என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    • அது அழகாக பிரிக்கப்பட்டு அடுத்தடுத்த பிரகாரங்களாக கீழிறங்கி கொண்டே செல்கிறது.
    • நான்காவது வெளிபிரகாரத்தில் விரிவான நந்தவனப்பகுதி உள்ளது.

    நடராஜர் என்று கூறும்போதே அடுத்து நினைவுக்கு வருவது சிதம்பரம் நடராஜர் கோவில்.

    இது சோழ வம்சத்தின் அடையாளச்சின்னம். அறத்துக்கும் ஆன்மீகத்துக்கும் நம் முன்னோர்கள் அளித்துச்சென்ற அங்கீகாரம்.

    இது கோவில் மட்டுமல்ல, காலப்பெட்டகமும்கூட!. வெவ்வேறு காலகட்டத்தில் பல ராஜ வம்சங்களால் இந்த கோவிலில் புதுப்பிப்பு செய்யப்பட்டும், புதிய கட்டமைப்புகள் சேர்க்கப்பட்டும் இருக்கிறது.

    கோவில் வளாகம் பல்வேறு அடுக்கடுக்கான தொகுதிகளை கொண்டு அமைந்திருப்பது அற்புதமான கட்டிடக்கலை அம்சமாக கருதப்படுகிறது.

    ராஜகோபுர வாயிலை தாண்டி கோவில் வளாகத்தில் நாம் கால் பதித்த உடனேயே பிரமிப்பு புராதன திராவிடக் கட்டிடக்கலையின் நகரின் மையப்பகுதியில் ஒரு பிரமாண்ட நீள்சதுர அமைப்பில் வீற்றிருக்கும் இந்த கோவிலின் ஒட்டுமொத்த வளாகமும் கோட்டைச்சுவர்கள் போன்று 10 மீ உயரம் கொண்ட கருங்கல் சுவர்களால் கட்டப்பட்டுள்ளது.

    அது அழகாக பிரிக்கப்பட்டு அடுத்தடுத்த பிரகாரங்களாக கீழிறங்கி கொண்டே செல்கிறது.

    நான்காவது வெளிபிரகாரத்தில் விரிவான நந்தவனப்பகுதி உள்ளது.

    இந்த பிரகாரத்தில் சிவகங்கை தீர்த்தம் எனும் புண்ணியதீர்த்தம், ஆயிரங்கால் மண்டபம், விநாயகர் கோவில், சிவகாம சுந்தரியம்மன் ஆலயம், நந்தி சிலை, நவக்கிரக சன்னதிகள், நடன சபை மற்றும் பல சிறு சன்னதிகள் அமைந்துள்ளன.

    மேலும் தூண்களோடு காணப்படும் ஒரு நடைக்கூட அமைப்பும் கோபுரத்தோடு இணைந்த மதில் சுவரையட்டியே காணப்படுகிறது.

    • ராஜசபையில்தான் எல்லா வகையான இதிகாச, புராணங்கள் அனைத்தும் அரங்கேற்றம் செய்யபட்டன.
    • இன்றும் பல காரியங்கள் ராஜசபையில் தான் அரங்கேற்றம் செய்யப்படுகின்றன.

    ஆயிரம் கால் மண்டபம் ராஜசபை என்று அழைக்கப்படுகிறது.

    இங்கு 999 தூண்கள் மட்டுமே உள்ளன. மீதமான ஒன்று நடராஜப் பெருமானின் ஊன்றிய கால்.

    ஆக, மொத்தம் 1000 கால் மண்டபம் ராஜசபையாக விளங்குகிறது.

    இது 5வது சபையாகும்.

    இங்குதான் ஆனி (மிதுனம்), மார்கழி (தனுசு) மாதங்களில் நடைபெறும் ஒன்பதாம் திருநாள்களில் நடராஜப் பெருமான் திருத்தேரில் எழுந்தருளி நான்கு வீதிகளில் உலா வந்த பின்னர் இரவில் இந்த ஆயிரங்கால் மண்டபத்தில் வீற்றிருந்து, விடியற்காலையில் அபிஷேகம் நடைபெற்று, பத்தாம் நாள் பிற்பகலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்குத் திருக்காட்சியளிப்பார்.

    பிறகு பெருமான் முன்னதாகவும், பெருமாட்டி பின்னாலும் மாறி மாறி நடனம் செய்து கொண்டு சித்சபைக்கு செல்வர்.

    ராஜசபையில்தான் எல்லா வகையான இதிகாச, புராணங்கள் அனைத்தும் அரங்கேற்றம் செய்யபட்டன.

    இன்றும் பல காரியங்கள் ராஜசபையில் தான் அரங்கேற்றம் செய்யப்படுகின்றன.

    • இங்குதான் பொது தீட்சதர்கள் ஆலயப் பணிகள், வழிபாடுகள் குறித்து சபை கூட்டுவர்.
    • இப்பேரம்பலத்தை, மணவில் கூத்தனான காலிங்கராயன் விக்கிரசோழன் செம்பினால் வேய்ந்தான்.

    குலோத்துங்க சோழன் திருப்பணி செய்த தேவசபை (பேரம்பலம்)

    பேரம்பலத்தில் ஐந்து மூர்த்திகளும் எழுந்தருளியிருக்கின்றனர்.

    இங்குதான் மாதந்தோறும் திருஆதிரை நட்சத்திரத்தன்று சோமாஸ்கந்தருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

    இங்குதான் பொது தீட்சதர்கள் ஆலயப் பணிகள், வழிபாடுகள் குறித்து சபை கூட்டுவர்.

    இப்பேரம்பலத்தை, மணவில் கூத்தனான காலிங்கராயன் விக்கிரசோழன் செம்பினால் வேய்ந்தான்.

    இப்பேரம்பலத்திற்கு மூன்றாம் குலோத்துங்க சோழன் திருப்பணி செய்தான். 

    • சுவாமி இங்கு ஆடிய தாண்டவத்திற்கு ஊர்த்துவ தாண்டவம் என்று பெயர்.
    • சுவாமிக்கு தென்பகுதியில் ஸ்ரீசரபேஸ்வரர் எழுந்தருளியிருக்கிறார்.

    சிதம்பரத்திற்கு ''நிருத்த சேத்ரம்'' என்ற மற்றொரு பெயரும் உண்டு. ஆடல்வல்லான் ஊர்த்தவ தாண்டவம் செய்தருளிய இடம் இது.

    சுவாமிக்கும் அம்பாளுக்கும் நடனப் போட்டி நடக்கும் போது சுவாமி தமது காது குண்டலம் கீழே விழ அதை தனது வலது கால் விரல்களால் எடுத்து காதில் மாட்டுமாறு காலை மேலே தூக்கி நடனம் ஆடிடவே அம்பாள் காலை தூக்கி ஆட முடியாமல் போகவே சுவாமி ஆடலில் வெற்றி பெற்றார்.

    இத்தகு தெய்வ திருநடன சிறப்பு பெற்ற இடம்தான் நடனசபை என்ற நிருத்த சபை ஆகும்.

    சுவாமி இங்கு ஆடிய தாண்டவத்திற்கு ஊர்த்துவ தாண்டவம் என்று பெயர்.

    சுவாமிக்கு தென்பகுதியில் ஸ்ரீசரபேஸ்வரர் எழுந்தருளியிருக்கிறார்.

    இவருக்கு அபிஷேக ஆராதனைகள், அர்ச்சனைகள் செய்து வழிபாடு செய்ய சகல தோஷங்களும் விலகும்.

    ராகுகாலத்தில் நெய்தீபம் ஏற்றினால் சிறந்த பலன்களைப் பெற்று தரும்.

    • சிற்றம்பலத்திற்கு முன் உள்ளது (எதிரம்பலம்) பொன்னம்பலம் என்ற கனகசபை.
    • நடராஜருக்கு மகா அபிஷேகங்கள் நடக்கும் இடம் இதுவேயாகும்.

    சிற்றம்பலத்திற்கு முன் உள்ளது (எதிரம்பலம்) பொன்னம்பலம் என்ற கனகசபை.

    நடராஜருக்கு மகா அபிஷேகங்கள் நடக்கும் இடம் இதுவேயாகும்.

    இங்கு ஸ்படிக லிங்கத்திற்கு தினசரி ஆறுகால பூஜையும், பகல் இரண்டாம் காலத்தில் ரத்தின சபாபதிக்கு அபிஷேக வழிபாடுகளும் நடைபெறும்.

    பொன்னம்பலத்தின் முகப்பை ஆதித்த சோழன் கொங்கு நாட்டிலிருந்து கொண்டு வந்த மாற்றுயர்ந்த பொன்னால் வேய்ந்தான் என்று சேக்கிழார் சுவாமிகள் கூறியுள்ளார்.

    கனகசபையின் 18 தூண்டுகள் 18 புராணங்களை குறிக்கிறது.

    கனகசபையின் ஐந்து தளவரிசைக் கற்கள் பஞ்சபூதங்களின் தத்துவத்தை குறிக்கும்.

    கனகசபையில் நின்றுதான் சிதம்பர ரகசியத்தை பக்தர்கள் தரிசிப்பார்கள்.

    மேலும் ஆடல் வல்லானின் ஆட்டத்தை கனக சபையின் மூலமே தரிசிக்க முடியும்.

    • சதாசிவ பீட 4 தங்க தூண்களும் 4 வேதங்களை குறிக்கும்.
    • அடுத்து சதாசிவ பீட 6 தங்க தூண்களும் 6 சாஸ்திரங்களை குறிக்கும்.

    5 சபைகள்

    சிதம்பரம் தலத்தில் சித்சபை, கனகசபை, நடனசபை, தேவசபை, ராஜசபை ஆகிய 5 சபைகள் உள்ளன. இந்த 5 சபைகளின் சிறப்புகள் வருமாறு:

    சித்சபை

    சிதம்பரம் கோவில் கட்டிட அமைப்பு அனைத்தும் தத்துவ அடிப்படையில் அமைந்தவையாகும்.

    வாஸ்து, ஆகம விதிகள் பிறழாது நெறிப்பட அமைந்த கோவில் இது.

    குறிப்பாக, சித்சபையானது மரத்தால் நமது உடல் அமைப்பை அப்படியே ஒத்துள்ளது.

    சித்சபை மேல் 21600 பொன் ஓடுகள் பொருத்தி, 72000 ஆணிகள் அடிக்கப்பட்டுள்ளன.

    ஒரு மனிதனின் நாடி நரம்புகளின் எண்ணிக்கை 72000 அவன் ஒரு நாளைக்கு விடும் சுவாச காற்றின் எண்ணிக்கை 21600.

    மேல் உள்ள 9 கலசங்கள், 9 சக்திகள், நவரத்தினங்கள், நவகிரகங்கள் ஆகியவற்றை குறிக்கும்.

    9 வெளிவாசல்கள் மனிதனின் 9 துவாரங்களை குறிக்கும். 224 பலகை அமைப்புகள் 224 உலகங்களை குறிக்கும்.

    64 சந்தன கை மரங்கள் ஆயகலைகள் 64 ஐக் குறிக்கும்.

    சதாசிவ பீட 4 தங்க தூண்களும் 4 வேதங்களை குறிக்கும். அடுத்து சதாசிவ பீட 6 தங்க தூண்களும் 6 சாஸ்திரங்களை குறிக்கும்.

    ருத்ரபீட 28 மரத்தூண்கள் 28 ஆகமங்களைக் குறிக்கும். ருத்ரபீட ரகசியம் பார்த்திடும் 96 பல கனிகள் (ஜன்னல்) 96 தத்துவங்களை குறிக்கும்.

    விஷ்ணு பீடத்தின் கதவுகள் அவித்தையையும், ரகசியத் திரை மாயையும் குறிக்கும்.

    ஐந்து தூண்களும் ஐம்பொறிகளை குறிக்கும் இங்கு நடராஜப் பெருமானின் திருமுடியிலுள்ள சந்திரனில் இருந்து உண்டான ஸ்படிகலிங்கமும், மாணிக்க மயமான ரத்தின சபாபதியும், சுவர்ண ஆகர்ஷண பைரவரும், நித்ய உத்ஸவர் முதலானவர்களும் எழுந்தருளியிருக்கின்றனர்.

    இச்சிற்றம்பலத்தின் உள்ளே செல்வதற்கு ஐந்து படிகள் இருக்கின்றன.

    இவற்றிற்கு பஞ்சாட்சரபடிகள் என்று பெயர். இப்படிகள் இருபுறமும் யானை உருவங்கள் இருக்கின்றன.

    சித்சபையில் நிகழும் ஆனந்த நடனத்தை சிவகாம சுந்தரியார் இடைவிடாமல் கண்டுகளிப்பது, ஆன்மாக்களின் பிறவிப்பிணியைப் போக்குவதற்கே என்று குமரகுருபர சுவாமிகள் பாடியுள்ளார்.

    ஆடல்வல்லான் ஆடல்புரியும் இடம் சிற்றம்பலம் இதையே தான் சித்சபை என்று அழைக்கப்படுகிறது. நடராஜர் இச்சபையில் திருநடனம் புரிந்து ஐந்து தொழில்களையும் நிகழ்த்துகிறார்.

    • திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
    • ஸ்ரீஆண்டாள் மூலவருக்கு சிறப்பு திருமஞ்சன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு, ஆனி 12 (புதன்கிழமை)

    பிறை: தேய்பிறை.

    திதி: பஞ்சமி இரவு 11.11 மணி வரை. பிறகு சஷ்டி.

    நட்சத்திரம்: அவிட்டம் பிற்பகல் 3.30 மணி வரை. பிறகு சதயம்.

    யோகம்: மரண, சித்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். சோழவந்தான் ஸ்ரீஜெனகைமாரியம்மன் மஞ்சள் நீராட்டு விழா. விருஷப சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீநரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலை திருமஞ்சன அலங்கார சேவை. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீகோதண்டராம சுவாமிக்கு காலை திருமஞ்சனம். பத்ராசலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீஆண்டாள் மூலவருக்கு சிறப்பு திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-ஆதாயம்

    ரிஷபம்-நன்மை

    மிதுனம்-உயர்வு

    கடகம்- கடமை

    சிம்மம்-பயணம்

    கன்னி-தெளிவு

    துலாம்- உதவி

    விருச்சிகம்-உறுதி

    தனுசு- உண்மை

    மகரம்-ஆர்வம்

    கும்பம்-பரிவு

    மீனம்-மகிழ்ச்சி

    • சீரடியில் இவர் சமாதி அடைந்த இடம் தற்போது பல்லாயிரக்கணக்கானவர் தொழும் புண்ணியத் தலமாக விளங்குகிறது.
    • ஸாயி நாதர் திருவடியே ஸம்பத் தளிக்கும் திருவடியே

    'சாய்பாபா..' இந்த மந்திரச்சொல்லின் 'சாய்' என்ற சொல்லுக்கு, 'சாட்சாத் கடவுள்.' என்ற அர்த்தமாம். இந்துக்கள் இவரை கடவுள் தத்தாத்திரேயரின் அவதாரமாகக் கருதுகின்றனர்.

    ஷீர்டி சாயிபாபா, மிக உன்னதமான குருநாதர் என்று கொண்டாடுகிறார்கள் பக்தர்கள். எவருடைய வீட்டில் சாயிபாபாவின் திருநாமம் சொல்லப்படுகிறதோ அந்த வீட்டுக்கு பாபாவின் அருள் கிடைக்கும் என்பது சாயி பக்தர்களின் நம்பிக்கை.

    சீரடியில் இவர் சமாதி அடைந்த இடம் தற்போது பல்லாயிரக்கணக்கானவர் தொழும் புண்ணியத் தலமாக விளங்குகிறது.


    ஸ்ரீ ஷீரடி சாய் பாபா காயத்ரி மந்திரம்:

    ஓம் ஷிர்டி வாசாய வித்மஹே

    சச்சிதானந்தாய தீமஹி

    தன்னோ சாய் ப்ரசோதயாத்.

    தினமும் 11அல்லது 33 அல்லது 108 அல்லது 1008 முறை பாராயணம் செய்ய வேண்டும்.

    ஷீரடி சாயி பாபாவின் த்யான ஸ்லோகம்:

    பத்ரி க்ராம ஸமத் புதம்

    த்வாரகா மாயீ வாசினம்

    பக்தா பீஷ்டம் இதம் தேவம்

    ஸாயி நாதம் நமாமி.


    ஷீரடி சாயி பாபாவின் மூல மந்திரம்:

    "ஓம் ஸாயி ஸ்ரீ ஸாயி ஜெய ஜெய ஸாயி".

    ஸ்ரீ ஷீரடி சாய் பாபா தியானச்செய்யுள்:

    சாயிநாதர் திருவடி

    ஸாயி நாதர் திருவடியே

    ஸம்பத் தளிக்கும் திருவடியே

    நேயம் மிகுந்த திருவடியே

    நினைத்த தளிக்கும் திருவடியே

    தெய்வ பாபா திருவடியே

    தீரம் அளிக்கும் திருவடியே

    உயர்வை யளிக்கும் திருவடியே.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெரிதாக அவன் எதுவும் சேர்த்து வைக்கவில்லை. கவலையுடன் வீட்டை நோக்கி நடந்தான்.
    • வழியில் அவனுக்கு நா வறண்டது தண்ணீரை தேடினான். சுற்றி எங்கும் தண்ணீர் கடை இல்லை.

    ஒரு தேவாலயத்தைப் பராமரிக்கின்ற பொறுப்பில் இளைஞன் ஒருவன் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். பல ஆண்டுகளாக அங்கே வேலை பார்த்து அவன் வயோதிகப் பரவத்தையும் அடைந்து விட்டான்.

    புதிதாகப் பொறுப்பேற்க அந்த தேவாலயத்துக்கு ஒரு பாதிரியார் வந்தார்.

    தேவாலயத்தைப் பராமரிக்கின்றவன் எழுதப்படிக்க தெரிந்தவனாக இருக்க வேண்டுமென அவர் எண்ணினார். இந்த வயோதிகனுக்கோ எழுதப் படிக்கத் தெரியாது.

    ஆறு மாதத்துக்குள் அவன் எழுதப் படிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும், இல்லாவிட்டால் அவன் வேலையிலிருந்து விலக வேண்டும் என்று அவர் உத்தரவு போட்டார்.

    அந்த வயதில் அவனால் எழுத படிக்க முடியவில்லை. எனவே ஆறு மாதத்துக்குப் பிறகு வேலையிலிருந்து அவன் நீக்கப்பட்டான்.

    பெரிதாக அவன் எதுவும் சேர்த்து வைக்கவில்லை. கவலையுடன் வீட்டை நோக்கி நடந்தான்.

    வழியில் அவனுக்கு நா வறண்டது தண்ணீரை தேடினான். சுற்றி எங்கும் தண்ணீர் கடை இல்லை.

    இரண்டு மைல் நீளமுள்ள அந்த சாலையில் எந்தப் பகுதியிலும் தண்ணீர் கடை இல்லை.

    தன்னைப் போல் எத்தனை பேர் தண்ணீர் இல்லாததால் அவதிப்பட்டிருப்பார்கள் என்று யோசித்த அவன், அந்தச் சாலையில் தண்ணீர் கடை வைக்க எண்ணி, உடனடியாக வைத்தும் விட்டான்.

    வியாபாரம் பெருகி விரைவில் பெரும் பணக்காரனாகி விட்டான். கணக்கு விஷயமாக ஒருநாள் வங்கிக்கு சென்றிருந்தான். வங்கி அறிக்கை ஒன்றினைப் படித்து அவன் கையெழுத்திட வேண்டியிருந்தது.

    படிக்கத் தெரியாது எனச் சொல்லி படித்துக் காட்டும்படி அதிகாரியைக் கேட்டுக் கொண்டான்.

    திகைப்படைந்த அதிகாரி, "எழுதப் படிக்கத் தெரியாமலே இவ்வளவு பெரிய பணக்காரர் ஆகி இருக்கிறீர்களே, தெரிந்திருந்தால் இன்னும் என்னவெல்லாம் செய்திருப்பீர்கள்" என்றார்.

    எழுதப் படிக்கத் தெரிந்திருந்தால் தேவாலயத்தில் பணியாளாகவே இருந்திருப்பேன் என்றான் அவன்.

    • உங்கள் அனவைருக்கும் கொடுத்த பிறகும் என்னிடம் ஏராளமாகப் பணம் இருக்கிறது.
    • அதை தர்ம காரியங்களுக்கு செலவிட முடிவு செய்திருக்கிறேன் என்றார்.

    உலகப் பெரும் கோடீஸ்வராக விளங்கியவர் ஹென்றி போர்டு. ஒருநாள் அவர் தன்னுடைய உறவினர்களை விருந்துக்கு அழைத்தார்.

    விருந்தின்போது, தன்னுடைய செயலாளரை விட்டு ஒவ்வொருவரிடமும் ஒரு துண்டுக் காகிதத்தைக் கொடுக்கச் சொன்னார்.

    அதில் அவர் தன்னிடமிருந்து எதிர் பார்க்கின்ற அதிகபட்சமான தொகையினை குறிக்கச் சொன்னார்.

    ஒருவரை ஒருவர் கலந்து ஆலோசிக்காமல் அந்த தொகையை குறிப்பிட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

    எல்லோரும் தொகை எழுதிய பிறகு, போர்டின் செயலாளர் அந்து துண்டுக் காகிதங்களைச் சேகரித்து கொடுத்தார்.

    எல்லாக் காகிதங்களையும் பரிசீலித்து அதிகபட்சத் தொகையினை யார் எழுதியிருக்கிறார்கள் எனக் குறித்துக் கொண்டார் போர்டு.

    பிறகு உறவினர்களைப் பார்த்து, "உங்களில் யாரோ ஒருவர் கேட்டிருக்கின்ற அதிகபட்சத் தொகை இதுதான். அந்தத் தொகையினை உங்கள் ஒவ்வொருவருக்கும் கொடுக்க முடிவு செய்து விட்டேன்.

    உங்கள் அனவைருக்கும் கொடுத்த பிறகும் என்னிடம் ஏராளமாகப் பணம் இருக்கிறது. அதை தர்ம காரியங்களுக்கு செலவிட முடிவு செய்திருக்கிறேன் என்றார்.

    பிறகு அவர் "போர்டு பவுண்டேஷன்" என்கிற அமைப்பினை நிறுவி அமெரிக்காவின் நகரங்களில் மருத்துவமனைகள், கல்விக் கூடங்கள் நிறுவ தனது சொத்தில் கணிசமானதை நன்கொடையாக கொடுத்து விட்டார்.

    • திருமணம், குழந்தைபேறு வேண்டும் பெண்கள் மஞ்சள் கயிற்றை தாயாருக்கு சமர்பிக்கிறார்கள்.
    • இப்படி ஆயிரக்கணக்கில் சேரும் சரடுகளை தாயாரை சுற்றி வைத்து அலங்காரம் செய்து பூஜை செய்யப்படுகிறது.

    திருமலை ஸ்ரீனிவாச பெருமாளை மணம்புரிய பூமியில் அவதரித்தவள் அலர்மேல் மங்கை என அழைக்கப்படும் பத்மாவதி தாயார்.

    திருமாலின் வல மார்பில் உறைந்துள்ள பத்மாவதி தாயார் கீழ் திருப்பதியில் உள்ள அலர்மேல் மங்காபுரத்தில் (திருச்சானூர்) தனிக்கோவில் கொண்ட எழுந்தளியுள்ளார்.

    திருமலைக்கு செல்பவர்கள் முதலில் தாயாரை வணங்கி அனுமதி பெற்றே ஏழுமலையானை தரிசனம் செய்ய மலையேற வேண்டும் என்பது ஐதீகம்.

    திருமலை ஏழுமலையான் கோவிலில் வழங்கப்படுவது போல் இங்கும் லட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

    மேலும் தாயாருக்கு தினமும் விதவிதமான பிரசாதங்கள் நைவேத்யமாக படைக்கப்படுகிறது.

    அதில் தயிர் சாதம் முக்கியமாக இடம் பெறுகிறது.

    தாயாருக்கு அதிகாலையில் நடக்கும் முதல் நைவேத்தியத்தில் தயிர்சாதம், புளியோதரை, வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல் படைக்கப்படும். "மாத்ரா" என்றழைக்கப்படும் தாளிக்காத தயிரில் வெண்ணை கலந்த சாதம் இடம் பெறும்.

    மேலும் லட்டு, வடை, கேசரி ஆகியவையும் படைக்கப்படுகிறது.

    2-வது நைவேத்யம் காலை 9 மணிக்கு நடக்கிறது. அப்போது புளியோதரை, சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல், தயிர் சாதம் நைவேத்யம் செய்யப்படுகிறது.

    3-வது நைவேத்யம் மாலை 6.30 மணிக்கு நடக்கிறது.

    அப்போது தயிர் சாதம், புளியோதரை, சர்க்கரை பொங்கல், மிளகு பொங்கல் ஆகியவை படைக்கப்படுகிறது.

    வெள்ளிக்கிழமை தோறும் தயாருக்கு நடக்கும் திருமஞ்சனத்தின் போது வெண் பொங்கலும், பின்னர் நடக்கும் லட்சுமி பூஜையின் போது கேசரியும் நைவேத்யம் செய்யப்படுகிறது.

    கல்யாண உற்சவத்தின் போது சர்க்கரை, பொங்கல், புளியோதரை, வெண்பொங்கல், அப்பம், காய்கறிகளால் தாயாரிக்கப்படும் கதம்ப சாதம், பாயாசம் படைக்கப் படுகிறது.

    மதியம் நடக்கும் அபிஷேகத்தின் போது கார புளியோதரையும், வியாழக்கிழமை நடக்கும் திருப்பாவாடை சேவையின்போது லட்டு, வடை, சிலேபி, முறுக்கு, தோசை, அப்பம் ஆகியவையும் படைத்து வழிபாடு நடக்கிறது.

    தனுர் மாதம் என்று அழைக்கப்படும் மார்கழி மாத பூஜையின் போது தாயாருக்கு வெண்பொங்கல், வெல்ல தோசை, சுசியம் நைவேத்யமாக படைக்கப்படுகிறது.

    பிரமோற்சவ நாட்களில் வாகன சேவையின் போது தாயாருக்கு தோசை நைவேத்யம் கொடுக்கப்படுகிறது.

    முக்கிய பண்டிகை நாட்களில் சித்தராண்ணம் பால் கோவா, வடை பருப்பு, சுண்டல், பானகம்,, மைசூர்பாகு, பாதுஷா ஆகியவை படைக்கப்படுகிறது.

    தாயாருக்கு வெள்ளிக்கிழமை பூஜை விசேஷம். குறிப்பாக தை வெள்ளிக்கிழமை அதிவிசேஷமாக கருதப்படுகிறது.

    திருமணம், குழந்தைபேறு வேண்டும் பெண்கள் மஞ்சள் கயிற்றை தாயாருக்கு சமர்பிக்கிறார்கள்.

    இப்படி ஆயிரக்கணக்கில் சேரும் சரடுகளை தாயாரை சுற்றி வைத்து அலங்காரம் செய்து பூஜை செய்யப்படுகிறது.

    சரடு சமர்பிக்கும் பெண்களுக்கு அவர்களின் கோரிக்கைகள் நிறைவேறுகின்றது என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    • நொச்சி, விளா, வில்வம், கிளுவை, மாவிலிங்கம் ஆகியவை பஞ்ச வில்வங்களாகும்.
    • ஒருமுறை பூசித்த துளி, வில்வம், கரு ஊமைத்தை, நீலோற்பவம், பொன்மலர் ஆகியவற்றை மீண்டும் கழுவி பூசிக்க ஏற்கலாம்.

    வில்வம் - கண்டம்

    தாமரை - முகம்

    எருக்கம்பூ - திருமுடி

    நத்தியாவட்டை - மார்பு

    பாதிரிப்பூ - உந்தி

    அலரிப்பூ - அரைப்பகுதி

    செண்பகம் - முழந்தாள்

    நீலம் - பாதம்

    வில்வம் எடுக்கக் கூடாத நாட்கள்

    மாதப்பிறப்பு, சதுர்த்தி, அஷ்டமி, நவமி, சதுர்தசி, அமாவாசை, பவுர்ணமி, ஆகிய நாட்களில் வில்வம் எடுக்கலாகாது.

    பஞ்ச வில்வம்

    நொச்சி, விளா, வில்வம், கிளுவை, மாவிலிங்கம் ஆகியவை பஞ்ச வில்வங்களாகும்.

    ஒருமுறை பூசித்த துளி, வில்வம், கரு ஊமைத்தை, நீலோற்பவம், பொன்மலர் ஆகியவற்றை மீண்டும் கழுவி பூசிக்க ஏற்கலாம்.

    ×