என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    • நம்மை உயரச் செய்கின்ற பாவை நோன்பிற்கான வழிமுறைகளைக் கேளுங்கள்.
    • அம்பலத்துப் பெருமானின் மலர்பாதங்களை காணும் பாக்கியம் நமக்கு கிடைத்திருக்கிறது.

    திருப்பாவை

    பாடல்:

    வையகத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்

    செய்யும் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள்

    பையத் துயின்ற பரமன் அடி பாடி

    நெய்யுண்ணோம்; பாலுண்ணோம்; நாட்காலை நீராடி

    மையிட்டெழுதோம்; மலரிட்டு நாம் முடியோம்;

    செய்யாதன செய்யோம்; தீக்குறளைச்

    சென்றோதோம்;

    ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி

    உய்யுமா றெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்.

    விளக்கம்:

    கண்ணன் வாழ்ந்த காலத்தில் அவனுடன் வாழும் பேறுபெற்ற மங்கையரே! நம்மை உயரச் செய்கின்ற பாவை நோன்பிற்கான வழிமுறைகளைக் கேளுங்கள்! நோன்பின் போது கண்களுக்கு மையிட்டும், கூந்தலில் பூச்சூடியும் அழகுபடுத்திக் கொள்ளாமல் இருப்போம். செய்யக்கூடாதவை என்று பெரியோர்களால் விலக்கப்பட்டவற்றை செய்யாது இருப்போம். பிறரைப் பற்றி புறங்கூறுவதை விட்டு விடுவோம். பாற்கடலில் துயில்கொள்கின்ற பரந்தாமனின் திருவடிகளை போற்றிப் பாடியபடி, வேண்டா வெறுப்பாய் கட்டாயத்தினால் நோன்பு நோற்காமல், மிகுந்த மகிழ்ச்சியுடன் அதிகாலையில் நீராடி கர்வம் இன்றி தானமும், தருமமும் செய்வோம்.

    திருவெம்பாவை

    பாடல்:

    பாசம் பரஞ்சோதி கென்பாய் இராப்பகல்நாம்

    பேசும்போ தெப்போதிப் போதார் அமளிக்கே

    நேசமும் வைத்தனையோ? நேரிழையாய்!

    நேரிழையீர்!

    சீசீ இவையும் சிலவோ? விளையாடி

    ஏசும் இடமீதோ? விண்ணோர்கள் ஏத்துதற்குக்

    கூசும் மலர்பாதம் தந்தருள வந்தருளும்

    தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்

    ஈசனார்க் கன்பர்யாம் ஆரேலோர் எம்பாவாய்!

    விளக்கம் :

    பகலும், இரவும் நாம் பேசும்போதெல்லாம், உன் அன்பெல்லாம் அந்த பரமனுக்கே உரியது என்பாய். இப்போது மலர்கள் தூவப்பட்ட படுக்கையின் மீது ஆசை கொண்டு விட்டாய் போலும்! (உறக்கத்தில் உள்ள பெண்). "சீசீ! நீங்கள் விளையாட்டாக ஏசுவதற்கு ஏற்ற இடம் இதுதானோ?!". (மற்ற பெண்கள்) "விண்ணுலகத் தேவர்களின் கண்களையும் கூசச் செய்கின்றதில்லை அம்பலத்துப் பெருமானின் மலர்பாதங்களை காணும் பாக்கியம் நமக்கு கிடைத்திருக்கிறது. நம் இல்லம் தேடி வந்து அருளும் இறைவனை நாம் நாடிச் செல்ல வேண்டாமா? பெண்ணே எழுந்திரு".

    • பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு.
    • ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு மார்கழி-2 (செவ்வாய்க்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: துவிதியை நண்பகல் 1.11 மணி வரை பிறகு திருதியை

    நட்சத்திரம்: புனர்பூசம் பின்னிரவு 3.31 மணி வரை பிறகு பூசம்

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை. சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருத்தணி முருகப்பெருமான் பால் அபிஷேகம். பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீமணவாள மாமுனிகள் புறப்பாடு. ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகப் பெருமான் அபிஷேகம், அலங்காரம். திருநறை யூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு சம்ஹார அர்ச்சனை. திருமா லிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் புறப்பாடு. வடபழனி, குன்றத்தூர், கந்தக்கோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-உயர்வு

    ரிஷபம்-உழைப்பு

    மிதுனம்-அன்பு

    கடகம்-பொறுமை

    சிம்மம்-சுகம்

    கன்னி-வரவு

    துலாம்- முயற்சி

    விருச்சிகம்-புகழ்

    தனுசு- ஊக்கம்

    மகரம்-நற்செயல்

    கும்பம்-பயணம்

    மீனம்-பாராட்டு

    • கைகளில் தாம்பாளம் ஏந்தி, அதில் பூஜை பொருட்களை எடுத்து வருவார்கள்.
    • பின்னர் உறவு பெண்களுடன் இணைந்து அம்மன் சன்னதியை சென்றடைவார்கள்.

    சிறுவர்களுக்கு குத்தியோட்டம் நடப்பது போல 10 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் பங்கேற்கும் நிகழ்ச்சியே தாலப்பொலி.

    இதுவும் ஆற்றுகால் பொங்காலை விழாவின் போது நடைபெறும்.

    இவ்விழாவின் பொங்காலை பண்டிகையின் போது இச்சிறுமிகள் அனைவரும் புத்தாடைகள் அணிந்து, தலையில் மலர் கிரீடம் அணிந்தபடி கோவிலுக்கு அணிவகுத்து வருவார்கள்.

    கைகளில் தாம்பாளம் ஏந்தி, அதில் பூஜை பொருட்களை எடுத்து வருவார்கள்.

    பின்னர் உறவு பெண்களுடன் இணைந்து அம்மன் சன்னதியை சென்றடைவார்கள்.

    அங்கு அம்மனின் முன்பு தாம்பாளத்தையும், அதில் இருக்கும் பூஜை பொருட்களையும் சமர்ப்பிப்பார்கள்.

    தாலப்பொலியில் பங்கேற்பதன் மூலம் சிறுமிகளுக்கு நீண்ட ஆயுளும், நோய் நொடியற்ற வாழ்க்கையும், எதிர்காலத்தில் அவர்களுக்கு நல்ல வரன் அமையும் என்பதும் நம்பிக்கை.

    • விழா தொடங்கிய 3ம் நாள் குத்தியோட்டத்தில் பங்கேற்கும் சிறுவர்கள் கோவிலுக்கு வருவார்கள்.
    • அவர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்குவதோடு கோவிலிலேயே தங்கவும் செய்வார்கள்.

    ஆற்றுகால் பகவதி கோவிலில் நடைபெறும் பொங்காலை விழாவின் முக்கிய நிகழ்வுகளில் சிறுவர்கள் பங்கேற்கும் குத்தியோட்டம் நிகழ்ச்சியும் ஒன்றாகும்.

    இதில் 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் கலந்து கொள்வார்கள்.

    விழா தொடங்கிய 3ம் நாள் குத்தியோட்டத்தில் பங்கேற்கும் சிறுவர்கள் கோவிலுக்கு வருவார்கள்.

    அவர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்குவதோடு கோவிலிலேயே தங்கவும் செய்வார்கள்.

    ஒவ்வொரு நாளும் அதிகாலையில் எழுந்து கோவிலில் உள்ள குளத்தில் புனித நீராடி, கோவிலில் 1008 நமஸ்கார பிரார்த்தனை செய்வார்கள். 3ம் திருவிழா முதல் 9ம் திருவிழா வரை வழிபாடுகளில் பங்கேற்பார்கள்.

    9ம் திருவிழாவன்று மாலை குத்தியோட்ட சிறுவர்கள் புத்தாடை, ஆபரணங்கள் அணிந்து தேவி சன்னிதானத்தில் கூடுவார்கள்.

    அப்போது இச்சிறுவர்களின் விலா பகுதியில் உலோக கம்பியால் லேசாக குத்திகொள்கிறார்கள்.

    பின்னர் தேவி வீதி உலா செல்லும் போது குத்தியோட்ட சிறுவர்களும், அவரது படை வீரர்கள் போல அணிவகுத்து செல்வார்கள்.

    தேவி கோவிலுக்கு திரும்பியதும், இவர்களின் குத்தியோட்ட விரதம் நிறைவு பெறும்.

    அப்போது சிறுவர்களின் விலாவில் குத்தப்பட்ட உலோக கம்பியும் அகற்றப்படும்.

    இந்த சடங்கில் பங்கேற்பதன் மூலம் சிறுவர்கள் நோய் நொடி இன்றி, சகல சவுபாக்கியங்களுடன் வாழ்வார்கள் என்பது நம்பிக்கை.

    இதற்காகவே ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் குத்தியோட்ட நிகழ்வில் பங்கேற்கும் சிறுவர்களின் எண்ணிக்கை 1000த்தை தாண்டி வருகிறது.

    ஆற்றுகால் பகவதி கோவிலில் நடைபெறும் பொங்கல் விழாவில் மண்பானையில் அரிசி, சர்க்கரை, நெய், தேங்காய் ஆகியவற்றை பயன்படுத்தி பொங்கல் சமைக்கிறார்கள்.

    ஆற்றுகால் பகவதி கோவிலில் நடைபெறும் பொங்கல் விழாவில் மண்பானையில் அரிசி, சர்க்கரை, நெய், தேங்காய் ஆகியவற்றை பயன்படுத்தி பொங்கல் சமைக்கிறார்கள்.

    இதன்மூலம் நீர், நிலம், நெருப்பு, வாயு மற்றும் ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களும் மகிழ்ச்சி அடைவதாகவும், பொங்கலிடும் பக்தர்கள் சகல ஐஸ்வர்யங்களையும் பெறுவார்கள் என்பது நம்பிக்கை.

    இதில் பயன்படுத்தப்படும் மண் பானையும், அரிசியும் நிலத்தை பிரதிபலிக்கிறது.

    நீர் மற்றும் அடுப்புக்கு வைக்கப்படும் நெருப்பு, பொங்கல் பானையில் இருந்து வரும் வாயு மற்றும் அது பரவும் ஆகாயம் ஆகியவை மூலம் பஞ்ச பூதங்களும் மகிழ்ச்சி அடைவதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.

    • இதன் கருவறை ஆரம்பத்தில் கூரையாலும், பின்னர் ஓடுவேய்ந்த கட்டிடத்திலும் இருந்தது.
    • இக்கோவிலில் ஆற்றுகால் பகவதி அம்மன் வடக்கு முகமாக அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

    கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ஆற்றுகால் பகவதி அம்மன் கோவில்.

    இப்பகுதி கிள்ளியாறும், கரமனையாறும் சங்கமிக்கும் பகுதியாகும்.

    இங்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இக்கோவில் கட்டப்பட்டு உள்ளது.

    இதன் கருவறை ஆரம்பத்தில் கூரையாலும், பின்னர் ஓடுவேய்ந்த கட்டிடத்திலும் இருந்தது.

    இக்கோவிலில் ஆற்றுகால் பகவதி அம்மன் வடக்கு முகமாக அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

    ஒரு கையில் சூலமும், மறுகையில் வாளும் ஏந்தி நிற்கிறார். மற்ற கைகளில் பொங்கலும், கேடயமும் தாங்கி இருப்பார்.

    அம்மன் சன்னதிக்கு இடது புறம் மாடன் தம்புரான் சன்னதி உள்ளது. இந்த சன்னதியின் பின்புறம் பனை மரம் உள்ளது.

    இப்போதும் இந்த சன்னதிக்கு சென்றால் மாடன் தம்புரானின் பின்புறம் பனை மரம் உயர்ந்து நிற்பதை காணலாம்.

    அன்னையின் புகழ் பரவ, பரவ ஆலயமும் விரிவாக்கம் செய்யப்பட்டது.

    கோவிலின் முன்புறம் அலங்கார வளைவு, தெற்கிலும், வடக்கிலும் ராஜகோபுரங்கள், கிழக்கிலும் மேற்கிலும் உப கோபுரங்கள் கட்டப்பட்டன.

    ஆலயத்தின் வடிவமைப்பிலும், தோற்றத்திலும் சில மாறுதல்கள் செய்யப்பட்டன. கோவிலின் சுற்றுப்புறம் முழுவதும் சிற்பங்கள் செதுக்கப்பட்டன.

    தேவி கதைகள், ராமாயணம் மற்றும் தசாவதாரம், கண்ணகி கதை போன்றவை சிற்பங்களாக உருவாக்கப்பட்டு உள்ளது.

    கோவிலின் முன்பு பிரமாண்ட நடை பந்தல், பொங்கல் வைக்க சுற்றுவட்டார பகுதிகளில் வசதி போன்றவை செய்யப்பட்டுள்ளது.

    • இக்கோவிலில் நடைபெறும் பொங்காலை விழாவில் லட்சோபலட்சம் பெண்கள் கலந்து கொண்டு பொங்காலையிட்டு அம்மனை வணங்கி செல்கிறார்கள்.
    • பொங்காலை விழாவன்று இங்கு கூடுவோர் ஜாதி, மத வேறுபாடு இன்றி திறந்த வெளியில் சுத்த ஆசாரங்களை கடைபிடித்து அம்மனுக்கு பொங்கல் படையலிடுகிறார்கள்.

    சர்வமங்கள மாங் கல்யே...

    சிவே சர்வார்த்த ஸாதிகே...

    சரண்யே த்ரயம்பகே தேவி...

    நாராயணி நமோஸ்துதே...

    என்ற துதிபாடி நமஸ்கரிக்கும் அன்னை ஆற்றுகால் பகவதி கேரளத்தின் தலைநகராம் திருவனந்தபுரத்தின் தென்கோடியில் உள்ள ஆற்றுகாலில் குடிகொண்டிருக்கிறார்.

    இதனால் ஆற்றுகால் பகவதி என பெயர் பெற்ற இக்கோவிலுக்கு சென்று அம்மனை தொடர்ந்து வணங்கி வந்தால் ஐஸ்வர்யம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    இதனால்தான் இக்கோவிலில் நடைபெறும் பொங்காலை விழாவில் லட்சோபலட்சம் பெண்கள் கலந்து கொண்டு பொங்காலையிட்டு அம்மனை வணங்கி செல்கிறார்கள்.

    பொங்காலை விழாவன்று இங்கு கூடுவோர் ஜாதி, மத வேறுபாடு இன்றி திறந்த வெளியில் சுத்த ஆசாரங்களை கடைபிடித்து அம்மனுக்கு பொங்கல் படையலிடுகிறார்கள்.

    பின்னர் அதனை ஆற்றுகால் அம்மனுக்கு படைத்துவிட்டு மன நிறைவுடன் வீடு திரும்புகின்றனர்.

    • ஆற்றுகால் கோவிலில் நடக்கும் பொங்காலை விழாவில் இக்கருத்தை மையப்படுத்தியே திருவிழா கொண்டாடப்படுகிறது.
    • விழாவின் முதல் நாள் முதல் இறுதி நாள் வரையிலான நிகழ்வுகள் அனைத்தும் சிலப்பதிகார கதையை மையப்படுத்தியே அமைந்திருக்கும்.

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த ஆற்றுகாலில் குடிகொண்டிருக்கும் பகவதி அம்மனை சிலப்பதிகார நாயகி கண்ணகியின் மறு அவதாரமாக கருதுகிறார்கள்.

    சிலப்பதிகாரம், தமிழின் ஐம்பெருங்காப்பியங்களில் முதன்மையானது. இதன் நாயகி கண்ணகி.

    இவருக்கும் சோழ நாட்டின் காவிரி பூம்பட்டினத்தை சேர்ந்த கோவலனுக்கும் திருமணம் நடந்தது.

    ஆடல், பாடல்களில் ஆர்வம் கொண்ட கோவலன் திருமணம் முடிந்த பின்னர் ஆடல்கலையில் சிறந்து விளங்கிய மாதவியின் மீது ஈர்ப்பு கொண்டு அவரோடு சென்று விட்டார்.

    சில காலங்களுக்கு பிறகு அவர் மாதவியை பிரிந்து மீண்டும் கண்ணகியை தேடி வந்தார்.

    கோவலனும், கண்ணகியும் மீண்டும் புது வாழ்க்கையை தொடங்க அவர்களுக்கு பணம் தேவைப்பட்டது.

    இதற்காக கண்ணகி, தான் அணிந்திருந்த கால் சிலம்பை கழற்றி கொடுத்து அதனை விற்று கிடைக்கும் பணத்தில் வாழ்க்கையை தொடங்கலாம் எனக் கூறினார்.

    கண்ணகியின் யோசனைபடி கோவலன், கண்ணகியின் சிலம்பை விற்க பாண்டிய நாட்டின் மதுரைக்கு சென்றார்.

    அங்கு பாண்டிய மன்னனின் அரண்மனை பொற்கொல்லனை சந்தித்தார்.

    அவரிடம் கண்ணகியின் காற்சிலம்பை விற்று தரும்படி கேட்டார்.

    கோவலன் மதுரைக்கு செல்லும் முன்பே பாண்டிய நாட்டு ராணியின் காற் சிலம்பு காணாமல் போயிருந்தது.

    இதனை திருடிய தாக அரண்மனை பொற் கொல்லன் மீது பழி சுமத்தப்பட்டது.

    அதில் இருந்து தப்பிக்க பொற்கொல்லன் யோசித்து கொண்டிருந்த வேளையில்தான், கோவலன் அவரை சந்தித்து கண்ணகியின் காற்சிலம்பை காட்டி அதனை விற்று தரும்படி கேட்டார்.

    இந்த சந்தர்ப்பத்தை பொற்கொல்லன் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயற்சித்தார்.

    அவர் கோவலனை, பாண்டிய மன்னனின் அரச சபைக்கு அழைத்து சென்று அங்கு அரசியின் காற்சிலம்பை திருடியது கோவலன் என கூறினார். இதை கேட்டதும் அரசன், ஆத்திரமடைந்து கோவலனுக்கு மரண தண்டனை விதித்தார். கோவலன் கொல்லப்பட்டார்.

    இதற்கிடையே காற்சிலம்பை விற்க சென்ற கணவன் கோவலன் இன்னும் வீடு திரும்பவில்லையே என்று கண்ணகி பரிதவித்து கொண்டிருந்தார்.

    நீண்ட நேரமாகியும் அவர் வராததால் கோவலனை தேடி கண்ணகி மதுரைக்கு வந்தார்.

    மதுரை வந்த பின்புதான் கோவலன் கொலையுண்ட தகவலை அறிந்தார். அதிர்ச்சி அடைந்த அவர் உடனே பாண்டிய மன்னனின் அரசவைக்கு சென்று தன்னிடம் இருந்த மற்றொரு காற்சிலம்பை காட்டி நீதி கேட்டார்.

    கண்ணகியின் ஆவேசமும், அவர் பால் இருந்த நியாயத்தையும் புரிந்து கொண்ட மன்னன், அங்கேயே உயிரிழந்தான்.

    அதன்பின்பும் ஆவேசம் அடங்காத கண்ணகி, மதுரை நகரை தீக்கிரை யாக்கினார். அதன்பின்பு அதே ஆவேசத்துடன் சேர நாட்டின் கொடுங்காளூர் நோக்கி புறப்பட்டார்.

    மதுரையில் இருந்து புறப்பட்டு கொடுங்காளூர் செல்லும் வழியில் கரமனையாறும், கிள்ளியாறுக்கும் இடையே உள்ள ஆற்றுகால் பகுதியில் தங்கி இளைப்பாறினார்.

    அப்போது அங்கிருந்த முதியவர்கள், கண்ணகியிடம் விபரம் கேட்டு அவரை ஆசுவாசப்படுத்தினார்கள்.

    அவரது கோபத்தை தணித்து சாந்தப்படுத்தினார்கள். இதனால் சாந்தடைந்த கண்ணகி, அங்கேயே குடிகொண்டதாகவும், இதனாலேயே அவருக்கு ஆற்றுகாலம்மா என்ற பெயர் ஏற்பட்டது.

    ஆற்றுகால் கோவிலில் நடக்கும் பொங்காலை விழாவில் இக்கருத்தை மையப்படுத்தியே திருவிழா கொண்டாடப்படுகிறது.

    விழாவின் முதல் நாள் முதல் இறுதி நாள் வரையிலான நிகழ்வுகள் அனைத்தும் சிலப்பதிகார கதையை மையப்படுத்தியே அமைந்திருக்கும்.

    • மார்கழி மாதம்.. நிலவு பூரணமாக பிரகாசிக்கின்ற நல்ல நாள் இது.
    • முதலும் முடிவும் இல்லாத சோதி சொரூபமாய் நின்ற சிவபெருமானைப் போற்றி.

    திருப்பாவை

    பாடல்:

    மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்;

    நீராடும் போதுவீர்! போதுமினோ நேரிழையீர்!

    சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!

    கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,

    ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்,

    கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்

    நாராயணனே நமக்கே பறை தருவான்,

    பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்.

    விளக்கம்:

    மார்கழி மாதம்.. நிலவு பூரணமாக பிரகாசிக்கின்ற நல்ல நாள் இது. அழகிய ஆபரணங்களை அணிந்த செல்லச் சிறுமிகளே, நீராடப் போகலாம் வாருங்கள். கூர்மையான வேலை ஏந்திப் போர்புரியும் நந்தகோபனின் மகனும், கண்ணனுடைய விளையாட்டுகளை அருகில் இருந்து காணும் பேறு பெற்ற அழகிய கண்களைக் கொண்ட யசோதையின் இளஞ்சிங்கம் போன்றவனும், மேகத்தின் நீல நிறம் கொண்டவனும், ஒளி மிகுந்த சந்திரன் போன்ற முகம் கொண்டும் விளங்கும் நாராயணன், இந்த பாவை நோன்பை நோற்றால், நமக்கு பறை வாத்தியத்தைத் தருவான். நோன்பு வெற்றி பெற்றால் ஊரும். நாடும் நலம்பெறும். உலகத்தவர் நம்மை புகழ்வார்கள், வாருங்கள்.

    திருவெம்பாவை

    பாடல்

    ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியை

    யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்

    மாதே! வளருதியோ? வன்செவியோ நின்செவிதான்?

    மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய

    வாழ்த்தொலி போய்

    வீதிவாய்க் கேட்டதுமே விம்மி விம்மி மெய்மறந்து

    போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்கன்

    ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே! என்னே!'

    ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய்.

    விளக்கம்:

    வாள் போல ஒளி வீசும் கண்களையுடைய பெண்ணே.. முதலும் முடிவும் இல்லாத சோதி சொரூபமாய் நின்ற சிவபெருமானைப் போற்றி, நாங்கள் பாடுவதைக் கேட்டபின்னும் நீ உறங்கிக் கொண்டிருக்கிறாயே! உன் காதுகள் அவ்வளவு உணர்ச்சியற்றுப் போய்விட்டதா? அந்த மகாதேவனின் பாதக் கமலங்களைப் போற்றி நாங்கள் பாடியதை வீதியில் கேட்டதுமே, ஒருத்தி பூக்கள் தூவிய படுக்கையில் இருந்து புரண்டு எழுந்தாள். நீயோ எந்த அசைவும் இன்றி படுத்துக் கிடக்கிறாயே! எமது கண்ணின் பாவை போன்ற பெண்ணே! இது என்ன அதிசயம்?

    • சகல பெருமாள் கோவில்களிலும் திருப்பாவை, திருவெம்பாவை தொடக்கம்.
    • திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு மார்கழி-1 (திங்கட்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: பிரதமை நண்பகல் 1.54 மணி வரை பிறகு துவிதியை

    நட்சத்திரம்: திருவாதிரை பின்னிரவு 3.17 மணி வரை பிறகு புனர்பூசம்

    யோகம்: சித்த, அமி2ர்தயோகம்

    ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள் புறப்பாடு. திருவண்ணாமலை ஸ்ரீ சுப்பிரமணியர் தெப்ப உற்சவம். சகல பெருமாள் கோவில்களிலும் திருப்பாவை, திருவெம்பாவை தொடக்கம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்த ராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பன் கொலு தர்பார் காட்சி. திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் திருமஞ்சன சேவை. கோவில்பட்டி ஸ்ரீ பூவண்ணநாதர் புறப்பாடு. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம். திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத்சுந்தர குசாம்பாள் சமேத ஸ்ரீ மகாலிங்க சுவாமி, திருமயிலை ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ கபாலீஸ்வரர், திருவான்மியூர் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ மருந்தீஸ்வரரர், பெசன்ட் நகர் ஸ்ரீ அராளகேசியம்மன் சமேத ஸ்ரீ ரத்தின கிரீஸ்வரர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-சுகம்

    ரிஷபம்-சாதனை

    மிதுனம்-முயற்சி

    கடகம்-பெருமை

    சிம்மம்-அன்பு

    கன்னி-ஆர்வம்

    துலாம்- குழப்பம்

    விருச்சிகம்-சிரத்தை

    தனுசு- நன்மை

    மகரம்-உறுதி

    கும்பம்-சுபம்

    மீனம்-துணிவு

    • வடிவுடையம்மன் கோவில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.
    • நாளை இரவு 8.30 மணி வரை ஆதிபுரீஸ்வரர் கவசம் திறந்திருக்கும்.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் தியாகராஜ சாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலின் மூலவர் ஆதிபுரீஸ்வரர், ஆண்டு முழுவதும் தங்க முலாம் பூசப்பட்ட நாக கவசம் அணிவிக்கப்பட்ட நிலையில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

    ஆண்டுக்கொரு முறை கார்த்திகை மாத பவுர்ணமியை யொட்டி, 3 நாட்கள் மட்டும் ஆதிபுரீஸ்வரர் புற்றுவடிவ லிங்க திருமேனி மீது அணிவிக்கப்பட்டிருக்கும் நாக கவசம் திறக்கப்படும்.

    அதன்படி நேற்று மாலை 6 மணிக்கு ஆதிபுரீஸ்வரர் மீது தங்க முலாம் பூசிய நாக கவசம் திறக்கப்பட்டது. தொடர்ந்து புனுகு, சாம்பிராணி, தைலாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    சென்னை மற்றும் பல்வேறு பகுதியில் இருந்தும் சாமி தரிசனம் செய்ய வந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அறநிலைய துறை உதவி ஆணையர் நற்சோனை தலைமையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    தொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் நாளை (திங்கட்கிழமை) இரவு 8.30 மணி வரை ஆதிபுரீஸ்வரர் கவசம் திறந்திருக்கும். பின்னர் அர்த்தஜாம பூஜைக்கு பிறகு மீண்டும் கவசம் அணிவிக்கப்படும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜோதிட சாஸ்திரம் மார்கழி மாதத்தை 'தனுர் மாதம்' என்று குறிப்பிடுகிறது.
    • மார்கழி மாதத்தில்தான் சிவனுக்கு உகந்த திருவாதிரை திருவிழா வருகிறது.

    மார்கசீர்ஷம் - வடமொழியில் மார்கழி மாதத்தை குறிக்கும் சொல். 'மார்கம்' என்பது 'வழி' என்று பொருள்படும். 'சீர்ஷம்' என்பது 'தலை சிறந்தது அல்லது உயர்ந்தது' என்ற பொருளைத் தரும். இறைவனை அடைவதில் உயர்ந்த மாதமாக மார்கழி மாதம் இருக்கிறது என்பதையே 'மார்கசீர்ஷம்' என்ற சொல் நமக்கு உணர்த்துகிறது.

    சூரிய பகவான் தனுசு ராசியில் பிரவேசிக்கும் மாதம் என்பதால், ஜோதிட சாஸ்திரம் மார்கழி மாதத்தை 'தனுர் மாதம்' என்று குறிப்பிடுகிறது. இந்த மாதம் ஒரு வழிபாட்டு மாதமாகும்.


    'மாதங்களில் நான் மார்கழி' என்று பகவான் மகாவிஷ்ணு கூறியுள்ளார். இந்த மாதத்தில் தனுசு ராசியில் குருவின் வீட்டில் சூரியன் குடியேறுகிறார்.

    மனிதர்களுக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள். தை மாதம் தொடங்கி ஆனி வரை தேவர்களுக்கு பகல் பொழுதாகவும், ஆடி மாதம் முதல் மார்கழி வரை இரவுப்பொழுதாகவும் அமையும். அப்படிப் பார்க்கும்போது அதிகாலையான பிரம்ம முகூர்த்தம், தேவர்களுக்கு மார்கழி மாதம் வருகிறது.

    தேவர்களுக்கான பிரம்ம முகூர்த்தம் என்பதால், இந்த மார்கழி மாதம் மனிதர்களுக்கு சிறந்த வழிபாட்டுக்குரிய மாதமாக போற்றப்படுகிறது.

    சிறப்புகள் நிறைந்த மார்கழி மாதத்தில் அதிகாலையில் குளித்து விட்டு பாவை நோன்பு இருந்தால் மனதிற்கு பிடித்த கணவன் கிடைப்பார் என்பது நம்பிக்கை. மகத்துவம் நிறைந்த மார்கழியில் உலக நாட்டங்களைக் குறைத்து, இறைவனிடமும் அவர் திருவடி சார்ந்த செயல்பாடுகளிலுமே மனம் ஒன்ற வேண்டும் என்பதற்காகத்தான் வேறெந்த நிகழ்வுகளையும் நடக்காமல் பார்த்துக் கொண்டார்கள்.

    அதன் வழியொட்டியே மார்கழியில் சுப நிகழ்வுகளைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அதே நேரம் இறைவனிடம் மனம் லயிக்க வேண்டும் என்பதையும் நினைவில்கொள்ள வேண்டும்.


    மார்கழியில் அதிகாலை எழுந்து குளித்து விட்டு வாசல் தெளிப்பது மனதுக்கு மட்டுமல்ல, உடலுக்கும் புத்துணர்ச்சி தரும். சூரியனிடம் இருந்து வருகிற ஓசோனின் தாக்கம் மார்கழி அதிகாலையில் அதிகமாக இருக்கும்.

    இதனால் அதிகாலையில் வெளியே வருவதால் அந்த காற்றும், கதிரும் உடலை வலிமைப்படுத்தும் என்பதால்தான் அதிகாலை குளியலை முன்னோர்கள் அறிமுகம் செய்திருக்கிறார்கள்.

    மார்கழி மாதத்தில்தான் சிவனுக்கு உகந்த திருவாதிரை திருவிழா வருகிறது. சிவபெருமானின் பக்தைகள் நோன்பு நோற்பதற்காகத் தோழியை எழுப்பச் செல்லும் காட்சி திருவெம்பாவையிலும் வருகிறது.

    சிவனுடைய அடியார்களே கணவனாக வர வேண்டும், அவனோடு சேர்ந்து சிவனைத் தொழ வேண்டும் என்பதே திருவெம்பாவையில் வருகிற பாவை நோன்பின் நோக்கம்.

    மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு வாசலில் கோலமிடுவது தொன்றுதொட்டு நடந்துவருகிறது. மாட்டுச் சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வழிபடுவதும் நடக்கும்.

    மாட்டுச்சாண உருண்டையில் பூசணிப்பூவை செருகி, கோலத்துக்கு நடுவே வைப்பது மார்கழி முழுக்கவே நடைபெறும். சில வீடுகளில் அந்தப் பூ உருண்டையை வரட்டியாகத் தட்டி சேகரித்து சிறுவீட்டு பொங்கலன்று ஆற்றில் விடுவார்கள்.


    மார்கழி மாதத்தில் பல புராதன நிகழ்வுகளும் நடந்துள்ளன. மகாபாரத யுத்தம் மார்கழி மாதத்தில் நடைபெற்றதாக இதிகாசம் கூறுகிறது. திருப்பாற்கடல் கடையப்பட்டபோது, முதலில் விஷம் எழுந்ததும், சிவன் அதனை உண்டு உலக மக்கள் அனைவரையும் காப்பாற்றியதும் இதே மார்கழி மாதத்தில்தான்.

    இந்திரனால் பெரு மழை வெள்ளம் உருவாக்கப்பட்டு கோகுலத்தில் அனைவரும் துன்பப்பட்டபோது, கோவர்த்தனகிரி மலையை, கிருஷ்ணர் குடையாகப் பிடித்து மக்களை காப்பாற்றியதும் இந்த மார்கழி மாதத்தில்தான்.

    மகாவிஷ்ணுவுக்கு உகந்த வைகுண்ட ஏகாதசி வருவது மார்கழியில்தான். பெண்கள் அதிகாலையில் நீராடி பாவை நோன்பு நோற்று பெருமாளை வணங்கி திருப்பாவை பாடுகின்றனர். அந்த கண்ணனே தங்களுக்கு கணவனாக வரவேண்டும் என்பது பல பெண்களின் கனவாக உள்ளது.

    அனுமன் ஜெயந்தி வருவதும் இந்த மார்கழியில்தான். இவ்வளவு சிறப்புவாய்ந்த மார்கழியில் விடியற்காலம் விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பது மற்றும் திருப்பாவை படிக்க இறைவன் அருள் கிடைக்கும்.

    ×