என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    • இத்திருக்கோவிலில் அஷ்ட லட்சுமிகளும் அருளை வழங்கும் ஆனந்த ரூபிணியர்களாக காட்சி தருகிறார்கள்.
    • கடலை நோக்கி மகாலட்சுமியும், ஸ்ரீமந் நாராயணனும் திருக்கல்யாண கோலத்தில் எழுந்தருளியுள்ளார்கள்.

    சென்னையில் காமக் கோடி பரமாச்சாரியார் பேரருளோடு, அலைகடல் அன்னைக்கு மிக அற்புதமான ஆலயம் அலைகடல் ஓரம் கட்டப்பட்டுள்ளது.

    இந்தக்கோவில், திருவான்மியூருக்கு அருகிலுள்ள ஓடைக் குப்பம் என்ற இடத்தில் அமைந்துள்ளது.

    இத்திருக்கோவிலில் அஷ்ட லட்சுமிகளும் அருளை வழங்கும் ஆனந்த ரூபிணியர்களாக காட்சி தருகிறார்கள்.

    கடலை நோக்கி மகாலட்சுமியும், ஸ்ரீமந் நாராயணனும் திருக்கல்யாண கோலத்தில் எழுந்தருளியுள்ளார்கள்.

    இவர்களைத் தரிசித்து விட்டு வந்தால், தெற்கே ஆதிலட்சுமி மேற்கில் தானிய லட்சுமி வடக்கில் தைரிய லட்சுமி மூவரையும் தரிசிக்கலாம்.

    மீண்டும் மகாலட்சுமி சந்நிதிக்குள் சென்று இடது கைப்பிடிக்கட்டுகள் வழியாக இரண்டாவது தளத்துக்குச் செல்லலாம்.

    இந்தத் தளத்தில் கிழக்கு நோக்கி கஜலட்சுமி, தெற்கு நோக்கி சந்தான லட்சுமி, மேற்கு நோக்கி விஜய லட்சுமி, வடக்கு நோக்கி வித்யா லட்சுமி காட்சி தருகிறார்கள்.

    அங்கேயிருந்து மூன்றாவது தளத்திற்குச் செல்லலாம். அங்கே கிழக்கே பார்த்தபடி தனலட்சுமியைத் தரிசிக்கலாம்.

    ஒன்றன் மேல் ஒன்றாக மூன்று தளங்கள் இருப்பது இக்கோவிலின் தனிச்சிறப்பு.

    இந்த ஆலயத்தில் சங்க நிதிக்கும், பதும நிதிக்கும் இடம் ஒதுக்கப் பட்டுள்ளது.

    மற்றொரு விசேஷம் இக்கோவிலில் குருவாயூரப்பனுக்கும், ஆஞ்சநேயருக்கும், கணபதிக்கும் தனித் தனியே சந்நதிகள் அமைந்துள்ளன.

    • இத்த லத்தில் ஜகத்குரு, ஸ்ரீ ஆதி சங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட அஷ்டலட்சுமி திருக்கோவில் உள்ளது.
    • இக்கோவிலின் தல விருட்சமான புன்னை மரத்தினடியில் தாயார் அவதாரம் செய்துள்ளார்.

    திருவலம்:-

    சென்னையில் இருந்து 120 கி.மீ தொலைவில் உள்ளது திருவலம் என்ற திருத்தலம்.

    இத்த லத்தில் ஜகத்குரு, ஸ்ரீ ஆதி சங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட அஷ்டலட்சுமி திருக்கோவில் உள்ளது.

    இங்கு அஷ்ட லட்சுமிகளும் இருந்து அருள்பாலிக்கின்றனர்.

    மதுராந்தகம்:-

    சென்னையில் இருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் உள்ள மதுராந்தகத்தில் இருக்கும் ஏரிகாத்தராமர் ஆலயத்தில் ஜனக வல்லித்தாயார் என்ற திருநாமம் கொண்டு பிராட்டியார்' அருள்பாலித்து வருகிறாள்.

    மேலும் அதே மதுராந்தகத்தில் தேரடித் தெருவிற்கு அருகில் ஸ்ரீ தேவி சரணம் என்ற வளைவுடன் கூடிய, சாஸ்த்திர அடிப்படையில் அமைக்கப்பட்ட நூதனமான ஒரு ஸ்ரீதேவி திருக்கோவில் உள்ளது.

    இங்குள்ள தாயாரின் திருநாமம் அஷ்டலட்சுமி சவுந்தர்ய மந்த்ர பீடேஸ்வரி ஸ்ரீதேவி என்பதாகும்.

    திருவாரூர்:-

    திருவாரூரில் ஸ்ரீ பஜூலட்சுமி என்ற ஒரு லட்சுமிக்கு ஒரு ஆலயம் உள்ளது.

    இக்கோவிலின் தல விருட்சமான புன்னை மரத்தினடியில் தாயார் அவதாரம் செய்துள்ளார்.

    எனவே இந்த பஜூலட்சுமிக்கு புன்னைப்பிராட்டி என்றும் ஒரு திருநாமம் வழங்கப்படுகிறது.

    • கர்நாடக மாநிலம், பெங்களூரில் விவேக நகருக்கு அருகில் உள்ள ஈஜிபுரம் எனும் இடத்தில் ஸ்ரீ கோதண்ட ராம சுவாமி திருக்கோவில் ஒன்றுள்ளது.
    • இதில் பலகாலமாக அஷ்ட லட்சுமிகளை 8 கலசங்களில் ஆவாஹனம் செய்து அஷ்ட லட்சுமி பூஜை செய்து வந்தார்கள்.

    பெங்களூர்:-

    கர்நாடக மாநிலம், பெங்களூரில் விவேக நகருக்கு அருகில் உள்ள ஈஜிபுரம் எனும் இடத்தில் ஸ்ரீ கோதண்ட ராம சுவாமி திருக்கோவில் ஒன்றுள்ளது.

    இதில் பலகாலமாக அஷ்ட லட்சுமிகளை 8 கலசங்களில் ஆவாஹனம் செய்து அஷ்ட லட்சுமி பூஜை செய்து வந்தார்கள்.

    இப்போது அங்கு ஸ்ரீ கந்த மரத்தால் (சந்தனமரம்) செய்யப்பட்ட தாருஜம், தாருமயீ எனும் வகை அஷ்ட லட்சுமிகளின் அர்ச்சா மூர்த்தங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாட்டில் உள்ளன.

    இது மிகவும் விசேஷமான மூர்த்தங்களாகும்.

    செஞ்சந்தன மரத்தில் மகாலட்சுமி வடிவத்தை சிற்ப முறைப்படி செய்து பூஜித்தால் லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்பது பெரியோர்கள் வாக்கு.

    • திருப்பதி திருமலையில் ஸ்ரீ விக்னேஸ்வரரின் ஆலயம் ஒன்றுள்ளது.
    • ஸ்ரீ ரங்கம் அம்மா மண்டப வீதி புது அக்ரஹாரத்தில் அஷ்ட லட்சுமி மண்டபம் என்றே ஒரு மண்டபம் உள்ளது.

    திருப்பதி திருமலையில் ஸ்ரீ விக்னேஸ்வரரின் ஆலயம் ஒன்றுள்ளது.

    அதில் அஷ்டலட்சுமிகளான, ஸ்ரீ ஆதிலட்சுமி, ஸ்ரீ வீரலட்சுமி, ஸ்ரீ கஜலட்சுமி, ஸ்ரீ தான்யலட்சுமி, ஸ்ரீ விஜய் லட்சுமி, ஸ்ரீ தீப லட்சுமி, ஸ்ரீ தனலட்சுமி, ஸ்ரீ ஐஸ்வரியலட்சுமி எனும் திருநாமங்களோடு அர்ச்சாவதார மூர்த்திகளாக எழுந்தருளி அருள்பாலிக்கிறார்கள்.

    இம்மூர்த்தங்களை ஜகத்குரு ஸ்ரீ ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்து வைத்தார்.

    ஸ்ரீரங்கம்

    ஸ்ரீ ரங்கம் அம்மா மண்டப வீதி புது அக்ரஹாரத்தில் அஷ்ட லட்சுமி மண்டபம் என்றே ஒரு மண்டபம் உள்ளது.

    அதில் நுழைவுப் பகுதி முன் வாயிலுக்கு ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி வாசல் என்பது பெயராகும்.

    அம்மண்டபத்தினுள் எண் திசைகளுக்கும் ஒவ்வொன்றாக எட்டு லட்சுமி மூர்த்தங்கள் உள்ளன.

    ஒவ்வொன்றிற்கும் இரண்டிரண்டு திருநாமங்களும் உள்ளன.

    அவை முறையே

    1. ஸ்ரீ வித்யலட்சுமி - யசோலட்சுமி, 2. ஸ்ரீ தனலட்சுமி - கஜலட்சுமி, 3. ஸ்ரீ சந்தானலட்சுமி - தான்யலட்சுமி, 4. ஸ்ரீ தைரிய லட்சுமி - சித்தலட்சுமி, 5. ஸ்ரீ சாம்ராஜ்யலட்சுமி - மோட்ச லட்சுமி, 6. ஸ்ரீ சவுர்யலட்சுமி - வீர லட்சுமி, 7. ஸ்ரீ லட்சுமி - ஜயலட்சுமி, 8. ஸ்ரீ பிரசன்னலட்சுமி - சவுபாக்ய லட்சுமி எனும் திருநாமங்களாகும்.

    • இத்தலத்தில் எழுந்தருளி உள்ள எம்பெருமானுக்கு ‘‘நாவாய் முகுந்தன்’’ என்று பெயர்.
    • இந்த தலம் பித்ருக்கள் பூஜை செய்வதற்கான சிறந்த தலமாக உள்ளது.

    கேரள மாநிலம் திருநாவாய் என்ற ஊரில் புகழ் பெற்ற வைணவத் தலம் ஒன்று உள்ளது.

    108 திவ்ய தேசங்களில் அந்த தலமும் ஒன்றாகும்.

    இத்தலத்தில் எழுந்தருளி உள்ள எம்ெபருமானுக்கு ''நாவாய் முகுந்தன்'' என்று பெயர்.

    இந்த தலம் பித்ருக்கள் பூஜை செய்வதற்கான சிறந்த தலமாக உள்ளது.

    துவாபர யுகத்தில் ஸ்ரீகிருஷ்ணர் இங்கு வந்து பஞ்ச பாண்டவர்களுடன் சேர்ந்து தம் முன்னோருக்கு பித்ரு பூஜை செய்தார் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

    இதனால் இத்தலத்தில் பித்ரு பூஜை செய்தால் அளவிடற்கரிய புண்ணியம் கிடைக்கும் என்று கருதப்படுகிறது.

    அமாவாசை நாட்களில் இத்தலத்தின் தலவிருட்சம் அடியில் பித்ருக்களுக்கு அன்னம் வைத்து வழிபடுகிறார்கள்.

    கோவில் அருகில் பிரமாண்ட பந்தல் அமைத்து பித்ரு கடமைகள் செய்ய வசதி செய்துள்ளனர்.

    எனவே ஏதாவது ஒரு அமாவாசை தினத்தன்று திருநாவாய் சென்று கிருஷ்ண பரமாத்மா செய்தது போல பித்ரு பூஜைகள் செய்து பலன் பெறலாம்.

    • யக்ஞம் முடிந்த உடன் ஆறுமுக மங்கலத்தையே கிராமதானமாக பெற்றுக்கொண்டு அங்கேயே தங்கிவிட்டதாக வரலாற்று ஏடு தெரிவிக்கிறது.
    • தொடக்க காலத்தில் இந்த கிராமத்தின் தெற்கு கரையில் பல அந்தணர்கள் ஆயிரத்தெண் விநாயகரை ஸ்தாபித்து வழிபட்டார்கள்.

    கடவுள் ரூபங்களில் முதன் முதலாக வணங்கப்பட்ட விநாயகர் என்றும் தமிழகத்தில் முதலில் எழுப்பப்பட்ட விநயாகர் கோவில் என்றும் சொல்லப்படுவது தூத்துக்குடி எல்லைக்குட்பட்ட ஆறுமுக மங்கலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆயிரத்தெண் விநாயகர் கோவில்.

    கி.மு. 2300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதென்று இந்த ஆலயத்திலன் வரலாறு கூறுகிறது.

    கி.மு. 4ம் நூற்றாண்டில் வாழ்ந்த கோமார வல்லபன் என்ற அரசன் நர்மதை நதிக்கரையில் இருந்து ஆயிரம் வேத பண்டிதர்களை அழைத்து இங்கு மிகப்பெரிய யாகம் ஒன்றை நடத்திட முடிவு செய்தான்.

    ஆனால் அங்கு வந்தவர்களோ 999 பேர்தான் ஒரு பண்டிதர் குறைந்ததால் மன்னனின் மனதில் கவலை ஏற்பட்டது.

    பிரார்த்தனை செய்பவர் போல வடிவம் கொண்டு விநாயகரே பண்டிதராக வந்து யாகத்தை நிறைவுசெய்தார்.

    இதனால் இங்குள்ள விநாயகர் ஆயிரத்தெண் விநாயகப்பெருமான் என்று அழைக்கப்படுகிறது.

    யக்ஞம் முடிந்த உடன் ஆறுமுக மங்கலத்தையே கிராமதானமாக பெற்றுக்கொண்டு அங்கேயே தங்கிவிட்டதாக வரலாற்று ஏடு தெரிவிக்கிறது.

    தொடக்க காலத்தில் இந்த கிராமத்தின் தெற்கு கரையில் பல அந்தணர்கள் ஆயிரத்தெண் விநாயகரை ஸ்தாபித்து வழிபட்டார்கள்.

    பின்னர் காளஹஸ்தீஸ்வரர் கல்யாணி தேவி சன்னதிகளோடு மகா மண்டபம் அமைக்கப்பட்டது.

    தேர், கொடிமரம், 10 நாட்கள் உற்சவங்களோடு திருவிழா காணும் முக்கிய விநாயகர் கோவில்களில் இதுவும் ஒன்றாக கூறப்படுகிறது.

    5 நிலை ராஜகோபுரத்துடன் கூடிய இந்த கோவிலில் ஒரு சமயம் ஆதிசங்கரருக்கு வயிற்று வலி ஏற்பட்டபோது , இங்கே கணேச பஞ்சரத்ன கீர்த்தனம் பாடி பிறகு திருச்செந்தூருக்கு சென்று முருகன் சன்னதியில் சுப்ரமணிய புஜங்கம் பாடியபின் நோய் வலி நீங்கப்பெற்றார் என்பது இங்கே நடந்த முக்கிய செய்தி.

    வாகன விபத்து, பயண பிரச்சினை, வழக்கு இழுபறி ஆகியவை சுமூகமாக முடிய இந்த விநாயகரை வேண்டினால் நடந்துவிடும் என்று நம்பும் பக்தர்கள் அப்படி நடந்த பிறகு 1008,108 தேங்காய்களை உடைத்து 108 தீபங்களும் ஏற்றி வழிபடுகிறார்கள்.

    சித்திரை மாதத்தில் 10 நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும்போது 7ம் திருநாளன்று ஸ்ரீநடராஜ மூர்த்தியுடன் பஞ்சமுக கணபதி திரு வீதி உலா வருவார்.

    நெல்லையில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள ஏரலில் இருந்து அடுத்த 4 கி.மீட்டரில் வடக்கு திசையில் ஆறுமுக மங்கலத்தை அடையலாம்.

    • லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம்.
    • நள்ளிரவு 1.30 மணி வரை 7 மணி நேரம் நடந்தது.

    திருப்பதி:

    திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் நடைபெறும் உற்சவங்களில் கருட சேவை மிகவும் பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் கருட சேவையின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில் குவிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    வழக்கமாக இரவு 7 மணிக்கு தொடங்கும் கருட சேவை 2 அல்லது 3 மணி நேரத்திற்குள் நிறைவடைந்து விடும். இதனால் பக்தர்கள் முழு திருப்தியுடன் கருட சேவை தரிசிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

    இந்த நிலையில் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு திருப்பதியில் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய அனைத்து வசதிகளும் செய்ய வேண்டுமென உத்தரவிட்டிருந்தார். இதற்காக திருப்பதி மலையில் பல்வேறு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் நேற்று இரவு கருட சேவை நடந்தது. இந்த ஆண்டு முன்கூட்டியே அதாவது மாலை 6.30 மணிக்கு தங்க கருட வாகனத்தில் தங்க வைர நகை அலங்காரத்துடன் ஏழுமலையான் எழுந்தருளினார். 4 லட்சம் பக்தர்கள் மாட வீதிகளில் திரண்டு இருந்தனர்.

    பக்தர்கள் பக்தி பரவசத்துடன் விண்ணை முட்டும் அளவுக்கு கோவிந்தா கோவிந்தா என கோஷங்களை எழுப்பினர். முதலில் ஏழுமலையானை தரிசனம் செய்த பக்தர்கள் மாட வீதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு வெளியில் தரிசனத்திற்கு காத்திருந்த பக்தர்களை மாடவீதிகளில் அனுமதிக்கப்பட்டனர்.

    இதனால் பக்தர்கள் அனைவரும் சிரமம் இன்றி கருட சேவையை தரிசனம் செய்தனர். கருட சேவை முதல் முறையாக நள்ளிரவு 1.30 மணி வரை 7 மணி நேரம் நடந்தது.

    தேவஸ்தானத்தின் புதிய முயற்சியால் மனமுருக ஏழுமலையானை தரிசித்ததாக பக்தர்கள் தெரிவித்தனர்.

    திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு 4 லட்சம் இளநீர் பாட்டில்கள், 3 லட்சம் மோர் பாட்டில்கள் மற்றும் 3 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன.

    பிரம்மோற்சவ விழாவின் 6-வது நாளான இன்று காலை ஏழுமலையான் அனுமந்த வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இன்று மாலை தங்க தேரோட்டம் நடக்கிறது.

    திருப்பதியில் நேற்று 82,043 பேர் தரிசனம் செய்தனர். 30,100 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.10 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. இலவச நேரடி தரிசனத்தில் வந்த பக்தர்கள் 20 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    • இன்று சரஸ்வதி ஆவாஹனம்.
    • காஞ்சிபுரம் ஸ்ரீ காமாட்சியம்மன் நவராத்திரி சிறப்பு அலங்காரக் காட்சி.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு புரட்டாசி-23 (புதன்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: சஷ்டி காலை 8.20 மணி வரை பிறகு சப்தமி

    நட்சத்திரம்: மூலம் பின்னிரவு 2.06 மணி வரை பிறகு பூராடம்

    யோகம்: மரண, அமிர்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்று சரஸ்வதி ஆவாஹனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம் மதுரை ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர், காஞ்சீபுரம் ஸ்ரீ காமாட்சியம்மன் நவராத்திரி சிறப்பு அலங்காரக் காட்சி. தல்லாகுளம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் ராஜாங்க சேவை. குலசேகரப்பட்டினம் ஸ்ரீ முத்தாரம்மன் பூச்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் கோலத்துடன் காட்சி. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரிய பெருமாள் யானை வாகனத்தில் திருவீதியுலா. சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம் ஸ்ரீ அம்பாள் வீணை சாரதா அலங்காரத்தில் காட்சியருளல். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை. விருதுநகர் ஸ்ரீ விஸ்வநாதர் அபிஷேகம், அலங்காரம், வழிபாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நற்செய்தி

    ரிஷபம்-போட்டி

    மிதுனம்-சுகம்

    கடகம்-ஆதரவு

    சிம்மம்-அமைதி

    கன்னி-புகழ்

    துலாம்- உதவி

    விருச்சிகம்-உண்மை

    தனுசு- வெற்றி

    மகரம்-தனம்

    கும்பம்-நிறைவு

    மீனம்-சிறப்பு

    • தீமையை அழித்து நன்மை வெற்றி பெறும் நிகழ்வாக தசரா கருதப்படுகிறது.
    • விஜயதசமி என்ற பெயரிலும், தசரா என்ற பெயரிலும் இந்தியா முழுவதும் கொண்டாடப்படும்.

    இந்தியாவின் பிரசித்தி பெற்ற பண்டிகைகளில் ஒன்றாக தசரா திருவிழா பார்க்கப்படுகிறது. தீமையை அழித்து நன்மை வெற்றி பெறும் நிகழ்வாக இந்த தசரா விழா கருதப்படுகிறது.

    விஜயதசமி என்ற பெயரிலும், தசரா என்ற பெயரிலும் இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் இந்த விழா, முக்கியமான பண்டிகைகளில் ஒன்று.

    இந்தியாவின் தெற்கு, கிழக்கு, வடகிழக்கு என்ற பல மாநிலங்களிலும் மகிஷா சூரனை, துர்க்கை தேவி அழித்த தினமாகவும், தர்மத்தை (நீதியை) மீட்டெடுத்த தினமாகவும், தீமையை நன்மை வெற்றிகொண்ட தினமாகவும் 'தசரா' கொண்டாடப்பட்டாலும், இந்த விழா அந்தந்த இடங்களுக்கு ஏற்ற வகையில் வரலாற்று மற்றும் கலாசார நிகழ்வுகளை பதிவு செய்வதாக இருக்கிறது.

    இங்கே இந்தியா முழுமைக்குமாக உள்ள மாநிலங்களில் தசரா கொண்டாட்டங்களைப் பற்றி பார்க்கலாம்.


    தென்னிந்தியா

    கர்நாடகா மாநிலம் மைசூர் நகரில், 'நாடா ஹப்பா' எனப்படும் மாநில விழாவாக 'தசரா' கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின்போது மைசூர் அரண்மனை ஒளியூட்டப்படும்.

    அலங்கரிக்கப்பட்ட யானையின் மீது தங்க மண்டபத்தில் சாமுண்டேஸ்வரி தேவியின் சிலை இடம்பெற்று, அது ஊர்வலமாக கொண்டு வரப்படும்.

    அப்போது அந்த ஊர்வலத்தின் முன்பாக, கலாசார நிகழ்ச்சிகள், இசை, நடனம் மற்றும் கண்காட்சியும் இடம் பெறும். அது அந்த நகரின் வாழ்வியலை உயிர்ப்பித்துக் காட்டுவதாக அமையும்.


    தமிழ்நாட்டின் தென்கோடியில் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கிறது, குலசேகரன்பட்டினம் என்ற ஊர். இங்குள்ள ஞானமூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் கோவிலில் நடைபெறும் தசரா பெருவிழா மிகவும் பிரசித்திப் பெற்ற தாகும். இது ஒரு கிராமிய விழா போன்று நடைபெறுவதுதான், இதன் சிறப்பாக கருதப்படுகிறது.

    10 நாள் கொண்டாட்டமான இந்த விழாவில், கோவிலுக்கு வரும் பக்தர்கள் பலரும் அம்மனுக்கு விரதம் இருந்து மாலை அணிந்து கொள்வார்கள். ஒவ்வொருவரும் தங்களின் நேர்ச்சைக்கு தகுந்தபடி, ஒவ்வொரு வேடம் அணிந்து கோவிலுக்கு வந்து அம்மனை வழிபாடு செய்வார்கள். அதில் தெய்வங்கள், மனிதர்கள், விலங்குகள், அரக்கர்கள் உள்ளிட்ட வேடங்களும் அடங்கியிருக்கும்.

    தென்னிந்தியாவின் சில பகுதிகளில், அறிவு, இசை மற்றும் கலைகளின் தெய்வமான சரஸ்வதி தேவிக்கு, விஜயதசமி அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய நிகழ்வு 'வித்யாரம்பம்'. இந்த நாளில் பிள்ளைகளின் கற்றல் மற்றும் எழுத்துகளை தொடங்குவதை பலரும் செய்கிறார்கள். இதனால் கல்வியில் அவர்கள் சிறந்து விளங்குவார்கள் என்பது நம்பிக்கையாக இருக்கிறது.

    வித்யாரம்பம் சடங்கிற்காக கோவில்கள் மற்றும் கலாசார மையங்களில் மக்கள் கூடுவார்கள். அங்கு பெற்றோர், தங்களின் குழந்தைகளுக்கு பச்சை அரிசி பரப்பிய தட்டில், தங்கள் மொழியின் முதல் எழுத்தை எழுதவைத்து படிப்பை தொடங்கச் செய்வார்கள்.


    வட இந்தியா

    உத்தரபிரதேசம், டெல்லி, இமாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில், தசரா பெருவிழாவானது 'ராமலீலா' என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த கொண்டாட்ட விழாவானது, ராமாயண காவியத்தை நாடகமாக மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் நடைபெறுகின்றன.

    ராவணன், மேகநாதன், கும்பகர்ணன் ஆகியோரின் உருவ பொம்மைகளை எரிப்பதுடன் இந்த விழா நிறைவு பெறுகிறது. 10 தலையுடன் செய்யப்பட்ட பிரமாண்டமான ராவணனின் உருவ பொம்மையின் மீது, பலவிதமான வண்ண பட்டாசுகள் சுற்றி அலங்கரிக்கப்பட்டிருக்கும். அம்பின் நுனியில் தீ பற்ற வைத்து, பொம்மையின் மீது எய்துவார்கள்.

    இதில் ராவணனின் உருவ பொம்மை வெடித்துச் சிதறி, வானில் வர்ணஜாலத்தைக் காட்டும். தீமையில் இருந்து கிடைக்கும் விடுதலை பெருநாளாக வடஇந்தியாவில் தசரா கொண்டாடப்படுகிறது.


    கிழக்கு இந்தியா

    மேற்கு வங்காளம், அசாம் மற்றும் ஒடிசாவில், 10 நாட்கள் நடைபெறும் துர்க்கா பூஜையின் நிறைவு நாளாக 'தசரா' பார்க்கப்படுகிறது. துர்க்கா தேவியின் பிரமாண்டமான சிலைகள், அலங்கரிக்கப்பட்ட பந்தல்களில் வைத்து 10 நாட்களும் வணங்கப்படும்.

    10-வது நாளில் இந்த சிலைகள் அங்குள்ள ஆறுகள் அல்லது பிற நீர்நிலைகளில் கரைக்கப்படுகின்றன. இந்த விழாவில் பாடுதல், நடனம் ஆகியவையும் அடங்கும்.


    மேற்கு இந்தியா

    மகாராஷ்டிராவில் நடைபெறும் தசரா விழாவானது, செழிப்புக்கான தெய்வத்தின் ஆசீர்வாதமாக பார்க்கப்படுகிறது. மக்கள் நல்லெண்ணத்தின் அடையாளமாக, தங்கத்தை அடையாளப்படுத்தும் 'ஆப்டா' இலைகளை தங்களுக்குள் பரிமாறிக்கொள்வார்கள்.

    குஜராத்தில் நடைபெறும் தசரா பெருவிழா, உற்சாகத்தின் உச்சகட்டமாக அமையும். இந்த விழாவில் கர்பா, தாண்டியா போன்ற நடனங்கள் வண்ணமயமான உடைகளுடன், துடிப்பான ஆடலும் அமைந்திருக்கும்.


    வடகிழக்கு இந்தியா

    திரிபுரா போன்ற மாநிலங்களில், துர்க்கா பூஜையின் முடிவைக் குறிக்கும் வகையில் ஊர்வலங்கள் மற்றும் கலாசார நிகழ்வுகளுடன் தசரா கொண்டாடப்படுகிறது. துர்க்கை சிலைகள் கரைக்கும் நிகழ்ச்சி மிகுந்த பக்தியுடனும், உற்சாகத்துடனும் நடத்தப்படுகிறது.

    • கல்விக்கான தெய்வமாக சரஸ்வதி வணங்கப்படுகிறார்.
    • புத்திக்கூர்மை, சொல் வன்மை, கலைகளில் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    இந்து சமயத்தின் கல்விக்கான தெய்வமாக சரஸ்வதி வணங்கப்படுகிறார். முப்பெரும் தேவியர் என்று அழைக்கப்படுபவர்களில் ஒருவரான சரஸ்வதி, கல்வியின் அதிபதியாக கருதப்படுகிறார். இந்த தேவியை வணங்குபவர்களுக்கு, கல்வியில் நாட்டம் உண்டாகும்.

    புத்திக்கூர்மை, சொல் வன்மை, கலைகளில் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. வருகிற 11-10-2024 (வெள்ளிக்கிழமை) சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட உள்ள நிலையில், கல்வியில் சிறந்து விளங்க வழிபட வேண்டிய சில ஆலயங்கள் உங்களுக்காக...


    பிரம்ம வித்யாம்பிகை

    திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில், 'பிரம்ம வித்யாம்பிகை' என்ற பெயரில் அம்பாள் வீற்றிருக்கிறார். இந்த அன்னையை, சரஸ்வதியின் வடிவமாகவே கருதுகிறார்கள்.

    நவக்கிரகங்களில் மனிதர்களது புத்தியை இயக்கும் முக்கிய கிரகம், புதன். ஜாதக ரீதியாக புதன் அமைந்திருப்பதைப் பொறுத்தே கல்வி, ஞாபக சக்தி மற்றும் கற்பனை வளம் ஆகியவை தீர்மானிக்கப்படுகின்றன.

    திருவெண்காடு தலத்தில் புதன் பகவானுக்கு தனி சன்னிதி உள்ளது. எனவே இந்த கோவிலில் வழிபடுவது, கல்வி வளம் அளிப்பதுடன் புத்தியையும் வலுவாக மாற்றுகிறது. சீர்காழியில் இருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த ஆலயம்.


    ஓலைச் சுவடியுடன் சரஸ்வதி

    திருச்சியின் புறநகர்ப்பகுதியில் உத்தமர்கோவில் என்ற கிராமம் இருக்கிறது. இங்கு பிச்சாண்டவர் கோவில் அமைந்துள்ளது. சிவபெருமான், பிச்சாடனராக வந்து தோஷம் நீங்கப்பெற்ற இடம் என்பதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது.

    பிரம்மனுக்கு பூலோகத்தில் கோவில்கள் இல்லை என்பது பலரும் அறிந்த விஷயம்தான். அதே நேரம் தனி சன்னிதிகளில் பிரம்மன் வீற்றிருக்கும் ஆலயங்கள் பல உள்ளன. அப்படி ஒரு ஆலயம்தான், பிச்சாண்டவர் கோவில்.

    பூவுலகிலேயே தங்கியிருக்க வேண்டும் என்ற பிரம்மனின் ஆசையை, இத்தல இறைவன் நிறைவேற்றியதாக சொல்லப்படுகிறது. இங்கு பிரம்மா, சரஸ்வதிக்கு சன்னிதிகள் உள்ளன.

    இத்தலத்தில் `ஞான சரஸ்வதி' என்ற பெயரில் வணங்கப்படும் சரஸ்வதியின் கையில் வீணை இல்லை. ஓலைச் சுவடியும், ஜெப மாலையும் மட்டுமே உள்ளன.


    வீணை இல்லாத சரஸ்வதி

    திருமறைக்காடு என்னும் வேதாரண்யத்தில் உள்ளது வேதாரண்யேஸ்வரர் திருக்கோவில். இத்தல இறைவனை, நான்கு வேதங்களும் வணங்கியதாக ஐதீகம். இவ்வாலய அம்பிகையின் திரு நாமம், 'யாழைப் பழித்த மொழியம்மை' என்பதாகும்.

    இவ்வாலய பிரகாரத்தில் பிரமாண்ட தோற்றத்தில் சரஸ்வதி வீற்றிருக்கிறார். இந்த சரஸ்வதியின் கையில் வீணை இல்லை. சுவடியை மட்டும் கையில் ஏந்தியிருக்கிறார். இவ்வாலய அம்மனின் குரல், யாழை விட மிகவும் இனிமையானது என்பதால், இங்கே சரஸ்வதி வீணை இன்றி இருப்பதாக சொல்லப்படுகிறது.

    இவ்வாலயத்திலும் கல்வி கேள்விகளில், கலைகளில் வெற்றி பெற நினைப்பவர்கள் வழிபாடு செய்யலாம். திருத்துறைப்பூண்டியில் இருந்து 35 கி.மீ. தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது.


    ஹயக்ரீவரும்.. சரஸ்வதியும்..

    திண்டுக்கல்லில் இருந்து வேடசந்தூர் செல்லும் சாலையில் சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, தாடிக்கொம்பு திருத்தலம். இங்கு சவுந்தரராஜப் பெருமாள் அருள்பாலிக்கிறார்.

    மண்டூக மகரிஷி தனது சாபம் அகல தவம் செய்த திருத்தலம் இதுவாகும். இங்கே கல்வி அருளும் தெய்வங்களான ஹயக்ரீவர், சரஸ்வதி ஆகியோருக்குத் தனித்தனி சன்னிதிகள் இருக்கின்றன.

    திருவோண நட்சத்திரத்தில் ஹயக்ரீவருக்கு தேன் அபிஷேகம் செய்தும், தேங்காய், நாட்டுச் சர்க்கரை, நெய் கலந்த நைவேத்தியத்தை படைத்தும், ஏலக்காய் மாலை அணிவித்தும் வழிபடுவது, சிறப்பான பலனைத் தரும். சரஸ்வதி பூஜையன்று இத்தல சரஸ்வதி தேவிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    • 10-ந்தேதி துர்க்காஷ்டமி.
    • 12-ந்தேதி குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் சூரசம்கார பெருவிழா.

    3-ந்தேதி (செவ்வாய்)

    * சஷ்டி விரதம்.

    * திருப்பதி ஏழுமலையான் மோகினி அலங்காரம்.

    * கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசப் பெருமாள் வெள்ளி சேஷ வாகனத்தில் பவனி.

    * குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் பவனி.

    * சமநோக்கு நாள்.

    9-ந்தேதி (புதன்)

    * திருப்பதி ஏழுமலையான் அனுமன் வாகனத்தில் பவனி.

    * திருவில்லிபுத்தூர் பெரிய பெருமாள், உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் யானை வாகனத்தில் திருவீதி உலா.

    * சிருங்கேரி சாரதாம்பாள் ராஜராஜேஸ்வரி அலங்காரம்.

    * கீழ்நோக்கு நாள்.

    10-ந்தேதி (வியாழன்)

    * துர்க்காஷ்டமி.

    * மதுரை பிரசன்ள வேங்கடேசப் பெருமாள் சேஷ வாகனத்தில் பவனி.

    * திருவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் கண்ணாடி சப்பரத்தில் உலா.

    * மதுரை மீனாட்சி அம்மன் கொலு மண்டபத்தில் மகிசாசூரமர்த் தினி அலங்காரம்.

    * கீழ்நோக்கு நாள்.

    11-ந்தேதி (வெள்ளி)

    * சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, மகாநவமி.

    * மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் வெண்ணெய் தாழி சேவை.

    * குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் அன்ன வாகனத்தில் கலைமகள் கோலத்துடன் காட்சி.

    * மதுரை மீனாட்சி அம்மன் கொலுமண்டபத்தில் சிவபூஜை.

    * மேல்நோக்கு நாள்.

    12-ந்தேதி (சனி)

    * விஜயதசமி.

    * திருப்பதி ஏழுமலையான் பல்லக்கில் உற்சவம்.

    * குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் சூரசம்கார பெருவிழா.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் மாடவீதி உலா.

    * மேல்நோக்கு நாள்,

    13-ந்தேதி (ஞாயிறு)

    * சர்வ ஏகாதசி.

    * கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசப் பெருமாள் கஜலட்சுமி வாகனத்தில் பவனி.

    * திருவரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சனம்.

    * திருவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.

    * மேல்நோக்கு நாள்.

    14-ந்தேதி (திங்கள்)

    * வைஷ்ணவ ஏகாதசி.

    * திருவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் தீர்த்தவாரி.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

    * திருத்தணி முருகப்பெருமான் பால் அபிஷேகம்.

    * மேல்நோக்கு நாள்.

    • இன்று சஷ்டி விரதம்.
    • திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் மோகினி அலங்காரம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு புரட்டாசி-22 (செவ்வாய்க்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: பஞ்சமி காலை 8.06 மணி வரை பிறகு சஷ்டி

    நட்சத்திரம்: கேட்டை நள்ளிரவு 1.35 மணி வரை பிறகு மூலம்

    யோகம்: சித்த, அமிர்தயோகம்

    ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்று சஷ்டி விரதம். சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். குலசேகரப் பட்டினம் ஸ்ரீ முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் மகிஷாசுரமர்த்தினி திருக்கோலத்துடன் காட்சி. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் மோகினி அலங்காரம். கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வேங்கடேசப் பெருமாள் வெள்ளி சேஷ வாகனத்தில் பவனி. சிருங்கேரி ஸ்ரீ சாரதாபீடம் ஸ்ரீ அம்பாள் மோகினி அலங்கார தரிசனம். திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீஸ்வரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு சம்கார அர்ச்சனை. திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகர் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதி யம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருச்செங்காட் டங்குடி ஸ்ரீ உத்திரபதீஸ்வரர் அபிஷேகம், அலங்காரம், வழிபாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பக்தி

    ரிஷபம்-நன்மை

    மிதுனம்-சிந்தனை

    கடகம்-பரிசு

    சிம்மம்-உற்சாகம்

    கன்னி-பணிவு

    துலாம்- வெற்றி

    விருச்சிகம்-உயர்வு

    தனுசு- லாபம்

    மகரம்-உதவி

    கும்பம்-நற்சொல்

    மீனம்-புகழ்

    ×