என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    • ஓம் ருத்ரகணபதயே நம: த்ரோண புஷ்பம் ஸமர்ப்பயாமி (தும்பைப்பூ)
    • ஓம் காமிதார்த்தப்ரத கணபதயே நம: கேதகீ புஷ்பம் ஸமர்ப்பயாமி (தாழம்பூ)

    விநாயகர் சதுர்த்தி அன்று, 21 வகையான புஷ்பத்தினால் அல்லது அட்சதையால் விநாயகருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால், நன்மைகள் பலவாக நமக்கும் கிடைக்கப்பெறும்.

    * ஓம் பஞ்சாஸ்ய கணபதயே நம: புந்நாக புஷ்பம் ஸமர்ப்ப யாமி (புன்னை மலர்)

    * ஓம் மஹாகணபதயே நம: மந்தார புஷ்பம் ஸமர்ப்பயாமி (மந்தாரை மலர்)

    * ஓம் தீரகணபதயே நம: தாடிமீ புஷ்பம் ஸமர்ப்பயாமி (மாதுளம் பூ)

    * ஓம் விஷ்வக் ஸேன கணபதயே நம: வகுளபுஷ்பம் ஸமர்ப்பயாமி (மகிழம் பூ)

    * ஓம் ஆமோத கணபதயே நம: அம்ருணாள புஷ் பம் ஸமர்ப்பயாமி (வெட்டிவேர்)

    * ஓம் ப்ரமத கணபதயே நம: பாடலீ புஷ்பம் ஸமர்ப்பயாமி (பாதிரி பூ)

    * ஓம் ருத்ரகணபதயே நம: த்ரோண புஷ்பம் ஸமர்ப்பயாமி (தும்பைப்பூ)

    * ஓம் வித்யா கணபதயே நம: துர்த்தூர புஷ்பம் ஸமர்ப்பயாமி (ஊமத்தம் பூ)

    * ஓம் விக்ன கணபதயே நம: சம்பக புஷ்பம் ஸமர்ப்பயாமி (செண்பகப்பூ)

    * ஓம் துரித கணபதயே நம: ரஸால புஷ்பம் ஸமர்ப்பயாமி (மாம்பூ)

    * ஓம் காமிதார்த்தப்ரத கணபதயே நம: கேதகீ புஷ்பம் ஸமர்ப்பயாமி (தாழம்பூ)

    * ஓம் ஸம்மோஹ கணபதயே நம: மாதவீ புஷ்பம் ஸமர்ப்ப யாமி (முல்லைப்பூ)

    * ஓம் விஷ்ணு கணபதயே நம: சம்யாக புஷ்பம் ஸமர்ப்பயாமி (கொன்றைப்பூ)

    * ஓம் ஈச'கணபதயே நம: அர்க்க புஷ்பம் ஸமர்ப்பயாமி (எருக்கம் பூ)

    * ஓம் கஜாஸ்ய கணபதயே நம: கல்ஹார புஷ்பம் ஸமர்ப் பயாமி (செங்கழுநீர் பூ)

    * ஓம் ஸர்வஸித்தி கணபதயே நம: ஸேவந்திகா புஷ்பம் ஸமர்ப்பயாமி (செவ்வந்திப்பூ)

    * ஓம் வீர கணபதயே நம: பில்வ புஷ்பம் ஸமர்ப்பயாமி (வில்வம்)

    * ஓம் கந்தர்ப்ப கணபதயே நம: கரவீர புஷ்பம் ஸமர்ப்பயாமி (அரளிப்பூ)

    * ஓம் உச்சிஷ்ட கணபதயே நம: குந்த புஷ்பம் ஸமர்ப்பயாமி (முல்லைப்பூ)

    * ஓம் ப்ரஹ்ம கணபதயே நம: பாரிஜாத புஷ்பம் ஸமர்ப்பயாமி (பவழமல்லிப்பூ)

    * ஓம் ஜ்ஞான கணபதயே நம: ஜாதீ புஷ்பம் ஸமர்ப்பயாமி (ஜாதிமல்லிப்பூ)

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிவபெருமான் தேர் அச்சு முறிந்து தடை ஏற்பட்டது.
    • ஈசன் தன்னைப் போல் மூன்று கண்களும், சடையும் உடைய தேங்காயை கணபதிக்கு படைத்து அருளினார்.

    வித்யுன்மாலி, தாருகாட்சன், கமலாட்சன் ஆகிய அசுரர்களையும், அவர்களின் கோட்டைகளையும் சிவபெருமான் அழிக்கப் புறப்பட்டார். அப்போது, அவருடைய தேர் அச்சு முறிந்து தடை ஏற்பட்டது.

    விநாயகரை வணங்காமல் சென்றதால் தான் இந்தத் தடை என்பதை உணர்ந்த சிவபெருமான், உடனே பிள்ளையாரை நினைத்து வணங்கினார். மறுகணம் அங்கு தோன்றிய கணபதிக்கு, உகந்த காணிக்கையைத் தருவதாகச் சொன்னார் சிவனார். அப்போது, 'முக்கண்ணனையே தனக்கு காணிக்கையாகத் தர வேண்டும்' என்றார் கணபதி.

    எனவே ஈசன், தன்னைப் போல் மூன்று கண்களும், சடையும் உடைய தேங்காயை கணபதிக்கு படைத்து அருளினார். அன்று முதல், தடைகள் நீங்கிட விநாயகருக்குத் தேங்காய் உடைக்கும் வழக்கம் ஏற்பட்டது.

    • மண்ணில் பிடித்து வைத்த விநாயகரை வழிபட நற்பதவி கிட்டும்.
    • உப்பு விநாயகரை வழிபட்டால் எதிரிகள் விலகுவர்.

    விக்கிரகங்களாக மட்டும்தான் விநாயகரை வழிபட வேண்டும் என்பதில்லை.

    * மண்ணில் பிடித்து வைத்த விநாயகரை வழிபட நற்பதவி கிட்டும்.

    * புற்று மண்ணில் செய்த விநாயகரை வழிபட்டால் லாபம் பெருகும்.

    * வெல்லத்தால் செய்த விநாயகரை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

    * உப்பு விநாயகரை வழிபட்டால் எதிரிகள் விலகுவர்.

    * வெள்ளெருக்கு விநாயகரை வழிபட செல்வத்தை அள்ளிக்கொடுப்பார்.

    * கல் விநாயகரை வழிபட்டால் சகல நலன்களும் கிடைக்கும்.

    * மாவினால் செய்த விநாயகரை வழிபட்டால் அனைத்து காரியங்களிலும் வெற்றி வந்துசேரும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விநாயகரை பிரம்மச்சாரி என்று சொல்வார்கள்.
    • மணக்குள விநாயகர் ஆலயத்தில் சித்தி, புத்தி தேவியருடன் திருமண கோலத்தில் விநாயகர் அருள்புரிகிறார்.

    பொதுவாக விநாயகரை பிரம்மச்சாரி என்று சொல்வார்கள்.அதே நேரம் சித்தி, புத்தி மற்றும் வல்லபை ஆகியோரை விநாயகரின் தேவியராகக் குறிப்பிடுகிறது, விநாயக புராணம்.

    புதுவையில் உள்ள மணக்குள விநாயகர் ஆலயத்தில் சித்தி, புத்தி தேவியருடன் திருமண கோலத்தில் விநாயகர் அருள்புரிகிறார்.இவர்கள் மட்டுமல்லாமல் மோதை, பிரபோதை, கமலை, சுந்தரி, மனோரமை, மல்கலை, கேசினி, காந்தை, சாருகாசை, சுமந்தினை, நந்தினி, காமதை ஆகியோரும் விநாயக ரின் தேவிகளாகத் திகழ்வதாக ஞானநூல்கள் தெரிவிக்கின்றன.

    • சர்வ ரட்சகரான விநாயகர் அண்டத்தின் உள்ளே எங்கும் பூரணமாய் நிறைந்துள்ளார்.
    • ஒவ்வொரு படைப்பும் பூரணத்தை போல இனிமையானதாக கருதி, நாம் இனிய செயல்களை செய்ய வேண்டும்.

    பிள்ளையாருக்கு முதன்முதலில் மோதகம் படைத்தது, வசிஷ்ட முனிவரின் மனைவி அருந்ததி என்று கூறப்படுகிறது.

    சர்வ ரட்சகரான விநாயகர் அண்டத்தின் உள்ளே எங்கும் பூரணமாய் நிறைந்துள்ளார். அருந்ததி அண்டத்தை உணர்த்த, மாவினால் 'செப்பு' என்ற மேல் பகுதியைச் செய்தாள். அண்டத்தின் உள்ளே பூரணமாய் நிறைந்திருக்கும் பிள்ளையாரைக் குறிக்கும் வகையில் இனிப்பான பூரணத்தை, மாவுக்குள் வைத்தாள். அதுவே, மோதகம் என்னும் கொழுக்கட்டை.

    இது தவிர உலகமே மோதகமாகவும், இங்குள்ள ஒவ்வொரு படைப்பும் பூரணத்தைப் போல இனிமையானதாகவும் கருதி, நாம் இனிய செயல்களை செய்ய வேண்டும் என்பதை இறைவன் நமக்கு உணர்த்துகிறார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விநாயகரே முழு முதல் கடவுள் என்பதாலும், அவரே கணங்களின் அதிபதி கொண்டாடப்படுகிறது.
    • விக்கினங்களை அகற்றுவதால் 'விக்னேஸ்வரர்' என்று பெயர்.

    விநாயகரே முழு முதல் கடவுள் என்பதாலும், அவரே கணங்களின் அதிபதி கொண்டாடப்படுகிறது.

    'கணபதி' என்ற சொல்லுக்கு 'தேவகணங்களின் தலைவன்' என்று பொருள். 'க' என்பது ஞானநெறியில் ஆன்மா எழுவதையும், 'ண' என்பது மோட்சம் பெறுவதையும், 'பதி' என்பது ஞான நெறியில் திளைத்து பரம்பொருளை அடைதலையும் குறிக்கும்.

    மேலும் 'மனோவாக்கினை கடந்த தலைவன்' என்றும் இதற்கு பொருள் கொள்ளலாம். 'தனக்கு மேல் தலைவன் இல்லாதவர்' என்பதே விநாயகர் என்ற பெயருக்கு பொருள். விக்கினங்களை அகற்றுவதால் 'விக்னேஸ்வரர்' என்று பெயர். இப்படி விநாயகருக்கு எண்ணற்ற பெயர்கள் உள்ளன.

    • விருதுநகர் ஸ்ரீ சொக்கநாதர் உற்சவம் ஆரம்பம்.
    • பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் தேரோட்டம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆவணி-21 (வெள்ளிக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: திருதியை நண்பகல் 1.47 மணி வரை பிறகு சதுர்த்தி

    நட்சத்திரம்: அஸ்தம் காலை 9.18 மணி வரை பிறகு சித்திரை

    யோகம்: அமிர்த, சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்று சுபமுகூர்த்த தினம். விருதுநகர் ஸ்ரீ சொக்கநாதர் உற்சவம் ஆரம்பம். சுவாமி கைலாச வாகனத்திலும், அம்பாள் சிம்ம வாகனத்திலும் திருவீதியுலா. மதுரை ஸ்ரீ நவநீதிகிருஷ்ண சுவாமி மச்சாவாதாரம். உப்பூர் ஸ்ரீ விநாயகப் பெருமான், பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் தேரோட்டம். கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமிக்கு திருமஞ்சனம். ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. மதுரை ஸ்ரீ சோமசுந்தரம் பெருமான் நாரைக்கு முக்தியருளிய காட்சி. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சனம், புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நன்மை

    ரிஷபம்-சுகம்

    மிதுனம்-வரவு

    கடகம்-கடமை

    சிம்மம்-கவனம்

    கன்னி-முயற்சி

    துலாம்- பயிற்சி

    விருச்சிகம்-விருத்தி

    தனுசு- அனுகூலம்

    மகரம்-பயணம்

    கும்பம்-பரிவு

    மீனம்-பரிசு

    • நெல்லிப்பொடி - சாந்தி உண்டாகும்
    • வில்வப்பொடி - யோகம் அளிக்கும்

    கோனியம்மனுக்கு அபிஷேகம் செய்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும். அதன் விவரம் வருமாறு:-

    சந்தன தைலம்- சுகம் தரும்

    திருமஞ்சனம்- சம்பத்து நல்கும்

    பாசிப்பயறு மாவு- மகிழ்ச்சியாய் வாழலாம்

    அரிசி மாவு - உயர்பதவி அடையலாம்

    நெல்லிப்பொடி - சாந்தி உண்டாகும்

    வில்வப்பொடி - யோகம் அளிக்கும்

    பஞ்சாமிர்தம் - கல்வி அறிவு பெருகும்

    பால் - மனக்கவலை தீரும்

    தயிர் - மனநோய் அகலும்

    தண்ணீர்- சாந்தி உண்டாகும்

    நெய் - தொழில் சிறக்கும்

    தேன் - குரல் இனிமை பெறும்

    வெல்லம் - துக்க நிவர்த்தி அளிக்கும்

    கரும்புச்சாறு - மன அமைதிபெறும்

    இளநீர் - பக்தி பெருகும்

    எலுமிச்சம்பழம் - விதியை வெல்லலாம்

    சாதம் - சகல பாக்கியம் உண்டாகும்

    திருநீறு - துன்பம் நீங்கும்

    சந்தனம் - நிலம் வீடு வாங்கலாம்

    நல்லெண்ணெய் - ஐயம் நீங்கும்

    பழவகை - திருவருள் பெறலாம்

    வாழைப்பழம் - வறுமை ஒழியும்

    கரும்புச் சர்க்கரை - குழந்தைபேறு கிட்டும்

    எள் - சனி பயம் நீங்கும்

    மாம்பழம்- வெற்றியை கொடுக்கும்

    பூ மாலை- உடல் பிணி தீரும்

    பரிவட்டம்- பெருஞ்செல்வம் பெருகும்

    பச்சரிசி- தீராக்கடன் தீரும்

    மஞ்சள் தூள் - விபத்துகள் தவிர்க்கலாம்

    தேங்காய்- பொன்பொருள் சேரும்

    பேரிச்சம்பழம்- கடல் கடந்து செல்லலாம்

    கல்கண்டு- வாகனம் வாங்கலாம்.

    முந்திரி- பிரிந்தவர் ஒன்று சேரலாம்

    ஏலம்- தீமைகள் நீங்கும்

    உலர் திராட்சை- சங்கடங்கள் தீரும்

    எள்ளுமாவு- மரணபயம் நீங்கும்

    எள்ளுருண்டை- அரசு வேலை பெறலாம்

    எள்ளு சாதம் - பகை நீங்கும்

    பன்னீர் - நன்னடத்தை உண்டாகும்

    கும்ப ஜலம்- சாந்தி உண்டாகும்

    • கோனி அம்மனுக்கு வலதுபுறத்தில் தம்பதி சமேதராக நவக்கிரகங்கள் அமைத்துள்ளனர்.
    • பின் பகுதியில் ஆதி கோனியம்மன் பஞ்ச முக விநாயகர் வள்ளி தெய்வானை உடன் சுப்பிரமணியர் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.

    கோனி அம்மனுக்கு வலதுபுறத்தில் தம்பதி சமேதராக நவக்கிரகங்கள் அமைத்துள்ளனர்.

    பின் பகுதியில் ஆதி கோனியம்மன் பஞ்ச முக விநாயகர் வள்ளி தெய்வானை உடன் சுப்பிரமணியர் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.

    வடக்கு வாசலில் சுமார் 1 ஏக்கர் பரப்பளவில் உள்ள தளத்தில் ராஜகோபுரம் அமைந்துள்ளது.

    அம்பிகை சன்னதி எதிரே சிம்மவாகனம் உள்ளது. முன்மண்டபத்தில் சரஸ்வதி, லட்சுமி துர்க்கை ஆகிய தேவியர் உள்ளனர்.

    இங்கு வேண்டிக் கொள்ள திருமணத்தடை நீங்கும் குழந்தைப்பேறு கிட்டும் நோய்கள் நீங்கும் தொழில் விருத்தி அடையும் என்பது நம்பிக்கை.

    கோனியம்மனை வேண்டி தங்கள் வீட்டுப்பிள்ளைக்கு வரன் கிடைக்கப்பெற்றவர்கள் கோவிலிலேயே நிச்சயதார்த்த நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.

    மணமக்கள் வீட்டார் இருவரும் ஒரு கூடையில் உப்பை நிறைத்து அதன் மேலே மஞ்சள் தேங்காய் வெற்றிலை பாக்கு பூ வைக்கின்றனர்.

    கோனியம்மன் சாட்சியாக திருமணத்தை உறுதி செய்கின்றனர்.

    நோய் நீங்கவும் மாங்கல்ய பாக்கியத்திற்கும் வேண்டிகொள்கின்றனர்.

    • போகும் வழியெல்லாம் அம்மனுக்கு சிறப்பு மண்டகபடி நடைபெறும்.
    • சிறப்பு நாதஸ்வரத்துடன் அம்மன் உலா வரும் காட்சி கண்ணுக்கு விருந்தாக அமையும்.

    தெப்ப திருவிழாவின்போது இரவு இந்திர விமான பல்லக்கில் உற்சவமூர்த்தியை புறப்பாடு செய்து,

    ராஜவீதி, ஒக்கிலியர் வீதி, ஐந்து முக்கு, பெரிய கடை வீதி, ஒப்பணக்கார வீதி, வைசியாள் வீதி, சலீவன் வீதி வழியாக,

    அருள்மிகு வேணுகோபால் சுவாமி திருக்கோவிலை அடைந்து அதிகாலை 4 மணியளவில்,

    அங்குள்ள தெப்பக்குளத்தில் தெப்ப திருவிழா நடத்துவர்.

    போகும் வழியெல்லாம் அம்மனுக்கு சிறப்பு மண்டகபடி நடைபெறும்.

    சிறப்பு நாதஸ்வரத்துடன் அம்மன் உலா வரும் காட்சி கண்ணுக்கு விருந்தாக அமையும்.

    தெப்பம் ஆடியபின்னர் தேர்நிலை திடலில் வாணவேடிக்கை நடைபெறும்.

    அதன்பின்பு கோவிலில் சிறப்பு அபிஷேகமும் தரிசனமும் நிகழ்வுறும்.

    மாலையில் கொடியிறக்கம் நடைபெறும். 

    • இக்கோவில் கோயம்புத்தூருக்கு வடக்கில் துடியலூருக்கு செல்லும் வழியில் சங்கனூர் பள்ளத்தருகே இருந்து பாழடைந்தது.
    • மக்கள் இதனை கோனியம்மன் பழைய கோவில் எனக் கூறுகின்றனர்.

    பெயர் பெற்ற கோவன்புத்தூரின் காவல் தெய்வமாக அமைந்த சக்திதான் கோனியம்மன்.

    நமது செந்தமிழ்நாட்டிலே ஓரிடத்தில் பத்து குடிசைகள் சேர்ந்தாற்போல் அமைந்தாலும் அந்த இடத்தில் ஒரு மண்மேடை கட்டி அதன் மீது கூரை வேய்ந்து நடுவில் மண் திட்டில் ஓர் பிம்பத்தை அமைத்து தெய்வமாக தொழுவதும், அரசும்,வேம்பும் சேர்ந்து மரமாக வளர்ந்த நிழலில் கல்நட்டு தெய்வமாக வழிபடுவதும் நம் முன்னோர் வகுத்த வழியாகும்.

    இவ்வாறு தான் காடு திருத்தி மக்கள் வாழும் நிலமாக பண்படுத்தியபோது இருளர் தலைவனான கோவன் தங்கள் குடிசைக்கருகில் வடபாகத்தில் சிறு கோவிலொன்றெடுத்து ஒரு கல் நட்டு தானும் தன் இனத்தார்களும் குலதெய்வமென வழிபட்டு விழாசெய்தும் கொண்டாடினான்.

    இக்கோவில் கோயம்புத்தூருக்கு வடக்கில் துடியலூருக்கு செல்லும் வழியில் சங்கனூர் பள்ளத்தருகே இருந்து பாழடைந்தது.

    மக்கள் இதனை கோனியம்மன் பழைய கோவில் எனக் கூறுகின்றனர்.

    பல்லாண்டுக்குபின் இளங்கோசர் கொங்கு நாட்டினை ஆண்ட காலத்தில் சேரர் படையெடுத்தால் தடுக்க ஒரு மண்கோட்டையையும், மேட்டையும் புதிதாக கோவன் புத்தூரிலே கோசர்கள் கட்டினார்கள்.

    அங்ஙனம் கட்டிய கோட்டைக்கு காப்பு தெய்வமாகவும் தன் பெயர் விளங்கும் வண்ணமும் சிறுகோவிலொன்றெடுத்து அதில் வைத்து வணங்கிய தெய்வத்துக்கு கோனியம்மன் என பெயரிட்டு கோவில் கொள்ள செய்தனர்.

    அக்கோவிலே தற்போது கோவை மாநகரின் நடுவில் விளங்கும் கோனியம்மன் கோவில் ஆகும்.

    • கோனியம்மன் கோவில் கோயம்புத்தூரின் மையப்பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற அம்மன் கோவில் ஆகும்.
    • இக்கோவிலை மையமாகக் கொண்டே கோயம்புத்தூர் நகரம் அமைக்கப்பட்டது.

    கோனியம்மன் கோவில் கோயம்புத்தூரின் மையப்பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற அம்மன் கோவில் ஆகும்.

    இக்கோவிலை மையமாகக் கொண்டே கோயம்புத்தூர் நகரம் அமைக்கப்பட்டது.

    இக்கோவிலின் வரலாறு 13 ஆம் நூற்றாண்டளவில் அமைந்தது. இருளர்களால் 600 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது.

    பழங்குடியினரின் ஆட்சிக்காலத்திற்குப் பின்னர் முக்கியத்துவத்தை இழந்த இக்கோவிலை மைசூர் மன்னர்களில் ஒருவர் சீரமைத்தார்.

    கோவில் நடை திறந்திருக்கும் நேரம்:

    காலை 6.00 மணி முதல் மதியம் 12.30 மணி வரை

    மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை

    ×