என் மலர்
டென்னிஸ்
- கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது.
- இதில் ரஷியாவின் ரூப்லெவ் அரையிறுதி சுற்றில் வெற்றி பெற்றார்.
தோஹா:
கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரின் தோஹாவில் உள்ள கலீஃபாவில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிச் சுற்றில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ், கனடாவின் பெலிக்ஸ் ஆகர் உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 7-5 என ரூப்லெவ் கைப்பற்றினார். இரண்டாவது செட்டை கனடா வீரர் 6-4 என வென்றார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை ரூப்லெவ் 7-6 (7-5) என வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் ரூப்லெவ், பிரிட்டனின் ஜாக் டிராபருடன் மோதுகிறார்.
- கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது.
- ஆண்கள் இரட்டையரில் யூகி பாம்ப்ரி ஜோடி அரையிறுதியில் தோல்வி அடைந்தது.
தோஹா:
கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரின் தோஹாவில் உள்ள கலீஃபாவில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதி சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-குரோசியாவின் இவான் டோடிக் ஜோடி, பிரிட்டனின் லாய்டு-ஜூலியன் கேஷ் ஜோடியுடன் மோதியது.
இதில் பிரிட்டன் ஜோடி சிறப்பாக ஆடி 7-6 (7-3), 6-3 என வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதன்மூலம் யூகி பாம்ப்ரி ஜோடி தொடரில் இருந்து வெளியேறியது.
ஏற்கனவே ரோகன் போபண்ணா ஜோடி 2வது சுற்றில் தொடரில் இருந்து வெளியேறியது நினைவிருக்கலாம்.
- ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- இதில் கஜகஸ்தான் வீராங்கனை ரிபாகினா அரையிறுதியில் தோல்வி அடைந்தார்.
துபாய்:
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் நம்பர் 6 வீராங்கனையும், கஜகஸ்தானைச் சேர்ந்தவருமான எலினா ரிபாகினா, ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரிவா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ஆண்ட்ரிவா 6-4, 4-6, 6-3 என வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் ரிபாகினா தொடரில் இருந்து வெளியேறினார்.
இறுதிப்போட்டியில் ஆண்ட்ரிவா, டென்மார்க் வீராங்கனை கிளாரா டாசனுடன் மோதுகிறார்.
- கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது.
- இதில் ரஷியாவின் ரூப்லெவ் காலிறுதி சுற்றில் வெற்றி பெற்றார்.
தோஹா:
கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரின் தோஹாவில் உள்ள கலீஃபாவில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ், அமெரிக்காவின் அலெக்ஸ் டி மினார் உடன் மோதினார்.
இதில் தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய ரூப்லெவ் 6-1, 3-6, 7-6 (10-8) என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் பிரிட்டனின் ஜாக் டிராபர் 4-6, 6-4, 6-3 என இத்தாலி வீரர் மேட்டியோ பிரேட்டேனியை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
- காலிறுதி ஆட்டம் ஒன்றில் கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), ஜிரி லெஹெக்கா (செக்) மோதினர்.
- முதல் 2 செட்டுகளை ஆளுக்கு ஒன்றாக கைப்பற்றினர்.
தோகா:
கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோகாவில் நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), ஜிரி லெஹெக்கா (செக்) உடன் மோதினார்.
இதில் முதல் 2 செட்டுகளை ஆளுக்கு ஒன்றாக கைப்பற்றிய நிலையில், 3-வது செட்டை ஜிரி லெஹெக்கா கைப்பற்றி அல்காரசுக்கு அதிர்ச்சி அளித்தார். இந்த ஆட்டத்தில் அல்காரஸ் 3-6, 6-3 மற்றும் 4-6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.
ஜிரி லெஹெக்கா அரையிறுதியில் ஜாக் டிராப்பர் உடன் மோத உள்ளார்.
- கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது.
- இதில் ஆண்கள் இரட்டையரில் யூகி பாம்ப்ரி ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது.
தோஹா:
கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரின் தோஹாவில் உள்ள கலீஃபாவில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-குரோசியாவின் இவான் டோடிக் ஜோடி, எல்-சால்வடாரின் மார்சலோ-குரோசியாவின் மேட் பாவிக் ஜோடியுடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய யூகி பாம்ப்ரி ஜோடி 2-6, 6-3, 10-8 என வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.
- ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- இதில் கஜகஸ்தான் வீராங்கனை ரிபாகினா காலிறுதியில் வெற்றி பெற்றார்.
துபாய்:
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் நம்பர் 6 வீராங்கனையும், கஜகஸ்தானைச் சேர்ந்தவருமான எலினா ரிபாகினா, அமெரிக்காவின் சோபியா கெனின் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ரிபாகினா 6-2, 7-6 (7-2) என வென்று அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் செக் நாட்டு வீராங்கனையான முச்சோவா 6-2, 7-5 என்ற செட் கணக்கில் ரோமேனியாவின் சொரானா சிர்ஸ்டியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
- கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது.
- இதில் ரஷிய வீரர் மெத்வதேவ் காலிறுதி சுற்றில் திடீரென விலகினார்.
தோஹா:
கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரின் தோஹாவில் உள்ள கலீஃபாவில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், கனடாவின் பெலிக்ஸ் ஆகர் அலியாசிம் உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 6-3 என பெலிக்ஸ் கைப்பற்றினார். அப்போது மெத்வதேவ் திடீரென போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால் பெலிக்ஸ் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
- கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது.
- இதில் ஆண்கள் இரட்டையரில் போபண்ணா ஜோடி காலிறுதிக்கு முன்னேறியது.
தோஹா:
கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரின் தோஹாவில் உள்ள கலீஃபாவில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-போர்ச்சுகலின் நுனோ போர்கஸ் ஜோடி, இத்தாலியின் அண்ட்ரியா வவசோரி-சைமன் போலேலி ஜோடியுடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய போபண்ணா ஜோடி 7-6 (7-2), 7-6 (7-4) என வென்று காலிறுதிக்கு முன்னேறியது.
- ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- இதில் நம்பர் 1 வீராங்கனை சபலென்கா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
துபாய்:
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் நம்பர் 1 வீராங்கனையும், பெலாரஸ்சை சேர்ந்தவருமான அரினா சபலென்கா, டென்மார்க்கின் கிளாரா டாசன் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய கிளாரா டாசன் 6-3, 6-2 என எளிதில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இதன்மூலம் நம்பர் 1 வீராங்கனையான அரினா சபலென்கா துபாய் ஓபன் தொடரில் இருந்து வெளியேறினார்.
- கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது.
- இதில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் 2வது சுற்றில் வெற்றி பெற்றார்.
தோஹா:
கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரின் தோஹாவில் உள்ள கலீஃபாவில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், இத்தாலி வீரர் லூகா நார்டி உடன் மோதினார்.
இதில் தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய அல்காரஸ் 6-1, 4-6, 6-3 என வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் செக் குடியரசு வீரர் ஜிரி லெஹெகா 6-4, 6-2 என ஹங்கேரி வீரர் பேபியன் மரோஜானை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் காலிறுதியில் அல்காரசுடன், ஜிரி லெஹெகா மோதுகிறார்.
- கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது.
- இதில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், பெல்ஜிய வீரரான ஜிஸோ பெர்க்ஸ் உடன் மோதினார்.
தோஹா:
கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரின் தோஹாவில் உள்ள கலீஃபாவில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2 ஆவது சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், பெல்ஜிய வீரரான ஜிஸோ பெர்க்ஸ் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய மெத்வதேவ் 6-2, 6-1 என்ற நேர் செட்கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் ரஷியாவின் ரூப்லெவ் 6-3, 6-4 என போர்ச்சுக்கல் வீரர் நுனோ போர்ஜசை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.






