என் மலர்
தோஷ பரிகாரங்கள்
விநாயகரிடம், திருணத்தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், கல்வியில் சிறந்து விளங்கவும் வழிபாடு செய்கிறார்கள். வேண்டுதல் நிறைவேறியதும் அபிஷேகம் செய்து, வஸ்திரம் சாத்தி இறைவனுக்கு நன்றி செலுத்துகின்றனர்.
மூலவரின் பெயர் ‘கற்பக விநாயகர்.’ இவர் இரண்டு கரங்களுடன், 6 அடி உயரத்தில் செதுக்கப்பட்டுள்ளார். இவரது தும்பிக்கை வலம்புரியாக இருக்கிறது.
பிள்ளையார்பட்டி விநாயகர் கோவில், பல்லவ மன்னன் மகேந்திர வர்மன் காலத்தியது என்ற கருத்து நிலவினாலும், இங்குள்ள கல்வெட்டுக்கள், அந்த மன்னனின் காலத்துக்கும் முற்பட்டது என்பதை பறைசாற்றுகின்றன.
இது ஒரு குடவரைக் கோவிலாகும். சுமார் 1600 ஆண்டுகள் பழமையானது என்கிறார்கள்.
பிள்ளையார்பட்டி என்று அழைக்கப்படும் இந்த ஊர், முன்காலத்தில் எருக்காட்டூர், மருதங்குடி, திருவீங்கைக்குடி, திருவீங்கைச்வரம், ராசநாராயணபுரம், மருதங்கூர், தென்மருதூர், கணேசபுரம், கணேச மாநகரம், பிள்ளைநகர் என்றெல்லாம் அழைக்கப்பட்டிருப்பதாக கல்வெட்டுக் குறிப்புகள் சொல்கின்றன.
இங்கு திருவீசர், மருதீசர், செஞ்சதீஸ்வரர் என்ற சிவ சன்னிதிகளும், சிவகாமி அம்மன், வடமலர் மங்கை, சவுந்திரநாயகி ஆகிய அம்மன் சன்னிதிகளும் காணப்படுவது சிறப்பு.
இந்தக் கோவிலில் காணப்படும் விநாயகர் உருவம், 4-ம் நூற்றாண்டில் செதுக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. விநாயகரைப் போல, 14 சிலைகள் குடவரை சிற்பங்களாக இங்கே செதுக்கப்பட்டுள்ளன.
விநாயகரிடம், திருணத்தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், கல்வியில் சிறந்து விளங்கவும் வழிபாடு செய்கிறார்கள். வேண்டுதல் நிறைவேறியதும் அபிஷேகம் செய்து, வஸ்திரம் சாத்தி இறைவனுக்கு நன்றி செலுத்துகின்றனர்.
விநாயகருக்கு நடைபெறும் 10 நாள் உற்சவத்தின், 9-வது நாளில் 80 கிலோ சந்தனம் கொண்டு விநாயகருக்கு ‘சந்தன காப்பு’ செய்யப்படும். இது ஆண்டுக்கு ஒரு முறையே என்பதால், இந்தக் காட்சியைக் காண பக்தர்கள் குவிவார்கள்.
விநாயகருக்கு தேர்த்திருவிழா நடைபெறும் ஒருசில ஆலயங்களில் பிள்ளையார்பட்டி முக்கியமானது. விநாயகர் தேரின் ஒரு பக்கத்தை பெண்களும், மற்றொரு பக்கத்தை ஆண்களும் பிடித்து இழுப்பார்கள்.
முருகப்பெருமானைப் போலவே, விநாயகருக்கும் ஆறுபடைவீடுகள் உண்டு. விநாயகருக்கான ஆறு படைவீடுகளில் பிள்ளையார்பட்டி, 5-ம் படைவீடாகும்.
விநாயகர் சதுர்த்தியின்போது, உச்சிகால பூஜையில் முக்குறுணி அரிசியைக் கொண்டு பெரிய அளவிலான கொழுக்கட்டை தயாரித்து நைவேத்தியமாக படைப்பார்கள்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடிக்கும் புதுக்கோட்டைக்கும் இடையே உள்ளது பிள்ளையார்பட்டி. காரைக்குடியில் இருந்து 12 கிலோமீட்டரில் இந்த ஊரை அடையலாம்.
பிள்ளையார்பட்டி விநாயகர் கோவில், பல்லவ மன்னன் மகேந்திர வர்மன் காலத்தியது என்ற கருத்து நிலவினாலும், இங்குள்ள கல்வெட்டுக்கள், அந்த மன்னனின் காலத்துக்கும் முற்பட்டது என்பதை பறைசாற்றுகின்றன.
இது ஒரு குடவரைக் கோவிலாகும். சுமார் 1600 ஆண்டுகள் பழமையானது என்கிறார்கள்.
பிள்ளையார்பட்டி என்று அழைக்கப்படும் இந்த ஊர், முன்காலத்தில் எருக்காட்டூர், மருதங்குடி, திருவீங்கைக்குடி, திருவீங்கைச்வரம், ராசநாராயணபுரம், மருதங்கூர், தென்மருதூர், கணேசபுரம், கணேச மாநகரம், பிள்ளைநகர் என்றெல்லாம் அழைக்கப்பட்டிருப்பதாக கல்வெட்டுக் குறிப்புகள் சொல்கின்றன.
இங்கு திருவீசர், மருதீசர், செஞ்சதீஸ்வரர் என்ற சிவ சன்னிதிகளும், சிவகாமி அம்மன், வடமலர் மங்கை, சவுந்திரநாயகி ஆகிய அம்மன் சன்னிதிகளும் காணப்படுவது சிறப்பு.
இந்தக் கோவிலில் காணப்படும் விநாயகர் உருவம், 4-ம் நூற்றாண்டில் செதுக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. விநாயகரைப் போல, 14 சிலைகள் குடவரை சிற்பங்களாக இங்கே செதுக்கப்பட்டுள்ளன.
விநாயகரிடம், திருணத்தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், கல்வியில் சிறந்து விளங்கவும் வழிபாடு செய்கிறார்கள். வேண்டுதல் நிறைவேறியதும் அபிஷேகம் செய்து, வஸ்திரம் சாத்தி இறைவனுக்கு நன்றி செலுத்துகின்றனர்.
விநாயகருக்கு நடைபெறும் 10 நாள் உற்சவத்தின், 9-வது நாளில் 80 கிலோ சந்தனம் கொண்டு விநாயகருக்கு ‘சந்தன காப்பு’ செய்யப்படும். இது ஆண்டுக்கு ஒரு முறையே என்பதால், இந்தக் காட்சியைக் காண பக்தர்கள் குவிவார்கள்.
விநாயகருக்கு தேர்த்திருவிழா நடைபெறும் ஒருசில ஆலயங்களில் பிள்ளையார்பட்டி முக்கியமானது. விநாயகர் தேரின் ஒரு பக்கத்தை பெண்களும், மற்றொரு பக்கத்தை ஆண்களும் பிடித்து இழுப்பார்கள்.
முருகப்பெருமானைப் போலவே, விநாயகருக்கும் ஆறுபடைவீடுகள் உண்டு. விநாயகருக்கான ஆறு படைவீடுகளில் பிள்ளையார்பட்டி, 5-ம் படைவீடாகும்.
விநாயகர் சதுர்த்தியின்போது, உச்சிகால பூஜையில் முக்குறுணி அரிசியைக் கொண்டு பெரிய அளவிலான கொழுக்கட்டை தயாரித்து நைவேத்தியமாக படைப்பார்கள்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடிக்கும் புதுக்கோட்டைக்கும் இடையே உள்ளது பிள்ளையார்பட்டி. காரைக்குடியில் இருந்து 12 கிலோமீட்டரில் இந்த ஊரை அடையலாம்.
குழந்தைப்பேறில் தடை உள்ள பெண்கள், இந்த அம்மன் சன்னிதியில் தரப்படும் எலுமிச்சை சாற்றை வாங்கி பருகினால், அம்மனின் அருளால், அவர்களுக்கு விரைவிலேயே குழந்தை பாக்கியம் கிடைக்கிறதாம்.
* வேலூர் மாவட்டம் வன்னிவேடு அகத்தீஸ்வரர் ஆலயத்தில், வீடு கட்டுவதில் ஏதாவது தடை இருந்தால், அங்குள்ள சனீஸ்வர பகவானுக்கு 17 பாகற்காய்களை மாலையாக கோர்த்து அணிவிக்கிறார்கள்.
* தஞ்சாவூர் அருகே வல்லம் என்ற இடத்தில் ஏகவுரி அம்மன் கோவில் உள்ளது. இந்த அன்னை மாங்கல்யம் காப்பதில் சிறப்புமிக்கவள். தங்கள் கணவனுக்காக வேண்டிக்கொண்டு, அதில் பலன்பெற்ற பெண்கள், இந்த அம்மனுக்கு எருமை கன்றை தானமாக வழங்கும் வழக்கம் உள்ளதாம்.
மேலும் குழந்தைப்பேறில் தடை உள்ள பெண்கள், இந்த அம்மன் சன்னிதியில் தரப்படும் எலுமிச்சை சாற்றை வாங்கி பருகினால், அம்மனின் அருளால், அவர்களுக்கு விரைவிலேயே குழந்தை பாக்கியம் கிடைக்கிறதாம்.
* காஞ்சிபுரம் அருகே கூரம் என்ற ஊர் உள்ளது. இங்கு ஆதிகேசவப் பெருமாள் கோவில் உள்ளது. இது கூரத்தாழ்வார் என்னும் மகான் வாழ்ந்த புண்ணிய ஊர் ஆகும். இவர் தன்னுடைய குரு ராமானுஜரின் உயிரைக் காப்பதற்காக, தன்னுடைய கண்களை இழந்தவர்.
* கும்பகோணம் அருகே உள்ளது திருவெள்ளியங்குடி. இங்குள்ள தலத்தில் தன்னுடைய கண்பார்வையை பெற்றார், சுக்ரன். அவருக்கு கண்ணொளி தந்த தீபம், இன்றளவும் ‘நேத்ர தீபம்’ என தொடர்ந்து எரிந்து வருகிறது. அதில் எண்ணெய் ஊற்றி வேண்டிக்கொண்டால் கண் உபாதைகள் விலகுகின்றன.
* சீர்காழியில் உள்ள சட்டநாதர் கோவில், திருஞானசம்பந்தருக்கு இறைவனும், இறைவியும் காட்சியளித்த தலம். அம்பாள், சம்பந்தருக்கு ஞானப்பால் கொடுத்து ஞானத்தை ஊட்டிய தலம். இந்த ஆலயத்தின் மூன்று மூலவர்கள் உள்ளனர். பிரம்மன் பூஜித்த பிரம்மபுரீஸ்வரர் -லிங்க வடிவம், ஞானசம்பந்தருக்கு காட்சி கொடுத்த தோணியப்பர்- குரு வடிவம், சட்டநாதர்- சங்கம வடிவம்.
* தஞ்சாவூர் அருகே வல்லம் என்ற இடத்தில் ஏகவுரி அம்மன் கோவில் உள்ளது. இந்த அன்னை மாங்கல்யம் காப்பதில் சிறப்புமிக்கவள். தங்கள் கணவனுக்காக வேண்டிக்கொண்டு, அதில் பலன்பெற்ற பெண்கள், இந்த அம்மனுக்கு எருமை கன்றை தானமாக வழங்கும் வழக்கம் உள்ளதாம்.
மேலும் குழந்தைப்பேறில் தடை உள்ள பெண்கள், இந்த அம்மன் சன்னிதியில் தரப்படும் எலுமிச்சை சாற்றை வாங்கி பருகினால், அம்மனின் அருளால், அவர்களுக்கு விரைவிலேயே குழந்தை பாக்கியம் கிடைக்கிறதாம்.
* காஞ்சிபுரம் அருகே கூரம் என்ற ஊர் உள்ளது. இங்கு ஆதிகேசவப் பெருமாள் கோவில் உள்ளது. இது கூரத்தாழ்வார் என்னும் மகான் வாழ்ந்த புண்ணிய ஊர் ஆகும். இவர் தன்னுடைய குரு ராமானுஜரின் உயிரைக் காப்பதற்காக, தன்னுடைய கண்களை இழந்தவர்.
* கும்பகோணம் அருகே உள்ளது திருவெள்ளியங்குடி. இங்குள்ள தலத்தில் தன்னுடைய கண்பார்வையை பெற்றார், சுக்ரன். அவருக்கு கண்ணொளி தந்த தீபம், இன்றளவும் ‘நேத்ர தீபம்’ என தொடர்ந்து எரிந்து வருகிறது. அதில் எண்ணெய் ஊற்றி வேண்டிக்கொண்டால் கண் உபாதைகள் விலகுகின்றன.
* சீர்காழியில் உள்ள சட்டநாதர் கோவில், திருஞானசம்பந்தருக்கு இறைவனும், இறைவியும் காட்சியளித்த தலம். அம்பாள், சம்பந்தருக்கு ஞானப்பால் கொடுத்து ஞானத்தை ஊட்டிய தலம். இந்த ஆலயத்தின் மூன்று மூலவர்கள் உள்ளனர். பிரம்மன் பூஜித்த பிரம்மபுரீஸ்வரர் -லிங்க வடிவம், ஞானசம்பந்தருக்கு காட்சி கொடுத்த தோணியப்பர்- குரு வடிவம், சட்டநாதர்- சங்கம வடிவம்.
8-ல் சனி இருந்தாலும்,8-ம் இடத்தைச் சனி பார்த்தாலும், 8-ம் அதிபதியுடன் சனி இணைந்தால் மட்டுமே மாங்கல்ய தோஷம் வாழ்நாள் முழுவதும் தொடரும்.
ஜாதகப் பொருத்தம் பொதுவாக தம்பதிகளின் ஜனன கால ஜாதகத்தில் 7, 8-ம் இடங்கள் இருவருக்கும் சுத்தமாக அமைவது மிகவும் உத்தமம். லக்னம் ,8-ம் இடம் பலம் குறைந்து பாவ கிரகங்களின் ஆளுமைக்கு உட்பட்டால் ஆயுள் கேள்விக்குரியதாகும்.பெண்ணின் ஜாதகத்தில் 7, 8-ம் இடம் பலமாக அமைந்து சுபகிரகங்கள் சம்பந்தம் பெற்றால் ஆணின் ஆயுள் நீடிக்கும்.அதே போல் ஆணின் ஜாதகத்தில் 2, 7-ம் இடம் வலுவாக இருந்தால் பெண் நூறு ஆண்டு வாழ்வாள்.
இவ்வாறு வலுவாக உள்ள ஜாதகத்தை திருமண பந்தத்தில் இணைத்தால் பாதிப்பைத் தடுக்கலாம். 8-ம் இடம் மிகவும் வலுப்பெற்ற ஜாதகர்கள் முரட்டுப் பிடிவாதம், முன் கோபம், கடுமையான வார்த்தைகளால் பிறரை நோகச் செய்யும் இயல்பு உடையவர்களுக்கு சகிப்புத் தன்மை நிறைந்த சுபக்கிரக ஆளுமையும், வசியமும் கூடிய ஜாதகத்தை இணைத்தால் மண வாழ்க்கை பாதிக்காது.
2, 8-ம் இட ராகு-கேதுக்கள் பிரச்சினையான மணவாழ்க்கை, குடும்ப சண்டை வீதிக்கு வந்து அவமானம், வாழ்க்கை துணையின் பேச்சும் செயலும் மன வருத்தம் தரும்படியாகவும் அமையும். 2, 8-ல் ராகு,கேது அமர்ந்த வாழ்க்கைத் துணையை இணைத்தால் சுமூகமான மணவாழ்க்கை உண்டாகும்.
8-ல் செவ்வாய் இருப்பவர்களுக்கு 2, 7, 8-ம் இடங்களில் செவ்வாய் இருக்கும் ஜாதகத்தை இணைப்பது சிறப்பு. 8-ல் சனி இருந்தாலும்,8-ம் இடத்தைச் சனி பார்த்தாலும், 8-ம் அதிபதியுடன் சனி இணைந்தால் மட்டுமே மாங்கல்ய தோஷம் வாழ்நாள் முழுவதும் தொடரும். இவர்கள் தீர்க்கமான ஆயுள் நிரம்பிய ஒருவரை மணந்தால் திருமண பந்தம் நூறு ஆண்டுகள் நீடிக்கும்.
இவ்வாறு வலுவாக உள்ள ஜாதகத்தை திருமண பந்தத்தில் இணைத்தால் பாதிப்பைத் தடுக்கலாம். 8-ம் இடம் மிகவும் வலுப்பெற்ற ஜாதகர்கள் முரட்டுப் பிடிவாதம், முன் கோபம், கடுமையான வார்த்தைகளால் பிறரை நோகச் செய்யும் இயல்பு உடையவர்களுக்கு சகிப்புத் தன்மை நிறைந்த சுபக்கிரக ஆளுமையும், வசியமும் கூடிய ஜாதகத்தை இணைத்தால் மண வாழ்க்கை பாதிக்காது.
2, 8-ம் இட ராகு-கேதுக்கள் பிரச்சினையான மணவாழ்க்கை, குடும்ப சண்டை வீதிக்கு வந்து அவமானம், வாழ்க்கை துணையின் பேச்சும் செயலும் மன வருத்தம் தரும்படியாகவும் அமையும். 2, 8-ல் ராகு,கேது அமர்ந்த வாழ்க்கைத் துணையை இணைத்தால் சுமூகமான மணவாழ்க்கை உண்டாகும்.
8-ல் செவ்வாய் இருப்பவர்களுக்கு 2, 7, 8-ம் இடங்களில் செவ்வாய் இருக்கும் ஜாதகத்தை இணைப்பது சிறப்பு. 8-ல் சனி இருந்தாலும்,8-ம் இடத்தைச் சனி பார்த்தாலும், 8-ம் அதிபதியுடன் சனி இணைந்தால் மட்டுமே மாங்கல்ய தோஷம் வாழ்நாள் முழுவதும் தொடரும். இவர்கள் தீர்க்கமான ஆயுள் நிரம்பிய ஒருவரை மணந்தால் திருமண பந்தம் நூறு ஆண்டுகள் நீடிக்கும்.
முக்கோண வடிவமுள்ள சிவப்பு கொடியில் ‘ராம்’ என்று எழுதி, அனுமனுக்கு படைத்து வணங்கி, அந்தக் கொடியை வாகனங்களின் முன் மாட்டிக் கொண்டால், விபத்துக்களில் இருந்து விலகி இருக்கலாம்.
அனுமன் கலியுக மக்களைக் காப்பவராக கருதப்படுகிறார். இவரை மனதார நம்பிக்கையுடன் வணங்கினால், அனைத்து விதமான பிரச்சினைகளில் இருந்தும் நம்மைக் காப்பார். இவர் பொதுவாக குங்குமப்பூ நிறத்தில் சித்தரிக்கப்படுவார். இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று இந்த செந்தூர நிறம், உயிராற்றலின் நிறம்.
மற்றொன்று, ஒரு நாள் சீதை தன் நெற்றி உச்சியில் செந்தூரத்தை தடவினார். அதைக் கண்ட அனுமன் சீதையிடம் ‘ஏன்?’ என்று கேட்டார். அதற்கு சீதை, “இது ராமபிரான் நீண்ட காலம் செழிப்பாக இருக்க அவரை ஆசீர்வதிக்கும் வகையில் செய்யும் ஓர் செயல்” என்று கூறினார். இதைக் கேட்ட அனுமன் உடனே தன் உடல் முழுவதும் இந்த செந்தூரத்தை தடவிக் கொண்டார்.
* செவ்வாய்க்கிழமைகளில் அனுமனுக்கு துளசி மாலையை அணிவித்து வணங்குவது நல்லது. பின் அந்த துளசி இலைகளை சாப்பிடலாம்.
* முக்கோண வடிவமுள்ள சிவப்பு கொடியில் ‘ராம்’ என்று எழுதி, அனுமனுக்கு படைத்து வணங்கி, அந்தக் கொடியை வாகனங்களின் முன் மாட்டிக் கொண்டால், விபத்துக்களில் இருந்து விலகி இருக்கலாம். அதுவே வீட்டில் வைத்திருந்தால், வீட்டில் பணம் கொழிக்கும்.
* அனுமனுக்கு ஆரஞ்சு நிற செந்தூரம் வைக்க வேண்டும். இப்படி தொடர்ச்சியாக செய்து வருவதன் மூலம், மாங்கல்ய தோஷம் நீங்குவதோடு, இதர தோஷங் களும் அகலும்.
* மல்லிகை எண்ணெய் மனநிலையை மேம்படுத்த உதவும். செந்தூர பொடியை மல்லிகை எண்ணெய்யுடன் சேர்த்து கலந்து, அனுமனுக்கு திலகமிடுவது, இன்னும் நல்லது.
* செவ்வாய்க்கிழமைகளில் அனுமனுக்கு லட்டு, சுண்டல், வெல்லம், கொய்யாப்பழம் போன்றவற்றை படைத்து வணங்கினால், அனுமனின் முழு ஆசீர்வாதமும் கிட்டும்.
மற்றொன்று, ஒரு நாள் சீதை தன் நெற்றி உச்சியில் செந்தூரத்தை தடவினார். அதைக் கண்ட அனுமன் சீதையிடம் ‘ஏன்?’ என்று கேட்டார். அதற்கு சீதை, “இது ராமபிரான் நீண்ட காலம் செழிப்பாக இருக்க அவரை ஆசீர்வதிக்கும் வகையில் செய்யும் ஓர் செயல்” என்று கூறினார். இதைக் கேட்ட அனுமன் உடனே தன் உடல் முழுவதும் இந்த செந்தூரத்தை தடவிக் கொண்டார்.
* செவ்வாய்க்கிழமைகளில் அனுமனுக்கு துளசி மாலையை அணிவித்து வணங்குவது நல்லது. பின் அந்த துளசி இலைகளை சாப்பிடலாம்.
* முக்கோண வடிவமுள்ள சிவப்பு கொடியில் ‘ராம்’ என்று எழுதி, அனுமனுக்கு படைத்து வணங்கி, அந்தக் கொடியை வாகனங்களின் முன் மாட்டிக் கொண்டால், விபத்துக்களில் இருந்து விலகி இருக்கலாம். அதுவே வீட்டில் வைத்திருந்தால், வீட்டில் பணம் கொழிக்கும்.
* அனுமனுக்கு ஆரஞ்சு நிற செந்தூரம் வைக்க வேண்டும். இப்படி தொடர்ச்சியாக செய்து வருவதன் மூலம், மாங்கல்ய தோஷம் நீங்குவதோடு, இதர தோஷங் களும் அகலும்.
* மல்லிகை எண்ணெய் மனநிலையை மேம்படுத்த உதவும். செந்தூர பொடியை மல்லிகை எண்ணெய்யுடன் சேர்த்து கலந்து, அனுமனுக்கு திலகமிடுவது, இன்னும் நல்லது.
* செவ்வாய்க்கிழமைகளில் அனுமனுக்கு லட்டு, சுண்டல், வெல்லம், கொய்யாப்பழம் போன்றவற்றை படைத்து வணங்கினால், அனுமனின் முழு ஆசீர்வாதமும் கிட்டும்.
முருகப்பெருமானின் கையில் இருக்கும் ஞானவேலை, பக்தர்கள் வழிபாடு செய்து வந்தால், ஏவல், பில்லி, சூனியம் என எந்த கெட்ட சக்தியும் அவர்களை நெருங்காது.
சிவபெருமானிடம் இருந்து பல்வேறு வரங்களைப் பெற்ற சூரபதுமனும், அவரது தம்பிகள் தாருகாசுரன், சிங்கமுகன் ஆகியோரும், தேவர்கள் அனைவரையும் சிறையில் அடைத்து வைத்து துன்புறுத்தினர். தேவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் முறையிட்டனர். ஆனால் சூரபதுமனும், அவனது சகோதரர்களும், ‘சிவனுக்கு நிகரான சக்தி படைத்தவரால் மட்டுமே தங்களுக்கு மரணம் நிகழ வேண்டும்’ என்ற வரத்தைப் பெற்றிருந்தனர்.
இதனால் சிவபெருமான் தன்னுடைய நெற்றிக்கண்ணில் இருந்து தன் சக்தியாக, ஆறுமுகப்பெருமானை உருவாக்கினார். அவர் அவதரித்த தினம் ‘வைகாசி விசாகம்.’ அவர், சூரபதுமர்களை சம்ஹாரம் செய்தது, ஐப்பசி மாதம் சஷ்டி திதியில். அதுதான் ‘கந்தசஷ்டி பெருவிழா’வாக கொண்டாடப்படுகிறது. சூரபதுமர்களை சம்ஹாரம் செய்வதற்காக, பார்வதிதேவி ஞானவேலை, முருகப்பெருமானிடம் கொடுத்த தினம் ‘தைப்பூசம்’ என்று சொல்லப்படுகிறது.
முருகப்பெருமானிடம் சக்திதேவி, ஞானவேலை வழங்கிய இடமாக பழனி தலத்தை புராணங்கள் குறிப்பிடுகின்றன. முருகப்பெருமானின் கையில் இருக்கும் ஞானவேலை, பக்தர்கள் வழிபாடு செய்து வந்தால், ஏவல், பில்லி, சூனியம் என எந்த கெட்ட சக்தியும் அவர்களை நெருங்காது.
அதே போல் சிவபெருமான், பார்வதியுடன் இணைந்து தில்லை என்னும் சிதம்பரத்தில் ஆனந்த திருநடனம் புரிந்து பக்தர்களுக்கு தரிசனம் அளித்ததும், இந்த தைப்பூசத் திருநாளில்தான். இரணியவர்மன் என்ற அரசன், தில்லையம்பலத்திற்கு வந்து அரும்பெரும் திருப்பணிகள் செய்தான். அவனுக்கு சிவபெருமான் காட்சியளித்தது இந்த தைப்பூசத் திருநாளே ஆகும். எனவே தைப்பூசம் அன்று அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள், இறைவனுக்கு அபிஷேக மற்றும் அலங்காரங்கள் செய்யப்படும்.
தேவர்களின் குருவான பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால், தைப்பூச தினத்தில் குரு வழிபாடு செய்வதும் சிறப்பான பலனை அளிக்கும்.
ஜீவகாருண்யம் என்னும் உயிர்களைக் கொல்லாமல் இருப்பது பற்றி வலியுறுத்திய வள்ளலார், ஜோதியில் கலந்த தினம் ‘தைப்பூசம்’ ஆகும். இந்த நாளில் வடலூரில் ஜோதி தரிசனம் நிகழ்வு நடைபெறும்.
இதனால் சிவபெருமான் தன்னுடைய நெற்றிக்கண்ணில் இருந்து தன் சக்தியாக, ஆறுமுகப்பெருமானை உருவாக்கினார். அவர் அவதரித்த தினம் ‘வைகாசி விசாகம்.’ அவர், சூரபதுமர்களை சம்ஹாரம் செய்தது, ஐப்பசி மாதம் சஷ்டி திதியில். அதுதான் ‘கந்தசஷ்டி பெருவிழா’வாக கொண்டாடப்படுகிறது. சூரபதுமர்களை சம்ஹாரம் செய்வதற்காக, பார்வதிதேவி ஞானவேலை, முருகப்பெருமானிடம் கொடுத்த தினம் ‘தைப்பூசம்’ என்று சொல்லப்படுகிறது.
முருகப்பெருமானிடம் சக்திதேவி, ஞானவேலை வழங்கிய இடமாக பழனி தலத்தை புராணங்கள் குறிப்பிடுகின்றன. முருகப்பெருமானின் கையில் இருக்கும் ஞானவேலை, பக்தர்கள் வழிபாடு செய்து வந்தால், ஏவல், பில்லி, சூனியம் என எந்த கெட்ட சக்தியும் அவர்களை நெருங்காது.
அதே போல் சிவபெருமான், பார்வதியுடன் இணைந்து தில்லை என்னும் சிதம்பரத்தில் ஆனந்த திருநடனம் புரிந்து பக்தர்களுக்கு தரிசனம் அளித்ததும், இந்த தைப்பூசத் திருநாளில்தான். இரணியவர்மன் என்ற அரசன், தில்லையம்பலத்திற்கு வந்து அரும்பெரும் திருப்பணிகள் செய்தான். அவனுக்கு சிவபெருமான் காட்சியளித்தது இந்த தைப்பூசத் திருநாளே ஆகும். எனவே தைப்பூசம் அன்று அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள், இறைவனுக்கு அபிஷேக மற்றும் அலங்காரங்கள் செய்யப்படும்.
தேவர்களின் குருவான பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால், தைப்பூச தினத்தில் குரு வழிபாடு செய்வதும் சிறப்பான பலனை அளிக்கும்.
ஜீவகாருண்யம் என்னும் உயிர்களைக் கொல்லாமல் இருப்பது பற்றி வலியுறுத்திய வள்ளலார், ஜோதியில் கலந்த தினம் ‘தைப்பூசம்’ ஆகும். இந்த நாளில் வடலூரில் ஜோதி தரிசனம் நிகழ்வு நடைபெறும்.
வீடு மனையடி சாஸ்திரத்தின்படி அமைக்கப்பட்டால் அது நமக்கு மேலும் மகிழ்ச்சியைக் கொடுக்கும். மனையடி சாஸ்திரப்படி வீட்டில் எந்தெந்த இடங்களை எப்படி அமைக்கலாம் என்பதைப் பார்ப்போம்..
ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்க்கையில் கட்டப்படும் வீடு எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்ற கனவுகளோடு இருப்போம். அவ்வாறு கட்டப்படும் வீடு மனையடி சாஸ்திரத்தின்படி அமைக்கப்பட்டால் அது நமக்கு மேலும் மகிழ்ச்சியைக் கொடுக்கும். இன்றைய காலகட்டத்தில் வீடு விற்பனைக்கான விளம்பரங்களில் வாஸ்து முறைப்படி கட்டப்பட்டது என்று வருவதை பார்க்க முடியும்.. சரி மனையடி சாஸ்திரப்படி வீட்டில் எந்தெந்த இடங்களை எப்படி அமைக்கலாம் என்பதைப் பார்ப்போம்.. வீட்டின் சுற்றுச்சுவர் ,மேல் மாடி சுவர், பூஜை அறை, துளசி மாடம், படுக்கை அறை, குளியலறை, போர் அல்லது கிணறு, படிக்கட்டுகள் எப்படி அமைப்பது? இதோ ஒரு பார்வை.
மனையடி சாஸ்திரம் கூறுவது என்ன?
இந்த உலகமானது பஞ்சபூதங்களை வித்தாக கொண்டது. அதில் உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருள்கள் என எல்லாவற்றிலும் இதன் ஆதிக்கம் உள்ளது.. ஒருவர் தான் வசிக்கும் வீட்டில் ஆரோக்கியம்., அமைதி, செல்வத்துடன் சகல சௌபாக்கியங்களையும் பெற்று வாழ இந்த மனையடி சாஸ்திரத்தின்படி வீட்டை அமைக்கும் பொழுது இவை எல்லாம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது..
* வாஸ்து சாஸ்திரத்தில் ஒரு வீடு கட்டும் பொழுது வடக்கு திசையில் தெற்கு திசையை விட அதிக இடம் விட்டு வீடு கட்ட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வீட்டின் சுற்றுச்சுவர் அல்லது மாடி சுவர்
வீட்டின் சுற்றுசுவர் அல்லது வீட்டில் மாடிச்சுவரானது தென்மேற்கு திசையில் ஒரு அங்குலமாவது உயர்ந்ததாக இருக்க வேண்டும்.. அதைவிட சற்று குறைவாக தென்கிழக்கு சுவர் அதைவிட குறைவாக வடமேற்கு சுவர் அதைவிட குறைவாக வடகிழக்கு சுவர் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது..
பூஜை அறை
பூஜை அறையானது வீட்டின் வடகிழக்குப் பகுதியில் அமைந்திருப்பது சிறப்பு. அதேபோல் சுவாமி படங்களை கிழக்கு திசை நோக்கி பார்க்கும்படி வைக்க வேண்டும். சுவாமி படங்களை வடக்கு திசை நோக்கியும் வைக்கலாம்.இறந்தவர்கள் புகைப்படத்தினை தெற்கு திசை நோக்கி மாட்ட வேண்டும்.மேலும் இந்த திசையில் சேமித்து வைக்கக்கூடிய அறையை அமைக்கலாம்.. இந்தப் பகுதியில் சமையலறை, கழிப்பறை இருப்பது நல்லதல்ல.
துளசி மாடம்
மருத்துவ குணம் நிறைந்த துளசி மாடம் வீட்டில் இருந்தால் நேர்மறை ஆற்றல்களை ஈர்க்க வல்லது,அதோடு துளசிச்செடி காற்றை தூய்மைப்படுத்தும் ஆற்றல் கொண்டது என்பதை கருத்தில் கொண்டு பழங்காலத்தில் அனைத்து வீடுகளிலும் வீட்டின் முன்புறம் துளசி மாடத்தை வைத்திருந்தனர். துளசி மாடம் வீட்டின் முன் இருப்பது நல்லது அதிலும் குறிப்பாக கிழக்கு திசையில் இருப்பது மிகவும் நல்லது என்று கூறப்படுகிறது.. அடுக்குமாடி குடியிருப்புகளில் இடம் இல்லாத காரணத்தினால் ஆயத்த துளசி மாடங்களை வாங்கி கேட்டின் அருகிலேயே வைத்திருப்பதை பார்க்க முடிகின்றது..
விளக்கேற்றும் திசை
வீட்டில் விளக்கேற்றுவது என்பது வெறும் பூஜைக்காக, வெளிச்சத்திற்காக மட்டும் கிடையாது.. விளக்கு என்பது வீட்டில் எதிர்மறை ஆற்றலை நீக்கி மங்களத்தை கொண்டுவரக் கூடியது.. வீட்டில் விளக்கேற்றும் பொழுது ஒரு விளக்காக ஏற்றாமல் இரண்டு விளக்கு ஏற்றுவது சாலச் சிறந்தது. அதேபோல் வீட்டில் துளசி மாடத்தில் காலையும் மாலையும் விளக்கு ஏற்றுவது வீட்டிற்கு நல்ல பலனைத் தரும் என்று நம்பப்படுகிறது.விளக்குகளை எப்பொழுதும் கிழக்கு திசை நோக்கி ஏற்றுவது நல்லது.. தெற்கு நோக்கி ஏற்றுதல் கூடாது.
படுக்கை அறை
வீட்டின் முக்கியமான அறைகளில் ஒன்று படுக்கை அறை..ஓய்வு என்பது ஒருவரின் உடல்நிலை மற்றும் மனநிலைக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். தூக்கம்., ஓய்வு எடுக்க கூடிய படுக்கையறை வீட்டில் தெற்கு அல்லது தென் மேற்கு திசையில் இருப்பது மிகவும் நல்லது..படுக்கை அறையில் வடக்கு திசை நோக்கி பணம் சேமிக்கும் அலமாரி வைக்க வேண்டும்..வீட்டில் இரண்டு படுக்கை அறை அமைக்க விரும்புபவர்கள் இரண்டாவது அறையை வடகிழக்குப் பகுதியில் அமைக்கலாம்.. இளம் தம்பதியினர் தென்மேற்கு பகுதியிலும், வயதானவர்கள் வடகிழக்கு அறையிலும் தங்குவது நல்லது.அதேபோல் நாம் உறங்கும் பொழுது தெற்கிலும், கிழக்கிலும் தலை வைத்து படுப்பது நன்மையைத் தரும். வடக்கில் தலை வைத்து படுப்பது சிறந்ததல்ல என்று சாத்திரங்கள் கூறுகின்றன.
குளியலறை
வீட்டின் குளியலறையை தென்மேற்கு திசையில் அமைக்காமல் மற்ற எந்த திசையில் வேண்டுமானாலும் அமைக்கலாம்.
சமையலறை
தென்கிழக்கு பகுதியானது அக்னி மூலை என்று கூறப்படுகிறது.. எனவே வீட்டின் தென் கிழக்குப் பகுதியில் சமையலறையை அமைத்து கிழக்கு நோக்கி நின்று சமைப்பது மிகவும் நல்ல அமைப்பாகும்..அவ்வாறு சமையலறையை அமைக்க இயலாதவர்கள் வடமேற்கு திசையில் அமைக்கலாம்..சமையலறையில் பாத்திரங்களை கழுவும் சின்க் ஆனது தென்கிழக்கு திசையில் இருக்க வேண்டும் அல்லது வடமேற்கு திசையில் இருக்கலாம்.. பூஜை அறைக்கு அருகில் சமையலறை இருக்கலாம். ஆனால்., கழிப்பறைக்கு அருகில் பூஜை அறை மற்றும் சமையல் அறை இருப்பது நல்லதல்ல..
குளியலறை
குளியலறையை தென்மேற்கு திசையை தவிர மற்ற திசைகளில் அமைக்கலாம். அதேபோல் கழிவுநீர்த் தொட்டியையும் தென்மேற்கில் அமைக்காமல் மற்ற திசைகளில் அமைக்கலாம்.
படிக்கட்டுகள்
வீட்டில் படிக்கட்டுகள் மேற்கு அல்லது தெற்கு திசையில் கட்டப்பட வேண்டும். படிக்கட்டில் ஏறுவது கிழக்கில் தொடங்கி மேற்கு நோக்கி சென்றடைவதாக அல்லது வடக்கில் தொடங்கி தெற்கு நோக்கி ஏறுவதாக இருக்க வேண்டும்.வீட்டின் வடகிழக்கு அல்லது மையத்தில் படிக்கட்டை அமைக்கக்கூடாது.
மரங்கள்
வீட்டின் தெற்கு அல்லது மேற்கு திசையில் மரங்களை வளர்ப்பது நல்லது. அதிலும் குறிப்பாக தெற்கு பகுதியானது மரங்கள் வளர்க்க உன்னதமானது என்று கூறப்படுகின்றது. அதேபோல் மரக்கிளைகள் வீட்டின் மேல் செல்வது சிறந்ததல்ல என்று கூறப்படுகிறது.
மனையடி சாஸ்திரம் கூறுவது என்ன?
இந்த உலகமானது பஞ்சபூதங்களை வித்தாக கொண்டது. அதில் உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருள்கள் என எல்லாவற்றிலும் இதன் ஆதிக்கம் உள்ளது.. ஒருவர் தான் வசிக்கும் வீட்டில் ஆரோக்கியம்., அமைதி, செல்வத்துடன் சகல சௌபாக்கியங்களையும் பெற்று வாழ இந்த மனையடி சாஸ்திரத்தின்படி வீட்டை அமைக்கும் பொழுது இவை எல்லாம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது..
* வாஸ்து சாஸ்திரத்தில் ஒரு வீடு கட்டும் பொழுது வடக்கு திசையில் தெற்கு திசையை விட அதிக இடம் விட்டு வீடு கட்ட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வீட்டின் சுற்றுச்சுவர் அல்லது மாடி சுவர்
வீட்டின் சுற்றுசுவர் அல்லது வீட்டில் மாடிச்சுவரானது தென்மேற்கு திசையில் ஒரு அங்குலமாவது உயர்ந்ததாக இருக்க வேண்டும்.. அதைவிட சற்று குறைவாக தென்கிழக்கு சுவர் அதைவிட குறைவாக வடமேற்கு சுவர் அதைவிட குறைவாக வடகிழக்கு சுவர் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது..
பூஜை அறை
பூஜை அறையானது வீட்டின் வடகிழக்குப் பகுதியில் அமைந்திருப்பது சிறப்பு. அதேபோல் சுவாமி படங்களை கிழக்கு திசை நோக்கி பார்க்கும்படி வைக்க வேண்டும். சுவாமி படங்களை வடக்கு திசை நோக்கியும் வைக்கலாம்.இறந்தவர்கள் புகைப்படத்தினை தெற்கு திசை நோக்கி மாட்ட வேண்டும்.மேலும் இந்த திசையில் சேமித்து வைக்கக்கூடிய அறையை அமைக்கலாம்.. இந்தப் பகுதியில் சமையலறை, கழிப்பறை இருப்பது நல்லதல்ல.
துளசி மாடம்
மருத்துவ குணம் நிறைந்த துளசி மாடம் வீட்டில் இருந்தால் நேர்மறை ஆற்றல்களை ஈர்க்க வல்லது,அதோடு துளசிச்செடி காற்றை தூய்மைப்படுத்தும் ஆற்றல் கொண்டது என்பதை கருத்தில் கொண்டு பழங்காலத்தில் அனைத்து வீடுகளிலும் வீட்டின் முன்புறம் துளசி மாடத்தை வைத்திருந்தனர். துளசி மாடம் வீட்டின் முன் இருப்பது நல்லது அதிலும் குறிப்பாக கிழக்கு திசையில் இருப்பது மிகவும் நல்லது என்று கூறப்படுகிறது.. அடுக்குமாடி குடியிருப்புகளில் இடம் இல்லாத காரணத்தினால் ஆயத்த துளசி மாடங்களை வாங்கி கேட்டின் அருகிலேயே வைத்திருப்பதை பார்க்க முடிகின்றது..
விளக்கேற்றும் திசை
வீட்டில் விளக்கேற்றுவது என்பது வெறும் பூஜைக்காக, வெளிச்சத்திற்காக மட்டும் கிடையாது.. விளக்கு என்பது வீட்டில் எதிர்மறை ஆற்றலை நீக்கி மங்களத்தை கொண்டுவரக் கூடியது.. வீட்டில் விளக்கேற்றும் பொழுது ஒரு விளக்காக ஏற்றாமல் இரண்டு விளக்கு ஏற்றுவது சாலச் சிறந்தது. அதேபோல் வீட்டில் துளசி மாடத்தில் காலையும் மாலையும் விளக்கு ஏற்றுவது வீட்டிற்கு நல்ல பலனைத் தரும் என்று நம்பப்படுகிறது.விளக்குகளை எப்பொழுதும் கிழக்கு திசை நோக்கி ஏற்றுவது நல்லது.. தெற்கு நோக்கி ஏற்றுதல் கூடாது.
படுக்கை அறை
வீட்டின் முக்கியமான அறைகளில் ஒன்று படுக்கை அறை..ஓய்வு என்பது ஒருவரின் உடல்நிலை மற்றும் மனநிலைக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். தூக்கம்., ஓய்வு எடுக்க கூடிய படுக்கையறை வீட்டில் தெற்கு அல்லது தென் மேற்கு திசையில் இருப்பது மிகவும் நல்லது..படுக்கை அறையில் வடக்கு திசை நோக்கி பணம் சேமிக்கும் அலமாரி வைக்க வேண்டும்..வீட்டில் இரண்டு படுக்கை அறை அமைக்க விரும்புபவர்கள் இரண்டாவது அறையை வடகிழக்குப் பகுதியில் அமைக்கலாம்.. இளம் தம்பதியினர் தென்மேற்கு பகுதியிலும், வயதானவர்கள் வடகிழக்கு அறையிலும் தங்குவது நல்லது.அதேபோல் நாம் உறங்கும் பொழுது தெற்கிலும், கிழக்கிலும் தலை வைத்து படுப்பது நன்மையைத் தரும். வடக்கில் தலை வைத்து படுப்பது சிறந்ததல்ல என்று சாத்திரங்கள் கூறுகின்றன.
குளியலறை
வீட்டின் குளியலறையை தென்மேற்கு திசையில் அமைக்காமல் மற்ற எந்த திசையில் வேண்டுமானாலும் அமைக்கலாம்.
சமையலறை
தென்கிழக்கு பகுதியானது அக்னி மூலை என்று கூறப்படுகிறது.. எனவே வீட்டின் தென் கிழக்குப் பகுதியில் சமையலறையை அமைத்து கிழக்கு நோக்கி நின்று சமைப்பது மிகவும் நல்ல அமைப்பாகும்..அவ்வாறு சமையலறையை அமைக்க இயலாதவர்கள் வடமேற்கு திசையில் அமைக்கலாம்..சமையலறையில் பாத்திரங்களை கழுவும் சின்க் ஆனது தென்கிழக்கு திசையில் இருக்க வேண்டும் அல்லது வடமேற்கு திசையில் இருக்கலாம்.. பூஜை அறைக்கு அருகில் சமையலறை இருக்கலாம். ஆனால்., கழிப்பறைக்கு அருகில் பூஜை அறை மற்றும் சமையல் அறை இருப்பது நல்லதல்ல..
குளியலறை
குளியலறையை தென்மேற்கு திசையை தவிர மற்ற திசைகளில் அமைக்கலாம். அதேபோல் கழிவுநீர்த் தொட்டியையும் தென்மேற்கில் அமைக்காமல் மற்ற திசைகளில் அமைக்கலாம்.
படிக்கட்டுகள்
வீட்டில் படிக்கட்டுகள் மேற்கு அல்லது தெற்கு திசையில் கட்டப்பட வேண்டும். படிக்கட்டில் ஏறுவது கிழக்கில் தொடங்கி மேற்கு நோக்கி சென்றடைவதாக அல்லது வடக்கில் தொடங்கி தெற்கு நோக்கி ஏறுவதாக இருக்க வேண்டும்.வீட்டின் வடகிழக்கு அல்லது மையத்தில் படிக்கட்டை அமைக்கக்கூடாது.
மரங்கள்
வீட்டின் தெற்கு அல்லது மேற்கு திசையில் மரங்களை வளர்ப்பது நல்லது. அதிலும் குறிப்பாக தெற்கு பகுதியானது மரங்கள் வளர்க்க உன்னதமானது என்று கூறப்படுகின்றது. அதேபோல் மரக்கிளைகள் வீட்டின் மேல் செல்வது சிறந்ததல்ல என்று கூறப்படுகிறது.
‘மாரியல்லாமல் ஒரு காரியமில்லை’ என்ற வாக்குப்படி, மாரியம்மனை வழிபட்டு காரியங்களைத் தொடங்கினால் மகத்தான பலனை அடையலாம்.
பங்குனி மாதத்தில் ஊர்தோறும் அம்பிகையின் ஆலயங்களில் பூச்சொரிதல் விழா நடைபெறும். புகழ்பெற்ற அம்மன் ஆலயங்களுக்கு அந்த நேரத்தில் பாதயாத்திரையாகச் செல்லும் பக்தர்கள், வண்ண வண்ண பூக்களை கூடையில் ஏந்திச் சென்று, அம்பிகையின் மீது தூவி பக்தி செலுத்துவர்.
இதனால் அற்புதமான பலன்கள் கிடைக்கும். தேனை சுமக்கும் பூக்களை அம்பிகைக்கு அர்ப்பணிக்கும்பொழுது, தேனான வாழ்க்கை அமையும். அம்பிகையின் மனதைக் குளிர்வித்தால் இந்த உலகம் குளிர்ச்சி அடையும்.
மழைவளம் பெருகும். ‘மாரியல்லாமல் ஒரு காரியமில்லை’ என்ற வாக்குப்படி, மாரியம்மனை வழிபட்டு காரியங்களைத் தொடங்கினால் மகத்தான பலனை அடையலாம்.
இதனால் அற்புதமான பலன்கள் கிடைக்கும். தேனை சுமக்கும் பூக்களை அம்பிகைக்கு அர்ப்பணிக்கும்பொழுது, தேனான வாழ்க்கை அமையும். அம்பிகையின் மனதைக் குளிர்வித்தால் இந்த உலகம் குளிர்ச்சி அடையும்.
மழைவளம் பெருகும். ‘மாரியல்லாமல் ஒரு காரியமில்லை’ என்ற வாக்குப்படி, மாரியம்மனை வழிபட்டு காரியங்களைத் தொடங்கினால் மகத்தான பலனை அடையலாம்.
தென் கயிலாயம் என்று போற்றப்படும் ஸ்ரீகாளகஸ்தி, பஞ்சபூத தலங்களில் வாயு (காற்று) வுக்கு உரிய தலமாகும். இங்குள்ள லிங்கம் வாயு லிங்கமாகும்.
ராகு, கேது கிரக தோஷம், சர்ப்ப தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், நீண்டகாலம் தீராத பிரச்சினையில் சிக்கி திண்டாடுபவர்கள் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக வழிபடக் கூடிய ஆலயமாக இருப்பது ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் இருக்கும் காளஹஸ்தீஸ்வரர் கோவில் என்பது இந்து சமயத்தினரின் நம்பிக்கை.
தென் கயிலாயம் என்று போற்றப்படும் ஸ்ரீகாளகஸ்தி, பஞ்சபூத தலங்களில் வாயு (காற்று) வுக்கு உரிய தலமாகும். இங்குள்ள லிங்கம் வாயு லிங்கமாகும். இன்றைக்கும் காற்றுப்புக முடியாத கர்ப்பக கிரகத்தில், சுவாமிக்கு ஏற்றி வைத்திருக்கும் அகல் தீபம் படிப்படியாக சுடர் விட்டு மேலெழுந்து அங்கும், இங்கும் அசைந்தாடுவது ஓர் அற்புத நிகழ்ச்சியாகும்.
ஸ்ரீகாளஹஸ்தி, காளஹஸ்தீஸ்வரர் கோவில் ராகு மற்றும் கேது கிரகங்களின் பரிகார தலமாகவும் திகழ்கிறது. ராகு, கேது கிரக தோஷம், சர்ப்ப தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், நீண்டகாலம் தீராத பிரச்சினையில் சிக்கி திண்டாடுபவர்கள் இங்கு வந்து ராகு மற்றும் கேது சர்ப்பதோஷ நிவாரண பூஜை செய்து கொண்டால், பிரச்சினையில் இருந்து விடுபடுகின்றனர்.
ஆந்திர மாநிலத்தில் திருப்பதிக்கு கிழக்கே 40 கிலோ மீட்டர் தொலைவில் சென்னை செல்லும் சாலையில் ஸ்ரீகாளஹஸ்தி அமைந்துள்ளது. சென்னையிலிருந்து நேரடியாக இந்த ஊருக்கு பேருந்து வசதியும் செய்யப்பட்டுள்ளது.
தென் கயிலாயம் என்று போற்றப்படும் ஸ்ரீகாளகஸ்தி, பஞ்சபூத தலங்களில் வாயு (காற்று) வுக்கு உரிய தலமாகும். இங்குள்ள லிங்கம் வாயு லிங்கமாகும். இன்றைக்கும் காற்றுப்புக முடியாத கர்ப்பக கிரகத்தில், சுவாமிக்கு ஏற்றி வைத்திருக்கும் அகல் தீபம் படிப்படியாக சுடர் விட்டு மேலெழுந்து அங்கும், இங்கும் அசைந்தாடுவது ஓர் அற்புத நிகழ்ச்சியாகும்.
ஸ்ரீகாளஹஸ்தி, காளஹஸ்தீஸ்வரர் கோவில் ராகு மற்றும் கேது கிரகங்களின் பரிகார தலமாகவும் திகழ்கிறது. ராகு, கேது கிரக தோஷம், சர்ப்ப தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், நீண்டகாலம் தீராத பிரச்சினையில் சிக்கி திண்டாடுபவர்கள் இங்கு வந்து ராகு மற்றும் கேது சர்ப்பதோஷ நிவாரண பூஜை செய்து கொண்டால், பிரச்சினையில் இருந்து விடுபடுகின்றனர்.
ஆந்திர மாநிலத்தில் திருப்பதிக்கு கிழக்கே 40 கிலோ மீட்டர் தொலைவில் சென்னை செல்லும் சாலையில் ஸ்ரீகாளஹஸ்தி அமைந்துள்ளது. சென்னையிலிருந்து நேரடியாக இந்த ஊருக்கு பேருந்து வசதியும் செய்யப்பட்டுள்ளது.
ஜோதிடத்தில் “ஞானகாரகன்” என்று கேது பகவான் குறிப்பிடப்படுகிறார். கேது கிரகத்தால் ஏற்படும் தோஷம் குறித்தும், தோஷத்தை நீக்குவதற்குரிய பரிகாரங்கள் குறித்தும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.
கேது பகவான் ஒருவரின் ஜாதகத்தில் கெட்டுப்போயிருந்தால் அந்த நபருக்கு திடீர் பொருளாதார சரிவு, மனகுழுப்பம் அதிகம் ஏற்படுவது, பெயர் புகழ் கெடுவது, குழந்தை பேறு ஏற்படுவதில் தாமதம், எப்போதும் மனதில் ஒரு பதட்டத்தன்மை மற்றும் சோகம் ஆகியவை கேது பகவானின் கெடுதலான நிலையால் ஏற்படும் சில பாதிப்புகளாகும்.
கேது கிரகத்தின் தீய பலன்கள் ஏற்படாமல் தடுத்து, நற்பலன்களை பெற கேது கிரக சாந்தி பரிகார பூஜை செய்வது சிறந்ததாகும். வைடூரியத்தை வெள்ளியில் செய்யப்பட்ட மோதிரத்தில் பதித்து அணிந்து கொள்வது கேது பகவானின் நல்லாற்றலை உங்களுக்கு பெற்று தரும். விநாயக பெருமான் கேது கிரக பாதிப்புகளை நீக்க கூடியவர். சனிகிழமைகளில் விநாயக பெருமானை வழிபட்டு வருவது கேது தோஷத்தை போக்கும் சிறந்த வழியாகும்
ராகு – கேது கிரகங்களுக்குரிய சிறந்த பரிகார தலம் ஸ்ரீ காளஹஸ்தி கோவிலாகும். சனிக்கிழமை தினத்தில் காளஹஸ்தி கோவிலுக்கு சென்று கேது கிரகத்திற்கான கேது பரிகார பூஜையை செய்து சிவபெருமானை வழிபட்டால் கேதுவின் தோஷம் நீங்கும். கேது பகவான் “ஞானகாரகன்” என்பதால் ஜீவ சமாதியடைந்த ஏதேனும் ஒரு சித்தரின் சமாதி கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும். துறவிகளுக்கு அன்னதானம் மற்றும் வஸ்திர தானம் அளிப்பதும் கேது தோஷத்திற்கு சிறந்த பரிகாரமாகும்.
கேது கிரகத்தின் தீய பலன்கள் ஏற்படாமல் தடுத்து, நற்பலன்களை பெற கேது கிரக சாந்தி பரிகார பூஜை செய்வது சிறந்ததாகும். வைடூரியத்தை வெள்ளியில் செய்யப்பட்ட மோதிரத்தில் பதித்து அணிந்து கொள்வது கேது பகவானின் நல்லாற்றலை உங்களுக்கு பெற்று தரும். விநாயக பெருமான் கேது கிரக பாதிப்புகளை நீக்க கூடியவர். சனிகிழமைகளில் விநாயக பெருமானை வழிபட்டு வருவது கேது தோஷத்தை போக்கும் சிறந்த வழியாகும்
ராகு – கேது கிரகங்களுக்குரிய சிறந்த பரிகார தலம் ஸ்ரீ காளஹஸ்தி கோவிலாகும். சனிக்கிழமை தினத்தில் காளஹஸ்தி கோவிலுக்கு சென்று கேது கிரகத்திற்கான கேது பரிகார பூஜையை செய்து சிவபெருமானை வழிபட்டால் கேதுவின் தோஷம் நீங்கும். கேது பகவான் “ஞானகாரகன்” என்பதால் ஜீவ சமாதியடைந்த ஏதேனும் ஒரு சித்தரின் சமாதி கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும். துறவிகளுக்கு அன்னதானம் மற்றும் வஸ்திர தானம் அளிப்பதும் கேது தோஷத்திற்கு சிறந்த பரிகாரமாகும்.
அரிய காட்சியாகப் பள்ளி கொண்டுள்ள சுருட்டப்பள்ளி இறைவனைத் தேடி வந்து வணங்கினால் சகல தோஷமும் நீங்கும் என்பது ஐதீகம். சுருட்டப்பள்ளியில் மட்டுமே சிவன் பள்ளி கொண்ட கோலத்தைக் காண முடியும்.
சிவபெருமானின் தத்புருஷ முகத்திற்குரிய தலம் இது. சென்னையில் இருந்து சுமார் 95 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சுருட்டப்பள்ளி. இத்தல மூலவரின் திரு நாமம், பள்ளிகொண்டீஸ்வரர்.
அம்பாளின் பெயர், மரகதவல்லி. பாற்கடலைக் கடைந்த வேளையில், முதலில் வெளிப்பட்டது கொடிய விஷம்தான். அது உலகை அழிக்கும் முன்பாக, தான் உண்டு உலக உயிர் களைக் காத்தார் சிவபெருமான். வீரிய விஷத்தின் காரணமாக ஈசனுக்கு சிறு மயக்கம் உண்டானதாகவும், அதனால் அவர் அம்பாளின் மடியில் தலை சாய்த்து படுத்திருந்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன.
அப்படி அவர் அம்பாள் மடியில் தலைசாய்த்து படுத்திருக்கும் சயன கோலத்திலேயே, இறைவன் இங்கு காட்சி தருகிறார். இவரை வழிபாடு செய்தால் குடும்ப பிரச்சினைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.
அரிய காட்சியாகப் பள்ளி கொண்டுள்ள சுருட்டப்பள்ளி இறைவனைத் தேடி வந்து வணங்கினால் சகல தோஷமும் நீங்கும் என்பது ஐதீகம். சுருட்டப்பள்ளியில் மட்டுமே சிவன் பள்ளி கொண்ட கோலத்தைக் காண முடியும்.
அம்பாளின் பெயர், மரகதவல்லி. பாற்கடலைக் கடைந்த வேளையில், முதலில் வெளிப்பட்டது கொடிய விஷம்தான். அது உலகை அழிக்கும் முன்பாக, தான் உண்டு உலக உயிர் களைக் காத்தார் சிவபெருமான். வீரிய விஷத்தின் காரணமாக ஈசனுக்கு சிறு மயக்கம் உண்டானதாகவும், அதனால் அவர் அம்பாளின் மடியில் தலை சாய்த்து படுத்திருந்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன.
அப்படி அவர் அம்பாள் மடியில் தலைசாய்த்து படுத்திருக்கும் சயன கோலத்திலேயே, இறைவன் இங்கு காட்சி தருகிறார். இவரை வழிபாடு செய்தால் குடும்ப பிரச்சினைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.
அரிய காட்சியாகப் பள்ளி கொண்டுள்ள சுருட்டப்பள்ளி இறைவனைத் தேடி வந்து வணங்கினால் சகல தோஷமும் நீங்கும் என்பது ஐதீகம். சுருட்டப்பள்ளியில் மட்டுமே சிவன் பள்ளி கொண்ட கோலத்தைக் காண முடியும்.
பழமைவாய்ந்த பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் சனீஸ்வர பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபட்டால் சனி தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் தீரும் என்பதும் நம்பிக்கை.
சேலம் மாவட்டம் இடைப்பாடியில் சரபங்கா நதிக்கரையில் பல நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலை சுற்றியுள்ள சரபங்கா நதிக்கரை ஓரத்தில் 11 கோவில்கள் இருப்பது வேறு எங்கும் இல்லாத சிறப்பு. இங்கு இறைவன், பாணலிங்கமாய் அருள்பாலிக்கிறார்.
பாற்கடலை கடைந்தபோது, வெளிப்பட்ட கொடிய நஞ்சை தானே உண்டு தேவர்களை காத்தார் சிவபெருமான். அவரை நஞ்சுண்டஈஸ்வரன் என்று வணங்கினர் தேவர்கள். அப்படிப்பட்ட நஞ்சுண்டேஸ்வரரை வணங்கிணால் காலசர்ப்ப தோஷம் நீங்கும். ராகு, கேது தோஷங்கள் நிவர்த்தியாகும். திருமணத்தடை விலகும்.
வில்வத்தால் ஈசனை அர்ச்சித்து பாலாபிஷேகம் செய்தால் அனைத்து வித தோஷங்களும் நீங்கும். தேவகிரி அம்பாளை வழிபட்டால் மாங்கல்யம் நிலைத்து, மங்களம் பெருகும் என்பது ஐதீகம். இதேபோல் சனிபெருமானுக்கு, இங்கு தனிக்கோவில் உள்ளது. சனீஸ்வர பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபட்டால் சனி தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் தீரும் என்பதும் நம்பிக்கை.
பாற்கடலை கடைந்தபோது, வெளிப்பட்ட கொடிய நஞ்சை தானே உண்டு தேவர்களை காத்தார் சிவபெருமான். அவரை நஞ்சுண்டஈஸ்வரன் என்று வணங்கினர் தேவர்கள். அப்படிப்பட்ட நஞ்சுண்டேஸ்வரரை வணங்கிணால் காலசர்ப்ப தோஷம் நீங்கும். ராகு, கேது தோஷங்கள் நிவர்த்தியாகும். திருமணத்தடை விலகும்.
வில்வத்தால் ஈசனை அர்ச்சித்து பாலாபிஷேகம் செய்தால் அனைத்து வித தோஷங்களும் நீங்கும். தேவகிரி அம்பாளை வழிபட்டால் மாங்கல்யம் நிலைத்து, மங்களம் பெருகும் என்பது ஐதீகம். இதேபோல் சனிபெருமானுக்கு, இங்கு தனிக்கோவில் உள்ளது. சனீஸ்வர பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபட்டால் சனி தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் தீரும் என்பதும் நம்பிக்கை.
கடக ராசியில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்நாளில் நற்பலன்களை பெறுவதற்கு என்னென்ன பரிகாரங்கள் செய்ய வேண்டும் என்பதை இங்கு காணலாம்.
கடக ராசிக்குரிய நவகிரக நாயகன் சந்திர பகவான். எனவே கடக ராசியினர் தங்கள் ராசிக்குரிய திங்கட்கிழமைகளில் சிவபெருமான் கோயிலில், சிவனுக்கு பாலபிஷேகம் செய்து வழிபட்டு வருவது அவர்களின் கிரக தோஷங்கள், கர்ம தோஷங்கள் போன்றவற்றை நீக்கும். பௌர்ணமி தினங்களில் முன்னிரவு நேரத்தில் வானில் தோன்றும் பூரண சந்திரனின் தரிசனம் செய்து வருவது உங்களின் மனதில் நேர்மறை சக்திகளை நிரம்பச் செய்யும்.
சந்திர பகவான் ஒரு மனிதனின் தாயாருக்கு காரகனாகிறார். எனவே கடக ராசியினர் தினந்தோறும் தங்களின் தாயாரை வணங்கி அவர்களின் ஆசிகளை பெற்று செல்வது உங்களுக்கு பல நன்மைகளை உண்டாக்கும். மாதமொருமுறை கோயில்கள் மற்றும் துறவிகள், ஏழைகள் ஆகியோர்களுக்கு அரிசி தானமளிப்பதால் உங்களுக்கு ஏற்படவிருக்கின்ற எத்தகைய துரதிர்ஷ்டங்களையும் போக்கும் சிறந்த பரிகாரமாக இருக்கும். கோடை காலங்களில் மக்களின் தாகம் தீர்க்க தண்ணீர் பந்தலும், விலங்குகளின் தாகம் தீர்க்க தண்ணீர் தொட்டியும் அமைப்பது சிறந்தது. கோவில்களில் இருக்கும் குளங்களில் இருக்கும் மீன்களுக்கு அவ்வப்போது அரிசி பொரியை இரையாக அளித்து வருவதும் உங்களுக்கு நன்மைகளை உண்டாக்கும்.
சந்திர பகவான் ஒரு மனிதனின் தாயாருக்கு காரகனாகிறார். எனவே கடக ராசியினர் தினந்தோறும் தங்களின் தாயாரை வணங்கி அவர்களின் ஆசிகளை பெற்று செல்வது உங்களுக்கு பல நன்மைகளை உண்டாக்கும். மாதமொருமுறை கோயில்கள் மற்றும் துறவிகள், ஏழைகள் ஆகியோர்களுக்கு அரிசி தானமளிப்பதால் உங்களுக்கு ஏற்படவிருக்கின்ற எத்தகைய துரதிர்ஷ்டங்களையும் போக்கும் சிறந்த பரிகாரமாக இருக்கும். கோடை காலங்களில் மக்களின் தாகம் தீர்க்க தண்ணீர் பந்தலும், விலங்குகளின் தாகம் தீர்க்க தண்ணீர் தொட்டியும் அமைப்பது சிறந்தது. கோவில்களில் இருக்கும் குளங்களில் இருக்கும் மீன்களுக்கு அவ்வப்போது அரிசி பொரியை இரையாக அளித்து வருவதும் உங்களுக்கு நன்மைகளை உண்டாக்கும்.






