என் மலர்
ஆன்மிகம்
- வெற்றிலை மாலை சாற்றி வழிபட்டால் எதிர்பட்ட துன்பங்கள் தூர விலகும்.
- திருமாலுக்கு மிகவும் பிடித்தது துளசி.

வெற்றிலை:
ராவணனால் சிறைவைக்கப்பட்டிருந்த சீதா, ஒரு கட்டத்தில் தன் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்தார். அப்போது தான் ராமபிரானால் அனுப்பப்பட்ட அனுமன். இலங்கை வந்து சேர்ந்தார். அவர் உச்சரித்த 'ராமராம் என்ற நாமம் கேட்டு தன் முடிவை மாற்றிக்கொண்டார் சீதா தேவி.
அதோடு தன்னை சந்தித்து ராமரின் கணையாழியை கொடுத்த அனுமனை, அங்கிருந்த வெற்றிலைக் கொடியில் இருந்து ஒரு வெற்றிலையைப் பறித்து தலையில் போட்டு "சிரஞ்சீவியாக இரு" என்று ஆசிர்வதித்தார்.

இதன் காரணமாகத்தான் அனுமனுக்கு வெற்றிலை மாலை அணிவிக்கும் பழக்கம் வந்தது. அனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபட்டால் எதிர்பட்ட துன்பங்கள் தூர விலகும்.

வாழைப்பழம்:
அனுமனுக்கு வாழைப்பழத்திலும் மாலை கோர்த்து அணிவிப்பார்கள். வானரங்களுக்கு (குரங்கு) வாழைப்பழத்தின் மீது அலாதி பிரியம். எனவே வானரமாக இருந்த அனுமனுக்கும் வாழைப்பழ மாலை அணி விக்கிறார்கள்.

துளசி:
திருமாலுக்கு மிகவும் பிடித்தது துளசி. திருமாலின் அவதாரம் தான் ராமர். தனது பக்தனுக்கு செலுத்தும் மரியாதை தனக்கு செலுத்தும் மரியாதை என்று கூறியவர், ராமபிரான், எனவே அனுமனுக்கும் துளசி மாலை சாற்றுவதை பக்தர்கள் வழக்கமாக வைத்துள்ளனர்.

உளுந்து வடை:
ராவண யுத்தத்தில் வீரம் காட்டி நின்ற அனுமன், கொழுத்த அசுரர்களை வடை தட்டுவது போல் தட்டி துவம்சம் செய்தார். அதனால் கொழுப்பு சத்துக் கொண்ட உளுந்தில் வடை செய்து அவருக்கு மாலையாக அணிவிக்கிறார்கள். இந்த மாலையை சூட்டுவதால் தீமையில் இருந்து அனுமன் நம்மை காப்பார் என்பது நம்பிக்கை.
- 48 கிராம மக்களுக்கும் குடும்பக் கடவுளாக உள்ளார்.
- எண்ணற்ற நோய்களை தீர்க்கும் மருத்துவக் கோவிலாகவும், இந்த ஆலயம் திகழ்கிறது.
மதுரை மாவட்டத்தில் சோழவந்தான் என்ற இடத்தில் வைகை ஆற்றின் வடகரையில் அமைந்திருக்கிறது, ஜெனகை மாரியம்மன் திருக்கோவில். ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம் இருக்கும் இடத்தை இதற்கு முன் காலத்தில் 'ஜெனகாயம்பதி', 'சதுர்வேதிமங்கலம்', 'சோழாந்தக சதுர்வேதி மங்கலம்', 'ஜெனநாத சதுர்வேதி மங்கலம்' என்று அழைத்ததாக கோவில் கல்வெட்டுக் குறிப்புகள் கூறுகிறது.
இந்த ஆலயத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் ஜெனகை மாரியம்மன், சோழவந்தான் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 48 கிராம மக்களுக்கும் குடும்பக் கடவுளாக உள்ளார்.

தல வரலாறு
ஜமதக்னி முனிவரின் மனைவி ரேணுகாதேவி. இவர் தினமும் கணவரின் பூஜைக்கு கமண்டல நதியில் இருந்து நீர் எடுத்து வருவது வழக்கம். ஒரு நாள் அப்படி நதியில் நீர் எடுத்துக் கொண்டிருந்தபோது, நதி நீரில் தேவலோக கந்தர்வன் ஒருவரின் பிம்மம் விழுந்தது. அந்த பிம்பத்தின் அழகில் மயங்கிய ரேணுகாதேவி, அந்த நிமிடத்தில் மனதால் பதிவிரதை தன்மையை இழந்தார்.
அதோடு அவர் நீர் எடுக்க கொண்டு வந்த மண்குடமும் உடைந்தது. இதை தன் ஞானத்தால் அறிந்த ஜமதக்னி முனிவர், தன் மகன் பரசுராமரை அழைத்து தாயின் தலையை வெட்டும்படி உத்தரவிட்டார். மறு கேள்வி இன்றி பரசுராமரும் தன்னுடைய தாயின் தலையை கொய்தார்.
உடனே ஜமதக்னி முனிவர், "உனக்கு வேண்டிய வரத்தைக் கேள்" என்று கேட்டார். அப்போது பரசுராமர், "என் தாயின் உயிரை மீண்டும் தர வேண்டும்" என்று கேட்டார்.
அதன்படி ஜமதக்னி முனிவர், தன்னுடைய கமண்டலத்தில் இருந்து நீரை எடுத்து மந்திரம் ஓதி, ரேணுகா தேவியின் மீது தெளித்து அவரை உயிர்ப்பித்தார்.
ஆனால் அந்த உயிர், ஆக்ரோஷம் கொண்டு பெண்ணாக அவரை மாற்றியது. இந்த ஆக்ரோஷத்தைப் அடக்கும் பொருட்டு, இத்தலத்தில் மாரியம்மன் எழுந்தருளியதாக தல வரலாறு கூறுகிறது.
இதை மெய்ப்பிக்கும் வகையில் இந்த ஆலயத்தின் கருவறையில் இரண்டு அம்மன்கள் இருப்பதைக் காண முடியும். கருவறையில் அமர்ந்த நிலையில் சாந்தமான ஜெனகை மாரியம்மன் வீற்றிருக்கிறார். அவருக்கு பின்புறம் சந்தனமாரி என்ற பெயரில் நின்ற நிலையில் ஆக்ரோஷமான ரேணுகாதேவி காட்சி தருகிறார்.
இந்த ஊர், ராமாயணத்தில் வரும் ஜனகர் மகளான ஜானகியை போற்றும் வகையில் 'ஜெனகபுரம்' என்றும் முன்பு அழைக்கப்பட்டிருக்கிறது.
இதன் காரணமாக இங்குள்ள கோவிலில் அமர்ந்த மாரியம்மனுக்கு 'ஜெனகை மாரியம்மன்' எனப் பெயர் சூட்டப்பட்டது. இக்கோவில் தல விருட்சமாக வேப்பமரம் மற்றும் அரச மரம் ஆகிய இரண்டு மரங்கள் உள்ளன.
எண்ணற்ற நோய்களை தீர்க்கும் மருத்துவக் கோவிலாகவும், இந்த ஆலயம் திகழ்கிறது. அம்மை நோய் கண்டவர்கள் இத்தலத்தில் உள்ள கிணற்றில் குளித்து விட்டு ஈரத் துணியோடு வந்து அம்மனுக்கு அர்ச்சனை செய்து மனமுருகி வேண்டுகிறார்கள். அப்போது அர்ச்சகர் தரும் அம்பாள் தீர்த்தத்தை வாங்கிக் குடிக்க வேண்டும்.
இந்த தீர்த்தமானது, மஞ்சள், வேப்பிலை மற்றும் வேறு சில பொருட்களும் கலந்த மருத்துவ குணமும், அம்பாள் கருணையும் கலந்ததாகும். பெண் பக்தர்கள் குழந்தை வரம் வேண்டி, இந்த கோவிலில் தொட்டில் கட்டி பூஜை செய்வது வழக்கம்.
வெள்ளிக்கிழமை மட்டும் அம்மன் சந்தன காப்பில் அருள் வழங்குவார். இந்த ஆலயத்தில் நவராத்திரி மற்றும் தீபாவளி விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
விஜயதசமி அன்று வைகை ஆற்றில் நடக்கும் அம்பு போடும் திருவிழாவின் முடிவில், ஒவ்வொரு ஆண்டும் மழைத் தூறல் விழுவது அம்பாளின் அருள் மழையே என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
ஆண்டு தோறும் வைகாசி மாதம் 17 நாட்கள் பிரம்மோற்சவ திருவிழா நடைபெறும். திருவிழாவின் இறுதி நாளன்று ஜெனகை அம்மன் தேரோட்டம் நடக்கிறது.

வைகாசி திருவிழாவை முன்னிட்டு பொங்கல் படையல், அக்னி சட்டி எடுத்தல், பூக்குழியில் இறங்குதல் போன்ற நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்துகிறார்கள்.
இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையும், மாலையில் 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
மதுரையில் இருந்து 21 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில்.
- திரிவிக்ரமனாக உலகைத் தன் திருவடியில் அளந்த உத்தமனானவர் திருமால்.
- நாடெல்லாம் எந்தவிதத் தீங்கும் நிகழாமல் நல்ல மழை பெய்யும்.
திருப்பாவை
பாடல்:
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்கு, சாற்றி நீராடினால்,
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரிபெய்து
ஓங்கு பெருஞ்செந்நெ லூடு கயல்உகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப,
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்!
விளக்கம்:
மாபலி மன்னனிடம் வாமனனாய் மூன்றடி மண் கேட்டு, திரிவிக்ரமனாக உலகைத் தன் திருவடியில் அளந்த உத்தமனானவர் திருமால். அவரின் திருநாமங்களைப் பாடியபடியே பாவை நோன்பு நோற்று நாம் நீராடினால், நாடெல்லாம் எந்தவிதத் தீங்கும் நிகழாமல் நல்ல மழை பெய்யும். அதனால் நிலவளம், நீர்வளம் பெருகி, ஒங்கி வளரும் செந்நெல் வயல்களுக்கிடையே கயல் மீன்கள் குதித்து விளையாடும். குவளை மலர்களில் அழகிய வண்டுகள் உறங்கும். மடியைப் பற்றி இழுத்தவுடன் வற்றாத பால் செல்வத்தை தன்னுள்ளே கொண்டுள்ள வள்ளல் பெரும் பசுக்கள் பாற்குடங்களை நிரப்பும். ஆக அழிவற்ற நிலைத்த செல்வம் நிறைந்து விளங்கும்.
திருவெம்பாவை
பாடல்:
முத்தென்ன வெண்நகையாய்! முன்வந் தெதிர்எழுந்தென்
அந்தன் ஆனந்தன் அமுதன்என் றள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர்! ஈசன் பழவடியீர்! பாங்குடையீர்;
புத்தடியோம் புன்மைதீர்த் தாட்கொண்டாற்
பொல்லாதோ?
எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ?
சித்தம் அழகியார் பாடாரோ? நஞ்சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்!
விளக்கம்:
(தோழிகள்) "நம் சிவபெருமானைப் பற்றி இதற்கு முன்பெல்லாம் எங்கள் முன்பு வந்து, 'கடவுள், ஆனந்தமயமானவன், அமுதமானவன்' என்று வாயால் புகழ்ந்து, இனிக்கப் பேசிய முத்துப் போன்ற வெண்ணகையுடைய பெண்ணே! இப்போது உன் வீட்டின் வாசல் கதவைத் திறப்பாய்!". (உறக்கத்தில் இருக்கும் பெண்) "முன்பே இறைவன் மேல் பற்றும் பழக்கமும் வைத்த பழமையான அடியவர்கள் நீங்கள்! புதிய அடியவளான எனது தவறைப் பொறுக்க மாட்டீர்களோ?". (தோழிகள்) "பெண்ணே! நீ சிவபெருமான் மீது கொண்ட அன்பை நாங்கள் அறிய மாட்டோமா? அவனைப் போற்றி நாமும் பாடலாம்' என்றே அழைக்கின்றோம்; எழுந்திரு!"
- இன்று சங்கடஹர சதுர்த்தி.
- மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சனம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு மார்கழி-3 (புதன்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: திருதியை நண்பகல் 12.04 மணி வரை பிறகு சதுர்த்தி
நட்சத்திரம்: பூரம் நாளை விடியற்காலை 4.09 மணி வரை பிறகு ஆயில்யம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று சங்கடஹர சதுர்த்தி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சனம். பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர், திருநாரையூர் ஸ்ரீ பொள்ளாப் பிள்ளையார், திருவலஞ்சுழி ஸ்ரீ சுவேத விநாயகர், திருச்சி உச்சிப்பிள்ளையார் ஸ்ரீ மாணிக்க விநாயகர், மதுரை ஸ்ரீ முக்குறுணி பிள்ளையார், உப்பூர் ஸ்ரீ வெயிலுகந்த விநாயகப் பெருமான் கோவில்களில் சிறப்பு ஹோமம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சனம். விருதுநகர் ஸ்ரீ விஸ்வநாதருக்கு அபிஷேகம். ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி புறப்பாடு. திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்க வாசகருக்கு அபிஷேகம். திருத்தணி முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-வெற்றி
ரிஷபம்-பாராட்டு
மிதுனம்-ஆர்வம்
கடகம்-உழைப்பு
சிம்மம்-தேர்ச்சி
கன்னி-நன்மை
துலாம்- உதவி
விருச்சிகம்-ஆக்கம்
தனுசு- நலம்
மகரம்-ஆதாயம்
கும்பம்-கவனம்
மீனம்-இன்பம்
- மூல விக்கிரகத்தில் ரத்தினங்கள் பதித்து, தங்க அங்கி சாத்தப்பட்டுள்ளது.
- மூல விக்கிரகத்தின் கீழே அபிஷேக விக்கிரம் உள்ளது. அம்மனின் கருவறை ‘ஸ்ரீகோவில்’ என்று அழைக்கப்படுகிறது.
ஆற்றுகால் பகவதி அம்மன் கோவிலில் அம்மன் குடி கொண்டிருக்கும் கருவறை அருகே இடது புறம் மாடன் தம்புரானுக்கு தனி கோவில் உள்ளது.
அதற்கு அடுத்த சுற்றில் பின்புறம் கணபதிக்கும், சிவனுக்கும் தனி சன்னதி அமைந்துள்ளது.
இது தவிர கோவிலின் உட்பகுதியில் நாகரம்மனுக்கும் தனி கோவில் உள்ளது.
இதில் பெண்கள் மஞ்சள் தூவி வழிபட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
ஆலய அமைப்பு
இந்த ஆலயம் முழுவதும் செம்புத் தகடால் வேயப்பட்டது. கோவிலில் ஸ்ரீசக்கரத்தை, ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார்.
கோவில் தூண்கள் மற்றும் சுவரில் மகிஷாசுரமர்த்தினி, காளி, ராஜராஜேஸ்வரி, சிவ-பார்வதியின் சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன.
கோபுரத்தின் ஒரு பகுதியில் கண்ணகியின் வரலாற்றுச் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன.
ஆலய கருவறையில் இரண்டு அம்மன் சிலைகள் உள்ளன.
மூல விக்கிரகத்தில் ரத்தினங்கள் பதித்து, தங்க அங்கி சாத்தப்பட்டுள்ளது.
மூல விக்கிரகத்தின் கீழே அபிஷேக விக்கிரம் உள்ளது. அம்மனின் கருவறை 'ஸ்ரீகோவில்' என்று அழைக்கப்படுகிறது.
- நாலம்பலத்தின் முன்புறம் இருபக்கங்களிலும் ராஜேஸ்வரி ஸ்ரீபார்வதியோடு அமர்ந்திருக்கும் பரமசிவன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது.
- தெற்கு கோபுரத்தில் மகேஷ்வரியின் சிற்பம் காட்சி தருகிறது.
ஆற்றுகால் பகவதி கோவிலுக்கு நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருகிறார்கள்.
இக்கோவிலில் குடிகொண்டிருக்கும் ஆற்றுக்கால் தேவியை வழிபடும் பக்தர்களுக்கு கோவிலில் அமைந்துள்ள ஓவிய சிற்பங்கள் அம்மனின் அவதாரங்களை விளக்குவதாக அமைந்துள்ளது.
இவை தமிழக மற்றும் கேரள சிற்ப கலையின் மகத்துவங்களை உள்ளடக்கியதாக உள்ளது.
இக்கோவிலில் உள்ள கோபுரங்களில் இச்சிற்பங்கள் செதுக்கப்பட்டு உள்ளன.
கோபுர முகப்பில் மகிஷாசுரமர்த்தினியின் சிற்பம் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது.
முக்கிய மண்டபத்தின் மேல் அசுரனை அளித்த தேவியின் வடிவம் வடிக்கப்பட்டு உள்ளது.
ராஜகோபுரத்தின் உள்பகுதியில் காளி தேவியின் வடிவங்கள் செதுக்கப்பட்டு உள்ளன.
இதுபோல தென்கோபுரத்தின் உள்பக்கம் வீரபத்திரர் வடிவங்கள் செதுக்கப்பட்டு உள்ளன.
நாலம்பலத்தின் முன்புறம் இருபக்கங்களிலும் ராஜேஸ்வரி ஸ்ரீபார்வதியோடு அமர்ந்திருக்கும் பரமசிவன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது.
தெற்கு கோபுரத்தில் மகேஷ்வரியின் சிற்பம் காட்சி தருகிறது.
இவை ஆலயத்தின் சிற்பக்கலைக்கு மட்டுமின்றி அம்மனின் சிறப்புகள் நம் கண் முன்பு வந்து போகவும், நமக்கு பக்தி பரவசத்தை ஏற்பத்துவதாகவும் உள்ளது.
- அதோடு நல்ல வரன் அமையும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.
- இதற்காக கோவிலுக்குச் செல்லும் பெண்கள் அம்மனுக்கு புடவை காணிக்கை செலுத்துகிறார்கள்.
ஆற்றுகால் பகவதி அம்மன் கோவிலுக்கு செல்லும் இளம்பெண்கள் பலரும் புடவை காணிக்கை செலுத்துவது வழக்கம்.
புடவை காணிக்கை செலுத்தினால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.
அதோடு நல்ல வரன் அமையும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.
இதற்காக கோவிலுக்குச் செல்லும் பெண்கள் அம்மனுக்கு புடவை காணிக்கை செலுத்துகிறார்கள்.
பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் புடவைகள் அம்மனுக்கு அணிவிக்கப்படும்.
ஏராளமான புடவைகள் காணிக்கையாக வருவதால் தினமும் அம்மனுக்கு குறைந்தது 6 முறையாவது புடவை மாற்றப்படுகிறது.
- இது போல சித்திரை விஷேச தினத்தன்றும் ஆற்றுகால் கோவிலுக்குச் சென்று வழிபடுவது கூடுதல் சிறப்பாகும்.
- இக்கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்பட்டாலும், கோவிலுக்கு ஆண்களும் செல்வதுண்டு.
ஆற்றுகால் பகவதி அம்மன் கோவிலில் தினமும் அதிகாலை முதல் இரவு வரை வழிபாடுகள் நடக்கும்.
பக்தர்களும் கோவிலுக்கு செல்வார்கள்.
இருந்தாலும் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் கோவிலுக்குச் சென்று அம்மனை வழிபடுவது கூடுதல் விசேஷமாகும்.
இந்த நாட்களில் கோவிலில் பெண்கள் கூட்டம் அலைமோதும்.
இது போல சித்திரை விஷேச தினத்தன்றும் ஆற்றுகால் கோவிலுக்குச் சென்று வழிபடுவது கூடுதல் சிறப்பாகும்.
இக்கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்பட்டாலும், கோவிலுக்கு ஆண்களும் செல்வதுண்டு.
பெண்கள் குடும்பத்துடன் சென்று வழிபட்டால் சுபிட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
- இது போல ஸ்ரீகண்டேசுவரர் மகாதேவர் கோவிலும் இதன் அருகிலேயே உள்ளது.
- ஆற்றுகால் தேவி கோவிலில் அம்மனுக்கு அபிஷேகம் செய்த குங்குமம், சந்தனம், விபூதி முதலியன பிரசாதமாக வழங்கப்படுகிறது.
ஆற்றுகால் பகவதி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஆற்றுகால் பகவதி அம்மனை தரிசித்து விட்டு திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீபத்மநாப சுவாமி கோவிலுக்கு செல்லலாம்.
இக்கோவில் ஆற்றுகால் கோவிலில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
இது போல ஸ்ரீகண்டேசுவரர் மகாதேவர் கோவிலும் இதன் அருகிலேயே உள்ளது.
ஆற்றுகால் தேவி பிரசாதம்
ஆற்றுகால் தேவி கோவிலில் அம்மனுக்கு அபிஷேகம் செய்த குங்குமம், சந்தனம், விபூதி முதலியன பிரசாதமாக வழங்கப்படுகிறது. இவற்றுடன் அரவணையும் அளிக்கப்படுகிறது.
இவற்றை இந்திய தபால் துறையும், ஆற்றுகால் பகவதி கோவிலும் இணைந்து பக்தர்களுக்கு தபால் மூலம் வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்தியாவில் உள்ள எந்த பகுதிக்கும் கோவில் பிரசாதம் தபாலில் வழங்கப்படுகிறது.
ரூ. 150 செலுத்தி இதனை பெற்றுக் கொள்ளலாம்.
- கருவறையில் உள்ள விளக்கில் இருந்து தீ எடுத்து வந்தே, ‘பண்டார அடுப்பு’ பற்ற வைக்கிறார்கள்.
- இந்த அடுப்பில் இருந்து செய்யப்பட்ட பொங்கலிலே அம்மனுக்கு நிவேதனம் செய்யப்படுகிறது.
ஆற்றுகால் பகவதி அம்மன் ஆலயத்தில் பொங்காலைத் திருவிழா 10 நாள் உற்சவமாக கொண்டாடப் படுகிறது.
முதல் நாளில் கண்ணகி கதை பாடலாகப் பாடப்பெறும்.
அதோடு கொடுங்கல்லூர் பகவதியை ஆவாகனம் (அழைத்து வந்து) செய்து, 10 நாள் குடியிருக்கும்படி செய்வார்கள்.
விழா நடைபெறும் 10 நாட்களிலும் இரவு தீபாராதனை முடிந்து நடை மூடுவதற்கு முன்பாக, பலவித வண்ண காகிதங்களாலும், குருத்தோலைகளாலும், தீப விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மனை அமரச் செய்து, நடனமாடியபடி கோவிலைச் சுற்றிவருவது கண்கொள்ளாக் காட்சியாகும்.
திருவிழாவின் ஒன்பதாவது நாள், உலக பிரசித்திப் பெற்ற ஆற்றுக்கால் பொங்கல் விழா நடைபெறும்.
பொங்கல் வைக்கும் நிகழ்வு முறையாக செய்யப்படும்.
தந்திரி, கருவறையில் இருந்து தீபம் ஏற்றி அதை மேல்சாந்தி என்று அழைக்கப்படும் தலைமை பூசாரியிடம் கொடுப்பார்.
அவர் அதைப் பெற்று, கோவில் வளாகத்தில் உள்ள பொங்கல் அடுப்பில் தீ மூட்டுவார்.
பின்னர் அதே தீபச் சுடரை, சக பூசாரியிடம் வழங்குவார். அவர் கோவிலின் முன்பு உள்ள பண்டார அடுப்பில் தீ மூட்டுவார்.
தொடர்ந்து மற்ற அனைத்து பொங்கல் அடுப்புகளிலும் தீ மூட்டப்படும்.
இதற்கான அறிவிப்புக்காக செண்டை மேளமும், வெடிமுழக்கமும், வாய்க்குரவையும் ஒலிக்கப்படும்.
அந்த ஒலி கேட்டு, பெண்கள் அனைவரும் பொங்கல் வைப்பதற்காக, அடுப்பை மூட்டுவர்.
குறிப்பிட்ட வேளையில் கோவிலில் நியமனம் செய்யப்பட்ட பூசாரிகள், புனித தீர்த்தம் தெளித்து பொங்கல் நைவேத்தியம் படைப்பார்கள்.
அப்போது விமானம் மூலமாக வானத்தில் இருந்து மலர் தூவப்படும்.
இந்த நிகழ்ச்சியின் போது கோவில் உள்ளேயும் பகவதிக்கு பொங்கல் விடுகிறார்கள்.
அந்த அடுப்பிற்கு 'பண்டார அடுப்பு' என்று பெயர்.
கருவறையில் உள்ள விளக்கில் இருந்து தீ எடுத்து வந்தே, 'பண்டார அடுப்பு' பற்ற வைக்கிறார்கள்.
இந்த அடுப்பில் இருந்து செய்யப்பட்ட பொங்கலிலே அம்மனுக்கு நிவேதனம் செய்யப்படுகிறது.
பொங்கல் திருவிழா முடிந்த அன்றைய தினம் இரவு, ஆற்றுக்கால் பகவதி அம்மன், மணக்காடு என்ற இடத்தில் உள்ள சாஸ்தா கோவிலுக்கு எழுந்தருள்வாள்.
ஊர்வலம் செல்லும் வழியெங்கும் அலங்காரம் செய்யப்பட்டிருக்கும்.
குத்துவிளக்கேற்றி, பூஜை பொருட்கள் சமர்ப்பித்து வழிநெடுகிலும் அம்மனுக்கு பக்தர்கள் வரவேற்பளிப்பார்கள்.
சாஸ்தா கோவிலுக்கு செல்லும் ஒன்றரை கிலோமீட்டர் தூரமும் அலங்கார வண்டிகள் மற்றும் கண்ணைக் கவரும் பல்வேறு களியாட்டங்கள், மேளதாளம், பஞ்சவாத்தியம், நாதஸ்வர இசை முழங்க ஊர்வலம் செல்லும்.
மறுநாள் அதிகாலை சாஸ்தா கோவிலில் பூஜை முடிந்தபின், அங்கிருந்து புறப்பட்டு, மீண்டும் தன் இருப்பிடத்தை வந்து சேர்வாள், ஆற்றுக்கால் பகவதி அம்மன்.
- தென்னிந்தியா விலேயே உயர்ந்த ராஜகோபுரம் கொண்டது.
- நெல் சேமிப்பு கிடங்கு சக்கரத்தாழ்வார் சன்னிதிக்கு அருகில் இருக்கின்றது.
* 108 வைணவ தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம்' என்று அழைக்கப்படுவதுமான திருவரங்கம் அரங்கநாதர் கோவில், தென்னிந்தியா விலேயே உயர்ந்த ராஜகோபுரம் கொண்டது.
* 'அரங்கம்' என்றால் 'தீவு' என்று பொருள். காவிரி ஆற்றுக்கு நடுவே இருக்கும் தீவாகிய அரங்கத்தில் இறைவன் குடியிருப்பதால் இதை, திருவரங்கம்' என்றும், இத்தலத்தில் அருளும் பெருமாளை அரங்கநாதன் எனவும், தாயாரை அரங்கநாயகி என்றும் அழைக்கிறார்கள்.

* இக்கோவிலில் 20 அடி விட்டமும், 30 அடி உயர மும் கொண்ட நெல் சேமிப்பு கிடங்கு சக்கரத்தாழ்வார் சன்னிதிக்கு அருகில் இருக்கின்றது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அமைந்த இந்த நெல் சேமிப்பு கிடங்கு வட்ட வடிவம் கொண்டவை. மொத்தமாக 1500 டன் அளவிலான நெல்லை இதில் சேமிக்க முடியும். இதில் எந்த காலத்திலும் நெல் குறைந்து பற்றாக்குறை ஏற்பட்டதில்லை. அதேபோல, எவ்வளவு நெல் கொட்டினாலும் அதை ஏற்றுக்கொள்ளும் தன்மையை உடையது இந்த சேமிப்பு கிடங்கு.
* எல்லா கோவில்களிலும் உள்ள கொடிமரங்கள். கல் மற்றும் மரத்தால் செய்யப்பட்டிருப்பதால் அவை அசையாது. ஆனால் திருவரங்கத்தில் உள்ள ரங்க விலாஸ் மண்டபத்தின் அருகில் இருக்கும் கொடி மரத்தை வணங்கிவிட்டு மேலே பார்த்தால், அது அசைவது போல தோன்றும். அப்படி அசைவது போலத் தோன்றினால், நாம் வேண்டியது நிச்சயம் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

* ராமானுஜர் தனது 120-வது வயதில் இயற்கை எய்தினார். பொதுவாக, வைணவ சம்பிரதாயப்படி வைணவ பதவி அடைந்த துறவிகளை எரியூட்ட மாட்டார்கள். அதற்கு பதில் உடல் பள்ளியூட்டப்படும். அதாவது, சமாதியில் அமரவைத்து மூடப்படும்.
அதேபோல ராமனுஜரின் உடல் திருவரங்கத்தின் வசந்த மண்டபத்தில் பள்ளிப்படுத்தப்பட்டுள்ளது. அங்கே இருக்கும் ராமானுஜரின் உடல் இன்றும் உயிரோட்டத்துடன் காட்சியளிக்கிறது. ராமானுஜரின் உடல் பச்சைக்கற்பூரம் மற்றும் குங்குமத்தால் செய்யப்பட்ட கலவையால் மூடப்பட்டுள்ளது. 900 ஆண்டுகள் கடந்தும் ராமானுஜரின் உடல் அப்படியே காட்சித்தருவது அதிசயமாகும்.
- 18-ந்தேதி திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.
- 20-ந்தேதி திருத்தணி முருகப் பெருமான் கிளி வாகன சேவை.
17-ந்தேதி (செவ்வாய்)
* சுவாமிமலை முருகப் பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* திருத்தணி முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு அலங்கார திருமஞ்சனம்.
* திருப்பதி சமீபம் மங்காபுரம் சீனிவாசப் பெருமாள் புறப்பாடு.
* சமநோக்கு நாள்.
18-ந்தேதி (புதன்)
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம்.
* திருமயம் சத்திய மூர்த்தி புறப்பாடு.
* திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.
* மேல்நோக்கு நாள்.
19-ந்தேதி (வியாழன்)
* சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைர வேல் தரிசனம்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமருக்கு திருமஞ்சனம்.
* திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.
* பெருஞ்சேரி வாகீசுவரர் புறப்பாடு.
* கீழ்நோக்கு நாள்.
20-ந்தேதி (வெள்ளி)
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
* ராமேஸ்வரம் பர்வத வர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்கப் பல்லக்கில் புறப்பாடு
* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கோவிலில் சுந்தரவல்லி தாயார் புறப்பாடு.
* திருத்தணி முருகப் பெருமான் கிளி வாகன சேவை.
* கீழ்நோக்கு நாள்.
21-ந் தேதி (சனி)
* மன்னார்குடி ராஜ கோபால சுவாமி, திருச்சேறை சாரநாதப் பெருமாள், திருஇந்துளூர் பரிமள ரெங்கராஜர் தலங்களில் அலங்கார திருமஞ்சனம்.
* திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.
* கீழ்நோக்கு நாள்.
22-ந்தேதி (ஞாயிறு)
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.
* திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
* கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.
* கீழ்நோக்கு நாள்.
23-ந்தேதி (திங்கள்)
* மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் சகல ஜீவகோடிகளுக்கு படியளந்து அருளிய லீலை.
* சங்கரன் கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் மூலவருக்கு அலங்கார திருமஞ்சனம்.
* மேல்நோக்கு நாள்






