என் மலர்
தோஷ பரிகாரங்கள்
11 திங்கட்கிழமைகள் தொடர்ச்சியாக இத்தல இறைவனுக்கு அபிஷேக, ஆராதனை செய்து வழிபட்டு, பின்னர் மகாலட்சுமியையும், ஜேஷ்டா தேவியையும், பைரவரையும் வணங்கினால் வறுமையும், கடன்களும் தீரும்.
கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் சுமார் 15 கிலோமீட்டரில் உள்ளது, திருச்சேறை திருத்தலம். இங்கு செந்நெறியப்பர் கோவில் அமைந்துள்ளது.
ஒருவர் முற்பிறவிகளில் செய்த பாவங்கள், அடுத்தடுத்த பிறவிகளிலும் தொடர்கிறது. முன்வினைப் பயன்கள் அனைத்தும் பிறவிக் கடன்களாகின்றன. முற்பிறவி தீவினைகள் நீங்கவும், இப்பிறவியின் கடன்கள் தீரவும், வறுமை நீங்கி சுபிட்சமான வாழ்க்கை கிடைத்திடவும் இந்த ஆலயத்தில் அருளும் செந்நெறியப்பரை வணங்கலாம் என்கிறது தல வரலாறு.
இதனால்தான் இந்த இறைவனை ‘ரிண விமோஷன லிங்கேஸ்வரர்’ என்றும் அழைக்கிறார்கள். 11 திங்கட்கிழமைகள் தொடர்ச்சியாக இத்தல இறைவனுக்கு அபிஷேக, ஆராதனை செய்து வழிபட்டு, பின்னர் மகாலட்சுமியையும், ஜேஷ்டா தேவியையும், பைரவரையும் வணங்கினால் வறுமையும், கடன்களும் தீரும்.
ஒருவர் முற்பிறவிகளில் செய்த பாவங்கள், அடுத்தடுத்த பிறவிகளிலும் தொடர்கிறது. முன்வினைப் பயன்கள் அனைத்தும் பிறவிக் கடன்களாகின்றன. முற்பிறவி தீவினைகள் நீங்கவும், இப்பிறவியின் கடன்கள் தீரவும், வறுமை நீங்கி சுபிட்சமான வாழ்க்கை கிடைத்திடவும் இந்த ஆலயத்தில் அருளும் செந்நெறியப்பரை வணங்கலாம் என்கிறது தல வரலாறு.
இதனால்தான் இந்த இறைவனை ‘ரிண விமோஷன லிங்கேஸ்வரர்’ என்றும் அழைக்கிறார்கள். 11 திங்கட்கிழமைகள் தொடர்ச்சியாக இத்தல இறைவனுக்கு அபிஷேக, ஆராதனை செய்து வழிபட்டு, பின்னர் மகாலட்சுமியையும், ஜேஷ்டா தேவியையும், பைரவரையும் வணங்கினால் வறுமையும், கடன்களும் தீரும்.
குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் தங்களுக்கு குழந்தை வரம் வேண்டி மனமுருகி நிலக்கோட்டை மாரியம்மனிடம் வேண்டுதல் வைப்பார்கள்.
குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் தங்களுக்கு குழந்தை வரம் வேண்டி மனமுருகி நிலக்கோட்டை மாரியம்மனிடம் வேண்டுதல் வைப்பார்கள். பின்னர் வேண்டுதல் நிறைவேறியதும் புத்தம் புதிய சேலையை மஞ்சள் நீரில் நனைத்து அதை கரும்பு தொட்டில் கட்டி குழந்தையை அதில் வைத்து நிலக்கோட்டை முக்கிய வீதிகளில் வலம் வருவார்கள்.
பின்னர் நிலக்கோட்டை மாரியம்மன் கோவிலை மூன்று முறை சுற்றி நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். இதையடுத்து தொட்டில் கட்டிய கரும்புகளை கோவில் முன்புள்ள நிர்வாகிகளிடம் ஒப்படைத்து காணிக்கையாக செலுத்துவார்கள். மாரியம்மன் கோவிலை பொறுத்தவரை ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான கரும்புகள் பெருகிய வண்ணம் இருக்கிறது.
இதுகுறித்து கோவில் பூசாரி மற்றும் பக்தர்கள் கூறும்போது, அம்மனின் அருளால் ஆண்டுதோறும் கரும்புத் தொட்டிலில் குழந்தையை வைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என தெரிவித்தார்கள்.
பின்னர் நிலக்கோட்டை மாரியம்மன் கோவிலை மூன்று முறை சுற்றி நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். இதையடுத்து தொட்டில் கட்டிய கரும்புகளை கோவில் முன்புள்ள நிர்வாகிகளிடம் ஒப்படைத்து காணிக்கையாக செலுத்துவார்கள். மாரியம்மன் கோவிலை பொறுத்தவரை ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான கரும்புகள் பெருகிய வண்ணம் இருக்கிறது.
இதுகுறித்து கோவில் பூசாரி மற்றும் பக்தர்கள் கூறும்போது, அம்மனின் அருளால் ஆண்டுதோறும் கரும்புத் தொட்டிலில் குழந்தையை வைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என தெரிவித்தார்கள்.
அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த கோவிலில் தரப்படும் தீர்த்தத்தை தொடர்ந்து 3 நாட்கள் அருந்தினால் அம்மை நோய் குணமாகும் என பக்தர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்கள்.
நிலக்கோட்டை மாரியம்மன் அருளால் பக்தர்களின் வாழ்வில் உள்ள இடர்பாடுகள் நீங்குகிறது. கோடை காலத்தில் பரவும் நோய்களில் ஒன்றான அம்மை நோய் மற்றும் வேறு பல கொடிய நோய்கள் ஏற்பட்டால் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களின் நோய் தீர அம்மனை மனதார வேண்டிக் கொள்வார்கள். குறிப்பாக அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கோவிலில் தரப்படும் தீர்த்தத்தை தொடர்ந்து 3 நாட்கள் அருந்தினால் அம்மை நோய் குணமாகும் என பக்தர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்கள். இதுபோல் மற்ற நோய்களுக்கும் அம்மனின் தீர்த்தம் மருந்தாக பயன்படுகிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது என கோவில் நிர்வாகிகளும், பூசாரிகளும் தெரிவித்தனர்.
நிலக்கோட்டை மாரியம்மன் கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள், நேர்த்திக்கடன் நிறைவேற்றியவுடன் கூடைகளில் வாழைப்பழங்களை எடுத்து வருவார்கள். பின்பு அவற்றை கோவில் முன்பு நின்று பழங்களை சூறையிட்டு வழிபாடு நடத்துவார்கள். இந்த வேண்டுதல் நிகழ்ச்சியும் ஆண்டாண்டு காலமாக தொன்றுதொட்டு இக்கோவிலில் நடைபெற்று வருகிறது.
நிலக்கோட்டை மாரியம்மன் கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள், நேர்த்திக்கடன் நிறைவேற்றியவுடன் கூடைகளில் வாழைப்பழங்களை எடுத்து வருவார்கள். பின்பு அவற்றை கோவில் முன்பு நின்று பழங்களை சூறையிட்டு வழிபாடு நடத்துவார்கள். இந்த வேண்டுதல் நிகழ்ச்சியும் ஆண்டாண்டு காலமாக தொன்றுதொட்டு இக்கோவிலில் நடைபெற்று வருகிறது.
பக்தர்கள் தங்களுக்கு தீங்கு செய்தவர்களைத் தண்டிக்க அம்மனிடம் முறையிடுவதும், தீய சக்திகளால் பிரிய நேர்ந்தவர்கள் இக்கோவிலுக்கு வந்து சேர்ந்து கொள்வதும் இக்கோவிலின் தனிச்சிறப்பு.
வெட்டுடையாரைக் கருப்பவேளார், காரிவேளார் என்ற பக்தர்கள் பூசித்து வந்தனர். ஒருசமயம் நள்ளிரவில் அய்யனார் சன்னதிக்கு அருகில் ஒரு ஈச்சமரத்தடியில் பேரொளி மின்னியதைக் கண்டனர். மறுநாள் காலையில் அங்கு அம்பிகையின் இயந்திரம் இருந்தது. அவ்விடத்தில் அம்பிகைக்கு சிலை வடித்து பிரதிட்டை செய்தனர். சுவாமியின் பெயரால் அவளுக்கு “வெட்டுடையார் காளி” என்றே பெயர் ஏற்பட்டது. காலப்போக்கில் இவள் பிரசித்தி பெறவே, இவளது பெயரிலேயே இத்தலம் அழைக்கப்பெற்றது.
இப்பகுதியை ஆட்சி செய்த வீரப்பெண்மணி வேலுநாச்சியாருக்கு பிறந்த குழந்தை, பேசாமல் இருந்தது. அக்குழந்தை பேசவைக்கும்படி வேலுநாச்சியார் அம்பிகையை வேண்டி, குழந்தைக்கு பேச்சு வந்தது. இதனால், மகிழ்ந்த வேலுநாச்சியார் அம்பிகைக்கு வைரத்தாலி காணிக்கை செய்து கொடுத்தார்.
குழந்தை வரம் கிடைக்கவும், பேசாத குழந்தைகளுக்கு பேச்சு நன்கு வரவும் இங்கு வேண்டிக் கொள்கின்றனர். இவளை வேண்டி பிரார்த்தனை நிறைவேறி, பக்தர்கள் உபயமாகக் கிடைத்த 20 கிலோ தங்கத்தில் இருந்தே கோவில் கொடிமரம், தங்க குதிரை வாகனம் மற்றும் தேர் திருப்பணி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நோய் நீங்க, திருமணம் நடக்க, புத்திர தோஷங்கள் நீங்க, அம்பிகைக்கு அபிசேகம் செய்வித்தும், முடிக்காணிக்கை செலுத்தியும் வழிபடுகின்றனர். மாங்கல்ய தோசம் நீங்க, அம்பாள் பாதத்தில் தாலி வைத்து வாங்கிச் செல்கின்றனர். குழந்தைச் செல்வம் கிட்ட, கோவிலுக்கு வெளியே உள்ள விசிறி மரத்தில் தொட்டில் கட்டுகின்றனர். பேசாத குழந்தைகளுக்கு பேச்சு நன்கு வரவும் இங்கு வேண்டிக் கொள்கின்றனர்.
நான்தான் பெரியவன் என்னும் கருவத்தால் பிரிந்தவர்கள் பலர். இவர்கள் மீண்டும் ஒன்று சேர வழிபடும் பிரதானத் தலம் இது. பிரச்னையால் பிரிந்துவிட்டு மீண்டும் சேர விரும்பும் தம்பதியர், உறவினர், சகோதரர்கள் இங்கு “கூடுதல் வழிபாடு” என்னும் பிரார்த்தனை செய்கின்றனர். பிரிந்து சென்றோர் இங்கு வந்து அம்பாளுக்கு பொங்கல் வைத்து, அதை அம்பிகை சன்னதி முன் வைத்து ஒன்றாகக் கூடுகின்றனர். பின், அம்பிகைக்கு முன், பிரச்னை ஏற்பட்டவர்கள் தங்களுக்குள் சமரசம் செய்து, தாங்கள் எப்போதும் ஒற்றுமையுடன் இருக்க வழிபடுகின்றனர். அம்பிகையே இவர்களுக்கு நடுநாயகமாக இருந்து சேர்த்து வைப்பதாக ஐதீகம்.
பக்தர்கள் தங்களுக்கு தீங்கு செய்தவர்களைத் தண்டிக்க அம்மனிடம் முறையிடுவதும், தீய சக்திகளால் பிரிய நேர்ந்தவர்கள் இக்கோவிலுக்கு வந்து சேர்ந்து கொள்வதும் இக்கோவிலின் தனிச்சிறப்பு.
அருள்மிகு வெட்டுடையார் காளி கோவில்,
கொல்லங்குடி வழி,
விட்டனேரி போஸ்ட்,
அரியாக்குறிச்சி- 623 556.
சிவகங்கை மாவட்டம்.
இப்பகுதியை ஆட்சி செய்த வீரப்பெண்மணி வேலுநாச்சியாருக்கு பிறந்த குழந்தை, பேசாமல் இருந்தது. அக்குழந்தை பேசவைக்கும்படி வேலுநாச்சியார் அம்பிகையை வேண்டி, குழந்தைக்கு பேச்சு வந்தது. இதனால், மகிழ்ந்த வேலுநாச்சியார் அம்பிகைக்கு வைரத்தாலி காணிக்கை செய்து கொடுத்தார்.
குழந்தை வரம் கிடைக்கவும், பேசாத குழந்தைகளுக்கு பேச்சு நன்கு வரவும் இங்கு வேண்டிக் கொள்கின்றனர். இவளை வேண்டி பிரார்த்தனை நிறைவேறி, பக்தர்கள் உபயமாகக் கிடைத்த 20 கிலோ தங்கத்தில் இருந்தே கோவில் கொடிமரம், தங்க குதிரை வாகனம் மற்றும் தேர் திருப்பணி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நோய் நீங்க, திருமணம் நடக்க, புத்திர தோஷங்கள் நீங்க, அம்பிகைக்கு அபிசேகம் செய்வித்தும், முடிக்காணிக்கை செலுத்தியும் வழிபடுகின்றனர். மாங்கல்ய தோசம் நீங்க, அம்பாள் பாதத்தில் தாலி வைத்து வாங்கிச் செல்கின்றனர். குழந்தைச் செல்வம் கிட்ட, கோவிலுக்கு வெளியே உள்ள விசிறி மரத்தில் தொட்டில் கட்டுகின்றனர். பேசாத குழந்தைகளுக்கு பேச்சு நன்கு வரவும் இங்கு வேண்டிக் கொள்கின்றனர்.
நான்தான் பெரியவன் என்னும் கருவத்தால் பிரிந்தவர்கள் பலர். இவர்கள் மீண்டும் ஒன்று சேர வழிபடும் பிரதானத் தலம் இது. பிரச்னையால் பிரிந்துவிட்டு மீண்டும் சேர விரும்பும் தம்பதியர், உறவினர், சகோதரர்கள் இங்கு “கூடுதல் வழிபாடு” என்னும் பிரார்த்தனை செய்கின்றனர். பிரிந்து சென்றோர் இங்கு வந்து அம்பாளுக்கு பொங்கல் வைத்து, அதை அம்பிகை சன்னதி முன் வைத்து ஒன்றாகக் கூடுகின்றனர். பின், அம்பிகைக்கு முன், பிரச்னை ஏற்பட்டவர்கள் தங்களுக்குள் சமரசம் செய்து, தாங்கள் எப்போதும் ஒற்றுமையுடன் இருக்க வழிபடுகின்றனர். அம்பிகையே இவர்களுக்கு நடுநாயகமாக இருந்து சேர்த்து வைப்பதாக ஐதீகம்.
பக்தர்கள் தங்களுக்கு தீங்கு செய்தவர்களைத் தண்டிக்க அம்மனிடம் முறையிடுவதும், தீய சக்திகளால் பிரிய நேர்ந்தவர்கள் இக்கோவிலுக்கு வந்து சேர்ந்து கொள்வதும் இக்கோவிலின் தனிச்சிறப்பு.
அருள்மிகு வெட்டுடையார் காளி கோவில்,
கொல்லங்குடி வழி,
விட்டனேரி போஸ்ட்,
அரியாக்குறிச்சி- 623 556.
சிவகங்கை மாவட்டம்.
சீனிவாச பெருமாள் கோவில் கருடனை தரிசனத்தால் எல்லாவிதமான தோஷங்களும் மறையும். ஒரு மண்டலம் எம்பெருமானை சுற்றி வந்து வழிபட்டால் சகல தோஷங்கள் நீங்கும்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ரெயில் நிலையத்தில் இருந்து தென்கிழக்கே திருவாரூர் செல்லும் பாதையில் பத்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, நாச்சியார் கோவில் சீனிவாச பெருமாள் கோவில்.
கோவில் மூலஸ்தானத்தின் கீழே மகாமண்டபத்தில் தெற்கு நோக்கி உள்ளது உள்ளே பக்ஷிராஜன் கருடன். பெரிய திருவடி, அரசு மங்களாலயன் என்றெல்லாம் புனித பெயர் கொண்டு அழைக்கப்படும் கருடன், சாளக்கிராம சிலை வடிவில் வாகன அமைப்பில் நீர் சுரக்கும் நீர் முடியும் நீண்டு வளர்ந்து திருமேனியும் கொண்டு பெருந்தோள் உடனும், மிகவும் வீரத்துடனும், எடுப்புடன் கூடிய தோற்றத்துடன் எழுந்தருளியுள்ளார். தம்மை விரும்பித் தொழும் அடியார்கள் வேண்டியன எல்லாம் அருளும் தெய்வமாக விளங்குகிறார். பெருமாளுக்கு நாள்தோறும் திருவாராதனம் கண்டவுடன் அவர் அமுதுபடி செய்ததை இவருக்கும் நித்தம் ஆறு வேளை ஆராதனம் செய்து வருகிறார்கள். இவருக்கு அமுதகலசம் என்ற மோதகம்(கொழுக்கட்டை) மிகவும் விருப்பம். அதனால் இவரை மோதகாமோதர் எனவும் அழைப்பதுண்டு. இவரிடம் வேண்டிக் கொள்ளும் விருப்பம் எல்லாம் உடனுக்குடன் நிறைவேறும் அதிசயத்தையும் காணலாம். இவரது சர்வாங்கங்களில் புஷ்ப அங்கி அணிவிப்பவர்களுக்கு எல்லா விருப்பங்களும் சட்டென நிறைவேறுகின்றன. மார்கழி பெரும் திருவிழாவில் நான்காம் திருநாளும் மற்றொன்று பங்குனிப் பெருவிழாவில் நான்காம் திருநாளும் ஆகும்.
வியாழன் மாலையிலும், சனி காலையிலும் கருட பகவான் வழிபாடு மிகவும் சிறப்பு என்பார்கள். இந்த கருடனுக்கு கஸ்தூரி குங்குமப்பூ, புனுகு சட்டம் முதலியவைகளை வாழை சாற்றில் கலந்து இவரது திருமேனியில் சாற்றுவோர், இஷ்ட சித்திகளையும் நிச்சயம் பெறுவர். இவரது நட்சத்திரம் சுவாதி ஆனதால் அன்று கருடனுக்கு அர்ச்சனை செய்வது மிகவும் உகந்தது. இவரது தரிசனத்தால் எல்லாவிதமான தோஷங்களும் மறையும். ஒரு மண்டலம் எம்பெருமானை சுற்றி வந்து வழிபட்டால் சகல தோஷங்கள் நீங்கும். ஸ்ரீசுதர்சன மனதிற்கு அதிர்ஷ்டான கடவுளானபடியால் எல்லாவிதமான மன நோய்களும் நீங்கும்.
கோவில் மூலஸ்தானத்தின் கீழே மகாமண்டபத்தில் தெற்கு நோக்கி உள்ளது உள்ளே பக்ஷிராஜன் கருடன். பெரிய திருவடி, அரசு மங்களாலயன் என்றெல்லாம் புனித பெயர் கொண்டு அழைக்கப்படும் கருடன், சாளக்கிராம சிலை வடிவில் வாகன அமைப்பில் நீர் சுரக்கும் நீர் முடியும் நீண்டு வளர்ந்து திருமேனியும் கொண்டு பெருந்தோள் உடனும், மிகவும் வீரத்துடனும், எடுப்புடன் கூடிய தோற்றத்துடன் எழுந்தருளியுள்ளார். தம்மை விரும்பித் தொழும் அடியார்கள் வேண்டியன எல்லாம் அருளும் தெய்வமாக விளங்குகிறார். பெருமாளுக்கு நாள்தோறும் திருவாராதனம் கண்டவுடன் அவர் அமுதுபடி செய்ததை இவருக்கும் நித்தம் ஆறு வேளை ஆராதனம் செய்து வருகிறார்கள். இவருக்கு அமுதகலசம் என்ற மோதகம்(கொழுக்கட்டை) மிகவும் விருப்பம். அதனால் இவரை மோதகாமோதர் எனவும் அழைப்பதுண்டு. இவரிடம் வேண்டிக் கொள்ளும் விருப்பம் எல்லாம் உடனுக்குடன் நிறைவேறும் அதிசயத்தையும் காணலாம். இவரது சர்வாங்கங்களில் புஷ்ப அங்கி அணிவிப்பவர்களுக்கு எல்லா விருப்பங்களும் சட்டென நிறைவேறுகின்றன. மார்கழி பெரும் திருவிழாவில் நான்காம் திருநாளும் மற்றொன்று பங்குனிப் பெருவிழாவில் நான்காம் திருநாளும் ஆகும்.
வியாழன் மாலையிலும், சனி காலையிலும் கருட பகவான் வழிபாடு மிகவும் சிறப்பு என்பார்கள். இந்த கருடனுக்கு கஸ்தூரி குங்குமப்பூ, புனுகு சட்டம் முதலியவைகளை வாழை சாற்றில் கலந்து இவரது திருமேனியில் சாற்றுவோர், இஷ்ட சித்திகளையும் நிச்சயம் பெறுவர். இவரது நட்சத்திரம் சுவாதி ஆனதால் அன்று கருடனுக்கு அர்ச்சனை செய்வது மிகவும் உகந்தது. இவரது தரிசனத்தால் எல்லாவிதமான தோஷங்களும் மறையும். ஒரு மண்டலம் எம்பெருமானை சுற்றி வந்து வழிபட்டால் சகல தோஷங்கள் நீங்கும். ஸ்ரீசுதர்சன மனதிற்கு அதிர்ஷ்டான கடவுளானபடியால் எல்லாவிதமான மன நோய்களும் நீங்கும்.
மன்னார்குடியில் உள்ள லட்சுமி நரசிம்மரை வழிபட்டால் தீராத துன்பங்களும் தீரும் என்பதும் நீண்ட நாள் சொத்து பிரச்சினைகள் அகலும் என்பதும் இங்கு வந்து வழிபட்டு செல்பவர்களின் வாக்குமூலமாக உள்ளது.
‘நாளை என்பது இல்லை நரசிம்மனிடத்தில்’ என்பது கூற்று. அதாவது எப்படி தன்னுடைய பக்தன் பிரகலாதன் உயிருக்கு ஆபத்து என்றவுடன் நொடிப்பொழுதும் தாமதிக்காமல் தூணை பிளந்து அவதாரம் எடுத்து பிரகலாதனை காப்பாற்றினாரோ அதே போல நரசிம்மனை வேண்டுபவர்களுக்கு உடனடியாக துன்பத்தை போக்குபவர் என்பதால் இந்த கூற்று உருவாயிற்று.
மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் ராஜகோபுரத்திற்கு முன்பு தென்புறமாக அகோபில மடத்திற்குச் சொந்தமான ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள லட்சுமி நரசிம்மரை வழிபட்டால் தீராத நாட்பட்ட துன்பங்களும் தீரும் என்பதும் நீண்ட நாள் சொத்து பிரச்சினைகள் அகலும் என்பதும் இங்கு வந்து வழிபட்டு செல்பவர்களின் வாக்குமூலமாக உள்ளது.
இந்த லட்சுமி நரசிம்மர் கோவிலில் பிரதோஷம் மற்றும் சுவாதி நட்சத்திரத்தன்று சிறப்பு திருமஞ்சனம் மற்றும் வழிபாடு நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்டு பக்தர்கள் லட்சுமி நரசிம்மரின் பூரண அருளை பெறலாம்.
மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் ராஜகோபுரத்திற்கு முன்பு தென்புறமாக அகோபில மடத்திற்குச் சொந்தமான ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள லட்சுமி நரசிம்மரை வழிபட்டால் தீராத நாட்பட்ட துன்பங்களும் தீரும் என்பதும் நீண்ட நாள் சொத்து பிரச்சினைகள் அகலும் என்பதும் இங்கு வந்து வழிபட்டு செல்பவர்களின் வாக்குமூலமாக உள்ளது.
இந்த லட்சுமி நரசிம்மர் கோவிலில் பிரதோஷம் மற்றும் சுவாதி நட்சத்திரத்தன்று சிறப்பு திருமஞ்சனம் மற்றும் வழிபாடு நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்டு பக்தர்கள் லட்சுமி நரசிம்மரின் பூரண அருளை பெறலாம்.
இக்கோவிலில் பக்தர்கள் தங்களது கோரிக்கைகள் நிறைவேற கோரிக்கை மனு எழுதி அங்குள்ள முனியப்பர் சன்னதியில் பிராது கட்டினால் 90 நாட்களில் பக்தர்களின் வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூரில் கொளஞ்சியப்பர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பக்தர்கள் தங்களது கோரிக்கைகள் நிறைவேற கோரிக்கை மனு எழுதி அங்குள்ள முனியப்பர் சன்னதியில் பிராது கட்டினால் 90 நாட்களில் பக்தர்களின் வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம். இதனால் இக்கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள்.
இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி உத்திர திருவிழாவில் பக்தர்கள் அலகு போட்டுக்கொண்டும், காவடி எடுத்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். மேலும் அன்றைய தினம் கொளஞ்சியப்பர் விருத்தாசலம் மணிமுக்தாற்றில் எழுந்தருள, தீர்த்தவாரி நடைபெறும்.
பக்தர்கள் தங்களின் அனைத்து வித நியாயமான கோரிக்கைகளையும், எழுத்து மூலம் சுவாமியிடம் பிராது செலுத்தும் நடைமுறை இங்கு வழக்கத்தில் உள்ளது. அப்படி பிராது செலுத்திய நாளிலிருந்து 90 நாட்களுக்குள், அந்த கோரிக்கை முழுவதுமாக நிவர்த்திப் பெறுவதும், வேண்டுதல் பலித்தவர்கள் சுவாமியிடம் செலுத்திய பிராதினை திரும்பப் பெற்றுக் கொள்வதும் நடைமுறை வழக்கமாகும்.
இதற்கு சுவாமி உள்ள இடமான மணவாளநல்லூரை தலைமையிடமாகக் கொண்டு கோரிக்கை உள்ள ஊரின் தொலைவினை கணக்கிட்டு, கிலோமீட்டர் ஒன்றுக்கு இருபத்தைந்து பைசா கட்டணமாகவும், சம்மன் மற்றும் தமுக்கு பணமாக இருபது ரூபாயும் செலுத்த வேண்டும். அதேபோன்று கோரிக்கை நிறைவேறியவர்கள், பிராது வாபஸ் கட்டணமாக ஐம்பது ரூபாய் செலுத்தி பிராதினை வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும். பிரார்த்தனையுடன் கூடிய இவ்வழிபாடு இவ்வாலயத்தின் பிரசித்திப் பெற்ற வழிபாடாகும்.
இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி உத்திர திருவிழாவில் பக்தர்கள் அலகு போட்டுக்கொண்டும், காவடி எடுத்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். மேலும் அன்றைய தினம் கொளஞ்சியப்பர் விருத்தாசலம் மணிமுக்தாற்றில் எழுந்தருள, தீர்த்தவாரி நடைபெறும்.
பக்தர்கள் தங்களின் அனைத்து வித நியாயமான கோரிக்கைகளையும், எழுத்து மூலம் சுவாமியிடம் பிராது செலுத்தும் நடைமுறை இங்கு வழக்கத்தில் உள்ளது. அப்படி பிராது செலுத்திய நாளிலிருந்து 90 நாட்களுக்குள், அந்த கோரிக்கை முழுவதுமாக நிவர்த்திப் பெறுவதும், வேண்டுதல் பலித்தவர்கள் சுவாமியிடம் செலுத்திய பிராதினை திரும்பப் பெற்றுக் கொள்வதும் நடைமுறை வழக்கமாகும்.
இதற்கு சுவாமி உள்ள இடமான மணவாளநல்லூரை தலைமையிடமாகக் கொண்டு கோரிக்கை உள்ள ஊரின் தொலைவினை கணக்கிட்டு, கிலோமீட்டர் ஒன்றுக்கு இருபத்தைந்து பைசா கட்டணமாகவும், சம்மன் மற்றும் தமுக்கு பணமாக இருபது ரூபாயும் செலுத்த வேண்டும். அதேபோன்று கோரிக்கை நிறைவேறியவர்கள், பிராது வாபஸ் கட்டணமாக ஐம்பது ரூபாய் செலுத்தி பிராதினை வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும். பிரார்த்தனையுடன் கூடிய இவ்வழிபாடு இவ்வாலயத்தின் பிரசித்திப் பெற்ற வழிபாடாகும்.
தமது குல தெய்வம் எது என்று தெரியாமல் தவிப்பவர்கள், இந்த சாஸ்தாவை தரிசித்து மனம் உருகி வேண்டினால், அவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் தடைகளெல்லாம் நீங்கி, அவர்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி நிரம்பி வழியும் என்று கூறப்படுகிறது.
கூட்டுக்குடும்பம் என்பது பழங்கதையாகி, கணவன்- மனைவி- ஒரு குழந்தை என்னும் சிறிய குடும்பமாக இன்றைய உலகம் மாறிவிட்ட நிலையில், தனது குல தெய்வம் எது என்பதே பலருக்கும் தெரியாமல் போய்விட்டது. ஜோதிடம், பிரசன்னம் என்று பல வழிகளிலும் முயற்சித்த போதிலும் தமது குல தெய்வம் எது என்று தெரியாமல் கலங்கித் தவிக்கும் குடும்பங்கள் ஏராளம்.
இவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது, ‘அஞ்சனம் எழுதிய கண்டன் சாஸ்தா’ திருக்கோவில். தமது குல தெய்வம் எது என்று தெரியாமல் தவிப்பவர்கள், இந்த சாஸ்தாவை தரிசித்து மனம் உருகி வேண்டினால், அவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் தடைகளெல்லாம் நீங்கி, அவர்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி நிரம்பி வழியும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த சாஸ்தாவை வழிபட்டால் சனி தோஷமும் நீங்குகிறதாம்.
அத்ரி மகிரிஷியும் அனுசூயா தேவியும் தங்கியிருந்த ஆசிரமம்தான் இன்று ‘ஆஸ்ராமம்’ என்றழைக்கப்படும் சிற்றூர். இந்த அத்ரி மகிரிஷியே இங்கு சாஸ்தாவாக அமர்ந்து அருள்பாலிப்பதாகக் கூறுவதும் உண்டு. அத்ரி மகரிஷி யாகம் செய்த ஓமகுண்டம்தான் கோவிலின் அருகில் உள்ள தீர்த்தக்குளம் என்கின்றனர். இக்குளத்தில் ஒரு மண்டலம் நீராடினால் எல்லா நோய்களும் நம்மைவிட்டு நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
கன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், நாகர்கோவிலில் இருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் ஆஸ்ராமம் அமைந்துள்ளது.
இவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது, ‘அஞ்சனம் எழுதிய கண்டன் சாஸ்தா’ திருக்கோவில். தமது குல தெய்வம் எது என்று தெரியாமல் தவிப்பவர்கள், இந்த சாஸ்தாவை தரிசித்து மனம் உருகி வேண்டினால், அவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் தடைகளெல்லாம் நீங்கி, அவர்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி நிரம்பி வழியும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த சாஸ்தாவை வழிபட்டால் சனி தோஷமும் நீங்குகிறதாம்.
அத்ரி மகிரிஷியும் அனுசூயா தேவியும் தங்கியிருந்த ஆசிரமம்தான் இன்று ‘ஆஸ்ராமம்’ என்றழைக்கப்படும் சிற்றூர். இந்த அத்ரி மகிரிஷியே இங்கு சாஸ்தாவாக அமர்ந்து அருள்பாலிப்பதாகக் கூறுவதும் உண்டு. அத்ரி மகரிஷி யாகம் செய்த ஓமகுண்டம்தான் கோவிலின் அருகில் உள்ள தீர்த்தக்குளம் என்கின்றனர். இக்குளத்தில் ஒரு மண்டலம் நீராடினால் எல்லா நோய்களும் நம்மைவிட்டு நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
கன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், நாகர்கோவிலில் இருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் ஆஸ்ராமம் அமைந்துள்ளது.
பிரதோஷம் அன்று ஈசனை வழிபட்டால் நாம் செய்த சகல பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம். எந்த கிழமையில் பிரதோஷ வழிபாடு செய்தால் என்ன பிரச்சனை தீரும் என்று பார்க்கலாம்.
பிரதோச வழிபாடு சிவ வழிபாட்டிற்குரிய மிகச் சிறப்பான மிக முக்கியமான வழிபாடாகும். தோசம் என்ற வடமொழிச் சொல்லிற்கு குற்றம் என்று பொருள். பிரதோசம் என்றால் குற்றமற்றது என்று பொருள். குற்றமற்ற இந்தப் பொழுதில் ஈசனை வழிபட்டால் நாம் செய்த சகல பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம். பிரதோச காலமென்பது மாலை 4 மணி முதல் 6 மணி வரையான காலமாகும்.
ஞாயிறு பிரதோஷம் - சுப மங்களத்தை தரும்
திங்கள் சோம பிரதோஷம் - நல் எண்ணம், நல் அருள் தரும்
செவ்வாய் பிரதோஷம் - பஞ்சம், வறுமை, பட்டினி அகலும்
புதன் பிரதோஷம் - நல்ல குழந்தை பாக்கியம் தரும்
வியாழன் பிரதோஷம் - திருமணத் தடை விலகி மாங்கல்ய பலன் கிட்டும்.
வெள்ளி பிரதோஷம் - எதிரிகள், எதிர்ப்பு விலகும்
சனிப் பிரதோஷம் - அனைத்து துன்பமும் விலகும்.
தினசரி கோவிலுக்கு சென்று வழிபட்டால் பஞ்சமா பாவங்கள் விலகும்.
ஒரு சனிப்பிரதோஷ வழிபாடு 108 சிவபூஜை செய்த பலன் உண்டாகும்.
ஞாயிறு பிரதோஷம் - சுப மங்களத்தை தரும்
திங்கள் சோம பிரதோஷம் - நல் எண்ணம், நல் அருள் தரும்
செவ்வாய் பிரதோஷம் - பஞ்சம், வறுமை, பட்டினி அகலும்
புதன் பிரதோஷம் - நல்ல குழந்தை பாக்கியம் தரும்
வியாழன் பிரதோஷம் - திருமணத் தடை விலகி மாங்கல்ய பலன் கிட்டும்.
வெள்ளி பிரதோஷம் - எதிரிகள், எதிர்ப்பு விலகும்
சனிப் பிரதோஷம் - அனைத்து துன்பமும் விலகும்.
தினசரி கோவிலுக்கு சென்று வழிபட்டால் பஞ்சமா பாவங்கள் விலகும்.
ஒரு சனிப்பிரதோஷ வழிபாடு 108 சிவபூஜை செய்த பலன் உண்டாகும்.
ஒருவரின் குடும்பத்தில் ‘பித்ரு தோஷம்’ இருக்கிறதா? என்பதை தெரிந்து கொள்ள, கருடப் புராணம் மிக எளிமையான வழிமுறைகளை சொல்லியிருக்கிறது. அதுபற்றி இங்கே பார்க்கலாம்.
ஒருவர் இறந்த பின்பு அவருக்குரிய பித்ரு கடன்களை முறைப்படி செய்யாதவர்கள் குடும்பத்தில், மனக் கஷ்டம், பணக்கஷ்டம் இருந்து கொண்டே இருக்கும். இறந்தவர் ஆன்மா சாந்தியடைய நமது முன்னோர்கள் பல்வேறு வழிமுறைகளை கையாண்டனர். இறந்தவருக்கு செய்ய வேண்டிய பிண்டம் இடுதல், இறந்தவரின் திதி தோறும் அவருக்குரிய கடமைகளை செய்தல் போன்றவற்றை செய்யாமல் இருக்கும் போது இறந்தவரின் ஆன்மா பசி, தாகத்தால் அவதிப்படும். அப்படி அந்த ஆத்மா அவதிப்படும்போது, அந்த அவதியின் கொடூரங்கள் அவரது சந்ததியினரை பாதிக்கும். இந்த பாதிப்பைத் தான் ‘பித்ரு தோஷம்’ என்கிறார்கள்.
ஒருவர் நல்லவனாகவும், தெய்வ பக்தி மிகுந்தவராகவும் இருந்து இறந்தால், அவருக்கு பித்ரு கடன்களை சரியாக செய்யாவிட்டாலும், அந்த குடும்பத்திற்கு பித்ரு தோஷம் கண்டிப்பாக ஏற்படும். ஆனால் அதன் தாக்கம் சற்று குறைவாக இருக்கும். காரணம், பித்ருக்களுக்கு இறைவனின் ஆசி இருப்பதால் தோஷத்தின் தீவிரம் சற்று குறையும். ஆனால் ஒருவர் பாவம் செய்தவராகவும், அடுத்தவர் மனைவி, அடுத்தவர் சொத்துக்களை அபகரித்து, லஞ்சம், திருட்டு போன்ற குற்றங்களால் பிறருக்கு தீங்கு செய்வராக இருந்தால், அவரது இறப்புக்குப் பின் கண்டிப்பாக பித்ரு காரியங்கள் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் இறந்தவரின் குடும்பத்தினருக்கு மிகப் பெரிய தீங்கு விளையும். இறந்தவரின் ஆன்மாவுக்கு இறைவனின் ஆசி இல்லாமல், அது நரக வேதனையில், பசி, தாகத்தால் அவதிப்பட்டு அல்லல்படும். அந்த ஆன்மாவுடைய வேதனையின் தாக்கம், குடும்பத்தை மிகுந்த வீரியத்துடன் தாக்கும்.
ஒருவரது வீட்டில் பித்ரு தோஷம் இருந்தால், அந்த வீட்டில் லஞ்சம், லாவணியம் போன்ற கெடுதல் தரக்கூடிய செயல்கள் அதிகம் நடைபெறும். குழந்தைகள் பிறந்து பிறந்து இறப்பார்கள். சுற்றத்தாரோடு ஒற்றுமையில்லாமல் மனம் வேறுபட்டு வாழ்வார்கள். குடும்பத்தில் நிம்மதி இன்றி கடைசியில் வெறுமையே ஏற்படும். தான் வளர்க்கும் பசுக்களுக்கு உணவளிக்க முடியாமல் போகும் நிலை உண்டாகும். நல்ல நண்பனோடு விரோதிக்க நேரிடும். கெட்ட நட்புகள்தான் அருகில் இருக்கும். மகாவிஷ்ணுவை வழிபட முடியாமல், வாழ்நாள் வீணாகும். யாகம், ஹோமம் எதுவும் செய்ய முடியாமல் தடை உண்டாகும்.
தாய், தந்தையை மதிக்காத பிள்ளைகள் உருவாவர். பெற்றோரை அவமதிக்கும் செயல்கள் அதிகரிக்கும். பணம் மற்றும் சொத்து, பொன் பொருள், பெண் போன்ற காரணங்களால் அயலாரை கொல்ல முயற்சிக்கும் செயலுக்கு மனம் உந்தப்படும். இழிந்தோர் செய்யும் தொழிலைச் செய்து பிழைக்க நேரிடும். அதர்மங்களையே செய்ய தூண்டும் எண்ணம் மனம் முழுவதும் எழும். பிதுர் கர்மங்களை செய்வதில் தடைகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். புத்திரன் பகைவனைப் போல மாறும் சூழல் ஏற்படும் என்று கருண புராணம் சொல்கிறது.
இதுபோன்ற பிரச்சினை தீர வேண்டுமெனில் பித்ரு கடன்களை ஒழுங்காகவும், கடமை தவறாமலும் செய்ய வேண்டும். பித்ரு கடன் என்ன என்பதை கேட்டு அறிந்து அதன்படி உங்கள் பித்ருக்களை திருப்திப்படுத்தினாலே மேற்கண்ட கெடுதல்களில் இருந்து எளிதாக தப்பிக்க முடியும். அமாவாசை, பவுர்ணமி திதிகளில் விரதம் இருந்து, காலையில் எள் கலந்த சாதத்தை காகத்திற்கு வைக்க வேண்டும். அதிகாலை முதல் இரவு 7மணி வரை வீட்டில் விளக்கு அணையாமல் எரிய விடுங்கள். ஆதரவற்ற, மாற்றுத்திறனாளிகளுக்கு தங்களால் இயன்ற உதவிகளைச் செய்யலாம். அன்று மாலை சிவன் அல்லது ஏதாவது உங்களுக்கு பிடித்த கோவிலுக்குச் சென்று வழிபடுங்கள். இதன் மூலம் உங்களுகான பித்ரு தோஷம் நீங்குவதுடன், எந்த தோஷமும் அண்டாது.
ஒருவர் நல்லவனாகவும், தெய்வ பக்தி மிகுந்தவராகவும் இருந்து இறந்தால், அவருக்கு பித்ரு கடன்களை சரியாக செய்யாவிட்டாலும், அந்த குடும்பத்திற்கு பித்ரு தோஷம் கண்டிப்பாக ஏற்படும். ஆனால் அதன் தாக்கம் சற்று குறைவாக இருக்கும். காரணம், பித்ருக்களுக்கு இறைவனின் ஆசி இருப்பதால் தோஷத்தின் தீவிரம் சற்று குறையும். ஆனால் ஒருவர் பாவம் செய்தவராகவும், அடுத்தவர் மனைவி, அடுத்தவர் சொத்துக்களை அபகரித்து, லஞ்சம், திருட்டு போன்ற குற்றங்களால் பிறருக்கு தீங்கு செய்வராக இருந்தால், அவரது இறப்புக்குப் பின் கண்டிப்பாக பித்ரு காரியங்கள் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் இறந்தவரின் குடும்பத்தினருக்கு மிகப் பெரிய தீங்கு விளையும். இறந்தவரின் ஆன்மாவுக்கு இறைவனின் ஆசி இல்லாமல், அது நரக வேதனையில், பசி, தாகத்தால் அவதிப்பட்டு அல்லல்படும். அந்த ஆன்மாவுடைய வேதனையின் தாக்கம், குடும்பத்தை மிகுந்த வீரியத்துடன் தாக்கும்.
ஒருவரது வீட்டில் பித்ரு தோஷம் இருந்தால், அந்த வீட்டில் லஞ்சம், லாவணியம் போன்ற கெடுதல் தரக்கூடிய செயல்கள் அதிகம் நடைபெறும். குழந்தைகள் பிறந்து பிறந்து இறப்பார்கள். சுற்றத்தாரோடு ஒற்றுமையில்லாமல் மனம் வேறுபட்டு வாழ்வார்கள். குடும்பத்தில் நிம்மதி இன்றி கடைசியில் வெறுமையே ஏற்படும். தான் வளர்க்கும் பசுக்களுக்கு உணவளிக்க முடியாமல் போகும் நிலை உண்டாகும். நல்ல நண்பனோடு விரோதிக்க நேரிடும். கெட்ட நட்புகள்தான் அருகில் இருக்கும். மகாவிஷ்ணுவை வழிபட முடியாமல், வாழ்நாள் வீணாகும். யாகம், ஹோமம் எதுவும் செய்ய முடியாமல் தடை உண்டாகும்.
தாய், தந்தையை மதிக்காத பிள்ளைகள் உருவாவர். பெற்றோரை அவமதிக்கும் செயல்கள் அதிகரிக்கும். பணம் மற்றும் சொத்து, பொன் பொருள், பெண் போன்ற காரணங்களால் அயலாரை கொல்ல முயற்சிக்கும் செயலுக்கு மனம் உந்தப்படும். இழிந்தோர் செய்யும் தொழிலைச் செய்து பிழைக்க நேரிடும். அதர்மங்களையே செய்ய தூண்டும் எண்ணம் மனம் முழுவதும் எழும். பிதுர் கர்மங்களை செய்வதில் தடைகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். புத்திரன் பகைவனைப் போல மாறும் சூழல் ஏற்படும் என்று கருண புராணம் சொல்கிறது.
இதுபோன்ற பிரச்சினை தீர வேண்டுமெனில் பித்ரு கடன்களை ஒழுங்காகவும், கடமை தவறாமலும் செய்ய வேண்டும். பித்ரு கடன் என்ன என்பதை கேட்டு அறிந்து அதன்படி உங்கள் பித்ருக்களை திருப்திப்படுத்தினாலே மேற்கண்ட கெடுதல்களில் இருந்து எளிதாக தப்பிக்க முடியும். அமாவாசை, பவுர்ணமி திதிகளில் விரதம் இருந்து, காலையில் எள் கலந்த சாதத்தை காகத்திற்கு வைக்க வேண்டும். அதிகாலை முதல் இரவு 7மணி வரை வீட்டில் விளக்கு அணையாமல் எரிய விடுங்கள். ஆதரவற்ற, மாற்றுத்திறனாளிகளுக்கு தங்களால் இயன்ற உதவிகளைச் செய்யலாம். அன்று மாலை சிவன் அல்லது ஏதாவது உங்களுக்கு பிடித்த கோவிலுக்குச் சென்று வழிபடுங்கள். இதன் மூலம் உங்களுகான பித்ரு தோஷம் நீங்குவதுடன், எந்த தோஷமும் அண்டாது.
திருநீர்மலையில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக புன்சிரிப்புடன் காட்சி தரும் பெருமாளை தரிசித்துப் பிரார்த்தனை செய்து வந்தால், விரைவில் திருமண பாக்கியம் கைக்கூடும் என்பது ஐதீகம்.
சென்னை பல்லாவரத்துக்கு அருகில் உள்ளது திருநீர்மலை. இங்கே உள்ள ரங்கநாத பெருமாள், மிகுந்த வரப்பிரசாதி. நீர்வண்ணப் பெருமாளும் கனிவும் கருணையும் கொண்டு அருள்பாலிக்கிறார்.
ஸ்ரீதேவி பூதேவி சமேதராக புன்சிரிப்புடன் காட்சி தரும் பெருமாளை தரிசித்துப் பிரார்த்தனை செய்து வந்தால், விரைவில் திருமண பாக்கியம் கைக்கூடும் என்பது ஐதீகம். அருகில் உள்ள ஆண்டாளும் வரம் கொடுப்பவள்தான். வாழவைப்பவள்தான். மனமொத்த தம்பதியாகத் திகழவும் மனதுக்கு இதமானவர் கணவராக அமையவும் ஸ்ரீஆண்டாள் துணைபுரிகிறாள்.
புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், இங்கே வந்து, தாயாரை தரிசித்துவிட்டு, பள்ளியறைக்கு முன்னே ஒரு ஐந்துநிமிடம் நின்று மனதார வேண்டிக்கொண்டால், திருமண வரம் கொடுத்து அருளுவார் தாயார். மேலும் பிரிந்த தம்பதி ஒன்று சேருவார்கள் என்பது ஐதிகம்.
தொடர்ந்து ஒன்பது புதன் கிழமையோ அல்லது சனிக்கிழமையோ இங்கு வந்து, திருநீர்மலை பெருமாளையும் தாயாரையும் துளசி மாலை சார்த்தியும் வெண்மை மலர்கள் சார்த்தியும் வேண்டிக்கொண்டு வந்தால், கடன் தொல்லையில் இருந்து மீளலாம். கவலைகளும் துக்கங்களும் காணாமல் போகும். வாழ்க்கையிலும் தொழிலிலும் உத்தியோகத்திலும் தடைப்பட்டிருந்த நிலையெல்லாம் மாற்றித் தந்தருளுவார் பெருமாள் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.
திருநீர்மலை திருத்தலத்துக்கு தொடர்ந்து வந்து, பெருமாளையும் தாயாரையும் மனதார வழிபடுவோம். மங்காத ஐஸ்வரியங்களையெல்லாம் தந்தருளுவார்கள் என்று போற்றுகின்றனர் ஆச்சார்யப் பெருமக்கள்.
ஸ்ரீதேவி பூதேவி சமேதராக புன்சிரிப்புடன் காட்சி தரும் பெருமாளை தரிசித்துப் பிரார்த்தனை செய்து வந்தால், விரைவில் திருமண பாக்கியம் கைக்கூடும் என்பது ஐதீகம். அருகில் உள்ள ஆண்டாளும் வரம் கொடுப்பவள்தான். வாழவைப்பவள்தான். மனமொத்த தம்பதியாகத் திகழவும் மனதுக்கு இதமானவர் கணவராக அமையவும் ஸ்ரீஆண்டாள் துணைபுரிகிறாள்.
புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், இங்கே வந்து, தாயாரை தரிசித்துவிட்டு, பள்ளியறைக்கு முன்னே ஒரு ஐந்துநிமிடம் நின்று மனதார வேண்டிக்கொண்டால், திருமண வரம் கொடுத்து அருளுவார் தாயார். மேலும் பிரிந்த தம்பதி ஒன்று சேருவார்கள் என்பது ஐதிகம்.
தொடர்ந்து ஒன்பது புதன் கிழமையோ அல்லது சனிக்கிழமையோ இங்கு வந்து, திருநீர்மலை பெருமாளையும் தாயாரையும் துளசி மாலை சார்த்தியும் வெண்மை மலர்கள் சார்த்தியும் வேண்டிக்கொண்டு வந்தால், கடன் தொல்லையில் இருந்து மீளலாம். கவலைகளும் துக்கங்களும் காணாமல் போகும். வாழ்க்கையிலும் தொழிலிலும் உத்தியோகத்திலும் தடைப்பட்டிருந்த நிலையெல்லாம் மாற்றித் தந்தருளுவார் பெருமாள் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.
திருநீர்மலை திருத்தலத்துக்கு தொடர்ந்து வந்து, பெருமாளையும் தாயாரையும் மனதார வழிபடுவோம். மங்காத ஐஸ்வரியங்களையெல்லாம் தந்தருளுவார்கள் என்று போற்றுகின்றனர் ஆச்சார்யப் பெருமக்கள்.
திருமண தடை, தாமதங்களை போக்கும் ஒரு அற்புத தலமாக இருப்பது திருமணஞ்சேரி அருள்மிகு உத்வாக நாதசுவாமி கோவில். இந்த கோவிலில் செய்ய வேண்டிய பரிகார முறை குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
திருமணஞ்சேரி கோயிலில் திருமணத்திற்கான பரிகாரம் செய்ய விரும்புபவர்கள் ஒரு சுப முகூர்த்த தினத்தில் திருமணஞ்சேரி கோயிலுக்கு செல்ல வேண்டும். அங்கு சென்றதும் முதலில் அக்கோயிலின் சப்தகிரி தீர்த்த குளத்தில் குளித்துவிட்டு, புத்தாடை அணிந்து கொண்டு, 2 மலர் மாலைகள், 2 தேங்காய், கற்பூரம், குங்குமம், மஞ்சள், நெய், சந்தனம், வெற்றிலை, பாக்கு போன்றவற்றை வாங்கி, அர்ச்சகரிடம் கொடுத்து, கோயில் மூலவராக இருக்கும் கல்யாண சுந்தரருக்கு மாலை சாற்றி வேண்டும். பிறகு சுந்தரர் மற்றும் அம்பாளுக்கு அர்ச்சனை செய்து, பூஜைகள் செய்து வழிபட வேண்டும். பிறகு அங்கு உள்ள நெய் தீபம் வைக்கப்படும் மேடையில் எண்ணி ஐந்து நெய் தீபங்களை ஏற்ற வேண்டும்.
பிறகு அங்கு திருமண மேடையில் கோயில் அர்ச்சகரால் வழங்கப்படும் எலுமிச்சம் பழத்தை உப்பு, சர்க்கரை சேர்க்காமல் தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். தெய்வங்களுக்கு பூஜைகள் செய்யப்பட்ட பிறகு, பிரசாதமாக வழங்கப்படும் மலர் மாலையை பத்திரப்படுத்தி உங்கள் வீட்டிற்கு கொண்டு செல்ல வேண்டும். வீட்டிற்கு சென்றதும் தலைக்கு ஊற்றி குளித்து விட்டு, அந்த மாலையை முறை உங்கள் கழுத்தில் போட்டு, இறைவனை மனதார வணங்கி, அம்மாலையை உங்கள் வீட்டு பூஜையறையிலேயே பத்திரமாக வைக்கவேண்டும்.
பிறகு கோவிலில் பிரசாதமாக கொடுக்கப்பட்ட விபூதி மற்றும் குங்குமத்தை தினமும் உங்களின் நெற்றியிலிட்டு இறைவனை வணங்கி வர வேண்டும். இவ்வாறு செய்கின்ற 90 நாட்களுக்குள்ளாக திருமணத்திற்கான வரன் அமையும் என்பது இப்பரிகாரம் செய்து பலன் கிடைக்க பெற்ற பக்தர்களின் கருத்தாக உள்ளது. மேலும் இந்த பத்திரப்படுத்தபட்ட மாலையானது திருமணம் ஆன உடனே திருமண தம்பதிகளான கணவன் – மனைவி இருவரும் சேர்ந்து திருமணஞ்சேரி கோயிலுக்கு வந்து கோவிலில் அந்த மாலையை குறிப்பிட்ட இடத்தில் இட்ட பிறகு, அங்கிருக்கும் இறைவனுக்கு அர்ச்சனை செய்து வேண்டுதலை முடித்து, தங்களின் விருப்பம் போன்ற காணிக்கையை கோயிலுக்கு செலுத்துவது நன்மைகளை உண்டாக்கும்.
பிறகு அங்கு திருமண மேடையில் கோயில் அர்ச்சகரால் வழங்கப்படும் எலுமிச்சம் பழத்தை உப்பு, சர்க்கரை சேர்க்காமல் தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். தெய்வங்களுக்கு பூஜைகள் செய்யப்பட்ட பிறகு, பிரசாதமாக வழங்கப்படும் மலர் மாலையை பத்திரப்படுத்தி உங்கள் வீட்டிற்கு கொண்டு செல்ல வேண்டும். வீட்டிற்கு சென்றதும் தலைக்கு ஊற்றி குளித்து விட்டு, அந்த மாலையை முறை உங்கள் கழுத்தில் போட்டு, இறைவனை மனதார வணங்கி, அம்மாலையை உங்கள் வீட்டு பூஜையறையிலேயே பத்திரமாக வைக்கவேண்டும்.
பிறகு கோவிலில் பிரசாதமாக கொடுக்கப்பட்ட விபூதி மற்றும் குங்குமத்தை தினமும் உங்களின் நெற்றியிலிட்டு இறைவனை வணங்கி வர வேண்டும். இவ்வாறு செய்கின்ற 90 நாட்களுக்குள்ளாக திருமணத்திற்கான வரன் அமையும் என்பது இப்பரிகாரம் செய்து பலன் கிடைக்க பெற்ற பக்தர்களின் கருத்தாக உள்ளது. மேலும் இந்த பத்திரப்படுத்தபட்ட மாலையானது திருமணம் ஆன உடனே திருமண தம்பதிகளான கணவன் – மனைவி இருவரும் சேர்ந்து திருமணஞ்சேரி கோயிலுக்கு வந்து கோவிலில் அந்த மாலையை குறிப்பிட்ட இடத்தில் இட்ட பிறகு, அங்கிருக்கும் இறைவனுக்கு அர்ச்சனை செய்து வேண்டுதலை முடித்து, தங்களின் விருப்பம் போன்ற காணிக்கையை கோயிலுக்கு செலுத்துவது நன்மைகளை உண்டாக்கும்.






