என் மலர்
ஸ்வீடன்
- ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடந்து வருகிறது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரபேல் நடால் வென்றார்.
பாஸ்தாத்:
ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டங்கள் நடந்தன.
இன்று நடந்த போட்டியில் ஸ்பெயினின் ரபேல் நடால், அமெரிக்காவின் கேமரூன் நூரியுடன் மோதினார்.
இதில் நடால் 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறி அசத்தினார்.
- ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடந்து வருகிறது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் சுமித் நாகல் தோல்வி அடைந்தார்.
பாஸ்தாத்:
ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டங்கள் நடந்து வருகின்றன.
இதில் இந்திய வீரர் சுமித் நாகல், அர்ஜெண்டினாவின் மரியானோ நவோன் உடன் மோதினார்.
இதில் சுமித் நாகல் 4-6, 2-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார். மரியானோ நவோன் காலிறுதிக்கு முன்னேறினார்.
இந்தியாவின் சுமித் நாகல் தரவரிசையில் 68-வது இடத்தில் உள்ளார். சுமித் நாகல் முதல் 70 இடங்களுக்குள் வருவது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
- ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடந்து வருகிறது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் ரஷிய வீரர் தோல்வி அடைந்தார்.
பாஸ்தாத்:
ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டங்கள் நடந்து வருகின்றன.
இதில் ரஷிய வீரர் ஆண்ட்ரே ரூப்லெவ், அர்ஜெண்டினாவின் தியாகோ டிரண்டே உடன் மோதினார்.
இதில் ரூப்லெவ் 6-7 (5-7), 6-3, 4-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார். தியாகோ டிரண்டே காலிறுதிக்கு முன்னேறினார்.
- ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடந்து வருகிறது.
- ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில் நடால், ரூட் ஜோடி வென்றது.
பாஸ்தாத்:
ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதி சுற்று ஆட்டங்கள் நடந்து வருகின்றன.
இதில் நார்வேயின் கேஸ்பர் ரூட், ஸ்பெயினின் ரபேல் நடால் ஜோடி, பிரான்சின் தியோ ஆரிபேஜ், ரஷியாவின் ரோமன் சப்யூலின் ஜோடியுடன் மோதியது.
இதில் ரூட்-நடால் ஜோடி 6-4, 3-6, 12-10 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.
- ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடந்து வருகிறது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் நார்வே வீரர் தோல்வி அடைந்தார்.
பாஸ்தாத்:
ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டங்கள் நடந்து வருகின்றன.
இதில் நார்வே வீரர் கேஸ்பர் ரூட், பிரேசில் வீரர் தியாகோ மான்டெய்ரோ உடன் மோதினார்.
இதில் கேஸ்பர் ரூட் 3-6, 3-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார். தியாகோ மான்டெய்ரோ காலிறுதிக்கு முன்னேறினார்.
- ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடந்து வருகிறது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சுமித் நாகல் வென்றார்.
பாஸ்தாத்:
ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் சுமித் நாகல், ஸ்வீடனின் எலியாஸ் ஒய்மெர் ஆகியோர் மோதினர்.
இதில் சுமித் நாகல் 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை மறுதினம் நடைபெறும் அடுத்த சுற்றில் இந்திய வீரர் சுமித் நாகல் அர்ஜென்டினா வீரர் மரியானோ நவோனுடன் மோத உள்ளார்.
- வான் போக்குவரத்து அதிகாரிகளை பரபரப்பு நிலைக்கு ஆளாக்கியது.
- ரஷிய போர் விமானிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ரஷிய ராணுவத்திற்கு சொந்தமான போர் விமானம் ஒன்று ஸ்வீடன் வான்வெளியில் அத்துமீறி நுழைந்த சம்பவம் அந்நாட்டு வான் போக்குவரத்து அதிகாரிகளை திடீர் பதற்றம் மற்றும் பரபரப்பு நிலைக்கு ஆளாக்கியது.
கடந்த வெள்ளிக் கிழமை அரங்கேறிய இந்த சம்பவத்தின் போது ரஷிய போர் விமானங்கள் ஸ்வீடன் நாட்டின் கிழக்கில் உள்ள பால்டிக் தீவான கோட்லாந்தின் வான்பரப்பில் பறந்து சென்றுள்ளன. இதை அறிந்த ஸ்வீடன் ஆயுதப்படை சார்பில், ரஷிய போர் விமானிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

எனினும், ரஷிய விமானிகள் ஸ்வீடனுக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து ஸ்வீடன் சார்பில் இரண்டு போர் விமானங்கள் அனுப்பப்பட்டன. பிறகு ரஷிய விமானங்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளன. ஸ்வீடன் வான்வெளியில் ரஷியா நீண்ட நேரம் அத்துமீறியதாக ஸ்வீடன் ராணுவம் குற்றம்சாட்டியது.
"ரஷியாவின் செயல்களை ஏற்றுக் கொள்ளவே முடியாது. இவை பிராந்திய ஒருமைப்பாட்டுக்கான மரியாதையை குறைக்கும் வகையில் உள்ளது," என ஸ்வீடன் விமான படை தளபதி ஜோனஸ் விக்மேன் தெரிவித்தார்.
- பல தசாப்தங்களாக எந்த உலகப் போரிலும் பங்கேற்காமல் நடுநிலைமை வகித்தது ஸ்வீடன்
- "இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நாள்" என நேட்டோ பொதுச்செயலாளர் கூறினார்
இரண்டாம் உலகப் போருக்கு பிறகு அமெரிக்காவின் தலைமையில் 31 நாடுகள், ஒன்றிணைந்து அமைத்த ராணுவ கூட்டமைப்பு நேட்டோ (North Atlantic Treaty Organization) எனப்படும்.
நேட்டோ உறுப்பினர் நாட்டை மற்றொரு நாடு தாக்கவோ அல்லது ஆக்கிரமிக்கவோ முற்பட்டால், அனைத்து நேட்டோ நாடுகளும் ஒருங்கிணைந்து உறுப்பினர் நாட்டிற்கு ஆதரவாக நிற்கும். இதில் ஒரு நாடு உறுப்பினராக சேர விரும்பினால், அனைத்து நாடுகளும் அந்த கோரிக்கையை அங்கீகரிக்க வேண்டும்.
பல தசாப்தங்களாக எந்த உலகப் போரிலும் பங்கேற்காமல் நடுநிலைமை வகித்த ஸ்வீடன், ரஷிய-உக்ரைன் போருக்கு பிறகு அமெரிக்க-சார்பு நிலைக்கு மாறியது.
2022ல் நடந்த ரஷியாவின் உக்ரைன் ஆக்கிரமிப்பிற்கு பிறகு, தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்ட ஸ்வீடன், (NATO) நேட்டோ அமைப்பில் உறுப்பினராக விண்ணப்பித்தது.
ஆனால், "தனக்கு எதிரான நாடு" எனக் கூறி ஸ்வீடனின் இணைப்பை ஹங்கேரி ஆதரிக்க மறுத்து வந்தது. மற்றொரு நேட்டோ உறுப்பினர் நாடான துருக்கி, "தனது நாட்டிற்கு எதிரான குர்து இன பிரிவினைவாதிகளுக்கு ஸ்வீடன் ஆதரவளிக்கிறது" என குற்றம் சாட்டி ஸ்வீடனை இணைக்க சம்மதிக்கவில்லை.
கடந்த ஜனவரி மாதம், தனது முடிவை மாற்றிக் கொண்ட துருக்கி, ஸ்வீடன் நேட்டோ உறுப்பினராக ஆதரவளித்தது.
சில வாரங்களுக்கு முன், ஹங்கேரியும் தனது நிலையை மாற்றி கொண்டது.
நேட்டோவில் உறுப்பினராக இணைவதற்கு சுவீடன் நாட்டிற்கு இருந்த அனைத்து தடைகளும் நீங்கிய நிலையில், நேற்று, அதிகாரபூர்வமாக ஸ்வீடனின் இணைப்பு அறிவிக்கப்பட்டது.

நேட்டோ அமைப்பில் இணையும் 32-வது உறுப்பினர் நாடு ஸ்வீடன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்வீடனின் இணைப்பு குறித்து, "இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நாள்" என நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டால்டன்பர்க் (Jens Stoltenberg) கூறினார்.
இது குறித்து பேசிய ஸ்வீடன் அதிபர் உல்ஃப் க்ரிஸ்டர்சன் (Ulf Kristersson), அனைத்து உறுப்பினர் நாடுகளுக்கும் நன்றி தெரிவித்தார்.
- நேட்டோ உறுப்பினரை எந்த நாடு தாக்கினாலும் அனைத்து நாடுகளும் ஒன்றாக எதிர்க்கும்
- நீண்ட காலமாக ஸ்வீடன் எந்த போரிலும் பங்கேற்காமல் நடுநிலைமை வகித்தது
இரண்டாம் உலகப் போருக்கு பிறகு அமெரிக்காவின் தலைமையில் 31 நாடுகள் ஒன்றிணைந்து அமைத்த அணி நேட்டோ (North Atlantic Treaty Organization).
நேட்டோ அமைப்பில் உள்ள ஒரு நாட்டை வேறொரு நாடு தாக்கவோ அல்லது ஆக்கிரமிக்கவோ முற்பட்டால், அனைத்து நேட்டோ நாடுகளும் ஒருங்கிணைந்து அந்த நாட்டிற்கு ஆதரவாக நிற்கும்.
நேட்டோ அமைப்பில் ஒரு நாடு உறுப்பினராக சேர விரும்பினால், அனைத்து நாடுகளும் அந்த விண்ணப்பத்தை அங்கீகரிக்க வேண்டும்.
சுமார் 200 வருடங்களாக எந்த உலகப் போரிலும் பங்கேற்காமல் நடுநிலைமை வகித்த ஸ்வீடன், ரஷிய-உக்ரைன் போருக்கு பிறகு அமெரிக்க-சார்பு நிலைக்கு மாறியது.
2022ல் உக்ரைனை ரஷியா ஆக்கிரமித்த பிறகு ஸ்வீடன், (NATO) நேட்டோ அமைப்பில் உறுப்பினராக விண்ணப்பித்தது.
ஆனால், ஸ்வீடன் தனக்கு எதிரான நாடு எனக் கூறி ஸ்வீடனின் இணைப்பை ஹங்கேரி ஆதரிக்க மறுத்து வந்தது.
இந்நிலையில், ஹங்கேரி தனது நிலையை மாற்றி கொண்டது.
ஹங்கேரியின் பிரதமர் விக்டர் ஓர்பன் (Viktor Orban), "இரு நாடுகளும் ஒருவருக்காக மற்றொருவர் இறக்கவும் தயாராக உள்ள நாடுகள்" எனக் கூறி ஸ்வீடன் நேட்டோவில் இணைவதற்கு சம்மதம் தெரிவித்தார்.

ஹங்கேரியின் ஒப்புதல் குறித்த தகவல் வந்த நிலையில் நேற்று ஸ்வீடன் பிரதமர் உல்ஃப் க்ரிஸ்டர்ஸன் (Ulf Kristersson) மகிழ்ச்சி தெரிவித்தார்.
ஹங்கேரியின் இந்த முக்கிய முடிவு குறித்து நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டால்டன்பர்க், "நேட்டோ, முன்னை காட்டிலும் வலுவான மற்றும் பாதுகாப்பான அமைப்பாகவும் மாறி விட்டது" என (Jens Stoltenberg) தெரிவித்தார்.
மற்றொரு நேட்டோ உறுப்பினர் நாடான துருக்கி, தனது நாட்டிற்கு எதிரான குர்து இன பிரிவினைவாதிகளுக்கு ஆதரவளிப்பதாக குற்றம் சாட்டி ஸ்வீடன் இணைய சம்மதிக்கவில்லை.
ஆனால், கடந்த ஜனவரி மாதம், தனது முடிவை மாற்றிக் கொண்ட துருக்கி, ஸ்வீடன் நேட்டோ உறுப்பினராக ஆதரவளித்தது.
- லைஸ்பர்க் பார்க்கின் விரிவாக்கமாக ஓஷியானா பார்க் உருவாகியது
- காணாமல் போன ஒருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்
வட ஐரோப்பாவில் உள்ள நாடு, ஸ்வீடன். இதன் தலைநகரம் ஸ்டாக்ஹோம் (Stockholm).
ஸ்வீடனின் மேற்கு கடற்கரையோர நகரம், கோதன்பர்க் (Gothenburg).
இந்நகரில் "ஓஷியானா வாட்டர் பார்க்" (Oceana water park) எனும் புதிய தண்ணீர் பூங்கா கட்டப்பட்டு வந்தது. "லைஸ்பர்க் அம்யூஸ்மென்ட் பார்க்" (Liseberg Amusement Park) எனும் பொழுதுபோக்கு பூங்காவின் விரிவாக்கமாக இது உருவாகி வந்தது.
நேற்று, ஓஷியானா தண்ணீர் பூங்காவில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. கட்டுமானம் முடிந்து, பயன்பாட்டிற்கு இன்னும் வராத பல நீர்சறுக்கு அமைப்புகள் தீக்கிரையாகின.

அப்பகுதி முழுவதும் கருமண்டலம் போல் புகை சூழ்ந்தது.
இந்த தீ விபத்தில் 16 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் இல்லை. ஆனாலும், ஒருவர் காணவில்லை என்றும் அவரை தேடும் வேட்டையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீ விபத்திற்கான காரணம் தற்போது வரை தெரியவில்லை.

தண்ணீர் பூங்காவை சுற்றியுள்ள ஒரு ஓட்டல் மற்றும் அருகிலிருந்த அலுவலகங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
மேலும், தீ முழுவதுமாக அணைக்கும் வரை தங்கள் வீடுகளுக்கு உள்ளேயே இருக்குமாறும், ஜன்னல்களையும் கதவுகளையும் தாழிட்டு கொள்ளவும் அப்பகுதி மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. தீயணைப்பு வீரர்கள் முழுவீச்சில் பணியாற்றி தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியை இணைக்கும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டுள்ளன.
அப்பகுதி முழுவதும் எரிந்த பிளாஸ்டிக் வாடை வீசுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
- இனி சுவீடனில் தங்க விரும்புபவர்கள் அங்கு வேலை தேடி கொள்ள வேண்டும்
- சுவீடிஷ் மொழியில் தேர்வு பெற்றாக வேண்டும் என்கிறது புதிய நடைமுறை
ஐரோப்பிய நாடுகளில் 27 நாடுகளுக்கு பாஸ்போர்ட் இல்லாமல் எல்லைகளை தாண்டி செல்ல ஒரே விசா முறையான ஷென்கன் விசா (Schengen Visa) நடைமுறையில் உள்ளது. இதை சுவீடன் (Sweden) நாடும் அங்கீகரித்து வந்தது.
சுற்றுலா தவிர, சுவீடனில் உள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கவும், அங்கு தங்கி பணியாற்றவும் பல நாடுகளிலிருந்து அங்கு மக்கள் செல்கின்றனர். ஆனால், தற்போது சுவீடன் அரசாங்கம் தங்கள் நாட்டில் குடி புக நினைக்கும் அனைத்து அயல்நாட்டினருக்கும் புதிய சட்டதிட்டங்களை வகுக்க உள்ளது.
சுவீடனின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அறிவித்திருப்பதாவது:
சுவீடனில் தங்க விரும்புபவர்கள் இங்கு தாங்களாகவே வேலையை தேடி கொள்ள வேண்டும். இதன் மூலம் அனைவரும் அரசாங்க உதவி இல்லாமல் தங்களை தேவைகளை தாங்களே பார்த்து கொள்ள முடியும். சுவீடன் நாட்டின் சட்டங்கள், கட்டுப்பாடுகள் மற்றும் சமூக குறியீடுகளை குறித்த புரிதல் இருக்க வேண்டும் என்பதும் இனி கட்டாயம். சுவீடன் நாட்டு மொழியான சுவீடிஷ் (Swedish) மொழியில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இனி அனுமதிக்கப்படுவர். அதற்காக ஒரு தேர்வு நடத்தப்படும். இங்கு தங்கி பணியாற்ற விரும்புபவர்கள் ஒவ்வொருவரின் "சமுதாய புரிதல்" குறித்து ஒரு ஆய்வாளரின் அறிக்கை பெறப்படும். இங்கு கல்வி கற்று, பிறகு வேலையில் சேர்ந்து பணியாற்ற அனைவருக்கும் வாய்ப்பு வழங்கும் விதமாக விசா திட்டங்கள் மாற்றப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"சுவீடனுக்கு அனவைரையும் வரவேற்கிறோம். ஆனால், எங்கள் சட்டதிட்டங்கள் இனி இதுதான். சுவீடிஷ் மொழியை கற்று எங்கள் சமூகம் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து படித்து புரிதல் கொண்டவர்கள் மட்டுமே இங்கு வர வேண்டும்" என சுவீடனின் தொழிலாளர் துறை அமைச்சர் ஜோகன் பெர்சன் (Johan Pehrson) தெரிவித்தார்.
சில தினங்களுக்கு முன், ஃபாஸ்ட் டிராக் (fast track) எனப்படும் "விரைவு பரிசீலனை" முறையில் வழங்கப்பட்டு வந்த விசா வழங்கலை சுவீடன் நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.
- தனது புதுமையான எழுத்துக்கள் மூலம் நார்வே இலக்கியத்தில் சாதனை புரிந்தார்
- சந்தோஷத்துடன் சற்று அச்சமாகவும் உள்ளது என்றார் ஜான் ஃபாஸ்
சுவீடன் நாட்டை சேர்ந்த ஆல்பிரட் நோபல் (Alfred Nobel) எனும் வேதியியல் பொறியாளரின் பெயரில் 1901லிருந்து மருத்துவம், பவுதிகம், வேதியியல், இலக்கியம் மற்றும் உலக அமைதி ஆகிய 5 துறைகளில் மனித குலத்திற்கு பயனுள்ள சாதனைகளை புரிந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு எனும் உலக புகழ் பெற்ற விருது வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டிற்கான மருத்துவம், பவுதிகம், மற்றும் வேதியியல் துறைக்கு தகுதியானவர்களின் பெயர்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இலக்கியத்திற்கான நோபல் பரிசுக்கு தகுதி பெற்றவரின் பெயர் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
நார்வே நாட்டை சேர்ந்த எழுத்தாளரான ஜான் ஃபாஸ் (Jon Fosse) என்பவருக்கு இந்த விருது வழங்கப்படுவதாக நோபல் பரிசுக்கான ஸ்வீடன் நாட்டு அகாடமி அறிவித்திருக்கிறது.
"தனது புதுமையான நாடகங்கள், நாவல்கள், கதைகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் குழந்தைகளுக்கான புத்தகங்கள் மூலம் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக நார்வே நாட்டின் நைனார்ஸ்க் இலக்கியத்தில் சாதனை புரிந்தவர் ஜான் ஃபாஸ். அவரது படைப்புகளுக்காக அவரை கவுரவிக்கும்விதமாக இந்த பரிசினை வழங்குகிறோம்" என அந்த அகாடமி தெரிவித்திருக்கிறது.
"மிகவும் அதிக சந்தோஷத்தில் இருக்கிறேன். அதே சமயம் சற்று அச்சமாகவும் உள்ளது. இதை இலக்கியத்திற்கான பரிசாக நான் பார்க்கிறேன்" என தனக்கு கிடைத்திருக்கும் விருதினை குறித்து ஜான் ஃபாஸ் தெரிவித்தார்.
1901லிருந்து தற்போது 2023 வரை இலக்கியத்திற்கான நோபல் பரிசு 116 முறை வழங்கப்பட்டிருக்கிறது.






