என் மலர்
இத்தாலி
- வாடிகன் சிட்டியில் அமெரிக்காவை சேர்ந்த போப் லியோ பதவியேற்றார்.
- போப் லியோவை சந்திக்க நம்பர் 1 வீரரான ஜானிக் சின்னர் வாடிகன் சென்றார்.
ரோம்:
இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றுக்கு நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர் முன்னேறியுள்ளார். நாளை நடைபெறும் காலிறுதியில் சின்னர் உடன் மோதுகிறார்.
இந்நிலையில், வாடிகன் சிட்டியில் புதிதாகப் பதவியேற்ற அமெரிக்காவை சேர்ந்த போப் லியோவை, நம்பர் 1 வீரரான ஜானிக் சின்னர் இன்று நேரில் சந்தித்தார்.
இதுதொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ள சின்னர், இது மிகப் பெரிய கவுரவும் என பதிவிட்டுள்ளார்.
புதிய போப் லியோ டென்னிஸ் ரசிகர் என்பதும், 3 மாத தடைக்குப் பிறகு இத்தாலி ஓபன் தொடரில் சின்னர் களமிறங்கி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
- காலிறுதி சுற்றில் இத்தாலி வீராங்கனை பவுலினி வெற்றி பெற்றார்.
ரோம்:
இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி, ரஷியாவின் டயானா ஷ்னைடர் உடன் மோதினார்.
இதில் 7-6 (7-1) என முதல் செட்டை இழந்த பவுலினி, அடுத்த இரு செட்களை 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
- இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
- 4வது சுற்றில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் வெற்றி பெற்றார்.
ரோம்:
இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 4வது சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், ரஷியாவின் கரன் கச்சனாவ் உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை அல்காரஸ் 6-3 என வென்றார். 2வது செட்டை கச்சனாவ் 6-3 என கைப்பற்றினார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை அல்காரஸ் 7-5 என வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் 7-6 (7-3), 6-1 என்ற செட் கணக்கில் பிரான்ஸ் வீரர் ஆர்தர் பில்சை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
- இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
- 4வது சுற்றில் ரஷியாவின் மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
ரோம்:
இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 4வது சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், இத்தாலியின் லாரன்சோ முசெட்டி உடன் மோதினார்.
இதில் முசெட்டி 7-5, 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதனால் தரவரிசையில் 10வது இடத்தில் உள்ள டேனில் மெத்வதேவ் தொடரில் இருந்து வெளியேறினார்.
- இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி ரோமில் நடந்து வருகிறது.
- 2-ம் சுற்று ஆட்டம் ஒன்றில் இத்தாலியின் சினெர்-அர்ஜென்டினாவின் மரியானோ நவோன் மோதினர்.
களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2-ம் சுற்று ஆட்டம் ஒன்றில் இத்தாலியின் சினெர்-அர்ஜென்டினாவின் மரியானோ நவோன் ஆகியோர் மோதினர்.
இதில் நம்பர் ஒன் வீரரான சினெர் 6-3, 6-4 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். மற்ற ஆட்டங்களில் முனார் (ஸ்பெயின்), அலெக்ஸ் (ஆஸ்திரேலியா) ஆகியோர் வெற்றி பெற்றனர்.
- இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
- 2வது சுற்றில் கஜகஸ்தான் வீராங்கனை ரிபாகினா ஒசாகா வெற்றி பெற்றார்.
ரோம்:
இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, ஜெர்மனியின் எவா லிஸ் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ரிபாகினா 7-6 (7-3), 6-2 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் பெலாரசின் அரினா சபலென்கா 6-2, 6-2 என்ற செட் கணக்கில் ரஷியாவின் பொடபோவாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
- 2வது சுற்றில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் வெற்றி பெற்றார்.
ரோம்:
இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், செர்பியாவின் டுஜான் லஜோவிக் உடன் மோதினார்.
இதில் அல்காரஸ் 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் 6-4, 6-2 என்ற செட் கணக்கில் பிரிட்டனின் கேமரூன் நூரியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
- 2வது சுற்றில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா வெற்றி பெற்றார்.
ரோம்:
இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் ஜப்பானின் நவோமி ஒசாகா, ஸ்விட்சர்லாந்தின்விக்டோரிஜா உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 2-6 என இழந்த நவோமி ஒசாகா அடுத்த இரு செட்களை 7-5, 6-1 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் போலந்தின் இகா ஸ்வியாடெக் 6-1, 6-0 என்ற செட் கணக்கில் இத்தாலியின் எலிஸ்பெட்டாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
- இதில் காயம் காரணமாக ஸ்பெயினின் பவுலா படோசா விலகினார்.
ரோம்:
இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசா நேரடியாக 2வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
இந்நிலையில், நேற்று நடந்த 2வது சுற்றில் ஸ்பெயினின் பவுலா படோசா, ஜப்பானின் நவோமி ஒசாகா உடன் மோத இருந்தார்.
அப்போது காயம் காரணமாக போட்டியில் இருந்து திடீரென விலகினார்.
பவுலா படோசா தரவரிசையில் 10-வது இடத்தில் நீடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
- முதல் சுற்றில் பிரிட்டன் வீரர் கேமரூன் நூரி வெற்றி பெற்றார்.
ரோம்:
இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பிரிட்டனின் கேமரூன் நூரி, ஆஸ்திரேலியாவின் கிறிஸ்டோபர் கானல் உடன் மோதினார்.
இதில் நூரி 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
இன்று நடைபெறும் 2வது சுற்றில் கேமரூன் நூரி, ரஷியாவின் டேனில் மெத்வதேவ் உடன் மோதுகிறார்.
- இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
- முதல் சுற்றில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா வெற்றி பெற்றார்.
இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஜப்பானின் நவோமி ஒசாகா, இத்தாலியின் சாரா எர்ரானி உடன் மோதினார்.
இதில் நவோமி ஒசாகா 6-2, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் 2வது சுற்றில் நவோமி ஒசாகா, ஸ்பெயினின் பவுலா படோசா உடன் மோதுகிறார்.
- இத்தாலியின் ஜானிக் சின்னர் ஊக்கமருந்து சோதனையில் சிக்கினார்.
- மூன்று மாத தடையை ஜானிக் சின்னர் ஏற்றுக் கொண்டார்.
ரோம்:
இத்தாலி டென்னிஸ் வீரரான ஜானிக் சின்னர் (23), ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் தொடர்ந்து 2-வது முறையாக கோப்பை வென்றார்.
நம்பர் 1 வீரரான இவரிடம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊக்கமருந்து சோதனை நடந்தது. இதில் தடை செய்யப்பட்ட மருந்து உடலில் கலந்திருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக சின்னரின் விளக்கத்தை சர்வதேச டென்னிஸ் ஏஜென்சி ஏற்றுக்கொண்டது.
சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு மையம் (டபிள்யு.ஏ.டி.ஏ.) ஒரு ஆண்டு தடை விதிக்க கோரி சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் முறையிட்டது. அடுத்து நடந்த சமரச முயற்சியில், சின்னர் 3 மாத தடையை ஏற்றுக்கொண்டார். ஜோகோவிச், செரினா வில்லியம்ஸ் உள்ளிட்ட டென்னிஸ் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், ரோமில் தொடங்கும் டென்னிஸ் தொடரில் ஜானிக் சின்னர் மீண்டும் களமிறங்குகிறார். முதல் சுற்றில் இவருக்கு 'பை' வழங்கப்பட்டது. நேரடியாக இரண்டாவது சுற்றில் பங்கேற்க உள்ளார். இதற்கான பயிற்சியை சின்னர் தொடங்கினார்.






