என் மலர்
மற்றவை
- யமுனை நதி ராதைக்கும் கோபியருக்கும் மட்டுமல்ல, காதலின் சின்னமாக போற்றப்படும் மும்தாஜுக்கும் பொருந்தும்.
- 7 உலக அதியசயங்களில் ஒன்றாகத் திகழும் தாஜ்மஹால் 1983 ஆண்டு யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.
தாஜ்மஹாலை வடிவமைத்துக் கட்டிய ஆர்கிடெக்ட்- உஸ்தாத் அஹமத் லஹூரி. இன்றைய பாகிஸ்தான் பஞ்சாபில் பிறந்த பெர்ஷிய வம்சத்தைச் சேர்ந்த அஹமத் லஹூரி, டெல்லி செங்கோட்டைக்கு அடிக்கல் நாட்டியவர்.
யமுனை நதி ராதைக்கும் கோபியருக்கும் மட்டுமல்ல, காதலின் சின்னமாக போற்றப்படும் மும்தாஜுக்கும் பொருந்தும்.
யமுனையாற்றின் தெற்குக்கரையில் அமைந்த 42 ஏக்கர் பரப்பளவு வளாகத்தில் பிரதான கல்லறை 1632 ல் ஆரம்பித்து 16 ஆண்டுகள் கழித்து 1648 கட்டி முடிக்கப்பட்டது. நுழைவுவாயில், திருச்சுற்று மாளிகை, மேற்கில் உள்ள பள்ளிவாசல் கிழக்கில் உள்ள மாற்று மண்டபம் போன்றவை பின்னர் கட்டப்பட்டு 1653 முற்றுப் பெற்றது.
கட்டுமானப் பணியில் சுமார் 20000 கலைஞர்களும் தொழிலாளர்களும் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.
அந்தக்காலத்தில் கட்டி முடிக்க 320 கோடி செலவாகி இருக்கிறது. தற்போதைய மதிப்பில் சுமார் 7200 கோடி ரூபாயாகும்.
7 உலக அதியசயங்களில் ஒன்றாகத் திகழும் தாஜ்மஹால் 1983 ஆண்டு யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.
இந்திய தொல்லியல் அளவீட்டுத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் தாஜ்மஹால் கட்டி முடிக்கும்போது இருந்த அதே நிலையில் பராமரிக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
1996 ஆண்டு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தாஜ்மஹாலைச் சுற்றிய 10400 சதுர கிலோமீட்டர் பரப்பளவு பகுதி Taj Trapezium Zone என்று அறிவிக்கப்பட்டு சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் அகற்றப்பட்டன.
வருடத்திற்கு சுமார் 60 லட்சம் பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த நுழைவுக் கட்டணத்தை உயர்த்தி உள்ளனர்.
நீல வானத்தின் பின்னணியில் பச்சைப் பசேல் புல்வெளியின் செந்நிற கட்டுமானங்களும் தளங்களுக்கும் நடுவே சூரிய ஒளியிலும் நிலவொளியிலும் ஜொலிக்கும் தூய வெண்மை நிற கல்லறை பார்ப்பவரை உண்மையிலே மயக்கம் கொள்ளத்தான் செய்கிறது.
-ஆனந்தன் சன்னாசி
- இந்தி திரையுலகில் புகழ்பெற்ற முன்னணி இசையமைப்பாளர்கள் அத்தனை பேரின் இசையிலும் வாணி ஜெயராம் குரல் ஒலிக்கத்தவறவேயில்லை.
- சாஸ்திரிய சங்கீத கச்சேரிகளுக்காக அடிக்கடி சென்னை வந்துபோக வேண்டியிருந்ததால் 1974ல் சென்னைக்கே இடம் பெயர்ந்தார் வாணி.
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல், கேள்வியின் நாயகனே போன்ற பாடல்கள், அந்தக்காலத்தின் இசைத்தட்டுகளாக சுழன்று சுழன்று ரெக்கார் பிளேயரின் ஊசிகளையே சுலபத்தில் காலி செய்திருக்கும்.
எனக்காக நீ அழலாம் இயற்கையில் நடக்கும்
நீ எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும்
நமக்காக பூமியிலே கடமைகள் உண்டு
அதை நமக்காக நம் கையால் செய்வது நன்று
- கவிஞர் கண்ணதாசன் வரிகள் வாணி ஜெயராம் குரலில் நம் காதில் பாயும்போது... மெய்சிலிக்காத தருணங்கள் உண்டா.
இந்திய சினிமாவுக்கு கிடைத்த அரிய பொக்கிஷங்களில் டாப் லிஸ்ட்டில் வருவார் வாணி ஜெயராம்.
வங்கி ஊழியராய் வாழ்க்கையை தொடங்கிய அவரின் ஆரம்பம் வெகுசுவாரஸ்யமானது. மார்ச்,1969. மும்பையில் முதன்முறையாக ஒரு இளம்பெண் இசைக்கச்சேரி செய்கிறார். அந்த நிகழ்ச்சிக்கு எதேச்சையாக வருகிறார் வசந்த் தேசாய். 1940களிலும் 50களிலும் பட்டையை கிளப்பிய இசைமேதை.
1959ல் கூன்ஜ் உதி ஷெனாய் என்றொரு படம். நம்மூர் தில்லானா மோகனாம்பாள் படத்தில் சிவாஜி எப்படி என்.பி.என்.சேதுராமன் சகோதரர்களின் நாதஸ்வர இசையை திரையில் தத்ரூபமாக காட்டி இசைக்கலைஞராக வியக்க வைத்தாரோ அதேபோல் ஷெனாய் வாத்திய கலைஞராக ஜுப்ளி ஸ்டார் ராஜேந்திரகுமார் நடித்திருப்பார். மன்னிக்கவும் வாழ்ந்து காட்டியிருப்பார்.
ஏனெனில் படத்திற்காக ஷெனாய் வாசித்தது புகழ்பெற்ற உஸ்தாத் பிஸ்மில்லா கான். பாரத ரத்னா பட்டியலில் இடம்பிடிக்கும் அளவுக்கு இந்தியாவின் அப்படியொரு இசைப்பொக்கிஷம் பிஸ்மில்லா கான். இப்படியெல்லாம் பல வரலாறு கொண்ட கூன்ஜ் உதி ஷெனாய் படத்துக்கு இசையமைத்தவர்தான் வசந்த் தேசாய்.
இப்படிப்பட்டவர்தான் அன்றைய இளம்பெண்ணின் கச்சேரியை கேட்க நேரிட்டது. மனுஷன் ஆடிப்போய்விட்டார்.
குரலா இது என்று வியந்து வியந்து, தான் இசையமைத்த Guddi படத்தில் பாட உடனே வாய்ப்பு கொடுத்தார். அதுவும் எப்படி? படத்தில் இடம் பெற்ற அத்தனை பாடல்களையும் பாடும் அளவுக்கு.
முதல் படத்திலேயே இப்படி சாதனை படைத்த அந்த குரலுக்கு சொந்தக்காரர் வேறு யாருமல்ல, நம்ம இசைமேதை பின்னணி பாடகி வாணி ஜெயராம் அவர்கள்தான்.
லதா மங்கேஷ்கர், ஆஷா போன்ஸ்லே என்ற சகோதரிகள் குரல் வளத்தால் சாம்ராஜ்யம் நடத்திவந்த இந்திய திரையுலகை வாணி ஜெயராமின் குரலும் இணையாக தாலாட்ட ஆரம்பித்தது.
இந்தி திரையுலகில் புகழ்பெற்ற முன்னணி இசையமைப்பாளர்கள் அத்தனை பேரின் இசையிலும் வாணி ஜெயராம் குரல் ஒலிக்கத்தவறவேயில்லை.
சாஸ்திரிய சங்கீத கச்சேரிகளுக்காக அடிக்கடி சென்னை வந்துபோக வேண்டியிருந்ததால் 1974ல் சென்னைக்கே இடம் பெயர்ந்தார் வாணி.
இங்கே சுசீலாவும் எஸ்.ஜானகியும் கொடிகட்டிப்பறந்த நேரம். எம்.எஸ்.விஸ்வநாதன் புண்ணியத்தில் தமிழிலும் வாணி வெற்றிக்கொடி ஏற்ற ஆரம்பித்தார்.
மற்றவர்கள் எளிதில் பின்பற்றி பாடமுடியாத அளவுக்கு குரல் வளமும், ஏற்ற இறக்கங்களை காட்டுவதில் அசாத்திய திறமையும் வாய்ப்பது என்பது அபூர்வ ரகம்.
இன்றைக்கும் மேடை கச்சேரிகளில் பாடுபவர்கள், இப்படிப்பட்ட அபூர்வராக குரலை எட்டிப்பிடிக்க கடுமையாக போராடவேண்டி வரும். முகபாவனைகளை எப்படியெல்லாமோ கஷ்டப்பட்டு மாற்றி மாற்றி மாற்றினால்தான் வாணியின் பாடலை கொஞ்சமாவது தேற்ற முடியும்.
ஹிந்தி, உருது, மராத்தி, குஜராத்தி, ஒரியா, போஜ்புரி, பெங்காலி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் தமிழ் என நாட்டின் அத்தனை மொழிகளிலும் இசையருவியை பாயவிட்ட அற்புதமான குரலரசி.
- ஏழுமலை வெங்கடேசன்
- மூன்று வயது முதல் பத்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கு நீங்கள் குடிக்கும் அளவில் இருந்து ஐந்து பங்கு நீர் சேர்த்து கொடுங்க.
- மூன்று வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு ஓமம் தண்ணீர் மட்டும் கொடுத்து வாருங்கள்.
உடலில் தேங்கும் கழிவுகளே நோய்களின் ஆரம்பம் ஆகும். உடற்கழிவுகள் மலம், மூத்திரம், வியர்வை, கோழை, சளி, மூலமாக தான் வெளியேறும். வாந்தி, பேதி, மூலமும் உடலில் உள்ள கழிவுகள் வெளியேறுகிறது. அதனை நிறுத்துவதன் மூலம் உடலில் அடுத்த கட்ட நோய்கள் பிறக்கின்றன. உடற்கழிவுகளை வெளியேற்ற எளிமையான குடிநீரை காண்போம்...
கர்ப்பிணி பெண்கள் முயற்சி செய்ய வேண்டாம்.
தேவையான பொருட்கள்...
திப்பிலி 6
மிளகு 12
சீரகம் மூன்று சிட்டிகை
ஓமம் இரண்டு சிட்டிகை
சோம்பு 1 உப்பு ஸ்பூன் அளவு
இரண்டு சிறிய துண்டு இஞ்சி (தோல் சீவியது)
ஒரு கை புதினா
இவை அனைத்தையும் அரைத்து இதனுடன் அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி ஒரு நாள் முழுவதும் தேவைபடும் நீரில் கலந்து வைத்துக் கொண்டு பத்து வயது முதல் குடும்பத்தில் உள்ள அனைவரும் குடிக்கவும்.
மூன்று வயது முதல் பத்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கு நீங்கள் குடிக்கும் அளவில் இருந்து ஐந்து பங்கு நீர் சேர்த்து கொடுங்க.
மூன்று வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு ஓமம் தண்ணீர் மட்டும் கொடுத்து வாருங்கள். வாரத்திற்கு இரண்டு / மூன்று முறை பயன்படுத்தினால் போதுமானது.
பலன்கள் :- உடலில் உள்ள கழிவுகள் நீங்குவதுடன் சோம்பல், அலுப்பு, மலச்சிக்கல், பசியின்மை, அஜீரணம், சுவாசக் கோளாறுகள், இரத்த ஓட்ட சீர்கேடுகள், தலைவலி குணமாகும். இதில் கூறப்பட்டுள்ள எல்லா பொருட்களுமே நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்...
-முனைவர் பா. ஜெயப்ரசாத்
- கன்னி ராசிக்காரர்கள் ஏலக்காயை தண்ணீரில் கலந்து குளிக்கவும்.
- துலாம் ராசிக்காரர்கள் ரோஜா இதழ்களை தண்ணீரில் சேர்த்துக் குளிக்கவும்.
ஒவ்வொரு பெளர்ணமி அன்றும் அவரவர் ராசிப்படி குளியல் செய்து கிரக தோஷத்தை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
மேஷம்- சூரிய உதயத்திற்கு முன் செம்பருத்திப் பூக்களை தண்ணீரில் சேர்த்துக் குளிக்கவும்.
ரிஷபம் - எள்ளை தண்ணீரில் போட்டு குளிக்கவும்.
மிதுனம் -தண்ணீரில் சிறிது கரும்புச்சாறு கலந்து குளிப்பது நல்லது.
கடகம் - பஞ்சகவ்யம் தண்ணீரில் கலந்து குளிக்க வேண்டும்.
சிம்மம் - கங்கை நீர் மற்றும் குங்குமம் கலந்து குளிக்கவும்.
கன்னி - ஏலக்காய் தண்ணீர் கலந்து குளிக்கவும்.
துலாம் - ரோஜா இதழ்களை தண்ணீரில் சேர்த்துக் குளிக்கவும்.
விருச்சிகம்- சிவப்பு சந்தனத்தை தண்ணீரில் கலந்து சூரிய உதயத்திற்கு முன் குளிக்கவும்.
தனுசு - தண்ணீரில் மஞ்சள் மற்றும் கடுகு கலந்து குளிக்கவும்.
மகரம் - கருப்பு எள்ளுடன் குளிக்கவும்.
கும்பம் - கருப்பு எள்ளுடன் தண்ணீரில் குளிக்கவும்
மீனம் - தண்ணீரில் மஞ்சள் கலந்து குளிக்கவும்.
-சிவசங்கர்
- செப்புப் பாத்திரங்களில் தண்ணீர் பருகுவதனால், மூட்டுவலியை குறைக்க, குணமடைய செய்ய முடியும்.
- செப்புப் பாத்திரங்களில் நீரைப் பருகுவதனால் செரிமானப் பிரச்சனைகளில் இருந்து நல்ல தீர்வு காண முடியும்.
நாம் இன்று தண்ணீர் பருக பயன்படுத்தி வரும் பிளாஸ்டிக் உபகரணங்கள் 100% உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பவை. முக்கியமாக ஆண்களுக்கு ஆண்மையை பாதிக்கும் தன்மை உடையவை.
ஆனால், நமது முன்னோர்கள் பயன்படுத்திய செப்புப் பாத்திரங்கள் இதற்கு நேர் எதிராக 100% ஆரோக்கிய நன்மைகளை தருபவையாக இருக்கின்றன. அதைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்...
1) பாக்டீரியாக்களைக் கொல்லும்:
செப்புப் பாத்திரங்களில் தண்ணீர் ஊற்றி வைத்து பருகுவதால் நீரில் இருக்கும் கிருமிகள் கொல்லப்படுகின்றன. முக்கியமாக வயிறு உபாதைகள் மற்றும் வயிறு சார்ந்த பிரச்சனைகளை ஏற்படுத்தும் கிருமிகளை முற்றிலுமாக அழிக்கப் பயன்படுகிறது செப்புப் பாத்திரங்கள்.
2) தைராய்டு:
தைராய்டு சுரப்பிகளை கட்டுப்படுத்த, சீரான முறையில் செயல் இயக்கம் நடைபெற, வெகுவாக உதவுகிறது செப்புப் பாத்திரங்கள். செப்பு பாத்திரங்களில் தண்ணீர் குடிப்பதனால் உங்கள் உடல்நலம் பாதுகாக்கப்படுகிறது.
3) மூட்டு வலி:
செப்புப் பாத்திரங்களில் தண்ணீர் பருகுவதனால், மூட்டுவலியை குறைக்க, குணமடைய செய்ய முடியும்.
4) மூளையின் செயல்திறன்:
மூளையில் நியூரான்களுக்கு மத்தியில் இருக்கும் இடைவெளியை மையிலின் என்னும் உறைமூடி பாதுகாக்கிறது. இந்த மையிலின் உறைகளைப் பாதுகாக்க செப்பு உதவுகிறது. எனவே, செப்புப் பாத்திரங்களில் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
5) செரிமானம்:
செப்புப் பாத்திரங்களில் நீரைப் பருகுவதனால் செரிமானப் பிரச்சனைகளில் இருந்து நல்ல தீர்வு காண இயலும்.
6) இரத்த சோகை:
சிகப்பு இரத்த அணுக்கள் உடலில் பெருமளவில் உற்பத்தி செய்ய செப்பு நீர் பயன்படுகிறது. எனவே, செப்புப் பாத்திரங்களில் நீர் பருகுவதனால் இரத்த சோகை கோளாறுக்கு சீரான தீர்வு காண முடியும்.
7) புற்றுநோய்
புற்றுநோயை உண்டாக்கும் கிருமிகளை உடலில் அண்டவிடாமல் தவிர்க்க செப்புப் பாத்திரங்களில் பயன்படுத்தப்படும் நீர் உதவுகிறது. மற்றும் இது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் குறைக்கிறது.
8) இளமை காக்கும்:
செப்பில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் உங்கள் சருமத்தை பாதுகாக்கிறது. இதனால், உங்கள் சருமத்தின் முதிர்ச்சி அடையும் தன்மையைக் குறைத்து உங்களை என்றும் இளமையாக வைத்துக்கொள்ள இது பயனளிக்கிறது.
- வயிறு சார்ந்த உபாதைகள் என்றதுமே நம் நாட்டினர் தேடுவது அஞ்சறைப்பெட்டியில் உள்ள சீரகத்தை தான்.
- உலக அளவில் கிட்டத்தட்ட 90 சதவீதம் சீரகம் இந்தியாவில் தான் உற்பத்தி ஆகிறது.
மஞ்சளுக்கு அடுத்தாற்போல் அடுப்பங்கரையில் அதிகம் பயன்படுத்தப்படும் நறுமணமூட்டி 'சீரகம்' தான். பண்டைய காலம் முதல் சீரகம் உணவில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வரும் நறுமணப்பொருள். உலகிலேயே மத்திய தரைக்கடல் உணவு முறையிலும், தெற்கு ஆசியாவின் உணவு முறையிலும் தான் சீரகம் மருந்துப்பொருளாக உணவில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. நமது பாரம்பரியம் 'உணவே மருந்து' கோட்பாட்டை கொண்டது என்பதற்கு இதுவே உதாரணம்.
5000 ஆண்டுகளுக்கு முன்னரே கிரேக்கம் மற்றும் ரோமானிய நாடுகளில் பயன்படுத்தப்பட்ட சிறப்புடையது சீரகம். கிரேக்க நாட்டில் பண்டம் மாற்று வணிக முறையிலும், வரிகளை செலுத்துவதிலும், சீரகத்திற்கு தனி மதிப்பு கொடுத்து பிற பொருட்களுக்கு மாற்றாக அதை பெற்றுக்கொண்டதை வரலாறு தெரிவிக்கிறது. பண்டைய எகிப்திய நாகரிகத்தில், சீரகம் ஒரு மசாலாப் பொருளாகவும், மம்மிக்களை பதப்படுத்தி பாதுகாக்கவும் பயன்படுத்தப்பட்டது. ஆனால் நோய் தீர்க்கும் மருந்தாக, உடலை காக்கும் அமிர்தமாக, அதிகம் பயன்படுத்துவது நம் நாட்டு மருத்துவத்தில் தான்.
நம் முன்னோர்கள் அடுத்த தலைமுறையினர் பயன்படுத்தும் வண்ணமும், ஆரோக்கியத்திற்கு வித்திடும் வண்ணமும், சமூக நல அக்கறையில் பாரம்பரியமாக பயன்படுத்தி வந்த மூலிகைகளின் பெயர்களை, மருத்துவக்குணங்களின் அடிப்படையில் சூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் அஞ்சறைப்பெட்டி கடைச்சரக்கான சீரகத்தின் பெயர்க்காரணத்தை ஆராய்ந்து பார்த்தால் சீர் + அகம் என்று பொருள்படும்படி உள்ளது. அதாவது 'அகத்தை சீர் செய்யும்' தன்மையுடையது. உடலுள் பாதிக்கப்பட்டு இருக்கும் உள்ளுறுப்புக்களை சீராக்கி, மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டுவரும் என்பது இதன் பொருள். மேலும் சித்த மருத்துவம் 'பித்த நாசினி', 'போசனக் குடாரி' என்றெல்லாம் அடைமொழியிட்டு சீரகத்தை அழைப்பது சிறப்பு.
வயிறு சார்ந்த உபாதைகள் என்றதுமே நம் நாட்டினர் தேடுவது அஞ்சறைப்பெட்டியில் உள்ள சீரகத்தை தான். தண்ணீருக்கு பதிலாக சீரகத்தண்ணீர் குடிக்கும் பழக்கம் இன்றும் நம்மில் பலருக்கு உண்டு. 'சீரகம் இல்லாத உணவு சிறக்காது' என்பது பழமொழி. அதாவது சீரகம் இட்டு சமைக்காத உணவு ஆரோக்கியத்திற்கு சிறப்பாக இருக்காது என்பதை நம் முன்னோர்கள் ஆணித்தரமாக வலியுறுத்தி சென்றுள்ளனர். நாம் உணவில் சாதாரணமாக பயன்படுத்தும் சீரகத்தை அறிவியல் அடிப்படையிலும் உற்றுப்பார்க்கையில் ஆச்சர்யப்படுத்தும் வண்ணம் பல்வேறு மருத்துவ குணங்களை உள்ளடக்கி உள்ளது சிறப்பு.
சித்த மருத்துவம் நோய்களுக்கு காரணமாக கூறுவது முக்குற்றத்தைத் தான். அவையாவன வாதம், பித்தம், கபம். இதில் வாதத்தை நம் உடலினை ஆட்சி செய்யும் அரசனாகவும், பித்தத்தை மந்திரியாகவும், கபத்தை போர்ப்படைத் தளபதியாகவும் ஒப்பிட்டு கூறுகிறது சித்த மருத்துவம். இவை மூன்றில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளே நோய்களுக்கு காரணம். இந்த மூன்றில் பித்தமாகிய மந்திரியை சமப்படுத்தி, பித்தம் சார்ந்த நோய்களை அணுகவிடாமல் மெய்க்காப்பாளனாக திகழ வல்லது சீரகம். இதனை "பித்தம் எனும் மந்திரியை பின்னப்படுத்தியவன்" என்று சித்த மருத்துவ இலக்கியமான 'தேரன் வெண்பா' சீரகத்தின் பெருமையை பறைசாற்றுகிறது.
பொன்னிறமான நிறத்தில் உள்ள சீரகம் லேசான காரமும், இனிப்பும் கலந்த சுவை உடையது. இதனை லேசாக வறுத்து பயன்படுத்த 'பித்த நோய்கள்' அனைத்தும் வராமல் காக்கும். பாதிக்கப்பட்ட பித்தம் அது இருக்கும் இடத்தைப் பொறுத்தும், தாக்கும் உறுப்புகளைப் பொறுத்தும், வெவ்வேறு குறிகுணங்களை உண்டாக்குவதாக சித்த மருத்துவம் கூறுகின்றது.
அதாவது அதிகரித்த பித்தம் காமாலை உண்டாக்கும் என்பதைக்கடந்து, குடலில் புண்ணையும், தோலில் அழற்சியையும், கண்ணில் எரிச்சலையும், மூட்டுகளில் வீக்கத்தையும் இன்னும் பல நோய்களையும் உண்டாக்கும் என்கிறது சித்த மருத்துவம். ஆக, பித்தம் அதிகரிப்பதால் உண்டாகும் அத்தனை வியாதிகளுக்கும் சீரகம் நன்மருந்தாகும்.
சீரகமானது சித்த மருத்துவம் கூறுவதுபோல் பித்தத்தை சீராக்கி குளிர்ச்சியைத் தரவல்லது. ஆதலால் தான் பண்டைய காலம் முதல் அறிவியல் வானளவு உயர்ந்த இந்த நவீன காலத்திலும் பித்தம், பித்த வாந்தி, தலைசுற்றல் போன்ற பித்தம் தொடர்பான குறிகுணங்கள் என்றதுமே முதலில் வீட்டு வைத்தியமாய் பழகி வருவது 'சீரகத் தண்ணீர்' தான். சித்த மருத்துவம் நம் மரபோடும், வாழ்வியல் பண்பாட்டோடும் ஒன்றிணைந்து நம்மை காத்து வருகிறது என்பதற்கு இது உதாரணம்.
துரித உணவு வகைகளை அதிகம் நாடுபவர்கள் அவதிப்படும் முக்கியமான உடல் உபாதை 'அல்சர்' எனப்படும் 'வயிற்றுப்புண்' தான். நாட்பட்ட அசீரணக் கோளாறு வயிற்றுப்புண் நோய்க்கு வழிவகுக்கும். இதற்கு வருடக்கணக்கில் மருந்துகளை எடுத்துக்கொண்டும் மீளாதவர்கள் சீரகத்தை பொடித்து வெண்ணெயில் அல்லது நெய்யில் கலந்து உணவுக்கு முன் எடுத்துக்கொள்ள வயிற்றுப்புண் ஆறும். சீரண மண்டலம் சீராகும். பித்தம் குறைந்து, குடல் சுத்தமடையும். மொத்தத்தில் சீரண மண்டலம் சார்ந்த நோய்களுக்கு வைத்திய நண்பனாக உள்ளது சீரகம். உணவில் சேர்க்கப்படும் சீரகம், உணவு கெட்டு நஞ்சாவதை தடுப்பதாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
வாந்தியை கட்டுப்படுத்த சீரக தண்ணீரில் நாட்டுச்சர்க்கரை கலந்து கொடுக்கும் பழக்கம் இன்றும் உள்ளது. வயிற்றுப்போக்கிற்கு சீரகத்தை கருக வறுத்து கசாயம் இட்டு கொடுக்கும் பழக்கம் இன்றும் பல கிராமங்களில் வழக்கு முறையாக உள்ளது. அதை சமீபத்திய நவீன ஆய்வுகளும் உறுதி செய்வது என்பது பாட்டி வைத்தியத்திற்கு கிரீடம் வைப்பது போன்றது.
வயிற்றுப்புண் ஆற்ற முட்டை வெண்கருவுடன், சீரகம் அரை தேக்கரண்டி, சிறிது இந்துப்பு சேர்த்து காலை வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ள புண் ஆறும். சித்த மருத்துவத்தில் வயிற்று புண் ஆற்றும், அசீரணம் போக்கும் பெரும்பாலான மருந்துகளில் சீரகம் சேருவது குறிப்பிடத்தக்கது. சீரக சூரணம், ஏலாதி சூரணம், பஞ்ச தீபாக்கினி சூரணம் ஆகியன அவற்றில் சில. இவற்றை நாடுவதன் மூலமும் நலம் அடையலாம். மேலும் பித்த நாசினியான சீரகத்தையும், பித்தத்தை குறைக்கும் வில்வத்தையும் கொண்டு செய்யப்படும் சித்த மருந்தான 'சீரக வில்வாதி லேகியம்' கூட பித்தத்தை சீர்படுத்தும் தன்மை உடையது.
உடல் எடையைக் குறைக்க கிரீன் டீ-யைத் தேடும் ஆடம்பரம் நவீன வாழ்வியலில் பெருகிவிட்டது. நம் நாட்டு பாரம்பரிய மருத்துவ முறைகளை மறந்ததன் விளைவு தான் இத்தகைய கிரீன் டீ போன்றவை நம் வாழ்வியலில் தலைதூக்கக் காரணம். அதற்கு மாற்றாக சீரகத்தை தண்ணீருடன் அவ்வப்போது கொதிக்க வைத்து குடித்து வர உடலில் கொழுப்பின் அளவு குறைந்து உடல் எடை குறையும். ஆதலால் சீரக தண்ணீரை 'ஏழைகளின் கிரீன் டீ' என்று சொன்னாலும் மிகையாகாது.
சீரகத்தின் மருத்துவ செயல்பாட்டிற்கு மிக முக்கிய வேதிப்பொருள் 'குமினால்டிஹைடு' என்று நவீன அறிவியல் கூறுகின்றது. மேலும் சீரகத்தின் விதைகள் ஊட்டச்சத்து நிறைந்தவையாக உள்ளன. புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. வைட்டமின்கள் பி மற்றும் ஈ மற்றும் பல அத்தியாவசிய தாதுக்கள், குறிப்பாக இரும்புச்சத்து, சீரக விதைகளில் கணிசமாக உள்ளன. மேலும் வைட்டமின் எ மற்றும் சி உள்ளதால் சீரகம் எடுத்துக்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாகவும் உள்ளது.
சீரகத்தில் உள்ள இயற்கை நிறமிகளும் பல்வேறு தொற்றா நோய்களை வரவிடாமல் தடுக்கும் தன்மையுடையதாக உள்ளது. பொன்னிறத்தை உண்டாக்கும் இயற்கை நிறமிகள் புற்றுநோய் வருவதை தடுக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் தன்மையுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. வயிறு மற்றும் குடல் சார்ந்த புற்றுநோய்களை வராமல் தடுப்பதாக எலிகளில் நிகழ்த்திய நவீன ஆய்வுகள் கூறுகின்றன.
அதிக ரத்த அழுத்த நிலையில் சீரகம் சேர்ந்த மருந்துகளை துணை மருந்தாய் எடுத்துக்கொள்ள நற்பலன் தரும். அல்லது சீரகத்தை எலுமிச்சை சாற்றில் ஊற வைத்து உலர்த்திப்பொடித்து பயன்படுத்தினாலும் நல்ல பலனைத்தரும். சீரகத்தை தொடர்ந்து எடுத்துக்கொள்ள உடலில் எச்.டி.எல் எனும் கெட்ட கொழுப்பு குறைந்து எல்.டி.எல் எனும் நன்மை பயக்கும் கொழுப்பு அதிகமாவதை ஆய்வு முடிவுகள் உறுதி செய்வதால், சீரகம் இருதய நோயாளிகளுக்கும் ஆயுளை விருத்தி செய்யும்.
நீரிழிவு வியாதியிலும் சீரகம் நல்ல பலனை அளிக்கக்கூடியது. சீரகத்துடன் கொத்தமல்லி விதையான தனியாவை (ஒவ்வொன்றும் 500 மி.கி அளவு) சேர்த்து தயாரிக்கும் தேநீர் இன்சுலின் செயல்பாட்டை மூன்று மடங்காக அதிகரிக்கும்படியாக உள்ளதை வெளிநாட்டு நூல்கள் கூறுகின்றன. இது சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவும் என்பது திண்ணம்.
எண்ணெய் குளியல் எனும் நமது பாரம்பரிய வழக்கு முறை நமது ஆரோக்கியத்திற்கு அடிப்படை. அத்தகைய எண்ணெய் குளியலுக்கு நல்லெண்ணையை சூடேற்றி அதிலும் சீரகம் போட்டு காய்ச்சி பயன்படுத்துவது நமது மரபு. இதனை 'அசை தைலம்' என்று சித்த மருத்துவம் கூறுகின்றது. இதனைக்கொண்டு வாரம் இருமுறை எண்ணெய் குளியல் எடுத்துக்கொள்ள பித்தத்தைக் குறைத்து நோய்கள் அணுகாது காக்கும்.
பித்த நோய்களை தவிர்த்து வயிற்றுவலி, வயிற்றுப்பொருமல், சிறுநீர் எரிச்சல், கல்லடைப்பு, இருமல், வாய்ப்புண், வாயு தொல்லை, மலச்சிக்கல் போன்ற பல உடல் உபாதைகளுக்கும் சீரகம் மருந்தாக பயன்தரும் என்று சித்த மருத்துவம் கூறுகின்றது. உண்மையில் பாட்டி வைத்தியம் வெறும் வீட்டு வைத்தியம் என்றில்லாமல், அறிவியல் தன்மையோடு இருப்பது ஆதிக்க வர்க்கத்தால் மறைக்கப்பட்டுள்ளது. அத்தகைய அறிவியல் தன்மையை அறிந்துகொண்டு பயன்படுத்துவது நம் பாரம்பரிய சித்த மருத்துவத்திற்கு பெருமை சேர்க்கும். ஆரோக்கியத்திற்கு கூடுதல் வலிமை சேர்க்கும்.
உலக அளவில் கிட்டத்தட்ட 90 சதவீதம் சீரகம் இந்தியாவில் தான் உற்பத்தி ஆகிறது. ஆனால் ஆரோக்கிய நாடுகளின் வரிசைப்பட்டியலில் இந்தியா பின்தங்கி இருக்கிறது. காரணம் ஆரோக்கியத்தை அள்ளித்தரும் சீரகத்தை உலக நாடுகளுக்கு வாரி வழங்கிவிட்டு நாம் ஆரோக்கியத்தை தேடி மருத்துவமனை வாசலில் நிற்கும் அவலநிலை உள்ளது. எனவே மருத்துவகுணம் வாய்ந்த சீரகத்தை அன்றாட உணவில் அதிகம் பயன்படுத்த துவங்கினால், டென்மார்க், நார்வே, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளை பின்னுக்கு தள்ளி ஆரோக்கிய நாடுகள் பட்டியலில் நாம் முன்னிலை பிடித்து உலகிற்கே முன்னுதாரணமாய் திகழ முடியும்.
தொடர்புக்கு:
drthillai.mdsiddha@gmail.com
- எட்டாயிரம் டன் தங்கம் அமெரிக்க அரசின் வசம் பாதுகாப்பில் உள்ளது.
- உலகில் உள்ள மொத்த தங்கத்தில் 25% அமெரிக்க அரசிடம் தான் உள்ளது.
அமெரிக்க அரசு மூன்று பொருள்களை பதுக்கி வைத்துள்ளது. ஒன்று தங்கம், எட்டாயிரம் டன் தங்கம் அமெரிக்க அரசின் வசம் பாதுகாப்பில் உள்ளது. 26,000 படைவீரர்கள் அதற்கு பாதுகாப்பாய் நிற்கிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் ஆடிட் செய்வதற்காக மட்டுமே சிறிதளது தங்கம் எடுக்கப்படும். புதியதாக சேர்ப்பதும் இல்லை, விற்பதும் இல்லை.
26,000 பேருக்கு சம்பளம் கொடுத்து, சோறு போட்டு தங்கத்தை 75 ஆண்டுகளாக இப்படி புதையல் காத்த பூதமாக ஏன் வைத்திருக்க வேண்டும்? ஏன் என்றால் இதை விற்க எல்லாம் வேண்டாம். விற்போம் என சொன்னாலே போதும். உலக தங்க சந்தை சரிந்துவிடும். காரணம் உலகில் உள்ள மொத்த தங்கத்தில் 25% அமெரிக்க அரசிடம் தான் உள்ளது.
அடுத்தபடியாக 70 கோடி பீப்பாய் பெட்ரோலையும் பதுக்கி வைத்துள்ளது அமெரிக்கா, வளைகுடா போர் 1970களில் நடந்த சமயம் பெட்ரோல் தட்டுப்பாடு வந்தால் என்ன செய்வது என சொல்லி நாடெங்கும் ரகசியமாக பெட்ரோலை தேக்க தொட்டிகளை அமைத்து 70 கோடி பீப்பாய் பெட்ரோலை பாதுகாத்து வைத்துள்ளனர்.
மூன்றாவதாக இவர்கள் பதுக்கி வைத்துள்ளது சீஸ்.... 150 கோடி டன் சீஸை நாடெங்கும் குளிர் பாதுகாப்பறைகள் வைத்து பதுக்கி வைத்துள்ளனர். ஏதாவது உணவு தட்டுப்பாடு வந்தால் என்ன பண்ணுவது? சீஸ் இல்லாமல் எப்படி இருக்க முடியும்? சீஸ் கெட்டுபோகும் பொருள் என்பதால் கெடுவதற்குமுன் எடுத்து இலவசமாக ஏழைகளுக்கு உணவு வழங்கும் புட் பேங்களுக்கு வினியோகம் செய்வார்கள். அதன்பின் மீண்டும் சீஸை நிரப்பி குடோன்களை புல் ஸ்டாக்குக்கு கொண்டு வந்துவிடுவார்கள்.
கனடா அரசும் விட்டேனா பார் என மேபிள் சிரப்பை நிரப்பி வைத்துள்ளது. மேபிள் சிரப் என்பது தேன் மாதிரியான ஒரு இனிப்பு. உற்பத்தி கூடுகையில் அதை இங்கே கொண்டுவந்து நிரப்பி விலை சரியாமல் பார்த்துக்கொள்வார்கள். விலை கூடுகையில் இங்கிருந்து சப்ளை செய்து விலை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்வார்கள்.
- நியாண்டர் செல்வன்
- எம்.ஜி.ஆர். தொண்டையில் சிக்கிய தோட்டாவின் சிதறல் ஒன்று மருத்துவர்களால் நீக்கப்படவில்லை.
- எம்.ஜி.ஆருக்கு கடுமையான தும்மல் ஏற்பட்டது. பலமாகத் தும்மினார்.
எம்.ஜி.ஆர். துப்பாக்கியால் சுடப்பட்டு ஆபரேஷன் நடந்து காப்பாற்றப்பட்டபோதும்... தொண்டையில் சிக்கிய தோட்டாவின் சிதறல் ஒன்று மருத்துவர்களால் நீக்கப்படவில்லை. சிக்கலான இடத்தில் தங்கிவிட்டது. அப்படி அதை நீக்க முயற்சித்தால் அது அவரின் உயிருக்கே ஆபத்தாகும் என்பதால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.
எம்.ஜி.ஆர் உடல் நலம் தேறியதும், ஒருநாள் இரவோடு இரவாக மருதமலை கோயிலுக்கு அழைத்துச்சென்று... மூலஸ்தானத்திலேயே எம்.ஜி.ஆரை நிறுத்தினார் சின்னப்பா தேவர்.
முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டபோது... "முருகா... உன் கோயிலுக்கு மின்சார விளக்கேத்தி வைத்தவர்... இன்று இருளாகிக் கிடக்கிறார். அவர் வாழ்க்கைல நீ ஒளியேற்றியே ஆகணும். இதை நீ செய்யலேன்னா, உன் கோயிலுக்கு குண்டு வச்சிடுவேன். மறுபடியும் நீ இருட்டில் இருக்கவேண்டி இருக்கும்" எனக்கோபம் கொண்ட சித்தரைப்போல முருகனுடன் சண்டை போட்டு வேண்டிக்கொண்டிருந்தார்.
(அன்பு அதிகமானால் கண்ணீர் வடித்தபடியும், கோபம் அதிகமானால் ஏக வசனத்தில் கடுமையாக சண்டை போடுவதும், கடவுள் முருகனுக்கும் பக்தன் தேவருக்கும் இடையே உள்ள பாசப்பிணைப்பான ஒரு வழக்கம்).
பிறகு எம்.ஜி.ஆரை அழைத்துக்கொண்டு சென்னை வந்துவிட்டார்.
சரியாக ஒரு வாரம் தான்... எம்.ஜி.ஆருக்கு கடுமையான தும்மல் ஏற்பட்டது. பலமாகத் தும்மினார். அந்த தோட்டா சிதறல் மூக்கின் வழியே வெளியே வந்துவிட்டது.
உண்மையில் இது ஒரு அதிசயமான நிகழ்ச்சி தான். முருகனிடம் அப்படி சண்டை போட்டு, தேவர் வேண்டிக்கொண்டதால்தான் இது நிகழ்ந்தது என்றும் கூறுவர்.
- பரதன் வெங்கட்
- ஓடும் நீரில் சிவப்பு பூக்களை செவ்வாய்கிழமைகளில் விடுவது சிறப்பு.
- செவ்வாய் ஓரையில் சாப்பிடாமலும் நீர் அருந்தாமலும் இருப்பது நல்ல பலன் தரும்.
சூரியன்:
தந்தை மற்றும் வயதான ஆண்களை மதிக்கவும். அரசாங்கத்துக்கு கட்டுப்பட்டு நடக்கவும். முதலாளி மற்றும் மேலதிகாரியிடம் வாக்கு வாதம் கூடாது. மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை உப்பு கலவாத உணவை உண்பது நல்ல பலன் தரும். சூரிய ஓரையில் சாப்பிடாமலும் தண்ணீர் அருந்தாமல் இருப்பதும் நல்லது.
சந்திரன்:
தாய் மற்றும் வயதான பெண்களுக்கு மரியாதை பணிவிடைகள் செய்யவேண்டும். தாயிடம் வெள்ளி நாணயம் கொடுத்து ஆசீர்வாதம் பெற்று வாங்கி உடன் வைத்துக்கொள்ள அதிர்ஷ்டம் உண்டாகும். ஓம் நமசிவாய என்னும் மந்திரத்தை தினமும் சொல்லிவரவும். திங்கட்கிழமைகளில் ஓடும் நீரில் வெள்ளைப்பூக்களை விடுவது நல்ல பலன் தரும். வெள்ளி பாத்திரங்களில் நீர் அருந்துவது சிறப்பு. சூரிய அஸ்தமனம் ஆனபிறகு பாலை குடிக்க கூடாது. பாதுகாப்பு பணியில் உள்ள ஏழைகளுக்கு உதவிசெய்தல் நல்லது
செவ்வாய்:
இளையவர்களை மதிக்கவும். இனிப்புக்களை தானமாக வழங்குவதும் தானும் சாப்பிடுவதும் நல்லது. ரத்த தானம் செய்வது சிறப்பு. சிவப்பு உணவுகளை சாப்பிடுவது நன்று. ஓடும் நீரில் சிவப்பு பூக்களை செவ்வாய்கிழமைகளில் விடுவது சிறப்பு. செவ்வாய் ஓரையில் சாப்பிடாமலும் நீர் அருந்தாமலும் இருப்பது நல்ல பலன் தரும்.
புதன்:
12 வயதுக்கு குறைவான பெண் குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் படிப்புக்கு தேவையான பொருட்களை தானம் செய்வது சிறப்பு.
குரு:
சந்தனம் குங்குமம் நெற்றியில் வைக்கவும். வியாழன் அன்று 12 மஞ்சள்நிறப்பூக்களை ஓடும் நீரில் விடவும். குரு ஓரையில் சாப்பிடாமலும் நீர் அருந்தாமல் இருப்பதும் நல்ல பரிகாரம்.
சுக்கிரன்:
மனைவி மற்றும் இளம்பெண்களை மதிக்கவும். மாடுகளுக்கு உணவு வழங்கவும். கிழிந்த ஆடைகளை பயன்படுத்த கூடாது. வாசனை திரவியங்களை பயன்படுத்தவும்.
சனி:
பொய் சொல்லக்கூடாது. ஒழுக்கம் மிக முக்கியம். ஒரு ஆண்டு காலத்தில் குறைந்த பட்சம் பத்து பார்வை அற்றவர்களுக்கு உணவளிப்பது நல்லது. கற்பூரம் கலந்த தேங்காய் எண்ணெய் தலைக்கு தேய்க்கவும். சனிக்கிழமை ஓடும் நீரில் கைப்பிடி கருப்பு உளுந்தை விடவும். பிச்சைக்காரர்களுக்கு உணவளிக்கவும். சனி ஓரையில் சாப்பிடாமல் நீர் அருந்தாமல் இருப்பது நல்லது.
-ஜோதிடர் ராஜலெட்சுமி
- கோழிக்குள் முட்டை வைத்து முட்டைக்குள் கோழி வைத்து வாழைக்கும் கன்றுவைத்தான் ஒருவன்.
- தென்னை இளநீருக்குள்ளே தேங்கியுள்ள ஓட்டுக்குள்ளே தேங்காயைப் போலிருப்பான் ஒருவன்.
கவிஞர் கண்ணதாசன் நாத்தீகத்திலிருந்து மீண்டு, ஆன்மீகத்திற்கு மாறி, அர்த்தமுள்ள இந்துமதம் படைத்து பெறும் புகழ் பெற்றிருந்த நேரம்.
இதை பொறுக்க முடியாத சில நாத்தீக அன்பர்கள் ஒரு அதிகாலையில் கவிஞரை சந்தித்து கடவுள் "இருக்கிறானா? இருந்தால் எங்களுக்கு காட்டமுடியுமா?" என கிண்டலாக கேட்டனர்.
அதற்கு கவிஞரோ அடுத்த நொடியே எந்தக் குறிப்புமின்றி காட்டாற்று வெள்ளமென கரைபுரண்டோடிய கவிதை வடிவான பதிலடி கண்டு வந்தவர்கள் வாயடைத்து திரும்பினர்.
இறைவன் குறித்த கவிஞரின் அற்புதமான தத்துவம் இதோ...
பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டுகொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன் - அவனைப்
புரிந்துகொண்டால் அவன்தான் இறைவன்
ஒன்பது ஓட்டைக்குள்ளே
ஒருதுளிக் காற்றை வைத்து
சந்தையில் விற்றுவிட்டான் ஒருவன் -அவன்
தடம் தெரிந்தால் அவன்தான் இறைவன்
முற்றும் கசந்ததென்று
பற்றறுத்து வந்தவர்க்கு சுற்றமென
நின்றிருப்பான் ஒருவன் - அவனைத்
தொடர்ந்து சென்றால் அவன்தான் இறைவன்
தென்னை இளநீருக்குள்ளே
தேங்கியுள்ள ஓட்டுக்குள்ளே
தேங்காயைப் போலிருப்பான் ஒருவன் - அவனைத்தெரிந்து கொண்டால்
அவன்தான் இறைவன்
வெள்ளருவிக் குள்ளிருந்து
மேலிருந்து கீழ்விழுந்து
உள்ளுயிரைச் சுத்தம் செய்வான்
ஒருவன் - அவனை
உணர்ந்து கொண்டால்
அவன்தான் இறைவன்
வானவெளிப் பட்டணத்தில்
வட்டமதிச் சக்கரத்தில்
ஞானரதம் ஓட்டிவரும் ஒருவன் - அவனை
நாடிவிட்டால் அவன்தான் இறைவன்
அஞ்சுமலர்க் காட்டுக்குள்ளே
ஆசைமலர் பூத்திருந்தால்
நெஞ்சமலர் நீக்கிவிடும் ஒருவன் - அவனை
நினைத்துக்கொண்டால் அவன்தான் இறைவன்
கற்றவர்க்குக் கண் கொடுப்பான்
அற்றவர்க்குக் கை கொடுப்பான்
பெற்றவரைப் பெற்றெடுத்த ஒருவன் - அவனைபின்தொடர்ந்தால்
அவன்தான் இறைவன்
பஞ்சுபடும் பாடுபடும்
நெஞ்சுபடும் பாடறிந்து
அஞ்சுதலைத் தீர்த்துவைப்பான் ஒருவன் - அவன்தான்ஆறுதலைத் தந்தருளும் இறைவன்
கல்லிருக்கும் தேரைகண்டு
கருவிருக்கும் பிள்ளை கண்டு
உள்ளிருந்து ஊட்டிவைப்பான் ஒருவன் - அதைஉண்டுகளிப் போர்க்கவனே இறைவன்
முதலினுக்கு மேலிருப்பான்
முடிவினுக்குக் கீழிருப்பான்
உதவிக்கு ஓடிவரும் ஒருவன் - அவனை
உணர்ந்து கொண்டால் அவன்தான் இறைவன்
நெருப்பினில் சூடு வைத்தான்
நீரினில் குளிர்ச்சி வைத்தான்
உள்ளத்தின் உள் விளங்கி
உள்ளுக்குள்ளே அடங்கி
உண்டென்று காட்டிவிட்டான் ஒருவன் -
ஓர்உருவமில்லா அவன்தான் இறைவன்.
கோழிக்குள் முட்டை வைத்து
முட்டைக்குள் கோழி வைத்து
வாழைக்கும் கன்றுவைத்தான் ஒருவன் - அந்தஏழையின் பேர் உலகில் இறைவன்
சின்னஞ்சிறு சக்கரத்தில்
ஜீவன்களைச் சுற்ற வைத்து
தன்மைமறந்தே இருக்கும் ஒருவன் - அவனைத்தழுவிக் கொண்டால் அவன்தான் இறைவன்
தான் பெரிய வீரனென்று
தலை நிமிர்ந்து வாழ்பவர்க்கும்
நாள் குறித்துக் கூட்டிச்செல்லும் ஒருவன் -அவன்தான்
நாடகத்தை ஆடவைத்த இறைவன்!
-ஆர்.எஸ். மனோகரன்
- நான் ஒரு திருமணத்தை நடத்தி வைத்தேன். மூன்று மாதங்கள் கழித்து அந்த மாப்பிள்ளையிடமிருந்து ஒரு கடிதம் எனக்கு வந்தது.
- ஆஹா... இது பிரமாதமான அறிவுரை அய்யா...இப்போது அதைத்தான் கடைப்பிடித்து வருகிறேன்.
ஒரு இலக்கியக் கழகத்தில், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் உரையாற்றியபோது கூறிய நகைச்சுவை சம்பவம்...
நான் ஒரு திருமணத்தை நடத்தி வைத்தேன். மூன்று மாதங்கள் கழித்து அந்த மாப்பிள்ளையிடமிருந்து ஒரு கடிதம் எனக்கு வந்தது. அதில் தன் மனைவி தன்னை மதிப்பதில்லை என்றும், மிகவும் அதிகாரத் தோரணையில் நடந்து கொள்வதாகவும், தன்னால் அவளோடு ஒத்துப்போக முடியவில்லை என்றும், தக்க அறிவுரை தர வேண்டும் என்றும் எழுதிக் கேட்டிருந்தார்.
நான் உடனே எட்டு எழுத்துக்கள் கொண்ட ஓர் அறிவுரையை அவருக்கு எழுதி அனுப்பினேன். அவர் அந்த அறிவுரை வேலை செய்யவில்லை என்று பதில் எழுதி அனுப்பினார்.
நான் உடனே ஏழு எழுத்துக்கள் அடங்கிய ஓர் அறிவுரையை எழுதி அனுப்பினேன். அதுவும் பயனில்லை என்று அவர் மறுமொழி எழுதி அனுப்பினார்.
சரி, வேறு வழியில்லை என கடைசியாக ஆறு எழுத்துக்கள் அடங்கிய ஓர் அறிவுரையை எழுதி அனுப்பினேன்.
"ஆஹா... இது பிரமாதமான அறிவுரை அய்யா...இப்போது அதைத்தான் கடைப்பிடித்து வருகிறேன். இப்போது எங்களிடையே எந்தப் பிரச்சினையும் இல்லை" என்று மகிழ்ச்சியாக அந்த மாப்பிள்ளை பதில் அனுப்பி இருந்தார்.
சரி, அந்த அறிவுரைகள் என்னென்ன என்று அறிந்து கொள்ள ஆவலாய் இருப்பீர்கள்! அந்த எட்டு எழுத்து அறிவுரை என்பது "அரவணைத்துப் போ",
ஏழு எழுத்து அறிவுரை என்பது "அடக்கிக் பார்". இந்த இரண்டும் தான் பயன்படவில்லையே!
மூன்றாவதாய் அனுப்பிய அறிவுரை "அடங்கிப் போ" இதுதான் உள்ளபடியே பிரச்சினையை தீர்த்த அறிவுரை!
- பரதன் வெங்கட்
- பெரும்பாலான காதல் திருமணங்கள் வெறும் பாலின ஈர்ப்பில் நடைபெறுகின்றன.
- காதலித்து திருமணம் செய்யும் பொழுது இருக்கும் சந்தோஷம் காலம் ஆக ஆக படிப்படியாக குறைந்து விடுகிறது.
காதல் திருமணம் செய்து கொள்பவர்கள் ஜாதக பொருத்தம் பார்க்கவேண்டுமா? - பெரும்பாலனவர்களுக்கும், காதலித்து கொண்டிருப்பவர்களுக்கும் ஏற்படும் சந்தேகம் இது.
என்னை பொருத்தவரை கண்டிப்பாக காதல் திருமணத்திற்கு ஜாதக பொருத்தம் பார்க்க வேண்டும். சில பேர் மனப்பொருத்தம் மட்டும் இருந்தால் போதும், ஜாதக பொருத்தம் தானாகவே வந்துவிடும் என்பர்.
பெரும்பாலான காதல் திருமணங்கள் வெறும் பாலின ஈர்ப்பில் நடைபெறுகின்றன. மேலும் காதல் திருமணக்கள் 75 சதவீதம் தோல்வியில் முடிந்து விடுகிறது. காதலித்து திருமணம் செய்யும் பொழுது இருக்கும் சந்தோஷம் காலம் ஆக ஆக படிப்படியாக குறைந்துவிடுகிறது.
பொருத்தம் இல்லாவிட்டாலும், காதலித்து கொண்டிருப்பவர்கள் கட்டாயம் இணைய வேண்டும் எனில், பரிகாரம் செய்து இணைக்கலாம்.
ஜாதக பொருத்தம் பார்க்கும்பொழுது, ரஜ்ஜு பொருத்தம் (மாங்கல்ய பொருத்தம்) இல்லாவிட்டாலும், பெண் ஜாதகத்தில் மாங்கல்ய ஸ்தானமும், ஆண் ஜாதகத்தில் ஆயுள் ஸ்தானமும் சரியாக இருந்தால் போதும். ஆனால் யோனி பொருத்தம் (தாம்பத்திய பொருத்தம்) கட்டாயம் இருக்க வேண்டும். தாம்பத்திய பொருத்தம் இருந்தால் கணவன், மனைவிக்குள் சிறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இருவரும் பிரிய மாட்டார்கள்.
பெரும்பாலான ஆண்களாக இருக்கட்டும், பெண்களாக இருக்கட்டும் தன் துணை அழகாக இருந்தாலும் வேறு நபருடன் தவறான உறவு கொள்வதற்கு மிக முக்கிய காரணம் யோனி பொருத்தம் சரியாக அமையாததுதான்.
பொருத்தம் பார்ப்பது மிக முக்கிய காரணம் என்னவெனில், எதிர்காலத்தில் இருவருக்கும் வரக்கூடிய திசா அமைப்புகள், அவற்றின் நற்பலன்கள் போன்றவற்றை கணித்து, இருவருக்கும் ஒரே நேரத்தில் மிக கடினமான நேரம் வராமல் இணைக்க வேண்டும். அப்படி இணைத்தால்தான் வாழ்வு வளம் பெறும். இல்லறம் நல்லறமாகும்.
- ஜோதிடர் சுப்பிரமணியன்






