என் மலர்
ஹாங்காங்
- ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஹாங்காங்கில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் சாத்விக் சிராக் ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது.
ஹாங்காங்:
ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஹாங்காங்கில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, மலேசியாவின் யாப் ராய் கிங்-ஜுனைத் ஆரிப் ஜோடி உடன் மோதியது.
இதில் சாத்விக் சிராக் ஜோடி முதல் செட்டை 21-14 என கைப்பற்றியது. 2வது செட்டை தாய்லாந்து ஜோடி 22-20 என வென்றது. இதில் சுதாரித்துக் கொண்டு அதிரடியாக ஆடிய சாத்விக்-சிராக் ஜோடி 3வது செட்டை 21-16 என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
இன்று நடைபெறும் அரையிறுதியில் சாத்விக்-சிராக் ஜோடி தைவானின் லின் பிங் வெய்-சென் செங் குவான் ஜோடியை சந்திக்கிறது.
- ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஹாங்காங்கில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் லக்ஷயா சென் காலிறுதி சுற்றில் வெற்றி பெற்றார்.
ஹாங்காங்:
ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஹாங்காங்கில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், சக வீரரான ஆயுஷ் ஷெட்டி உடன் மோதினார்.
இதில் லக்ஷயா சென் முதல் செட்டை 21-16 என கைப்பற்றினார். இதற்கு பதிலடியாக ஆயுஷ் ஷெட்டி 2வது செட்டை21-17 என வென்றார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் அதிரடியாக ஆடிய லக்ஷயா சென் 21-13 என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
- ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஹாங்காங்கில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் சாத்விக் சிராக் ஜோடி காலிறுதிக்கு முன்னேறியது.
ஹாங்காங்:
ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஹாங்காங்கில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, தாய்லாந்தின் பக்காபொன் தீரரசாகுல்-சுக்புன் ஜோடி
உடன் மோதியது.
இதில் தாய்லாந்து ஜோடி முதல் செட்டை 21-18 என கைப்பற்றினார். இதில் சுதாரித்துக் கொண்டு அதிரடியாக ஆடிய சாத்விக்-சிராக் ஜோடி அடுத்த இரு செட்களை 21-15, 21-11 என வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
இன்று நடைபெறும் காலிறுதியில் சாத்விக்-சிராக் ஜோடி மலேசிய ஜோடியை சந்திக்கிறது.
- ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஹாங்காங்கில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் லக்ஷயா சென் 2வது சுற்றில் வெற்றி பெற்றார்.
ஹாங்காங்:
ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஹாங்காங்கில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், சக வீரரான எச்.எஸ்.பிரனாய் உடன் மோதினார்.
இதில் பிரனாய் முதல் செட்டை 21-15 என கைப்பற்றினார். இதில் சுதாரித்துக் கொண்டு அதிரடியாக ஆடிய லக்ஷயா சென் அடுத்த இரு செட்களை 21-18, 21-10 என வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி 21-19, 12-21, 21-14 என்ற செட் கணக்கில் ஜப்பான் வீரரை வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் காலிறுதியில் லக்ஷயா சென், ஆயுஷ் ஷெட்டி மோதுகின்றனர்.
- ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஹாங்காங்கில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
ஹாங்காங்:
ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஹாங்காங்கில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, தைவானின் சூ லி-யாங் உடன் மோதினார்.
இதில் தைவான் வீரர் முதல் செட்டை 21-15 என கைப்பற்றினார். இதில் சுதாரித்துக் கொண்டு அதிரடியாக ஆடிய ஆயுஷ் ஷெட்டி அடுத்த இரு செட்களை 21-19, 21-13 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ் 21-16, 21-11 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஹாங்காங்கில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் பி.வி.சிந்து முதல் சுற்றில் தோல்வி அடைந்தார்.
ஹாங்காங்:
ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஹாங்காங்கில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, டானிஷ் வீராங்கனை கிறிஸ்டோபர் சென் உடன் மோதினார்.
இதில் பி.வி.சிந்து முதல் செட்டை 21-15 என கைப்பற்றினார். இதில் சுதாரித்துக் கொண்டு அதிரடியாக ஆடிய கிறிஸ்டோபர் சென் அடுத்த இரு செட்களை 21-16, 21-19 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
இதன்மூலம் இந்தியாவின் பி.வி.சிந்து முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.
- ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஹாங்காங்கில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் லக்ஷயா சென் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
ஹாங்காங்:
ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஹாங்காங்கில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், தைவானின் வாங் உடன் மோதினார்.
முதல் செட்டை லக்ஷயா சென்னும், 2வது செட்டை வாங்கும் கைப்பற்றினர். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை 21-15 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், சீனாவின் லூ குகான்சு உடன் மோதினார். இதில் சிறப்பாக ஆடிய பிரனாய் 21-17, 21-14 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஹாங்காங்கில் நடந்து வருகிறது.
- கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி ஏமாற்றம் அளித்தது.
ஹாங்காங்:
ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஹாங்காங்கில் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் இன்று நடந்த கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சுமித் ரெட்டி, சிக்கி ரெட்டி ஜோடி- மலேசியா ஜோடியுடன்மோதியது.
இதில் இந்திய ஜோடி 11-21, 20-22 என்ற கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.
இதேபோல், பெண்கள் இரட்டையர் பிரிவிலும் இந்தியாவின் கோபிசந்த்-ஜாலி ஜோடி தோல்வி அடைந்தது.
- ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஹாங்காங்கில் நடந்து வருகிறது.
- கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி வெற்றி பெற்றது.
ஹாங்காங்:
ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஹாங்காங்கில் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் நேற்று நடந்த கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சுமித் ரெட்டி, சிக்கி ரெட்டி ஜோடி- சக நாட்டு கிருஷ்ணபிரியா கூடாரவல்லி, தருண் கோனா ஜோடியை 21-9, 21-10 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஆகர்ஷி காஷ்யப், ஜப்பான் வீராங்கனையிடமும், தன்யா ஹேமந்த் இந்தோனேசியா வீராங்கனையிடமும் தோல்வி அடைந்தனர்.
- இது உலகின் 2 ஆவது டோரிமான் ட்ரோன் ஷோ ஆகும்.
- இது தங்களது குழந்தை பருவத்தை நினைவுபடுத்தியதாக்கக் கூறி மெய்சிலிர்த்தனர்.
சீனாவில் உள்ள ஹாங்காங்கின் சாலிஸ்பரி சாலையில் இரவு நேரத்தில் 1000 ட்ரோன்களை பயன்படுத்தி 'டோரிமான்' கதாபாத்திரங்கள் வானில் காட்சிப்படுத்தப்பட்டன.
சுமார் 15 நிமிடங்கள் வரை நிகழ்த்தப்பட்ட இந்த ட்ரோன் ஷோவை காண ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் குவிந்தனர்.
இதை கண்டுகளித்த மக்கள் இது தங்களது குழந்தை பருவத்தை நினைவுபடுத்தியதாக கூறி மெய்சிலிர்த்தனர். இது உலகின் 2 ஆவது டோரிமான் ட்ரோன் ஷோ ஆகும்.
கடந்த மே மாதம் ஹாங்காங்கில் முதலாவது டோரிமான் ட்ரான் ஷோ நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
- விலைவாசி உயர்வால் தம்பதியினர் குழந்தைகள் பெற்று கொள்வதை தவிர்க்கின்றனர்
- எவர்கிராண்டே நிறுவனத்திற்கு $300 பில்லியன் அளவிற்கு கடன் உள்ளது
சீனாவை சேர்ந்த மிக பெரிய கட்டுமான நிறுவனம், எவர்கிராண்டே (Evergrande).
எவர்கிராண்டே, சீனாவில் மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் அபார்ட்மென்ட் மற்றும் வணிக வளாகங்களை பெருமளவில் கட்டி விற்பனை செய்து வந்தது.
கடந்த சில வருடங்களாக சீனாவில் விலைவாசி அதிகரிப்பால் பொதுமக்கள் அவசிய தேவைகளுக்கான செலவுக்கு போதிய வருமானம் இல்லாமல் தவிப்பதாகவும், இளைஞர்கள் திருமணம் செய்து கொள்வதை தள்ளி போடுவதுடன், தம்பதியினர் குழந்தைகளை பெற்று கொள்ள தயக்கம் காட்டுவதாகவும் செய்திகள் வெளியாகின.
பொருளாதார வீழ்ச்சியின் தொடர்ச்சியாக சீனாவில் வீடுகள் விற்பனை பெருமளவு குறைந்து விட்டது. இதன் தாக்கம் எவர்கிராண்டே நிறுவன வருவாயில் எதிரொலித்தது.
கடந்த 2021ல் எவர்கிராண்டே வெளிநாட்டு கடன்களை திரும்ப செலுத்த இயலாத நிலைக்கு தள்ளப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
எவர்கிராண்டே நிறுவனத்திற்கு $240 பில்லியன் மதிப்பிற்கு சொத்துக்களும், $300 பில்லியன் மதிப்பிற்கு கடனும் உள்ளது.
இந்நிலையில், 2022ல், அந்நிறுவனத்தில் பெருமளவு பணம் முதலீடு செய்திருந்த டாப் ஷைன் குளோபல் எனும் நிறுவனத்தின் மனுவை விசாரித்த ஹாங்காங் நாட்டின் நீதிமன்றம், எவர்கிராண்டே நிறுவனத்தை மூடப்பட்டதாக அறிவித்து அதன் சொத்துக்களை முடக்கி, கடனை ஈடு கட்ட நடவடிக்கை எடுக்குமாறு தீர்ப்பளித்துள்ளது.
இதை தொடர்ந்து ஹாங்காங் பங்கு சந்தையில் எவர்கிராண்டே வர்த்தகம் செய்வது நிறுத்தப்பட்டது.
கடன் வழங்கியவர்களுக்கு நிவாரணத்திற்காக ஹாங்காங் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை சீன நீதிமன்றங்கள் செயல்படுத்த அனுமதிக்குமா என்பது சந்தேகம் என்றும், இத்தீர்ப்பின் தாக்கம் ஏற்கெனவே நலிவடைந்துள்ள சீன பொருளாதாரத்தில் கடுமையாக இருக்கும் என்றும் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
- ஹாங்காங் நிர்வாகத்தின் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
- கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 71.2 சதவீதம் வாக்குகள் பதிவானது.
ஹாங்காங்:
இங்கிலாந்திடம் இருந்து 1997-ல் சுதந்திரம் அடைந்த ஹாங்காங் பின்னர் சீனாவின் நிர்வாக கட்டுப்பாட்டுக்குள் வந்தது. எனினும் தற்போதுவரை ஹாங்காங் தன்னாட்சி பிராந்தியமாகவே செயல்படுகிறது. இதற்கிடையே இங்குள்ள கிரிமினல் குற்றவாளிகளை சீனா, தைவான் நாடுகளுக்கு கடத்தி விசாரிக்கும்வகையில் ஒரு சட்டத்திருத்த மசோதா 2019-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இது ஹாங்காங்கை ஆதிக்கம் செலுத்தும் முயற்சி என கூறி ஹாங்காங் முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இதனையடுத்து அந்த மசோதா கைவிடப்பட்டது. எனினும் ஹாங்காங் நிர்வாகத்தின் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இந்தநிலையில் அங்குள்ள மாவட்ட கவுன்சிலர் தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. ஆனால் ஜனநாயக ஆதரவு வேட்பாளர்கள் யாரும் இதில் வாக்களிக்கவில்லை. இதனால் வெறும் 27.5 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவானது. இது ஹாங்காங் நிர்வாகம் மீது மக்களின் அதிருப்தியை காட்டுகிறது. கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 71.2 சதவீதம் வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.






