என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கருணாநிதி, ஜெயலலிதா இடத்தை கமல், ரஜினியால் நிரப்ப முடியாது- முத்தரசன்
Byமாலை மலர்25 Dec 2020 8:28 AM GMT (Updated: 25 Dec 2020 8:28 AM GMT)
கருணாநிதி, ஜெயலலிதாவின் வெற்றிடத்தை ரஜினி மற்றும் கமல்ஹாசனால் நிரப்பி விடமுடியாது என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
போடி:
தேனி மாவட்டம் போடியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வென்று விடலாம் என பா.ஜ.க நினைக்கிறது. அவர்களின் கனவை முறியடிப்பதே எங்களது முதல் பணியாக இருக்கும்.
பெரியார் ஜாதி மத பேதமற்ற பொதுவுடமை சமுதாயத்தை உருவாக்க தனது வாழ்நாளை அர்ப்பணித்து செயல்பட்டார். தி.மு.க தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி அந்த கொள்கையை முன்னெடுத்து செல்கிறது. கொரோனா காலத்தில் வீட்டில் முடங்கி கிடந்த மக்களுக்கு ரூ.5000 வழங்கச்சொல்லி நாங்கள் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினோம்.
ஆனால் அப்போது வழங்காமல் வரும் தேர்தலை மனதில் வைத்து ரேசன்கார்டுதாரர்களுக்கு தலா ரூ.2500 வழங்குவது உள்நோக்கம் கொண்டதாகும். அரசியல் கட்சியிடம் சசிகலா வெளியே வந்தவுடன் சசிகலா, தினகரன், அ.தி.மு.க என மூன்றும் ஒன்றாக இணைந்தாலும் எங்கள் கூட்டணி வெற்றிபெறுவது உறுதி. ரஜினி, கமல் என யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். இவர்களை காட்டிலும் திறமையான நடிகர் சிவாஜிகணேசனால் கூட அரசியலில் வெற்றிபெற முடியவில்லை. ரஜினி நல்ல நடிகர். நான் அவரது ரசிகன். ஆனால் நடிப்பு வேறு, அரசியல் வேறு. தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் என எதுவும் கிடையாது. கருணாநிதி, ஜெயலலிதாவின் வெற்றிடத்தை ரஜினி மற்றும் கமல்ஹாசனால் நிரப்பி விடமுடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
தேனி மாவட்டம் போடியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வென்று விடலாம் என பா.ஜ.க நினைக்கிறது. அவர்களின் கனவை முறியடிப்பதே எங்களது முதல் பணியாக இருக்கும்.
பெரியார் ஜாதி மத பேதமற்ற பொதுவுடமை சமுதாயத்தை உருவாக்க தனது வாழ்நாளை அர்ப்பணித்து செயல்பட்டார். தி.மு.க தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி அந்த கொள்கையை முன்னெடுத்து செல்கிறது. கொரோனா காலத்தில் வீட்டில் முடங்கி கிடந்த மக்களுக்கு ரூ.5000 வழங்கச்சொல்லி நாங்கள் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினோம்.
ஆனால் அப்போது வழங்காமல் வரும் தேர்தலை மனதில் வைத்து ரேசன்கார்டுதாரர்களுக்கு தலா ரூ.2500 வழங்குவது உள்நோக்கம் கொண்டதாகும். அரசியல் கட்சியிடம் சசிகலா வெளியே வந்தவுடன் சசிகலா, தினகரன், அ.தி.மு.க என மூன்றும் ஒன்றாக இணைந்தாலும் எங்கள் கூட்டணி வெற்றிபெறுவது உறுதி. ரஜினி, கமல் என யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். இவர்களை காட்டிலும் திறமையான நடிகர் சிவாஜிகணேசனால் கூட அரசியலில் வெற்றிபெற முடியவில்லை. ரஜினி நல்ல நடிகர். நான் அவரது ரசிகன். ஆனால் நடிப்பு வேறு, அரசியல் வேறு. தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் என எதுவும் கிடையாது. கருணாநிதி, ஜெயலலிதாவின் வெற்றிடத்தை ரஜினி மற்றும் கமல்ஹாசனால் நிரப்பி விடமுடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X