என் மலர்
மற்றவை
- மதுரை பொதுக்கூட்டத்துல தோழர்களும், பொதுமக்களும் கட்சிக்காக நிதி திரட்டிக் கொடுத்திருக்காங்க என்கிறார் ஜீவா.
- மூட்டை நெறையா பணத்தை வச்சுக்கிட்டா பசியோட இருந்தீங்க.. இதுலருந்து எடுத்து சாப்பிட்டிருக்கலாமே ஜீவா..
மதுரையில் கட்சிக்கூட்டத்தில் பேசிவிட்டு அதிகாலையில் கோயம்புத்தூர் வருகிறார் ஜீவா.
அவரை அழைத்துச் செல்வதற்கு வரவேண்டிய தோழர்கள் இன்னும் வரவில்லை.
புகைவண்டி நிலையத்தின் இருக்கையில் படுத்துத் தூங்கிவிடுகிறார்.
தோழர்கள் வந்து எழுப்புகிறார்கள்.
பசிக்குது தோழா, நாலு இட்லி வாங்கிட்டு வாங்க, சாப்பிட்டுட்டுப் போவோம் என்கிறார் ஜீவா.
இங்கயே கேண்டீன் இருக்கு, சாப்பிட்டிருக்கலாமே என்கிறார்கள் தோழர்கள்.
சரிதான், எங்கிட்ட காசில்லைல்ல.
தோழர் போய் இட்லி வாங்கிக் கொண்டு வர, அதை சாப்பிட்டுவிட்டு தான் கொண்டுவந்த மூட்டையை எடுத்துக்கொண்டு ஜீவா கிளம்புகிறார்.
கொடுங்க தோழர், அதை நான் கொண்டாரேன் என்று ஜீவாவின் கையிலிருந்த மூட்டையை வாங்குகிறார் தோழர். அப்போதுதான் அது நோட்டுகளும், சில்லறைக் காசுகளும் அடங்கிய பணமூட்டையென்பது தோழருக்குத் தெரிகிறது.
இது என்னங்க ஜீவா..
மதுரை பொதுக்கூட்டத்துல தோழர்களும், பொதுமக்களும் கட்சிக்காக நிதி திரட்டிக் கொடுத்திருக்காங்க என்கிறார் ஜீவா.
மூட்டை நெறையா பணத்தை வச்சுக்கிட்டா பசியோட இருந்தீங்க.. இதுலருந்து எடுத்து சாப்பிட்டிருக்கலாமே ஜீவா..
அதெப்படி தோழர், கட்சிக்குக் கொடுத்த நன்கொடைல நான் இட்லி வாங்கித் திங்க முடியும், அது தப்பில்லையா? என்றார் ஜீவா.
இப்படி ஒரு தலைவரை இனி பார்க்க முடியுமா?
- செரு என்றால் போர்க்களம். செருப்புக்கு என்றால் போர்க்களம் புகும் என்று பொருள்படும்.
- போர்க்களத்தில் புகுந்த வீரர்களை வெற்றி கொள்ளும் முருகனை அணைத்துக் கொள்ளத் துடிக்கிறது உள்ளம்.
"ஒரு புலவர் காளமேகத்திடம் கேட்டார்.
ஐயா, நீர் பெரிய புலவர் என்று பேசிக் கொள்கிறார்களே. உம்மால் முருகனைப் புகழ்ந்து பாட முடியுமா?"
"முருகன் அருளால் முடியும். வேலில் தொடங்கவா? மயிலில் தொடங்கவா?" என்றார் காளமேகம்.
"வேலிலும் தொடங்க வேண்டாம். மயிலிலும் தொடங்க வேண்டாம். செருப்பில் தொடங்கி விளக்குமாறில் முடித்தால் போதும்" என்று குசும்பாகக் கூறிவிட்டார் போட்டிப் புலவர்.
என்ன கொடுமை? இறைவனை, முத்தமிழ் முதல்வனை, செந்தமிழ் தெய்வத்தை, வெல்வேல் அழகனை, கருணைக் கடவுளை, கண்கவர் காளையை, முருகனைப் பாடும் போது செருப்பு என்று தொடங்கி விளக்குமாறு என்று முடிப்பதா? தகுமா? முறையா? அதைத் தகும் என்றும் முறை என்றும் மிகமிக அழகாக நிரூபித்தார் காளமேகம்.
செருப்புக்கு வீரர்களை சென்றுழக்கும் வேலன்
பொருப்புக்கு நாயகனை புல்ல- மருப்புக்கு
தண்தேன் பொழிந்த திரு தாமரைமேல்
வீற்றிருக்கும் வண்டே விளக்குமாறே
செரு என்றால் போர்க்களம். செருப்புக்கு என்றால் போர்க்களம் புகும் என்று பொருள்படும். அப்படி போர்க்களத்தில் புகுந்த வீரர்களை வெற்றி கொள்ளும் முருகனை அணைத்துக் கொள்ளத் துடிக்கிறது உள்ளம். குளிர்ந்த தேன் நிறைந்த தாமரை மலர் மேல் வீற்றிருக்கும் வண்டே, அந்த முருகன் இருக்கும் இடத்தை விளக்குமாறே உன்னைக் கேட்கிறேன்.
விளக்குமாறு என்பதற்கு விளக்கம் சொல்லுமாறு என்றும் பொருள் கொள்ளலாம் அல்லவா இப்படி செருப்பில் தொடங்கி விளக்குமாறில் முடிகின்றது இந்த முருகன் பாட்டு.
-ஆதவன்
- “அது ஒரு கலை.... ஒருத்தருடைய முகத்தைப் பார்த்தே அவரோட குணாதிசயத்தைக் கண்டுபிடிக்கிறது!”
- ஒருத்தருடைய மூக்கு, வாய், தாடை, கன்னம், கண்கள், நெற்றி, காது – இதுகளோட வடிவமைப்பைப் பார்தே அவர் கோபக்காரரா... அமைதியானவரா...
"ஏங்க... காலங்காத்தாலே முகத்தை உம்முன்னு ஒரு மாதிரியா வச்சிக்கிட்டு உக்காந்திருக்கிங்க...?"
"அதெல்லாம் ஒண்ணுமில்லையே...!"
"உங்ககூட இருபது வருஷமா குடும்பம் நடத்தறேன்...இதுகூடத் தெரியாதா எனக்கு? என்ன விஷயம் சொல்லுங்க!"
" அது... அது... வந்து...!"
" என்னோட பெட்டியிலேயிருந்து இருபது ரூபா பணம் எடுத்துட்டீங்க... அதானே...?"
"ஹி...! ஹி...!"
"Phrenology தெரியுமா உங்களுக்கு?"
"என்னது...?"
"அது ஒரு கலை.... ஒருத்தருடைய முகத்தைப் பார்த்தே அவரோட குணாதிசயத்தைக் கண்டுபிடிக்கிறது!"
"அது எப்படி..?"
" ஒருத்தருடைய மூக்கு, வாய், தாடை, கன்னம், கண்கள், நெற்றி, காது – இதுகளோட வடிவமைப்பைப் பார்தே அவர் கோபக்காரரா... அமைதியானவரா... அன்புள்ளம் கொண்டவரா... சந்தேகப்பிராணியா... உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுகிறவரா... இரக்கமுள்ளவரா... புகழ்ச்சியை விரும்புகிறவரா... சேவை மனப்பான்மை உள்ளாவரா... இது மாதிரி பல குணங்களைக் கண்டுபிடிக்கிற கலை இது!"
"உனக்கு தெரியுமா அது?"
"இப்பத்தான் பழகிக்கிட்டிருக்கேன்... ஓரளவுக்கு சரியா யூகிச்சுடுவேன்!"
"நீ இப்படி சொல்றதைக் கேக்கறப்போ என் மனசுக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்குத் தெரியுமா?"
ஆனா எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு... இந்த கலை எனக்கு 1975ஆம் வருஷம் நவம்பர் மாசம் 13ஆம் தேதி தெரியாமப் போச்சேன்னு நினைக்கிறப்போ எனக்கு எவ்வளவு கவலையா இருக்குத் தெரியுமா?"
"அன்றைக்கு என்ன விசேஷம்?"
"அன்றைக்குத்தான் உங்க முகத்தை நான் முதல் தடவையா பார்த்தேன்!"
- தென்கச்சி கோ.சுவாமிநாதன்
- தமிழரின் வாழ்வில் தவிர்க்க முடியாத படையல் பொங்கல்...
- மானுட வாழ்வின் மகத்தான படையல் பெண்கள்....!
பானைக்குள் மட்டுமே
பொங்கலின் ராஜ்யம்
பூமிப் பானை முழுவதுமே
பெண்களின் சாம்ராஜ்யம்...!
அறுவடை தந்த புத்தரிசி
பொங்கலுக்கு அடையாளம்
அறிவார்ந்த பெண்ணரசி
அகிலத்தின் அடையாளம்...!
பக்குவமாகக்
கையாளத் தெரிந்தால்தான்
பொங்கலுக்கு மகிமை
யாரையும் பக்குவமாகக்
கையாளத் தெரிந்தால்தான்
பெண்களுக்கு பெருமை....!
தமிழரின் வாழ்வில்
தவிர்க்க முடியாத
படையல் பொங்கல்
மானுட வாழ்வின்
மகத்தான படையல் பெண்கள்....!
அடுப்பின் திரிகளில்
பூத்தால் பொங்கல்
அன்பின் திரிகளில்
பூப்பது பெண்கள்....!
ஏழை வீட்டின்
ஒரு நாளைய
இனிப்பு - பொங்கல்
பிரபஞ்ச வீட்டின்
பிரியமான இனிப்பு
பெண்கள்...!
அடிப்பாகம் மட்டுமே
கரும்பு இனிக்கும்
அடுக்களை தாண்டியும்
பெண்களின்
அன்பு இனிக்கும்....!
சேர்மானங்கள்
பொங்கலை -
ருசியாக்கும்
சிறந்த குணங்களே
பெண்களை -
உயர்வாக்கும்...!
மஞ்சள் இஞ்சியுடன்
பொங்கல் களை கட்டும்
மங்கலப் பெண்களின்
மதிமுகம் கண்டால்
விடியும்
திசை எட்டும்...!
-அழ.இரஜினிகாந்தன்
- மழைத் தெய்வமாக உழவுத் தொழில் மரபினரால் அடையாளப்படுத்தப்படும் இந்திரனுக்குப் போகி என்னும் பெயருமுண்டு.
- அறுவடைக்கான வேளாண்மை உற்பத்தியைப் போகம் என்னும் சொல்லால் குறிப்பதுண்டு.
போகி பண்டிகை என்றால் பழையனவற்றை கழித்தல் என்று நினைத்து பலரும் தங்கள் வீடுகளில் உள்ள பழையப் பொருட்களை வீதியில் போட்டு தீயிட்டுக் கொளுத்தும் வழக்கத்தை கொண்டுள்ளனர். ஆனால் போகியின் உண்மையான நோக்கம் வேறு. அதுபற்றி பார்ப்போம்...
ஆடி மாதத்தில் தேடி விதைத்தும் நடவு செய்தும் பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து, அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியில் பொங்கல் வைப்பதுதான் மரபாக இருந்திருக்கிறது.
வேளாண்மை உற்பத்திக்கும் உழவருக்கும் உறுதுணையாய் இருந்தவை மழையும் மாடுகளும்தான். அவ்வகையில், உழவுத் தொழில் மரபினரின் பொங்கல் தளுகையானது மழைக்கும் மாடுகளுக்கும்தான் முதன்மையாகப் படைக்கப்படுகிறது.
மழையைத் தெய்வமெனத் தொழுத பிறகே பொங்கலிட்டுத் தளுகை படைத்து மகிழ்ந்திருக்கின்றனர் உழவு மரபினர். அத்தகைய மழைத் தெய்வமே போகி என்பதாகும்.
மழைத் தெய்வமாக உழவுத் தொழில் மரபினரால் அடையாளப்படுத்தப்படும் இந்திரனுக்குப் போகி என்னும் பெயருமுண்டு. அறுவடைக்கான வேளாண்மை உற்பத்தியைப் போகம் என்னும் சொல்லால் குறிப்பதுண்டு.
போகம் விளைவதற்கான அடிப்படை வித்தாக இருப்பது மழைதான். அதனால்தான், போகம் விளைவிக்கும் மழைத் தெய்வத்தைப் போகி என்னும் சொல்லாலும் அடையாளப்படுத்தியுள்ளனர். அதாவது, போகத்தைத் தருவதால் போகி என மழையைக் குறித்துள்ளனர்.
வேளாண்மை விளைச்சல் தரும் மழைத் தெய்வமான போகியை- இந்திரனை அறுவடைக் காலத்திலும் மறவாது நினைவு கூர்ந்து வழிபடும் சடங்கியல் மரபாகப் போகிக்குக் காப்புக் கட்டுகின்றனர். அவ்வகையில், காப்புக் கட்டுதல் எனும் வளமைச் சடங்கு, போகி என்னும் இந்திர மழைத் தெய்வத்தை வணங்கிடும் நோக்கத்தையே புலப்படுத்துகிறது.
கன்னிப் பிள்ளை, கண்ணுப் பூளை, கூழைப்பூ, கூரைப்பூ எனப்படும் புல்செடியானது, பூக்கும்போது புல் தண்டில் வெண்ணிறத்திலான மழைத் துளிகள் கோத்தது போலவும் வழிவது போலவுமான தோற்றத்தைக் கொண்டதாகும். மழைக் காலத்தில் மட்டுமே தளைக்கும் இம்மழைப்பூவைத்தான் பொங்கல் காப்புக் கட்டுக்கான பூவாகக் கருதி இருக்கின்றனர் முன்னோர்.
எத்தனையோ பூக்கள் இருக்கையில், இந்தப் பூவை மட்டும் காப்புக் கட்டுதலில் முதன்மைப் பூவாகக் கருதியதன் பின்புலமும் குறியீட்டுத் தன்மை வாய்ந்ததாகும். ஆயிரம் கண்ணுடையான் என்னும் இந்திரனைக் குறிக்கும் அடையாளத்துடன் இருக்கும் இந்தப் பூதான், கண் + பூ + இலை = கண்ணுப் பூவிலை - கண்ணுப் பூளை என்றாகியிருக்கிறது.
ஆயிரம் கண்ணுடையான் எனும் இந்திரனை - போகியைக் குறியீடாகக் குறிக்கும் நோக்கத்தில்தான் பொங்கல் காப்புக் கட்டுதலில் கண்ணுப் பூவிலை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தப் பூவுடன் மாவிலை, ஆவாரம், வேப்பிலை, தும்பை போன்றவையும் சேர்த்து வீடுகளின் முகப்புகளிலும், காடு கழனிகளின் சனி மூலைகளிலும், கண்மாய், குளத்தங்கரை அய்யனார் கோவில்களிலும், குல சாமிகளாக வழிபடப்படும் முன்னோர் நடுகற்கள் அல்லது கோயில்களிலும் காப்புக் கட்டுவது வளமைச் சடங்கின் அங்கமாகவே இன்னும் இருந்து வருகிறது.
பெரும்பாலும், போகி நாளின் மாலையிலும், தை நாள் பொழுது விடிவதற்கு முந்திய வைகறைப் பொழுதிலும் காப்புக் கட்டி விடுதல் மரபாகும். இத்தகைய மழைக் காப்புக் கட்டுதல் போகி என்னும் இந்திரனை - மழைத் தெய்வத்தை வணங்கியும் நினைவு கூர்ந்தும் நன்றிப் பெருக்கைக் காட்டியும் பொங்கல் சார்ந்த வளமைச் சடங்குகளை உழவு மரபினர் நிகழ்த்தி வந்திருக்கின்றனர்.
மகாராசன் எழுதிய 'வேளாண் மரபின் தமிழ் அடையாளம்' எனும் நூலில் இருந்து...
- வாழும் போது பிரியாமல் சொந்த பந்தங்களோடு இருப்பது ஒரு வரம்.
- குடும்பம் என்பது இறைவன் நமக்காக பூமியில் ஏற்பாடு செய்திருக்கும் சொர்க்கம்...
தாய் ....இருந்தால் துன்பம் இல்லை.
தந்தை...இருந்தால் தவிப்பு இல்லை.
தங்கை... இருந்தால் தனிமை இல்லை.
தாத்தா... இருந்தால் தயக்கம் இல்லை.
பாட்டி.... இருந்தால் பயம் இல்லை.
அக்கா....இருந்தால் அன்னையின் பிம்பம் தெரியும்.
அண்ணன்....இருந்தால் அனைத்தும் கிடைக்கும் அன்போடு.
தம்பி... இருந்தால் தாங்கி நிற்க இன்னொரு கால் கிடைக்கும்.
மனைவி...இருந்தால் மண்ணுலக வாழ்க்கை சிறக்கும்.
மகள்.... இருந்தால் மழலைப் பருவம் தெரியும்.
மகன்.... இருந்தால் மாண்புமிக்க வம்சம் நிலைக்கும்.
நட்பு....இருந்தால் உயிர் காக்கும் அனைத்தும் கிடைக்கும்.
மண்ணில் இறக்கப் போகிறோமே தவிர..
மீண்டும் மண்ணில் ஒன்றாகப் பிறக்கப் போவது இல்லை....
வாழும் போது பிரியாமல் சொந்த பந்தங்களோடு இருப்பது ஒரு வரம்.
குடும்பம் என்பது இறைவன் நமக்காக பூமியில் ஏற்பாடு செய்திருக்கும் சொர்க்கம்...
அதை சொர்க்கமாக்குவதும்,
நரகமாக்குவதும்
நம் கையில் தான் உள்ளது..
- நாத்திகரென்றால் செய்த முயற்சியின் முழுபலனையும் பிரபஞ்சத்திடம் இருந்து பெறலாம்.
- யார் எப்படியோ எண்ணியது எண்ணியவாறு நடக்கும், தினந்தோறும் வாழ்வில் மகிழ்ச்சி கிட்டும்.
மனித உடலில் ஐம்பூதங்களின் தன்மைகள் கீழ்கண்ட அடையாளங்களாக காணப்படுகின்றன.
நீர் - இரக்கம்
நெருப்பு - ஒழுக்கம் (சுத்தம்)
காற்று - விழிப்புணர்வு
நிலம் - பொறுமை
ஆகாயம் - இனிமையான பேச்சு
1. நீர், நாம் எப்போதும் "இரக்கத்துடன் நடந்துகொண்டால்" நம் உடலில் நீர்ச்சத்துக் குறையாது, அது தொடர்பான எந்த நோய்களும் வராது. அதற்கு நெஞ்சில் ஈரம் வேண்டும்.
2. நெருப்பு, நாம் எப்போதும் சுத்தத்தை பேணி "ஒழுக்கத்துடன் நடந்து கொண்டால்" நம் உடல் மற்றும் மனதிலுள்ள அனைத்து அழுக்குகளையும் நெருப்பு பொசுக்கி உடலின் வெப்பத்தை பாதுகாக்கும். அதற்கு அசுத்தத்தை சுட்டெரிக்க வேண்டும்.
3. காற்று, நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் "விழிப்புணர்வுடன்" செய்தால் சுவாசம் சம்பந்தமான எந்த நோய்களும் வராது, முதுமை என்பது எளிதில் நெருங்காது. அதற்கு வாசியில் கவனம் வேண்டும்.
4. நிலம், நாம் கோபத்தை அறவே ஒழித்து எல்லோரிடத்தும் "பொறுமையைக் கடைபிடித்தால்" ஆயுள் அதிகரிக்கும். அதற்கு அரவணைக்கும் கைகள் வேண்டும்.
5. ஆகாயம், நாம் பிறர் நோகும்படி பேசாமல் இனிமையான பேச்சை மேற்கொண்டால் ஆகாயம் அளவு அன்பு அதிகரிக்கும். அதற்கு எல்லையற்ற மனம் வேண்டும்.
இந்த ஐந்துவிதத் தன்மைகளையும் உடலில் ஒருபோதும் குறையாமல் பார்த்துக்கொண்டால், இயற்கையாகிய ஐம்பூதங்களும் நம் உடலில் சரியாக வாசம் செய்யும்! ஆத்திகரென்றால் கடவுளை அடையும் உண்மை வழியறிந்து முக்தி அடையலாம்.
நாத்திகரென்றால் செய்த முயற்சியின் முழுபலனையும் பிரபஞ்சத்திடம் இருந்து பெறலாம்.
யார் எப்படியோ எண்ணியது எண்ணியவாறு நடக்கும், தினந்தோறும் வாழ்வில் மகிழ்ச்சி கிட்டும்.
-ஆர்.எஸ். சீதாராமன்
- ஆண்டாள் மார்கழி 30 நாளும் இவ்வாறு விரதம் இருந்து பூஜை செய்து ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்க பெருமானுடன் ஐக்கியமானாள்.
- திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் போகி கல்யாணம் விமரிசையாக நடைபெறும்.
கோதை என்றும் ஸ்ரீஆண்டாள் என்றும் போற்றி வணங்கப்படும் ஸ்ரீதேவியின் அம்சமாகிய பூமி பிராட்டியார், ''அரங்கன்தான் என் கணவர், அதில் மாற்றம் இல்லை'' என்று உறுதியாக இருந்தாள். அவள் மார்கழி முப்பது நாட்களும் பாவை விரதம் இருந்து கண்ணனையே தன் கணவனாக அடைந்தாள்.
ஆடிப்பூர நாளில் அவதரித்த ஆண்டாள், பங்குனி உத்திர நன்னாளில் ஸ்ரீரங்கத்தில், 'ரங்கநாதா' என்று கூறியபடி கருவறைக்குள் சென்று ஆண்டவனுடன் ஐக்கியம் ஆனாள்.
இந்த நிகழ்வை, நினைவூட்டும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் உத்திர தினத்தன்று அம்பாள், பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடக்கும். ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட தலங்களில் திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடக்கும்.
பகவான் தனது ஒரு அவதாரத்தில் ஸ்ரீராமனாக வந்து பிறந்தான். மகாலட்சுமியும் சீதையாக ஜனக குலத்தில் பிறந்தாள். அவனும் மனுஷ்யன்; இவளும் மனுஷி. இருவருக்கும் கல்யாணம் நடந்தது. அதேபோல், கிருஷ்ணனாக பகவான் ஒரு தடவை அவதரித்தான். மகாலட்சுமியும் ருக்மணியாக வந்து பிறந்தாள். கிருஷ்ணன்- ருக்மணி கல்யாணம் நடந்தது.
ஆனால், ஆண்டாள் அவதரித்தபோது, பகவான் ராமனாகவோ கிருஷ்ணனாகவோ வந்து பிறந்தானா என்றால், இல்லை. கோவிலில் அர்ச்சா ரூபமாய் படுத்துக் கொண்டிருந்த எம்பெருமானைத் தட்டி எழுப்பி, அவரை ஆண்டாள் கல்யாணம் செய்து கொண்டாள். ஆகவே, மற்ற திருக்கல்யாணங்களைக் காட்டிலும் பூதேவியான ஆண்டாளின் கல்யாணம் ஏற்றமுடையது, தனித்துவம் கொண்டது.
மார்கழியில், திருப்பாவை பாடி கண்ணனை கரம்பிடிக்க எண்ணிய ஆண்டாள், தன்னுடைய திருமணம் எப்படி எல்லாம் நடக்கும் என்பதை கனவிலே கண்டதாக நாச்சியார் திருமொழியில் பாடி இருக்கிறாள்.
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான்.."
ஆண்டாள் திருமணம் பங்குனி உத்திர திருநாளில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதுபோலவே மார்கழி மாதம் திருப்பாவை பாடலால் பெருமாளை மனமுருக பிரார்த்தித்து, பாவை நோன்பிருந்து ஆண்டாள் அந்த கண்ணனையே மணாளனாகக் கொண்டாள்.
'சூடிக்கொடுத்த சுடர் கொடியாள்' என அழைக்கப்படும் ஸ்ரீ ஆண்டாள் பெருமாள் பக்தர்களில் மிகச்சிறந்த பக்தை. சிறுவயது முதலே ஸ்ரீரெங்கநாத பெருமாளிடம் அளவற்ற பக்தியையும் பிரேமையும் கொண்டிருந்த இவள் எந்நேரமும் ஸ்ரீரெங்கநாதரின் நினைவுடனே இருந்தாள். எம்பெருமானைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை தன் தந்தையான விஷ்ணு சித்தரிடம் கேட்டு அறிந்து கொள்வாள்.
வைணவ ஆச்சாரியரும், தனது கடைசி நாட்களை ஸ்ரீரங்கத்தில் கழித்தவருமான ஸ்ரீராமனுஜர் ஸ்ரீ ஆண்டாளை பற்றி 'பாதங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும் வேதமனைத்திற்கும் வித்தாகும்-கோதைத்தமிழ் ஐதெய்ந்தும் அறியாத மானிடரே வையம் சுமப்பதும் வம்பே' என்று பாடியுள்ளார்.
'வேதம் அனைத்திற்கும் வித்து கோதையே' என்று மற்றுமொரு வைணவ பெரியவர் கூறியுள்ளார்.
ஆயர்பாடியில் கோபியர்கள் பாவை நோன்பிருந்து ஸ்ரீ கண்ணனை அடைந்ததை ஸ்ரீ ஆண்டாள் அறிந்து, தன்னையும் கோபியருள் ஒருத்தியாகவும், ஆழ்வாருடைய திருமாளிகையே ஆயர்பாடியாகவும், பெருமாளையே கண்ணனாகவும் எண்ணி மார்கழி முதல் நாள் முதல் அதிகாலையில் எழுந்து நோன்பு பற்றிய பாசுரங்கள் பாடி பூஜித்தாள். அவையே திருப்பாவையாகும்.
ஆண்டாள் மார்கழி 30 நாளும் இவ்வாறு விரதம் இருந்து பூஜை செய்து ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்க பெருமானுடன் ஐக்கியமானாள்.
அதை நினைவூட்டும் விதமாக ஆண்டாள் வீற்றிருக்கும் அனைத்து கோவில்களிலும் மார்கழி மாத கடைசி தினம், அதாவது 'போகி' அன்று ஆண்டாளுக்கும் பெருமாளுக்கும் திருமணம் நடைபெறும், இதையே 'போகி கல்யாணம்' என்றும் கொண்டாடுகிறார்கள்.
மார்கழி மாதத்தில் பகல் பத்து, ராப்பத்து உத்சவங்கள் நடந்தேறும் வேளையில், ஆண்டாள் உத்சவமும் நடைபெறும். அதன்படி ஆண்டாளுக்கு போகி அன்று திருக்கல்யாணம் நடத்தப்படும். அன்று ஆண்டாளுக்கு எண்ணை காப்புடன் நீராட்டு உத்சவம் நடைபெறும். இதற்காகவே அன்று சிறப்பு ஹோமங்கள் நடைபெறும்.
பின்னர் ஆண்டாள் மாடவீதிகளில் வலம் வந்த பின்னர் முறைப்படி மாலை மாற்று நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்து திருமணமும் நடந்தேறும்.
நோன்பிருந்து பெருமாளை மணந்த ஆண்டாளின் பக்தியை உணர்த்தும் விதமாக இந்த போகி கல்யாணம் அனைத்து கோவில்களிலும் சிறப்பாக நடைபெறும். குறிப்பாக ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்த உத்சவம் சிறப்பாக நடைபெறும். அன்று திருப்பதியில் இருந்து ஆண்டாளுக்கு சிறப்பு மலர்மாலைகள் வரும். அதுபோலவே, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலிலும் போகி கல்யாணம் விமரிசையாக நடைபெறும்.
சாதாரண மனிதருடன் திருமணம் என்ற பேச்சுக்கே இடம் கொடுக்காது, அந்தக் கண்ணனையே மனதில் வடித்து அவனையே கரம் பிடித்த ஆண்டாளின் பக்தியையும், பெருமாள் மீது கொண்டிருந்த அன்பையும் போகி கல்யாணத்திலும் நாம் தெரிந்து கொள்ளலாம்.
மார்கழியில் விரதமிருந்து, கண்ணனையே மனதார பிரார்த்தித்து, அவனையே பதியாகக் கொண்ட ஆண்டாளைப் போலவே, திருமணமாகாத பெண்கள் பாவை நோன்பிருந்து போகி அன்று அதாவது நாளை (சனிக்கிழமை) நடக்கும் திருமணத்தில் ஆண்டாளையும் பெருமாளையும், திருமணக் கோலத்தில் தரிசித்தால் திருமண வரம் கிடைக்கும். ஆண்டாளுக்கு அருளிய கண்ணன், உங்கள் திருமண பிரார்த்தனையையும் நிறைவேற்றுவான்.
- கரும்பில் அதிக அளவில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளன.
- கரும்பு சாற்றில் அதிக அளவில் எலெக்ட்ரோலைட்கள் நிறைந்துள்ளன. இவை கல்லீரலின் ஆரோக்கியத்தினை மேம்படுத்த உதவும்.
பொங்கல் திருவிழாவின் கதாநாயகனான கரும்பில், பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது. ஆனால் அதன் அருமை பலருக்கு தெரிவதில்லை. நாம் தெரிந்து கொள்வோமா...?
1. உடனடி ஆற்றல்: கரும்புச் சாறு உடனடி ஆற்றல் தரக்கூடியது. ஏனெனில் இதில் அதிக அளவில் இயற்கை சர்க்கரை நிறைந்துள்ளது. உங்கள் வேலையினை ஆரம்பிப்பதற்கு முன்னால் சிறிதளவு கரும்பு சாற்றினை குடித்தால் உங்களின் செயல்திறன் அதிகரிக்கும்.
2. வலிமையான எலும்புகள் மற்றும் பற்கள்: கரும் பில் அதிக அளவில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனை உண்ணும்பொழுது வலிமையான எலும்புகள் மற்றும் பற்கள் உருவாகச் செய்யும்.
3. மன அழுத்தத்தினை குறைக்கும்: கரும்பில் அதிக அளவில் பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளதால் ரத்த அழுத்தம், மன அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும்.
4. புற்று நோய் வராமல் தடுக்கும்: கரும்பில் அதிக அளவில் ஆன்டி-ஆக்சிடென்டுகள் மற்றும் பிளவனோய்டுகள் நிறைந்துள்ளன. இதனை நீங்கள் உண்டு வந்தால் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும். புற்றுநோய் செல்களை, ஆரம்பத்திலேயே அழிக்கும்.
5. சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தினை மேம்படுத்தும்: கரும்பில் அதிக அளவில் பொட்டாசியம் மற்றும் குறைந்த அளவில் சோடியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. இது உங்களின் சிறுநீரக ஆரோக்கியத்தினை மேம்படுத்தும். மேலும் சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரக கோளாறு போன்ற பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும்.
6. கல்லீரலின் ஆரோக்கியம் : கரும்பு சாற்றில் அதிக அளவில் எலெக்ட்ரோலைட்கள் நிறைந்துள்ளன. இவை கல்லீரலின் ஆரோக்கியத்தினை மேம்படுத்த உதவும். எனவே கல்லீரலின் ஆரோக்கியத்தினை மேம்படுத்த விரும்புபவர்கள் தினமும் ஒரு டம்ளர் கரும்பு சாறு பருகுங்கள்.
7. வயதாவதை தடுக்கும் : கரும்பில் அதிக அளவில் ஆன்டி-ஆக்சிடென்டுகள் நிறைந்துள்ளது. இவை சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தி தோல் சுருக்கம், வயதான தோற்றம் போன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கும். இளமை தோற்றத்தை தக்கவைக்கும்.
8. நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கும் : கரும்பில் அதிக அளவில் உடலுக்கு தேவையான ஆன்டிஆக்சிடென்டுகள் நிறைந்துள்ளது. இவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி எப்போதும் ஆரோக்கியமாக இருக்க உதவும்.
9. உடல் எடையினை குறைக்கும்: கரும்பில் அதிக அளவில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இவற்றை தினமும் உண்டு வந்தால் உடல் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடலில் தேவையற்ற கொழுப்பினை கரைக்க உதவும். எனவே உடல் எடையினை குறைக்க விரும்புபவர்கள் தினமும் கரும்பினை உண்டு வாருங்கள். மேலும் இதில் இருக்கும் அதிக அளவு நார்ச்சத்து மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்க உதவும்.
10. ரத்த அழுத்தத்தினை குறைக்கும்: கரும்பில் அதிக அளவு பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளதால் இதனை தினமும் உண்டு வந்தால் ரத்த அழுத்தம் சீராக இருக்கும். எனவே ரத்த அழுத்தத்தினை கட்டுக்குள் வைக்க விரும்புவர்கள் அடிக்கடி கரும்பினை கடித்து ருசிக்கலாம்.
கரும்பு ஏன் இனிக்கிறது?
கரும்பில் சுக்ரோஸ் என்ற சர்க்கரை வேதிப்பொருள் உள்ளது. இதுவே கரும்புக்கு இனிப்புச்சுவையை தருகிறது. நாம் வீட்டில் பயன்படுத்தும் சர்க்கரை இந்த கரும்புச்சர்க்கரைதான்!
கரும்பில் அடங்கியுள்ள சத்துக்கள்
கரும்பில் அதிக அளவு நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், துத்தநாகம், தையாமின், ரிபோபிளவின், புரதம், இரும்புச்சத்து போன்ற பலவித சத்துக்கள் நிறைந்துள்ளன.
- வாழைக்காய், கொண்டைக்கடலை, பட்டாணி, மொச்சை முட்டைகோஸ் போன்ற காய்கறிகளை சமைக்கும்போது பெருங்காயம் சேர்க்க வேண்டும்.
- பெருங்காயம் முக்கியமாய் குருதியை சூடாக்கி, நரம்புகளை வெப்பப்படுத்தும்.
பல்வேறு மருத்துவப்பயன்கள் நிறைந்த பெருங்காயத்தை 'கடவுளின் அமிர்தம்' என்பார்கள். இது சிவப்பு நிறம் கலந்த பழுப்பு நிறம் கொண்டது. பன்றிக் காய்ச்சலை குணப்படுத்த பயன்படும் 'சனாமிர்' மருந்து போல பெருங்காயம் வைரஸ் எதிர்ப்பு தன்மையை கொண்டது என தைவான் ஆய்வாளர்கள் கண்டறிந்தார்கள்.
தினமும் ஒரு கிளாஸ் மோரில் துளி பெருங்காயம் போட்டு பருகினால் உடல் குளிர்ச்சியாகும். 'லாக்டோபேசில்லஸ்' என்னும் நல்ல நுண்ணுயிரியும் கிடைக்கும். கூடவே பன்றிக்காய்ச்சல் ஏற்படுத்தும் கிருமிகளும் ஓடிவிடும்.
வாயுவை அதிகரிக்கக் கூடிய வாழைக்காய், கொண்டைக்கடலை, பட்டாணி, மொச்சை முட்டைகோஸ் போன்ற காய்கறிகளை சமைக்கும்போது பெருங்காயம் சேர்க்க வேண்டும்.
நெஞ்சு எலும்பின் மையப் பகுதியிலும், அதற்கு நேர்பின் பகுதியிலும் வாயு வலி வந்து இதய வலியோ என பயமுறுத்தும் நோய்க்கு பெருங்காயம் ஒரு பங்கு, உப்பு 2 பங்கு, திப்பிலி 4 பங்கு எடுத்து செம்முள்ளி கீரையின் சாற்றில் அரைத்து மாத்திரைகளாக்கி காலை, மாலை என 7 நாட்கள் சாப்பிட்டால் வாயுக்குத்து நீங்கும். ஆனால் அது ஜீரணம் தொடர்பாக வந்த வலியா என உறுதிப்படுத்திக்கொள்வது அவசியம்.
'இரிடபிள் பவுல் சிண்ட்ரோம்' என்னும் சாப்பிட்டவுடன் வரும் கழிச்சல், அடிக்கடி நீர் மலமாக போகும் குடல் அழற்சி நோய்க்கும் பெருங்காயம் பலன் தரும்.
பெருங்காயம் முக்கியமாய் குருதியை சூடாக்கி, நரம்புகளை வெப்பப்படுத்தும். துடிப்பை உண்டாக்கிப் பெண் இச்சைக் கிளர்ச்சியை உண்டாக்கும்.
கக்குவான் நோய்க்கு இதை நீர் விட்டு அரைத்து மார்பின் மீது பற்றிட குழந்தைகளுக்கு உண்டாகும் கக்குவான் குணப்படும்.
பிறந்த குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தம் என்னும் நோய்க்கு பால் பெருங்காயத்தை உரசி தாயின் மார்பில் தடவி குழந்தையை பால் உண்ணும்படி செய்தால் நோய் நீங்கும்.
- கோவைப்பழம் சாப்பிட்டால் பல் தொந்தரவுகள் வராது.
- உணவிலும் அடிக்கடி கோவைக்காயைச் சேர்த்துக் கொள்ளலாம்.
உச்சி முதல் பாதம் வரை உடல் உறுப்புகளை பலப்படுத்த சில எளிய வழிகள் இதோ...
மூளை: கறிவேப்பிலைத் துவையலை 48 நாள்கள் சாப்பிட்டு வந்தால் மூளையின் செயல்பாடு சீராகி, நாம் சுறுசுறுப்புடன் இருப்போம்.
குறைந்தது ஆண்டுக்கு இருமுறையாவது கைகளில் மருதாணி வைத்தால், மனம் தொடர்பான கோளாறுகள் நீங்கும். அதன் குளிர்ச்சி மூளைக்கு ஓய்வைத் தரும்.
வல்லாரை இலைகளை நெய்யில் வதக்கி சுடுசாதத்துடன் இரண்டு கவளம் சாப்பிட்டு வர வேண்டும்.
தினசரி இரண்டு துண்டு தேங்காயை மென்று தின்பதால் மூளையில் எந்தப் புண்களும் வராது.
கண்கள்: பாலுடன் குங்குமப்பூ சேர்த்துக் குடித்து வருவது நல்லது.
தினமும் 50 கிராம் அளவுக்கு மாம்பழம் அல்லது பப்பாளியைச் சாப்பிட்டு வர பார்வைத்திறன் மேம்படும்.
அரைக்கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சியடையும். அதுபோல் பொன்னாங்கண்ணி, முருங்கைக் கீரை சாப்பிட்டாலும் பார்வைத்திறன் மேம்படும்.
வெண்டைக்காய் மோர்க்குழம்பு, வெண்டை மசாலா, வெண்டைக்காய் பொரியல் என சாப்பிட கண்களுக்கு நல்லது.
தினந்தோறும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால், கண் தொடர்பான பிரச்சனைகள் வராது.
தினமும் 5 பாதாம்களை சாப்பிட்டு வரவேண்டும்.
பற்கள்: மாவிலைப் பொடியை பற்பொடியாகப் பயன்படுத்தி பல் தேய்த்து வந்தால் பற்கள் உறுதியாகும்.
கோவைப்பழம் சாப்பிட்டால் பல் தொந்தரவுகள் வராது. உணவிலும் அடிக்கடி கோவைக்காயைச் சேர்த்துக் கொள்ளலாம்.
செவ்வாழைப் பழத்தை தினமும் இரவில் சாப்பிட்டு வர பல்லில் ரத்தக்கசிவு, பல் சொத்தை ஆகியவை வராது.
பல் உறுதியாக, உணவை நன்றாக மென்று சுவைக்க வேண்டும். கேரட், கரும்பு, ஆப்பிள் போன்றவற்றைப் பத்து முறையாவது நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.
நரம்புகள்: சேப்பங்கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நரம்புகள் பலம் பெறும்.
இரண்டு அத்திப்பழத்தை தினந்தோறும் சாப்பிட்டு வரலாம்.
மாதுளைப் பழச்சாற்றில் தேன் கலந்து 48 நாள்கள் குடித்து வரலாம்.
இலந்தைப் பழத்தை அவ்வப்போது சுவைத்து வரலாம்.
கரிசலாங்கண்ணிக் கீரையை அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது.
ரத்தம்: வாரம் இரண்டு நாள்கள் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் ரத்தம் உற்பத்தியாகும்.
திராட்சைப் பழ ஜூஸ் ஒரு டம்ளர் அல்லது ஒரு ஸ்பூன் இஞ்சிச் சாற்றில் சிறிது தேன் கலந்து குடித்து வந்தால் ரத்தம் சுத்திகரிக்கப்படும்.
தினம் ஒரு கப் அளவுக்கு தயிர் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாய் அடைப்புகள் நீங்கும்.
அடிக்கடி விளாம்பழம் சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் உள்ள கிருமிகள் அழியும்.
இரண்டு லிட்டர் நீரைக் கொதிக்க வைத்து, அதில் சீரகத்தைப் போட்டு 10 மணி நேரம் கழித்து, அந்தத் தண்ணீரை நாள் முழுவதும் குடித்து வந்தால் ரத்தம் சுத்தமாகும்.
சருமம்: தேகம் பளபளப்பாக மாற ஆவாரம் பூ டீ குடித்து வரலாம். ஆரஞ்சுப் பழத்தையும் சாப்பிட்டு வரலாம்.
முட்டைக்கோஸ் சாற்றை முகத்தில் தடவி வர முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மறையும்.
சந்தனக் கட்டையை இழைத்து அதனுடன் எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் பூசினால் பருக்கள் நீங்கும். முகம் பிரகாசமாகும். ஆரோக்கியமான உடல், பொலிவான முகம், பளபளப்பான சருமம் பெற அருகம்புல்லை நீர் விட்டு அரைத்து, வெல்லம் சேர்த்து வாரம் மூன்று முறைக் குடித்து வரவேண்டும்.
நுரையீரல் & இதயம்: தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை தினசரி சாப்பிட்டு வர நுரையீரல், இதயம் பலமாகும். கரிசலாங்கண்ணிக் கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் நல்லது.
ஆர்கானிக் ரோஜாப்பூ, பனங்கற்கண்டு, தேன் ஆகியவற்றை லேகியம் போல கலந்து, தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர இதயம் பலமாகும்.
இஞ்சி முரப்பா, இஞ்சிச்சாறு, இஞ்சித் துவையல் ஆகியவற்றைச் சாப்பிட்டால் இதயம் ஆரோக்கியமாக துடித்துக் கொண்டிருக்கும். சுண்டை வற்றலை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால் நுரையீரல் ஆரோக்கியத்துடன் இருக்கும்.
திராட்சை ஜூஸ், உலர் திராட்சையை சாப்பிட இதயம் பலம் பெறும்.
முள்ளங்கிச் சாற்றை அரை கப் அளவுக்கு மூன்று வாரங்களுக்கு குடித்து வருவது நல்லது. இதனால், நுரையீரல் தொடர்பான பிரச்னைகள் நெருங்காது.
ஆளிவிதைகள், பாதாம், வால்நட் ஆகியவற்றில் ஒமேகா 3, நல்ல கொழுப்பு இருப்பதால் இதயத்துக்கு நல்லது.
வயிறு: காலையில் எழுந்ததும் ஊறவைத்த ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை சாப்பிட்டு சிறிதளவு தயிரையும் குடிக்க வேண்டும். வயிறு சுத்தமாகும்.
மாதுளம்பூவை தேநீராக்கிக் குடித்து வந்தால், வயிறு தொடர்பான பிரச்னைகள் நீங்கும்.
வறுத்துப் பொடித்த சீரகத்தை ஒரு டம்ளர் மோரில் போட்டுக் குடிக்க வேண்டும்.
வாரத்தில் இரண்டு நாள்கள் ஒரு டம்ளர் தேங்காய்ப்பாலுடன் கருப்பட்டி சேர்த்துக் குடித்து வருவதால், வயிறு தொடர்பான பிரச்சனைகள் எதுவும் வராது.
சுரைக்காயை வாரம் இருமுறை உணவில் சேர்த்துக்கொள்ள தொப்பை கரையும்.
வாழைப்பூ, மணத்தக்காளிக் கீரையை வாரம் ஒருமுறையாவது சாப்பிட வயிற்றுத் தொந்தரவுகள் நீங்கும்.
வாரம் ஒருமுறை கொள்ளு ரசம் சாப்பிடக் கெட்டக்கொழுப்பு கரையும். தொப்பையும் குறையும்.
கல்லீரல் & மண்ணீரல்: கரிசலாங்கண்ணிக் கீரையைக் கூட்டாக செய்துச் சாப்பிடலாம். கீழாநெல்லியை புளியங்கொட்டை அளவு வெறும் வயிற்றில் மாதந்தோறும் ஐந்து நாளைக்குச் சாப்பிட வேண்டும்.
மாதத்தில் இரண்டு நாள்கள் வேப்பம்பூ ரசம் வைத்துச் சாப்பிடுங்கள்.
திராட்சை பழச்சாற்றை அருந்தி வந்தால் கல்லீரல், மண்ணீரல் உறுப்புகளுக்கு நன்மையைச் செய்யும்.
மலக்குடல்: அகத்திக்கீரையை வாரம் ஒருநாள் சமைத்துச் சாப்பிட வேண்டும். இதனால், மலக்குடல் சுத்தமாக இருக்கும். பப்பாளிப் பழத்தை வாரம் மூன்றுமுறை சாப்பிடுவது நல்லது.
அடிக்கடி முளைக்கீரையை சமையல் செய்து சாப்பிட்டு வரலாம்.
மாலை ஆறு மணி அளவில், மாம்பழ சீசனில் மாம்பழத்தைத் தொடர்ந்து சுவைத்து வரலாம்.
மாதுளைப்பூ சாறு 15 மி.லி, சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து மூன்று வேளையும் குடித்து வரவேண்டும்.
பாதம்: விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் சம அளவு எடுத்து பாதத்தில் தடவி வந்தால் பாதம் மிருதுவாக இருக்கும். லேசாக சூடு செய்த வேப்பெண்ணெயை விரல்களின் இடுக்கில் தடவினால் சேற்றுப் புண்கள் சரியாகும்.
வாழைப்பூவை பருப்பு சேர்த்துச் சமைத்து சாப்பிட்டு வந்தால், கை, கால்களில் வரும் எரிச்சல் நீங்கும்.
இரண்டு கால் விரல்களையும் தினமும் ஐந்து நிமிடத்துக்கு நீட்டி - மடக்கும் பயிற்சியைச் செய்து வரவேண்டும். ரத்த ஓட்டம் சீராகும்.
-ராஜகோபால்
- மூலிகை கசாயம் சாப்பிட்ட 5 மணி நேரம் கழித்து சளி அனைத்தும் மலமாக வெளியேறும்.
- காய்ச்சல், சளி என 5 நாளில் இவை சரியானவுடன் நெத்திலி மீன் குழம்பு, ஆட்டுகால் சூப், ஈரல் என சாப்பிட்டு உடலை பலபடுத்தவும்.
நன்றாக இருக்கும் ஒருவருக்கு தலைவலி, கால்வலி என ஒருமணி நேரத்தில் காய்ச்சல் வந்துவிடுகிறது.
காய்ச்சல் வந்த முதல் நாள் அல்லது இரண்டாம் நாள் என ஏதாவது ஒருநாளில் மட்டும் உண்ணாநோன்பு மிக முக்கியம்... காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை உணவு தண்ணீர் என எதுவும் சாப்பிட கூடாது. தாகம் அதிகமானால் சிறிது தண்ணீர் குடிக்கலாம். ஒய்வுடன் பட்டினியை கடைபிடித்தால் காய்ச்சல் தீவிர நிலைக்கு போகாமல் சமாளிக்கலாம்.
12 மணி நேர பட்டினிக்கு பிறகு சூடான சோறு அல்லது புளிக்காத மாவு இட்லி தொட்டுகொள்வதற்கு புதினா கொத்தமல்லி கலந்த சட்டினி மட்டுமே.
முதல் இரண்டு நாளில் பட்டினி வைத்தியம் பலன் தரும். மூன்றாவது நாளில் பட்டினி வைத்தியம் பலன் தராது..
பப்பாளி இலை சாறு 20 எம்.எல். தேன் கலந்து காலை இரவு என மூன்று நாட்கள் சாப்பிடலாம்...
முதல் மூன்று நாட்கள் ஓய்வும் (செல்போன், டீவி கூடாது), பத்திய உணவும் அவசியம்... (ரசம் சோறு கஞ்சி இட்லி)
மூன்று நாட்கள் கழித்து காய்ச்சல் சளியாக மாறிவிடும். சளி இருக்கும் சமயத்தில் கற்பூரவள்ளி இலை 4, துளசி இலை 10, வெற்றிலை 1 இது மூன்றையும் கசக்கி போட்டு ஒரு டம்ளர் நீரை அரை டம்ளராக சுண்ட காய்ச்சி காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து இரண்டு நாட்கள் சாப்பிடவும்...
இந்த மூலிகை கசாயம் சாப்பிட்ட 5 மணி நேரம் கழித்து சளி அனைத்தும் மலமாக வெளியேறும்.
காய்ச்சல், சளி என 5 நாளில் இவை சரியானவுடன் நெத்திலி மீன் குழம்பு, ஆட்டுகால் சூப், ஈரல் என சாப்பிட்டு உடலை பலபடுத்தவும்.
-ரியாஸ்






