என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    • சிவபெருமானின் உக்கிரம் தணிய வேண்டுமானால், பூமி குளிர வேண்டும்.
    • இதை கருத்தில் கொண்டும் அக்கினி நட்சத்திர நாட்களில் சிவபெருமானுக்கு தாரா அபிஷகம் செய்யப்படுகிறது.

    சைவத்தில் சிவபெருமானே.... நாம் வாழும் உலகமாக கருதப்படுகிறார்.

    சிவபெருமானின் உக்கிரம் தணிய வேண்டுமானால், பூமி குளிர வேண்டும்.

    இதை கருத்தில் கொண்டும் அக்கினி நட்சத்திர நாட்களில் சிவபெருமானுக்கு தாரா அபிஷகம் செய்யப்படுகிறது.

    தாரா அபிஷேகம் செய்யப்படுதால் திருவண்ணாமலை ஆலயத்தின் தினசரி வழிபாட்டு முறைகளில் எந்தவித மாற்றமும் செய்ய மாட்டார்கள்.

    வழக்கமான நேரங்களில் உரிய வழிபாட்டை செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    பொதுவாக லிங்கத்துக்கு சந்தனப் பொட்டு வைத்து, "ஓம் நமச்சிவாய" மந்திரத்தை சொல்லி, வெறும் தண்ணீரை ஊற்றி அபிஷேகம் செய்தாலே பலன் கிடைக்கும் என்பார்கள்.

    ஜலதாரை எனப்படும் தாரா அபிஷேகம் செய்யும்போது அண்ணாமலையார் மனம் குளிர்ந்து அதிகமான பலன்களை வாரி வழங்குவார் என்பது நம்பிக்கையாகும்.

    தாரா அபிஷேகம் செய்ய, தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்து உதவி செய்தால் குழந்தை இல்லாதவர்களுக்கு சந்தான விருத்தி ஏற்படும். நோய்கள் நீங்கும்.

    சர்க்கரை கலந்த பாலை தாராபிஷேகம் செய்தால் கெட்ட சக்திகள் நம்மை அணுகாது.

    தீய எண்ணத்துடன் நம்முடன் பழகுபவர்கள் விலகி சென்று விடுவார்கள். பயம் நீங்கும்.

    தாராபிஷேகம் தவிர பொதுவாக சிவபெருமானுக்கு தேன் அபிஷேகம் செய்தால் தோல் நோய் குணமாகும். கரும்புச் சாறு அபிஷேகம் செய்தால் முக்தி பெறலாம்.

    • இந்த தாரா அபிஷேகத்துக்காக பெரும்பாலும் கூம்பு வடிவ செப்பு பாத்திரத்தை பயன்படுத்துவார்கள்.
    • அதில் நிரப்பப்படும் தண்ணீரில் பன்னீர், பச்சைக் கற்பூரம், ஏலக்காய் உள்ளிட்ட வாசனைத் திரவியங்கள் சேர்க்கப்படும்.

    தாரா அபிஷேகம் என்பது சிவலிங்கத்துக்கு மேல் ஒரு பாத்திரம் கட்டி, அதன் அடியில் சிறு துளையிட்டு, அதில் இருந்து சொட்டு, சொட்டாக லிங்கம் மீது தண்ணீரை விழ வைப்பதாகும்.

    இந்த தாரா அபிஷேகத்துக்காக பெரும்பாலும் கூம்பு வடிவ செப்பு பாத்திரத்தை பயன்படுத்துவார்கள்.

    அதில் நிரப்பப்படும் தண்ணீரில் பன்னீர், பச்சைக் கற்பூரம், ஏலக்காய் உள்ளிட்ட வாசனைத் திரவியங்கள் சேர்க்கப்படும்.

    அந்த நறுமணத் தண்ணீர் சொட்டு, சொட்டாக விழும் போது, சிவபெருமானின் உஷ்ணம் தணிந்து குளிர்ச்சியாகி விடுவார்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் ஆண்டு தோறும் அக்கினி நட்சத்திர நாட்களில் தினமும் ஜலதாரை எனப்படும் தாரா அபிஷேகம் செய்யப்படுகிறது.

    காலை 10 மணிக்கு உச்சிக்கால பூஜையின்போது அண்ணாமலையார் மீது தாரா அபிஷேக பாத்திரம் தொங்க விடப்படும்.

    சாயங்காலம் சாயரட்சை பூஜை நடக்கும் வரை அண்ணாமலையார் மீது சொட்டு, சொட்டாக தாரா பாத்திரத்தில் இருந்து தண்ணீர் விழுந்து கொண்டே இருக்கும்.

    அந்த சமயத்தில் வாசனைத் திரவியங்கள் கலந்த தண்ணீரை அண்ணாமலையார் ழுமுமையாக பெற வேண்டும் என்பதற்காக பெரிய அளவில் அலங்காரம் செய்ய மாட்டார்கள்.

    அண்ணாமலையாருக்கு வழக்கமாக சாற்றப்படும் கிரீடம், நாகாபரணம், கவசம் உள்ளிட்டவை தாராபிஷேகம் சமயத்தில் இடம் பெறாது.

    இதன் காரணமாக தாரா அபிஷேகம் தண்ணீரை பெற்று அண்ணாமலையார் குளிர்ச்சி பெறுகிறார்.

    • சிவபெருமானை பொருத்தவரை அவருக்கு வெப்பம் என்பதே பிடிக்காது. அவர் குளிர்ச்சியை விரும்புபவர்.
    • இதன் பின்னணியில் ஒரு புராண கதை உள்ளது.

    கோடை வெயிலில் இருந்து தப்பிக்க நாம் பலவிதமான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

    அதுபோல நாம் வழிபடும் தெய்வங்களுக்கும் கோடை வெயில் தோஷத்தை நிவர்த்தி செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்வது உண்டு.

    இதற்கான பூஜை முறைகளை நம் முன்னோர்கள் ஏற்படுத்தியுள்ளனர்.

    பொதுவாக அக்கினி நட்சத்திரம் என்பது சூரிய பகவான் பரணி நட்சத்திரத்தின் 3ம் பாதத்தில் இருந்து ரோகிணி நட்சத்திரத்தின் முதல் பாதத்தை கடக்கும் வரையிலான நாட்களைக் குறிக்கும்.

    அதாவது சூரிய பகவான் 20 டிகிரியில் இருந்து 43 டிகிரி வரை பயணிக்கும் காலமாகும்.

    இந்த காலக் கட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

    சிவபெருமானை பொருத்தவரை அவருக்கு வெப்பம் என்பதே பிடிக்காது. அவர் குளிர்ச்சியை விரும்புபவர்.

    இதன் பின்னணியில் ஒரு புராண கதை உள்ளது.

    அமிர்தம் எடுப்பதற்காக பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடைந்தனர். அப்போது ஆலகால விஷம் தோன்றியது.

    இதனால் தேவர்களை காப்பாற்றுவதற்காக சிவபெருமான் அந்த ஆலகால விஷத்தை எடுத்து குடித்து விட்டார்.

    இதன் காரணமாக சிவபெருமானின் உடல் முழுவதும் வெப்பம் பரவியது.

    அவரது நெற்றிக்கண்ணும் வெப்பத்தால் தகித்தது. இதனால் சிவபெருமான் தலையில் கங்கையையும் நிலாவையும் சூடினார்கள்.

    அப்படி இருந்தும் சிவபெருமானின் உடல் வெப்பம் குறையவில்லை.

    இதனால் அவர் உடல் சூட்டை தணிக்க அபிஷேகங்கள் செய்தனர்.

    இடைவிடாது செய்யப்பட்ட அந்த அபிஷேகங்கள் காரணமாக, சிவபெருமான் அபிஷேகப் பிரியராக மாறினார்.

    சிவபெருமானுக்கு நாம் எந்த அளவுக்கு அபிஷேகம் செய்கிறோமோ அந்த அளவுக்கு அவர் உடலும், உள்ளமும் குளிர்ச்சியாகி, மனம் மகிழ்ந்து நமக்கு நல்ல வரங்களை தந்தருள்வார் என்பது பக்தர்கள் நம்பிக்கையாகும்.

    எனவே அக்கினி நட்சத்திர நாட்களில் சிவபெருமானை குளிர்ச்சிப்படுத்தும், விதமாக அபிஷேகங்கள் செய்வார்கள். அதில் முக்கியமானது தாரா அபிஷேகமாகும்.

    • கேது பகவான் ‘ஞானகாரகன்’ என்று போற்றப்படுகிறார்.
    • அனைத்து உற்சவங்களும் இங்கே வெகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றன.

    கோவில் தோற்றம்

    சென்னையை அடுத்துள்ள போரூருக்கு அருகில் இருக்கிறது, கெருகம்பாக்கம் என்ற ஊர். இங்கு ஆதிகாமாட்சி உடனாய திருநீலகண்டேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.


    சென்னையில் அமைந்துள்ள நவக்கிரக தலங்களில் இது கேது பரிகாரத் தலம் ஆகும். எனவே இதனை 'வடகீழ்ப்பெரும்பள்ளம்' என்று அழைக்கிறார்கள்.

    கேது பகவான், ஜோதிட சாஸ்திரப்படி 'ஞானகாரகன்' என்று போற்றப்படுகிறார். எந்த ஒரு குறிக்கோளும் இல்லாது வாழ்பவர்கள், கேதுவின் அருளால் சட்டென்று ஞானப்பாதைக்குத் திரும்புவார்கள்.

    ஒருவரின் ஜாதகத்தில் கேதுவின் நிலை சரியில்லை என்றால், அந்த நபர் எந்த ஒரு காரியத்தைத் தொடங்கினாலும், அது அவ்வளவு எளிதில் வெற்றியை அடையாது.

    தேவர்களும், அசுரர்களும் அமிர்தம் பெற வேண்டி பாற்கடலைக் கடைந்தனர். அப்போது வலி மிகுதியால் வாசுகி பாம்பானது நஞ்சை கக்கியது. அதேநேரம் பாற்கடலில் இருந்தும் நஞ்சு உருவானது. இவை இரண்டும் சேர்ந்து 'ஆலகாலம்' என்ற கொடிய விஷமாக மாறின.

    இந்த ஆலகால விஷத்தால் உலகமே அழியும் நிலை உருவாகும் என்பதால், தேவர்கள் அனைவரும் அஞ்சினர். அப்போது ஈசன், அந்த நஞ்சை அருந்தினார்.

    இதனால் பதறிப்போன பார்வதிதேவி, அந்த நஞ்சு இறைவனின் உடலில் இறங்காதபடி, அவரது கண்டத்தை இறுகப்பற்றினார். இதனால் நஞ்சு, ஈசனின் கழுத்திலேயே நின்றது. இதன் காரணமாகவே, சிவபெருமானுக்கு 'நீலகண்டர்' என்ற பெயர் வந்தது.


    அந்த திருநீலகண்டேஸ்வரரின் நாமத்தோடு, அமைந்த ஆலயம்தான் கெருகம்பாக்கத்தில் உள்ள ஆதிகாமாட்சி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவில் ஆகும். தெற்கு திசை நோக்கி அமைந்துள்ளது, இந்த திருக்கோவில். கருவறையில் ஈசன் திருநீலகண்டேஸ்வரராக லிங்க ரூபத்தில் கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். அவருக்கு எதிரே நந்திகேஸ்வரர் வீற்றிருக்கிறார்.

    திருநீலகண்டேஸ்வரரே இத்தலத்தில் கேது பகவானாக அருள்பாலிப்பதாக சொல்கிறார்கள். அதன் காரணமாக இத்தலத்தில் கேது பகவானுக்கென தனிச் சன்னிதி இல்லை. கருவறையில் உள்ள சிவலிங்கத்தின் பாணமானது பாம்பினுடைய தலையாகவும், ஆவுடையார் சுற்று பாம்பின் உடல் பகுதியாகவும், அடிப்பாகம் பாம்பின் வால் பகுதியாகவும் பாவிக்கப்படுகிறது.

    இவ்வாலய அம்பாள், 'ஆதிகாமாட்சி' என்ற திருநாமத்துடன் தெற்கு நோக்கி அருள்கிறார். அழகே உருவாய் அமைந்த இந்த அம்பாளின் எதிரில் அவளது வாகனமான சிம்மம் காட்சி தருகிறது. விநாயகப் பெருமான் 'சங்கடஹர கணபதி' என்ற திரு நாமத்தோடு தனிச் சன்னிதியில் அருள்கிறார்.

    அம்பாள் சன்னிதிக்கு அருகில் காலபைரவருக்கும் தனிச்சன்னிதி இருக்கிறது. தவிர சண்டிகேஸ்வரர், சூரியன், சந்திரன் ஆகியோரும் பக்தர் களுக்கு காட்சி தருகிறார்கள். இவ்வாலயத்தின் முன்மண்டபத் தூண்களில் கேது பகவான், பைரவர் உள்ளிட்ட பல தெய்வங் களின் புடைப்புச் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன.

    வெளிச்சுற்றில் நாகராஜர் சன்னிதி உள்ளது. இச்சன்னிதியில் இரு நாகங்கள் பின்னிப் பிணைந்த நிலையில் நடுவில் காளிங்க நர்த்தன கண்ணன் அருள்பாலிக்கிறார். சிவனுக்கும் நந்திக்கும் நடுவில் உள்ள விதானத்தில், சூரியனை கேது பகவான் விழுங்குவது போன்ற சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.

    இதற்கு நேர் கீழே நின்றபடி, ஈசனையும் அம்பாளையும் மனமுருக வேண்டிக் கொண்டால், கேதுவின் கெடுபலன்கள் விலகும் என்பது ஐதீகம். இத்தலத்தின் தல விருட்சமாக வில்வ மரம் இருக்கிறது. இந்த ஆலயத்திற்கு தீர்த்தம் இல்லை.

    சிவத்தலங்களுக்கே உரிய அனைத்து உற்சவங்களும் இங்கே வெகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. குறிப்பாக சிவராத்திரி, ராகு - கேது பெயர்ச்சி, பிரதோஷம், பவுர்ணமி, காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி, விநாயகருக்கு சங்கடகர சதுர்த்தி, பங்குனி உத்திரம் அன்று அம்பாளுக்கு பூச்சொரிதல் (புஷ்பாபிஷேகம்) முதலான பல உற்சவங்கள் இத்தலத்தில் நடைபெறுகின்றன. இவ்வாலயம் தினமும் காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.


    அமைவிடம்

    கிண்டி - ராமாபுரம் வழியாக போரூர் செல்லும் மார்க்கத்தில் அமைந்துள்ளது, கெருகம்பாக்கம். போரூர் சந்திப்பில் இருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் கெருகம்பாக்கம் இருக்கிறது.

    கெருகம்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. குன்றத்தூரில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் கெருகம்பாக்கம் உள்ளது.

    • தூய்மையான மலர்கள் தூவி வணங்கி, புகழ் பாடி, மனதில் தியானிப்போம்.
    • மலை போன்ற தோற்றத்தை உடைய சிவ பெருமானை திருமாலும், பிரம்மனுமே அறிய முடியவில்லை.

    திருப்பாவை

    பாடல்:

    மாயனை மன்னு வட மதுரை மைந்தனைத்

    தூய பெருநீர் யமுனைத் துறைவனை,

    ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை,

    தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைத்

    தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுது

    வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க

    போய பிழையும் புகுதருவான் நின்றனவும்

    தீயினில் தூசாகும்! செப்பேலோ ரெம்பாவாய்.

    விளக்கம்:

    மாயம் நிறைந்தவனும், வட மதுரையில் அவதரித்தவனும், தூய்மையான பெரிய யமுனை நதியில் விளையாடியவனும், இடையர் குலத்தில் தோன்றிய ரத்தின தீபம் போன்றவனும், தான் பிறந்த தேவகியின் வயிற்றிற்கு பெருமை சேர்த்து தாமோதரன் என்று பெயர் பெற்றவனை, தூய்மையான மலர்கள் தூவி வணங்கி, அவன் புகழ் பாடி, மனதில் தியானிப்போம். செய்த பாவங்களும், வந்து சேர இருக்கும் வினைகளும் தீயில் இட்ட பஞ்சு போல மறைந்து போகச் செய்யும் அவன் திருநாமங்களைச் சொல்வோம்.

    திருவெம்பாவை

    பாடல்:

    மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம்

    போலறிவோம் என்றுள்ள பொக்கங்களேபேசும்

    பாலூறு தேன்வாய் படிறீ கடை திறவாய்!

    ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்

    கோலமும் நம்மையாட் கொண்டருளிக் கோதாட்டும்

    சீலமும் பாடிச் சிவனே! சிவனே! என்று

    ஓலம் இடினும் உணராய் உணராய்காண்!

    ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய்.

    விளக்கம்:

    நறுமணம் வீசும் பொருட்களைப் பூசிய மணம் வீசும் கூந்தலையுடைய பெண்ணே! மலை போன்ற தோற்றத்தை உடைய சிவ பெருமானை திருமாலும், பிரம்மனுமே அறிய முடியவில்லை. அப்படிப்பட்டவனை நாம் அறிவோமென்று நீ வேடிக்கையாகப் பேசுகிறாய். தேனும் பாலும் கலந்து வேடிக்கையாகப் பேசும் திறம் படைத்தவளே! வாசலைத் திறப்பாய். மண்ணும் விண்ணும், மற்ற எதனாலும் அறிந்து கொள்ள இயலாத தன்மையுடையவனும், நம்மை அருளால் சீராட்டுபவனுமாகிய இறைவனைப் பாடுகின்றோம். 'சிவனே! சிவனே' என்று அவனது பெயரை உரக்கக் கூவுகிறோம். அதை உணராமல் உறங்கும் நீ. எப்போது உணரப் போகிறாய்? எழுந்திடுவாய்!

    • ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் புறப்பாடு.
    • திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் கிளி வாகன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு மார்கழி-5 (வெள்ளிக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: பஞ்சமி நண்பகல் 1.55 மணி வரை பிறகு சஷ்டி

    நட்சத்திரம்: மகம் (முழுவதும்)

    யோகம்: மரணயோகம்

    ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் புறப்பாடு. ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் கிளி வாகன சேவை. திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் சுந்தர குசாம்பிகை புறப்பாடு. இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மனுக்கு அபிஷேகம், கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமிக்கு திருமஞ்சன சேவை. படைவீடு ஸ்ரீ ரேணுகாம்பாள் புறப்பாடு. தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை கோவில்களில் சிறப்பு அபிஷேகம், வழிபாடு. லால்குடி ஸ்ரீ பிரவிருந்த ஸ்ரீமதி என்கிற பெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. கீழ்த் திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சன சேவை. மாலை ஊஞ்சல் சேவை. மாடவீதி புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பொறுமை

    ரிஷபம்-பெருமை

    மிதுனம்-நன்மை

    கடகம்-உவகை

    சிம்மம்-கவனம்

    கன்னி-ஆக்கம்

    துலாம்- சிறப்பு

    விருச்சிகம்-உழைப்பு

    தனுசு- தேர்ச்சி

    மகரம்-தெளிவு

    கும்பம்-நிறைவு

    மீனம்-நிம்மதி

    • அரசனே எதிர்த்தாலும் அன்னையின் பக்தனிடம் தோல்வி அடைவான்.
    • இதனைப் பாராயணம் செய்பவன் பார்வை பட்டாலேதோஷங்கள் விலகிவிடும்.

    இதனைப் பாராயணம் செய்யும் பக்தனின் நாவில் சரஸ்வதிதேவி நர்த்தனம் ஆடுவாள்.

    எதிரிகளை பேசமுடியாது வாக்ஸ்தம்பம் செய்துவிடுவாள்.

    அரசனே எதிர்த்தாலும் அன்னையின் பக்தனிடம் தோல்வி அடைவான்.

    இதனைப் பாராயணம் செய்பவன் பார்வை பட்டாலேதோஷங்கள் விலகிவிடும்.

    ஸ்ரீ வித்யை போன்று மந்திரமோ, ஸ்ரீ லலிதாம்பிகையைப் போன்று தேவதையோ, லலிதா சகஸ்ரநாமம் போன்று ஸ்தோத்திரமோ உலகில் இல்லை.

    பூர்வ ஜென்ம புண்ணியத்தால் மட்டுமே இதனைப் பாராயணம் செய்யும் வாய்ப்பு கிட்டும்.

    கடைசிப் பிறவியாக இருந்தால் மட்டுமே ஸ்ரீவித்யா ஜெபமும், சகஸ்ரநாம பாராயணமும் செய்ய முடியும்.

    தேவியின் அருளின்றி யாரும் இதனைப் பெறமுடியாது "என்றெல்லாம் பலவாறாக பலச்ருதி என்ற பகுதியில் ஹயக்ரீவர் அகத்தியருக்கு உபதேசிக்கிறார்.

    • லலிதா சகஸ்ரநாமத்தின் பொருள் அறிந்து பாராயணம் செய்ய முயலுங்கள், எதை அடைய விரும்புகிறீர்களோ அது தானாய் வந்து சேரும்.
    • அகத்திய முனிவருக்கு லலிதா சகஸ்ர நாமத்தின் பெருமையைப் பற்றி எடுத்துக் கூறினார் ஹயக்கிரீவர்.

    லலிதா சகஸ்ரநாமத்தில் இன்னொரு சிறப்பு இதைப் பாராயணம் செய்யும் போது நமது சமயத்தின் அனைத்து கடவுளையும் வழிபட்ட புண்ணியம் நமக்கு சேரும்.

    எனவே லலிதா சகஸ்ரநாமத்தின் பொருள் அறிந்து பாராயணம் செய்ய முயலுங்கள், எதை அடைய விரும்புகிறீர்களோ அது தானாய் வந்து சேரும்.

    அகத்திய முனிவருக்கு லலிதா சகஸ்ர நாமத்தின் பெருமையைப் பற்றி எடுத்துக் கூறினார் ஹயக்கிரீவர்.

    இதைக்கேட்ட அகத்தியர் பெரிதும் மகிழ்ந்து, "லலிதா சகஸ்ரநாமத்தை எந்த தலத்திற்கு சென்று கூறினால் அன்னையின் அருள் முழுமையாக கிடைக்கும்?"என கேட்க அதற்கு ஹயக்கிரீவர், "பூலோகத்தில் அன்னை மனோன்மணியாக வீற்றிருக்கும் திருமீயச்சூர் சென்று அங்கு சகஸ்ரநாமத்தை கூறி அன்னையை வழிபடவும்" என்றார்.

    அகத்தியர் உடனே தன் மனைவி லோபமுத்திரையுடன் திருமீயச்சூர் சென்று லலிதாம்பிகையை தரிசித்து, லலிதா சகஸ்ரநாமம் சொன்னார்.

    அம்பாள் மகிழ்ந்து அத்தம்பதிகளுக்கு நவரத்தினங்களாக தரிசனம் தந்தாள்.

    ஞான கணேசா சரணம் சரணம்

    ஞான ஸ்கந்தா சரணம் சரணம்

    ஞான ஸத்குரோ சரணம் சரணம்

    ஞானா னந்தா சரணம் சரணம்

    காப்பு

    ஆக்கும் தொழில் ஐந்தரன் ஆற்றநலம்

    பூக்கும் நகையாள் புவனேஸ்வரிபால்

    சேர்க்கும் நவரத்தின மாலையினைக்

    காக்கும் கணநாயக வாரணமே.

    மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

    மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

    மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

    மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

    1. வைரம்

    கற்றும் தெளியார் காடே கதியாய்க்

    கண்மூடி நெடுங்கன வான தவம்

    பெற்றும் தெளியார் நிலையென்னில் அவள்

    பெருகும் பிழையேன் பேசத் தகுமோ

    பற்றும் வயிரப் படைவாள் வயிரப்

    பகைவர்க்கு எமனாக எடுத்தவளே

    வற்றாத அருள்சுனையே வருவாய்

    மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!

    2. நீலம்

    மூலக்கனலே சரணம் சரணம்

    முடியா முதலே சரணம் சரணம்

    கோலக்கிளியே சரணம் சரணம்

    குன்றாத ஒளிக்குவையே சரணம்

    நீலத் திருமேனியிலே நினைவாய்

    நினைவற்றெளியேன் நின்றேன் அருள்வாய்

    வாலைக் குமரீ வருவாய் வருவாய்

    மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!

    3. முத்து

    முத்தேவரும் முத்தொழிலாற்றிடவே

    முன்னின் றருளும் முதல்வி சரணம்

    வித்தே விளைவே சரணம் சரணம்

    வேதாந்த நிவாசினியே சரணம்

    தத்தேறிய நான் தனயன் தாய் நீ

    சாகாத வரம் தரவே வருவாய்

    மத்தேறு ததிக்கிணை வாழ்வடையேன்

    மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!

    4. பவளம்

    அந்தி மயங்கிய வானவி தானம்

    அன்னை நடம் செய்யும் ஆனந்த மேடை

    சிந்தை நிறம் பவளம் பொழிபாரோ

    தேன்பொழிலாமீது செய்தவள் யாரோ

    எந்தயிடத்தும் மனத்தும் இருப்பாள்

    எண்ணுபவர்க்குள் எண்ணமிகுந்தாள்

    மந்திரவேத மயப் பொருளானாள்

    மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!

    5. மாணிக்கம்

    காணக் கிடையாக் கதியானவளே

    கருதக் கிடையாக் கலையானவளே

    பூணக் கிடையாப் பொலிவானவளே

    புனையக் கிடையாப் புதுமைத்தவளே

    நாணித் திருநாமமும் நின்துதியும்

    நவிலாதவரை நாடாதவளே

    மாணிக்க ஒளிக்கதிரே வருவாய்

    மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!

    6. மரகதம்

    மரகத வடிவே சரணம் சரணம்

    மதுரிதபதமே சரணம் சரணம்

    சுரபதி பணியத் திகழ்வாய் சரணம்

    சுதிஜதி லயமே இசையே சரணம்

    அர ஹர சிவ என்றடியவர் குழும

    அவரருள் பெற அருளமுதே சரணம்

    வர நவநிதியே சரணம் சரணம்

    மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!

    7. கோமேதகம்

    பூமேவிய நான் புரியும் செயல்கள்

    பொன்றாது பயன் குன்றா வரமும்

    தீ மேல் இடினும் ஜெயசக்தி எனத்

    திடமாய் அடியேன் மொழியும் திறமும்

    கோமேதகமே குளிர்வான் நிலவே

    குழல் வாய் மொழியே வருவாய் தருவாய்

    மாமேருவிலே வளர் கோகிலமே

    மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!

    8. புஷ்பராகம்

    ரஞ்சனி நந்தினி அங்கணி பதும

    ராக விகாஸ வியாபினி அம்பா

    சஞ்சல ரோக நிவாரணி வாணீ

    சாம்பவி சந்த்ர கலாதரி ராணி

    அஞ்சல மேனி அலங்க்ருத பூரணி

    அம்ருத ஸொரூபிணி நித்ய கல்யாணி

    மஞ்சுள மேரு சிருங்க நிவாஸினி

    மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!

    9. வைடூர்யம்

    வலையத்த வினை கலையத்த மனம்

    மருளப் பறையாறொலி ஒத்த விதால்

    நிலையற்று எளியேன் முடியத் தகுமோ

    நிகளம் துகளாக வரம் தருவாய்

    அளவற்று அசைவற்று அநுபூதி பெறும்

    அடியார் முடிவாழ் வைடூர்யமே

    மலையத் துவசன் மகளே வருவாய்

    மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!

    பயன்

    எவர் எத்தினமும் இசையாய் லலிதா

    நவரத்தின மாலை நவின்றிடுவார்

    அவர் அற்புத சக்தி எல்லாம் அடைவார்

    சிவரத்தினமாய் திகழ்வார் அவரே.

    • அன்றைய தினத்திலிருந்து அனுதினமும் பக்தர்கள் லலதாம்பிகைக்குக் கொலுசு அணிவித்துத் தங்களுடைய பிரார்த்தனையைச் செலுத்தி வருகிறார்கள்.
    • ஆதிபராசக்தியான லலிதாம்பிகை இங்கு ஸ்ரீசக்ர பீடத்தில் ராஜ சிம்மாசனத்தில் அமர்ந்து அபய, வரத ஹஸ்த முத்திரையுடன் அருளாட்சி நடத்தி வருகிறான்.

    அதன்பிறகு அர்ச்சகர்கள் லலிதாம்பிகையின் கால்களில் மிகுந்த கவனத்துடன் தேடுகையில்தான் அந்த அதிசயத்தை உணர்ந்தனர்.

    அம்பிகையின் கணுக்காலின் அருகே அழுத்தம் ஏற்பட்டிருந்தது. அந்த இடத்தை நன்கு அழுத்திப் பார்த்தால் முக்கால் அங்குலத்தில் துவாரம் இருப்பதைக் கண்டனர்.

    ஆண்டுக் கணக்கில் அம்பாளுக்கு அபிஷேகம் செய்ததில் அபிஷேகப் பொருட்கள் அத்துவாரத்தை அடைத்து விட்டிருந்தனர்.

    பின்னர் மைதிலி தான் கொண்டு வந்த கொலுசினை லலிதாம்பிகைக்கு அணிவித்துப் பேரானந்தம் அடைந்து அம்பாள் தனக்கு இட்ட கட்டளையை நிறைவேற்றினார்.

    அன்றைய தினத்திலிருந்து அனுதினமும் பக்தர்கள் லலதாம்பிகைக்குக் கொலுசு அணிவித்துத் தங்களுடைய பிரார்த்தனையைச் செலுத்தி வருகிறார்கள்.

    ஆதிபராசக்தியான லலிதாம்பிகை இங்கு ஸ்ரீசக்ர பீடத்தில் ராஜ சிம்மாசனத்தில் அமர்ந்து அபய, வரத ஹஸ்த முத்திரையுடன் அருளாட்சி நடத்தி வருகிறான்.

    • ஆனால் ஆலய அர்ச்சகர்களோ, நாங்கள் பரம்பரை பரம்பரையாக இந்த அம்பிகையைத் தொட்டு அபிஷேகம் செய்து பூஜை நடத்துகிறவர்கள்.
    • கொலுசு அணிவிக்கும் வசதி அம்பிகையின் கால்களில் இல்லை என மறுத்துவிட்டனர்.

    திரு மீயச்சூருக்கு வந்து லலிதாம்பிகைக்கு கொலுசு அணிவிக்க விரும்பிய அப்பெண்மணி உடனடியாக அக்கோவிலின் அர்ச்சகர்களைத் தொடர்பு கொண்டார்.

    தனது கனவில் அம்பாள் வந்து கொலுசு கேட்ட விவரத்தையும் அதை அணிவிக்க தான் திருமீயச்சூருக்கு வருவதாகவும் கடிதம் எழுதினார்.

    ஆனால் ஆலய அர்ச்சகர்களோ, நாங்கள் பரம்பரை பரம்பரையாக இந்த அம்பிகையைத் தொட்டு அபிஷேகம் செய்து பூஜை நடத்துகிறவர்கள்.

    கொலுசு அணிவிக்கும் வசதி அம்பிகையின் கால்களில் இல்லை என மறுத்துவிட்டனர்.

    ஆனால் அந்தப் பெண்ணோ கொலுசு, அணிவிக்கும் வசதி இல்லையென்றால் எனது கனவில் வந்து கொலுசு அணிவிக்கச் சொல்லி ஆணையிட வேண்டிய அவசியம் என்ன? என்று தனது முடிவில் உறுதியுடன் மீண்டும் அர்ச்சகர்களை வற்புறுத்தினார்.

    • இந்த நிலையில் யதேச்சையாக ஆன்மீக மாத இதழ் ஒன்றை அவர் பார்க்க நேரிட்டது.
    • அப்புத்தகத்தின் அட்டைப் படமாக லலிதாம்பிகையின் உருவம் அச்சிடப்பட்டிருந்தது.

    பின்னர் வைணவத் தலங்களான திருப்பதி, ஸ்ரீரங்கம் முதலிய இடங்களுக்குச் சென்று அங்குள்ள சன்னதியில் வீற்றிருக்கும் பத்மாவதி தாயார் ரங்கநாயகி தாயார் ஆகியோரைக் கண்டார்.

    ஆனால் தனது கனவில் வந்த அம்பிகையின் உருவத்திற்கு ஒத்த உருவமாக அவருக்கு ஏதும் புலப்படவில்லை.

    இந்த நிலையில் யதேச்சையாக ஆன்மீக மாத இதழ் ஒன்றை அவர் பார்க்க நேரிட்டது.

    அப்புத்தகத்தின் அட்டைப் படமாக லலிதாம்பிகையின் உருவம் அச்சிடப்பட்டிருந்தது.

    அதைக் கண்ட மாத்திரத்தில் அப்பெண்மணி மிக்க ஆச்சரியம் அடைந்து தனது கனவில் வந்து, கட்டளையிட்ட அம்பிகை திருமீயச்சூரில் குடி கொண்டிருக்கும் லலிதாம்பிகை என அறிந்தார்.

    தினமும் லலிதா சகஸ்ரநாமத்தைப் பாராயணம் செய்ததன் பயன் இது என உணர்ந்து மிக்க பரவசமடைந்தார்.

    ×