என் மலர்
மற்றவை
- பட்ஜெட்டுக்கேற்ப ஏசி, டீலக்ஸ் என தேர்ந்தெடுத்து பயணிக்கலாம்.
- கொச்சியில் இருந்து 14 முதல் 20 மணி நேர பயணத்தில் இலக்கை அடையலாம்.
சுற்றிலும் நீலவண்ணத்தில் வானமும், தண்ணீரும் போட்டி போட, அழகிய கடல் அலைகள் வந்து, வந்து செல்லும் அழகை காண இயற்கை பிரியர்களுக்கு எப்போதுமே சலிக்காது. இப்படி இந்தியாவில் உள்ள அழகிய மற்றும் அமைதியான இடங்களில் ஒன்று லட்சத்தீவு.
இந்தியாவின் எட்டு யூனியன் பிரதேசங்களில் லட்சத்தீவு ஒன்றாகும். மொத்தம் 36 தீவுகள், 12 பவளப்பாறைகள் மற்றும் மூன்று திட்டுகள் உள்ளன. ஆனால், இவற்றில் 10 தீவுகளில் மட்டுமே மக்கள் வசிக்கின்றனர்.
இங்குள்ள இயற்கை அழகை ரசிக்க உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.
மினிகாய் தீவு, கல்பேனி தீவுகள், கத்மத் தீவுகள், பங்காரம் தீவு மற்றும் தின்னகர தீவு உள்ளிட்டவை மிகவும் பிரபலமான இடங்களாகும்.
எப்படி அடைவது?
கேரள மாநிலத்தின் கொச்சி வழியாகத்தான் லட்சத்தீவுக்கு செல்ல முடியும். கொச்சியிலிருந்து லட்சத்தீவுக்கு விமானம் மற்றும் கப்பல் வசதி உள்ளது.
லட்சத்தீவுக்குள் நேரடியாக நுழைவது தடைசெய்யப்பட்டுள்ளது. கொச்சியில் உள்ள லட்சத்தீவு நிர்வாகத்தினரிடம் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும்.
இதற்கு முதலில் அனுமதிச் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்து, உங்களின் அடையாள ஆவணங்கள் மற்றும் மூன்று பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை இணைத்து உள்ளூர் போலீஸ் ஸ்டேஷனில் உரிய அனுமதி பெற வேண்டும்.
பின்னர், நுழைவு அனுமதியை நீங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும். அல்லது கொச்சியில் உள்ள வில்லிங்டன் தீவில் அமைந்துள்ள லட்சத்தீவு நிர்வாக அலுவலகத்தில் நேரிலும் பெறலாம்.
லட்சத்தீவை அடைந்ததும், இந்த நுழைவு அனுமதிப்பத்திரத்தை அங்குள்ள அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
நீங்கள் விமானத்தில் செல்வதாக இருந்தால் முடிந்தளவு உங்களின் பேக்கிங்கை குறைவாக இருக்க திட்டமிடுங்கள்; இங்குள்ள விமானங்கள் சிறியவை மற்றும் குறைந்த திறன் கொண்டவை. எனவே, இதற்கேற்ப உங்களின் லக்கேஜ் இருக்க வேண்டும். கொச்சியில் இருந்து அகத்தி விமான நிலையத்தில் இறக்கி விடப்படுவீர்கள்.
கப்பல்களில்...
எம்.வி. கவரட்டி, எம்.வி. மினிகாய், எம்.வி. அமிண்டிவி, எம்.வி. கோரல்ஸ், எம்.வி. லகூன், எம்.வி.லட்சத்தீவு கடல் மற்றும் எம்.வி. அரபிக்கடல் உள்ளிட்ட ஏழு கப்பல்கள் கொச்சியில் இருந்து லட்சத்தீவுக்குச் செல்கின்றன.
அவரவர் பட்ஜெட்டுக்கேற்ப ஏசி, டீலக்ஸ் என தேர்ந்தெடுத்து பயணிக்கலாம். கொச்சியில் இருந்து 14 முதல் 20 மணி நேர பயணத்தில் இலக்கை அடையலாம்.
-எம்.எஸ். சீதாராமன்
- கார்போஹைட்ரேட், பொட்டாசியம், கால்சியம் சத்து, புரதச்சத்து ஆகிய சத்துக்கள் உள்ள இந்த பலாப்பழம், புற்றுநோய் வராமல் தடுக்கும்.
- பசும்பாலுடன் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வர அஜீரணம் சரியாகும்.
மா, பலா, வாழை முக்கனிகளாகும். இதில் உள்ள சத்துக்களும் அதன் பயன்களும் குறித்து பார்ப்போம்.
மாம்பழம்:
முக்கனிகள் என்று போற்றக்கூடிய பழங்களுள் முதல் கனி மா. மாம்பழத்தில் 15% சர்க்கரை, 1% புரதம், பெருமளவு உயிர்ச்சத்துக்கள் ஏ, பி, சி ஆகியவை உள்ளன.
கண் பார்வை, மாலைக்கண் நோயை எதிர்க்கிறது. வைட்டமின் சி அதிகம் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி தருகிறது.
நோஞ்சான் பிள்ளைகள் உடல் தெம்பும் எடையும் பெறுகின்றனர்.
இருதயம் வலிமை பெறும். பசி தூண்டும். உடல் தோல், நிறம் வளமை பெறுகிறது. முகத்தில் பொலிவு உண்டாகும்.
கல்லீரல் குறைபாடுகள் விலகும். புது இரத்த அணுக்கள் உற்பத்தியாகும். உடல் வளர்ச்சி பெறுகிறது.
பலாப்பழம்:
பலாச்சுளைகள் பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ் ஆகிய உப்பு சத்துக்களும் உயிர்ச்சத்து ஏ மற்றும் சி-யும் அதிக அளவில் கொண்டுள்ளன.
கொட்டைகள் உயிர்ச்சத்து பி1, பி2 ஆகியவை கொண்டுள்ளன.
பழுத்த பலாச்சுளைகள் மலமிளக்கியாக செயல்படுகின்றன.
நார்ச்சத்து அதிகமுள்ள பலாப்பழம் செரிமானத்துக்கு நல்லது.
வைட்டமின் ஏ, பி, சி கால்சியம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்த இப்பழம் முதுமையை தடுக்க வல்லது.
கார்போஹைட்ரேட், பொட்டாசியம், கால்சியம் சத்து, புரதச்சத்து ஆகிய சத்துக்கள் உள்ள இந்த பலாப்பழம், புற்றுநோய் வராமல் தடுக்கும்.
பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இரத்த அழுத்தத்தை குறைத்து இதய நோய் வராமல் தடுகிறது.
பலாப்பழத்தில் இரும்புச்சத்து இருப்பதால் அனிமியா வராமல் தடுப்பதோடு, உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இது வயது ஆவதால் ஏற்படும் தோல் சுருக்கத்தைத் தடுக்கிறது.
வாழைப்பழம்:
உடலில் நீர்ச்சத்தையும் அதிகரிக்கச் செய்யும். மிக ஆரோக்கியமான, ஒரு கெடுதலும் தராத பழவகை இது.
இதில் அதிகமான பொட்டாசியம் இருப்பதால் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவும்.
சோடியம் உப்பு குறைவாக இருப்பதால் ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் சாப்பிடலாம். குழந்தைகளின் ஊட்டத்துக்குச் சிறந்தது.
தொடர்ந்து இருமல் இருந்து வந்தால் கருமிளகு கால் தேக்கரண்டி எடுத்து பொடி செய்து கொள்ளுங்கள். அதில் பழுத்த நேந்திரம் பழத்தை கலந்து இரண்டு மூன்று வேளை சாப்பிட்டு வர இருமல் சரியாகும்.
சின்னம்மை, டைபாய்டு, மஞ்சள் காமாலை ஆகியவற்றுக்கு தேனில் வாழைப்பழத்தைப் பிசைந்து நாள்தோறும் இரு வேளை சாப்பிட வேண்டும்.
பசும்பாலுடன் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வர அஜீரணம் சரியாகும்.
தொடர்ந்து நாள்தோறும் 2-3 வேளை இவ்வாறு சாப்பிட்டு வந்தால் மூலநோய் தீரும்.
- கண்ணன் கோவிந்தன்
- கணவன்- மனைவி சேர்க்கை தான் வம்ச விருத்தி மற்றும் குடும்பத்தின் ஒற்றுமை.
- இருவருக்கும் ஒரே வயது அல்லது 2-4 வயது வித்தியாசம் எனில் மேற்படி வாழ்க்கை பிரச்சனையாகவும் குழந்தை பாக்கியம் மிக குறைவாகவும் இருக்கும்.
உண்மையில் கணவன்- மனைவி இருவருக்கும் குறைந்த பட்சம் 7 வயது, அதிகபட்சமாக 9 வயது இருக்கனும். அப்பத்தான் வாழ்க்கை சுகமாக இருக்கும். அதே போல பெண்ணுக்கு 23 வயதுக்குள் திருமணம், பிள்ளைக்கு 26வயதுக்குள் திருமணம் நடத்த வேண்டும். இதுதான் மிகச்சரியான நிலை என்பதை பல ஜாதகங்களை அலசியதில் தெரிந்தது.
பால்யவிவாகங்கள், 15-20வயது வித்யாசங்கள் கொடூரமானது தேவையற்றது. அதை ஒழித்ததில் நன்மை அதிகம். அதேநேரம் சரியான பருவத்தில் திருமணம் செய்யவில்லை எனில் வாழ்க்கை நரகமாகும்.
பெண் விரைவில் பக்குவம் அடைந்துவிடுகிறாள். ஆண் அவளிடமிருந்து 7 வயது தள்ளி பக்குவம் அடைகிறான்.
கணவன்- மனைவி சேர்க்கை தான் வம்ச விருத்தி மற்றும் குடும்பத்தின் ஒற்றுமை. இருவருக்கும் ஒரே வயது அல்லது 2-4 வயது வித்தியாசம் எனில் மேற்படி வாழ்க்கை பிரச்சனையாகவும் குழந்தை பாக்கியம் மிக குறைவாகவும் இருக்கும்.
மேலும் இன்றைய சூழல், சாப்பாட்டு முறைகளும் தாமத திருமணங்களும் குழந்தை பாக்கியத்தை குறைத்துவிடுகிறது.
-ஜோதிடர் ரவி சாரங்கன்
- நெதர்லாந்தில் இன்று 25% ட்ரிப்புகள் சைக்கிளை பயன்படுத்தி தான் நடைபெறுகின்றன.
- நாடெங்கும் 32,000 கிமி நீளத்துக்கு சைக்கிள் பாதைகள் நிறுவப்பட்டன.
இரண்டாம் உலகப்போருக்கு பின் நெதர்லாந்தில் வளமை பெருகியது. வளமான தேசத்தில் மக்கள் செய்வதுபோல் டச்சுகாரர்கள் எல்லாம் பேருந்தை விட்டுவிட்டு கார்களை வாங்க ஆரம்பித்தார்கள். பெருமளவில் நெடுஞ்சாலைகள், லேன்கள், பாலங்களை கட்டும் அவசியம் ஏற்பட்டது.
இந்த சூழலில் கார் விபத்துக்கள் பெருக ஆரம்பித்தன. 1971ல் கார் விபத்தில் 400 குழந்தைகள் இறந்தார்கள். மொத்தமாக 3300 உயிர்கள் கார் விபத்துக்களில் பலியாகின.
தன் வீடு இருந்த தெருவில் மக்கள் நடமாட்டம் நின்று கார்கள் மட்டுமே செல்வதை பார்த்து மனம்நொந்தார் டச்சு எம்பி மார்ட்ஜே வான் புர்டன். அவர் தலைமையில் கார்களுக்கு எதிரான இயக்கம் துவங்கியது.
சும்மா "கார்கள் வேண்டாம்" என சொன்னால் மட்டும் போதாதே? அதனால் மாற்றாக சைக்கிளை தேர்ந்தெடுத்தார்கள். பேருந்து, மெட்ரோ ரெயில் எல்லாம் அரசின் முதலீட்டை நம்பியிருப்பவை. ஆனால் சைக்கிள் அப்படி அல்ல. சைக்கிள் பயணிகள் யூனியன்கள் துவங்கப்பட்டன. சாலைகளில் இரவில் பெயிண்ட்பாக்ஸை வைத்து இவர்களே சட்டவிரோதமாக சைக்கிள்களுக்கான லேன்களை வரைந்தார்கள்.
1973ல் பெட்ரோல் விலை அரபு-இஸ்ரேல் போர் காரணமாக உயர்ந்தது இவர்களுக்கு சாதகமானது. நெதர்லாந்து அரசின் மனம் மாறியது. நெதர்லாந்து நகர வடிவமைப்பு சைக்கிள்களுக்கு சாதகமாக மாற்றப்பட்டது. ஆஸ்ம்டர்டாம், ஹேக் உள்ளிட்ட பல நகரங்களில் சைக்கிள்கள் பெருக ஆரம்பித்தன.
இன்று நெதர்லாந்தில் 25% ட்ரிப்புகள் சைக்கிளை பயன்படுத்தி தான் நடைபெறுகின்றன. நாடெங்கும் 32,000 கிமி நீளத்துக்கு சைக்கிள் பாதைகள் நிறுவப்பட்டன. சைக்கிள் உடல்பயிற்சிக்கான கருவி அல்ல, அன்றாட பயணத்துக்கான வாகனம் என்பதை வலியுறுத்தும் வண்ணம் ஸ்பெஷலாக ஒமிபியாட் எனும் வகை சைக்கிள் உருவாக்கப்பட்டது.
சைக்கிள்களுக்கு முன்னுரிமை கொடுக்கும்வகையில் கார்களின் ஸ்பீட்லிமிட் மணிக்கு 30 கிமிதான் என சட்டம் இயற்றப்பட்டது. ஏன் என்றால் 30 கிமிக்கு மேம்பட்ட வேகத்தில் கார் சைக்கிள் மேல் மோதினால் சைக்கிள்பயணி இறந்துவிடுவார். அதனால் அனைத்து நகரங்களிலும் 30 கிமிதான் ஸ்பீட் லிமிட் இன்று நாட்டில் 1.7 கோடி மக்கள் இருக்கிறார்கள். 2.2 கோடி சைக்கிள்கள் உள்ளன.
ஆபிசுக்கு, பள்ளிக்கு, ஷாப்பிங்குக்கு என எங்கும் மக்கள் சைக்கிளில் போவார்கள். சிறுவயது குழந்தைகள் தனியாக அல்லது குழுவாக சைக்கிளை ஓட்டிக்கொண்டு நண்பர்கள் வீடு, பள்ளி, விளையாட என செல்வதை காணலாம்.
அங்கு மக்கள் ஜாலியாக சைக்கிள்களில் செல்வதையும், பொருட்களை கொண்டு செல்வதையும் பார்க்கலாம். கோட், சூட் எல்லாம் போட்டு சைக்கிள் ஓட்டிக்கொன்டு ஆபிஸ் போவார்கள்.
இம்மாதிரி நம் பெருநகரங்களையும் கார்களுக்கானவையாக மாற்றாமல், சைக்கிள்களுக்கானவையாக மாற்றினால் இடநெருக்கடி, மேம்பாலம் கட்ட செலவு, சுற்றுசூழல் என பலவிதமான மாற்றங்கள் வரும்.
நடக்குமா?
-நியாண்டர் செல்வன்
- சூரிய வெளிச்சம் அப்படியே குழாயில் ரிஃப்ளெக்ட் ஆகி அறைகளுக்கும் வருகிறது.
- சூரியன் பிரகாசமாக இல்லாத சமயம் என்ன செய்வது?
பகலில் அத்தனை பெரிய சூரியன் வெளில பிரகாசமா எரிஞ்சுகிட்டு இருக்கு...
பெரிய குளிர்பதனபடுத்தப்பட்ட அலுவலகங்களில் அடுக்குமாடிகளில் உள்ளே டியூப்லைட்டுகளை போட்டுக்கொண்டு வேலை செய்வது நல்லவா இருக்கு? வெளியே இருக்கும் சூரிய ஒளியை அலுவலகங்கள், குடோன்களுக்குள் கொண்டு வந்தால் என்ன?
சோலார் பேனலா?
அல்ல. சூரிய ஒளியையே அலுவலகங்களுக்குள் கொண்டுவந்தால் என்ன?
அது எப்படி முடியும்?
சோலார் டியூப்கள் மூலமாக... சோலார் டியூப்புகளை கட்டிடத்தின் மேற்புறத்தில் மாட்டி, கூரையில் இருந்து நாம எந்த அறைக்கு வெளிச்சம் வரணும்னு நினைக்கறமோ அந்த அறைக்கு கொண்டுபோகலாம்.
சோலார் டியூப்புகள் வளைந்து, நெளிந்து எப்படி வேண்டுமானாலும் போகலாம். சூரிய வெளிச்சம் அதன்மேலுள்ள ஒரு மெடலில் படும், அது அதை அப்படியே அதனுள் இருக்கும் மெடல்கள், குவிக்கண்ணாடிகள் வழியே எதிரொலித்து அறைக்குள் சூரிய வெளிச்சம் வரும்.
எந்த மின்சார செலவும் இல்லை. சூரிய வெளிச்சம் அப்படியே குழாயில் ரிஃப்ளெக்ட் ஆகி அறைகளுக்கும் வருகிறது. சூரியன் பிரகாசமாக இல்லாத சமயம் என்ன செய்வது?
லைட்டை போட்டுக்கவேண்டியதுதான். மேலும் போடோவால்டிக் தொழில்நுட்பம் மூலம் பேட்டரி சார்ஜ் ஆகி மின்விளக்குகளை எரியவைக்கவும் முடியும். இரவிலும் வெளிச்சம் வரும்.
இனி சில ஆண்டுகளில் இந்த தொழில்நுட்பம் பரவலாகையில் ஏகபட்ட மின்சார செலவு மிச்சம் ஆகும்.
- நியாண்டர் செல்வன்
- சோற்றுக் கற்றாழை மடலை இரண்டாகப் பிளந்து உள்ளே சிறிதளவு வெந்தயத்தை வைத்து மூடி விடவும்.
- இரண்டு நாட்கள் கழித்து ஊறிய வெந்தயத்தை எடுத்து தேங்காய் எண்ணெயில் போட்டு அதை தேய்த்து குளிக்க நரை முடியும் கறுப்பாகும்.
"குமரியை உண்டால், குமரியை வெல்ல முடியும்" என்கிறது சித்த மருத்துவம். குமரி என்பது சோற்றுக் கற்றாழையின் மற்றொரு பெயர்.
தரிசு நிலத்தில் விளையும் இந்த செடிக்கு ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் உண்டு. கற்றாழை ஜெல்லை (சோறு) சுத்தமான நீரில் 7 முறை கழுவி சுத்தம் செய்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர உங்கள் இளமை என்றும் ஊஞ்சலாடிக் கொண்டே இருக்கும். உடலில் கஸ்தூரி மணம் வீசும். சருமம் வறண்டுபோகாமல் ஈரப்பதத்துடன் ஜொலிக்கும்.
கற்றாழை ஜெல்லை பசு மோரில் கலந்து குடித்து வர உடல் சூட்டினால் முகத்தில் வரும் பருக்கள், வெயிலினால் தோலில் ஏற்படும் அலர்ஜி மற்றும் கருந்திட்டுக்கள் மறைந்து போகும்.
இதன் ஜெல்லை முகத்தில் தேய்த்துக் கழுவி வந்தால் முகம் அப்பழுக்கில்லாத பளிங்கு போல் ஜொலிக்கும்.
கற்றாழை மடலைக் கீறி சாறு எடுத்து, அதை தேங்காய் எண்ணெயுடன் கலந்து 40 நாள் வெயிலில் வைத்து இதை தலைக்கு தொடர்ந்து தேய்த்து வாருங்கள். தலைமுடி நன்கு செழித்து வளரும்.
கற்றாழையின் சோற்றைத்தலையில் தேய்த்து அரை மணிநேரம் ஊற வைத்துக் குளிக்க தலையில் ஏற்படும் பொடுகு, சிரங்கு குணமாகும்.
சோற்றுக் கற்றாழை மடலை இரண்டாகப் பிளந்து உள்ளே சிறிதளவு வெந்தயத்தை வைத்து மூடி விடவும். இரண்டு நாட்கள் கழித்து ஊறிய அந்த வெந்தயத்தை எடுத்து தேங்காய் எண்ணெயில் போட்டு அதை தேய்த்து குளிக்க நரை முடியும் கறுப்பாகும்.
இச்செடியின் மடலில் உள்ள சோற்றை எடுத்து தண்ணீரில் நன்கு அலசி அதை சாப்பிட்டு வர குடல் புண், மூல நோய் மாறும். மலச்சிக்கல் தீரும்.
வாடிச் சருகான கற்றாழை மடலை தீயில் கருக்கி, தேங்காய் எண்ணெயோடு கலந்து தீப்புண்களில் மீது பூசி வர விரைவில் புண் ஆறும்.
கற்றாழை மடலில் சிறு துண்டு எடுத்து இரண்டாக பிளந்து சோற்றுப் பகுதியை தீயில் வாட்டி உடல் பொறுக்கும் சூட்டில் அடிப்பட்ட இடத்தில் இதை வைத்து ஒத்தடம் கொடுக்க வலி, வீக்கம் மட்டுமல்ல இரத்தக் கட்டும் மாறும்.
தீய சக்திகள், கண் திருஷ்டி இவைகளை அண்டவிடாது என்ற நம்பிக்கையின் காரணமாக வீட்டின் முன்புறம் வளர்க்கப்படுகிற அல்லது கட்டித் தொங்க விடப்படுகிற இந்த செடி மாட்டுத் தொழுவங்களில் கால்நடைகளுக்கு உண்ணி பற்றாமல் இருப்பதற்காகவும் தொங்க விடப்படுவது உண்டு.
-ப்யாரீப்ரியன்
- அம்பல் > அம்பலம் என்றால் கூடுகிற இடம். அக்காலத்திலே கோயில் தானே மக்கள் கூடுகிற இடம்.
- இன்றைக்கும் மலையாள மொழியில் கோயிலை ‘அம்பலம்’ என்றே அழைக்கின்றனர்.
திருச்சிற்றம்பலம் என்பதற்கு பொருள் என்ன?
சிற்றம்பலம் - என்ற அழகிய தமிழ்ப் பெயரோ தற்காலத்தில் 'சிதம்பரம்' - எனச் சிதைந்து விட்டது!
சிற்றம்பலம் > சித்தம்பலம் > சித்தம்பரம் > சிதம்பரம்!
திருச்சிற்றம்பலம் - என அழகுத் தமிழில் அழைக்க வேண்டிய நாம் சிதம்பரம் என்ற புரியாத சொல்லைப் புழங்கிக் கொண்டிருக்கிறோம்.
அதன் காரணமாக சிதம்பரம் அறிந்த நமக்கு - அதன் பண்டைய பெயரான 'திருச்சிற்றம்பலம்' - தெரியவில்லை!
அம்பல் > அம்பலம் என்றால் கூடுகிற இடம். அக்காலத்திலே கோயில் தானே மக்கள் கூடுகிற இடம். இன்றைக்கும் மலையாள மொழியில் கோயிலை 'அம்பலம்' என்றே அழைக்கின்றனர். அம்பலம் என்பதற்கு அரங்கம் /அரண்மனை என்ற பொருளும் உண்டு.
தில்லையில் இருக்கும் ஆடலரசன் கோயில் என்பது மூன்றாம் நூற்றாண்டு காலத்திலிருந்த 'சிறிய அம்பலம்' ஆகும் .
சிறிய அம்பலம் = சிற்றம்பலம்.
அதை அந்நாளில் 'சிற்றம்பலம்' என்றே அழைத்தனர். பின்னர் பேரரசுச் சோழர் காலங்களில் அது பேரம்பலம் ஆயிற்று. பொற்கூரை வேயப்பட்டு பொன்னம்பலமும் ஆயிற்று.
தில்லையும் மதுரையும் தமிழர்கள் வரலாற்றில் பெரும் பங்கு கொண்டவை.
சோழர்கள் முடி சூடிக்கொண்ட இடம் = பொன்னம்பலம்.
பாண்டியர்கள் முடி சூடிக் கொண்ட இடம் = வெள்ளம்பலம் (மதுரை வெள்ளியம்பலம்).
சிற்றம்பலம் - என்ற அழகிய தமிழ்ப் பெயரை சித்தம்பரம் > சிதம்பரம் எனத்திரித்து பின்
சித் + அம்பரம் என்று பிரித்து "ஞான ஆகாசம்" என்று பொருள் சொல்லி இன்று புது விளக்கங்கள் சொல்லப்படுகிறது.
-நித்தியானந்தபாரதி
- ஒரு மணி நேரம் வாய்கிழியப் பேசுவதைப் புரிந்து கொள்ளாத ஒரு பெண், கணவன் கொண்டு வந்து தரும் சிறிய ரோஜாப்பூவின் பின்னால் இருக்கும் அவனது அன்பைப் புரிந்து கொள்கிறாள்.
- நீங்கள் ஏன் அவளைக் காதலிக்கிறீர்கள் என்று நாட்கணக்கில் வாதம் செய்யுங்கள். உங்கள் வார்த்தைகளில் ஒன்று கூட அவள் மண்டையில் ஏறாது.
பெண்களோடு நெருங்கிப் பழகும் எல்லா ஆண்களுக்கும், பெண்கள் வித்தியாசமானவர்கள் என்ற அடிப்படை உண்மை புரிந்திருக்கும்.
ஒரு பெண்ணோடு தர்க்கரீதியாக விவாதம் செய்ய முடியாது. அதை அவள் புரிந்து கொள்ள மாட்டாள். புரிந்து கொள்ள முடியாது.
அவளது போக்கைப் பார்க்கும் போது, அவள் வேறு கிரகத்தைச் சேர்ந்தவளோ என்று நமக்கு நினைக்கத் தோன்றும்.
அதே போல் தான் ஒரு பெண்ணின் நிலையும். எப்போது பார்த்தாலும் அறிவின் மூலமாகவே உலகத்தை உணர முயன்று கொண்டிருக்கும் முட்டாள்கள் என்று தான் ஆண்களைப் பற்றி அவர்கள் நினைப்பார்கள்.
உணர்வு சம்பந்தப்பட்ட எதையும் புரிந்து கொள்ள லாயக்கில்லாதவர்கள் ஆண்கள் என்றுதான் பெண்கள் நினைக்கிறார்கள்.
ஆண் வாதம் செய்கிறான். தர்க்கரீதியாக உண்மையைப் புரிய வைக்க முயற்சி செய்கிறான். ஆனால் அதை பெண்ணின் மனம் ஏற்றுக் கொள்வதில்லை. அது அவளுடைய வழியில்லை. தர்க்கத்திற்கும், பெண்ணிற்கும் சம்பந்தமேயில்லை.
தன் மனைவியோடு பல மணிநேரம் செய்யும் வாதத்தைவிட, ஒரு சிறிய ரோஜாப்பூ அதிக மதிப்புடையது என்பதைப் பல கணவர்கள் புரிந்து கொள்வதில்லை.
ஒரு மணி நேரம் வாய்கிழியப் பேசுவதைப் புரிந்து கொள்ளாத ஒரு பெண், கணவன் கொண்டு வந்து தரும் சிறிய ரோஜாப்பூவின் பின்னால் இருக்கும் அவனது அன்பைப் புரிந்து கொள்கிறாள்.
நீங்கள் ஏன் அவளைக் காதலிக்கிறீர்கள் என்று நாட்கணக்கில் வாதம் செய்யுங்கள். உங்கள் வார்த்தைகளில் ஒன்று கூட அவள் மண்டையில் ஏறாது.
ஒரு சிறிய ரோஜா மலரைக் கொண்டு போய், "நான் உன்னைக் காதலிக்கிறேன்" என்று மென்மையாகச் சொல்லுங்கள். அவள் புரிந்து கொள்வாள்.
பெண் உணர்ச்சிமிக்கவள். உணர்வு பூர்வமானவள். ஓர் ஆணால் ஒரு பெண்ணைப் புரிந்து கொள்ள முடியாது. ஏனென்றால் அவள் சொல்வது, செய்வது எல்லாமே காரண-காரிய அறிவுக்குப் புறம்பானதாக இருக்கும்.
கணவன் மனைவியிடம் எதையும் தர்க்க ரீதியில் பேசி புரியவைக்க முடியாது. அதனால் கொஞ்சம் கொஞ்சமாக கணவர்கள் மௌனமாகி விடுகிறார்கள். பின் செவிடுகளாகி விடுகிறார்கள்.
பெண்களை பேச விடுகிறார்கள். அவள் "என்ன அபத்தத்தை வேண்டுமானாலும் பேசிவிட்டுப் போகட்டும். நாம் ஏன் அதைக் கவனிக்க வேண்டும்?" என்ற மனோபாவத்துக்கு வந்துவிடுவார்கள்.
ஆண்கள் ஏன் பெண்டாட்டி தாசர்களாக, ஆமாம்சாமிகளாக இருக்கிறார்கள்? ஏறக்குறைய எல்லா ஆண்களும் அப்படித்தான் இருக்கிறார்கள். அப்படித்தான் இருக்க முடியும்.
எவ்வளவு நேரம் தான் மனைவியோடு வாதம் செய்ய முடியும் சொல்லுங்கள். மனைவியோடு வாதம் செய்வதில் பயனேயில்லை.
அப்படி வாதம் செய்யும் போது நீங்கள் முட்டாளைப் போல் காட்சியளிப்பீர்கள். மனைவியோடு வாதிடுவதற்குப் பதிலாக சுவரோடு வாதிடலாம்.
நீங்கள் வாதம் செய்வீர்கள். உங்கள் மனைவி பெருங்குரலெடுத்து அழுவாள். உங்களுக்கு என்ன செய்வது என்று தெரியாது. நீங்கள் அவளிடம், "அமைதி, அமைதி. நாம் உட்கார்ந்து பேசித் தீர்த்துக் கொள்ளலாமே!" என்று அவளிடம் மன்றாடிக் கொண்டிருக்கும் போது, அவள் சாமான்களைத் தூக்கியெறிய ஆரம்பிப்பாள். பாத்திரங்களைப் போட்டு உடைப்பாள். கதவை டமால் என்ற பெருஞ்சத்தத்துடன் சாத்துவாள்.
அவளோடு பேசி என்ன பயன் என்று விரக்தி வந்துவிடும் உங்களுக்கு. அவளோடு எப்படித் தொடர்பு கொள்வது? அவளை எப்படிப் புரிந்து கொள்ளச் செய்வது என்று தவித்துக் கொண்டிருப்பீர்கள்.
அவள் சொல்வதைக் கேட்க வேண்டும். இல்லாவிட்டால் வீண் வம்பில் மாட்டிக் கொள்ள வேண்டும் என்ற நிலைக்கு வந்துவிடுவீர்கள்.
அதன் பின் பெண்டாட்டி தாசனாகிவிடுவீர்கள். அவளைப் பொறுத்த மட்டில் உங்கள் வாத-பிரதிவாதங்கள் எல்லாம் கவைக்கு உதவாத குப்பை.
ஆண்கள் அறிவுபூர்வமானவர்கள்.
பெண்கள் உணர்வுபூர்வமானவர்கள்.
-ஓஷோ
- அமெரிக்காவில் ஒரு ஊரில், கணவர்கள் விற்கப்படும் கடை திறக்கப்பட்டது. அந்த கடை வாசலில் கடையின் விதிமுறைகளின் பலகை இருந்தது.
- ஒரு தளத்தில் இருந்து மேலே சென்றுவிட்டால் மறுபடியும் கீழே வர முடியாது. அப்படியே வெளியே தான் போக வேண்டும்.
அமெரிக்காவில் ஒரு ஊரில், கணவர்கள் விற்கப்படும் கடை திறக்கப்பட்டது. அந்த கடை வாசலில் கடையின் விதிமுறைகளின் பலகை இருந்தது. அதில்...
1. கடைக்கு ஒரு தடவை தான் வரலாம்.
2. கடையில் மொத்தம் 6 தளங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு தளத்திலும் இருக்கின்ற ஆண்களோட தகுதிகள் மேல போகப்போக அதிகமாகிக் கொண்டே போகும்.
3. ஒரு தளத்தில் இருந்து மேலே சென்றுவிட்டால் மறுபடியும் கீழே வர முடியாது. அப்படியே வெளியே தான் போக வேண்டும்.
இதுதான் அந்த விதிமுறைகள்....
இதையெல்லாம் படித்து பார்த்துவிட்டு, ஒரு இளம்பெண் கணவர் வாங்க கடைக்கு வந்தார்.
"கணவர் வாங்குவது என்பது காய்கறி வாங்குவது போன்ற காரியமல்லவே, என்று நினைத்துக்கொண்டு கடையின் உள்ளே நுழைந்தார்...
முதல் தளம் அறிக்கை பலகையில்,
இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள்
"வேலை உள்ளவர்கள்".
"கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்".
இது என்ன ஒரு அடிப்படை தகுதி என்று எண்ணிக்கொண்டு மேலே செல்கிறார்...
இரண்டாம் தளம் அறிக்கை பலகையில்,
இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள்
"வேலை உள்ளவர்கள்".
"கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்"
மேலும் "குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள்"
இதுவும் என்ன ஒரு அடிப்படை தகுதி என்று எண்ணிக்கொண்டு மேலே செல்கிறார்...
மூன்றாம் தளம் அறிக்கை பலகையில்,
இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள்
"வேலை உள்ளவர்கள்"
"கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்"
"குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள்"
மற்றும்
"வசீகரமானவர்கள்"
அந்த இளம்பெண் "வசீகரமானவர்கள்" என்பதை பார்த்ததும், "ஆஹா.. மூன்றாவது தளத்திலேயே இவ்வளவு தகுதிகள் இருந்தால், மேலே போகப்போக இன்னும் என்ன எல்லாம் இருக்குமோ" என்று நினைத்துக்கொண்டு மேலே செல்ல முடிவெடுத்தார்....
நாலாவது தளம் அறிக்கை பலகையில்,
இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள்
"வேலை உள்ளவர்கள்"
"கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்"
"குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள்"
"வசீகரமானவர்கள்"
மற்றும் "வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உள்ளவர்கள்"
இதை விட வேறு என்ன வேண்டும்.. நல்ல குடும்பம் அமைக்கலாமே...?
கடவுளே... மேல என்ன இருக்கு என்று தெரிந்தே ஆகணும்.
அப்படி என்று முடிவு செய்துவிட்டு, அடுத்த தளத்திற்கு சென்றார்...
ஐந்தாவது தளம் அறிக்கை பலகையில்,
இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள்
"வேலை உள்ளவர்கள்"
"கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்"
"குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள்"
"வசீகரமானவர்கள்"
"வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உள்ளவர்கள்"
மற்றும் "மிகவும் "ரொமாண்டிக்" ஆனவர்கள்"
அவ்வளவு தான்.. அந்த பெண்ணால் தாங்க முடியவில்லை..
சரி இங்கேயே யாரையாவது தேர்வு செய்யலாம் என்று நினைத்தாலும் இன்னொரு தளம் பாக்கி இருக்கின்றதே..
அங்கே என்ன எப்படிப்பட்ட கணவர்கள் இருப்பார்கள் என்பதை பார்க்காமல் எப்படி முடிவு செய்வது....?
சரி மேலே சென்று பார்த்து விடலாமே என்று முடிவு செய்துவிட்டு ஆறாவது தளத்திற்கு செல்கிறார்....
ஆறாவது தளம் அறிக்கை பலகையில்,
"இந்த தளத்தில் கணவர்கள் யாரும் இல்லை.. வெளியே செல்லும் வழி மட்டுமே உள்ளது.. இந்த தளத்தை அமைத்ததற்கு காரணம், பெண்களை திருப்திப்படுத்தவே முடியாது என்பதை நிரூபிக்கத்தான்"...
"எங்கள் கடைக்கு வந்தமைக்கு நன்றி"...!
" கீழே படிகளில் இறங்கவும்".
என்று எழுதியிருந்தது...
- தென்கச்சி சுவாமிநாதன்
- பொற்கிழியோடு திருவில்லிப்புத்தூர் திரும்பிய ஆழ்வார், பொற்கிழியை விற்று பெருமாளுக்கு ஒரு கோயிலைக் கட்டினார்.
- பெருமாளின் கண் திருஷ்டியைப் போக்க பெரியாழ்வார் பாடிய “பல்லாண்டு’’ பாடல் மிக முக்கிய பாடலாக பெருமாள் கோயில்களில் பாடப்படுகிறது.
பெரியாழ்வார் கனவில் ஒருநாள் பெருமாள் தோன்றி உடனடியாக மதுரை சென்று பாண்டியன் சந்தேகத்தை தீர்க்குமாறு அருளினார்.
வல்லபதேவ பாண்டியனுக்கு இருந்த சந்தேகம் "மறுபிறவியில் ஏற்றம் பெற நாம் என்ன செய்ய வேண்டும்?'' என்பது தான்.
மதுரை அரசவைக்குள் பெரியாழ்வார் நுழைந்தார். பாண்டியனுக்கு இப்படி ஒரு மனிதன் தம் தேசத்தில் இருப்பதே தெரியாது. பெரியாழ்வார் விளக்கம் அளித்தார். மன்னன் சந்தேகம் தீர்ந்தது. அரசன் அறிவித்த பொற்கிழி ஆழ்வாரை நோக்கி வந்தது. பொற்கிழியோடு ஆழ்வார் அரண்மனையை விட்டு வெளியே வந்தார்.
சைவ நகரத்தில் ஆழ்வாருக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. யானை மீது ஆழ்வாரை அமர வைத்து மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த கண்கொள்ளாக் காட்சியை கருடன் மேல் அமர்ந்து வந்து பெருமாள் கண்டுகளித்தார். பெருமாளைக் கண்ட ஆழ்வார் அகமகிழ்ந்தார்.
ஆனால் தன்னால் பெருமாள் கண் திருஷ்டிக்கு உண்டானதை உணர்ந்தார். கண் திருஷ்டி போக ஒரு பதிகம் பாடினார். அந்த பதிகம் "பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூறாயிரம்..'' என்பதே.
அந்த பொற்கிழியோடு திருவில்லிப்புத்தூர் திரும்பிய ஆழ்வார், பொற்கிழியை விற்று பெருமாளுக்கு ஒரு கோயிலைக் கட்டினார். அந்த கோயிலே தமிழ் நாட்டின் அடையாளமாக பின்னாளில் மாறியது. தமிழ்நாடு அரசைக் குறிக்கும் லோகோவில் இந்த கோபுரம் தான் இடம்பெற்றுள்ளது.
பெருமாளின் கண் திருஷ்டியைப் போக்க பெரியாழ்வார் பாடிய "பல்லாண்டு'' பாடல் மிக முக்கிய பாடலாக பெருமாள் கோயில்களில் பாடப்படுகிறது. திருப்பதி பெருமாள் கோயில் நடை திறக்கும்போதும் சாத்தும்போதும் "பல்லாண்டு.. பல்லாண்டு'' பாடல் பாடப்படும். திருப்பதி கோயிலின் சக்திக்கு ஆதாரமாக அந்த பதிகம் இருப்பதை அனைவரும் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும்.
தமிழின் ஒரு சொல் வெல்லும்... ஒரு சொல் கொல்லும் என்ற கவிஞர் வாலியின் சொற்கள் தான் ஞாபகம் வருகிறது.
- சதீஷ்
- முத்தம் கொடுப்பதால் உடலுக்கு ஏராளமான ஆரோக்கியமான நன்மைகள் கிடைக்கும் என கூறுகிறார்கள்.
- தினமும் மனைவியை முத்தமிடுபவர்கள் நீண்டகாலம் வாழ்ந்ததாக ஒரு ஆய்வு கூறுகிறது.
உலகம் முழுவதும் நாளை (14-ந்தேதி) காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.
பொதுவாக பிப்ரவரி 7-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை காதலர் வாரம் கொண்டாடுகிறார்கள். இந்த வாரத்தின் ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு தினமாக கொண்டாடுகிறார்கள். அந்த வகையில் 7-ந்தேதி ரோஜா தினத்தில் தொடங்கும் இந்த வாரம் மறுநாள் ப்ரோபோஸ் டே, சாக்லேட் டே, டெடி டே, பிராமிஸ் டே, ஹக் டே, கிஸ் டே, வாலண்டைஸ்டே என கொண்டாடப்படுகிறது.
அதன்படி காதலர்தினத்திற்கு ஒரு நாள் முன்னதாக பிப்ரவரி 13-ந்தேதி அன்று முத்த தினம் கொண்டாடப்படுகிறது. முத்தம் என்பது அன்பை வெளிக்காட்டும் ஒரு வழியாக உள்ளது. முத்தம் கொடுப்பதால் உடலுக்கு ஏராளமான ஆரோக்கியமான நன்மைகள் கிடைக்கும் என கூறுகிறார்கள்.
தினமும் மனைவியை முத்தமிடுபவர்கள் நீண்டகாலம் வாழ்ந்ததாக ஒரு ஆய்வு கூறுகிறது.
இதேபோல 1980-களில் ஒரு ஆய்வில் வேலைக்கு செல்வதற்கு முன்பு மனைவியை முத்தமிடும் ஆண்கள் குறைவான விபத்தில் சிக்குகிறார்கள் என்றும், அதிக வருமானத்துடன் இருந்ததாகவும் கூறுகிறது.
முத்தமிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது என்றும், முத்தத்தின் போது உருவாக்கும் கூடுதல் உமிழ்நீர் பல ஆபத்தான பாக்டீரியாக்களை அழித்து இதய துடிப்பை அதிகரிப்பதுடன் ரத்த அழுத்தத்தையும் குறைப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.
முத்தம் ரத்தத்தில் உள்ள கார்டிசோல் என்ற மனஅழுத்த கார்மோனின் அளவை குறைக்க உதவுகிறது என்றும் நன்மைகளை பட்டியலிடுகிறது.
உதட்டில் முத்தம், கைகளில் முத்தம், நெற்றியில் முத்தம், மூக்கில் முத்தம், கண்களை திறந்து முத்தம், கண்களை மூடிக்கொடுப்பது, கன்னத்தில் முத்தம், கண்களில் முத்தம், கழுத்தில் முத்தம் என முத்தத்தில் பல்வேறு வகைகள் உள்ளன.
இவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு அர்த்தம் உள்ளது. கைகளில் முத்தம் கொடுத்தால் அவர் உங்களை மிகவும் மதிக்கிறார் என்று அர்த்தமாம். நெற்றியில் முத்தம் கொடுத்தால் அதற்கு வாழ்நாள் முழுவதும் உன் அன்பு எனக்கு வேண்டும் என்று அர்த்தம்.
மூக்கின் மேலே முத்தம் கொடுத்தால் நீ மிகவும் அழகாய் இருக்கிறாய். உன்னை விட அழகு வேறு யாரும் இல்லை என்று அர்த்தம் என்கிறார்கள். கண்களை திறந்து முத்தம் கொடுக்கும் போது, உங்களது துணை ரசிக்கிறார்கள் என்று அர்த்தம். கன்னத்தில் முத்தம் கொடுத்தால் உங்களுடன் நட்பாக இருக்க விரும்புகிறேன் என்றும், கண்களின் மேல் முத்தம் கொடுத்தால் நான் எப்போதும் உன்னுடன் இருக்க விரும்புகிறேன் என்றும், கழுத்தில் முத்தம் கொடுத்தால் நீ எனக்கு வேண்டும் என்றும் அர்த்தமாம்.
இதுதவிர பிரஞ்சு முத்தம் என்பது தீவிரமான மற்றும் உணர்ச்சி மிக்க முத்தத்தில் ஒரு வடிவம். இது ஒருவரையொருவர் ஆழமாக காதலிக்கும் நபர்களால் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.
- மூச்சுப்பயிற்சி செய்யும் பொழுது 12 அங்குலம் காற்றை உள்ளிழுத்து 8 அங்குலம் நிறுத்தி 4 அங்குலம் வெளிவிட வேண்டும்.
- சனிக்கிழமை மட்டும் அதிகாலை 4 மணி முதல் இரவு 12 மணி வரை சூரிய கலையில் சுவாசம் ஓட வேண்டும்.
மூச்சு ஒருநாழிகைக்கு 360 சுவாசம்
ஒருநாளைக்கு 21600 சுவாசம்
மூச்சுப்பயிற்சி செய்யும் பொழுது 12 அங்குலம் காற்றை உள்ளிழுத்து 8 அங்குலம் நிறுத்தி 4 அங்குலம் வெளிவிட வேண்டும். இதே முறையில் ஒருவனுக்கு சுவாசம் தொடர்ந்து ஓடினால் அவன் 120 வருடங்கள் வாழ்வான். இவ்வாறு சுவாசம் குறைய ஆயுளும் கூடும். சுவாசம் அதிகரிக்க அதிகரிக்க ஆயுள் குறையும்.
நம்முள் சுவாசம் நடக்கும் அளவு:
அமர்ந்திக்கும்போது 12 அங்குலம்
நடக்கும்போது 16 அங்குலம்
ஓடும்போது 25 அங்குலம்
உறங்கும்போது 36 அங்குலம்
உடலுறவு கொள்ளும்போது 64 அங்குலம்
சுவாசம் குறைத்தால் ஏற்படும் நன்மைகள்:
11 அங்குலமாக குறைந்தால் உலக இச்சை நீங்கும்.
10 அங்குலமாக குறைந்தால் ஞானம் உண்டாகும்.
9 அங்குலமாக குறைந்தால் விவேகி ஆவான்.
8 அங்குலமாக குறைந்தால் தூர திருஷ்டி காண்பான்.
7 அங்குலமாக குறைந்தால் ஆறு சாஸ்திரங்கள் அறிவான்.
6 அங்குலமாக குறைந்தால் ஆகாய நிலை அறிவான்.
5 அங்குலமாக குறைந்தால் காயசித்து உண்டாகும்.
4 அங்குலமாக குறைந்தால் அட்டமாசித்து உண்டாகும்.
3 அங்குலமாக குறைந்தால் நவகண்ட சங்சாரம் உண்டாகும்.
2 அங்குலமாக குறைந்தால் கூடுவிட்டு கூடுபாய்தல்..
1 அங்குலமாக குறைந்தால் ஆன்ம தரிசனம்.
உதித்த இடத்திலேயே நிலைத்தால் சமாதி நிலை. அன்ன பானம் நீங்கும்.
எந்தெந்த நாட்கள் எந்த சுவாசம் ஓட வேண்டும் என்பதைப் பற்றி காண்போம்.
ஞாயிறு, செவ்வாய் , சனி - இம்மூன்று நாட்களிலும் சூரியகலை ஓட வேண்டும்.
வெள்ளி, திங்கள் , புதன் - இம் மூன்று நாட்களிலும் சந்திரகலை ஓட வேண்டும்.
வியாழக்கிழமை - பூர்வபட்சம் (வளர்பிறை) - சந்திர கலை ஓட வேண்டும்.
அமரபட்சம் (தேய்பிறை) - சூரிய கலை ஓட வேண்டும்.
இம்முறையில், அதிகாலை 4 மணிக்கு சுவாசம் நடக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து நடந்தால் காரியங்கள் அனைத்தும் சித்தியாகும்.
சனிக்கிழமை மட்டும் அதிகாலை 4 மணி முதல் இரவு 12 மணி வரை சூரிய கலையில் சுவாசம் ஓட வேண்டும்.
- சிவசங்கர்






