என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கூட்டணிக்காக ஏங்கி நிற்கும் எடப்பாடி பழனிசாமி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கு
    X

    கூட்டணிக்காக ஏங்கி நிற்கும் எடப்பாடி பழனிசாமி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கு

    • 'தனக்குக் கொள்கையெல்லாம் தெரியாது - கூட்டணிக்கும் கொள்கைகள் கிடையாது' என்று இருக்கிறார் இ.பி.எஸ்.
    • நீட் விலக்கிற்குப் பிறகுதான் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்போம் என்று முதுகெலும்போடு அறிவிப்பாரா?

    நீலகிரி மாவட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய வீடியோவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து கேள்வி எழுப்பியுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    நீலகிரி மாவட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில்,

    'தனக்குக் கொள்கையெல்லாம் தெரியாது - கூட்டணிக்கும் கொள்கைகள் கிடையாது' என்று கூட்டணிக்காக ஏங்கி நிற்கும் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்கள், "#NEET விலக்கிற்குப் பிறகுதான் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்போம்" என முதுகெலும்போடு அறிவிப்பாரா? என்று கேட்டிருக்கிறேன்.

    விரைவில் விடை கிடைக்கும்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×