search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐபிஎல் ஏலம் 2-வது நாள்: முன்னணி பேட்ஸ்மேன்களை சீண்டாத அணி உரிமையாளர்கள்
    X

    ஐபிஎல் ஏலம் 2-வது நாள்: முன்னணி பேட்ஸ்மேன்களை சீண்டாத அணி உரிமையாளர்கள்

    ஐபிஎல் ஏலம் இன்றைய 2-வது நாளில் பேட்ஸ்மேன்களை எந்தவொரு அணி உரிமையாளர்களும் சீண்டவில்லை. #iplauction #iplauction2018
    ஐபிஎல் வீரர்கள் ஏலம் இன்று 2-வது நாளாக நடைபெற்று வருகிறது. நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் ஆல்ரவுண்டர்கள், பேட்ஸ்மேன்கள் மற்றும் முன்னணி வீரர்களை 8 அணி உரிமையாளர்களும் ஏலம் எடுக்க போட்டியிட்டார்கள்.

    இன்று 2-வது நாள் ஏலம் தொடங்கியது. 8 அணி உரிமையாளர்களும் உள்ளூர் வீரர்களை மட்டும் எடுப்பதில் கவனம் செலுத்தினார்கள். மேலும், பந்து வீச்சாளர்கள் மட்டுமே குறி வைத்தனர். இதனால் வெளிநாட்டு முன்னணி பேட்ஸ்மேன்களை சீண்டவில்லை.



    ஆஸ்திரேலியாவின் அதிரடி பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட், தென்ஆப்பிரிக்காவின் கொலின் இன்கிராம், வெஸ்ட் இண்டீஸ் லென்டில் சிம்மன்ஸ், ஆஸ்திரேலியாவின் ஷேன் மார்ஷ், இங்கிலாந்து கேப்டன் மோர்கன், இங்கிலாந்து அதிரடி பேட்ஸ்மேன் அலெக்ஸ் ஹேல்ஸ், கோரி ஆண்டர்சன் ஆகியோரை எந்த அணியும் எடுக்கவில்லை. #MI #CSK #DD #KKR #RR #RCB #KXIP #SRH
    Next Story
    ×