என் மலர்
முக்கிய விரதங்கள்
மாதந்தோறும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் வரும் ஏகாதசி திதியில் உண்ணாநோன்பு இருப்பதை தன்னுடைய கடமையாகக் கொண்டு அம்பரீஷன் விரதம் மேற்கொண்டான்.
அம்பரீஷன்! மாமன்னன். அதிகாரம், செல்வம், சுக போகங்கள் என அனைத்துமே அவன் கைக்கு எட்டிய நிலையில் இருந்தன. என்றாலும் அவன் அவற்றில் விழவில்லை.
அவன் மனம் எப்போதும் விஷ்ணுவின் மலர்ப்பதங்களையே எண்ணியது. அரச வாழ்க்கை சுகபோகத்தால் ஏற்படும் தடுமாற்றமோ மயக்கமோ அறவே அவனிடம் இல்லை.விரதமும் பூஜையுமாக உள்ளில் ஒங்கி நின்றான் அம்பரீஷன். அப்படி அவன் மேற்கொண்டிருந்த விரதம் ஏகாதசி விரதம்.
மாதந்தோறும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் வரும் ஏகாதசி திதியில் உண்ணாநோன்பு இருப்பதை தன்னுடைய கடமையாகக் கொண்டு அம்பரீஷன் விரதம் மேற்கொண்டான்.
அதாவது, தசமியன்று மதியம் மட்டும் சாப்பிடுவான். இரவில் உணவை விலக்கி, மறுநாள் முழுவதும் சாப்பாடு இன்றி இறைவனை பூஜிப்பான். அடுத்த நாள் காலை துவாதசி திதியில் பாரணை செய்வது என்ற நியதி மாறாமல் பின்பற்றி வந்தான் அம்பரீஷன்.
ஆண்டுக்கணக்கில் பின்பற்றி வந்த அந்த ஏகாதசி விரதத்தை ஒருமுறை யமுனை நதிக்கரையில் அனுஷ்டிக்கலாம் என்று அம்பரீஷன் முடிவு செய்தான். இதையடுத்து மதுவனம் வந்து சேர்ந்தான் அம்பரீஷன். திட்டமிட்டப்படி விரதத்தை தசமியில் தொடங்கினான். ஏகாதசி உபவாசம் முடிந்து, துவாதசி திதி வந்து விட்டது. விரதத்தை முடித்து பாரணை செய்ய வேண்டும்.
அப்படிப்பட்ட சமயத்தில் அங்கு துர்வாசர் வந்து சேர்ந்தார். துர்வாச முனிவரை வரவேற்று உபசரித்தான் அம்பரீஷன். பிறகு தன்னுடன் உணவருந்த வருமாறு அழைத்தான். மன்னா! இதோ யமுனையில் நீராடிவிட்டு வருகிறேன் என்று போனார் துர்வாசர். நேரம் ஓடிக் கொண்டே இருந்தது. பாரணையை நிறைவு செய்வதற்கான காலம் முடியப்போகிறது.
அதைச் செய்யாவிடில், அதுவே தோஷமாகி விடும். என்ன செய்வது?
விரதத்தை முடிக்க இயலாமல் தடுமாறினான் அம்பரீஷன். ஆட்களை அனுப்பி நதியில் துர்வாசரை தேடச் சொன்னான். அரச படை வீரர்கள் யமுனை நதிக்கரையை சல்லடை போட்டுத் தேடினார்கள். ஆனால் துர்வாசர் எங்கே போனார்? என்ன ஆனார்? என்று தெரியவில்லை.
அம்பரீஷனுக்கு மிகவும் கவலை யாகி விட்டது. மன்னனின் கவ லையை அறிந்த மந்திரிகள், மன்னா! கொஞ்சம் துளசி தீர்த்தத்தைப் பருகி, நீங்கள் விரதத்தை நிறைவு செய்யலாம். துர்வாச மகரிஷி வந்தவுடன் அவருடன் சேர்ந்து நீங்கள் உணவருந்தலாம். அதனால், விரதமும் நிறைவேறும். அதிதியை விட்டுவிட்டு சாப்பிடும் தோஷமும் ஏற்படாது என்றனர்.
மந்திரிகளின் யோசனை அம்பரீ ஷனுக்கு சரி என மனதில் தோன் றியது. மேலும் அந்த நேரத்தில் அதை தவிர வேறு வழியும் இல்லை. அதனால் அம்பரீஷன் அந்த ஆலோசனையை ஏற்றான். அவன் துளசி தீர்த்தத்தைப் பருகி பாரணை செய்த சிறிது நேரத்தில் துர்வாசர் அங்கு வந்து சேர்ந்தார். தன்னை உணவருந்த அழைத்து விட்டு மன்னன் மட்டும் துளசி தீர்த்தம் பருகி விரதத்தை முடித்து விட்டான் என்பதை உணர்ந்தார். அவருக்கு கோபம் தலைக்கேறியது.
‘அம்பரீஷா! என்னை அவமதித்து விட்டாய் அல்லவா? இதே பார்!’ என்று துர்வாசர் சீறினார். பிறகு தன் ஜடாமுடியில் ஒரு முடியைப் பிய்த்து வீசினார்.
அந்த முடியில் இருந்து ஒரு பெரிய பூதம் பயங்கர உருவில் வெளிப்பட்டது. அந்த பூதத்தை பார்த்த உடனே அனைவரும் நடுநடுங்கிச் சிதறி ஓடினார்கள். அதைக்கண்ட துர் வாசர் கடகடவென்று சிரித்தார். பூதமோ, அம்பரீஷனை நோக்கிப் பாய்ந்து சென்றது.
ஆனால் அம்பரீஷன் பயப்பட வில்லை. மாறாக கண்களை மூடி தியானத்தில் அமர்ந்தான். அதைப் பார்த்து துர்வாசரே ஆச் சரியப்பட்டார். உயிர் பிழைத்தால் போதும் என்று அனைவரும் அறியபடி ஓடுகின்றனர். ஆனால் இவன் ஓடவுமில்லை. என்னை மன்னித்து காப்பாற்றுங்கள் என்று தன்னிடம் சரண் அடையவும் இல்லையே என்று துர்வாசர் சிந்தித்தார்.
பூதம் அம்பரீஷனை நெருங்கியது. அப்போது தீப்பிழம்புகளை கக்கிக் கொண்டு, படுவேகமாகச் சுழன்றபடி வெளிப்பட்டது ஸ்ரீசுதர்சன சக்கரம். அதிர்ந்து போனார் துர்வாசர். இது ஏன் வெளிப்பட்டது? இது மகாவிஷ்ணுவின் ஆயுதமாயிற்றே! இப்போது வெளிப்பட்டது ஏன் என்று கேள்விகள் ஓடின அவருக்குள்.
இதை எதிர்கொள்ள பூதத்தாலும் முடியாதே என்று தோன்றியது அவருக்கு. ஸ்ரீசுதர்சனத்தை சக்ரராஜன் என் பார்கள். உலகிலுள்ள ஆயுதங்களுக்கெல்லாம் அவர்தான் தலைவன். அதை எதிர்கொள்ள எவராலும் இயலாது. அப்படிப்பட்ட சுதர்சனம் படுவேகமாக சுழன்று வருகிறது.
அம்பரீஷனைப் பிடிக்க முயன்ற பூதத்தை சுதர்சன சக்கரம் வெட்டித் தள்ளியது. அதன் பிறகு அது துர்வாசரை நோக்கித் திரும்பியது. இதுதான் சுதர்சனத்தின் சிறப்பு. அம்பை மட்டும் அது கவனிக்காது. ஏவியவரையும் அது கண்டுபிடித்து தண்டிக்கும். அப்படித்தான் பூதத்தை ஏவிய துர்வாசரை நோக்கிப் பாய்ந் தது சுதர்சனம்.
துர்வாசருக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாகி விட்டது. பூதத்தை வீழ்த்தியதோடு நில்லாமல்தன்னைத் துரத்தும் சுதர்சனத்தை எப்படி நிறுத்துவது என்று அவருக்கு புரிய வில்லை. அதனால் அவர் பிரம்மன், சிவன், விஷ்ணு என்று ஒவ்வொருவரிடமாக அபயம் தேடி ஓடினார். எல்லாரையும் நடுங்க வைக்கும் கோபக்காரரான துர்வாசருக்கு என்ன ஆபத்து? ஏன் அவர் ஓட வேண்டும் ? புரியாமல் எல்லோரும் விழித்தார்கள்.
முதலில் அவர் பிரம்மனிடம் சரண் அடைந்து சிருஷ்டி கர்த்தாவே, என்னைக் காப்பாற்றுங்கள் என்றார். அதற்கு இல்லை. இது என்னால் ஆகக்கூடியதல்ல. நீர் சிவபிரானிடம் சென்று கேட்டுப் பாரும் என்று பிரம் மன் கைவிரித்து விட்டார். அடுத்து துர்வாசர் சிவனிடம் ஓடினார். கயிலைநாயகா, காப்பாற்று என்னை என்று கூக்குரல் எழுப் பினார். ‘மகரிஷி! என்னால் சுதர் சனத்தைத் தடுக்க முடியாது. எனவே விஷ்ணுவைச் சரண் அடை யுங்கள் என்று விலகிக் கொண்டார் சிவபெருமான். சுதர்சன சக்கரம் அனல் பறக்க சுழன்று கொண்டே வருவதை பார்த்ததும், துர்வாசர் விஷ்ணுவிடம் சரண் புகுந்தார்.
லட்சுமி நாயகா! உன்னுடைய ஆயுதம் என்னைத் துரத்துகிறது அதைத்தடுத்து நிறுத்தி என்னைக் காப்பாற்று என்றார். உடனே விஷ்ணு, துர்வாசரே, சுதர்சனம் கோபப்படுமாறு நீர் என்ன செய்தீர்? என்ன நடந்தது? என்று கேட்டார். இதையடுத்து துர்வாசர் நடந்த சம்பவங்களை விளக்கமாக கூறினார். துர்வாசரின் விளக்கத்தைக் கேட்ட விஷ்ணு வருத்தம் ததும்ப மகிரிஷியே சக்கரத்தின் சினத்தைக் குறைக்க என்னாலும் முடியாது. ஆனால் ஒரு வழி இருக்கிறது என்று மெல்ல இழுத்தார்.
என்ன வழி? அதை உடனே சொல்லுங்கள் என்றார் துர்வாசர்.
அதற்கு விஷ்ணு, துர்வாசரே இது என்னால் செலுத்தப்பட்டிருந்தால் என்னால் நிறுத்திவிட முடியும். அம்பரீஷனும் இதை செலுத்த வில்லை. அவனுக்கு ஆபத்து என்பதால் தானாகவே கோபத்தில் சுதர்சனம் சுழல்கிறது. எனவே அம்பரீஷன் சுதர்சனத்தை பிரார்த்தித்தால், அதன் சினம் அடங்கும், உங்கள் ஆபத்தும் நீங்கும். இதைத் தவிர வேறு வழியே இல்லை என்றார்.
துர்வாசருக்கு தனக்கு ஏற்பட் டுள்ள சூழ்நிலை தெளிவாகப் புரிந்து விட்டது. யாரை அழிக்க முற்பட்டாரோ, அந்த அம்பரீஷனிடமே அபயம் கேட்பதைத் தவிர வேறு வழி இல்லை என்று முடிவுக்கு வந்தார். அம்பரீஷா, என்னைக் காப்பாற்று என்ற படியே யமுனை நதிக்கரைக்கு விரைந்தார். அங்கே அம்பரீஷன் தியானத்தில் ஆழ்ந்திருந்தான்.
மகிகரிஷியின் குரலைக் கேட்டு கண் விழித்தான். துர்வாசரை துரத்திக் கொண்டு வரும் சுதர்சன சக்கரத்தையும் பார்த்தான். என்னை நடந்ததென்று அவனுக்கு புரிந்து விட்டது. சக்ரராஜனே உலகம் அனைத்தையும் அழிக்க வல்லவரே உன்னை வணங்குகிறேன். மகிரிஷி என்னுடைய அதிதி. அவருக்கு எந்தத் துன்பமும் ஏற்படா வண்ணம் காத்து அருள்புரிவாயாக என்று சுதர்சனரைத் துதித்தான்.
அனல் பறக்கச் சுழன்று வந்து கொண்டிருந்த சக்கரம் மறைந்து போயிற்று. துர்வாசர் மனம் அமைதி பெற்று மன்னனோடு உணவருந்தி புறப்பட்டு போனார்.
அப்படியரு அத்யந்தப் பாதுகாப்பை பேரருளை அம்பரீஷனுக்கு கொடுத்தது ஏகாதசி விரதம் என்பது குறிப்பிடத்தக்கது.
அவன் மனம் எப்போதும் விஷ்ணுவின் மலர்ப்பதங்களையே எண்ணியது. அரச வாழ்க்கை சுகபோகத்தால் ஏற்படும் தடுமாற்றமோ மயக்கமோ அறவே அவனிடம் இல்லை.விரதமும் பூஜையுமாக உள்ளில் ஒங்கி நின்றான் அம்பரீஷன். அப்படி அவன் மேற்கொண்டிருந்த விரதம் ஏகாதசி விரதம்.
மாதந்தோறும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் வரும் ஏகாதசி திதியில் உண்ணாநோன்பு இருப்பதை தன்னுடைய கடமையாகக் கொண்டு அம்பரீஷன் விரதம் மேற்கொண்டான்.
அதாவது, தசமியன்று மதியம் மட்டும் சாப்பிடுவான். இரவில் உணவை விலக்கி, மறுநாள் முழுவதும் சாப்பாடு இன்றி இறைவனை பூஜிப்பான். அடுத்த நாள் காலை துவாதசி திதியில் பாரணை செய்வது என்ற நியதி மாறாமல் பின்பற்றி வந்தான் அம்பரீஷன்.
ஆண்டுக்கணக்கில் பின்பற்றி வந்த அந்த ஏகாதசி விரதத்தை ஒருமுறை யமுனை நதிக்கரையில் அனுஷ்டிக்கலாம் என்று அம்பரீஷன் முடிவு செய்தான். இதையடுத்து மதுவனம் வந்து சேர்ந்தான் அம்பரீஷன். திட்டமிட்டப்படி விரதத்தை தசமியில் தொடங்கினான். ஏகாதசி உபவாசம் முடிந்து, துவாதசி திதி வந்து விட்டது. விரதத்தை முடித்து பாரணை செய்ய வேண்டும்.
அப்படிப்பட்ட சமயத்தில் அங்கு துர்வாசர் வந்து சேர்ந்தார். துர்வாச முனிவரை வரவேற்று உபசரித்தான் அம்பரீஷன். பிறகு தன்னுடன் உணவருந்த வருமாறு அழைத்தான். மன்னா! இதோ யமுனையில் நீராடிவிட்டு வருகிறேன் என்று போனார் துர்வாசர். நேரம் ஓடிக் கொண்டே இருந்தது. பாரணையை நிறைவு செய்வதற்கான காலம் முடியப்போகிறது.
அதைச் செய்யாவிடில், அதுவே தோஷமாகி விடும். என்ன செய்வது?
விரதத்தை முடிக்க இயலாமல் தடுமாறினான் அம்பரீஷன். ஆட்களை அனுப்பி நதியில் துர்வாசரை தேடச் சொன்னான். அரச படை வீரர்கள் யமுனை நதிக்கரையை சல்லடை போட்டுத் தேடினார்கள். ஆனால் துர்வாசர் எங்கே போனார்? என்ன ஆனார்? என்று தெரியவில்லை.
அம்பரீஷனுக்கு மிகவும் கவலை யாகி விட்டது. மன்னனின் கவ லையை அறிந்த மந்திரிகள், மன்னா! கொஞ்சம் துளசி தீர்த்தத்தைப் பருகி, நீங்கள் விரதத்தை நிறைவு செய்யலாம். துர்வாச மகரிஷி வந்தவுடன் அவருடன் சேர்ந்து நீங்கள் உணவருந்தலாம். அதனால், விரதமும் நிறைவேறும். அதிதியை விட்டுவிட்டு சாப்பிடும் தோஷமும் ஏற்படாது என்றனர்.
மந்திரிகளின் யோசனை அம்பரீ ஷனுக்கு சரி என மனதில் தோன் றியது. மேலும் அந்த நேரத்தில் அதை தவிர வேறு வழியும் இல்லை. அதனால் அம்பரீஷன் அந்த ஆலோசனையை ஏற்றான். அவன் துளசி தீர்த்தத்தைப் பருகி பாரணை செய்த சிறிது நேரத்தில் துர்வாசர் அங்கு வந்து சேர்ந்தார். தன்னை உணவருந்த அழைத்து விட்டு மன்னன் மட்டும் துளசி தீர்த்தம் பருகி விரதத்தை முடித்து விட்டான் என்பதை உணர்ந்தார். அவருக்கு கோபம் தலைக்கேறியது.
‘அம்பரீஷா! என்னை அவமதித்து விட்டாய் அல்லவா? இதே பார்!’ என்று துர்வாசர் சீறினார். பிறகு தன் ஜடாமுடியில் ஒரு முடியைப் பிய்த்து வீசினார்.
அந்த முடியில் இருந்து ஒரு பெரிய பூதம் பயங்கர உருவில் வெளிப்பட்டது. அந்த பூதத்தை பார்த்த உடனே அனைவரும் நடுநடுங்கிச் சிதறி ஓடினார்கள். அதைக்கண்ட துர் வாசர் கடகடவென்று சிரித்தார். பூதமோ, அம்பரீஷனை நோக்கிப் பாய்ந்து சென்றது.
ஆனால் அம்பரீஷன் பயப்பட வில்லை. மாறாக கண்களை மூடி தியானத்தில் அமர்ந்தான். அதைப் பார்த்து துர்வாசரே ஆச் சரியப்பட்டார். உயிர் பிழைத்தால் போதும் என்று அனைவரும் அறியபடி ஓடுகின்றனர். ஆனால் இவன் ஓடவுமில்லை. என்னை மன்னித்து காப்பாற்றுங்கள் என்று தன்னிடம் சரண் அடையவும் இல்லையே என்று துர்வாசர் சிந்தித்தார்.
பூதம் அம்பரீஷனை நெருங்கியது. அப்போது தீப்பிழம்புகளை கக்கிக் கொண்டு, படுவேகமாகச் சுழன்றபடி வெளிப்பட்டது ஸ்ரீசுதர்சன சக்கரம். அதிர்ந்து போனார் துர்வாசர். இது ஏன் வெளிப்பட்டது? இது மகாவிஷ்ணுவின் ஆயுதமாயிற்றே! இப்போது வெளிப்பட்டது ஏன் என்று கேள்விகள் ஓடின அவருக்குள்.
இதை எதிர்கொள்ள பூதத்தாலும் முடியாதே என்று தோன்றியது அவருக்கு. ஸ்ரீசுதர்சனத்தை சக்ரராஜன் என் பார்கள். உலகிலுள்ள ஆயுதங்களுக்கெல்லாம் அவர்தான் தலைவன். அதை எதிர்கொள்ள எவராலும் இயலாது. அப்படிப்பட்ட சுதர்சனம் படுவேகமாக சுழன்று வருகிறது.
அம்பரீஷனைப் பிடிக்க முயன்ற பூதத்தை சுதர்சன சக்கரம் வெட்டித் தள்ளியது. அதன் பிறகு அது துர்வாசரை நோக்கித் திரும்பியது. இதுதான் சுதர்சனத்தின் சிறப்பு. அம்பை மட்டும் அது கவனிக்காது. ஏவியவரையும் அது கண்டுபிடித்து தண்டிக்கும். அப்படித்தான் பூதத்தை ஏவிய துர்வாசரை நோக்கிப் பாய்ந் தது சுதர்சனம்.
துர்வாசருக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாகி விட்டது. பூதத்தை வீழ்த்தியதோடு நில்லாமல்தன்னைத் துரத்தும் சுதர்சனத்தை எப்படி நிறுத்துவது என்று அவருக்கு புரிய வில்லை. அதனால் அவர் பிரம்மன், சிவன், விஷ்ணு என்று ஒவ்வொருவரிடமாக அபயம் தேடி ஓடினார். எல்லாரையும் நடுங்க வைக்கும் கோபக்காரரான துர்வாசருக்கு என்ன ஆபத்து? ஏன் அவர் ஓட வேண்டும் ? புரியாமல் எல்லோரும் விழித்தார்கள்.
முதலில் அவர் பிரம்மனிடம் சரண் அடைந்து சிருஷ்டி கர்த்தாவே, என்னைக் காப்பாற்றுங்கள் என்றார். அதற்கு இல்லை. இது என்னால் ஆகக்கூடியதல்ல. நீர் சிவபிரானிடம் சென்று கேட்டுப் பாரும் என்று பிரம் மன் கைவிரித்து விட்டார். அடுத்து துர்வாசர் சிவனிடம் ஓடினார். கயிலைநாயகா, காப்பாற்று என்னை என்று கூக்குரல் எழுப் பினார். ‘மகரிஷி! என்னால் சுதர் சனத்தைத் தடுக்க முடியாது. எனவே விஷ்ணுவைச் சரண் அடை யுங்கள் என்று விலகிக் கொண்டார் சிவபெருமான். சுதர்சன சக்கரம் அனல் பறக்க சுழன்று கொண்டே வருவதை பார்த்ததும், துர்வாசர் விஷ்ணுவிடம் சரண் புகுந்தார்.
லட்சுமி நாயகா! உன்னுடைய ஆயுதம் என்னைத் துரத்துகிறது அதைத்தடுத்து நிறுத்தி என்னைக் காப்பாற்று என்றார். உடனே விஷ்ணு, துர்வாசரே, சுதர்சனம் கோபப்படுமாறு நீர் என்ன செய்தீர்? என்ன நடந்தது? என்று கேட்டார். இதையடுத்து துர்வாசர் நடந்த சம்பவங்களை விளக்கமாக கூறினார். துர்வாசரின் விளக்கத்தைக் கேட்ட விஷ்ணு வருத்தம் ததும்ப மகிரிஷியே சக்கரத்தின் சினத்தைக் குறைக்க என்னாலும் முடியாது. ஆனால் ஒரு வழி இருக்கிறது என்று மெல்ல இழுத்தார்.
என்ன வழி? அதை உடனே சொல்லுங்கள் என்றார் துர்வாசர்.
அதற்கு விஷ்ணு, துர்வாசரே இது என்னால் செலுத்தப்பட்டிருந்தால் என்னால் நிறுத்திவிட முடியும். அம்பரீஷனும் இதை செலுத்த வில்லை. அவனுக்கு ஆபத்து என்பதால் தானாகவே கோபத்தில் சுதர்சனம் சுழல்கிறது. எனவே அம்பரீஷன் சுதர்சனத்தை பிரார்த்தித்தால், அதன் சினம் அடங்கும், உங்கள் ஆபத்தும் நீங்கும். இதைத் தவிர வேறு வழியே இல்லை என்றார்.
துர்வாசருக்கு தனக்கு ஏற்பட் டுள்ள சூழ்நிலை தெளிவாகப் புரிந்து விட்டது. யாரை அழிக்க முற்பட்டாரோ, அந்த அம்பரீஷனிடமே அபயம் கேட்பதைத் தவிர வேறு வழி இல்லை என்று முடிவுக்கு வந்தார். அம்பரீஷா, என்னைக் காப்பாற்று என்ற படியே யமுனை நதிக்கரைக்கு விரைந்தார். அங்கே அம்பரீஷன் தியானத்தில் ஆழ்ந்திருந்தான்.
மகிகரிஷியின் குரலைக் கேட்டு கண் விழித்தான். துர்வாசரை துரத்திக் கொண்டு வரும் சுதர்சன சக்கரத்தையும் பார்த்தான். என்னை நடந்ததென்று அவனுக்கு புரிந்து விட்டது. சக்ரராஜனே உலகம் அனைத்தையும் அழிக்க வல்லவரே உன்னை வணங்குகிறேன். மகிரிஷி என்னுடைய அதிதி. அவருக்கு எந்தத் துன்பமும் ஏற்படா வண்ணம் காத்து அருள்புரிவாயாக என்று சுதர்சனரைத் துதித்தான்.
அனல் பறக்கச் சுழன்று வந்து கொண்டிருந்த சக்கரம் மறைந்து போயிற்று. துர்வாசர் மனம் அமைதி பெற்று மன்னனோடு உணவருந்தி புறப்பட்டு போனார்.
அப்படியரு அத்யந்தப் பாதுகாப்பை பேரருளை அம்பரீஷனுக்கு கொடுத்தது ஏகாதசி விரதம் என்பது குறிப்பிடத்தக்கது.
கன்னிப்பெண்களுக்கு நீண்ட நாட்களாக திருமணம் தடைப்பட்டு வந்தால் திருவக்கரை வக்கிர காளியம்மன் தலத்திற்கு வந்து பஞ்சக்கன்னி தோஷ பரிகாரம் செய்து கொண்டால் உடனடியாகத் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.
கன்னிப்பெண்களுக்கு நீண்ட நாட்களாக திருமணம் தடைப்பட்டு வந்தால் திருவக்கரை வக்கிர காளியம்மன் தலத்திற்கு வந்து கருவறையின் உள்சுற்றில் இருக்கும் கருங்கல் சுவருக்கு மஞ்சள் பூசி, பூஜை செய்து, ‘பஞ்சக்கன்னி தோஷம்‘ செய்து கொண்டால் உடனடியாகத் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை. இதனால் ஏராளமான கன்னிப்பெண்கள் கருங்கல் சுவருக்கு மஞ்சள் பூஜை நடத்துகிறார்கள்.
வக்கிர காளியம்மன் ஆலயத்தில் அம்மன் கோவிலுக்கு அருகில் தீபலட்சுமி கோவில் உள்ளது. நீண்ட நாட்களாகத் திருமணம் ஆகாதவர்கள் ராகு காலத்தில் திருவிளக்கேற்றி இந்த அம்மனை வணங்கி மாங்கல்யம் கட்டி விட்டு வந்தால் விரைவிலேயே திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.
திருமணமாகி நீண்ட நாட்கள் குழந்தை இல்லாத தம்பதியர் இந்த ஆலயத்திற்கு வந்து இங்குள்ள தல விருட்சமான வில்வ மரத்தை வலம் வந்து அம்மரத்தில் தொட்டில் கட்டிச் செல்கிறார்கள்.
இப்படிச் செய்வதன் மூலம் விரைவிலேயே அவர்களுக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று நம்புகிறார்கள்.அவ்வாறு குழந்தைப் பெற்றவர்கள் குழந்தையுடன் ஆலயத்திற்கு வந்து இறைவனை வழிபட்டுத் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தி விட்டுத் திரும்புகிறார்கள். சில பெண்கள் குழந்தை வடிவ சிற்பங்களை வாங்கி வந்து பிரதிஷ்டை செய்து வழிபட்டு செல்கிறார்கள். அந்த வகையில் நிறைய குழந்தைகளின் கல் சிலைகள் அங்கு உள்ளன.
வக்கிர காளியம்மன் ஆலயத்தில் அம்மன் கோவிலுக்கு அருகில் தீபலட்சுமி கோவில் உள்ளது. நீண்ட நாட்களாகத் திருமணம் ஆகாதவர்கள் ராகு காலத்தில் திருவிளக்கேற்றி இந்த அம்மனை வணங்கி மாங்கல்யம் கட்டி விட்டு வந்தால் விரைவிலேயே திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.
திருமணமாகி நீண்ட நாட்கள் குழந்தை இல்லாத தம்பதியர் இந்த ஆலயத்திற்கு வந்து இங்குள்ள தல விருட்சமான வில்வ மரத்தை வலம் வந்து அம்மரத்தில் தொட்டில் கட்டிச் செல்கிறார்கள்.
இப்படிச் செய்வதன் மூலம் விரைவிலேயே அவர்களுக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று நம்புகிறார்கள்.அவ்வாறு குழந்தைப் பெற்றவர்கள் குழந்தையுடன் ஆலயத்திற்கு வந்து இறைவனை வழிபட்டுத் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தி விட்டுத் திரும்புகிறார்கள். சில பெண்கள் குழந்தை வடிவ சிற்பங்களை வாங்கி வந்து பிரதிஷ்டை செய்து வழிபட்டு செல்கிறார்கள். அந்த வகையில் நிறைய குழந்தைகளின் கல் சிலைகள் அங்கு உள்ளன.
மார்கழி மாதம் ஏகாதசி விரதம் இருந்து வழிபடுவோருக்கு யாம் வைகுண்ட பதவி அளித்து ஆட்கொள்வோம் என்பது திருமால் வாக்கு என அவர்கள் நம்புகின்றனர்.
மார்கழி மாத சுக்கில பட்ச (வளர்பிறை) ஏகாதசி வைகுண்ட ஏகாதசி எனப்ப டுகிறது. இந்து சமயத்தவர்கள், சிறப்பாக வைணவர்கள் வைகுண்ட ஏகாதசியில் விரதம் இருந்து திருமாலை வழிபடுகின்றனர். மார்கழி மாதம் ஏகாதசி விரதம் இருந்து வழிபடுவோருக்கு யாம் வைகுண்ட பதவி அளித்து ஆட்கொள்வோம் என்பது திருமால் வாக்கு என அவர்கள் நம்புகின்றனர்.
கர்மேந்திரியங்கள் ஐந்து, ஞானேந்திரியங்கள் ஐந்து, மனம் என்னும் பதினொரு இந்திரியங்களால் செய்யப்ப டும் தீவினைகள் எல்லாம் இந்த பதினோராவது திதியில் விரதம் இருந்தால் அழிந்து விடும் என்பது நம்பிக்கை. ஏகாதசியன்று பகல் உறக்கம், இருவேளை சாப்பிடுதல், உடலுறவு என்பவற்றை தவிர்த்து விரதம் மேற்கொள்கின்றனர். ஏகாதசியன்று இந்து சமயத்தவர்கள் திரு மண நிகழ்வுகளையும் தவிர்க்கின்றனர்.
கர்மேந்திரியங்கள் ஐந்து, ஞானேந்திரியங்கள் ஐந்து, மனம் என்னும் பதினொரு இந்திரியங்களால் செய்யப்ப டும் தீவினைகள் எல்லாம் இந்த பதினோராவது திதியில் விரதம் இருந்தால் அழிந்து விடும் என்பது நம்பிக்கை. ஏகாதசியன்று பகல் உறக்கம், இருவேளை சாப்பிடுதல், உடலுறவு என்பவற்றை தவிர்த்து விரதம் மேற்கொள்கின்றனர். ஏகாதசியன்று இந்து சமயத்தவர்கள் திரு மண நிகழ்வுகளையும் தவிர்க்கின்றனர்.
ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியன்று அம்பிகையை பூஜித்து நல்வாழ்வு பெறலாம். மார்கழி பௌர்ணமியான இன்று அம்பிகையை விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டும்.
அம்பிகை வழிபாட்டிற்கு பௌர்ணமி தினம் சிறப்பானதாக குறிப்பிடப்படும் புனித நாளாகும். அன்று அம்பாளை வழிபட்டால் குடும்பத்தில் ஒளி உண்டாகும். துன்பங்களாகிய இருள் நீங்கி நன்மை கிட்டும். பௌர்ணமி அன்று உபவாசம் இருந்து வழிபட்டால் சகல சௌபாக்கியங்களும் பெறலாம் என்பது நம்பிக்கை.
பௌர்ணமி பூஜை பொதுவாக அனைவருக்கும் நன்மை செய்யக்கூடிய பூஜை என்றாலும் பெண்களுக்கு சிறப்பான பலன்களை அளிக்கக் கூடியது. திருமணமான பெண்கள் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கவும், திருமணமாகாத பெண்கள் திருமணப் பேறு கிட்டவும் இந்த பூஜை செய்து அம்பிகையின் அருள் பெறலாம்.
மார்கழி திருவாதிரை நாளில் அம்பிகைக்கு வெண்ணிற ஆடை உடுத்தி ஒற்றைப்படை எண்ணிக்கையில் நவரத்தினக்கல் பதித்த ஆபரணம் அணிவிக்க வேண்டும். தாமரைப்பூவால் அர்ச்சித்தலும், பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தலும் சிறப்பானவை. களி நைவேத்தியம் செய்ய வேண்டும். இப்பூஜை செய்வதன் மூலம் அம்பிகையின் பூரண அருளைப் பெறலாம். கஷ்டங்கள் நீங்கும், நோய்கள் குணமாகும், எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிட்டும். மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்துடன் கூடிய பௌர்ணமியில் திருவாதிரை திருநாள் விரதத்துடன் அனுசரிக்கப்படுகிறது.
பௌர்ணமி பூஜை பொதுவாக அனைவருக்கும் நன்மை செய்யக்கூடிய பூஜை என்றாலும் பெண்களுக்கு சிறப்பான பலன்களை அளிக்கக் கூடியது. திருமணமான பெண்கள் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கவும், திருமணமாகாத பெண்கள் திருமணப் பேறு கிட்டவும் இந்த பூஜை செய்து அம்பிகையின் அருள் பெறலாம்.
மார்கழி திருவாதிரை நாளில் அம்பிகைக்கு வெண்ணிற ஆடை உடுத்தி ஒற்றைப்படை எண்ணிக்கையில் நவரத்தினக்கல் பதித்த ஆபரணம் அணிவிக்க வேண்டும். தாமரைப்பூவால் அர்ச்சித்தலும், பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தலும் சிறப்பானவை. களி நைவேத்தியம் செய்ய வேண்டும். இப்பூஜை செய்வதன் மூலம் அம்பிகையின் பூரண அருளைப் பெறலாம். கஷ்டங்கள் நீங்கும், நோய்கள் குணமாகும், எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிட்டும். மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்துடன் கூடிய பௌர்ணமியில் திருவாதிரை திருநாள் விரதத்துடன் அனுசரிக்கப்படுகிறது.
சிறப்பு வாய்ந்த மார்கழி மாதத்தில் ஏகாதசி விரதத்தை இனிதே கடைப்பிடித்து, பாற்கடலில் துயிலும் பரந்தாமனை வழிபட்டால் வாழ்க்கை வளமாகும். வளர்ச்சியும் பெருகும்.
“காக்கும் கடவுள்” என்று வர்ணிக்கப்படும் விஷ்ணுவிற்கு பதினாறு திருநாமங்கள் உண்டு. அவை: விஷ்ணு, நாராயணன், கோவிந்தன், மதுசூதனன், ஜனார்த்தனன், பத்மநாபன், ப்ரஜாபதி, வராகன், சக்ரதாரி, வாமணன், மாதவன், நரசிம்மன், திரிவிக்ரமன், ரகுநாதன், ஜலசாயினன், ஸ்ரீதரன்.
பதினாறு பேர்களுக்கும் சொந்தக்காரரான விஷ்ணுவை நாம் “பெருமாள்” என்று அழைக்கின்றோம். அவருக்காக கட்டிய கோவிலைப் “பெருமாள் கோவில்” என்று சொல்கின்றோம். அவரை வழிபட்டால் நமக்குப் பதினாறு விதமான பேறுகளும் வந்து சேரும் என்பதை நாம் அனுபவத்தில் காணலாம்.
இவ்வாறு பதினாறு பேர்களுக்கும் சொந்தக்காரராகி நமக்கு 16 பேறுகளையும் வழங்கும் விஷ்ணுவை வருகிற வைகுண்ட வாசனுக்குரிய ஏகாதசித் திருநாளில் வழிபட்டால் வாழ்க்கை வளமாகும், வளர்ச்சி அதிகரிக்கும். வசதிகள் பெருகும். மார்கழி மாதம் வரும் ஏகாதசிக்கு `உற்பத்தி ஏகாதசி' என்று பெயர். அதே மாதம் சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசிக்கு “வைகுண்ட ஏகாதசி” என்று பெயர்.
மாதங்களில் புனிதமானதாகவும், தேவர்கள் துயில் எழும் மாதமாகவும் கருதப்படும் மார்கழி மாதத்தில் நாம் விஷ்ணுவை வணங்கினால் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். அதனால் தான் “மாதங்களில் நான் மார்கழி” என்று கண்ணன் சொல்லியதாகச் சொல்வார்கள்.
“வைகுண்ட ஏகாதசி” என்று வரும்பொழுது சொர்க்க வாசலைத் திறப்பார்கள். ஆண்டு முழுவதும் அடைத்து வைத்திருக்கும் கதவு அன்று மட்டும் தான் திறந்து வைக்கப்படும். அந்த சொர்க்க வாசலின் வழியாக நாம் நுழைந்து வந்தால் சிக்கல்கள் தீரும். செல்வ வளம் பெருகும்.
ரொக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாம், சொர்க்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் விழாவைக் கொண்டாட வேண்டுமல்லவா?. அந்த விழா இந்த மார்கழி மாதம் வருகின்றது. திருப்பதி, ஸ்ரீரங்கம் ஆலயத்தில் நுழைய லட்சக்கணக்கான மக்கள் காத்திருப்பர்.
அதேபோல் திருக்கோஷ்டியூர், திருப்பதி, உப்பிலியப்பன் கோவில், திருமோகூர் போன்ற சகல விஷ்ணு ஆலயங்களிலும் ஏகாதசி விழா உற்சவம் சீரும் சிறப்புமாக நடைபெறும். இந்த கண்கொள்ளாக் காட்சியை நாம் கண்டு மகிழ்ந்தால் பொன்னும், பொருளும் போற்றுகிற செல்வாக்கும் இன்னும் உயரும்.
ஏகாதசியன்று அவல், வெல்லம் கலந்து நைவேத்தியம் வைத்து சாப்பிடலாம். முழு விரதம் இருக்க முடியாதவர்கள் மதியமும் இரவும் பலகாரம் செய்தும் சாப்பிடுவர். அன்று இரவு முழுவதும் கண் விழித்திருக்கும் பொழுது, இறை தியானத்தையே மேற்கொள்ள வேண்டும். மறுநாள் அதிகாலையில் சூரியன் உதிக்கும் முன்னதாக நீராடி பச்சரிசி சோறு, அகத்திக்கீரை, நெல்லிக்காய், கருணைக்கிழங்கு புளிக்குழம்பு சாப்பிடுவது நல்லது.
அகத்திக்கீரையும், நெல்லிக்காயும் உணவில் சேர்த்துக்கொள்வது அவசியமாகும். இந்த மார்கழி மாதத்தில் கன்னிப்பெண்கள் அதிகாலையில் எழுந்து நீராடி வீட்டின் முன் பக்கத்தில் கோலமிட்டு அதன் மத்தியில் மஞ்சள் வண்ணப் பூ வைத்தால் மங்கலம் உண்டாகும். பூசணிப்பூவை வைத்து அழகுபடுத்துவது கண்கொள்ளாக் காட்சியாகும். மஞ்சள் வண்ணப் பரங்கிப் பூவும் வைப்பர். கிருமிநாசினியாக சாணத்தின் மீது அதைப் பதித்து வைத்திருப்பர்.
இந்த வழிபாட்டில் மனநலமும், உடல்நலமும் சீராகின்றது. பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து “ஓசோன்” என்ற காற்று மண்டலத்தில் உள்ள காற்று நம் மீது படுவதால் ஆரோக்கியம் மேம் படுகின்றது. திருப்பாவை, திருவெம்பாவை பாடி வழிபாட்டை மேற்கொண்டால் திருமணம் கைகூடும். அதிகாலையில் இறைநாமத்தை உச்சரிப்பதன் மூலம் அனைத்து நலன்களும் நமக்குக் கிடைக்கும்.
இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த மார்கழி மாதத்தில் ஏகாதசி விரதத்தை இனிதே கடைப்பிடித்து, பாற்கடலில் துயிலும் பரந்தாமனை வழிபட்டால் வாழ்க்கை வளமாகும். வளர்ச்சியும் பெருகும். வருங்காலம் நலமாகும்.
விஷ்ணுவை வழிபட்டு, அவரது துணையாக விளங்கிச் செல்வத்தை நமக்களிக்கும் லட்சுமியின் சன்னிதிக்குச் சென்று லட்சுமி வருகைப்பதிகம் பாடினால், இல்லம் தேடி லட்சுமி வந்து அள்ள அள்ளக் குறையாத செல்வத்தை வழங்குவார். அஷ்ட லட்சுமியின் படத்தையும் விஷ்ணு லட்சுமியோடு இணைந்திருக்கும் படத்தையும் பூஜை அறையில் வைத்து வழிபடுவது நல்லது.
எட்டுவகை லட்சுமியால் ஏராளமாக செல்வம்
கொட்டும்வகை நானறிந்தேன் கோலமயி லானவளே
வெற்றியுடன் நாங்கள் வாழ வேணும்ஆதி லட்சுமியே!
வட்டமலர் மீதிருந்து வருவாய் இதுசமயம்.
யானையிரு புறமும்நிற்கும் ஆரணங்கே
உனைத்துதித்தால்
காணுமொரு போகமெல்லாம் காசினியில்
கிடைக்குமென்பார்!
தேனிருக்கும் கவியுரைத்தேன் தேர்ந்த கஜ லட்சுமியே
வானிருக்கும் நிலவாகி வருவாய் இதுசமயம்!
அன்றைய தினம் அவல் நைவேத்தியம் செய்தால் ஆவல்கள் பூர்த்தியாகும். நமக்கு வாழ்வில் ஏற்படும் இன்னல்கள் அகன்று இனிய பலன் கிடைக்கும். வளர்ச்சியும் பெருமையும் வந்து சேரும். வாழ்க்கையில் சந்தோஷங்களை மட்டும் நாளும் சந்திக்கலாம்.
பதினாறு பேர்களுக்கும் சொந்தக்காரரான விஷ்ணுவை நாம் “பெருமாள்” என்று அழைக்கின்றோம். அவருக்காக கட்டிய கோவிலைப் “பெருமாள் கோவில்” என்று சொல்கின்றோம். அவரை வழிபட்டால் நமக்குப் பதினாறு விதமான பேறுகளும் வந்து சேரும் என்பதை நாம் அனுபவத்தில் காணலாம்.
இவ்வாறு பதினாறு பேர்களுக்கும் சொந்தக்காரராகி நமக்கு 16 பேறுகளையும் வழங்கும் விஷ்ணுவை வருகிற வைகுண்ட வாசனுக்குரிய ஏகாதசித் திருநாளில் வழிபட்டால் வாழ்க்கை வளமாகும், வளர்ச்சி அதிகரிக்கும். வசதிகள் பெருகும். மார்கழி மாதம் வரும் ஏகாதசிக்கு `உற்பத்தி ஏகாதசி' என்று பெயர். அதே மாதம் சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசிக்கு “வைகுண்ட ஏகாதசி” என்று பெயர்.
மாதங்களில் புனிதமானதாகவும், தேவர்கள் துயில் எழும் மாதமாகவும் கருதப்படும் மார்கழி மாதத்தில் நாம் விஷ்ணுவை வணங்கினால் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். அதனால் தான் “மாதங்களில் நான் மார்கழி” என்று கண்ணன் சொல்லியதாகச் சொல்வார்கள்.
“வைகுண்ட ஏகாதசி” என்று வரும்பொழுது சொர்க்க வாசலைத் திறப்பார்கள். ஆண்டு முழுவதும் அடைத்து வைத்திருக்கும் கதவு அன்று மட்டும் தான் திறந்து வைக்கப்படும். அந்த சொர்க்க வாசலின் வழியாக நாம் நுழைந்து வந்தால் சிக்கல்கள் தீரும். செல்வ வளம் பெருகும்.
ரொக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாம், சொர்க்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் விழாவைக் கொண்டாட வேண்டுமல்லவா?. அந்த விழா இந்த மார்கழி மாதம் வருகின்றது. திருப்பதி, ஸ்ரீரங்கம் ஆலயத்தில் நுழைய லட்சக்கணக்கான மக்கள் காத்திருப்பர்.
அதேபோல் திருக்கோஷ்டியூர், திருப்பதி, உப்பிலியப்பன் கோவில், திருமோகூர் போன்ற சகல விஷ்ணு ஆலயங்களிலும் ஏகாதசி விழா உற்சவம் சீரும் சிறப்புமாக நடைபெறும். இந்த கண்கொள்ளாக் காட்சியை நாம் கண்டு மகிழ்ந்தால் பொன்னும், பொருளும் போற்றுகிற செல்வாக்கும் இன்னும் உயரும்.
ஏகாதசியன்று அவல், வெல்லம் கலந்து நைவேத்தியம் வைத்து சாப்பிடலாம். முழு விரதம் இருக்க முடியாதவர்கள் மதியமும் இரவும் பலகாரம் செய்தும் சாப்பிடுவர். அன்று இரவு முழுவதும் கண் விழித்திருக்கும் பொழுது, இறை தியானத்தையே மேற்கொள்ள வேண்டும். மறுநாள் அதிகாலையில் சூரியன் உதிக்கும் முன்னதாக நீராடி பச்சரிசி சோறு, அகத்திக்கீரை, நெல்லிக்காய், கருணைக்கிழங்கு புளிக்குழம்பு சாப்பிடுவது நல்லது.
அகத்திக்கீரையும், நெல்லிக்காயும் உணவில் சேர்த்துக்கொள்வது அவசியமாகும். இந்த மார்கழி மாதத்தில் கன்னிப்பெண்கள் அதிகாலையில் எழுந்து நீராடி வீட்டின் முன் பக்கத்தில் கோலமிட்டு அதன் மத்தியில் மஞ்சள் வண்ணப் பூ வைத்தால் மங்கலம் உண்டாகும். பூசணிப்பூவை வைத்து அழகுபடுத்துவது கண்கொள்ளாக் காட்சியாகும். மஞ்சள் வண்ணப் பரங்கிப் பூவும் வைப்பர். கிருமிநாசினியாக சாணத்தின் மீது அதைப் பதித்து வைத்திருப்பர்.
இந்த வழிபாட்டில் மனநலமும், உடல்நலமும் சீராகின்றது. பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து “ஓசோன்” என்ற காற்று மண்டலத்தில் உள்ள காற்று நம் மீது படுவதால் ஆரோக்கியம் மேம் படுகின்றது. திருப்பாவை, திருவெம்பாவை பாடி வழிபாட்டை மேற்கொண்டால் திருமணம் கைகூடும். அதிகாலையில் இறைநாமத்தை உச்சரிப்பதன் மூலம் அனைத்து நலன்களும் நமக்குக் கிடைக்கும்.
இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த மார்கழி மாதத்தில் ஏகாதசி விரதத்தை இனிதே கடைப்பிடித்து, பாற்கடலில் துயிலும் பரந்தாமனை வழிபட்டால் வாழ்க்கை வளமாகும். வளர்ச்சியும் பெருகும். வருங்காலம் நலமாகும்.
விஷ்ணுவை வழிபட்டு, அவரது துணையாக விளங்கிச் செல்வத்தை நமக்களிக்கும் லட்சுமியின் சன்னிதிக்குச் சென்று லட்சுமி வருகைப்பதிகம் பாடினால், இல்லம் தேடி லட்சுமி வந்து அள்ள அள்ளக் குறையாத செல்வத்தை வழங்குவார். அஷ்ட லட்சுமியின் படத்தையும் விஷ்ணு லட்சுமியோடு இணைந்திருக்கும் படத்தையும் பூஜை அறையில் வைத்து வழிபடுவது நல்லது.
எட்டுவகை லட்சுமியால் ஏராளமாக செல்வம்
கொட்டும்வகை நானறிந்தேன் கோலமயி லானவளே
வெற்றியுடன் நாங்கள் வாழ வேணும்ஆதி லட்சுமியே!
வட்டமலர் மீதிருந்து வருவாய் இதுசமயம்.
யானையிரு புறமும்நிற்கும் ஆரணங்கே
உனைத்துதித்தால்
காணுமொரு போகமெல்லாம் காசினியில்
கிடைக்குமென்பார்!
தேனிருக்கும் கவியுரைத்தேன் தேர்ந்த கஜ லட்சுமியே
வானிருக்கும் நிலவாகி வருவாய் இதுசமயம்!
அன்றைய தினம் அவல் நைவேத்தியம் செய்தால் ஆவல்கள் பூர்த்தியாகும். நமக்கு வாழ்வில் ஏற்படும் இன்னல்கள் அகன்று இனிய பலன் கிடைக்கும். வளர்ச்சியும் பெருமையும் வந்து சேரும். வாழ்க்கையில் சந்தோஷங்களை மட்டும் நாளும் சந்திக்கலாம்.
வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாமல் அவதிப்படுவோரும், கொடுத்த கடனை திரும்ப பெற முடியாமல் திண்டாடி வருவோருக்கும் ஒரு நல்ல வழியை ஏற்படுத்தி தருவார் தோரண கணபதி.
மனிதர்களாகப் பிறந்தவர்கள் தேவ கடன், பித்ரு கடன், மானுட கடன் ஆகிய மூன்று கடன்களை நிச்சயம் சந்தித்தாக வேண்டும். இவற்றில் மானுட கடனைத் தீர்க்க, ஸ்ரீதோரண கணபதி விரத வழிபாடு கை கொடுக்கும்.
செவ்வாய்க்கிழமைகளில் ஸ்ரீதோரண கணபதியைத் தரிசிப்பது விசேஷம். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் தோரண கணபதியை விரதம் இருந்து வழிபடலாம்.
இந்த மூன்று கிழமைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, தொடர்ந்து ஆறு வாரங்கள்... குறிப்பிட்ட கிழமைகளில் விரதம் இருந்து ஸ்ரீதோரண விநாயகரைத் தரிசித்து, அவருக்கு மூன்று நெய் தீபங்கள் ஏற்றிவைத்து வழிபட வேண்டும். அத்துடன் கணபதியின் மேகலை - பத்மபீடம் முன்பு அமர்ந்து, தோரணரின் மூல மந்திரத்தை 12 முறை ஜபித்து, தோப்புக்கரணம் செய்து நமஸ்கரிக்க வேண்டும்.
மா, கொய்யா, மாதுளை, திராட்சை, ஆரஞ்சு என்று ஐவகைப் பழங்களைப் படைத்து, அர்ச்சனை செய்து வணங்குவது விசேஷம். இதனால் விரைவில் நமது கடன்கள் யாவும் தீர்ந்து, நிம்மதி பிறக்கும்.
செவ்வாய்க்கிழமைகளில் ஸ்ரீதோரண கணபதியைத் தரிசிப்பது விசேஷம். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் தோரண கணபதியை விரதம் இருந்து வழிபடலாம்.
இந்த மூன்று கிழமைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, தொடர்ந்து ஆறு வாரங்கள்... குறிப்பிட்ட கிழமைகளில் விரதம் இருந்து ஸ்ரீதோரண விநாயகரைத் தரிசித்து, அவருக்கு மூன்று நெய் தீபங்கள் ஏற்றிவைத்து வழிபட வேண்டும். அத்துடன் கணபதியின் மேகலை - பத்மபீடம் முன்பு அமர்ந்து, தோரணரின் மூல மந்திரத்தை 12 முறை ஜபித்து, தோப்புக்கரணம் செய்து நமஸ்கரிக்க வேண்டும்.
மா, கொய்யா, மாதுளை, திராட்சை, ஆரஞ்சு என்று ஐவகைப் பழங்களைப் படைத்து, அர்ச்சனை செய்து வணங்குவது விசேஷம். இதனால் விரைவில் நமது கடன்கள் யாவும் தீர்ந்து, நிம்மதி பிறக்கும்.
விரதத்தன்று சாதம் மட்டும் சாப்பிடக்கூடாது, வேறு எது வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்ற தவறான கருத்து உள்ளது. இது பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
ஞானேந்திரியங்கள் ஐந்து. கர்மேந்திரியங்கள் (வாக்கு, பாதம், பாணி, பாயு, உபத்தம்) ஐந்து. மனம் ஒன்று ஆகிய பதினொன்றையும் பெருமாளுடன் ஐக்கியப்படுத்தித் தியானம் இருப்பதே ஏகாதசி விரதம். உடலாலும் உள்ளத்தாலும் பெருமாளுடன் ஒன்றியிருப்பதே உபவாசம்.
தென் மாவட்டங்களில் தோசை, இட்லி சகிதமாகவும், வட மாவட்டங்கள் சிலவற்றில் பலவகை டிபன் சகிதமாகவும் ஏகாதசி விரதம் அனுஷ்டிக்கின்றனர்.
விரதத்தன்று சாதம் மட்டும் சாப்பிடக்கூடாது, வேறு எது வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்று இவர்கள் நினைக்கிறார்கள்.
ஆனால், ஏகாதசி விரதம் இருப்பவர்கள் பூரண உபவாசம் (பட்டினி)இருக்க வேண்டும். குளிர்ந்த நீர் குடிக்க தடையில்லை.
தென் மாவட்டங்களில் தோசை, இட்லி சகிதமாகவும், வட மாவட்டங்கள் சிலவற்றில் பலவகை டிபன் சகிதமாகவும் ஏகாதசி விரதம் அனுஷ்டிக்கின்றனர்.
விரதத்தன்று சாதம் மட்டும் சாப்பிடக்கூடாது, வேறு எது வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்று இவர்கள் நினைக்கிறார்கள்.
ஆனால், ஏகாதசி விரதம் இருப்பவர்கள் பூரண உபவாசம் (பட்டினி)இருக்க வேண்டும். குளிர்ந்த நீர் குடிக்க தடையில்லை.
அனைத்து விரதங்களிலும் முதன்மையாக திகழ்கிறது காக்கும் கடவுளான விஷ்ணுவை எண்ணி கடைப்பிடிக்கும் ‘வைகுண்ட ஏகாதசி விரதம்.’
18-12-2018 வைகுண்ட ஏகாதசி
மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையில் பாலமாக இருப்பது விரதங்கள். மனிதனின் வாழ்வில் எழும் பிரச்சினைகளுக்கு ஏற்ப, கடவுள்களும் விரதங்களும் மாறுபடும். ஆனால் அனைத்து விரதங்களிலும் முதன்மையாக திகழ்கிறது காக்கும் கடவுளான விஷ்ணுவை எண்ணி கடைப்பிடிக்கும் ‘வைகுண்ட ஏகாதசி விரதம்.’
ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் இருந்து 11-ம் நாள் ஏகாதசி. அவை சுக்லபட்ச ஏகாதசி, கிருஷ்ணபட்ச ஏகாதசி என அழைக்கப்படுகின்றன. வைணவ பக்தர்கள் அந்நாட்களில் முழு உபவாசம் இருந்து, மறுநாள் துவாதசியில், பூஜை முடித்த பின்பே காலை உணவு உட்கொள்வது வழக்கம். ஒரு வருடத்தில் 24 அல்லது 25 ஏகாதசிகள் வரும். அனைத்து ஏகாதசிகளிலும் விரதமிருந்து வழிபடுவோர் பிறவித் துயர் நீங்கி வைகுண்ட பதவி அடைவர் என்பது நம்பிக்கை.
மாதந்தோறும் வரும் ஏகாதசி திதிகளை விட, மார்கழியில் வரும் ஏகாதசிக்கு பெரும் சிறப்பு உண்டு. ஏகாதசியில் விரதம் இருந்த அம்பரீஷன் என்ற அரசனை, துர்வாச முனிவரின் சாபத்தில் இருந்து காக்க, விஷ்ணு பகவான் தன்னுடைய சக்கரத்தை அனுப்பி புராண நிகழ்வு நடந்த மாதமாக மார்கழி ஏகாதசி இருக்கிறது.
அம்பரீசனுக்கு இடையூறு செய்த துர்வாசரை, சுதர்சன சக்கரம் துரத்தியது. அதனிடம் இருந்து தன்னைக் காப்பாற்றும்படி, வைகுண்டம் சென்று பெரு மாளைப் பணிந்தார் துர்வாசர். ஆனால் துர்வாச முனிவரைக் காப்பாற்றும் தகுதி, ஏகாதசியில் தூய விரதம் இருந்து திருமாலை வழிபட்ட அம்பரீசனுக்கே அளிக்கப்பட்டது. ஏகாதசியின் சிறப்பு அத்தகையது.
வைகுண்ட ஏகாதசி விரதம் கடைப்பிடிப்போரின் கடைக்கண் பார்வைக்கு, அந்த கண்ணன் அடிமையாகி அவர்களின் கவலைகளைத் தீர்த்து இறுதியில் வைகுண்டம் அழைத்து முக்தி தருவான் என்பது நம்பிக்கை.
தனது நண்பரான குசேலன் கொண்டுவந்த அவலை உண்டு, அவருக்கு சகல ஐஸ்வரியங்களும் கிடைக்க கண்ணன் வழி செய்தார். குசேலனுக்கு இறைவன் அருள் செய்தது இந்த மார்கழி ஏகாதசி என்பதால், பக்தர்கள் அன்றைய தினம் இரவு விழித்திருந்து பகவானுக்கு அவல் நைவேத்தியம் படைத்து வேண்டினால், அவர்களின் ஆவல் நிறைவேறும்.
வருடம் முழுதும் ஏகாதசி விரதம் அனுஷ்டிக்க இயலாதவர்கள், மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசியில் மட்டுமாவது விரதம் இருப்பது சிறப்பான பலனைத் தரும். ஒரு முறை நாம் இருக்கும் வைகுண்ட ஏகாதசி விரதமானது, மூன்று கோடி ஏகாதசி விரதங்களுக்கு ஒப்பாகும் என்பதால், இவ்விரதத்தை “முக்கோடி ஏகாதசி” என்றும் அழைக்கின்றனர்.
ஏகாதசி விரதம் 10-வது திதியாகிய தசமி, 11-வது திதியாகிய ஏகாதசி, 12-ம் திதியாகிய துவாதசி என்று 3 திதிகளிலும் மேற்கொள்ளும் விரதமாக அமைந்துள்ளது. ஆகவே ஏகாதசி விரதம் இருப்பவர்கள், அதற்கு முன்தினமான தசமி நாளிலேயே தங்கள் விரதத்தை தொடங்க வேண்டும். அன்றைய தினம் பெருமாளை வழிபட்டு ஒருவேளை மட்டும் சாப்பிட்டு, மறுநாள் ஏகாதசியன்று முழுமையான உண்ணாவிரதத்தை கடைப்பிடிக்க வேண்டும்.

நம்மைப் பாதிக்கும் பிரச்சினைகள், விடாமல் துரத்தினாலும் நாம் நம் சிந்தையை ஒருங்கிணைத்து அவன் பாதம் நாடி அருளைப்பெற இரவு-பகல் பாராமல், இறைவனின் நாமம் ஓதுவதில் கவனம் கொள்ள வேண்டும். வீண் கதைகள் பேசி பொழுதுகளை போக்குவது நன்மை தராது. இந்த நோக்கத்தின் அடிப்படையில் தசமிக்கு அடுத்த ஏகாதசியன்று இரவில் கண்விழித்து பெருமாளின் பெருமைகளை எடுத்துக்காட்டும் கதைகளைப் படிப்பதும், கேட்பதுமாக இருக்க வேண்டும். விஷ்ணு சகஸ்ர நாமம், ரங்கநாதர் ஸ்துதி போன்ற பெருமாள் மீதான பதிகங்களை ஓதுவது நல்லது. எதையும் படிக்கவோ மனனம் செய்யவோ முடியாதவர்கள் “ஓம் நமோ நாராயணா” எனும் எட்டெழுத்து மந்திரத்தை மனதில் நிறுத்தினாலே அந்த நாராயணனின் அருளுக்கு பாத்திரமாகலாம்.
மறுநாள் துவாதசி திதி அன்று, இந்த பருவத்தில் கிடைக்கும் 21 வகை காய்கறிகளை சமைத்து சூரிய உதயத்திற்கு முன் உண்ணுதல் நலம் தரும். சத்துக்கள் நிறைந்த காய்கறிகளை விரதம் முடித்து உண்பதால் உடல் ஆரோக்கியத்துக்கும் இவ்விரதம் உதவுகிறது. அனைத்து காய்கறிகளும் இல்லை என்றாலும், அகத்திக் கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் ஆகியவை அவசியம் இடம்பெற வேணடும்.
ஏனெனில் அகத்திக்கீரையை நலம் காக்கும் “அமிர்தபிந்து” என்றும், நெல்லிக்காயில் செல்வத்துக்கு அதிபதியான மகாலட்சுமியை மார்பில் சுமந்த ஹரி வாசம் செய்வதாகவும், சுண்டைக்காயில் பாற்கடலில் அமுதம் வேண்டி கடைந்தபோது வெளிவந்த பிணிகளைத் தீர்க்கும் மருத்துவக் கடவுளான தன்வந்திரியின் நிழல் இருப்பதாகவும் முன்னோர் வாக்கு.
இந்த விரதத்தில் ஒரு முக்கியமான தகவலும் உண்டு. துவாதசியன்று காலையில் உண்டு விரதம் முடித்த பிறகு, எக்காரணம் கொண்டும் பகலில் உறங்கக்கூடாது. விரதத்தின் போது விஷ்ணுவுக்கு உகந்த துளசியை பறிக்கக்கூடாது. பூஜைக்கான துளசியை முதல்நாளே பறித்து விடுவது சிறப்பு. இந்த விரதத்தை உற்றார் உறவினரோடு பகவானின் சிந்தையில் மகிழ்ந்து, அவன் புகழை பாடி பூஜைகள் செய்து, அரங்கன் குடியிருக்கும் ஆலயங்களுக்கு சென்று வழிபடுவது மிகச் சிறப்பாகும்.
மார்கழி ஏகாதசியை முறையாக வழிபடும் முறையை தொடங்கியவர், திருமங்கையாழ்வார். வைணவத் தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் விழாக்களில், மிகவும் சிறப்பானதாக இருப்பது வைகுண்ட ஏகாதசி விழாதான்.
இங்கு மட்டுமல்ல சென்னை திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோவில், சேலம் கோட்டை அழகிரிநாதர் கோவில் போன்ற அனைத்து பிரசித்திபெற்ற பெருமாள் ஆலயங்களிலும் கொடியேற்று விழா தொடங்கி, பத்து நாட்கள் விழாவாக சிறப்பாக கொண்டாடப்படும்.
இராபத்து தொடங்கும் வைகுண்ட ஏகாதசியன்று, சொர்க்கவாசல் எனப்படும் முக்தி தரும் வாசல் திறப்பு நடைபெறும். அன்று ஸ்ரீரங்க மூலவருக்கு முத்தங்கி அணிவிக்கப் படும். அதிகாலை 4.30 மணியளவில் மூலஸ்தானத்தில் இருந்து பெருமாள் ரத்ன அங்கி அணிந்துவாறு, முகத்தில் மந்தகாசப் புன்னகையுடன் தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு அருளைப் பொழிந்தவாறு பரமபத வாசல் வழியாக எழுந்தருள்வார்.
மனிதனாக பிறப்பு எடுத்த நாம் நம் ஞானேந்திரியங்கள் ஐந்தையும், கர்மேந்திரியங்கள் ஐந்தையும், மனம் என்ற ஒன்றையும், பரம்பொருளுடன் ஒன்றுபடுத்தி நிம்மதியான வாழ்வைப் பெற வைகுண்ட ஏகாதசி விரதம் வழிகாட்டுகிறது.
மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையில் பாலமாக இருப்பது விரதங்கள். மனிதனின் வாழ்வில் எழும் பிரச்சினைகளுக்கு ஏற்ப, கடவுள்களும் விரதங்களும் மாறுபடும். ஆனால் அனைத்து விரதங்களிலும் முதன்மையாக திகழ்கிறது காக்கும் கடவுளான விஷ்ணுவை எண்ணி கடைப்பிடிக்கும் ‘வைகுண்ட ஏகாதசி விரதம்.’
ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் இருந்து 11-ம் நாள் ஏகாதசி. அவை சுக்லபட்ச ஏகாதசி, கிருஷ்ணபட்ச ஏகாதசி என அழைக்கப்படுகின்றன. வைணவ பக்தர்கள் அந்நாட்களில் முழு உபவாசம் இருந்து, மறுநாள் துவாதசியில், பூஜை முடித்த பின்பே காலை உணவு உட்கொள்வது வழக்கம். ஒரு வருடத்தில் 24 அல்லது 25 ஏகாதசிகள் வரும். அனைத்து ஏகாதசிகளிலும் விரதமிருந்து வழிபடுவோர் பிறவித் துயர் நீங்கி வைகுண்ட பதவி அடைவர் என்பது நம்பிக்கை.
மாதந்தோறும் வரும் ஏகாதசி திதிகளை விட, மார்கழியில் வரும் ஏகாதசிக்கு பெரும் சிறப்பு உண்டு. ஏகாதசியில் விரதம் இருந்த அம்பரீஷன் என்ற அரசனை, துர்வாச முனிவரின் சாபத்தில் இருந்து காக்க, விஷ்ணு பகவான் தன்னுடைய சக்கரத்தை அனுப்பி புராண நிகழ்வு நடந்த மாதமாக மார்கழி ஏகாதசி இருக்கிறது.
அம்பரீசனுக்கு இடையூறு செய்த துர்வாசரை, சுதர்சன சக்கரம் துரத்தியது. அதனிடம் இருந்து தன்னைக் காப்பாற்றும்படி, வைகுண்டம் சென்று பெரு மாளைப் பணிந்தார் துர்வாசர். ஆனால் துர்வாச முனிவரைக் காப்பாற்றும் தகுதி, ஏகாதசியில் தூய விரதம் இருந்து திருமாலை வழிபட்ட அம்பரீசனுக்கே அளிக்கப்பட்டது. ஏகாதசியின் சிறப்பு அத்தகையது.
வைகுண்ட ஏகாதசி விரதம் கடைப்பிடிப்போரின் கடைக்கண் பார்வைக்கு, அந்த கண்ணன் அடிமையாகி அவர்களின் கவலைகளைத் தீர்த்து இறுதியில் வைகுண்டம் அழைத்து முக்தி தருவான் என்பது நம்பிக்கை.
தனது நண்பரான குசேலன் கொண்டுவந்த அவலை உண்டு, அவருக்கு சகல ஐஸ்வரியங்களும் கிடைக்க கண்ணன் வழி செய்தார். குசேலனுக்கு இறைவன் அருள் செய்தது இந்த மார்கழி ஏகாதசி என்பதால், பக்தர்கள் அன்றைய தினம் இரவு விழித்திருந்து பகவானுக்கு அவல் நைவேத்தியம் படைத்து வேண்டினால், அவர்களின் ஆவல் நிறைவேறும்.
வருடம் முழுதும் ஏகாதசி விரதம் அனுஷ்டிக்க இயலாதவர்கள், மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசியில் மட்டுமாவது விரதம் இருப்பது சிறப்பான பலனைத் தரும். ஒரு முறை நாம் இருக்கும் வைகுண்ட ஏகாதசி விரதமானது, மூன்று கோடி ஏகாதசி விரதங்களுக்கு ஒப்பாகும் என்பதால், இவ்விரதத்தை “முக்கோடி ஏகாதசி” என்றும் அழைக்கின்றனர்.
ஏகாதசி விரதம் 10-வது திதியாகிய தசமி, 11-வது திதியாகிய ஏகாதசி, 12-ம் திதியாகிய துவாதசி என்று 3 திதிகளிலும் மேற்கொள்ளும் விரதமாக அமைந்துள்ளது. ஆகவே ஏகாதசி விரதம் இருப்பவர்கள், அதற்கு முன்தினமான தசமி நாளிலேயே தங்கள் விரதத்தை தொடங்க வேண்டும். அன்றைய தினம் பெருமாளை வழிபட்டு ஒருவேளை மட்டும் சாப்பிட்டு, மறுநாள் ஏகாதசியன்று முழுமையான உண்ணாவிரதத்தை கடைப்பிடிக்க வேண்டும்.

நம்மைப் பாதிக்கும் பிரச்சினைகள், விடாமல் துரத்தினாலும் நாம் நம் சிந்தையை ஒருங்கிணைத்து அவன் பாதம் நாடி அருளைப்பெற இரவு-பகல் பாராமல், இறைவனின் நாமம் ஓதுவதில் கவனம் கொள்ள வேண்டும். வீண் கதைகள் பேசி பொழுதுகளை போக்குவது நன்மை தராது. இந்த நோக்கத்தின் அடிப்படையில் தசமிக்கு அடுத்த ஏகாதசியன்று இரவில் கண்விழித்து பெருமாளின் பெருமைகளை எடுத்துக்காட்டும் கதைகளைப் படிப்பதும், கேட்பதுமாக இருக்க வேண்டும். விஷ்ணு சகஸ்ர நாமம், ரங்கநாதர் ஸ்துதி போன்ற பெருமாள் மீதான பதிகங்களை ஓதுவது நல்லது. எதையும் படிக்கவோ மனனம் செய்யவோ முடியாதவர்கள் “ஓம் நமோ நாராயணா” எனும் எட்டெழுத்து மந்திரத்தை மனதில் நிறுத்தினாலே அந்த நாராயணனின் அருளுக்கு பாத்திரமாகலாம்.
மறுநாள் துவாதசி திதி அன்று, இந்த பருவத்தில் கிடைக்கும் 21 வகை காய்கறிகளை சமைத்து சூரிய உதயத்திற்கு முன் உண்ணுதல் நலம் தரும். சத்துக்கள் நிறைந்த காய்கறிகளை விரதம் முடித்து உண்பதால் உடல் ஆரோக்கியத்துக்கும் இவ்விரதம் உதவுகிறது. அனைத்து காய்கறிகளும் இல்லை என்றாலும், அகத்திக் கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் ஆகியவை அவசியம் இடம்பெற வேணடும்.
ஏனெனில் அகத்திக்கீரையை நலம் காக்கும் “அமிர்தபிந்து” என்றும், நெல்லிக்காயில் செல்வத்துக்கு அதிபதியான மகாலட்சுமியை மார்பில் சுமந்த ஹரி வாசம் செய்வதாகவும், சுண்டைக்காயில் பாற்கடலில் அமுதம் வேண்டி கடைந்தபோது வெளிவந்த பிணிகளைத் தீர்க்கும் மருத்துவக் கடவுளான தன்வந்திரியின் நிழல் இருப்பதாகவும் முன்னோர் வாக்கு.
இந்த விரதத்தில் ஒரு முக்கியமான தகவலும் உண்டு. துவாதசியன்று காலையில் உண்டு விரதம் முடித்த பிறகு, எக்காரணம் கொண்டும் பகலில் உறங்கக்கூடாது. விரதத்தின் போது விஷ்ணுவுக்கு உகந்த துளசியை பறிக்கக்கூடாது. பூஜைக்கான துளசியை முதல்நாளே பறித்து விடுவது சிறப்பு. இந்த விரதத்தை உற்றார் உறவினரோடு பகவானின் சிந்தையில் மகிழ்ந்து, அவன் புகழை பாடி பூஜைகள் செய்து, அரங்கன் குடியிருக்கும் ஆலயங்களுக்கு சென்று வழிபடுவது மிகச் சிறப்பாகும்.
மார்கழி ஏகாதசியை முறையாக வழிபடும் முறையை தொடங்கியவர், திருமங்கையாழ்வார். வைணவத் தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் விழாக்களில், மிகவும் சிறப்பானதாக இருப்பது வைகுண்ட ஏகாதசி விழாதான்.
இங்கு மட்டுமல்ல சென்னை திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோவில், சேலம் கோட்டை அழகிரிநாதர் கோவில் போன்ற அனைத்து பிரசித்திபெற்ற பெருமாள் ஆலயங்களிலும் கொடியேற்று விழா தொடங்கி, பத்து நாட்கள் விழாவாக சிறப்பாக கொண்டாடப்படும்.
இராபத்து தொடங்கும் வைகுண்ட ஏகாதசியன்று, சொர்க்கவாசல் எனப்படும் முக்தி தரும் வாசல் திறப்பு நடைபெறும். அன்று ஸ்ரீரங்க மூலவருக்கு முத்தங்கி அணிவிக்கப் படும். அதிகாலை 4.30 மணியளவில் மூலஸ்தானத்தில் இருந்து பெருமாள் ரத்ன அங்கி அணிந்துவாறு, முகத்தில் மந்தகாசப் புன்னகையுடன் தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு அருளைப் பொழிந்தவாறு பரமபத வாசல் வழியாக எழுந்தருள்வார்.
மனிதனாக பிறப்பு எடுத்த நாம் நம் ஞானேந்திரியங்கள் ஐந்தையும், கர்மேந்திரியங்கள் ஐந்தையும், மனம் என்ற ஒன்றையும், பரம்பொருளுடன் ஒன்றுபடுத்தி நிம்மதியான வாழ்வைப் பெற வைகுண்ட ஏகாதசி விரதம் வழிகாட்டுகிறது.
வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பவர்கள் சகலவிதமான சவுபாக்கியங்களையும் அடைவர். இவ்விரதத்தால் உடல் நலமும் ஆரோக்கியத்துடன் திகழும்.
* ஏகாதசி விரதத்தை மேற்கொள்ள இருப்பவர்கள் ஏகாதசிக்கு முதல் நாளான தசமியன்று பகலில் ஒரு வேளை மட்டுமே உணவு சாப்பிடவேண்டும்.
* ஏகாதசி அன்று அதிகாலையிலேயே கண்விழித்து குளித்து விட்டு, பூஜை செய்து விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.
* ஏகாதசி திதி முழுவதும் முடிந்தவரை பூரண உபவாசம் (பட்டினியாக) இருக்கவேண்டும். குளிர்ந்த நீரை குடிக்கலாம். ஏழுமுறை துளசி இலையை சாப்பிடலாம். ஏகாதசி குளிர் மாதமான மார்கழியில் வருவதனால், உடலுக்கு வெப்பம் கிடைக்க துளசியை சாப்பிடவேண்டும். பட்டினி கிடப்பதினால், ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வுகிடைக்கிறது. குளிர்ந்த நீர் வயிறை சுத்தமாக்குகிறது. அப்படி முழுவதும் பட்டினியாக இருக்க முடியாதவர்கள் நெய், காய்கனிகள்,பழங்கள், நிலக்கடலை, பால், தயிர் போன்றவற்றை இறைவனுக்கு படைத்து உண்ணலாம்.
* இரவு முழுவதும் கண்விழித்து புராண நூல்களை படிப்பதும்,விஷ்ணு சகஸ்ரநாமம், விஷ்ணு பாடல்கள் மற்றும் ரங்கநாதர் ஸ்துதி முதலியவற்றை ஓதுவதுமாக பொழுதுபோக்க வேண்டும். கண் விழிக்கிறோம் என்றபெயரில் சினிமா,டிவி பார்க்க கூடாது.
* ஏகாதசிக்கு அடுத்த நாள் துவாதசி வருகிறது. துவாதசி அன்று அதி காலையில் உணவு அருந்துவதை பாரணை என அழைக்கிறோம். துவாதசியன்று அதி காலையில் உப்பு, புளிப்பு போன்ற சுவை இல்லாத உணவாக நெல்லிக்கனி, சுண்டைக்காய், அகத்தி கீரை இவைகளைசேர்த்து கோவிந்தா! கோவிந்தா!, கோவிந்தா... என மூன்று முறை_கூறி வாழை இலையில் உணவுவிட்டு சாப்பிட்டு விரதத்தை முடிக்கவேண்டும். அகத்தி கீரை பொரியல், நெல்லிக்காய் பச்சடி வறுத்த சுண்டைக்காய் சாம்பார் ஆகியவை முக்கியமானவை.
* துவாதசியன்று பஞ்சாங்கத்தில் காட்டியபடி குறிப்பிட்டநேரத்தில் ஏகாதசி விரதத்தை முடிக்கவேண்டும்.
* உணவு சாப்பிடும் முன் அதை பெரியோர்களுக்கு வழங்க வேண்டும். அன்று பகலில் தூங்காமல் இருக்க வேண்டும்.ஏகாதசி விரதம் பத்தாவது திதியாகிய தசமி, பதினொன்றாவது திதியாகிய ஏகாதசி, பன்னிரண்டாம் திதியாகிய துவாதசி என மூன்று திதிகளிலும் மேற்கொள்ளும் விரதமாக அமைந்து உள்ளது. ஏகாதசி விரதம் இருப்பவர்கள் சகலவிதமான சவுபாக்கியங்களையும் அடைவர். இவ்விரதத்தால் உடல் நலமும் ஆரோக்கியத்துடன் திகழும்.
* ஏகாதசி அன்று அதிகாலையிலேயே கண்விழித்து குளித்து விட்டு, பூஜை செய்து விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.
* ஏகாதசி திதி முழுவதும் முடிந்தவரை பூரண உபவாசம் (பட்டினியாக) இருக்கவேண்டும். குளிர்ந்த நீரை குடிக்கலாம். ஏழுமுறை துளசி இலையை சாப்பிடலாம். ஏகாதசி குளிர் மாதமான மார்கழியில் வருவதனால், உடலுக்கு வெப்பம் கிடைக்க துளசியை சாப்பிடவேண்டும். பட்டினி கிடப்பதினால், ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வுகிடைக்கிறது. குளிர்ந்த நீர் வயிறை சுத்தமாக்குகிறது. அப்படி முழுவதும் பட்டினியாக இருக்க முடியாதவர்கள் நெய், காய்கனிகள்,பழங்கள், நிலக்கடலை, பால், தயிர் போன்றவற்றை இறைவனுக்கு படைத்து உண்ணலாம்.
* இரவு முழுவதும் கண்விழித்து புராண நூல்களை படிப்பதும்,விஷ்ணு சகஸ்ரநாமம், விஷ்ணு பாடல்கள் மற்றும் ரங்கநாதர் ஸ்துதி முதலியவற்றை ஓதுவதுமாக பொழுதுபோக்க வேண்டும். கண் விழிக்கிறோம் என்றபெயரில் சினிமா,டிவி பார்க்க கூடாது.
* ஏகாதசிக்கு அடுத்த நாள் துவாதசி வருகிறது. துவாதசி அன்று அதி காலையில் உணவு அருந்துவதை பாரணை என அழைக்கிறோம். துவாதசியன்று அதி காலையில் உப்பு, புளிப்பு போன்ற சுவை இல்லாத உணவாக நெல்லிக்கனி, சுண்டைக்காய், அகத்தி கீரை இவைகளைசேர்த்து கோவிந்தா! கோவிந்தா!, கோவிந்தா... என மூன்று முறை_கூறி வாழை இலையில் உணவுவிட்டு சாப்பிட்டு விரதத்தை முடிக்கவேண்டும். அகத்தி கீரை பொரியல், நெல்லிக்காய் பச்சடி வறுத்த சுண்டைக்காய் சாம்பார் ஆகியவை முக்கியமானவை.
* துவாதசியன்று பஞ்சாங்கத்தில் காட்டியபடி குறிப்பிட்டநேரத்தில் ஏகாதசி விரதத்தை முடிக்கவேண்டும்.
* உணவு சாப்பிடும் முன் அதை பெரியோர்களுக்கு வழங்க வேண்டும். அன்று பகலில் தூங்காமல் இருக்க வேண்டும்.ஏகாதசி விரதம் பத்தாவது திதியாகிய தசமி, பதினொன்றாவது திதியாகிய ஏகாதசி, பன்னிரண்டாம் திதியாகிய துவாதசி என மூன்று திதிகளிலும் மேற்கொள்ளும் விரதமாக அமைந்து உள்ளது. ஏகாதசி விரதம் இருப்பவர்கள் சகலவிதமான சவுபாக்கியங்களையும் அடைவர். இவ்விரதத்தால் உடல் நலமும் ஆரோக்கியத்துடன் திகழும்.
வைகுண்ட ஏகாதசி விரதத்திற்கு பாவத்தை போக்கும் சக்தி உண்டு. வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பவர்கள் பாவம் அனைத்தும் நீங்கப்பெற்று வைகுண்டம் சேர்வார்கள்.
கயிலை நாதனான சிவபெருமான், ஒருமுறை பார்வதி தேவிக்கு ஏகாதசி விரத மகிமையை எடுத்துக் கூறினார். ஏகாதசி விரதத்திற்கு பாவத்தை போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேத யாகம் செய்த பலனை ஏகாதசி விரதத்தால் பெறலாம். முப்பத்து முக்கோடி தேவர்களும் அனுசரிக்கும் விரதம் இது என்றார்.
உள்ளத்தின் பக்தி உணர்வுகளையும், உடலின் ஆரோக்கியத்தையும் இணைப்பது விரதம். இதனால் உள்ளத் தூய்மை, உடலின் அகத்தூய்மை முதலிய பல நன்மைகள் உண்டாகின்றன. எனவே அனைத்து ஏகாதசியன்றும் பலர் விரதம் காக்கின்றனர். சிறப்பாக பலர் வைகுண்ட ஏகாதசி விரதம் மேற்கொள்கின்றனர். வைகுண்ட ஏகாதசியன்று விஷ்ணுவை நினைத்து விரதம் இருக்கவேண்டும். ஏகாதசி விரதம் இருப்பவர்கள் முதல் நாளான தசமி அன்று ஒரு பொழுது உணவு உண்ண வேண்டும். ஏகாதசி நாளில் உண்ணாமலும், உறங்காமலும் இருக்கவேண்டும்.
மறுநாளான துவாதசியன்று சூரிய உதயத்திற்குள் நீராடி துளசி தீர்த்தம் அருந்தவேண்டும். பாரணை என்னும் பலவகை காய்கறிகளுடன் கூடிய உணவை உண்ணவேண்டும். அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் ஆகியவை உணவில் அதிகம் இடம்பெறுதல் அவசியம். காலையிலேயே சாப்பாட்டை முடித்துவிட்டு பகல் முழுவதும் உறங்காமல் நாராயண நாமத்தை ஜெபித்தபடி இருக்க வேண்டும்.
வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பவர்கள் பாவம் அனைத்தும் நீங்கப்பெற்று வைகுண்டம் சேர்வார்கள். மாதத்திற்கு இரண்டு ஏகாதசிகளாக வருடத்திற்கு 24 ஏகாதசிகள் வருகின்றன. மார்கழி வளர்பிறையில் வருவது 25-வது ஏகாதசி. இதுவே வைகுண்ட ஏகாதசி. இதை மோட்ச ஏகாதசி, பெரிய ஏகாதசி, விரதமிருப்பவர்களுக்கு அளவற்ற பலன்களை தருவதால் முக்கோடி ஏகாதசி என்றும் கூறுவர். தேவர்களுக்கு இடைவிடாத துன்பத்தை தந்த முராசுரனை விஷ்ணு கொன்ற நாளும் இதுவாகும்.
உள்ளத்தின் பக்தி உணர்வுகளையும், உடலின் ஆரோக்கியத்தையும் இணைப்பது விரதம். இதனால் உள்ளத் தூய்மை, உடலின் அகத்தூய்மை முதலிய பல நன்மைகள் உண்டாகின்றன. எனவே அனைத்து ஏகாதசியன்றும் பலர் விரதம் காக்கின்றனர். சிறப்பாக பலர் வைகுண்ட ஏகாதசி விரதம் மேற்கொள்கின்றனர். வைகுண்ட ஏகாதசியன்று விஷ்ணுவை நினைத்து விரதம் இருக்கவேண்டும். ஏகாதசி விரதம் இருப்பவர்கள் முதல் நாளான தசமி அன்று ஒரு பொழுது உணவு உண்ண வேண்டும். ஏகாதசி நாளில் உண்ணாமலும், உறங்காமலும் இருக்கவேண்டும்.
மறுநாளான துவாதசியன்று சூரிய உதயத்திற்குள் நீராடி துளசி தீர்த்தம் அருந்தவேண்டும். பாரணை என்னும் பலவகை காய்கறிகளுடன் கூடிய உணவை உண்ணவேண்டும். அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் ஆகியவை உணவில் அதிகம் இடம்பெறுதல் அவசியம். காலையிலேயே சாப்பாட்டை முடித்துவிட்டு பகல் முழுவதும் உறங்காமல் நாராயண நாமத்தை ஜெபித்தபடி இருக்க வேண்டும்.
வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பவர்கள் பாவம் அனைத்தும் நீங்கப்பெற்று வைகுண்டம் சேர்வார்கள். மாதத்திற்கு இரண்டு ஏகாதசிகளாக வருடத்திற்கு 24 ஏகாதசிகள் வருகின்றன. மார்கழி வளர்பிறையில் வருவது 25-வது ஏகாதசி. இதுவே வைகுண்ட ஏகாதசி. இதை மோட்ச ஏகாதசி, பெரிய ஏகாதசி, விரதமிருப்பவர்களுக்கு அளவற்ற பலன்களை தருவதால் முக்கோடி ஏகாதசி என்றும் கூறுவர். தேவர்களுக்கு இடைவிடாத துன்பத்தை தந்த முராசுரனை விஷ்ணு கொன்ற நாளும் இதுவாகும்.
வைகுண்ட ஏகாதசி தினத்தன்று விரதமிருந்து விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்து அந்த பரந்தாமனின் அருளையும், நீங்காத செல்வத்தை பெற்று உன்னதமான வாழ்வை பெறுவோமாக.
ஏகாதசிக்கு நிகரான விரதம் இல்லை என்ற வாக்கியமே ஏகாதசி விரதத்தின் மகிமையை நமக்கு சொல்லும். மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. அன்றுதான், அர்ஜூனனுக்குக் கீதையை உபதேசம் செய்தார் கிருஷ்ண பரமாத்மா. இந்த நாளை, கீதா ஜெயந்தி என்று கொண்டாடுகின்றனர்.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி திருக்கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீபெரும்புதூர், திருப்பதி மற்றும் அனைத்து வைஷ்னவ திவ்ய தேசங்களிலும் பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நடைபெறும்.
அதனை தொடர்ந்து சென்னை பார்த்தசாரதி திருக்கோவில், திருமயிலை கேசவ பெருமாள், மாதவ பெருமாள், ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் போன்ற வைஷ்னவ ஸ்தலங்களிலும் வைகுண்ட ஏகாதசி சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
ஏகாதசி விரதம் இருந்து விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்வது மிகவும் விஷேசமாகும். விஷ்ணு சகஸ்ரநாம ஸ்தோத்திர பாராயணம் செய்வதால் விஷ்னுவை அதிதேவதையாக கொண்ட புதன் கிரக தோஷங்களும் சனி கிரக தோஷங்களும் நீங்கி பல உயர்வான நற்பலன்கள் ஏற்படும். மேலும் திதி சூன்ய தோஷம் மற்றும் பித்ரு தோஷம் நீங்கும்.
எனவே வைகுண்ட ஏகாதசி தினத்தன்று விரதமிருந்து விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயனம் செய்து அந்த பரந்தாமனின் அருளை திருப்பாவையின் நீங்காத செல்வம் நிறைந்தேலொரெம்பாவை என்பதற்கிணங்க நீங்காத செல்வத்தை பெற்று உன்னதமான வாழ்வை பெறுவோமாக.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி திருக்கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீபெரும்புதூர், திருப்பதி மற்றும் அனைத்து வைஷ்னவ திவ்ய தேசங்களிலும் பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நடைபெறும்.
அதனை தொடர்ந்து சென்னை பார்த்தசாரதி திருக்கோவில், திருமயிலை கேசவ பெருமாள், மாதவ பெருமாள், ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் போன்ற வைஷ்னவ ஸ்தலங்களிலும் வைகுண்ட ஏகாதசி சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
ஏகாதசி விரதம் இருந்து விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்வது மிகவும் விஷேசமாகும். விஷ்ணு சகஸ்ரநாம ஸ்தோத்திர பாராயணம் செய்வதால் விஷ்னுவை அதிதேவதையாக கொண்ட புதன் கிரக தோஷங்களும் சனி கிரக தோஷங்களும் நீங்கி பல உயர்வான நற்பலன்கள் ஏற்படும். மேலும் திதி சூன்ய தோஷம் மற்றும் பித்ரு தோஷம் நீங்கும்.
எனவே வைகுண்ட ஏகாதசி தினத்தன்று விரதமிருந்து விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயனம் செய்து அந்த பரந்தாமனின் அருளை திருப்பாவையின் நீங்காத செல்வம் நிறைந்தேலொரெம்பாவை என்பதற்கிணங்க நீங்காத செல்வத்தை பெற்று உன்னதமான வாழ்வை பெறுவோமாக.
மார்கழி மாதத்தில், முக்கியமாக பெண்கள் ஏற்கும் விரதம், மார்கழி நோன்பு ஆகும். பாவை நோன்பு இருக்கும் பெண்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும்.
மார்கழியில் நோற்றதால் மார்கழி நோன்பு என்றும், கன்னிப்பெண்களால் நோற்கப்படுவதால் பாவை நோன்பு என்றும் கூறப்படுகின்றது. இந்த நாளில் திருப்பாவை, திருவெம்பாவை பாடி இறைவனை வணங்குகின்றனர்.
மார்கழி மாதத்தில், முக்கியமாக பெண்கள் ஏற்கும் விரதம், மார்கழி நோன்பு ஆகும். ஆயர்ப்பாடியிலுள்ள கன்னியர்கள், நாட்டு முன்னேற்றத்திற்காகவும், பால் வளம் பெருகவும், நல்ல கணவர்களை அடையவும், நோன்பு நோற்றனர்.
கன்னியர்கள் விடியற்காலை எழுந்து, மற்றப் பெண்களையும் எழுப்பி, ஆற்றங்கரை சென்று, அங்குள்ள மணலினால் பாவை போன்ற உருவம் செய்து, மலர்கள் சூட்டி, பார்வதிதேவியை பாடித்துதித்து வழிபட்டனர். பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒரே பெண்மணியானவரான ஆண்டாள் இயற்றிய பாவைப்பாட்டாகிய (இறைவன் மீது பாடப்பட்ட பாடல்கள்) திருப்பாவையும், மாணிக்கவாசகர் சிவபெருமான் மீது இயற்றிய திருவெம்பாவையும் பாவைப்பாட்டுக்களில் சிறந்தவை.
மார்கழி மாதம் தேவர்களின் இரவுக் காலம் முடியும் காலம் ஆகும். இதை உஷத் காலம் என்றும் வைகறைப் பொழுது என்றும் கூறுவது உண்டு. இந்த மாதத்தில் யார் விடியற்காலத்தில் எழுந்து பக்தியுடன் பகவானைத் தொழுகிறார்களோ அவர்கள் சகல சவுபாக்கியங்களையும் பெறுவதுடன் ஆண்டவனின் அருளுக்கும் பாத்திரமாவார்கள்.
மார்கழி மாதத்தில் அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து வீதிகளில் பஜனை செய்தல் வேண்டும். திருப்பாவை, திருவெம்பாவை ஆகியவை பாட வேண்டும். மார்கழி மாதம் முழுவதும் நெய் உண்ணோம், பால் உண்ணோம் என்பார் ஆண்டாள். இவ்வாறு விரதம் இருந்து காலையில் பஜனை செய்து ஆண்டவனை வழிபட அருள் கிடைக்கும்.
மார்கழி மாத நோன்பால் உள்ளத்தையும் உடலையும் நாம் தூய்மையாக்கி கொள்ள முடியும். அது மட்டுமின்றி மார்கழி மாத நோன்பு நமது பிறவிப்பயனே ஆண்டவனை அடைவது தான் என்பதை உணர்த்துகிறது. தெய்வமே எங்களுக்கு நல்ல கணவனைக் கொடு என்பது தான் கன்னிப்பெண்களின் பிரார்த்தனையாக இருக்கும். மாத பாவை நோன்பு இருக்கும் பெண்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும். பொங்கல் நைவேத்தியம் வைப்பது நல்லது.
மார்கழி மாதத்தில், முக்கியமாக பெண்கள் ஏற்கும் விரதம், மார்கழி நோன்பு ஆகும். ஆயர்ப்பாடியிலுள்ள கன்னியர்கள், நாட்டு முன்னேற்றத்திற்காகவும், பால் வளம் பெருகவும், நல்ல கணவர்களை அடையவும், நோன்பு நோற்றனர்.
கன்னியர்கள் விடியற்காலை எழுந்து, மற்றப் பெண்களையும் எழுப்பி, ஆற்றங்கரை சென்று, அங்குள்ள மணலினால் பாவை போன்ற உருவம் செய்து, மலர்கள் சூட்டி, பார்வதிதேவியை பாடித்துதித்து வழிபட்டனர். பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒரே பெண்மணியானவரான ஆண்டாள் இயற்றிய பாவைப்பாட்டாகிய (இறைவன் மீது பாடப்பட்ட பாடல்கள்) திருப்பாவையும், மாணிக்கவாசகர் சிவபெருமான் மீது இயற்றிய திருவெம்பாவையும் பாவைப்பாட்டுக்களில் சிறந்தவை.
மார்கழி மாதம் தேவர்களின் இரவுக் காலம் முடியும் காலம் ஆகும். இதை உஷத் காலம் என்றும் வைகறைப் பொழுது என்றும் கூறுவது உண்டு. இந்த மாதத்தில் யார் விடியற்காலத்தில் எழுந்து பக்தியுடன் பகவானைத் தொழுகிறார்களோ அவர்கள் சகல சவுபாக்கியங்களையும் பெறுவதுடன் ஆண்டவனின் அருளுக்கும் பாத்திரமாவார்கள்.
மார்கழி மாதத்தில் அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து வீதிகளில் பஜனை செய்தல் வேண்டும். திருப்பாவை, திருவெம்பாவை ஆகியவை பாட வேண்டும். மார்கழி மாதம் முழுவதும் நெய் உண்ணோம், பால் உண்ணோம் என்பார் ஆண்டாள். இவ்வாறு விரதம் இருந்து காலையில் பஜனை செய்து ஆண்டவனை வழிபட அருள் கிடைக்கும்.
மார்கழி மாத நோன்பால் உள்ளத்தையும் உடலையும் நாம் தூய்மையாக்கி கொள்ள முடியும். அது மட்டுமின்றி மார்கழி மாத நோன்பு நமது பிறவிப்பயனே ஆண்டவனை அடைவது தான் என்பதை உணர்த்துகிறது. தெய்வமே எங்களுக்கு நல்ல கணவனைக் கொடு என்பது தான் கன்னிப்பெண்களின் பிரார்த்தனையாக இருக்கும். மாத பாவை நோன்பு இருக்கும் பெண்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும். பொங்கல் நைவேத்தியம் வைப்பது நல்லது.






