என் மலர்
தோஷ பரிகாரங்கள்
செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை முதலான நாட்களிலும் அமாவாசை, பெளர்ணமி முதலான நாட்களிலும் பிரத்தியங்கிரா தேவியை மனதார வழிபடுங்கள்.
வெள்ளிக்கிழமையில், பிரத்தியங்கிரா தேவியை வழிபட்டு, ஆத்மார்த்தமாக வேண்டிக்கொண்டால், நம் பிரச்சினைகளையெல்லாம் தீர்த்தருள்வாள் தேவி.
தேவி வழிபாடு, பக்தியில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் போற்றப்படுகிறது. பொதுவாகவே, தேவியானவள், நம் அன்னையைப் போல் கனிவும் கருணையும் கொண்டவள். அன்பே உருவானள். அருள் மழை பொழியக்கூடியவள். சாந்த சொரூபினி.
சாந்தத்துடன் தன்னை நாடி வரும் பக்தர்களை அரவணைத்துக் காத்தருள்பவள் அம்பாள் என்று கொண்டாடுகின்றனர் பக்தர்கள். மயிலை கற்பகாம்பாள், திருவேற்காடு கருமாரி, திருமீயச்சூர் லலிதாம்பாள், சங்கரன்கோவில் கோமதி அன்னை, திருநெல்வேலி காந்திமதி அன்னை, புன்னைநல்லூர் மாரியம்மன், உறையூர் வெக்காளி அம்மன், இருக்கன்குடி மாரியம்மன், மேல்மலையனூர் அங்காளம்மன், மாங்காடு காமாட்சி அன்னை எல்லாவற்றுக்கும் மேலாக உலகச் சக்தி பீடங்களுக்கெல்லாம் தலைவியாகத் திகழும் காஞ்சி காமாட்சி என மகாசக்தி ஒவ்வொரு வடிவமாக, ரூபமாக, ஒவ்வொரு குணத்துடன் நமக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
அதேபோல், காளி, காளீஸ்வரி, முண்டகக்கண்ணி, செல்லியம்மன், தீப்பாய்ச்சிஅம்மன், சமயபுரம் மாரியம்மன், வல்லம் ஏகெளரியம்மன், கொல்லங்குடி மாரியம்மன், அய்யாவாடி பிரத்தியங்கிரா தேவி என இன்னும் பல தெய்வங்கள், உக்கிரமாகவும் கடும் ஆயுதங்களுடன் தரிசனம் தருகின்றனர்.
இதில் பிரத்தியங்கிரா தேவி மிகவும் விசேஷமானவள். சிங்கமுக நாயகி. கடும் உக்கிரத்துடன் இருப்பாள். ஆனால் பக்தர்களிடம் ஒருபோதும் தன் கோபத்தைக் காட்டமாட்டாள். தன் பக்தர்களைச் சோதிப்பவர்களைப் பொறுத்துக்கொண்டு பார்த்திருக்கமாட்டாள்.
சக்தி வழிபாட்டில், வராஹியும் காளியும் பிரத்தியங்கிராவும் ஒருவகை. பொதுவாக, காளி உக்கிர தெய்வம்தான். ஆனால், சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள், சாந்த சொரூபினி. அந்தக் கோயிலிலேயே பிரத்தியங்கிராவும் கோயில் கொண்டிருக்கிறாள்.
கும்பகோணம் அருகில் உள்ள பட்டீஸ்வரம் துர்கை போல், அம்மன்குடி துர்கை போல், கும்பகோணம் அய்யாவாடியில் உள்ள பிரத்தியங்கிரா தேவியும் மகோன்னதம் மிக்கவள். உக்கிரம் நிறைந்தவள். அவளை மனதார வழிபடுவது ரொம்பவே சக்தி வாய்ந்தது. வெள்ளிக்கிழமையில், பிரத்தியங்கிரா தேவியை வெள்ளிக்கிழமையில் விளக்கேற்றி வேண்டிக்கொண்டால், நாம் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவாள் பிரத்தியங்கிரா தேவி.
செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை முதலான நாட்களிலும் அமாவாசை, பெளர்ணமி முதலான நாட்களிலும் பிரத்தியங்கிரா தேவியை மனதார வழிபடுங்கள். உங்கள் வாழ்வில் உள்ள தடைகளையும் உங்கள் வாழ்வில் உள்ள பிரச்சினைகளையும் அவளிடம் சொல்லி முறையிடுங்கள். உங்கள் பிரார்த்தனையில் குளிர்ந்து, உங்களை ஆசீர்வதித்து அருள்வாள் தேவி.
விரைவில், உங்கள் பிரச்சினைகளையெல்லாம் காணடித்து அருள்வாள். சிக்கல்களையெல்லாம் போக்குவாள். எதிர்ப்புகளையும் பலமிழக்கச் செய்வாள். எதிரிகளே இல்லாது செய்வாள்.
பிரச்சினைகள் தீர்க்கும் பிரத்தியங்கிரா தேவியை வழிபடுவோம்; வளம் பெறுவோம்!
தேவி வழிபாடு, பக்தியில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் போற்றப்படுகிறது. பொதுவாகவே, தேவியானவள், நம் அன்னையைப் போல் கனிவும் கருணையும் கொண்டவள். அன்பே உருவானள். அருள் மழை பொழியக்கூடியவள். சாந்த சொரூபினி.
சாந்தத்துடன் தன்னை நாடி வரும் பக்தர்களை அரவணைத்துக் காத்தருள்பவள் அம்பாள் என்று கொண்டாடுகின்றனர் பக்தர்கள். மயிலை கற்பகாம்பாள், திருவேற்காடு கருமாரி, திருமீயச்சூர் லலிதாம்பாள், சங்கரன்கோவில் கோமதி அன்னை, திருநெல்வேலி காந்திமதி அன்னை, புன்னைநல்லூர் மாரியம்மன், உறையூர் வெக்காளி அம்மன், இருக்கன்குடி மாரியம்மன், மேல்மலையனூர் அங்காளம்மன், மாங்காடு காமாட்சி அன்னை எல்லாவற்றுக்கும் மேலாக உலகச் சக்தி பீடங்களுக்கெல்லாம் தலைவியாகத் திகழும் காஞ்சி காமாட்சி என மகாசக்தி ஒவ்வொரு வடிவமாக, ரூபமாக, ஒவ்வொரு குணத்துடன் நமக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
அதேபோல், காளி, காளீஸ்வரி, முண்டகக்கண்ணி, செல்லியம்மன், தீப்பாய்ச்சிஅம்மன், சமயபுரம் மாரியம்மன், வல்லம் ஏகெளரியம்மன், கொல்லங்குடி மாரியம்மன், அய்யாவாடி பிரத்தியங்கிரா தேவி என இன்னும் பல தெய்வங்கள், உக்கிரமாகவும் கடும் ஆயுதங்களுடன் தரிசனம் தருகின்றனர்.
இதில் பிரத்தியங்கிரா தேவி மிகவும் விசேஷமானவள். சிங்கமுக நாயகி. கடும் உக்கிரத்துடன் இருப்பாள். ஆனால் பக்தர்களிடம் ஒருபோதும் தன் கோபத்தைக் காட்டமாட்டாள். தன் பக்தர்களைச் சோதிப்பவர்களைப் பொறுத்துக்கொண்டு பார்த்திருக்கமாட்டாள்.
சக்தி வழிபாட்டில், வராஹியும் காளியும் பிரத்தியங்கிராவும் ஒருவகை. பொதுவாக, காளி உக்கிர தெய்வம்தான். ஆனால், சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள், சாந்த சொரூபினி. அந்தக் கோயிலிலேயே பிரத்தியங்கிராவும் கோயில் கொண்டிருக்கிறாள்.
கும்பகோணம் அருகில் உள்ள பட்டீஸ்வரம் துர்கை போல், அம்மன்குடி துர்கை போல், கும்பகோணம் அய்யாவாடியில் உள்ள பிரத்தியங்கிரா தேவியும் மகோன்னதம் மிக்கவள். உக்கிரம் நிறைந்தவள். அவளை மனதார வழிபடுவது ரொம்பவே சக்தி வாய்ந்தது. வெள்ளிக்கிழமையில், பிரத்தியங்கிரா தேவியை வெள்ளிக்கிழமையில் விளக்கேற்றி வேண்டிக்கொண்டால், நாம் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவாள் பிரத்தியங்கிரா தேவி.
செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை முதலான நாட்களிலும் அமாவாசை, பெளர்ணமி முதலான நாட்களிலும் பிரத்தியங்கிரா தேவியை மனதார வழிபடுங்கள். உங்கள் வாழ்வில் உள்ள தடைகளையும் உங்கள் வாழ்வில் உள்ள பிரச்சினைகளையும் அவளிடம் சொல்லி முறையிடுங்கள். உங்கள் பிரார்த்தனையில் குளிர்ந்து, உங்களை ஆசீர்வதித்து அருள்வாள் தேவி.
விரைவில், உங்கள் பிரச்சினைகளையெல்லாம் காணடித்து அருள்வாள். சிக்கல்களையெல்லாம் போக்குவாள். எதிர்ப்புகளையும் பலமிழக்கச் செய்வாள். எதிரிகளே இல்லாது செய்வாள்.
பிரச்சினைகள் தீர்க்கும் பிரத்தியங்கிரா தேவியை வழிபடுவோம்; வளம் பெறுவோம்!
மனசாட்சியையும் தாண்டி நீங்கள் செய்யும் பாவத்திற்கான பதில் சிவனிடம் கிடைக்கும் என்று இந்து சமயம் கூறுகின்றது. அவ்வாறு சிவனின் கோபத்திலிருந்து தப்பிக்க முடியாத நாம் செய்யும் பாவங்கள் எவை தெரியுமா?
பாவம் - 1
அடுத்தவரின் மனைவியை அல்லது கணவன் மீது ஆசைப்படுவது.
பாவம் - 2
அடுத்தவரின் பணத்திற்கு ஆசைப்பட்டு அவரின் சொத்துக்களை அபகரிக்க நினைப்பது மகா பாவத்தில் அடங்கும்.
பாவம் - 3
உங்களின் சுய நலத்திற்காக எளியவர்களில் கனவை, வாழ்வை அழிப்பது, அவர்களின் மீது இல்லாத பழியை சுமத்துவதும் சிவனின் மூன்றாவது கண்களிலிருந்து தப்பிக்க முடியாத பாவம்.அடுத்தவரின் பணத்திற்கு ஆசைப்பட்டு அவரின் சொத்துக்களை அபகரிக்க நினைப்பது மகா பாவத்தில் அடங்கும்.
பாவம்- 4
ஒருவன் தொடர்ந்து தீய வழியிலே செல்வது, அல்லது சிறிதும் நன்மைகூட அடுத்தவர்களுக்கு செய்யாமலிருப்பது இரண்டுமே சிவனின் கோபத்திற்கு ஆளாகும் பாவங்கள்.
பாவம்- 5
கர்ப்பிணிகளிடம் மிக மோசமான நடந்துகொள்வதும், அவர்களை தீய வார்த்தைகளால் திட்டுவதும், அதேபோல் மாதவிலக்கின் போது பெண்களை திட்டுவதும் பாவத்திற்கான வழிகளாகும்.
பாவம் - 6
இன்னொருவரைப் பற்றி அப்படமான பொய் கூறி அவரை சீர்குலைய வைப்பதும் சிவனுடைய கோபத்திற்கு ஆளாக நேரிடும்.
பாவம் - 7
வதந்திகளையும், தேவையில்லாத விஷயங்களையும், மனதிற்கு நிம்மதியளிக்காத செய்திகளையும் எல்லாரிடம் பரப்புவது மோசமான செய்கையாகும். இதனால் சிவனின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.
பாவம் - 8
ஒருவரின் செய்கையால மற்றொருவரின் வாழ்வு நாசமானால் அதுவும் மிகப் பெரிய பாவம். அடுத்தவரை கொலை செய்வது, அழிப்பது போன்றவைகளாகும்.
பாவம் - 9
இந்து சமயம் சில உணவுகளை சாப்பிடக் கூடாது என்று சொல்லியும் அவ்ற்றை சாப்பிடுவது பாவச் செயல். உதாரணத்திற்கு தெய்வமாக பார்க்கப்படும் மாட்டை உண்பது.
பாவம் - 10
வன்முறையை கையாள்வது. குழந்தைகளுக்கு எதிராகவும், பெண்களுக்கு எதிராகவும் செய்யும் வன்முறைகள் மன்னிக்கமுடியாத பாவமாகும்.
பாவம் - 11
மாதா, பிதா, குரு மற்றும் வயதானவர்களை மரியாதையின்றி நடத்துவது, அவர்களை அடித்து துன்புறுத்துவது போன்றவையால் சிவனின் கோபத்திற்கு ஆளாக வேண்டிவரும்.
பாவம்- 12
முறையற்ற வழியில் சொத்து சேர்ப்பது, தானமாக கொடுத்த பொருளை திரும்ப வாங்குவதும் சிவனின் பாவத்தின் கணக்கில் அடங்கும்.
அடுத்தவரின் மனைவியை அல்லது கணவன் மீது ஆசைப்படுவது.
பாவம் - 2
அடுத்தவரின் பணத்திற்கு ஆசைப்பட்டு அவரின் சொத்துக்களை அபகரிக்க நினைப்பது மகா பாவத்தில் அடங்கும்.
பாவம் - 3
உங்களின் சுய நலத்திற்காக எளியவர்களில் கனவை, வாழ்வை அழிப்பது, அவர்களின் மீது இல்லாத பழியை சுமத்துவதும் சிவனின் மூன்றாவது கண்களிலிருந்து தப்பிக்க முடியாத பாவம்.அடுத்தவரின் பணத்திற்கு ஆசைப்பட்டு அவரின் சொத்துக்களை அபகரிக்க நினைப்பது மகா பாவத்தில் அடங்கும்.
பாவம்- 4
ஒருவன் தொடர்ந்து தீய வழியிலே செல்வது, அல்லது சிறிதும் நன்மைகூட அடுத்தவர்களுக்கு செய்யாமலிருப்பது இரண்டுமே சிவனின் கோபத்திற்கு ஆளாகும் பாவங்கள்.
பாவம்- 5
கர்ப்பிணிகளிடம் மிக மோசமான நடந்துகொள்வதும், அவர்களை தீய வார்த்தைகளால் திட்டுவதும், அதேபோல் மாதவிலக்கின் போது பெண்களை திட்டுவதும் பாவத்திற்கான வழிகளாகும்.
பாவம் - 6
இன்னொருவரைப் பற்றி அப்படமான பொய் கூறி அவரை சீர்குலைய வைப்பதும் சிவனுடைய கோபத்திற்கு ஆளாக நேரிடும்.
பாவம் - 7
வதந்திகளையும், தேவையில்லாத விஷயங்களையும், மனதிற்கு நிம்மதியளிக்காத செய்திகளையும் எல்லாரிடம் பரப்புவது மோசமான செய்கையாகும். இதனால் சிவனின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.
பாவம் - 8
ஒருவரின் செய்கையால மற்றொருவரின் வாழ்வு நாசமானால் அதுவும் மிகப் பெரிய பாவம். அடுத்தவரை கொலை செய்வது, அழிப்பது போன்றவைகளாகும்.
பாவம் - 9
இந்து சமயம் சில உணவுகளை சாப்பிடக் கூடாது என்று சொல்லியும் அவ்ற்றை சாப்பிடுவது பாவச் செயல். உதாரணத்திற்கு தெய்வமாக பார்க்கப்படும் மாட்டை உண்பது.
பாவம் - 10
வன்முறையை கையாள்வது. குழந்தைகளுக்கு எதிராகவும், பெண்களுக்கு எதிராகவும் செய்யும் வன்முறைகள் மன்னிக்கமுடியாத பாவமாகும்.
பாவம் - 11
மாதா, பிதா, குரு மற்றும் வயதானவர்களை மரியாதையின்றி நடத்துவது, அவர்களை அடித்து துன்புறுத்துவது போன்றவையால் சிவனின் கோபத்திற்கு ஆளாக வேண்டிவரும்.
பாவம்- 12
முறையற்ற வழியில் சொத்து சேர்ப்பது, தானமாக கொடுத்த பொருளை திரும்ப வாங்குவதும் சிவனின் பாவத்தின் கணக்கில் அடங்கும்.
சுதர்சனருக்கு உகந்த நாள் வியாழன் மற்றும் சனிக்கிழமை. அன்று அவருக்கு சிவப்பு மலர்களால் மாலை சூட்டி வழிபட்டால் நினைத்த நல்ல காரியங்களில் வெற்றி கிட்டும் என்றும் நம்பிக்கை உள்ளது.
சிவன் கோயில்களில் மட்டுமே நவகிரக வழிபாடு உண்டு. அவ்வழிபாடுகளினால் பக்தர்கள் தங்கள் தோஷங்களை நீக்கிக்கொள்வார்கள்.
விஷ்ணு கோவில்களில் உள்ள சக்கரத்தாழ்வார் வழிபாடும் நவகிர தோஷங்களை நீக்கும் என்பது ஐதீகம். சக்கரத்தாழ்வார் சன்னதியில் நெய் தீபம் ஏற்றி, வழிபாடு செய்ய பின்னர் இந்த மந்திரத்தை செல்ல வேண்டும்.
மந்திரம்: ‘ஓம் நமோ பகவதே மஹா சுதர்சனாய நமஹ’ என்ற மந்திரம் சொன்னால் நவகிரக தோஷங்கள் விரைவில் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை.
மேலும் திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கூடும் என்பதும் ஐதீகம். இந்த சுதர்சனருக்கு உகந்த நாள் வியாழன் மற்றும் சனிக்கிழமை. அன்று அவருக்கு சிவப்பு மலர்களால் மாலை சூட்டி வழிபட்டால் நினைத்த நல்ல காரியங்களில் வெற்றி கிட்டும் என்றும் நம்பிக்கை உள்ளது.
விஷ்ணு கோவில்களில் உள்ள சக்கரத்தாழ்வார் வழிபாடும் நவகிர தோஷங்களை நீக்கும் என்பது ஐதீகம். சக்கரத்தாழ்வார் சன்னதியில் நெய் தீபம் ஏற்றி, வழிபாடு செய்ய பின்னர் இந்த மந்திரத்தை செல்ல வேண்டும்.
மந்திரம்: ‘ஓம் நமோ பகவதே மஹா சுதர்சனாய நமஹ’ என்ற மந்திரம் சொன்னால் நவகிரக தோஷங்கள் விரைவில் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை.
மேலும் திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கூடும் என்பதும் ஐதீகம். இந்த சுதர்சனருக்கு உகந்த நாள் வியாழன் மற்றும் சனிக்கிழமை. அன்று அவருக்கு சிவப்பு மலர்களால் மாலை சூட்டி வழிபட்டால் நினைத்த நல்ல காரியங்களில் வெற்றி கிட்டும் என்றும் நம்பிக்கை உள்ளது.
சிலருக்கு மட்டும் எந்த ஒரு வேலை, தொழிலில் நிரந்தரமாக இல்லாமல் அடிக்கடி மாறிக்கொண்டே இருப்பார்கள். இவற்றிற்கான காரணங்களும், அதை நிவர்த்திக்கும் பரிகாரங்கள் என்ன என்பதையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.
நிறைந்த வேலை, தொழில், வியாபாரம் போன்றவை அமைத்து நல்ல பொருள் வரவு கிடைக்க மூன்று வருடங்களுக்கு ஒரு முறை தொழில், வேலை, வியாபாரம் போன்றவற்றில் ஆதிக்கம் செலுத்தும் மற்றும் பூர்வீக சொத்துக்கள் உருவாக காரணமாக இருக்கும் கிரகங்களான “சூரியன், செவ்வாய், புதன், குரு, சனி” கிரகங்களுக்குரிய கோவில்களுக்கு சென்று பூஜைகள் செய்து வழிபட்டு வர வேண்டும். வாரந்தோறும் அல்லது மாதத்தில் ஒரு சனிக்கிழமையாவது நவகிரக சந்நிதியில், ஒன்பது கிரகங்களுக்கும் தீபம் ஏற்றி வழிபடுவது உங்களின் கிரக தோஷங்களை போக்கும். தினந்தோறும் விநாயக பெருமானை வழிபட்டு வந்தாலும் நன்மைகள் உண்டாகும்.
வருடத்திற்கு ஒரு முறையாவது உங்களின் குலதெய்வ கோவிலுக்கு சென்று, படையல் வைத்து பூஜைகள் செய்து வழிபட்டாலே உங்களுக்கு பல விதமான நன்மைகள் ஏற்பட தொடங்கும். மேற்கூறிய பரிகாரங்களை செய்ய முடியாதவர்கள் உங்களுக்கு வரும் வருமானத்தில், உங்களால் முடிந்த அளவு தொகையை சேமித்து, மாத இறுதியில் கோவில்களுக்கு சென்று அன்றாட உணவிற்கு கஷ்டப்படும் யாசகர்களுக்கு உணவு பொட்டலங்களை தானமாக வழங்கினால் உங்களின் தோஷங்கள் விலகி, நீங்கள் விரும்பிய விடயங்கள் நிறைவேற தொடங்கும்.
நீங்கள் யாரை குருவாக ஏற்றுக்கொண்டு இருக்கிறர்களோ அவருக்கு ஒரு மஞ்சள் வேஷ்டி ஒரு துண்டு குரு பெண் ஆக இருந்தால் மஞ்சள் நிற சேலை மற்றும் காலணி
(செறுப்பு) இவற்றை தானமாக அளித்து அவரிடம் ஆசி பெற நல்ல உத்யோகம் அல்லது தொழில் அமையும்.
மஞ்சள் நிற புஷ்பராக கல் தங்க மோதிரத்தல் பதித்து வலது கை நடுவிரலில் அணிந்து கொண்டால் வேலை வாய்ப்புகள் தேடி வரும் தொழில் சிறக்கும்
தொழில் தடை, கணவன்- மனைவிக்கு கருத்து வேறுபாடு நீங்க, வாழ்வில் நலம் பெற, வெளிநாட்டு வேலை முயற்சி வெற்றி பெற, -என்று நல்ல காரியங்கள் நடைபெற பெளர்ணமி தோறும் நடைபெறும் சத்திய நாராயணா பூஜையில் கலந்து கொள்வது நற்பலன் களைத் தரும்.
கொடுத்த கடன் வசூல் ஆக பைரவர் சந்நிதியில் தொடர்ந்து 8 செவ்வாய் கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி சகஸ்ர நாம அர்ச்சனை செய்ய வேண்டும்.
வருடத்திற்கு ஒரு முறையாவது உங்களின் குலதெய்வ கோவிலுக்கு சென்று, படையல் வைத்து பூஜைகள் செய்து வழிபட்டாலே உங்களுக்கு பல விதமான நன்மைகள் ஏற்பட தொடங்கும். மேற்கூறிய பரிகாரங்களை செய்ய முடியாதவர்கள் உங்களுக்கு வரும் வருமானத்தில், உங்களால் முடிந்த அளவு தொகையை சேமித்து, மாத இறுதியில் கோவில்களுக்கு சென்று அன்றாட உணவிற்கு கஷ்டப்படும் யாசகர்களுக்கு உணவு பொட்டலங்களை தானமாக வழங்கினால் உங்களின் தோஷங்கள் விலகி, நீங்கள் விரும்பிய விடயங்கள் நிறைவேற தொடங்கும்.
நீங்கள் யாரை குருவாக ஏற்றுக்கொண்டு இருக்கிறர்களோ அவருக்கு ஒரு மஞ்சள் வேஷ்டி ஒரு துண்டு குரு பெண் ஆக இருந்தால் மஞ்சள் நிற சேலை மற்றும் காலணி
(செறுப்பு) இவற்றை தானமாக அளித்து அவரிடம் ஆசி பெற நல்ல உத்யோகம் அல்லது தொழில் அமையும்.
மஞ்சள் நிற புஷ்பராக கல் தங்க மோதிரத்தல் பதித்து வலது கை நடுவிரலில் அணிந்து கொண்டால் வேலை வாய்ப்புகள் தேடி வரும் தொழில் சிறக்கும்
தொழில் தடை, கணவன்- மனைவிக்கு கருத்து வேறுபாடு நீங்க, வாழ்வில் நலம் பெற, வெளிநாட்டு வேலை முயற்சி வெற்றி பெற, -என்று நல்ல காரியங்கள் நடைபெற பெளர்ணமி தோறும் நடைபெறும் சத்திய நாராயணா பூஜையில் கலந்து கொள்வது நற்பலன் களைத் தரும்.
கொடுத்த கடன் வசூல் ஆக பைரவர் சந்நிதியில் தொடர்ந்து 8 செவ்வாய் கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி சகஸ்ர நாம அர்ச்சனை செய்ய வேண்டும்.
உங்கள் வீட்டில் நெகடிவ் எனர்ஜி இருப்பதை எப்படி அறிந்து கொள்வது என்பதையும், நெகடிவ் எனர்ஜி குறைய செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
உங்கள் வீட்டில் ஒரு கண்ணாடி டம்ளரில் தண்ணீர் நிரப்பி முழு எலுமிச்சம்பழத்தை அதில் போட எலுமிச்சை மிதந்தால் நெகடிவ் ஆற்றல் இல்லை எனவும், மூழ்கி போனால் நெகடிவ் எனர்ஜி உள்ளதாகவும் கொள்ளலாம்.
வீட்டில் நெகடிவ் எனர்ஜி குறைய செய்ய வேண்டிய பரிகாரங்கள்...
1. தினமும் காலையிலும் மாலையிலும் விளக்கேற்றுதல்
2. சாம்பிராணியுடன் குங்க்லியம் சேர்த்து தூபம் போடுதல்
3. கோமியத்துடன் கோமுக நீர் கலந்து வீடு முழுவதும் தெளித்தல்
4. பழைய பொருட்களை அகற்றுதல்
5. ஓடாத கடிகாரங்களை சரிபார்த்தல்
6. ஒழுகும் பைப்புகளை சரி செய்தல்
வீட்டில் நெகடிவ் எனர்ஜி குறைய செய்ய வேண்டிய பரிகாரங்கள்...
1. தினமும் காலையிலும் மாலையிலும் விளக்கேற்றுதல்
2. சாம்பிராணியுடன் குங்க்லியம் சேர்த்து தூபம் போடுதல்
3. கோமியத்துடன் கோமுக நீர் கலந்து வீடு முழுவதும் தெளித்தல்
4. பழைய பொருட்களை அகற்றுதல்
5. ஓடாத கடிகாரங்களை சரிபார்த்தல்
6. ஒழுகும் பைப்புகளை சரி செய்தல்
நம்முடைய முன்னோர்கள் பசுவிற்கு கீரை, பழங்கள் உள்ளிட்டவற்றை கொடுத்தால் கொடுப்பதால், நாம் செய்த பாவங்கள் அழியும் என்று கூறியுள்ளனர். அந்த வகையில் எந்தெந்த விலங்குகளுக்கு நாம் உணவு அளித்தால் கிரகப் பிரச்சனைகள் தீரும் என்பதை இங்கு பார்ப்போம்.
நம்முடைய முன்னோர்கள் பசுவிற்கு கீரை, பழங்கள் உள்ளிட்டவற்றை கொடுத்தால் கொடுப்பதால், நாம் செய்த பாவங்கள் அழியும் என்று கூறியுள்ளனர். அந்த வகையில் எந்தெந்த விலங்குகளுக்கு நாம் உணவு அளித்தால் கிரகப் பிரச்சனைகள் தீரும் என்பதை இங்கு பார்ப்போம்.
சூரியன் :-
சூரிய பகவானின் கிரகப் பிரச்சனைகள் உங்கள் ஜாதகத்தில் இருந்தால், குதிரைக்கு உணவளிப்பதன் மூலம் அந்த பிரச்சனை தீரும்.
வியாழன் :-
உங்கள் ஜாதகத்தில் குருபகவானால் பிரச்சனைகள் இருந்தால் திருமணம் மற்றும் கல்வி பாதிக்கப்படும். அதை நிவர்த்தி செய்ய மாடுகளுக்கு தீவனம் அல்லது யானைக்கு உணவு அளிக்கலாம்.
சந்திரன் :-
சந்திர பகவானின் பார்வை உங்கள் ஜாதகத்தில் உக்கிரமாக இருந்தால், அதை சரிசெய்ய நீர் வாழ் உயிரினங்களுக்கு உணவு வழங்கலாம். அதாவது மீன், ஆமை உள்ளிட்ட நீர் வாழ் உயிரினங்களுக்கு உணவு வழங்கலாம்.
செவ்வாய் :-
செவ்வாய் கிரகம் திருமண விஷயத்தில் முக்கியமான தடையாக பார்க்கப்படுகின்றது. நாம் ஆடு அல்லது செம்மறி ஆட்டுக்கு உணவு கொடுப்பதன் மூலம் நம் கெட்ட வினைகள் குறைகின்றது. மேலும், குரங்குகளுக்கு தானியங்களையும் அளிக்கலாம்.
புதன் :-
உங்கள் ஜாதகத்தில் புதன் அதிபதியாக இருக்கும் பட்சத்தில் அவர் மிகச்சிறந்த பேச்சாளராக இருப்பார். புதன் திசை பிரச்சனையாக உள்ளவர்கள், கிளிகளுக்கு உணவு வைப்பது சிறந்தது. அப்படி இல்லையெனில், தங்கள் வீட்டின் மேல் கூரையில் பறவைகளுக்கு உணவுகள் மற்றும் தண்ணீர் வைக்கலாம்.
சுக்கிரன் :-
செல்வத்தை அளிக்கக்கூடிய கிரகம் சுக்கிரன். இந்த கிரகம் நல்ல முறையில் வலுப்பெற புறா உள்ளிட்ட பறவைகளுக்கு தானியங்களை உணவாக கொடுக்கலாம்.
சனி :-
நாம் அனைவரும் மிகவும் பயப்படும் ஒரு கிரகம் சனி. சனி பகவானின் அருளைப் பெற கருப்பு நிற விலங்குகள், பறவைகளுக்கு உணவளிக்கலாம். உதாரணமாக எருமை, கருப்பு நிற நாய், காகம் உள்ளிட்டவை.
ராகு - கேது :-
ராகு - கேது உங்கள் ஜாதகத்தில் வலுப்பெற நாய்களுக்கு ரொட்டி கொடுப்பதும், எறும்புகளுக்கு சர்க்கரை, மாவுப்பொருட்களை உணவாக கொடுப்பதும் நல்ல பலன்களைத் தரும்.
சூரியன் :-
சூரிய பகவானின் கிரகப் பிரச்சனைகள் உங்கள் ஜாதகத்தில் இருந்தால், குதிரைக்கு உணவளிப்பதன் மூலம் அந்த பிரச்சனை தீரும்.
வியாழன் :-
உங்கள் ஜாதகத்தில் குருபகவானால் பிரச்சனைகள் இருந்தால் திருமணம் மற்றும் கல்வி பாதிக்கப்படும். அதை நிவர்த்தி செய்ய மாடுகளுக்கு தீவனம் அல்லது யானைக்கு உணவு அளிக்கலாம்.
சந்திரன் :-
சந்திர பகவானின் பார்வை உங்கள் ஜாதகத்தில் உக்கிரமாக இருந்தால், அதை சரிசெய்ய நீர் வாழ் உயிரினங்களுக்கு உணவு வழங்கலாம். அதாவது மீன், ஆமை உள்ளிட்ட நீர் வாழ் உயிரினங்களுக்கு உணவு வழங்கலாம்.
செவ்வாய் :-
செவ்வாய் கிரகம் திருமண விஷயத்தில் முக்கியமான தடையாக பார்க்கப்படுகின்றது. நாம் ஆடு அல்லது செம்மறி ஆட்டுக்கு உணவு கொடுப்பதன் மூலம் நம் கெட்ட வினைகள் குறைகின்றது. மேலும், குரங்குகளுக்கு தானியங்களையும் அளிக்கலாம்.
புதன் :-
உங்கள் ஜாதகத்தில் புதன் அதிபதியாக இருக்கும் பட்சத்தில் அவர் மிகச்சிறந்த பேச்சாளராக இருப்பார். புதன் திசை பிரச்சனையாக உள்ளவர்கள், கிளிகளுக்கு உணவு வைப்பது சிறந்தது. அப்படி இல்லையெனில், தங்கள் வீட்டின் மேல் கூரையில் பறவைகளுக்கு உணவுகள் மற்றும் தண்ணீர் வைக்கலாம்.
சுக்கிரன் :-
செல்வத்தை அளிக்கக்கூடிய கிரகம் சுக்கிரன். இந்த கிரகம் நல்ல முறையில் வலுப்பெற புறா உள்ளிட்ட பறவைகளுக்கு தானியங்களை உணவாக கொடுக்கலாம்.
சனி :-
நாம் அனைவரும் மிகவும் பயப்படும் ஒரு கிரகம் சனி. சனி பகவானின் அருளைப் பெற கருப்பு நிற விலங்குகள், பறவைகளுக்கு உணவளிக்கலாம். உதாரணமாக எருமை, கருப்பு நிற நாய், காகம் உள்ளிட்டவை.
ராகு - கேது :-
ராகு - கேது உங்கள் ஜாதகத்தில் வலுப்பெற நாய்களுக்கு ரொட்டி கொடுப்பதும், எறும்புகளுக்கு சர்க்கரை, மாவுப்பொருட்களை உணவாக கொடுப்பதும் நல்ல பலன்களைத் தரும்.
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் நட்சத்திர தோஷங்கள் நீங்கவும், வாழ்வில் பல மேன்மையான பலன்களை பெறவும் செய்ய வேண்டிய எளிய பரிகார முறைகளை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
27 நட்சத்திர வரிசையில் மூன்றாவதாக வருவது கிருத்திகை நட்சத்திரமாகும். நவகிரகங்களில் சூரிய பகவானின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட நட்சத்திரமாக இருந்தாலும் செவ்வாய் மற்றும் சுக்கிர கிரகங்களின் ஆதிக்கம் ஒரு சேர கொண்ட நட்சத்திரமாக இருக்கிறது கிருத்திகை நட்சத்திரம். இந்நட்சத்திரத்தின் தேவதையாக அக்னி பகவான் இருக்கிறார். கிருத்திகை நட்சத்திரம் தமிழர்களின் கடவுளான முருகப்பெருமானுக்குரிய நட்சத்திரமாகவும் இருக்கிறது.
கிருத்திகை நட்சத்திரக்காரர்களின் தோஷங்கள் நீங்கி நன்மைகள் நடக்க ஒவ்வொரு மாதமும் வருகின்ற கிருத்திகை நட்சத்திர தினத்தன்று முருகப்பெருமான் கோவிலுக்கு சென்று முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது நல்லது. கிருத்திகை நட்சத்திரக்காரர்களுக்கு உரிய தல விருட்சமாக அத்தி மரம் இருக்கிறது. அத்தி மரம் தல விருட்சமாக இருக்கும் கோவில்களுக்கு சென்று அத்தி மரத்தையும், அங்குள்ள இறைவனையும் வழிபடுவது உங்களுடைய வாழ்வில் அதிர்ஷ்டங்கள் பெருகச்செய்யும் சிறந்த பரிகாரமாகும்.
எந்த ஒரு மாதத்திலும் வரும் கிருத்திகை நட்சத்திர தினத்திலோ அல்லது ஆடிக்கிருத்திகை தினத்திலோ உங்கள் சக்திக்கு ஏற்ப வேதமறிந்த பிராமணர்களுக்கு அரிசி, வஸ்திரம் போன்றவற்றை தானம் செய்யலாம். மற்ற எந்த பரிகாரம் செய்யவில்லை என்றாலும் கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் தினமும் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்ததும், சூரிய நமஸ்காரம் செய்வதால் வாழ்வில் எப்போதும் நன்மைகள் ஏற்படும். கோயில்களில் நடைபெறும் யாகங்களுக்கு தேவையான பூஜைப் பொருட்களை வாங்கித் தருவதும் கிருத்திகை நட்சத்திரக்காரர்களின் தோஷங்களை போக்குவதற்கான சிறந்த பரிகாரமாகும்..
கிருத்திகை நட்சத்திரக்காரர்களின் தோஷங்கள் நீங்கி நன்மைகள் நடக்க ஒவ்வொரு மாதமும் வருகின்ற கிருத்திகை நட்சத்திர தினத்தன்று முருகப்பெருமான் கோவிலுக்கு சென்று முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது நல்லது. கிருத்திகை நட்சத்திரக்காரர்களுக்கு உரிய தல விருட்சமாக அத்தி மரம் இருக்கிறது. அத்தி மரம் தல விருட்சமாக இருக்கும் கோவில்களுக்கு சென்று அத்தி மரத்தையும், அங்குள்ள இறைவனையும் வழிபடுவது உங்களுடைய வாழ்வில் அதிர்ஷ்டங்கள் பெருகச்செய்யும் சிறந்த பரிகாரமாகும்.
எந்த ஒரு மாதத்திலும் வரும் கிருத்திகை நட்சத்திர தினத்திலோ அல்லது ஆடிக்கிருத்திகை தினத்திலோ உங்கள் சக்திக்கு ஏற்ப வேதமறிந்த பிராமணர்களுக்கு அரிசி, வஸ்திரம் போன்றவற்றை தானம் செய்யலாம். மற்ற எந்த பரிகாரம் செய்யவில்லை என்றாலும் கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் தினமும் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்ததும், சூரிய நமஸ்காரம் செய்வதால் வாழ்வில் எப்போதும் நன்மைகள் ஏற்படும். கோயில்களில் நடைபெறும் யாகங்களுக்கு தேவையான பூஜைப் பொருட்களை வாங்கித் தருவதும் கிருத்திகை நட்சத்திரக்காரர்களின் தோஷங்களை போக்குவதற்கான சிறந்த பரிகாரமாகும்..
இந்த கோவில் மூலவருக்கு பின்புறம் தனி மாடத்தில் சிவன், அம்பாள் நடுவில் முருகப்பெருமானுடன் சோமாஸ்கந்த சிலையும் உள்ளது. இத்தலத்தில் வழிபட்டால் குழந்தை பாக்கியம் கண்டிப்பாக கிடைக்கும் என்பது நம்பிக்கை.
நாகப்பட்டினத்தின் புராண காலப்பெயர், ‘கடல் நாகைக் காரோணம்’ என்பதாகும். இத்தல ஈசனின் திருநாமம் ‘காயாரோகணேஸ்வரர்’. அன்னையின் திருநாமம் ‘நீலாயதாட்சி’ என்னும் ‘கருந்தடங்கண்ணி’. ‘காயம்’ என்றால் ‘உடம்பு’ என்று பொருள்படும். ‘ஆரோகணம்’ என்பதற்கு ‘உடம்போடு சேர்த்து அணைத்துக் கொள்ளல்’ என்று அர்த்தம். இங்குள்ள ஈசன், புண்டரீக மகரிஷியின் உடலை, தன் சிவலிங்கத் திருமேனியோடு சேர்த்துக் கொண்டதால், இத்தல இறைவனுக்கு ‘காயாரோகணர்’ என்றும், இத்தலத்திற்கு ‘காயாரோகணம்’ என்றும் பெயர் வந்தது.
நந்திக்கு அருகம்புல் மாலை அணிவித்து, ஈசன், அம்பிகை, நந்தி என முறைப்படி தேன் அபிஷேகம் செய்து, 5 நெய் தீபங்கள், 5 சந்தனாதி தைல தீபங்கள் ஏற்றி வழிபட்டு வந்தால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் அகலும் என்பதும் நம்பிக்கையாக இருக்கிறது. நாக தோஷங்கள் அகல, இத்தல ஈசன் வழிபாடு நமக்குத் துணை நிற்கும்.
இங்கு மூலவருக்கு பின்புறம் தனி மாடத்தில் சிவன், அம்பாள் நடுவில் முருகப்பெருமானுடன் சோமாஸ்கந்த சிலையும் உள்ளது. இத்தலத்தில் வழிபட்டால் குழந்தை பாக்கியம் கண்டிப்பாக கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இவ்வாலயத்தில் உள்ள அகோர வீரபத்திரரை, பவுர்ணமி நாளில் வெற்றிலை மாலை அணிவித்து வழிபட்டால் வறுமை அகலும். இத்தல வெண்ணெய்பிரான், காசி விஸ்வநாதர், அருணாசலேஸ்வரர் சன்னிதிகள் இரட்டிப்பு பலன்களை அளிக்கவல்லவை. இங்குள்ள பைரவரை வெள்ளி மற்றும் அஷ்டமி நாட்களில் முந்திரி மாலை அணிவித்து வில்வ அர்ச்சனை செய்து, நறுமண மலர்மாலை சூட்டி 9 நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் கிரக தோஷங்கள் அகலும். இங்குள்ள சனீஸ்வரர், தசரதரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர் என்கிறார்கள். இவரை 9 நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபட்டால் சகல விதமான சனி தோஷங்களும், சிவராத்திரி நாளில் இத்தல ஈசனை வழிபட்டால் நாக தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.
நாகப்பட்டினம் பஸ் நிலையத்தில் இருந்து 2 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது இந்த ஆலயம்.
நந்திக்கு அருகம்புல் மாலை அணிவித்து, ஈசன், அம்பிகை, நந்தி என முறைப்படி தேன் அபிஷேகம் செய்து, 5 நெய் தீபங்கள், 5 சந்தனாதி தைல தீபங்கள் ஏற்றி வழிபட்டு வந்தால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் அகலும் என்பதும் நம்பிக்கையாக இருக்கிறது. நாக தோஷங்கள் அகல, இத்தல ஈசன் வழிபாடு நமக்குத் துணை நிற்கும்.
இங்கு மூலவருக்கு பின்புறம் தனி மாடத்தில் சிவன், அம்பாள் நடுவில் முருகப்பெருமானுடன் சோமாஸ்கந்த சிலையும் உள்ளது. இத்தலத்தில் வழிபட்டால் குழந்தை பாக்கியம் கண்டிப்பாக கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இவ்வாலயத்தில் உள்ள அகோர வீரபத்திரரை, பவுர்ணமி நாளில் வெற்றிலை மாலை அணிவித்து வழிபட்டால் வறுமை அகலும். இத்தல வெண்ணெய்பிரான், காசி விஸ்வநாதர், அருணாசலேஸ்வரர் சன்னிதிகள் இரட்டிப்பு பலன்களை அளிக்கவல்லவை. இங்குள்ள பைரவரை வெள்ளி மற்றும் அஷ்டமி நாட்களில் முந்திரி மாலை அணிவித்து வில்வ அர்ச்சனை செய்து, நறுமண மலர்மாலை சூட்டி 9 நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் கிரக தோஷங்கள் அகலும். இங்குள்ள சனீஸ்வரர், தசரதரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர் என்கிறார்கள். இவரை 9 நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபட்டால் சகல விதமான சனி தோஷங்களும், சிவராத்திரி நாளில் இத்தல ஈசனை வழிபட்டால் நாக தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.
நாகப்பட்டினம் பஸ் நிலையத்தில் இருந்து 2 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது இந்த ஆலயம்.
இறை வழிபாட்டில், மயில் முருகப்பெருமானின் வாகனமாக இருக்கிறது. வீட்டின் முன்பகுதியில் அந்த மயில் இறகை சொருகி வைத்தால், எதிர்மறை ஆற்றலை தடுத்து நேர்மறை ஆற்றலை வழங்கும்.
மயில்- நம் நாட்டின் தேசியப் பறவை. அதோடு இறை வழிபாட்டில், அது முருகப்பெருமானின் வாகனமாகவும் இருக்கிறது. மழை மேகத்தைப் பார்த்ததும், ஆண் மயில் தன்னுடைய தோகையை விரித்து ஆடுவது வாடிக்கை.
அப்படி ஆடும் பொழுது, ஒருசில இறகுகள் உதிர்ந்து கீழே விழும். அவ்வாறு கீழே விழுந்த இறகுகளை எடுத்து வந்து வீட்டின் பூஜையறையில் வைத்தால் வாஸ்து தோஷம் விலகும்.
வீட்டின் முன்பகுதியில் அந்த மயில் இறகை சொருகி வைத்தால், எதிர்மறை ஆற்றலை தடுத்து நேர்மறை ஆற்றலை வழங்கும். காவடியில் மயிலிறகு வைப்பது வழக்கம்.
வீட்டில் மயிலிறகு, அருகம்புல், துளசி ஆகியவற்றை வைப்பதன் மூலம் வாஸ்து தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
அப்படி ஆடும் பொழுது, ஒருசில இறகுகள் உதிர்ந்து கீழே விழும். அவ்வாறு கீழே விழுந்த இறகுகளை எடுத்து வந்து வீட்டின் பூஜையறையில் வைத்தால் வாஸ்து தோஷம் விலகும்.
வீட்டின் முன்பகுதியில் அந்த மயில் இறகை சொருகி வைத்தால், எதிர்மறை ஆற்றலை தடுத்து நேர்மறை ஆற்றலை வழங்கும். காவடியில் மயிலிறகு வைப்பது வழக்கம்.
வீட்டில் மயிலிறகு, அருகம்புல், துளசி ஆகியவற்றை வைப்பதன் மூலம் வாஸ்து தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
சுய ஜாதக அடிப்படையில் எந்த சாபத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்து, அதற்குரிய பரிகாரங்களைச் செய்தால் துன்பங்களில் இருந்து விடுதலை பெற முடியும்.
பல குடும்பங்களில் எந்தக் காரியத்தை எடுத்தாலும் தடைகளும், தாமதங்களும் வந்து கொண்டேயிருக்கும். குடும்பத்திற்குள்ளேயும் சண்டை, சச்சரவு ஏற்பட்டு மனஅமைதி குறையும். அதுபோன்ற நேரங்களில் ‘யார் கொடுத்த சாபமோ நமது வாழ்க்கை இப்படி இருக்கின்றதே’ என்று புலம்புவார்கள்.
சுய ஜாதக அடிப்படையில் எந்த சாபத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்து, அதற்குரிய பரிகாரங்களைச் செய்தால் ஓரளவேனும் துன்பங்களில் இருந்து விடுதலை பெற முடியும்.
* பெற்றோரால் ஏற்படும் சாபங்கள் விலக, பிரதமை திதியில் சண்டிகேஸ்வரருக்கு பரிகாரம் செய்ய வேண்டும்.
* சகோதர சாபம் விலக, அஷ்டமி திதியில் நந்திகேஸ்வரருக்கு சிறப்பு வழிபாடுகளைச் செய்வது நல்லது. குறிப்பாக திசை மாறிய நந்தியைத் தோ்ந் தெடுத்து வழிபட்டால் உடனடியாக பலன் கிடைக்கும்.
* சுமங்கலி சாபம் நீங்க, திருதியை திதியில் சோமாஸ்கந்தர் மற்றும் அதிகார நந்திக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட வேண்டும்.
இதுபோன்றே அனைத்து சாபங்களுக்கும் பரிகாரங்கள் உள்ளன. ‘பாவத்திற்கு விமோசனம் உண்டு. ஆனால் சாபத்திற்கு விமோசனம் இல்லை’ என்பார்கள். சாப விமோசனத்திற்கு என்று தமிழகத்தில் ஏராளமான தலங்கள் உள்ளன. வாய்ப்பு அமையும் பொழுது யோகபலம் பெற்ற நாளில் அங்கு சென்று வழிபட்டு வந்தால் தடைகள் அகன்றோடும்.
சுய ஜாதக அடிப்படையில் எந்த சாபத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்து, அதற்குரிய பரிகாரங்களைச் செய்தால் ஓரளவேனும் துன்பங்களில் இருந்து விடுதலை பெற முடியும்.
* பெற்றோரால் ஏற்படும் சாபங்கள் விலக, பிரதமை திதியில் சண்டிகேஸ்வரருக்கு பரிகாரம் செய்ய வேண்டும்.
* சகோதர சாபம் விலக, அஷ்டமி திதியில் நந்திகேஸ்வரருக்கு சிறப்பு வழிபாடுகளைச் செய்வது நல்லது. குறிப்பாக திசை மாறிய நந்தியைத் தோ்ந் தெடுத்து வழிபட்டால் உடனடியாக பலன் கிடைக்கும்.
* சுமங்கலி சாபம் நீங்க, திருதியை திதியில் சோமாஸ்கந்தர் மற்றும் அதிகார நந்திக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட வேண்டும்.
இதுபோன்றே அனைத்து சாபங்களுக்கும் பரிகாரங்கள் உள்ளன. ‘பாவத்திற்கு விமோசனம் உண்டு. ஆனால் சாபத்திற்கு விமோசனம் இல்லை’ என்பார்கள். சாப விமோசனத்திற்கு என்று தமிழகத்தில் ஏராளமான தலங்கள் உள்ளன. வாய்ப்பு அமையும் பொழுது யோகபலம் பெற்ற நாளில் அங்கு சென்று வழிபட்டு வந்தால் தடைகள் அகன்றோடும்.
நாம் ஆஞ்சநேயருக்கு பலவிதமான பூஜைகளும் பரிகார பூஜைகளும் செய்கிறோம். ஆஞ்சநேயருக்கு என்ன பரிகாரங்கள் என்ன பலனை தரும் என்று பார்க்கலாம்.
வடைமாலை:
அனுமானுடைய தாய் அஞ்சலிதேவி தன் மகன் திடமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உளுந்து வடைசெய்து கொடுத்ததாக கூறப்படுகின்றது. இதனலையே சிலர் ஆஞ்சநேய வடைமாலையை அணிவிப்பர்
வெண்ணெய் சாத்துதல்:
வெண்ணெய் சீக்கிரமாக உருகும் தன்மை உடையது அந்த வெண்ணை உருகுவதற்கு முன்பாகவே நாம் நினைத்த காரியம் நடந்து விடும் என்ற நம்பிக்கை ,அதனால் வெண்ணெய் சார்த்தும் பழக்கம் உள்ளது,
ஜெய் ஸ்ரீ ராம் என்று மாலையாக அணிவித்தல்:
ராம் ராம் என்று எழுதி மாலையாக அணிவித்தல் நமக்கு எல்லா ஷேமங்களையும் அள்ளி வழங்கும் மகிமை கொண்டது.
வாலில் பொட்டு வைப்பது:
அனுமனுக்கு சக்தி முழுவதும் தன் வாலில் தான். வாலிலிருந்து சந்தனம் குங்குமம் பொட்டு வைத்து ஒரு சுற்றுமுடிவதற்குள் நினைத்த காரியம் சித்தியாகிறது என்ற நம்பிக்கை.
அனுமானுடைய தாய் அஞ்சலிதேவி தன் மகன் திடமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உளுந்து வடைசெய்து கொடுத்ததாக கூறப்படுகின்றது. இதனலையே சிலர் ஆஞ்சநேய வடைமாலையை அணிவிப்பர்
வெண்ணெய் சாத்துதல்:
வெண்ணெய் சீக்கிரமாக உருகும் தன்மை உடையது அந்த வெண்ணை உருகுவதற்கு முன்பாகவே நாம் நினைத்த காரியம் நடந்து விடும் என்ற நம்பிக்கை ,அதனால் வெண்ணெய் சார்த்தும் பழக்கம் உள்ளது,
ஜெய் ஸ்ரீ ராம் என்று மாலையாக அணிவித்தல்:
ராம் ராம் என்று எழுதி மாலையாக அணிவித்தல் நமக்கு எல்லா ஷேமங்களையும் அள்ளி வழங்கும் மகிமை கொண்டது.
வாலில் பொட்டு வைப்பது:
அனுமனுக்கு சக்தி முழுவதும் தன் வாலில் தான். வாலிலிருந்து சந்தனம் குங்குமம் பொட்டு வைத்து ஒரு சுற்றுமுடிவதற்குள் நினைத்த காரியம் சித்தியாகிறது என்ற நம்பிக்கை.
மாங்கனித் திருவிழாவில் வீசப்படும் மாங்கனிகளை குழந்தைப் பேறு இல்லாதவர்கள் எடுத்து சாப்பிட்டால், அவர்களுக்கு குழந்தை பாக்கியம் விரைவாக கிடைக்கும் என்பது நம்பிக்கை.
பிறப்பும், இறப்பும் இல்லாதவர் சிவபெருமான். ஆனால் அவருக்கும் ஒரு ‘அம்மை’ இருக்கிறார் என்றால், அது காரைக்கால் அம்மையார்ர் மட்டுமே. அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர் ஆகிய மூவரும் பாடிய தேவாரத்துக்கு முன்மாதிரியானவை, இவர் பாடிய பதிகங்கள். இன்னும் சொல்லப்போனால், தமிழில் முதன் முதலாக பதிகம் பாடும் முறையை அறிமுகம் செய்தவரே காரைக்கால் அம்மையார் தான். இவர் பாடிய பதிகங்களைப் பின்பற்றியே, மூவரின் தேவார பதிகங்கள் பாடப்பட்டன. தமிழுக்கு ‘அந்தாதி’ என்னும் இலக்கண முறையை அறிமுகம் செய்து வைத்தவர்.
புனிதவதியாக பிறந்து மண வாழ்க்கையில் நுழைந்தவர், காரைக்கால் அம்மையார். ஒரு முறை பணியாள் மூலமாக கணவர் கொடுத்தனுப்பிய மாங்கனிகளில் ஒன்றை, அடியாராக வந்த ஈசனுக்கு விருந்தாக அளித்து விட்டார். அதோடு தயிர் அன்னமும் படைத்து அனுப்பினார்.
மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்த கணவருக்கு, எஞ்சியிருந்த ஒரு மாங்கனியை சாப்பிடக் கொடுத்தார். அந்த மாங்கனி சுவையாக இருந்ததால், மீதமிருந்த மற்றொரு மாங்கனியையும் கொண்டு வரும்படி கணவர் கூற, புனிதவதி திகைத்துப் போனார். ‘அடியாருக்கு விருந்து படைத்து விட்டேன் என்று கூறினால், கணவர் கோபித்துக் கொள்வாரோ?’ என பயந்த புனிதவதி, பூஜை அறைக்குச் சென்று ஈசனை வேண்டினார். அப்போது அவரது கையில் ஒரு மாங்கனி வந்தது. அதைக் கொண்டு போய் கணவனுக்கு கொடுத்தார்.
முன்பு சாப்பிட்ட பழத்தை விட, இந்தப் பழம் அதிக சுவையுடன் இருந்தது. ஒரு மரத்தின் காயில் எப்படி வேறுபட்ட சுவை கிடைக்கும் என்று சந்தேகித்த புனிதவதியின் கணவன், அவரிடம் உண்மையைக் கூறும்படி வலியுறுத்த, நடந்த விவரங்களைச் சொன்னார்.
இப்போதுதான் கணவரின் சந்தேகம் மேலும் வலுப்பெற்றது. இறைவனே மாங்கனியைக் கொடுத்தானா என்று அதிர்ந்தவர், “அப்படியானால் ஈசனிடம் வேண்டி மீண்டும் ஒரு மாங்கனியைப் பெற்றுவா” என்று மனைவிக்கு கட்டளையிட்டார். புனிதவதியும் அதன்படியே ஈசனை வேண்டி, மற்றொரு கனியை பெற்றார். இதைக் கண்டு அதிர்ச்சியும் பயமும் கொண்ட புனிதவதியின் கணவன், ‘இவள் தெய்வப்பெண்’ என்று கருதி, அவளை விட்டு நீங்கி வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
இதையறிந்த புனிதவதி இனியும் தனக்கு இந்த அழகு எதற்கு என்று கருதி, ஈசனிடம் வேண்டி பேய் உருவத்தைப் பெற்றார். அந்த உருவத்தோடு பல தலங்களுக்குச் சென்று வந்தவர், இறுதியில் கயிலையில் வாழும் இறைவனை அங்கேயே சென்று தரிசிக்க முடிவு செய்தார். இறைவன் வாழும் கயிலையில் கால் பதித்து நடக்கக்கூடாது என்பதற்காக, தலையால் நடந்து சென்றார். அதைப் பார்த்த பார்வதிதேவி, “இறைவா.. தலையால் நடந்து வரும் இந்தப் பெண் யார்?” என்று கேட்க, அதற்கு சிவபெருமான், “இவள் நம்மை போற்றும் அம்மை காண்” என்று பதிலளித்தார்.
இறைவனே ‘அம்மை’ என்று அழைத்ததாலும், காரைக்காலில் பிறந்ததாலும், இவர் பின்னாளில் ‘காரைக்கால் அம்மையார்’ என்று அழைக்கப்பட்டார். 63 நாயன்மார்களில், ஒரே ஒரு பெண் நாயன்மாராக காரைக்கால் அம்மையார் திகழ்கிறார். மேலும் அனைத்து நாயன்மார்களும் நின்ற திருக்கோலத்திலேயே காட்சி தர, காரைக்கால் அம்மையார் மட்டும் அமர்ந்த கோலத்தில் அருள்வதைக் காணலாம். ஏனெனில் தாய்மைக்கு அவ்வளவு சிறப்பு இருக்கிறது.
இவ்வளவு சிறப்பு கொண்ட காரைக்கால் அம்மையாருக்கு, புதுச்சேரி மாநிலம் காரைக்கால் நகரில் தனிக் கோவில் அமைந்துள்ளது. இறைவனுக்கு மாங்கனியை விருந்தளித்த, இந்த அன்னையின் சிறப்பை எடுத்துரைக்கும் விதமாக காரைக்காலில் ஆண்டு தோறும் ‘மாங்கனி திருவிழா’ நடத்தப்படும். காரைக்கால் சுந்தராம்பாள் உடனாய கயிலாசநாதர் ஆலயத்தில் இருந்து காரைக்கால் அம்மையார் கோவிலுக்கு வரும் இறைவன் மீது, பக்தர்கள் பலரும் சூழ்ந்து நின்று மாங்கனிகளை வீசி வழிபாடு செய்வார்கள். அப்படி வீசப்படும் மாங்கனிகளை குழந்தைப் பேறு இல்லாதவர்கள் எடுத்து சாப்பிட்டால், அவர்களுக்கு குழந்தை பாக்கியம் விரைவாக கிடைக்கும் என்பது நம்பிக்கை.
கொரோனா பெருந்தொற்று காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட காரணத்தால், கடந்த ஆண்டு இந்த விழாவிற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. விழாவும் கயிலாசநாதர் கோவிலுக்குள்ளேயே நடத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டும் பெருந்தொற்று காரணமாக கட்டுப்பாடுகள் தொடர்ந்து கொண்டிருப்பதால், இம்முறையும் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு, இந்த விழா நடத்தப்பட உள்ளது.
புனிதவதியாக பிறந்து மண வாழ்க்கையில் நுழைந்தவர், காரைக்கால் அம்மையார். ஒரு முறை பணியாள் மூலமாக கணவர் கொடுத்தனுப்பிய மாங்கனிகளில் ஒன்றை, அடியாராக வந்த ஈசனுக்கு விருந்தாக அளித்து விட்டார். அதோடு தயிர் அன்னமும் படைத்து அனுப்பினார்.
மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்த கணவருக்கு, எஞ்சியிருந்த ஒரு மாங்கனியை சாப்பிடக் கொடுத்தார். அந்த மாங்கனி சுவையாக இருந்ததால், மீதமிருந்த மற்றொரு மாங்கனியையும் கொண்டு வரும்படி கணவர் கூற, புனிதவதி திகைத்துப் போனார். ‘அடியாருக்கு விருந்து படைத்து விட்டேன் என்று கூறினால், கணவர் கோபித்துக் கொள்வாரோ?’ என பயந்த புனிதவதி, பூஜை அறைக்குச் சென்று ஈசனை வேண்டினார். அப்போது அவரது கையில் ஒரு மாங்கனி வந்தது. அதைக் கொண்டு போய் கணவனுக்கு கொடுத்தார்.
முன்பு சாப்பிட்ட பழத்தை விட, இந்தப் பழம் அதிக சுவையுடன் இருந்தது. ஒரு மரத்தின் காயில் எப்படி வேறுபட்ட சுவை கிடைக்கும் என்று சந்தேகித்த புனிதவதியின் கணவன், அவரிடம் உண்மையைக் கூறும்படி வலியுறுத்த, நடந்த விவரங்களைச் சொன்னார்.
இப்போதுதான் கணவரின் சந்தேகம் மேலும் வலுப்பெற்றது. இறைவனே மாங்கனியைக் கொடுத்தானா என்று அதிர்ந்தவர், “அப்படியானால் ஈசனிடம் வேண்டி மீண்டும் ஒரு மாங்கனியைப் பெற்றுவா” என்று மனைவிக்கு கட்டளையிட்டார். புனிதவதியும் அதன்படியே ஈசனை வேண்டி, மற்றொரு கனியை பெற்றார். இதைக் கண்டு அதிர்ச்சியும் பயமும் கொண்ட புனிதவதியின் கணவன், ‘இவள் தெய்வப்பெண்’ என்று கருதி, அவளை விட்டு நீங்கி வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
இதையறிந்த புனிதவதி இனியும் தனக்கு இந்த அழகு எதற்கு என்று கருதி, ஈசனிடம் வேண்டி பேய் உருவத்தைப் பெற்றார். அந்த உருவத்தோடு பல தலங்களுக்குச் சென்று வந்தவர், இறுதியில் கயிலையில் வாழும் இறைவனை அங்கேயே சென்று தரிசிக்க முடிவு செய்தார். இறைவன் வாழும் கயிலையில் கால் பதித்து நடக்கக்கூடாது என்பதற்காக, தலையால் நடந்து சென்றார். அதைப் பார்த்த பார்வதிதேவி, “இறைவா.. தலையால் நடந்து வரும் இந்தப் பெண் யார்?” என்று கேட்க, அதற்கு சிவபெருமான், “இவள் நம்மை போற்றும் அம்மை காண்” என்று பதிலளித்தார்.
இறைவனே ‘அம்மை’ என்று அழைத்ததாலும், காரைக்காலில் பிறந்ததாலும், இவர் பின்னாளில் ‘காரைக்கால் அம்மையார்’ என்று அழைக்கப்பட்டார். 63 நாயன்மார்களில், ஒரே ஒரு பெண் நாயன்மாராக காரைக்கால் அம்மையார் திகழ்கிறார். மேலும் அனைத்து நாயன்மார்களும் நின்ற திருக்கோலத்திலேயே காட்சி தர, காரைக்கால் அம்மையார் மட்டும் அமர்ந்த கோலத்தில் அருள்வதைக் காணலாம். ஏனெனில் தாய்மைக்கு அவ்வளவு சிறப்பு இருக்கிறது.
இவ்வளவு சிறப்பு கொண்ட காரைக்கால் அம்மையாருக்கு, புதுச்சேரி மாநிலம் காரைக்கால் நகரில் தனிக் கோவில் அமைந்துள்ளது. இறைவனுக்கு மாங்கனியை விருந்தளித்த, இந்த அன்னையின் சிறப்பை எடுத்துரைக்கும் விதமாக காரைக்காலில் ஆண்டு தோறும் ‘மாங்கனி திருவிழா’ நடத்தப்படும். காரைக்கால் சுந்தராம்பாள் உடனாய கயிலாசநாதர் ஆலயத்தில் இருந்து காரைக்கால் அம்மையார் கோவிலுக்கு வரும் இறைவன் மீது, பக்தர்கள் பலரும் சூழ்ந்து நின்று மாங்கனிகளை வீசி வழிபாடு செய்வார்கள். அப்படி வீசப்படும் மாங்கனிகளை குழந்தைப் பேறு இல்லாதவர்கள் எடுத்து சாப்பிட்டால், அவர்களுக்கு குழந்தை பாக்கியம் விரைவாக கிடைக்கும் என்பது நம்பிக்கை.
கொரோனா பெருந்தொற்று காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட காரணத்தால், கடந்த ஆண்டு இந்த விழாவிற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. விழாவும் கயிலாசநாதர் கோவிலுக்குள்ளேயே நடத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டும் பெருந்தொற்று காரணமாக கட்டுப்பாடுகள் தொடர்ந்து கொண்டிருப்பதால், இம்முறையும் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு, இந்த விழா நடத்தப்பட உள்ளது.






