழிபட்டு வந்தாள். அதன் பயனால், அன்னை அழகிய திருவுருவம் பெற்றாள். மீண்டும் இறைவனை மணம்புரிய தவம் இயற்றினாள். அதன்படியே இறைவனை மணந்தாள் என தலபுராணம் கூறுகிறது. இச்சம்பவம் பங்குனி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் நிகழ்ந்தது. இந்த ஐதீகம் இன்றும் இந்த ஆலயத்தில் விழாவாக நடைபெறுகிறது.

மார்க்க சகாயேசுவரர் உற்சவத் திருமேனி
ஆலய அமைப்பு :
கிழக்கு நோக்கிய நிலையில் ராஜகோபுரம் எழிலாக அமைந்துள்ளது. இருபுறமும், விநாயகர், முருகன் சன்னிதிகள் காணப்படுகின்றன. ராஜகோபுரத்தில் நுழைந்ததும், எதிரே கொடிமரம், பலிபீடம், நந்திதேவர் காட்சி தருகின்றனர். இடதுபுறம் தலமரமான புன்னை மரமும், அதனடியில் ஆதி மார்க்க சகாயேசுவரரும் காட்சியளிக்கின்றனர். ஆலயத்தின் உள்ளே வலதுபுறம் சவுந்திரநாயகி, அருகில் மங்களாம்பிகை சன்னிதிகளும், எதிரே சப்தமாதர், நவ நாகங்கள் சன்னிதியும் அமைந்துள்ளன.
நடுநாயகமாக இறைவன் மார்க்க சகாயேசுவரர் எளிய வடிவில் ஒளிவீசும் முகத்தோடு அருள் வழங்குகின்றார். பல்வேறு அற் புதங்களை நிகழ்த்திய இறைவன் வழிகாட்டும் வள்ளல், மார்க்க சகாயேசுவரர் எளிய வடிவிலும் கிழக்கு முகமாய் அருளாசி வழங்குகின்றார்.
புன்னை வனத்தில் இறைவன் தோன்றியதால் இவ்வாலயத்தின் தலமரம் புன்னை ஆகும். சந்திர புஷ்கரணி, துர்கா புஷ்கரணி, உபமன்யு முனிவர் வழிபட்ட ‘உபமன்யு கூபம்’ எனும் கிணறு, காவிரி நதியில் அமைந்துள்ள பிப்பிலர் தீர்த்தகட்டம் என தீர்த்தங்கள் நிறைந்த தலமாக மூவலூர் திகழ்கின்றது.
பங்குனி ஆயில்யத்தில் சவுந்திரநாயகி திருக்கல்யாண உற்சவம், உத்திர நட்சத்திரத்தில் பஞ்சமூர்த்திகளுக்கு தீர்த்தவாரி, தைப்பூசம், நவராத்திரி, மகா சிவராத்திரி, மாசி மகம், தீர்த்தவாரி, பிரதோஷம் உள்ளிட்ட சிவாலய விழாக்கள் சிறப்பாக நடை பெறுகின்றன.
இத்தலத்து இறைவனை, அன்னை பார்வதி, திருமால், பிரம்மா, சந்திரன் வழிபட்டுள்ளனர். மகா சிவராத்திரியின் நான்காம் காலத்தில் நவ நாகங்களும், ரத சப்தமியில் சப்தமாதர்களும் வழிபட்டுப் பேறுபெற்றனர். இது தவிர, கர்மசேனகியர் என்ற மன்னன், பிப்பிலர் என்ற உபமன்யு முனிவர் என பலரும் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர்.
இந்த ஆலயம் இதய நோய்களுக்கு சிறந்த பரிகாரத் தலமாக திகழ்கின்றது. இதய நோய் உள்ளவர்கள் திங்கட்கிழமைகளில் 11 நெய் தீபம் ஏற்றி, சுவாமிக்கு அர்ச்சனை செய்தும், பாலாபிஷேகம் செய்தும், அபிஷேக பாலை அருந்தியும் வந்தால் நோய் குணமாவதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இரண்டு அம்மன்கள் :
இவ்வாலயத்தில் சவுந்திர நாயகி யுடன், மங்களாம்பிகை என்ற அம்மனுக்கும் தெற்கு முகமாய் தனி சன்னதி அமைந்துள்ளன. அன்னை இருவரின் வடிவங்களும் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளன. அமாவாசை தோறும் சவுந்திரநாயகிக்கு சிறப்பு அபிஷேகமும், லலிதா திரிசடையும், சிறப்பு ஆராதனையும் செய்யப்படுகிறது.
கல்வெட்டுகள் :
இத்தலத்தில் 1925-ம் ஆண்டு தொல்லியல் ஆய்வறிக்கை மூலம் எட்டு கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன. இதில் விக்கிரம சோழ தேவன் (கி.பி.1120), மூன்றாம் குலோத்துங்கன் (கி.பி.1189), மூன்றாம் ராஜேந்திர சோழன் (கி.பி. 1225) காலக் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டு உள்ளன. இவற்றின் வாயிலாக நிலக்கொடை, அந்தணர்களுக்கு வழங்கப்பட்ட கொடை, பூஜைகள் செய்ய வழங்கப்பட்ட பொற்காசுகள், இறைவன்- இறைவிக்கு வழங்கிய ஆபரண கொடை என பல்வேறு செய்திகளை அறிய முடிகிறது. இறைவன் ‘மூவலூர் உடைய நாயனார்’ என்று அழைக்கப்பட்டிருக்கிறார்.
இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அமைவிடம் :
நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில் மூவலூர் அமைந்துள்ளது. மயிலாடுதுறை - கும்பகோணம் வழித்தடத்தில் மயிலாடுதுறைக்கு மேற்கே 5 கி.மீ தூரத்தில், மயிலாடுதுறை ஜங்சன் இருக்கிறது. அங்கிருந்து 1 கி.மீ. தொலைவில், மூவலூர் அமைந்துள்ளது. மூவலூர் தேரடி பேருந்து நிறுத்தத்திற்கு அருகே ஆலயம் அமைந்துள்ளது.
ஆதியில் இத்தலம் புன்னை மரங்கள் நிறைந்து காணப்பட்டதால், இது புன்னாகவன ஷேத்திரம் என வழங்கப்பட்டது. இறைவன் ‘புன்னாகவனேசுவரர்’ என்று அழைக்கப்பட்டார்.
ருத்ரன், திருமால், பிரம்மா மூவருக்கும் இத்தலத்து இறைவன் வழிகாட்டி தன்னை வெளிப்படுத்தியதால், இறைவனுக்கு ‘வழிகாட்டிய வள்ளல்’ என்றும், ‘மார்க்க சகாயேசுவரர்’ என்றும் பெயர் வழங்கலானது. இதே போல் மூவரும் வழிபட்ட ஊர் இது என்பதால், ‘மூவரூர்’ என அழைக்கப்பட்டது. இதுவே மருவி தற்போது ‘மூவலூர்’ என்றாகிஇருக்கிறது.
தலபுராணம் :
வித்யுன்மாலி, தாரகாட்சன், கமலாட்சனி என்ற மூன்று அசுரர்களும் முறையே பொன், வெள்ளி, இரும்புக் கோட்டைகளைக் கட்டி, தேவர்களையும் மக்களையும் வாட்டி வதைத்து வந்தனர். தன்னிடம் சரணாகதி அடைந்த தேவர்களையும் மக்களையும் காத்திட திருவுள்ளம் கொண்டார் ஈசன். அதைத் தொடர்ந்து பிரம்மா, திருமால், தேவர்கள் உள்ளிட் டோரைக் கொண்டு தேர் பூட்டி திருவதிகை நோக்கி புறப்பட்டார்.
அப்போது திருமால், பிரம்மா மற்றும் தேவர்கள் உள்ளிட்டோர் ‘அசுரர்களை அழிக்கும் செயல் தங்கள் உதவியினாலேயே நடக்கிறது’ என்று எண்ணி கர்வம் கொண்டனர். இந்த கர்வத்தால் திருமால், பிரம்மா, தேவர்கள் அனைவருக்கும் சாபம் ஏற்பட்டது.
மனம் வருந்திய திருமால், பிரம்மா மற்றும் தேவர்கள் இறைவனிடம் சாப விமோசனம் வேண்டினர். அவரது ஆலோசனைப்படி காவிரி தென்கரையில் உள்ள புன்னாகவனேசுவரரைத் தேடி வந்தனர். இறைவனின் கருணையால் அங்கு சிவலிங்கம் வெளிப்பட்டது. அவரை வணங்கி வழிபட்டு தோஷம் நீங்கினர் என தலபுராணம் கூறுகிறது.
மற்றொரு தல புராணம் :
திரிபுரம் தகனம் ஆன பிறகு திருமாலும், பிரம்மனும், இந்திரனோடு திரிபுரம் எரித்த அம்பைத் தேடி வந்தனர். அப்போது வேடன் உருவில் வந்த மாயூரநாதர், அவர்களை எதிர்கொண்டு அழைத்தார். அவர்களைப் புன்னாக வனத்திற்கு அழைத்துச் சென்று, அங்கே வனத்தில் மறைந்திருந்த இறைவனின் லிங்கத் திருமேனியைக் காட்டி மறைந்தார். அவர்களுக்கு வழிகாட்டியதால் இறைவன் ‘வழிகாட்டிய வள்ளல்’ என்றும், ‘மார்க்க சகாயேசுவரர்’ என்றும் வழங்கப்பட்டார்.
மகிஷாசுரன் தன் தவ வலிமை யால், ‘ஆண்களால் தன் உயிருக்கு எந்த ஆபத்தும் வரக் கூடாது’ என்ற வரத்தை சிவ பெருமானிடம் கேட்டுப் பெற்றான். அவனைப் பொறுத்தவரை, பெண்கள் எல்லாரும் சக்தியற்றவர்கள் என்ற எண்ணம் இருந்தது. அந்த எண்ணத்தால் தேவர்களுக்கும், மக்களுக்கும் தீராத துயரத்தைத் தந்து வந்தான். பாதிக்கப்பட்ட அனைவரும் இறைவனிடம் முறையிட்டனர். அசுரனை வதம் செய்வது பெண் சக்தியால் மட்டுமே இயலும் என்பதால், அன்னை பார்வதியை நாடுமாறு சிவபெருமான் அறிவுறுத்தினார்.
அதன்படி தேவர்கள் அனைவரும், அன்னையிடம் சென்று முறையிட்டனர். அதற்குச் செவி மடுத்த அன்னை துர்க்கையாக வடிவம் பூண்டு, அசுரனை வதம் செய்து அழித்தாள். பிறகு தனது கோர முகம், அழகிய முகமாக மாற, மூவலூரில் தீர்த்தம் உண்டாக்கி, இறைவனை வழிபட்டு வந்தாள். அதன் பயனால், அன்னை அழகிய திருவுருவம் பெற்றாள். மீண்டும் இறைவனை மணம்புரிய தவம் இயற்றினாள். அதன்படியே இறைவனை மணந்தாள் என தலபுராணம் கூறுகிறது. இச்சம்பவம் பங்குனி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் நிகழ்ந்தது. இந்த ஐதீகம் இன்றும் இந்த ஆலயத்தில் விழாவாக நடைபெறுகிறது.

மார்க்க சகாயேசுவரர் உற்சவத் திருமேனி
ஆலய அமைப்பு :
கிழக்கு நோக்கிய நிலையில் ராஜகோபுரம் எழிலாக அமைந்துள்ளது. இருபுறமும், விநாயகர், முருகன் சன்னிதிகள் காணப்படுகின்றன. ராஜகோபுரத்தில் நுழைந்ததும், எதிரே கொடிமரம், பலிபீடம், நந்திதேவர் காட்சி தருகின்றனர். இடதுபுறம் தலமரமான புன்னை மரமும், அதனடியில் ஆதி மார்க்க சகாயேசுவரரும் காட்சியளிக்கின்றனர். ஆலயத்தின் உள்ளே வலதுபுறம் சவுந்திரநாயகி, அருகில் மங்களாம்பிகை சன்னிதிகளும், எதிரே சப்தமாதர், நவ நாகங்கள் சன்னிதியும் அமைந்துள்ளன.
நடுநாயகமாக இறைவன் மார்க்க சகாயேசுவரர் எளிய வடிவில் ஒளிவீசும் முகத்தோடு அருள் வழங்குகின்றார். பல்வேறு அற் புதங்களை நிகழ்த்திய இறைவன் வழிகாட்டும் வள்ளல், மார்க்க சகாயேசுவரர் எளிய வடிவிலும் கிழக்கு முகமாய் அருளாசி வழங்குகின்றார்.
புன்னை வனத்தில் இறைவன் தோன்றியதால் இவ்வாலயத்தின் தலமரம் புன்னை ஆகும். சந்திர புஷ்கரணி, துர்கா புஷ்கரணி, உபமன்யு முனிவர் வழிபட்ட ‘உபமன்யு கூபம்’ எனும் கிணறு, காவிரி நதியில் அமைந்துள்ள பிப்பிலர் தீர்த்தகட்டம் என தீர்த்தங்கள் நிறைந்த தலமாக மூவலூர் திகழ்கின்றது.
பங்குனி ஆயில்யத்தில் சவுந்திரநாயகி திருக்கல்யாண உற்சவம், உத்திர நட்சத்திரத்தில் பஞ்சமூர்த்திகளுக்கு தீர்த்தவாரி, தைப்பூசம், நவராத்திரி, மகா சிவராத்திரி, மாசி மகம், தீர்த்தவாரி, பிரதோஷம் உள்ளிட்ட சிவாலய விழாக்கள் சிறப்பாக நடை பெறுகின்றன.
இத்தலத்து இறைவனை, அன்னை பார்வதி, திருமால், பிரம்மா, சந்திரன் வழிபட்டுள்ளனர். மகா சிவராத்திரியின் நான்காம் காலத்தில் நவ நாகங்களும், ரத சப்தமியில் சப்தமாதர்களும் வழிபட்டுப் பேறுபெற்றனர். இது தவிர, கர்மசேனகியர் என்ற மன்னன், பிப்பிலர் என்ற உபமன்யு முனிவர் என பலரும் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர்.
இந்த ஆலயம் இதய நோய்களுக்கு சிறந்த பரிகாரத் தலமாக திகழ்கின்றது. இதய நோய் உள்ளவர்கள் திங்கட்கிழமைகளில் 11 நெய் தீபம் ஏற்றி, சுவாமிக்கு அர்ச்சனை செய்தும், பாலாபிஷேகம் செய்தும், அபிஷேக பாலை அருந்தியும் வந்தால் நோய் குணமாவதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இரண்டு அம்மன்கள் :
இவ்வாலயத்தில் சவுந்திர நாயகி யுடன், மங்களாம்பிகை என்ற அம்மனுக்கும் தெற்கு முகமாய் தனி சன்னதி அமைந்துள்ளன. அன்னை இருவரின் வடிவங்களும் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளன. அமாவாசை தோறும் சவுந்திரநாயகிக்கு சிறப்பு அபிஷேகமும், லலிதா திரிசடையும், சிறப்பு ஆராதனையும் செய்யப்படுகிறது.
கல்வெட்டுகள் :
இத்தலத்தில் 1925-ம் ஆண்டு தொல்லியல் ஆய்வறிக்கை மூலம் எட்டு கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன. இதில் விக்கிரம சோழ தேவன் (கி.பி.1120), மூன்றாம் குலோத்துங்கன் (கி.பி.1189), மூன்றாம் ராஜேந்திர சோழன் (கி.பி. 1225) காலக் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டு உள்ளன. இவற்றின் வாயிலாக நிலக்கொடை, அந்தணர்களுக்கு வழங்கப்பட்ட கொடை, பூஜைகள் செய்ய வழங்கப்பட்ட பொற்காசுகள், இறைவன்- இறைவிக்கு வழங்கிய ஆபரண கொடை என பல்வேறு செய்திகளை அறிய முடிகிறது. இறைவன் ‘மூவலூர் உடைய நாயனார்’ என்று அழைக்கப்பட்டிருக்கிறார்.
இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அமைவிடம் :
நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில் மூவலூர் அமைந்துள்ளது. மயிலாடுதுறை - கும்பகோணம் வழித்தடத்தில் மயிலாடுதுறைக்கு மேற்கே 5 கி.மீ தூரத்தில், மயிலாடுதுறை ஜங்சன் இருக்கிறது. அங்கிருந்து 1 கி.மீ. தொலைவில், மூவலூர் அமைந்துள்ளது. மூவலூர் தேரடி பேருந்து நிறுத்தத்திற்கு அருகே ஆலயம் அமைந்துள்ளது.
கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகில் உள்ளது அள்ளுர் தீப்பாஞ்ச நாச்சியார் திருக்கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
1-7-2018 ஆலய கும்பாபிஷேகம்
இறைவனுக்கு அடுத்ததாக நாம் மிகவும் போற்றுவது நமது குடும்பத்தில் உயிர்நீத்த முன்னோர்களைத் தான். அதிலும் வீரமரணமுற்ற அல்லது தியாக மரணமுற்ற நம் முன்னோர்களை தெய்வமாக வழிபடுவது தொன்றுதொட்டு நாம் கடைப்பிடித்துவரும் மரபுகளில் ஒன்று. இவர்களின் நினைவேந்தலில் இருந்தே பெரும்பாலான சிறுதெய்வங்களின் வழிபாடு தோன்றியதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பொதுவாக மரணம் இரு வகையானது. ஒன்று இயற்கையாக வருவது, அது வரும் வரை காத்திருக்க விரும்பாத நம் முன்னோர்களில் சிலர் வடக்கிருந்து உயிர் நீத்தல், வாளைச் செங்குத்தாகத் தரையில் நிறுத்தி அதன்மேல் பாய்ந்து உயிர்விடல், கழுவில் தானே அமர்ந்து உயிர் நீத்தல், உயர்ந்த இடங்களில் அல்லது கோபுர உச்சிகளில் ஏறிக் கீழே விழுந்து உயிர்நீத்தல் மற்றும் நஞ்சு அருந்தி உயிர்நீத்தல் போன்ற பலவழிகளில் தன்னுயிரை மாய்த்துக் கொண்டதாகக் கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளது.
மற்றொரு வகையான மரணம் போரிட்டு மடிவது அல்லது துணிந்து உயிர்தியாகம் செய்வது, அதாவது தன்னைத்தானே பலியிட்டுக் கொள்வது. இதில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் தங்களது இன்னுயிரை நீத்து மக்கள் மனதில் நீங்காத இடம்பெற்றனர். மன்னர்கள் மரணமுற்றவுடன் அவரது பட்டத்தரசிகள் உடன்கட்டை ஏறியதும், சில பெண்கள் தீக்கு தன்னுயிரை தாரை வார்த்து மாய்ந்ததும் இவ்வகை தியாக மரணங்களாகும்.
முற்காலத்தில் ஊர் நலத்தின் பொருட்டும், போரின்போதும், காவல் பணியின் போதும், நீர்நிலைகளை பாதுகாக்கும் போதும் தன்னுயிரை தியாகம் செய்தவர்களின் வீரத்தை மெச்சி, அவர்கள் மரணமடைந்த இடத்தில் நடுகல் எடுக்கப்பட்டது. அவர் களது மனைவியும் சந்ததியினரும் மன்னர்களாலும், மக்களாலும் ஆதரிக்கப்பட்டனர்.
அதேபோல் ஆணுக்கு நிகராக மரணத்தை விருப்பத்துடன் ஏற்றுக்கொண்ட பெண்களின் தியாகத்தைப் போற்றும் விதமாக ‘சதிக்கல்’ எனப்படும் நினைவுக்கல் நட்டு அல்லது சிலை வைத்து மரியாதை செய்யப்பட்டது. அத்துடன் அப்பெண்ணின் வம்சத்தார் வழிபாடும் செய்தனர். உயிர்நீத்தவர்களுக்கு மாலையிட்ட அம்மன், பாவாடைக்காரி, பூவாடைக்காரி, வேப்பில்லைக்காரி என்றும், தீப்புகுந்து உயிர் நீத்த பெண்ணுக்கு ‘தீப்பாஞ்சாயி’ என்ற பெயரும் இட்டு வழிபட்டனர்.
இந்த தீப்பாஞ்சாயி அம்மனே, சில ஊர்களில் ‘தீப்பாய்ந்த நாச்சியார்’ என்று அழைக்கப்படுகிறார். சிலர் இவரை ‘திரவுபதி’ என்றும் குறிப்பிடுவதுண்டு. சங்ககாலத்திலிருந்து இன்றுவரை இவ்வகையான வழிபாடு நாடு முழுவதும் உள்ள மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இவ்வழிபாடு ஏறக்குறைய பெரும்பாலான சமூகத்தவர்களிடம் காணப்படுகிறது.
தீப்பாய்ந்த பெண்ணின் தியாகத்தை போற்றி தீமிதிப்பது, அவள் தன் கணவன் அல்லது தனக்கு பாதுகாப்புக் கொடுத்தவர்களை பிரிய மனமின்றி வானுலகம் சென்று மங்களம் அடைந்தாள் என்பதை உணர்த்தும் விதமாக அவளை வழிபட வரும் பக்தர்களுக்கு மஞ்சளை பிரசாதமாக வழங்குவது போன்ற சடங்குகள் சதியை நினைவூட்டும் ஒரு வழக்கமாக இன்றளவும் மக்களால் பின்பற்றப்பட்டு வருவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு அமைக்கப்பட்ட ஆலயங்களில், இருவேறுபட்ட வழிபாட்டு முறைகள் நடைமுறையில் இருக்கின்றன. முதலாவது தியாகப் பெண்ணை, முழுக்க முழுக்க அம்மனின் அவதாரமாக கருதி அம்மன் கோவில் முறைப்படி பூஜைகள் செய்வார்கள். இரண்டாவதாக அக்னிபிரவேசம் செய்த சீதையுடன் ஒப்பிட்டு வைணவ சம்பிரதாயப்படியும் பூஜை புனஸ்காரங்கள் நடத்தப்படுகின்றன.
இத்தகைய தீபாஞ்சாயி அம்மன் ஆலயங்களில் ஒன்றே, கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகிலுள்ள அள்ளுர் தீப்பாஞ்ச நாச்சியார் திருக்கோவில்.
வெள்ளாற்றின் கரையில் அமைந்துள்ள சேத்தியாதோப்பு முற்காலத்தில் அடர்ந்த கானகமாகவும், படைப்பிரிவு அமைவிடமாகவும் இருந்துள்ளது. இப்பகுதி வழியாக குதிரையில் சென்ற ஒரு வீரர், ஒரு சிறுமியை கண்டெடுத்து புகலிடம் தந்து வளர்த்து வந்தார். ஒருநாள் அவ்வீரருக்கு திடீர் மரணம் ஏற்பட்டு இறந்து போனார். அவர்மீது பேரன்பு கொண்டிருந்த அப்பெண் அதை ஏற்கமுடியாமல் ஒரு தீக்குண்டம் ஏற்படுத்தி, தன்னுயிரை மாய்த்துக்கொள்ள முயன்றாள்.
அதனைத் தடுத்தவர்களிடம் ‘நான் மக்களுக்கு காப்பாகத் திகழ்வேன்’ என்று கூறி, எடுத்த முடிவிலிருந்து பின்வாங்காது தீப்புகுந்து மறைந்தாள். அத்தெய்வப் பெண் வாக்கினை உறுதி செய்வதுபோல், அவள் உயிர் நீத்த தீக்குண்டத்தில் மங்கலப் பொருட்களான மஞ்சள், வெற்றிலை, எலுமிச்சை, ஆடை, திருத்தாலி ஆகியவை தீயில் வாடாமல் இருந்தது. இதைக்கண்டு அதிசயித்த மக்கள் அந்தப் பெண்ணை ‘தீப்பாஞ்சாயி அம்மன்’ என்று பெயரிட்டு வழிபாடு செய்யத் தொடங்கினர் என்பது செவி வழி செய்தியாக கூறப்படுகிறது.

கோவில் அமைப்பு
வீராணம் ஏரியில் இருந்து உபரிநீரை வெளியேற்றும் கால்வாய்களில் ஒன்றான பாழ் வாய்க்காலுக்கு வடக்காகவும், தேசிய நெடுஞ் சாலைக்கு தெற்காகவும், தாமரைக்குளத்தின் மேற்காகவும் அமைந்துள்ள பசுஞ்சோலை வளாகத்தில் இவ்வாலயம் கிழக்கு முகமாய் அமைந்துள்ளது. பிரதான சாலை வடக்கே அமைந்துள்ளதால் கோபுரம் அங்கு அமைக்கப்பட்டுள்ளது. நாச்சியார் சன்னிதி, உள்மண்டபம், வெளி மண்டபம் என கடந்த நாற்பது ஆண்டு களில் ஆலயம் படிப்படியாக விரிவடைந்துள்ளது.
ஆலயத்தில் நடுநாயகமாக காஞ்சி மாமுனிவரின் ஆலோசனையின்படி, மாமல்லபுரம் கணபதி ஸ்தபதி வடித்த தீப்பாய்ந்த நாச்சியார் திருவுருவம் இருக்கிறது. அன்னை வலக்கரத்தில் தாமரையுடன், வலது திருவடி முன்வந்து அருளிப்பதுபோல் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். அன்னையின் அருள் பீடத்தில் ஏழு கனலுடன் தீயும், மங்கலப்பொருட்களும் இருப்பதைக் காணலாம். ஐம்பொன்னாலான உற்சவர், மூலவருடன் கருவறையிலேயே வீற்றிருந்து அருள்கிறார்.
தாயாரை வலம் வந்து வணங்கும்போது சக்கரத்தாழ்வார் சன்னிதியில் யோக நரசிம்மரையும் சேவிக்கலாம். அருகே ஆலய தலவிருட்சமான புங்க மரத்தையும், இன்னுமொரு பிரார்த்தனை மரத்தையும் காணலாம். பிரகாரத்தின் வடக்கே ஐயப்பன் சன்னிதி அமைந்துள்ளது. இந்தச் சன்னிதியில் சுற்றுப்புறத்தில் உள்ள கிராமமக்கள் இருமுடி கட்டி சபரி யாத்திரை செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். உள் மண்டபத்தின் வடகிழக்கில் ராமர் திருவடிநிலை என்னும் ஸ்ரீபாதுகா சன்னிதி, நவகோள்களும் வணங்கும் கோலத்தில் ஐந்து ஆயுதங்களான சங்கு, சக்கரம், கதை, வாள், வில் ஆகிய படைசூழ ஆதிசேஷ ஆசனத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வமைப்பு ஸ்ரீமான் வேதாந்ததேசிகரின் பாதுகா சஹஸ்ரத்தில் சொல்லப்பட்டுள்ளபடி அமைக்கப்பட்டிருப்பது சிறப்பானதாகும். அருகில் தாயாருக்கு எதிராக இலங்கையில் தூது சென்று சீதையைக் காத்த அனுமன் சிறு உருவில் சேவை சாதிக்கிறார்.
வெளி மண்டபத்தின் சிறப்பு
ஆண்டுதோறும் கிள்ளைக்கடலுக்கு தீர்த்தவாரி காண செல்லும் ஸ்ரீமுஷ்ணம் பூவராகப்பெருமாள், மாசிமகத்தின் போது இந்த ஆலயத்தின் வெளிமண்டபத்தில் வந்து அமர்கிறார். பின்னர் அந்த நாள் முழுவதும் திருமஞ்சன சேவையை ஏற்று வழிப்பயணம் மேற்கொள்வது சிறப்பானதாகும். இம்மண்டபத்தில் ராமாயணத்தில் வரும் அக்னி சம்பந்தமான காட்சிகள் அனைத்தும் தொகுப்பாக அழகான ஓவியங்களாக தீட்டப்பட்டுள்ளன. மேலும் இந்த மண்டபத்தில் ராமன்-சீதை திருமணம், ராமர் பட்டாபிஷேகம், பரமபதநாதன், பாற்கடல்நாதன், சீதா அக்னிப் பிரவேசம் முதலான வண்ணமிகு சுதைச் சிற்பங்களும், தீபாஞ்சாயி அம்மனின் புனித வரலாற்றை விளக்குவதாக உள்ளன. ஆலயத்தின் கிழக்கே அமைந்துள்ள தாமரைக் குளக்கரையில் அரசு மற்றும் வேம்பு மர நிழலில் தும்பிக்கை ஆழ்வார் என்னும் விநாயகர் சன்னிதி இருக்கிறது. அங்கு நாகர்களும் உள்ளன. இத்திருக்குளத்தில் திருமண தம்பதி கள் பாலிகை கரைப்பது வழக்கமாக உள்ளது.
அமைவிடம்
விக்கரவாண்டி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சேத்தியாதோப்பில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் வெள்ளாற்றின் தென்கரையில் இவ்வாலயம் அமைந்துள்ளது. சென்னை, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், கும்பகோணம், ஜெயங்கொண்டம் ஆகிய ஊர்களில் இருந்து நேரடி பேருந்து வசதி உள்ளது.
இறைவனுக்கு அடுத்ததாக நாம் மிகவும் போற்றுவது நமது குடும்பத்தில் உயிர்நீத்த முன்னோர்களைத் தான். அதிலும் வீரமரணமுற்ற அல்லது தியாக மரணமுற்ற நம் முன்னோர்களை தெய்வமாக வழிபடுவது தொன்றுதொட்டு நாம் கடைப்பிடித்துவரும் மரபுகளில் ஒன்று. இவர்களின் நினைவேந்தலில் இருந்தே பெரும்பாலான சிறுதெய்வங்களின் வழிபாடு தோன்றியதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பொதுவாக மரணம் இரு வகையானது. ஒன்று இயற்கையாக வருவது, அது வரும் வரை காத்திருக்க விரும்பாத நம் முன்னோர்களில் சிலர் வடக்கிருந்து உயிர் நீத்தல், வாளைச் செங்குத்தாகத் தரையில் நிறுத்தி அதன்மேல் பாய்ந்து உயிர்விடல், கழுவில் தானே அமர்ந்து உயிர் நீத்தல், உயர்ந்த இடங்களில் அல்லது கோபுர உச்சிகளில் ஏறிக் கீழே விழுந்து உயிர்நீத்தல் மற்றும் நஞ்சு அருந்தி உயிர்நீத்தல் போன்ற பலவழிகளில் தன்னுயிரை மாய்த்துக் கொண்டதாகக் கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளது.
மற்றொரு வகையான மரணம் போரிட்டு மடிவது அல்லது துணிந்து உயிர்தியாகம் செய்வது, அதாவது தன்னைத்தானே பலியிட்டுக் கொள்வது. இதில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் தங்களது இன்னுயிரை நீத்து மக்கள் மனதில் நீங்காத இடம்பெற்றனர். மன்னர்கள் மரணமுற்றவுடன் அவரது பட்டத்தரசிகள் உடன்கட்டை ஏறியதும், சில பெண்கள் தீக்கு தன்னுயிரை தாரை வார்த்து மாய்ந்ததும் இவ்வகை தியாக மரணங்களாகும்.
முற்காலத்தில் ஊர் நலத்தின் பொருட்டும், போரின்போதும், காவல் பணியின் போதும், நீர்நிலைகளை பாதுகாக்கும் போதும் தன்னுயிரை தியாகம் செய்தவர்களின் வீரத்தை மெச்சி, அவர்கள் மரணமடைந்த இடத்தில் நடுகல் எடுக்கப்பட்டது. அவர் களது மனைவியும் சந்ததியினரும் மன்னர்களாலும், மக்களாலும் ஆதரிக்கப்பட்டனர்.
அதேபோல் ஆணுக்கு நிகராக மரணத்தை விருப்பத்துடன் ஏற்றுக்கொண்ட பெண்களின் தியாகத்தைப் போற்றும் விதமாக ‘சதிக்கல்’ எனப்படும் நினைவுக்கல் நட்டு அல்லது சிலை வைத்து மரியாதை செய்யப்பட்டது. அத்துடன் அப்பெண்ணின் வம்சத்தார் வழிபாடும் செய்தனர். உயிர்நீத்தவர்களுக்கு மாலையிட்ட அம்மன், பாவாடைக்காரி, பூவாடைக்காரி, வேப்பில்லைக்காரி என்றும், தீப்புகுந்து உயிர் நீத்த பெண்ணுக்கு ‘தீப்பாஞ்சாயி’ என்ற பெயரும் இட்டு வழிபட்டனர்.
இந்த தீப்பாஞ்சாயி அம்மனே, சில ஊர்களில் ‘தீப்பாய்ந்த நாச்சியார்’ என்று அழைக்கப்படுகிறார். சிலர் இவரை ‘திரவுபதி’ என்றும் குறிப்பிடுவதுண்டு. சங்ககாலத்திலிருந்து இன்றுவரை இவ்வகையான வழிபாடு நாடு முழுவதும் உள்ள மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இவ்வழிபாடு ஏறக்குறைய பெரும்பாலான சமூகத்தவர்களிடம் காணப்படுகிறது.
தீப்பாய்ந்த பெண்ணின் தியாகத்தை போற்றி தீமிதிப்பது, அவள் தன் கணவன் அல்லது தனக்கு பாதுகாப்புக் கொடுத்தவர்களை பிரிய மனமின்றி வானுலகம் சென்று மங்களம் அடைந்தாள் என்பதை உணர்த்தும் விதமாக அவளை வழிபட வரும் பக்தர்களுக்கு மஞ்சளை பிரசாதமாக வழங்குவது போன்ற சடங்குகள் சதியை நினைவூட்டும் ஒரு வழக்கமாக இன்றளவும் மக்களால் பின்பற்றப்பட்டு வருவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு அமைக்கப்பட்ட ஆலயங்களில், இருவேறுபட்ட வழிபாட்டு முறைகள் நடைமுறையில் இருக்கின்றன. முதலாவது தியாகப் பெண்ணை, முழுக்க முழுக்க அம்மனின் அவதாரமாக கருதி அம்மன் கோவில் முறைப்படி பூஜைகள் செய்வார்கள். இரண்டாவதாக அக்னிபிரவேசம் செய்த சீதையுடன் ஒப்பிட்டு வைணவ சம்பிரதாயப்படியும் பூஜை புனஸ்காரங்கள் நடத்தப்படுகின்றன.
இத்தகைய தீபாஞ்சாயி அம்மன் ஆலயங்களில் ஒன்றே, கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகிலுள்ள அள்ளுர் தீப்பாஞ்ச நாச்சியார் திருக்கோவில்.
வெள்ளாற்றின் கரையில் அமைந்துள்ள சேத்தியாதோப்பு முற்காலத்தில் அடர்ந்த கானகமாகவும், படைப்பிரிவு அமைவிடமாகவும் இருந்துள்ளது. இப்பகுதி வழியாக குதிரையில் சென்ற ஒரு வீரர், ஒரு சிறுமியை கண்டெடுத்து புகலிடம் தந்து வளர்த்து வந்தார். ஒருநாள் அவ்வீரருக்கு திடீர் மரணம் ஏற்பட்டு இறந்து போனார். அவர்மீது பேரன்பு கொண்டிருந்த அப்பெண் அதை ஏற்கமுடியாமல் ஒரு தீக்குண்டம் ஏற்படுத்தி, தன்னுயிரை மாய்த்துக்கொள்ள முயன்றாள்.
அதனைத் தடுத்தவர்களிடம் ‘நான் மக்களுக்கு காப்பாகத் திகழ்வேன்’ என்று கூறி, எடுத்த முடிவிலிருந்து பின்வாங்காது தீப்புகுந்து மறைந்தாள். அத்தெய்வப் பெண் வாக்கினை உறுதி செய்வதுபோல், அவள் உயிர் நீத்த தீக்குண்டத்தில் மங்கலப் பொருட்களான மஞ்சள், வெற்றிலை, எலுமிச்சை, ஆடை, திருத்தாலி ஆகியவை தீயில் வாடாமல் இருந்தது. இதைக்கண்டு அதிசயித்த மக்கள் அந்தப் பெண்ணை ‘தீப்பாஞ்சாயி அம்மன்’ என்று பெயரிட்டு வழிபாடு செய்யத் தொடங்கினர் என்பது செவி வழி செய்தியாக கூறப்படுகிறது.

கோவில் அமைப்பு
வீராணம் ஏரியில் இருந்து உபரிநீரை வெளியேற்றும் கால்வாய்களில் ஒன்றான பாழ் வாய்க்காலுக்கு வடக்காகவும், தேசிய நெடுஞ் சாலைக்கு தெற்காகவும், தாமரைக்குளத்தின் மேற்காகவும் அமைந்துள்ள பசுஞ்சோலை வளாகத்தில் இவ்வாலயம் கிழக்கு முகமாய் அமைந்துள்ளது. பிரதான சாலை வடக்கே அமைந்துள்ளதால் கோபுரம் அங்கு அமைக்கப்பட்டுள்ளது. நாச்சியார் சன்னிதி, உள்மண்டபம், வெளி மண்டபம் என கடந்த நாற்பது ஆண்டு களில் ஆலயம் படிப்படியாக விரிவடைந்துள்ளது.
ஆலயத்தில் நடுநாயகமாக காஞ்சி மாமுனிவரின் ஆலோசனையின்படி, மாமல்லபுரம் கணபதி ஸ்தபதி வடித்த தீப்பாய்ந்த நாச்சியார் திருவுருவம் இருக்கிறது. அன்னை வலக்கரத்தில் தாமரையுடன், வலது திருவடி முன்வந்து அருளிப்பதுபோல் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். அன்னையின் அருள் பீடத்தில் ஏழு கனலுடன் தீயும், மங்கலப்பொருட்களும் இருப்பதைக் காணலாம். ஐம்பொன்னாலான உற்சவர், மூலவருடன் கருவறையிலேயே வீற்றிருந்து அருள்கிறார்.
தாயாரை வலம் வந்து வணங்கும்போது சக்கரத்தாழ்வார் சன்னிதியில் யோக நரசிம்மரையும் சேவிக்கலாம். அருகே ஆலய தலவிருட்சமான புங்க மரத்தையும், இன்னுமொரு பிரார்த்தனை மரத்தையும் காணலாம். பிரகாரத்தின் வடக்கே ஐயப்பன் சன்னிதி அமைந்துள்ளது. இந்தச் சன்னிதியில் சுற்றுப்புறத்தில் உள்ள கிராமமக்கள் இருமுடி கட்டி சபரி யாத்திரை செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். உள் மண்டபத்தின் வடகிழக்கில் ராமர் திருவடிநிலை என்னும் ஸ்ரீபாதுகா சன்னிதி, நவகோள்களும் வணங்கும் கோலத்தில் ஐந்து ஆயுதங்களான சங்கு, சக்கரம், கதை, வாள், வில் ஆகிய படைசூழ ஆதிசேஷ ஆசனத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வமைப்பு ஸ்ரீமான் வேதாந்ததேசிகரின் பாதுகா சஹஸ்ரத்தில் சொல்லப்பட்டுள்ளபடி அமைக்கப்பட்டிருப்பது சிறப்பானதாகும். அருகில் தாயாருக்கு எதிராக இலங்கையில் தூது சென்று சீதையைக் காத்த அனுமன் சிறு உருவில் சேவை சாதிக்கிறார்.
வெளி மண்டபத்தின் சிறப்பு
ஆண்டுதோறும் கிள்ளைக்கடலுக்கு தீர்த்தவாரி காண செல்லும் ஸ்ரீமுஷ்ணம் பூவராகப்பெருமாள், மாசிமகத்தின் போது இந்த ஆலயத்தின் வெளிமண்டபத்தில் வந்து அமர்கிறார். பின்னர் அந்த நாள் முழுவதும் திருமஞ்சன சேவையை ஏற்று வழிப்பயணம் மேற்கொள்வது சிறப்பானதாகும். இம்மண்டபத்தில் ராமாயணத்தில் வரும் அக்னி சம்பந்தமான காட்சிகள் அனைத்தும் தொகுப்பாக அழகான ஓவியங்களாக தீட்டப்பட்டுள்ளன. மேலும் இந்த மண்டபத்தில் ராமன்-சீதை திருமணம், ராமர் பட்டாபிஷேகம், பரமபதநாதன், பாற்கடல்நாதன், சீதா அக்னிப் பிரவேசம் முதலான வண்ணமிகு சுதைச் சிற்பங்களும், தீபாஞ்சாயி அம்மனின் புனித வரலாற்றை விளக்குவதாக உள்ளன. ஆலயத்தின் கிழக்கே அமைந்துள்ள தாமரைக் குளக்கரையில் அரசு மற்றும் வேம்பு மர நிழலில் தும்பிக்கை ஆழ்வார் என்னும் விநாயகர் சன்னிதி இருக்கிறது. அங்கு நாகர்களும் உள்ளன. இத்திருக்குளத்தில் திருமண தம்பதி கள் பாலிகை கரைப்பது வழக்கமாக உள்ளது.
அமைவிடம்
விக்கரவாண்டி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சேத்தியாதோப்பில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் வெள்ளாற்றின் தென்கரையில் இவ்வாலயம் அமைந்துள்ளது. சென்னை, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், கும்பகோணம், ஜெயங்கொண்டம் ஆகிய ஊர்களில் இருந்து நேரடி பேருந்து வசதி உள்ளது.
‘திருநணா’ என்று அழைக்கப்படும் பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில், பவானியில் உள்ள சிவன் கோவில் ஆகும். இந்த ஆலயத்தில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
‘திருநணா’ என்று அழைக்கப்படும் பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில், பவானியில் உள்ள சிவன் கோவில் ஆகும். சேலத்தில் இருந்து 56 கி.மீ தொலைவிலும், ஈரோட்டில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது. இங்குள்ள இறைவன் ‘சங்கமேஸ்வரர்’, அம்பிகை ‘வேதநாயகி’ ஆவர். காவிரி, பவானி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி ஆகிய மூன்று நதிகளும் கூடும் இடமானதால் ‘கூடுதுறை’ என்றும் சொல்லப்படுகிறது. அம்மன், நதி, தலம் மூன்றிற்கும் பவானி என்றே பெயர். இத்தலம் வந்து நீராடி, இறைவனை தரிசிப்பவர்களுக்கு ‘யாதொரு தீங்கும் நண்ணாது (நெருங்காது)’ என்ற அடிப் படையில் இத்தலத்திற்கு ‘திருநணா’ என்ற புராணப்பெயர் குறிப்பிடப்படுகிறது.
அமுத கலசம்:
பாற்கடல் கடைந்து எடுத்த அமிர்தத்தில் தேவர்களுக்கு அளித்ததுபோக மீதம் இருந்தது. அதை தவ முனிவர்களுக்கு வழங்க வேண்டும் என்று பெருமாள் விரும்பினார். இதையடுத்து கருடனிடம் அமுத கலசத்தைக் கொடுத்து, பராசர முனிவரிடம் ஒப்படைக்கச் சொன்னார். முனிவர் அமுத கலசத்தை பாதுகாப்பாக ஓர் இடத்தில் மறைத்து வைத்தார். லவணாசூரனின் நான்கு புதல்வர்களும் கலசத்தைத் தேடி அங்கும் வந்த நிலையில், பராசர முனிவர் வேதநாயகியிடம் முறையிட்டார். அன்னையிடம் இருந்து நான்கு சக்திகள் கிளம்பி, அசுரர்களை அழித்தது. இதையடுத்து பராசர முனிவர் அமுத குடத்தை எடுத்தபோது, அதில் லிங்கம் இருந்தது. ஈசன் அங்கு ஓர் அமுத தீர்த்தம் உருவாக்க அது பவானி, காவிரியுடன் கலந்து முக்கூடலாக மாறியதாக ஐதீகம்.
ராஜ கோபுரம் :
மூன்று நதிகளும் கூடும் இடத்திற்கு வட கரையில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கோவிலின் ராஜகோபுரம் வடக்கு திசையில் 5 நிலைகளையும், 7 கலசங்களையும் உடையதாக அமைந்துள்ளது. கோவிலில் சங்கமேஸ்வரர், வேதநாயகி சன்னிதிகள் மட்டுமல்லாமல் ஆதிகேசவப் பெருமாள் மற்றும் சவுந்திரவல்லி தாயார் ஆகியோருக்கும் சன்னிதிகள் அமைந்து சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்கட்டாக உள்ளது.
குபேரன் தரிசித்த தலம் :
பூலோகத்தில் உள்ள புனிதத் தலங்களைத் தரிசிக்க விரும்பிய குபேரன், இந்தத் தலத்துக்கு வந்தபோது ஞானிகள், முனிவர்கள், கந்தர்வர்கள் அனைவரும் தவம் செய்வதைக் கண்டான். மேலும், மான், பசு, புலி, யானை, சிங்கம், நாகம், எலி உள்ளிட்ட உயிரினங்களும் சண்டையின்றி, ஒன்றாக நீர் அருந்துவதுடன், தவம் செய்பவர்களுக்குத் தொந்தரவு கொடுக்காமல் இருப்பதையும் பார்த்து ஆச்சரியமடைந்தான். அங்கு குபேரன் செய்த தவத்தில் மகிழ்ந்து, ஹரியும் சிவனும் அவனது விருப்பப்படி இந்தத் தலம் ‘தட்சிண அளகை’ என்று அழைக்கப்படும் என்றும் அருள் செய்தனர்.
சூரிய பூஜை :
நான்கு வேதங்களும் இங்கு தீர்த்தங்களாக உள்ளதால் இங்கு வேண்டிக்கொண்டால் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கை. கோபுரமே லிங்கமாக வழிபடப்படுவதால், கோபுரத்திற்கு வெளியே நந்தி அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆண்டுதோறும் மாசி மகம், ரத சப்தமிக்கு மூன்றாம் நாளன்று சூரிய ஒளி சங்கமேஸ்வரர், வேதநாயகி, சுப்ரமணியர் மீது பட்டு, சூரிய பூஜை நடப்பது சிறப்பானது.

கோவில் ராஜகோபுரம்
அம்பிகை சன்னிதி :
அம்பிகை வேதநாயகி சன்னிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அதற்கு வலப்பக்கம் சுப்பிரமணியர் சன்னிதி இருக்கிறது. சுப்பிரமணியர் சன்னிதியைக் கடந்து அமைந்துள்ள மூலவர் சங்கமேஸ்வரர் சுயம்பு லிங்கமாக அருள்கிறார். இத்தலத்தில் வீற்றுள்ள முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். அருகில் ஜுரஹரேஸ்வரர் உருவம் மூன்று கால்கள், மூன்று கைகள், மூன்று தலைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வருகை தந்தபோது அடியார்களை பிடித்த சுரநோய் நீங்க ஜுரஹரேஸ்வரரை வழிபட்டு நோய் நீங்கப் பெற்றார்கள் என செய்தி உண்டு. இங்கு 63 நாயன்மார்களின் உருவங்கள் உள்ளன.
தென் திரிவேணி சங்கமம் :
வட இந்தியாவில் உள்ள அலகாபாத்தில் கங்கையுடன் யமுனை, சரஸ்வதி நதி இரண்டும் சங்கமிக்கும் தலம் ‘திரிவேணி சங்கமம்’ எனப்படுகிறது. அங்கு சரஸ்வதி நதி கண்ணுக்குத் தெரிவதில்லை. அதுபோல், தமிழகத்தில் பவானி, காவிரி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி என மூன்று நதிகளும் கூடும் இடம் ‘தென் திரிவேணி சங்கமம்’ என்று அழைக்கப்படுகிறது. பவானி கூடுதுறை, பாவம் போக்கி புண்ணியம் அளிக்கும் சக்தி மிக்க தலமாகத் திகழ்வதால், ஆடி அமாவாசை, தை அமாவாசை நாட்களில் இங்கு நீராடி, பித்ருக்களுக்குத் தர்ப்பணம் செய்வது மிகுந்த புண்ணியம். அதனால், பித்ரு தோஷங்கள் நீங்கும் என்பதாகவும் ஐதீகம்.
தல விருட்சம்.. இலந்தை :
இக்கோவிலின் தல விருட்சம் இலந்தை மரம். வேதமே மரத்தின் வடிவெடுத்து வந்திருப்பதாக ஐதீகம். கோவிலில் உள்ள சனீஸ்வர பகவான் சக்தி வாய்ந்தவர் என்ற நம்பிக்கை உள்ளது. குறிப்பாக, இங்குள்ள உள்ள அமுதலிங்கத்தின் பாணப் பகுதியை எடுத்து இடுப்பில் வைத்துக் கொண்டு ஆவுடையாரை வலம் வர குழந்தை இல்லாதவர்களுக்கு மகப்பேறு ஏற்படும் என்பதும் மக்களின் நம்பிக்கையாகும்.
ஆங்கிலேயரின் அனுபவம் :
1804-ம் ஆண்டில் கோயம்புத்தூர் கலெக்டராக (ஈரோடு மாவட்டம் பிரிக்கப்படாத காலம்) இருந்தவர், வில்லியம் காரோ. 1804-ம் வருடம் ஜனவரி 11-ம் நாளன்று கடுமையான மழையுடன், இடியும் மின்னலுமாய் இருந்தது. அந்த இரவு நேரத்தில், கோவில் வளாகத்துக்கு வெளியே குடியிருப்பு வளாகத்தில் உள்ள அறையில் கலெக்டர் வில்லியம் காரோ உறங்கிக்கொண்டிருந்தார். அப்போது அவரது அறைக்கதவு தட்டப்படும் ஓசை கேட்டது.
உடனே வெளியே வந்த கலெக்டரை, ஒரு சிறிய பெண், ‘உடனே வெளியில் வாருங்கள்.. ஆபத்து..’ என கூறி அழைத்தாள். அதிர்ச்சியுடன் அவளைப்பின் தொடர்ந்து கோவில் வரை சென்ற கலெக்டர், அந்தப் பெண் வேதநாயகி சன்னிதிக்குள் சென்று மறைந்து விட்டதை கண்டு வியப்போடு நின்று விட்டார். அந்த நேரத்தில் அவர் குடியிருந்த பங்களா இடிந்து விழுந்தது கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தார்.
தன்னுடைய உயிரைக் காப்பாற்றியதற்காக, அம்பிகை வேதநாயகிக்கு காணிக்கையாக தந்தத்தில் கட்டில் ஒன்று செய்து அவரது கையொப்பமிட்டு ஆலயத்திற்கு அன்பளிப்பாக வழங்கினார். இந்த தந்தக் கட்டில் இன்றும் இந்த உண்மையை பறைசாற்றியபடி அங்கே இருக்கிறது.
அமுத கலசம்:
பாற்கடல் கடைந்து எடுத்த அமிர்தத்தில் தேவர்களுக்கு அளித்ததுபோக மீதம் இருந்தது. அதை தவ முனிவர்களுக்கு வழங்க வேண்டும் என்று பெருமாள் விரும்பினார். இதையடுத்து கருடனிடம் அமுத கலசத்தைக் கொடுத்து, பராசர முனிவரிடம் ஒப்படைக்கச் சொன்னார். முனிவர் அமுத கலசத்தை பாதுகாப்பாக ஓர் இடத்தில் மறைத்து வைத்தார். லவணாசூரனின் நான்கு புதல்வர்களும் கலசத்தைத் தேடி அங்கும் வந்த நிலையில், பராசர முனிவர் வேதநாயகியிடம் முறையிட்டார். அன்னையிடம் இருந்து நான்கு சக்திகள் கிளம்பி, அசுரர்களை அழித்தது. இதையடுத்து பராசர முனிவர் அமுத குடத்தை எடுத்தபோது, அதில் லிங்கம் இருந்தது. ஈசன் அங்கு ஓர் அமுத தீர்த்தம் உருவாக்க அது பவானி, காவிரியுடன் கலந்து முக்கூடலாக மாறியதாக ஐதீகம்.
ராஜ கோபுரம் :
மூன்று நதிகளும் கூடும் இடத்திற்கு வட கரையில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கோவிலின் ராஜகோபுரம் வடக்கு திசையில் 5 நிலைகளையும், 7 கலசங்களையும் உடையதாக அமைந்துள்ளது. கோவிலில் சங்கமேஸ்வரர், வேதநாயகி சன்னிதிகள் மட்டுமல்லாமல் ஆதிகேசவப் பெருமாள் மற்றும் சவுந்திரவல்லி தாயார் ஆகியோருக்கும் சன்னிதிகள் அமைந்து சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்கட்டாக உள்ளது.
குபேரன் தரிசித்த தலம் :
பூலோகத்தில் உள்ள புனிதத் தலங்களைத் தரிசிக்க விரும்பிய குபேரன், இந்தத் தலத்துக்கு வந்தபோது ஞானிகள், முனிவர்கள், கந்தர்வர்கள் அனைவரும் தவம் செய்வதைக் கண்டான். மேலும், மான், பசு, புலி, யானை, சிங்கம், நாகம், எலி உள்ளிட்ட உயிரினங்களும் சண்டையின்றி, ஒன்றாக நீர் அருந்துவதுடன், தவம் செய்பவர்களுக்குத் தொந்தரவு கொடுக்காமல் இருப்பதையும் பார்த்து ஆச்சரியமடைந்தான். அங்கு குபேரன் செய்த தவத்தில் மகிழ்ந்து, ஹரியும் சிவனும் அவனது விருப்பப்படி இந்தத் தலம் ‘தட்சிண அளகை’ என்று அழைக்கப்படும் என்றும் அருள் செய்தனர்.
சூரிய பூஜை :
நான்கு வேதங்களும் இங்கு தீர்த்தங்களாக உள்ளதால் இங்கு வேண்டிக்கொண்டால் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கை. கோபுரமே லிங்கமாக வழிபடப்படுவதால், கோபுரத்திற்கு வெளியே நந்தி அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆண்டுதோறும் மாசி மகம், ரத சப்தமிக்கு மூன்றாம் நாளன்று சூரிய ஒளி சங்கமேஸ்வரர், வேதநாயகி, சுப்ரமணியர் மீது பட்டு, சூரிய பூஜை நடப்பது சிறப்பானது.

கோவில் ராஜகோபுரம்
அம்பிகை சன்னிதி :
அம்பிகை வேதநாயகி சன்னிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அதற்கு வலப்பக்கம் சுப்பிரமணியர் சன்னிதி இருக்கிறது. சுப்பிரமணியர் சன்னிதியைக் கடந்து அமைந்துள்ள மூலவர் சங்கமேஸ்வரர் சுயம்பு லிங்கமாக அருள்கிறார். இத்தலத்தில் வீற்றுள்ள முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். அருகில் ஜுரஹரேஸ்வரர் உருவம் மூன்று கால்கள், மூன்று கைகள், மூன்று தலைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வருகை தந்தபோது அடியார்களை பிடித்த சுரநோய் நீங்க ஜுரஹரேஸ்வரரை வழிபட்டு நோய் நீங்கப் பெற்றார்கள் என செய்தி உண்டு. இங்கு 63 நாயன்மார்களின் உருவங்கள் உள்ளன.
தென் திரிவேணி சங்கமம் :
வட இந்தியாவில் உள்ள அலகாபாத்தில் கங்கையுடன் யமுனை, சரஸ்வதி நதி இரண்டும் சங்கமிக்கும் தலம் ‘திரிவேணி சங்கமம்’ எனப்படுகிறது. அங்கு சரஸ்வதி நதி கண்ணுக்குத் தெரிவதில்லை. அதுபோல், தமிழகத்தில் பவானி, காவிரி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி என மூன்று நதிகளும் கூடும் இடம் ‘தென் திரிவேணி சங்கமம்’ என்று அழைக்கப்படுகிறது. பவானி கூடுதுறை, பாவம் போக்கி புண்ணியம் அளிக்கும் சக்தி மிக்க தலமாகத் திகழ்வதால், ஆடி அமாவாசை, தை அமாவாசை நாட்களில் இங்கு நீராடி, பித்ருக்களுக்குத் தர்ப்பணம் செய்வது மிகுந்த புண்ணியம். அதனால், பித்ரு தோஷங்கள் நீங்கும் என்பதாகவும் ஐதீகம்.
தல விருட்சம்.. இலந்தை :
இக்கோவிலின் தல விருட்சம் இலந்தை மரம். வேதமே மரத்தின் வடிவெடுத்து வந்திருப்பதாக ஐதீகம். கோவிலில் உள்ள சனீஸ்வர பகவான் சக்தி வாய்ந்தவர் என்ற நம்பிக்கை உள்ளது. குறிப்பாக, இங்குள்ள உள்ள அமுதலிங்கத்தின் பாணப் பகுதியை எடுத்து இடுப்பில் வைத்துக் கொண்டு ஆவுடையாரை வலம் வர குழந்தை இல்லாதவர்களுக்கு மகப்பேறு ஏற்படும் என்பதும் மக்களின் நம்பிக்கையாகும்.
ஆங்கிலேயரின் அனுபவம் :
1804-ம் ஆண்டில் கோயம்புத்தூர் கலெக்டராக (ஈரோடு மாவட்டம் பிரிக்கப்படாத காலம்) இருந்தவர், வில்லியம் காரோ. 1804-ம் வருடம் ஜனவரி 11-ம் நாளன்று கடுமையான மழையுடன், இடியும் மின்னலுமாய் இருந்தது. அந்த இரவு நேரத்தில், கோவில் வளாகத்துக்கு வெளியே குடியிருப்பு வளாகத்தில் உள்ள அறையில் கலெக்டர் வில்லியம் காரோ உறங்கிக்கொண்டிருந்தார். அப்போது அவரது அறைக்கதவு தட்டப்படும் ஓசை கேட்டது.
உடனே வெளியே வந்த கலெக்டரை, ஒரு சிறிய பெண், ‘உடனே வெளியில் வாருங்கள்.. ஆபத்து..’ என கூறி அழைத்தாள். அதிர்ச்சியுடன் அவளைப்பின் தொடர்ந்து கோவில் வரை சென்ற கலெக்டர், அந்தப் பெண் வேதநாயகி சன்னிதிக்குள் சென்று மறைந்து விட்டதை கண்டு வியப்போடு நின்று விட்டார். அந்த நேரத்தில் அவர் குடியிருந்த பங்களா இடிந்து விழுந்தது கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தார்.
தன்னுடைய உயிரைக் காப்பாற்றியதற்காக, அம்பிகை வேதநாயகிக்கு காணிக்கையாக தந்தத்தில் கட்டில் ஒன்று செய்து அவரது கையொப்பமிட்டு ஆலயத்திற்கு அன்பளிப்பாக வழங்கினார். இந்த தந்தக் கட்டில் இன்றும் இந்த உண்மையை பறைசாற்றியபடி அங்கே இருக்கிறது.
கும்பகோணம் - காரைக்கால் சாலையில் திருநீலக்குடி என்ற ஊரில் கொத்துக்கோவில் என்ற இடத்தில் சந்திரமவுலீஸ்வரர் திருக்கோவில் இருக்கிறது.
கும்பகோணம் - காரைக்கால் சாலையில் திருநீலக்குடி என்ற ஊர் உள்ளது. இதன் அருகே கொத்துக்கோவில் என்ற இடம் உள்ளது. இங்கு இறங்கி, பசுமை தாலாட்டும் வயல்வெளிகளை ரசித்துக் கொண்டே ½ கி.மீ பயணம் செய்தால், மேலையூர் கிராமத்தை அடையலாம்.
இதன் புராணப் பெயர் உன்னதபுரம் என்பதாகும். இங்கு தான் சந்திரமவுலீஸ்வரர் திருக்கோவில் இருக்கிறது. மூன்றடுக்கு ராஜகோபுரம் கம்பீரமாக நிற்க, ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. உள்ளே நுழைந்ததும் விசாலமான பிரகாரம். எதிரே நந்திதேவர் தனி மண்டபத்தில் அருள்பாலிக்கிறார். இவரைத் கடந்தால் மகாமண்டபம் உள்ளது. எதிரே நந்தியும், பலி பீடமும் இருக்கிறது.
அடுத்துள்ள அர்த்த மண்டபத்தின் நுழைவுவாசலில் இடதுபுறம் விநாயகரும், வலதுபுறம் தண்டாயுதபாணியும் அருள்பாலிக்கின்றனர். உள்ளே கருவறையில் இறைவன் சந்திரமவுலீஸ்வரர் லிங்கத் திருமேனியில் அருள்பாலிக் கிறார்.
மகாமண்டபத்தின் வலதுபுறம் இறைவி ஆனந்தவல்லி நின்ற கோலத்தில் நான்கு கரங்களுடன் வீற்றிருக்கிறார். இந்த அன்னை சாந்த முகத்துடன் புன்னகை தவழ இருக்கும் அழகே அழகு. அன்னையின் வலது மேல் கரத்தில் ருத்ராட்ச மாலையும், இடது மேல் கரத்தில் பத்மமும், கீழ் வலது கரத்தில் அபய ஹஸ்த முத்திரையுடனும், கீழ் இடது கரத்தில் வரத ஹஸ்த முத்திரையுடனும் வீற்றிருந்து தன்னை நம்பி வரும் பக்தர்கள் அருள்பாலிக்கிறார்.
இறைவனின் தேவகோட்டத்தில் தெற்கே தட்சிணாமூர்த்தி வீற்றிருந்து அருள்கிறார். பிரகாரத்தின் மேற்கு திசையில் பிள்ளையார், விசாலாட்சி, விசுவ நாதர், முருகன், வள்ளி, தெய்வானை, சுந்தரேசுவரர், மீனாட்சி, நாகர், கஜலட்சுமி ஆகியோர் திருமேனிகள் உள்ளன. வடக்குப் பிரகாரத்தில் சண்டீஸ்வரரின் சன்னிதி உள்ளது. வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் தனியாக அமர்ந்து அருள்கிறார்கள். கிழக்கு பிரகாரத்தில் சனி பகவான், சூரியன், பைரவர் திருமேனிகள் உள்ளன.
இந்த ஆலயம் பற்றிய தல புராணம் எதுவும் இல்லை. ஆனால் செவி வழி தகவல்கள் உள்ளன. அது என்ன?
காஞ்சி மகாப் பெரியவரான காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகர ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், தரிசனம் செய்வதற்காக ஒவ்வொரு தலமாக சென்று கொண்டிருந்தார். அதன் ஒரு பகுதியாக உன்னதபுரம் என்ற இந்த ஊருக்கும் வந்தார். அவர் வந்தது ஓர் இரவு நேரம் என்பதால், அங்கேயே தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அன்று இரவு அவர் கனவில் இறைவன், ஆதிசங்கரர் வடிவில் தோன்றினார்.
‘சந்திரமவுலீஸ்வரராக யாம் அருளாட்சி புரிய இத்தலத்தில் ஓர் ஆலயம் எழுப்புக’ என்று கூறிவிட்டு மறைந்துவிட்டார்.
அதன்படி காஞ்சி மகாப் பெரியவர் இத்தலத்திலேயே தங்கி, ஊர்மக்கள் உதவியுடன் ஒரு கோவிலை கட்டி முடித்தார். பின், கும்பாபிஷேகமும் நடத்தி வைத்தார். இறைவனுக்கு சந்திர மவுலீஸ்வரர் என்றும், இறைவிக்கு ஆனந்த வல்லி என்றும் பெயரிட்டு வணங்க, அதுவே இறைவன், இறைவி பெயராக நிலைத்துவிட்டது.
இந்த ஆலயத்தில் இறைவனுக்கும், இறைவிக்கும், பிற தெய்வங்களுக்கும் உற்சவ மூர்த்தி கிடையாது. இறைவனை வணங்க நினைப்பவர்கள் ஆலயத்திற்கு வந்து வணங்கி அருள் பெற வேண்டும் என்பதால் உற்சவ மூர்த்தியை தவிர்த்துவிட்டதாக பக்தர்கள் கூறுகின்றனர்.
ஆலயத்தின் தலவிருட்சம் வில்வம். இங்கு இறைவி யின் சன்னிதி முன் சுமார் 8 அடி நீளமும் 3½ அடி அகலமும் கொண்ட சலவைக் கல் ஒன்றை தரையில் பதித்துள்ளனர். தரையில் விழுந்து வணங்கும் பக்தர்களுக்காக இந்த வசதி செய்யப்பட்டுள்ளதாம்.
இந்த ஆலயத்தில் துர்க்கையும் இல்லை. இங்கு அம்பாளே அனைத்தும் என எல்லோரும் உணர வேண்டும் என்பதால், துர்க்கை அம்மனை தனியாகப் பிரதிஷ்டை செய்யவில்லையாம்.
இறைவி- இறைவன் முதல் எழுத்தைச் சேர்த்தால் ‘ஆச’ என்ற வார்த்தை வரும். மகாப்பெரியவரின் ‘ஆசை’ கோவில் இது என்பதால், இறைவி இறைவனுக்கு இப்படி பெயர் சூட்டப்பட்டதாக சில பக்தர்கள் கூறுகின்றனர்.
இந்த ஊரில் இந்த ஆலயம் தவிர வரசக்தி விநாயகர், பைரவர், லட்சுமி நாராயணப் பெருமாள், ஆஞ்சநேயர், செல்லியம்மன், அய்யனார் ஆலயங்களும் இருக்கின்றன.
சந்திரமவுலீஸ்வரர் ஆலயத்தில் தினமும் இரண்டு கால பூஜை நடைபெறுகிறது. இந்தக் கோவில் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12.30 வரையிலும், மாலை 4.30 முதல் இரவு 8.30 வரையிலும் திறந்திருக்கும்.
சிவராத்திரி, பிரதோஷம், நவராத்திரி, புத்தாண்டு, சோமவாரம், ஆடி வெள்ளி, தை வெள்ளி, கார்த்திகை, போன்ற நாட்களில் இறைவனுக்கும் இறைவிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. ஐப்பசி மாதம் பவுர்ணமி அன்று நடைபெறும் அன்னாபிஷேகத்தைக் காண திரளாக பக்தர்கள் கூடுகின்றனர்.
சந்திர தோஷம் உள்ளவர்கள் இறைவனையும் இறைவியையும் அபிஷேகம் செய்து வழிபட்டு, சர்க் கரைப் பொங்கல் படைத்து, அதனை பக்தர்களுக்கு வினியோகம் செய்தால் தோஷம் விலகும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
கும்பகோணம் - காரைக்கால் வழித்தடத்தில் உள்ளது கொத்துக் கோவில் என்ற இடம். கும்பகோணத்தில் இருந்து இந்தப் பகுதிக்கு நிறைய பேருந்து வசதிகள் உள்ளன.
இதன் புராணப் பெயர் உன்னதபுரம் என்பதாகும். இங்கு தான் சந்திரமவுலீஸ்வரர் திருக்கோவில் இருக்கிறது. மூன்றடுக்கு ராஜகோபுரம் கம்பீரமாக நிற்க, ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. உள்ளே நுழைந்ததும் விசாலமான பிரகாரம். எதிரே நந்திதேவர் தனி மண்டபத்தில் அருள்பாலிக்கிறார். இவரைத் கடந்தால் மகாமண்டபம் உள்ளது. எதிரே நந்தியும், பலி பீடமும் இருக்கிறது.
அடுத்துள்ள அர்த்த மண்டபத்தின் நுழைவுவாசலில் இடதுபுறம் விநாயகரும், வலதுபுறம் தண்டாயுதபாணியும் அருள்பாலிக்கின்றனர். உள்ளே கருவறையில் இறைவன் சந்திரமவுலீஸ்வரர் லிங்கத் திருமேனியில் அருள்பாலிக் கிறார்.
மகாமண்டபத்தின் வலதுபுறம் இறைவி ஆனந்தவல்லி நின்ற கோலத்தில் நான்கு கரங்களுடன் வீற்றிருக்கிறார். இந்த அன்னை சாந்த முகத்துடன் புன்னகை தவழ இருக்கும் அழகே அழகு. அன்னையின் வலது மேல் கரத்தில் ருத்ராட்ச மாலையும், இடது மேல் கரத்தில் பத்மமும், கீழ் வலது கரத்தில் அபய ஹஸ்த முத்திரையுடனும், கீழ் இடது கரத்தில் வரத ஹஸ்த முத்திரையுடனும் வீற்றிருந்து தன்னை நம்பி வரும் பக்தர்கள் அருள்பாலிக்கிறார்.
இறைவனின் தேவகோட்டத்தில் தெற்கே தட்சிணாமூர்த்தி வீற்றிருந்து அருள்கிறார். பிரகாரத்தின் மேற்கு திசையில் பிள்ளையார், விசாலாட்சி, விசுவ நாதர், முருகன், வள்ளி, தெய்வானை, சுந்தரேசுவரர், மீனாட்சி, நாகர், கஜலட்சுமி ஆகியோர் திருமேனிகள் உள்ளன. வடக்குப் பிரகாரத்தில் சண்டீஸ்வரரின் சன்னிதி உள்ளது. வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் தனியாக அமர்ந்து அருள்கிறார்கள். கிழக்கு பிரகாரத்தில் சனி பகவான், சூரியன், பைரவர் திருமேனிகள் உள்ளன.
இந்த ஆலயம் பற்றிய தல புராணம் எதுவும் இல்லை. ஆனால் செவி வழி தகவல்கள் உள்ளன. அது என்ன?
காஞ்சி மகாப் பெரியவரான காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகர ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், தரிசனம் செய்வதற்காக ஒவ்வொரு தலமாக சென்று கொண்டிருந்தார். அதன் ஒரு பகுதியாக உன்னதபுரம் என்ற இந்த ஊருக்கும் வந்தார். அவர் வந்தது ஓர் இரவு நேரம் என்பதால், அங்கேயே தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அன்று இரவு அவர் கனவில் இறைவன், ஆதிசங்கரர் வடிவில் தோன்றினார்.
‘சந்திரமவுலீஸ்வரராக யாம் அருளாட்சி புரிய இத்தலத்தில் ஓர் ஆலயம் எழுப்புக’ என்று கூறிவிட்டு மறைந்துவிட்டார்.
அதன்படி காஞ்சி மகாப் பெரியவர் இத்தலத்திலேயே தங்கி, ஊர்மக்கள் உதவியுடன் ஒரு கோவிலை கட்டி முடித்தார். பின், கும்பாபிஷேகமும் நடத்தி வைத்தார். இறைவனுக்கு சந்திர மவுலீஸ்வரர் என்றும், இறைவிக்கு ஆனந்த வல்லி என்றும் பெயரிட்டு வணங்க, அதுவே இறைவன், இறைவி பெயராக நிலைத்துவிட்டது.
இந்த ஆலயத்தில் இறைவனுக்கும், இறைவிக்கும், பிற தெய்வங்களுக்கும் உற்சவ மூர்த்தி கிடையாது. இறைவனை வணங்க நினைப்பவர்கள் ஆலயத்திற்கு வந்து வணங்கி அருள் பெற வேண்டும் என்பதால் உற்சவ மூர்த்தியை தவிர்த்துவிட்டதாக பக்தர்கள் கூறுகின்றனர்.
ஆலயத்தின் தலவிருட்சம் வில்வம். இங்கு இறைவி யின் சன்னிதி முன் சுமார் 8 அடி நீளமும் 3½ அடி அகலமும் கொண்ட சலவைக் கல் ஒன்றை தரையில் பதித்துள்ளனர். தரையில் விழுந்து வணங்கும் பக்தர்களுக்காக இந்த வசதி செய்யப்பட்டுள்ளதாம்.
இந்த ஆலயத்தில் துர்க்கையும் இல்லை. இங்கு அம்பாளே அனைத்தும் என எல்லோரும் உணர வேண்டும் என்பதால், துர்க்கை அம்மனை தனியாகப் பிரதிஷ்டை செய்யவில்லையாம்.
இறைவி- இறைவன் முதல் எழுத்தைச் சேர்த்தால் ‘ஆச’ என்ற வார்த்தை வரும். மகாப்பெரியவரின் ‘ஆசை’ கோவில் இது என்பதால், இறைவி இறைவனுக்கு இப்படி பெயர் சூட்டப்பட்டதாக சில பக்தர்கள் கூறுகின்றனர்.
இந்த ஊரில் இந்த ஆலயம் தவிர வரசக்தி விநாயகர், பைரவர், லட்சுமி நாராயணப் பெருமாள், ஆஞ்சநேயர், செல்லியம்மன், அய்யனார் ஆலயங்களும் இருக்கின்றன.
சந்திரமவுலீஸ்வரர் ஆலயத்தில் தினமும் இரண்டு கால பூஜை நடைபெறுகிறது. இந்தக் கோவில் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12.30 வரையிலும், மாலை 4.30 முதல் இரவு 8.30 வரையிலும் திறந்திருக்கும்.
சிவராத்திரி, பிரதோஷம், நவராத்திரி, புத்தாண்டு, சோமவாரம், ஆடி வெள்ளி, தை வெள்ளி, கார்த்திகை, போன்ற நாட்களில் இறைவனுக்கும் இறைவிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. ஐப்பசி மாதம் பவுர்ணமி அன்று நடைபெறும் அன்னாபிஷேகத்தைக் காண திரளாக பக்தர்கள் கூடுகின்றனர்.
சந்திர தோஷம் உள்ளவர்கள் இறைவனையும் இறைவியையும் அபிஷேகம் செய்து வழிபட்டு, சர்க் கரைப் பொங்கல் படைத்து, அதனை பக்தர்களுக்கு வினியோகம் செய்தால் தோஷம் விலகும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
கும்பகோணம் - காரைக்கால் வழித்தடத்தில் உள்ளது கொத்துக் கோவில் என்ற இடம். கும்பகோணத்தில் இருந்து இந்தப் பகுதிக்கு நிறைய பேருந்து வசதிகள் உள்ளன.






