என் மலர்
இலங்கை
- கடந்த வியாழக்கிழமை இலங்கை அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே விலகினார்.
- இலங்கையில் நெருக்கடியான சூழல் நீடித்து வருகிறது.
கொழும்பு :
இலங்கையில் விலைவாசி உயர்வு, உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை ஆகியவற்றை தொடர்ந்து கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. நிதி நெருக்கடியால், உணவு, மருந்து மற்றும் எரிபொருள் ஆகியவற்றை இறக்குமதி செய்யவோ, விலை கொடுத்து வாங்கவோ முடியாத சூழ்நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டது.
சுதந்திரம் பெற்றதில் இருந்து இதுவரை இல்லாத வகையிலான எரிபொருள் பற்றாக்குறையால் அந்நாடு சிக்கி தவித்து வருகிறது. இந்த சூழலில், இலங்கைக்கு இந்தியா ஆதரவுகரம் நீட்டியுள்ளது. கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்கள், உரம் போன்றவற்றை தீவு நாடான இலங்கைக்கு கப்பலில் அனுப்பி வருகிறது. எனினும், இலங்கையில் நெருக்கடியான சூழல் நீடித்து வருகிறது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் நிதி நெருக்கடியான சூழலால் மக்கள் பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக அவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
கொழும்புவில் உள்ள அதிபர் கோத்தபயா வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் வீட்டை அடித்து நொறுக்கினர். எனினும், போராட்டக்காரர்கள் வருவதற்குள் கோத்தபயா தனது குடும்பத்துடன் தப்பி விட்டார். கோத்தபயா தனது குடும்பத்துடன் மாலத்தீவுக்கு கடந்த 13ந்தேதி ராணுவ விமானத்தில் தப்பி சென்றார். இதன்பின், மாலத்தீவில் இருந்தபடியே சிங்கப்பூருக்கு சென்றார். இலங்கையில் பல வார போராட்டங்களுக்கு பின்னர், கடந்த வியாழ கிழமை இலங்கை அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே விலகினார்.
இடைக்கால அதிபராக பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கடந்த வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றார். ஆனால் அவரும் பதவி விலக கோரி நாடெங்கும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இந்நிலையில் இலங்கையில் அவசரநிலையை பிறப்பிப்பதற்கான உத்தரவை இடைக்கால அதிபர் ரணில் நேற்று முன்தினம் காலை வெளியிட்டார். இலங்கையில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் ஒருபுறம் நடந்து வருகின்றன.
இதனை தொடர்ந்து புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த சூழலில், இலங்கையில் கொழும்பு நகரில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டு உள்ள செய்தியில், இலங்கையில் தற்போது ஏற்பட்டு உள்ள நெருக்கடியான சூழலில், இங்கிருக்கும் இந்தியர்கள் சமீபத்திய முன்னேற்றங்கள் பற்றிய விவரங்களை பற்றி தொடர்ந்து அறிந்து கொண்டு, அதன்பின்னர் தங்களது பயணம் மற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி கேட்டு கொள்ளப்படுகின்றனர் என அறிவுறுத்தி உள்ளது. தேவைப்பட்டால் கொழும்புவில் உள்ள இந்திய தூதரகத்தினை இந்தியர்கள் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்து உள்ளது.
- இடைக்கால அதிபராக ரணில் விக்மரசிங்கே நியமிக்கப்பட்டுள்ளார்.
- இன்று அதிபர் தேர்வு நடப்பதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கொழும்பு :
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்களின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தது. மேலும் உணவு பொருட்கள், பெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்கு தட்டுப்பாடும் நிலவுகிறது. இதனால் மக்கள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தியதால் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே கடந்த மே மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே நியமிக்கப்பட்டார். அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே பதவி விலக மறுத்து வந்த நிலையில் அவருக்கு எதிராக மிகப் பெரிய அளவில் போராட்டம் வெடித்தது. அதிபர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்தனர். இதனால் கோத்தபய ராஜபக்சே கடந்த 9-ந்தேதி மாலத்தீவுக்கு தப்பி சென்றார். பின்னர் சிங்கப்பூருக்கு சென்ற அவர் அங்கிருந்தபடி அதிபர் பதவியை ராஜினாமா செய்வதாக இ-மெயில் மூலம் பாராளுமன்ற சபாநாயகருக்கு கடிதத்தை அனுப்பினார்.
இதனை தொடர்ந்து இடைக்கால அதிபராக ரணில் விக்மரசிங்கே நியமிக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார். மேலும் புதிய அதிபரை 20-ந்தேதி பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் வாக்களித்து தேர்வு செய்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது. புதிய அதிபர் பதவிக்கு இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கே, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா, ஜெ.வி.பி. கட்சி தலைவர் அனுராகுமாரதிசநாயக, இலங்கை மக்கள் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற முன்னாள் மந்திரி டல்லஸ் அழகப்பெருமா ஆகிய 4 பேர் போட்டியிடுவதாக அறிவித்தனர்.
255 உறுப்பினர்களை கொண்ட இலங்கை பாராளுமன்றத்தில் 50 சதவீதத்துக்கு அதிகமான வாக்குகளை பெறும் வேட்பாளர் புதிய அதிபராக தேர்வு செய்யப்படுவார். பாராளுமன்றத்தில் ஆளும் இலங்கை மக்கள் கட்சிக்கு பெரும்பான்மை உள்ளது. அக்கட்சி ரணில் விக்ரமசிங்கேவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது.
ஆனால் இலங்கை மக்கள் கட்சி தலைவர்களில் ஒருவரான ஜி.எல்.பிரீஸ் அணியினர் முன்னாள் மந்திரி டல்லஸ் அழகப் பெருமாவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். இதனால் ஆளுங்கட்சிக்குள் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இலங்கையில் மீண்டும் அவசர நிலை பிரகடனப்படுத்துவதாக நேற்று முன் தினம் இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கே அறிவித்தார்.
இதையடுத்து ராணுவத்தினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இன்று அதிபர் தேர்வு நடப்பதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்கள் பாராளுமன்றத்தை முற்றுகையிட முயன்றால் அவர்களை தடுக்கவும் கலைந்து செல்லவும் விசேஷ பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாக போலீஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
கலவரத் தடுப்பு பிரிவுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கொழும்பு மற்றும் பாராளுமன்றத்தை சுற்றியுள்ள பகுதிகளுக்கு கண்ணீர் புகை குண்டுகளை வீசும் குழுக்களும் வரவழைக்கப்பட்டுள்ளன. அதிபர் பதவிக்கு போட்டியிடும் ரணில் விக்மரசிங்கேவுக்கும் போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் 337 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
- பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு 120 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது.
காலே:
பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி 222 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அரை சதமடித்த சண்டிமால் 76 ரன்னில் அவுட்டானார்.
பாகிஸ்தான் சார்பில் ஷஹீன் அப்ரிடி 4 விக்கெட்டும், ஹசன் அலி, யாசீர் ஷா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 218 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் பாபர் அசாம் பொறுப்புடன் ஆடி சதமடித்து 119 ரன்னில் அவுட்டானார்.
இலங்கை சார்பில் பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட்கள் வீழ்த்தினார்.
4 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடர்ந்த இலங்கை அணி மூன்றாம் நாள் முடிவில் 9 விக்கெட்டுக்கு 329 ரன்களை எடுத்து இருந்தது.
இந்நிலையில், 4-வது நாள் ஆட்டம் நேற்று தொடங்கியது. இலங்கை அணி மேலும் 8 ரன்கள் சேர்த்த நிலையில் 337 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சண்டிமால் 94 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பாகிஸ்தான் சார்பில் முகமது நவாஸ் 5 விக்கெட்டும், யாசீர் ஷா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 342 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக அப்துல்லா ஷபிக் - இமாம் உல் ஹக் களமிறங்கினர். இந்த ஜோடி சிறப்பான தொடக்கம் கொடுத்தது.
இமாம் உல் ஹக் 35 ரன்னிலும், அசார் அலி 6 ரன்னிலும் ஆட்டமிழந்து நடையை கட்டினர். அடுத்து இறங்கிய பாபர் அசாம் அரை சதமடித்து 55 ரன்னில் வெளியேறினார். மறுமுனையில் சிறப்பாக ஆடிய ஷபிக் சதமடித்து அசத்தினார்.
இறுதியில், நான்காம் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுக்கு 222 ரன்கள் எடுத்துள்ளது. அப்துல்லா ஷபிக் 112 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இறுதி நாளான இன்று வெற்றிக்கு 120 ரன்கள் மட்டுமே தேவைப்படும் நிலையில் பாகிஸ்தான் கைவசம் 7 விக்கெட்கள் மீதம் உள்ளதால் பாகிஸ்தான் அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
- பாராளுமன்றத்தில் ஆளும் இலங்கை மக்கள் கட்சிக்கு பெரும்பான்மை உள்ளது. அக்கட்சி ரணில் விக்ரமசிங்கேவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது.
- நாளை இலங்கையின் புதிய அதிபரை தேர்வு செய்ய ரகசிய வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
கொழும்பு:
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்களின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தது. மேலும் உணவு பொருட்கள், பெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்கு தட்டுப்பாடும் நிலவுகிறது.
இதனால் மக்கள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தியதால் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே கடந்த மே மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே நியமிக்கப்பட்டார்.
அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே பதவி விலக மறுத்து வந்த நிலையில் அவருக்கு எதிராக மிகப் பெரிய அளவில் போராட்டம் வெடித்தது. அதிபர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்தனர்.
இதனால் கோத்தபய ராஜபக்சே கடந்த 9-ந்தேதி மாலத்தீவுக்கு தப்பி சென்றார். பின்னர் சிங்கப்பூருக்கு சென்ற அவர் அங்கிருந்தபடி அதிபர் பதவியை ராஜினாமா செய்வதாக இ-மெயில் மூலம் பாராளுமன்ற சபாநாயகருக்கு கடிதத்தை அனுப்பினார்.
இதையடுத்து இடைக்கால அதிபராக ரணில் விக்மரசிங்கே நியமிக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார். மேலும் புதிய அதிபரை 20-ந்தேதி பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் வாக்களித்து தேர்வு செய்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.
புதிய அதிபர் பதவிக்கு இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கே, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா, ஜெ.வி.பி. கட்சி தலைவர் அனுராகுமாரதிசநாயக, இலங்கை மக்கள் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற முன்னாள் மந்திரி டல்லஸ் அழகப்பெருமா ஆகிய 4 பேர் போட்டியிடுவதாக அறிவித்தனர்.
255 உறுப்பினர்களை கொண்ட இலங்கை பாராளுமன்றத்தில் 50 சதவீதத்துக்கு அதிகமான வாக்குகளை பெறும் வேட்பாளர் புதிய அதிபராக தேர்வு செய்யப்படுவார்.
பாராளுமன்றத்தில் ஆளும் இலங்கை மக்கள் கட்சிக்கு பெரும்பான்மை உள்ளது. அக்கட்சி ரணில் விக்ரமசிங்கேவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது.
ஆனால் இலங்கை மக்கள் கட்சி தலைவர்களில் ஒருவரான ஜி.எல்.பிரீஸ் அணியினர் முன்னாள் மந்திரி டல்லஸ் அழகப் பெருமாவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். இதனால் ஆளுங்கட்சிக்குள் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.
புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான வேட்பு மனுவை 19-ந்தேதி (இன்று) வரை தாக்கல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்று பாராளுமன்றம் மீண்டும் கூடுகிறது. இதில் அதிபர் பதவிக்கு போட்டியிடுவர்கள் வேட்பு மனுதாக்கல் செய்ய உள்ளனர்.
நாளை இலங்கையின் புதிய அதிபரை தேர்வு செய்ய ரகசிய வாக்கெடுப்பு நடைபெறுகிறது. இதில் பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்து அதி பரை தேர்வு செய்கிறார்கள்.
ரணில் விக்ரமசிங்கே வுக்கு ஆளுங்கட்சி ஆதரவு தெரிவித்துள்ள போதிலும் ஒரு பிரிவினர் டல்லஸ் அழகப்பெருமாவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். மேலும் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியும் டல்லஸ் பெருமாவை ஆதரிப்பதாக இன்று அறிவித்துள்ளது.
இதனால் அங்கு நடக்கும் அதிபர் பதவி தேர்தலில் கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையில் மீண்டும் அவசர நிலை பிரகடனப்படுத்துவதாக நேற்று இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கே அறிவித்தார். இதையடுத்து ராணுவத்தினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் பாராளுமன்றம் இன்று கூடுவதாலும், நாளை அதிபர் தேர்வு நடப்பதாலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் பாராளுமன்றத்தை முற்றுகையிட முயன்றால் அவர்களை தடுக்கவும் கலைந்து செல்லவும் விசேஷ பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாக போலீஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
கலவரத் தடுப்பு பிரிவுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கொழும்பு மற்றும் பாராளுமன்றத்தை சுற்றியுள்ள பகுதிகளுக்கு கண்ணீர் புகை குண்டுகளை வீசும் குழுக்களும் வரவழைக்கப்பட்டுள்ளன. அதிபர் பதவிக்கு போட்டியிடும் ரணில் விக்மரசிங்கேவுக்கும் போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- இலங்கையில் 2 ஏக்கருக்கு குறைவான வயல்களில் பயிரிட்ட விவசாயிகளின் கடன்கள் ரத்து.
- வெளிநாடுகளுடனான உதவிக்கான கலந்துரையாடல்களில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது
கொழும்பு :
இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணாத ஆட்சியாளர்களுக்கு எதிராக பொதுமக்கள் கிளர்ச்சி செய்து வருகின்றனர். இதனால் அதிபர் கோத்தபய ராஜபக்சே சமீபத்தில் பதவி விலகினார். இதனால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, இடைக்கால அதிபராக பதவியேற்று உள்ளார். புதிய அதிபருக்கான தேர்தல் 20-ந்தேதி நடக்கிறது.
கோத்தபய ராஜபக்சே பதவி விலகினாலும், எதிர்ப்பை கைவிடாத போராட்டக்காரர்கள் இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு எதிராகவும் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். நாட்டின் ஒட்டுமொத்த அரசு அமைப்பையும் மாற்றும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என அவர்கள் அறிவித்து உள்ளனர். இந்தநிலையில், பொருளாதார சிக்கலில் சிக்கி தவிக்கும் இலங்கை மக்களுக்கு பல்வேறு சலுகைகளை ரணில் விக்ரமசிங்கே அறிவித்துள்ளார்.
இலங்கையில் 2 ஏக்கருக்கு குறைவான வயல்களில் பயிரிட்ட விவசாயிகளின் கடன்கள் ரத்து செய்யப்படும். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால் பெட்ரோல் விலையும் குறைக்கப்படும். எரிபொருள் விநியோகத்தில் ஜூலை மாதம் கடினமான காலமாக இருக்கும். எவ்வாறாயினும், டீசல் இருப்புக்கள் பாதுகாக்கப்பட்டு அனைவருக்கும் விநியோகிக்கப்படும், ஜூலை 21 முதல் பெட்ரோலும் விநியோகிக்கப்படும்.
நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, தனி மனிதர் மீதான கருத்து வேறுபாடுகளால் நாடு பாதிக்கப்படுவதற்கு இடமளிக்க வேண்டாம். மேலும் அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைக்க வேண்டும். சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. மேலும் வெளிநாடுகளுடனான உதவிக்கான கலந்துரையாடல்களும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என இலங்கை அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது.
- இலங்கை அணியின் 2வது இன்னிங்சில் சண்டிமால், குசால் மெண்டிஸ், பெர்னாண்டோ அரை சதமடித்தனர்.
- பாகிஸ்தானின் முகமது நவாஸ் 5 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.
கெல்லே:
பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி 222 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அரை சதமடித்த சண்டிமால் 76 ரன்னில் அவுட்டானார். தீக்ஷனா 38 ரன்னும், பெர்னாண்டோ 35 ரன்னும் எடுத்தனர்.
பாகிஸ்தான் சார்பில் ஷஹீன் அப்ரிடி 4 விக்கெட்டும், ஹசன் அலி, யாசீர் ஷா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 218 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் பாபர் அசாம் பொறுப்புடன் ஆடி சதமடித்து 119 ரன்னில் அவுட்டானார்.
இலங்கை அணி சார்பில் பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட்டும், மெண்டிஸ், தீக்ஷனா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
4 ரன்கள் முன்னிலை பெற்ற இலங்கை அணி 2வது இன்னிங்சை தொடர்ந்தது. இரண்டாம் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில், மூன்றாம் நாள் நேற்று நடைபெற்றது. தொடக்க ஆட்டக்காரர் ஒஷாடா பெர்னாண்டோ அரை சதமடித்து 64 ரன்னில் அவுட்டானார். குசால் மெண்டிஸ் 76 ரன்னில் ஆட்டமிழந்தார். மற்ற முன்னணி வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
3-வது விக்கெட்டுக்கு இணைந்த ஒஷாடா பெர்னாடோ, குசால் மெண்டிஸ் ஜோடி 91 ரன்கள் சேர்த்தனர். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் சண்டிமால் நிதானமாக ஆடி அரை சதமடித்தார்.
இறுதியில் மூன்றாம் நாள் முடிவில் இலங்கை அணி 2வது இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 329 ரன்களை எடுத்துள்ளது. சண்டிமால் 86 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
பாகிஸ்தான் சார்பில் முகமது நவாஸ் 5 விக்கெட்டும், யாசீர் ஷா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- இலங்கையில் அதிபர் பதவிக்கு நாளை மறுநாள் தேர்தல் நடத்தப்படுகிறது
- அதிபர் தேர்தலையொட்டி வன்முறை பரவாமல் இருக்க நடவடிக்கை
கொழும்பு:
இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிரான மக்கள் புரட்சி தீவிரமடைந்ததையடுத்து அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார். பின்னர் அவர் பதவி விலகினார். அவர் ராஜினாமா செய்ததையடுத்து, காலியாக இருக்கும் அதிபர் பதவிக்கு நாளை மறுநாள் (ஜூலை 20) தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தலையொட்டி வன்முறை பரவாமல் இருக்கவும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையிலும் இன்று முதல் மீண்டும் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை இடைக்கால அதிபர் ரணில் விக்கிரமசிங்கே பிறப்பித்தார்.
இதன்மூலம் பாதுகாப்புப் படையினருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளிலும் சோதனை நடத்தி ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை கைப்பற்றுதல், கைது செய்தல் போன்ற அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள்.
- பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
- எரிபொருள் வாங்குவதற்காக மக்கள் வரிசையில் நிற்கும்போது பல வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
கொழும்பு :
இலங்கையில் கடுமையான அந்நியச் செலாவணி பற்றாக்குறையின் காரணமாக நாட்டில் எரிபொருள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதி தடைபட்டது. இதனல், அந்த நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வருகிறது. அத்துடன், அங்கு கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்த எரிபொருள் தட்டுப்பாட்டால் மின் உற்பத்தி பாதிப்பு, போக்குவரத்து முடக்கம் போன்ற சிரமங்கள் ஏற்பட்டு உள்ளன. அங்கு பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்கள் மற்றும் கியாஸ் நிரப்பும் நிலையங்களில் போதிய அளவுக்கு இருப்பு இல்லாததால் மக்கள் நீண்ட வரிசையில் நாள் கணக்கில் காத்திருக்கும் நிலை உருவாகி உள்ளது.
எரிபொருள் வாங்குவதற்காக மக்கள் வரிசையில் நிற்கும்போது பல வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. எரிபொருள் வாங்க வரிசையில் தொடர்ந்து பல நாட்கள் காத்துக்கிடந்ததால், கிட்டத்தட்ட 20 பேர் சோர்வு காரணமாக இறந்துள்ளனர். இந்த நிலையில் இலங்கையின் அரசு நிறுவனமான சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் டீசல் மற்றும் பெட்ரோல் சில்லறை விலைகளை தலா 20 ரூபாய் நேற்று குறைத்தது, கடந்த பிப்ரவரி முதல், ஐந்து முறை விலை உயர்வுக்கு பிறகு தற்போது விலை குறைந்துள்ளது.
அதன்படி குறைக்கப்பட்ட பெட்ரோல், டீசல் விற்பனை நேற்று இரவு 10.00 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. கடைசியாக பெட்ரோல், டீசல் விலை மே மாத இறுதியில் ரூ.50 மற்றும் 60 ஆக உயர்த்தப்பட்டது. ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லிட்டருக்கு .50 உயர்ந்துரூ.470க்கும், ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லிட்டருக்குரூ.100 உயர்ந்து ரூ.550க்கும், சூப்பர் டீசல் ரூ.75 உயர்ந்து ரூ 520க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 218 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
- பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் சதமடித்து அசத்தினார்.
கெல்லே:
பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி 222 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அரை சதமடித்த சண்டிமால் 76 ரன்னில் அவுட்டானார். தீக்ஷனா 38 ரன்னும், பெர்னாண்டோ 35 ரன்னும் எடுத்தனர்.
பாகிஸ்தான் சார்பில் ஷஹீன் அப்ரிடி 4 விக்கெட்டும், ஹசன் அலி, யாசீர் ஷா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி முதல் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 24 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. பாகிஸ்தான் வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் கேப்டன் பாபர் அசாம் பொறுப்புடன் ஆடி சதமடித்து 119 ரன்னில் அவுட்டானார். பாபர் அசாம், நசீம் ஷா ஜோடி 10-வது விக்கெட்டுக்கு 70 ரன்கள் சேர்த்து அசத்தியது.
இறுதியில், பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 218 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இலங்கை அணி சார்பில் பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட்டும், மெண்டிஸ், தீக்ஷனா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து, 2-வது இன்னிங்சை ஆடிய இலங்கை, இரண்டாம் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் எடுத்துள்ளது.
- 225 உறுப்பினர் இலங்கை பாராளுமன்றத்தில் ஆளும் இலங்கை மக்கள் கட்சியின் ஆதிக்கம்தான் உள்ளது.
- இலங்கை அதிபர் தேர்தலில் பல தலைவர்கள் களமிறங்கி இருப்பதால் பலத்த போட்டி ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.
கொழும்பு:
இலங்கையின் பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்ட மக்கள் புரட்சியால் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்தார். அத்துடன் சிங்கப்பூருக்கு தப்பி சென்று விட்டார்.
எனவே இலங்கையின் இடைக்கால அதிபராக பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நேற்று முன்தினம் பதவியேற்றார்.
கோத்தபய ராஜபக்சே ராஜினாமாவை தொடர்ந்து நாட்டின் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் வருகிற 20-ந்தேதி பாராளுமன்றத்தில் நடக்கிறது. 19-ந்தேதி வேட்புமனு பெறப்படுகின்றன.
இந்த தேர்தலில் போட்டியிட தற்போதைய இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கே திட்டமிட்டு உள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் ஒரே எம்.பி.யான அவரை ஆதரிக்க கோத்தபய ராஜபக்சேவின் இலங்கை மக்கள் கட்சி முன்வந்திருக்கிறது.
225 உறுப்பினர் இலங்கை பாராளுமன்றத்தில் ஆளும் இலங்கை மக்கள் கட்சியின் ஆதிக்கம்தான் உள்ளது. ஆனால் ரணிலை ஆதரிப்பதற்கு கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.
தங்கள் கட்சி சாராத ஒருவரை ஆதரிக்கக்கூடாது என அந்த கட்சித்தலைவர் ஜி.எல்.பெய்ரீஸ் கூறியுள்ளார். இலங்கை மக்கள் கட்சியில் இருந்து பிரிந்து சென்றவரும், முன்னாள் மந்திரியுமான டல்லஸ் அழகப்பெருமாவை ஆதரிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார். இவர் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதை ஏற்கனவே உறுதி செய்துள்ளார்.
இதற்கிடையே இலங்கையின் பிரதான எதிர்க்கட்சித்தலைவரான சஜித் பிரேமதாசாவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக நேற்று அறிவித்தார். இதைப்போல மற்றொரு எதிர்க்கட்சியும், நாட்டின் மிகப்பெரிய இடதுசாரி கட்சியுமான ஜெ.வி.பி. தலைவர் அனுர குமார திசநாயகேவும் தேர்தல் களத்தில் குதித்துள்ளார்.
இவர்களை தவிர முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவும் நாட்டின் உயரிய பொறுப்பை வசப்படுத்த களமிறங்கலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது. எனினும் அவரது கட்சித்தலைவரான சஜித் பிரேமதாசா போட்டியில் இருந்து விலகினால் மட்டுமே அவர் போட்டியிடுவார் என கூறப்படுகிறது.
இவ்வாறு இலங்கை அதிபர் தேர்தலில் பல தலைவர்கள் களமிறங்கி இருப்பதால் பலத்த போட்டி ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.
- இலங்கை அணி முதல் இன்னிங்சில் 222 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
- பாகிஸ்தான் சார்பில் ஷஹீன் அப்ரிடி 4 விக்கெட் வீழ்த்தினார்.
கெல்லே:
பாகிஸ்தான் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை சென்றுள்ளது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஒஷாடா பெர்னாண்டோ, கேப்டன் கருணரத்னே களமிறங்கினர். கருணரத்னே ஒரு ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து இறங்கிய குசால் மெண்டிஸ் 21 ரன்னில் நடையைக் கட்டினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பெர்னாண்டோ 35 ரன்னில் ஆட்டமிழந்தார். ஏஞ்சலோ மேத்யூஸ் டக் அவுட்டானார்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் சண்டிமால் பொறுப்புடன் விளையாடி அரை சதமடித்தார். 76 ரன்னில் அவர் வெளியேறினார். கடைசி கட்டத்தில் தீக்ஷனா 38 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், இலங்கை அணி முதல் இன்னிங்சில் 222 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
பாகிஸ்தான் சார்பில் ஷஹீன் அப்ரிடி 4 விக்கெட்டும், ஹசன் அலி, யாசீர் ஷா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சை விளையாடியது. முதல் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்புக்கு 24 ரன்கள் எடுத்துள்ளது.
- இலங்கை அதிபர் தேர்தலுக்கான நடைமுறைகள் தொடங்கியது.
- ரணில் விக்ரமசிங்கேவுக்கு, ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா ஆதரவு.
கொழும்பு:
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்கள் நடத்திய தொடர் போராட்டம் காரணமாக அந்நாட்டைவிட்டுச் சென்ற கோத்தபய ராஜபக்சே முறைப்படி தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்தார்.
முன்னதாக இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கேவை அவர் நியமித்தார். ரணில் இடைக்கால அதிபராக பொறுப்பேற்ற நிலையில், இலங்கையின் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகளை அந்நாட்டு பாராளுமன்றம் தொடங்கி உள்ளது. இதற்கான சிறப்பு கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த சிறப்பு அமர்வின் போது, அதிபர் தேர்தல் நடைமுறைகள் குறித்து பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தசநாயக்க அறிவித்தார். அதிபர் தேர்தலில் போட்டியிடுபவர்கள் வேட்பு மனுக்களை வரும் 19 ஆம் தேதி தன்னிடம் சமர்ப்பிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை சமர்ப்பித்தால், அதிபர் தேர்லுக்கு வரும் 20 ஆம் தேதி பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் அவர் கூறினார். 225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்க பாராளுமன்றத்தில் ராஜபக்சேவின் ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சிக்கு அதிக உறுப்பினர்கள் உள்ளனர்.
அந்த கட்சி ரணிலுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது. இந்த தேர்தலில் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைத் தவிர மார்க்சிஸ்ட் ஜனதா விமுக்தி பெரமுன தலைவர் அனுரகுமார திசாநாயக்க மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து பிரிந்த வேட்பாளர் டலஸ் அழகப்பெரும ஆகியோர் போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர்.
இதனிடையே மாலத் தீவில் இருந்து சிங்கப்பூர் சென்றுள்ள கோத்தபய ராஜபக்சேவுக்க எந்த புகலிடமும் வழங்கவில்லை என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. தனிப்பட்ட பயணமாகவே அவர் சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டதாகவும் அந்நாட்டு அரசு விளக்கம் அளித்துள்ளது.






