என் மலர்
ஆன்மிகம்
- 1999 ம் வருடம் நவம்பர் மாதத்தில் ஒரு நாள் இரவில் அவருடைய கனவில் அம்பிகை வடிவில் ஓர் உருவம் தோன்றி, எல்லா ஆபரணங்களும் எனக்கு உள்ளது.
- ஆனால் காலுக்கு அணிந்து கொள்ள கொலுசு இல்லை. அதனை நீதான் எனக்கு செய்து போட வேண்டும் எனக் கட்டளையிட்டு மறைந்தது.
திருமீயச்சூர் தலத்தில் அமர்ந்து அருளாட்சி நடத்தி வரும் அன்னை லலிதாம்பிகைக்கு இங்குள்ள அர்ச்சகர்கள் கால் கொலுசு தவிர அனைத்து வகை ஆபரணங்களையும் அணிவித்து வந்தார்கள்.
தனது காலுக்குக் கொலுசு அணிவிக்கப்பட வேண்டும் என அன்னை விரும்பினாள்.
பெங்களூரில் மைதிலி ராஜகோபாலாச்சாரி என்பவர் தினமும் காலையில் எழுந்து ஸ்நானம் செய்து, லலிதா சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்த பிறகுதான் தனது மற்ற அன்றாடப் பணிகளைத் தொடங்குவார்.
அவர் இதனைத் தனது அன்றாடக் கடமையாக மிகுந்த பக்தி சிரத்தையுடன் செய்து வந்தார்.
1999 ம் வருடம் நவம்பர் மாதத்தில் ஒரு நாள் இரவில் அவருடைய கனவில் அம்பிகை வடிவில் ஓர் உருவம் தோன்றி, எல்லா ஆபரணங்களும் எனக்கு உள்ளது.
ஆனால் காலுக்கு அணிந்து கொள்ள கொலுசு இல்லை. அதனை நீதான் எனக்கு செய்து போட வேண்டும் எனக் கட்டளையிட்டு மறைந்தது.
திடீரென விழித்தெழுந்த அவ்வம்மையார், தனது கனவில் வந்து காட்சியளித்து கட்டளையிட்டுச் சென்ற அம்பாய் யார், ஏன் என்னிடம் வந்து கேட்க வேண்டும் எனக் குழப்பமடைந்தார்.
மிகுந்த ஆசாரமுள்ள வைணவக் குடும்பத்தைச் சேர்ந்த அப்பெண்மணி தனது கனவில் வந்து காட்சியளித்துத் தனக்கு ஆணையிட்டுச் சென்ற அம்பாளைப் பற்றி பலரிடமும் விசாரித்தார்.
யாரும் தெளிவாகச் சொல்லவில்லை.
- இது பாவத்தை நீக்கும். பாவத்தை நீக்க இதனைவிட்டு வேறு உபாயம் தேடுபவன் பயனில்லாதவன்.
- பௌர்ணமியன்று சந்திர பிம்பத்தில் தேவியை தியானம் செய்து வழிபட்டு இதனைப் படிக்க நோய்கள் நீங்கும். பூத பிசாச உபாதைகள் விலகும்.
சகஸ்ரநாமம் என்பது அன்னையின் ஆயிரம் பெயர்கள்.
லலிதா சகஸ்ரநாமத்தைப் பாராயணம் செய்யும்போது லலிதாம்பிகையின் பெருமைகள் மட்டுமல்ல, ஆன்மிகம் பற்றிய விழிப்புணர்வு மந்திரங்கள் தந்திரங்கள், பிரபஞ்சத்தின் படைப்பு ரகசியங்கள் என்று முழுமையான ஞானம் உருவாகும்.
சரஸ்வதியின் குருவான ஹயக்ரீவர் அகத்திய மகரிஷிக்கு லலிதா சகஸ்ரநாமத்தின் பெருமைகளை பின்வருமாறு கூறுகிறார்.
தேவியின் ஆயிரம் நாமங்களை உமக்குக் கூறினேன். இவை ரகசியங்களுள் ரகசியமானது. இதைப் போன்ற துதி ஒன்றுமில்லை.
இது நோய்களைப்போக்கும். செல்வத்தை அளிக்கும். அபமிருத்யுவைப் போக்கும். (அப மிருத்யு என்றால் அகால மரணம் ) நீண்ட ஆயுள் தரும். பிள்ளைப் பேறு இல்லாதவர்களுக்கு பிள்ளைச் செல்வம் தரும்.
கங்கை முதலியப் புண்ணிய நதிகளில் முறைப்படி பலதடவை நீராடுதல், காசியில் கோடி லிங்கப் பிரதிஷ்டை செய்தல், க்ரஹன காலத்தில் கங்கைக் கரையில் அசுவமேத யாகம் செய்தல், பஞ்ச காலங்களில் நீர் வசதியற்ற இடங்களில் கிணறு வெட்டுதல், தொடர்ந்து அன்னதானம் செய்தல், இவை எல்லாவற்றையும்விட மிகுந்தப் புண்ணியமானது லலிதா சகஸ்ரனாமப் பாராயணம்.
இது பாவத்தை நீக்கும். பாவத்தை நீக்க இதனைவிட்டு வேறு உபாயம் தேடுபவன் பயனில்லாதவன்.
பௌர்ணமியன்று சந்திர பிம்பத்தில் தேவியை தியானம் செய்து வழிபட்டு இதனைப் படிக்க நோய்கள் நீங்கும். பூத பிசாச உபாதைகள் விலகும்.
- இறப்பின்றி வாழும் பெருமை பெற்றவர்களை, `சிரஞ்சீவி' என்று கூறுவார்கள்.
- சிரஞ்சீவிகளாக ஏழு பேர் இருக்கின்றனர்.
இறப்பின்றி வாழும் பெருமை பெற்றவர்களை, "'சிரஞ்சீவி' என்று கூறுவார்கள். அப்படிப்பட்ட சிரஞ்சீவிகளாக ஏழு பேர் இருக்கின்றனர். ராவணன் தன் அண்ணன் என்றாலும், நியாயத்தின் பக்கம் நின்றதற்காக விபீஷணனுக்கு சிரஞ்சீவியாக வாழும் வாய்ப்பு கிடைத்தது.
வாமன அவதாரம் எடுத்து வந்த விஷ்ணுவுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற தன்னையே அர்ப்பணித்ததால், மகாபலி சக்கரவர்த்தியும் சிரஞ்சீவி ஆனார்.

`சிவனே கதி' என்ற சராணகதி தத்துவத்தில் இருந்ததால் எமனிடம் இருந்து காப்பாற்றப்பட்டு என்றும் 16' என்ற வாழ்த்துடன் சிரஞ்சீவியானார் மார்க்கண்டேயர்.
படிப்பவர்களின் பாவங்களைப் போக்கும் புராணங்களையும், காவியங்கைளையும் எழுதியதோடு, வேதங்களை நான்காக பகுத்ததால் வேதவியாசரும் சிரஞ்சீவியானார்.
தந்தையின் சொல்லை மறுக்காமல் தாயைக் கொன்றதுடன், தன் தந்தையாலேயே தாயை உயிர்ப்பிக்க செய்த பரசுராமரும் சிரஞ்சீவி பட்டம் பெற்றார்.
கவுரவர்களின் பக்கம் நின்று, கடைசி வரை துரியோதனுக்காக போரிட்டதுடன், அபிமன்யுவின் மனைவி வயிற்றில் இருந்த கருவை கொல்ல அஸ்திரம் எய்ததால், துன்பத்தில் உழலும் பொருட்டு சிரஞ்சிவியாக மாறும் சாபத்தைப் பெற்றான், துரோணரின் மகன் அஸ்வத்தாமன்.
மேற்கண்ட ஆறுபேருக்கும் காரண காரியங்களால் வந்து சேர்ந்தது சிரஞ்சீவி பட்டம்.

ஆனால் எந்த எதிர்பார்ப்பும் இன்றி, ராமனுக்கு சேவை புரிந்த காரணத்தால் இந்த பட்டியலில் அனுமனும் இடம் பிடித்தார்.
- காதணியுடன் பிறந்த அனுமன்.
- சூரியனின் சீடன் அனுமன்.
காதணியுடன் பிறந்த அனுமன்
மகாபாரதத்தில் கவச குண்டலங்களுடன் பிறந்தவர், கர்ணன். அதே போல் ராமாயணத்தில் காதில் அணிகலனுடன் பிறந்தவர் அனுமன். கிஷ்கிந்தாவின் இளவரசனாக இருந்த வாலி, பிற்காலத்தில் அஞ்சனைக்கு பிறக்கப் போகும் பிள்ளையால் தனக்கு ஆபத்து வரப்போகிறது என்பதை ஜோதிட வல்லுனர்களிடம் இருந்து அறிந்தான்.

தன் எதிரியை கருவிலேயே அழிக்க நினைத்த வாலி, தங்கம், வெள்ளி, தாமிரம், இரும்பு உள்ளிட்ட பல உலோகங்களை சேர்த்து அம்பு ஒன்றை தயார் செய்தான். அதனை உறக்கத்தில் இருந்த அஞ்சனையின் வயிற்றில் எய்தான். ஆனால் அஞ்சனையின் வயிற்றில் இருந்த கரு, சிவபெருமானின் அம்சம் அல்லவா?.
அந்த முக்கண்ணனின் கோபப் பார்வையில் அம்பு உருகி, அஞ்சனைக்கும் வயிற்றில் இருந்த கருவிற்கும் எந்த சேதத்தையும் ஏற்படுத்தவில்லை. அதோடு உருகிய அம்பு, அற்புத அணிகலன்களாக மாறி, கருவில் இருந்த குழந்தையின் காதுகளை அலங்கரித்தது. இதனால் அனுமன் பிறந்தபோதே, காதணிகளுடன் பிறந்ததாக புராணம் கூறுகின்றது.

சூரியனின் சீடன்
சிவபெருமானின் அவதாரமாக மண்ணில் தோன்றிய அனுமனுக்கு, குருவாக இருந்து கல்வி போதித்தவர் சூரிய பகவான். அதற்கு நன்றி செலுத்தும் விதமாக, "குருவே உங்களுக்கு என்ன குரு தட்சணை தர வேண்டும்?" என்று கேட்டார். அப்போது சூரியன், "வரும் காலத்தில் தன்னுடைய மகன் சுக்ரீவனுக்கு ஆலோசகராக இருந்து, அவனை வழிநடத்திச் செல்ல வேண்டும்" என்றார்.
அதன்படிதான், சுக்ரீவன் தன்னுடைய அண்ணன் வாலியால் விரட்டிவிடப்பட்ட போதும், அவனுக்கு அருகிலேயே இருந்து அவனுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கினார், அனுமன். அவர்தான் ராமபிரான் மூலமாக வாலிக்கும், சுக்ரீவனுக்கும் இருந்த பகையை முடிவுக்கு கொண்டு வந்து, அவனை வானர அரசனாக்கினார்.

ராமாயணம்-மகாபாரதம்
ராமாயணத்தில் ராமருடன் மட்டுமல்லாது, மகா பாரதத்தில் கிருஷ்ணருடனும் பழகியவர், அனுமன். கிருஷ்ணர் கேட்டுக் கொண்டதற்கிணங்க, குருசேத்திரப் போரில் அர்ச்சுனனின் தேரின் மீது கொடியாக வீற்றிருந்தது அனுமனே, அந்த வகையில் அனுமனின் முன்பாகத்தான். கீதா உபதேசத்தை அர்ச்சுனனுக்கு கிருஷ்ண பரமாத்மா கூறினார்.
கிருஷ்ணருக்கும், அனுமனுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. மகாபாரதத்தில் நடந்த போரின் போது, அர்ச்சுனனின் சாரதியாக கிருஷ்ணர் இருந்தார். அதேபோல் அவனது தேரில் கொடியாக அனுமன் இருந்தார். மகாபாரதத்தில் பாண்டவர்களுக்காக, கவுரவர்களிடம் கிருஷ்ணர் தூது சென்றார்.
ராமாயணத்தில் ராமருக்காக, ராவணனிடம் தூது சென்றவர், அனுமன். கிருஷ்ணர் கோவர்த்தன மலையை தூக்கி, கோகுல மக்களை காத்து நின்றார். அனுமன், சஞ்சீவி மலையை தூக்கி வந்து லட்சுமணனைக் காத்தார். எல்லாவற்றுக்கும் மேலாக விஸ்வரூபதரிசனம் தந்த தெய்வங்களின் பட்டியலில் கிருஷ்ணருக்கும், அனுமனுக்கும் இடமுண்டு.

சிறிய திருவடி
மகாபாரதத்தில் வரும் கிருஷ்ணன்- அர்ச்சுனன் நட்பை விட உயர்வானது, ராமாயணத்தில் ராமருக்கும், அனுமனுக்கும் உள்ள பந்தம். மகாபாரதத்தில் அர்ச்சுனனுக்காக கடவுளான கிருஷ்ணர் துணை நின்றார். ஆனால் ராமாயணத்தில் கடவுளான ராமருக்காக எந்த எதிர்பார்ப்பும் இல்லாது சேவை புரிந்தவர் அனுமன்.
இப்படிப்பட்ட பெருமைக்குரியவர் என்பதால் தான் மகாவிஷ்ணு, கருடனுக்கு அடுத்தபடியாக தன்னுடைய வாகனமாக அனுமனையும் ஏற்றுக்கொண்டார். அதேசமயம் கருடனுக்கு இல்லாத பெருமை அனுமனுக்கு உண்டு.
அது பெரிய திருவடியான கருடன் பெரும்பாலும் பெருமாள் கோவிலில் தனி சன்னிதியில் அல்லது பெருமாளுக்கு எதிரில்தான் அருள் பாலிப்பார். ஆனால் அனுமன் பெருமாள் கோவில்களில் இருந்தாலும், அவருக்கென்று தனியாகவும் பல ஆலயங்கள் எழுப்பப்பட்டு இருக்கின்றன. அதற்கு அவரது தியாகமும், தன்னலமற்ற இறை சேவையும்தான் காரணம்.
- கடலைப் போன்ற அகன்ற பரப்புடைய நீரைக் கொடுக்கக்கூடிய மழைக் கடவுளே!
- சிவபெருமானை பாடித் தொழுது உள்ளம் உருகி நிற்கின்றோம்!
திருப்பாவை
பாடல்:
ஆழி மழைக்கண்ணா! ஒன்றுநீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொ டார்த்தேறி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழி போல் மின்னி, வலம்புரி போல் நின்றதிர்ந்து,
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய், நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.
விளக்கம்:
கடலைப் போன்ற அகன்ற பரப்புடைய நீரைக் கொடுக்கக்கூடிய மழைக் கடவுளே! நீ ஒன்றையும் மறைக்காதே! பெரும்கடலில் புகுந்து நீரை முகந்து, சத்தத்துடன் மேலே எழுந்து, காலத்தின் முதன்மையாய் விளங்கும் எம்பெருமானின் வடிவம் போல உடல் கறுத்து. பத்மநாபனின் வலது கையில் விளங்கும் சக்கரம் போல மின்னுவாய். அவன் இடது கரத்திலுள்ள வலம்புரிச் சங்கைப் போல இடி இடித்து முழங்குவாய். அவனது சாரங்கம் வில்லில் இருந்து புறப்படும் அம்புகளைப் போல, பெய்யும் மழை உலகை வாழச் செய்வதாய் இருக்கட்டும். நாங்களும் மார்கழி நோன்பிற்காக மகிழ்ந்து நீராடுவோம்!
திருவெம்பாவை
பாடல்:
ஒண்ணித் திலநகையாய்! இன்னம் புலர்ந்தின்றோ?
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ?
எண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே!
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உள்நெக்கு நின்றுருக யாமாட்டோம் நீயே வந்து
எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய்.
விளக்கம்:
(தோழிகள்), "ஒளி வீசும் முத்துக்களைப் போன்ற சிரிப்பை கொண்ட பெண்ணே! உனக்கு இன்னுமா பொழுது விடியவில்லை?". (உறங்கும் பெண்), "கிள்ளை மொழி பேசும் நம் தோழிகள், அனைவரும் வந்து விட்டனரா?". (தோழிகள்), "நீயே எண்ணிப் பார்த்துக்கொள். நாங்கள் சொல்ல மாட்டோம். அதுவரை உறங்கி வீணாக காலத்தைக் கடத்தாதே. விண்ணுலகில் உள்ள யாவர்க்கும் அருமருந்தானவனும், வேதத்தின் உயர் பொருளாக விளங்குபவனும், கண்ணுக்கு இனிய பரம்பொருளாக இருப்பவனுமாகிய சிவபெருமானை பாடித் தொழுது உள்ளம் உருகி நிற்கின்றோம்! நீயே வந்து எண்ணிப் பார்த்து, எண்ணிக்கை குறைந்தால் தூங்கிக் கொள்வாய்!"
- திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
- குறுக்குத் துறை ஸ்ரீ குருபகவானுக்கு அபிஷே கம், அலங்காரம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு மார்கழி-4 (வியாழக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: சதுர்த்தி நண்பகல் 1.10 மணி வரை பிறகு பஞ்சமி
நட்சத்திரம்: ஆயில்யம் நாளை விடியற்காலை 5.07 மணி வரை பிறகு மகம்
யோகம்: சித்த, அமிர்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம்: தெற்கு
நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை மற்றும் மைசூர் மண்டபம் எழுந்தருளல். ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. குறுக்குத் துறை ஸ்ரீ குருபகவானுக்கு அபிஷேகம், அலங்காரம் வழிபாடு. திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சனம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திருப்போரூர் ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம். பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வரர் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-போட்டி
ரிஷபம்-வெற்றி
மிதுனம்-செலவு
கடகம்-சிறப்பு
சிம்மம்-தடை
கன்னி-தாமதம்
துலாம்- நிறைவு
விருச்சிகம்-மாற்றம்
தனுசு- வரவு
மகரம்-புகழ்
கும்பம்-முயற்சி
மீனம்-பாராட்டு
- லலிதாம்பிகையே ஸ்ரீகாளிமாதா, துர்காதேவி, பராசக்தி, பகவதி, பிரபஞ்சத்தின் தாய்.
- ஒவ்வொரு நாமமும் மிகவும் சக்தி வாய்ந்தது.
மனித உடலில் குண்டலினி சக்திதான் மிகவும் உயர்ந்தது.
லலிதா சகஸ்ரநாமம் உடலில் உள்ள ஆறு சக்கரங்களையும் குண்டலினி சக்தியினையும் கூறுகின்றது.
'லலிதாம்பிகை சிவ சக்தி ஒன்றாய் இணைந்தவள்'லலிதா சகஸ்ர நாமத்தினையும், ஸ்ரீவித்யாவினையும் படிக்க அரிய ஜாதி, மத, இன வேறுபாடு கிடையாது.
உயர் பண்புகளை தன்னுள் வளர்த்துக் கொள்வோர் அனைவரும் படிக்கலாம்.
லலிதா சகஸ்ரநாமத்தின் முக்கியத்துவத்தினை மேலும் கூறும் பொழுது
* லலிதாசகஸ்ரநாமம் சொல்வது லலிதாம்பிகைக்கு மிகவும் பிடித்தமானது. வேதத்திலும், தந்திரத்திலும் இதற்கு நிகரானது இல்லை.
* இதனை தினமும் சொல்வது புனித நீரில் நீராடிய புண்ணியத்தினை தரும்.
* உணவுப்பொருள், நிலம், பசு தானம் செய்த புண்ணியம் கிடைக்கும்
* குழந்தைவரம் வேண்டுவோர் குழந்தை பாக்கியம் பெறுவர்.
* அன்றாடம் சொல்வதால் தீமைகள் விலகும்.
* பூஜை செய்யும் முறைகளில் செய்யும் தவறுகளால் ஏற்படும் பாவம் நீங்கும்.
* அன்றாட நித்திய பூஜை முறைகளையும், அவரவர் குடும்ப வழி பூஜைகளையும் செய்யாது இருப்போருக்கு ஏற்படும் பாவம் நீங்கும்.
* கிரக தோஷங்களால் ஏற்படும் தீமைகள் நீங்கும்.
* எதிரிகள் நீங்குவர்.
* வெற்றி கிட்டும்.
* பொன், பொருள், புகழ் சேரும்.
* லலிதா சகஸ்ரநாமம் அன்றாடம் சொல்வது ஒரு தவம்.
* இறைவனுக்கு வேறு எதனையும் அளிக்க வழி இல்லை. எனினும் இந்த நாமத்தினைச் சொல்வதே போதும்.
* தன்னம்பிக்கை கூடும்.
* லலிதாம்பிகையே ஸ்ரீகாளிமாதா, துர்காதேவி, பராசக்தி, பகவதி, பிரபஞ்சத்தின் தாய்.
* ஒவ்வொரு நாமமும் மிகவும் சக்தி வாய்ந்தது.
படிக்க ஆரம்பித்தால் 1000 நாமத்தினையும் முழுமையாக சொல்லி முடிக்க வேண்டும்.
பகுதி பகுதியாக இடைவெளி விட்டு சொல்ல வேண்டாம். காலை மாலை இருவேளையும் உகந்த நேரம். ஒருகுரு மூலம் ஆரம்பித்துக்கொள்வது மிகவும் நல்லது.
- லலிதாம்பிகையின் வழிபாட்டினை பக்தியோகம், கர்மயோகம், ராஜயோகம், ஞானயோகம் என எந்த முறையிலும் வழிபடலாம்.
- இல்லற வழியில் இருப்பவர்களும் வழிபடலாம். துறவற வழியில் இருப்பவர்களும் வழிபடலாம்.
இன்று வரை லலிதா சகஸ்ரநாமம் மிக சக்திவாய்ந்த ஸ்லோகமாக பல தீமைகளை நீக்கி, நன்மைகளைப்பெற வைக்கும் வழிபாட்டு முறையாக பின்பற்றப்படுகின்றது.
பக்தியோடு இதனைச் சொல்ல நோய் நீங்கும். லலிதா என்றால் அழகு என்றும் பொருள்படும்.
ஞான மார்க்கமாக வழிபடும் பொழுது 'ஸ்ரீ வித்யா' எனப்படும் ஞான அறிவு கிட்டும். அனைத்து ஆத்மாவினுள்ளும் இருக்கும் அம்பிகையினை உணர முடியும்.
அளவிடமுடியாத அம்பிகையின் அருளினை உணர முடியும்.
உள்ளுணர்வு கூடும். அந்த உள்ளுணர்வே அம்பிகைதான் என்று புரியும். சக்தி வழிபாட்டினை 'ஸ்ரீ' என்ற எழுத்தின் மூலம் வழிபடுவது ஸ்ரீவித்யா.
பிரபஞ்சமே ஸ்ரீசக்கரம் தான். மந்த்ர, யந்த்ர, தந்தர என்ற மூன்றும் இணைந்ததே ஸ்ரீ வித்யா வழிபாடு. பிரம்ம வித்தையும், ஸ்ரீ வித்தையும் ஒன்றே.
லலிதாம்பிகையின் வழிபாட்டினை பக்தியோகம், கர்மயோகம், ராஜயோகம், ஞானயோகம் என எந்த முறையிலும் வழிபடலாம்.
இல்லற வழியில் இருப்பவர்களும் வழிபடலாம். துறவற வழியில் இருப்பவர்களும் வழிபடலாம்.
எல்லா வழியும் அம்பிகையின் வழிதான். அம்பிகையும் எவ்வழியிலும் செய்யும் வழிபாட்டினையும் ஏற்றுக்கொள்கிறாள்.
- என் பக்தர்கள் இதனைச் சொல்லி என்னை வந்து அடையும் பாதையாக அமையட்டும் எனக் கூறினார்.
- அதன்படி வாசினி உட்பட எட்டு வாக்கு தேவதைகள் மிக ரகசியமான மந்த்ரமாக ‘லலிதா சகஸ்ரநாமம்’ ஸ்லோகத்தினை உருவாக்கினர்.
லலிதா சகஸ்ரநாமம் பிரம்மாண்ட புராணத்தில் 36 வது பிரிவாக லலிதோபகன்யா என்று வருகின்றது.
அகத்திய மாமுனிவருக்கும் ஹயக்கிரீவருக்கும் இடையே நடைபெறும் விவாதமாக இடம் பெற்றுள்ளது. ஹயக்கிரீவர் ஸ்ரீ மகாவிஷ்ணுவின் மறு உருவமே.
ஹயக்கிரீவர் அகத்தியரிடம் லலிதமகா திரிபுர சுந்தரியின் மகிமைகளையும் விளையாடல்களையும் கூறுகின்றார்.
ஸ்ரீபுரம் எனும் அம்பிகையின் இருப்பிடமான ஊரினைப்பற்றி விவரிக்கின்றார். அம்பிகையினை உச்சரிக்கும் மந்திரங்களின் மகிமையைப்பற்றிக் கூறுகின்றார்.
பஞ்சசடாஷ்சரி என ஒன்று படும் ஸ்ரீயந்த்ரம், ஸ்ரீவித்யா, லலிதாம்பிகா, ஸ்ரீகுரு மற்றும் தேவியை உபசரிக்கும், தேவியின் பணிகளைச் செய்யும் மற்ற தெய்வங்கள் தேவதைகளைப்பற்றி கூறுகின்றார்.
இத்தனையும் கூறினாலும் ஹயக்கிரீவர் அகத்தியரிடம் லலிதா சகஸ்ரநாமத்தினைப் பற்றி கூறவில்லை.
அகத்திய மாமுனி பலமுறை ஹயக்கிரீவரிடம் கேட்ட பிறகே ஹயக்கிரீவர் அம்பிகையின் ஆயிரம் நாமங்களைப் பற்றிச் சொல்கின்றார்.
இதிலிருந்தே இந்த ஆயிரம் நாமங்களின் புனிதத்தினை நாம் உணரலாம் அல்லவா.
ஒரு சமயம் லலிதாம்பிகை வாசினி மற்றும் வாக்கு தேவதைகளை நோக்கி 'நான் உங்களுக்குக் கட்டளையிடுகின்றேன்.
யார் யார் ஸ்ரீ சக்ரம், ஸ்ரீ வித்யா மற்றும் பிற மந்திரங்களை அறிந்தவர்களோ அவர்கள் என்னைப் பற்றிக் கூறும் ஆயிரம் நாமங்கள் கொண்ட சுலோகங்களை உருவாக்குங்கள்.
என் பக்தர்கள் இதனைச் சொல்லி என்னை வந்து அடையும் பாதையாக அமையட்டும் எனக் கூறினார்.
அதன்படி வாசினி உட்பட எட்டு வாக்கு தேவதைகள் மிக ரகசியமான மந்த்ரமாக 'லலிதா சகஸ்ரநாமம்' ஸ்லோகத்தினை உருவாக்கினர்.
ஒரு நாள் அம்பிகை தன்னுடைய சிம்மாசனத்தில் அமர்ந்து இருந்தாள்.
இது கணக்கற்ற பரம்மாக்களும், கணக்கற்ற விஷ்ணுக்களும், கணக்கற்ற ருத்ரர்களும் மந்த்ரினி, டந்தினி போன்ற தேவதைகளும் அம்பிகையை கண்டு வணங்கும் ஒரு வாய்ப்பாக அமைந்தது.
அதன் பின்னர் லலிதாம்பிகை வாசினி உட்பட எட்டு தேவதைகளையும் லலிதா சகஸ்ரநாமத்தினை உச்சரிக்க கண்களால் ஆணையிட்டாள்.
கைகளையும் கூப்பி அவர்கள் லலிதா சகஸ்ரநாமத்தினைக் கூற அனைவரும் தெய்வ அருளில் நனைந்தனர்.
லோக மாத மனம் குளிர்ந்து கூறினாள். ' குழந்தைகளே, வாசினி உட்பட எட்டு வாக்கு தேவதைகளால் கூறப்பட்ட இந்த சகஸ்ரநாமம் உலக நன்மைக்காக என் இசைவால் கூறப்பட்டது.
இதனை படிப்பவர்கள் என்னை அடைந்து அனைத்து நன்மைகளையும் பெறுவர் என்றார்.
- "பிரம்மம் ஒன்றே சத்தியம். அந்த பிரம்மத்தை உணர்வதே ஆனந்தம். எல்லாம் அகண்ட பரிபூரண சச்சிதானந்த பரபிரம்மத்தின் ஸ்வரூபமே.
- நமக்கு அந்நியமாய் எதுவுமே இல்லை. எல்லாம் இறைவனே! அவனே நம்மை ஆட்டுவிக்கிறான்.
தமிழ்நாட்டில் அவதரித்த பெண் சித்தர்களில் மிகுந்த தனித்துவம் கொண்டவர் ஸ்ரீசக்கரத்தம்மாள். இவரது இயற்பெயர் அனந்தாம்பாள்.
1854ம் ஆண்டில், வடஆற்காடு மாவட்டத்தில் உள்ள தேவிகாபுரம் என்ற சிற்றூரில் பிறந்தார். தந்தை ஆலய அர்ச்சகர். தேவி உபாசனையில் தேர்ந்தவர்.
குழந்தை ஞானச் செறிவுடன் வளர்ந்து வரும் வேலையில் திடீரென்று தாயார் காலமானார். தந்தை அக்கால வழக்கப்படி மறுமணம் செய்து கொண்டார்.
சிற்றன்னையின் கவனிப்பில் குழந்தை வளர்ந்தது.
லலிதா சகஸ்ரநாமம், ஸ்ரீஸ்துதி போன்றவற்றை தந்தையிடமிருந்து கற்றுக்கொண்டு தினமும் ஓதி வந்தாள் சிறுமி அனந்தாம்பாள்.
கோவிலின் மேல்நிலைக்குச் சென்று தனியாக அமர்ந்து தியானம் செய்வது அவளுக்கு மிகவும் விருப்பமான ஒன்று.
திடீரென சிறுமிக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. சென்னை எழும்பூரில் இருந்த கோமளீஸ்வரர் மடத்தின் அதிபதியான சாம்பசிவனுடன் திருமணம் நடந்தது.
மணமாகிச் சென்னைக்கு வந்தாள் அனந்தாம்பாள். சிறுமியான அவள் திருமண வாழ்க்கை பற்றி அதிகம் அறிந்திருக்கவில்லை.
அதேசமயம் அவரது ஆன்மீக நாட்டம் நாளுக்கு நாள் வளர்ந்த வண்ணம் இருந்தது. தினந்தோறும் அருகில் உள்ள கோமளீஸ்வரர் கோவிலுக்குச் செல்வார்.
தியானத்தில் ஈடுபடுவார். லலிதா சகஸ்ரநாமம் சொல்லுவார். இறைவனை வேண்டி, உளம் உருக வழிபட்டு வருவார்.
ஒருநாள் கணவர் இறந்து விட்டார். அனந்தாம்பாளுக்கு மொட்டை அடிக்கப்பட்டதுடன், காவி வஸ்திரமும் அணிவிக்கப்பட்டது.
அதுமுதல் யாருடனும் எதுவும் பேசாமல், தன் வீட்டின் மொட்டை மாடியில் தனித்து அமர்ந்து தவம் செய்ய ஆரம்பித்தார். அப்போது அவருக்கு வயது 20.
"பிரம்மம் ஒன்றே சத்தியம். அந்த பிரம்மத்தை உணர்வதே ஆனந்தம். எல்லாம் அகண்ட பரிபூரண சச்சிதானந்த பரபிரம்மத்தின் ஸ்வரூபமே.
நமக்கு அந்நியமாய் எதுவுமே இல்லை. எல்லாம் இறைவனே! அவனே நம்மை ஆட்டுவிக்கிறான்.
பக்தியுடன் அவன் தாள் பணிவதே மனிதப் பிறவியின் பயன்பாடு" என்றெல்லாம் அவர் உபதேசித்ததைக் கேட்ட மக்கள் பலரும் அவரை நாடி வந்து பணிந்தனர்.
தான், தனது' என்ற அகந்தை இருக்கும்வரை மெய்ஞ்ஞானம் சித்திக்காது. உண்மையை அறிந்து கொள்ளவும் இயலாது.
இவ்வாறு பல்வேறு ஆற்றல்கள் பெற்றிருந்த அம்மா, 1901ம் ஆண்டு, பிப்ரவரி 28ம் நாள், இறை ஜோதியில் ஐக்கியமானார்.
அவருக்கு சென்னை திருவான்மியூரில், கலாசேத்ரா அருகே ஓர் அழகிய சமாதி ஆலயம் எழுப்பப்பட்டது.
பெண்கள் மெய்ஞ்ஞானம் பெறத் தகுதியானவர்களே என்று வாழ்ந்து காட்டிய மகா தபஸ்வினி ஸ்ரீ சக்கரத்தம்மாளின் ஞான வாழ்க்கை புனிதமானது.
அவர் அந்த சக்தியை பெற ஸ்ரீலலிதா சகரஸ்நாமம்தான் அடித்தளம் அமைத்து கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- லலிதா என்றால் ‘விளையாடுபவள்’ என்று பொருள் படும். ஆம் இந்த உலகில் அன்னை லோக மாதா நம் அம்மாதானே.
- அவ்வன்னையின் குழந்தைகள் நாம். நாம் ஏன் வாழ்க்கையை சுமையாகவும், கடினமாகவும் கொண்டு வாழவேண்டும்.
எத்தனை தெய்வங்களின் வழிபாட்டு முறைகள் இருந்தாலும் அம்பிகையினை குறிப்பிடும் பொழுது 'லோக மாதா' என்றே குறிப்பிடுவர்.
பொன், பொருள், புகழ் தரும் லலிதா சகஸ்ரநாமம் நம்நாட்டில் இந்துக்களின் வழிபாட்டு முறை நீண்ட கால பாரம்பரியம் கொண்டது.
புராணங்கள், வேதங்கள் இவற்றினை தான் ஆணி வேராகக் கொண்டது. மாத விழாக்கள், வருட விழாக்கள் என தெய்வங்களை விடாது கொண்டாடும் வழிமுறை வந்தது.
கணபதி வழிபாடு, சுப்ரமணிய வழிபாடு, சிவ வழிபாடு, விஷ்ணு வழிபாடு, அம்பிகை வழிபாடு, கிராம முறை வழிபாடு என பல பிரிவுகளை கொண்டது.
இதில் அம்பிகை வழிபாடு முறை நம் நாட்டின் மிகப்பெரிய கலாசார முறையாகும்.
எத்தனை தெய்வங்களின் வழிபாட்டு முறைகள் இருந்தாலும் அம்பிகையினை குறிப்பிடும் பொழுது 'லோக மாதா' என்றே குறிப்பிடுவர்.
பொதுவில் செவ்வாய், வெள்ளி என்ற வார நாட்களில் அநேக இந்து குடும்பங்கள் அம்பிகை பூஜை, அம்பிகை கோவில், விளக்கு பூஜை, மாவிளக்கு, நாகவழிபாடு, எலுமிச்சை விளக்கு என அம்பிகையின் வழிபாடு ஊரே களைகட்டி விடும்.
'லலிதா சகஸ்ரநாமம்' என்று அம்பிகையை ஆயிரம் நாமங்கள் கொண்டு துதிக்கும் முறையின் சிறப்பினை பற்றி சிறிதளவேனும் பார்ப்போம்.
லலிதா என்றால் 'விளையாடுபவள்' என்று பொருள் படும். ஆம் இந்த உலகில் அன்னை லோக மாதா நம் அம்மாதானே.
அவ்வன்னையின் குழந்தைகள் நாம். நாம் ஏன் வாழ்க்கையை சுமையாகவும், கடினமாகவும் கொண்டு வாழவேண்டும்.
மகிழ்வாக, சகல நன்மைகளையும் நம் அன்னையிடம் பெற்று வாழ்ந்து பின் அன்னையையே சேர்ந்து விடலாம்.
- வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 10 நாட்கள் பக்தர்கள் துவார தரிசனம்.
- 8 மையங்கள் அமைத்து நேரடியாக இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட உள்ளது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் ஜனவரி மாதம் 10-ந் தேதி முதல் 19-ந் தேதி வைகுண்ட ஏகாதசி துவாரகா தரிசனம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து நேற்று அன்னமய்யா பவனில் முதன்மை செயல் அலுவலர் சியாமலா ராவ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் அவர் கூறியதாவது:-
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 10 நாட்கள் பக்தர்கள் துவார தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்வதற்காக வருகிற 23-ந்தேதி காலை 11 மணிக்கு 10 நாட்களுக்கான ஸ்ரீ வாணி அறக்கட்டளை டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.
இதேபோல் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் 24-ந் தேதி ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. நேரடி இலவச தரிசன நேர ஒதுக்கீடு டிக்கெட்டுகள் வைகுண்ட ஏகாதசி 2 நாட்கள் முன்னதாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக திருப்பதியில் 8 மையங்கள் அமைத்து நேரடியாக இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட உள்ளது.
வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு வழங்குவதற்காக தினமும் 3.50 லட்சம் லட்டுகள் தயார் செய்யப்பட உள்ளது. காலை 6 மணி முதல் நள்ளிரவு வரை டீ, காபி, பால், உப்புமா, சர்க்கரை பொங்கல், பொங்கல் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும்.
வைகுண்ட ஏகாதசி அன்று காலை 9 மணி முதல் 11 மணி வரை சுவர்ண ரத்தின அலங்காரத்தில் ஏழுமலையான் அருள் பாலிப்பார்.
துவாதசி நாட்களில் அதிகாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை புஷ்கரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.






