என் மலர்
நீங்கள் தேடியது "Drone Show"
- டிரோன் ஷோவிற்காக 250 டிரோன்கள் பயன்படுத்தப்பட்டன.
- வீடியோ எடுத்து சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்தனர்.
தமிழ் சினிமா விளம்பர வரலாற்றில் புதுமையான தருணமாக, 'வித் லவ் (With Love)' திரைப்பட குழு சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் பிரம்மாண்டமான டிரோன் ஷோ ஒன்றை பொதுமக்கள் முன்னிலையில் நடத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. சுமார் 250 டிரோன்கள் ஒருங்கிணைந்து, படத்தின் டைட்டிலும், படக்குழுவின் பெயர்களும் வானில் ஒளிச்சித்திரங்களாக வரைந்த காட்சி, கடற்கரையில் கூடியிருந்த மக்களை வியப்பில் ஆழ்த்தியது. பொதுமக்கள் பெரும் உற்சாகத்துடன் கைதட்டி ரசித்ததுடன், அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்தனர்.
ஜியோன் ஃபிலிம்ஸ் (Zion Films) சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் எம்.ஆர்.பி. என்டர்டெயின்மென்ட் (MRP Entertainment) இணைந்து வழங்க, பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், `டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள, "வித் லவ்" திரைப்படம் வரும் 2026 பிப்ரவரி 6ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
பட வெளியீட்டை ஒட்டி படக்குழு பலமுனைகளில் புதுமையான விளம்பரங்களை செய்து வருகிறது. அதன் ஒருகட்டமாகவே சென்னை பெசண்ட் நகர் கடற்கரையில் பிரம்மாண்டமான டிரோன் ஷோ நடைபெற்றது. தமிழ் சினிமாவில், திரைப்பட விளம்பரத்திற்காக டிரோன் ஷோ நடத்தப்பட்ட முதல் முயற்சி என்பதால், இந்த நிகழ்வு ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல், பொதுமக்களிடையிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
வானில் மின்னும் எழுத்துகளாக 'With Love' தோன்றிய தருணம், காதலின் உணர்வையும், இளமை துள்ளலையும் ஒருசேர வெளிப்படுத்தியது. இந்த தனித்துவமான நிகழ்வில், 'வித் லவ்' படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு, ரசிகர்களுடன் அந்த தருணத்தை பகிர்ந்து கொண்டனர். சினிமா விளம்பரம் என்பதையும் தாண்டி, இது ஒரு நவீன கலை நிகழ்வாகவும் பேசப்பட்டது.
சமூக வலைதளங்களில் இந்த டிரோன் ஷோ வீடியோக்கள் வைரலாகி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது. அறிமுக இயக்குநர் மதன் இப்படத்தை இயக்கி உள்ளார். இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். K.சுரேஷ் குமார் படத்தொகுப்பு பணிகளை செய்கிறார்.
- இது உலகின் 2 ஆவது டோரிமான் ட்ரோன் ஷோ ஆகும்.
- இது தங்களது குழந்தை பருவத்தை நினைவுபடுத்தியதாக்கக் கூறி மெய்சிலிர்த்தனர்.
சீனாவில் உள்ள ஹாங்காங்கின் சாலிஸ்பரி சாலையில் இரவு நேரத்தில் 1000 ட்ரோன்களை பயன்படுத்தி 'டோரிமான்' கதாபாத்திரங்கள் வானில் காட்சிப்படுத்தப்பட்டன.
சுமார் 15 நிமிடங்கள் வரை நிகழ்த்தப்பட்ட இந்த ட்ரோன் ஷோவை காண ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் குவிந்தனர்.
இதை கண்டுகளித்த மக்கள் இது தங்களது குழந்தை பருவத்தை நினைவுபடுத்தியதாக கூறி மெய்சிலிர்த்தனர். இது உலகின் 2 ஆவது டோரிமான் ட்ரோன் ஷோ ஆகும்.
கடந்த மே மாதம் ஹாங்காங்கில் முதலாவது டோரிமான் ட்ரான் ஷோ நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.






