என் மலர்tooltip icon

    விளையாட்டு

    கேப்டன் என்ற காரணத்தால் நான் எங்கும் ஓடி ஒளிந்துவிட முடியாது என மும்பை தோல்விக்குப்பின் எம்எஸ் டோனி தெரிவித்துள்ளார்.
    அதிர்ச்சியிலும் சோகத்திலும் உறைந்திருக்கிறார்கள் சிஎஸ்கே ரசிகர்கள். பிளே ஆஃப் செல்லும் கடைசி வாய்ப்பாக இருந்த நேற்றைய போட்டியில் பேட்டிங், பவுலிங்கில் சொதப்பி 10 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையிடம் சரண்டர் ஆனது.

    இதனால் சென்னையின் பிளே-ஆஃப்ஸ் வாய்ப்பு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தின் தோல்விக்குப் பிறகு தோனி கூறுகையில், ‘‘இந்த தோல்வி வலிக்கிறது. எங்கே சறுக்குகிறோம் என்பதை ஆராய வேண்டும். இந்த சீசன் எங்களுக்கான ஆண்டாக அமையவில்லை. ஒன்றிரண்டு போட்டிகளில் மட்டும் இதுவரை பேட்டிங், பவுலிங் இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டோம்.

    ராயுடுவுக்கு காயம் ஏற்பட்ட பின்னர் மற்ற பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்படவில்லை. பேட்டிங் ஆர்டர் மீது நாங்கள் அழுத்தத்தை அதிகரித்துக்கொண்டே இருந்தோம். எப்போதெல்லாம் எங்களுக்கு நல்ல தொடக்கம் அமையவில்லையோ அப்போதெல்லாம் மிடில் ஆர்டர் மீது அழுத்தம் கூடியது.

    கிரிக்கெட்டில் உங்களுக்கு கடினமான கட்டம் வரும்போது உங்களுக்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் அமைய வேண்டும். ஆனால் இந்த தொடரில் அது எங்களுக்கு அமையவில்லை. பனி இல்லாத சமயத்தில் நாங்கள் இரண்டாவதாக பேட்டிங் செய்தபோது நாங்கள் டாஸ் வென்றிருக்கவில்லை. ஆனால் நாங்கள் பேட்டிங் செய்த போட்டிகளில் எல்லாம் திடீரென பிற்பாதியில் பனி இருந்தது.

    எப்போதெல்லாம் நீங்கள் சரியாக செயல்படாமல் இருக்கிறீர்களோ அப்போதெல்லாம் அதற்கு காரணமாக 100 விஷயங்களை சொல்ல முடியும். நம்மால் இயலக்கூடிய முழு பலத்தை திரட்டி விளையாடுகிறோமா என்பதை நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும், மூன்று அல்லது நான்கு பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடவில்லை எனில் கஷ்டம்தான்.

    எப்பொழுதும் முடிவு நமக்கு சாதகமாக அமையும் என்பது கிடையாது. இது கிரிக்கெட்டின் ஒரு அங்கம்தான். இருப்பதிலேயே கடினமான ஒன்று வருத்தத்தில் இருக்கும் சமயத்தில் சிரித்துக்கொண்டே கஷ்டமான சூழலை எதிர்கொள்வது. அதனை அணி வீரர்கள் செய்தனர்.

    நிர்வாகம் பெரிதாக பதட்டம் ஆகவில்லை. அடுத்த சீசனை பற்றி யோசிக்க வேண்டும். விளையாடும் மைதானம் எப்படி, எந்த மாதிரி வீரர்கள் தேவை என ஆராய வேண்டும். அடுத்த மூன்று போட்டிகள் அதற்கு பயன்படும். அடுத்த சீசனுக்கு இளையவர்களை தயார் செய்யலாம். அடுத்ததாக விளையாட உள்ள மூன்று போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காமல் உள்ள வீரர்களுக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கொடுக்கப்படும்.

    (நீங்கள் கட்டாயம் அடுத்த 3 போட்டியில் ஆடுவீர்கள் தானே, ஆடவேண்டும் என கேட்டதற்கு) கேப்டன் என்ற காரணத்தால் நான் எங்கும் ஓடி ஒளிந்துவிட முடியாது. எனவே அடுத்த மூன்று போட்டிகளிலும் விளையாடுவேன். அடுத்துவரும் மூன்று போட்டிகளில் நாங்கள் சிறந்ததை கொடுப்போம்’’ என பேசிமுடித்தார்
    இந்த முறையும் பேட்டிங், பவுலிங் என ஒட்டுமொத்தமாக சொதப்ப, பிளே-ஆப்ஸ் சுற்றில் இருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டது சிஎஸ்கே.
    ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் பரம எதிரியான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டது.

    சிறிய கிரவுண்ட் என்பதால் அதிக ரன்கள் குவிக்க முடியும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். போட்டி தொடங்குவதற்கு சற்று முன்புதான் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா உடல்நிலை சரியில்லாமல்  விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டது. அப்பாடா!!! ஒரு அதிரடி பேட்ஸ்மேன் இல்லை என சிஎஸ்கே வீரர்களுடன் ரசிகர்களும் பெருமூச்சு விட்டனர்.

    மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியை ஏற்றார் பொல்லார்ட். டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தார் பொல்லார்ட். இந்தத் தொடர் முழுவதுமே பீல்டிங் தேர்வு செய்த அணிக்கு மிகப்பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை. முதலில் பேட்டிங் செய்து 170 ரன்களுக்கு மேல் அடித்தால் ஜேஸிங் செய்வது கடினம் என்பது தெரிந்தும் சென்னை அணியை பேட்டிங் செய்ய அழைத்ததால் ரசிகர்கள் மனதிற்குள் பொல்லார்ட் தவறு செய்து விட்டார் என நினைத்தனர்.

    வாழ்வா? சாவா? போட்டியில் சென்னைக்கு அணிக்கு சற்று வழியை திறந்து விட்டார் என மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் ஒட்டுமொத்தமாக குழி தோண்டி புதைக்கப் போகிறார் என்பதை சென்னை ரசிகர்கள் அறிந்திருக்கமாட்டார்கள்.

    சென்னை அணி 170-க்கு மேல் அடித்துவிடும் என நினைத்து டி.வி.க்கு முன் சிஎஸ்கே ரசிகர்கள் விசில் போட உட்கார்ந்தனர்.

    ஏற்கனவே அனுபவ வீரர்கள் சொதப்பியதால் இந்த போட்டியில் இருந்து இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என டோனி கூறியிருந்தார். அதன்படி ருத்துராஜ் கெய்க்வாட், என். ஜெகதீசன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கினார். இதுவரை விளையாடாமல் இருந்த பராசக்தி எக்ஸ்பிரஸ் இம்ரான் தாஹிரும் அணியில் இடம் பிடித்தார்.

    டு பிளிஸ்சிஸ் உடன் சாம் கர்ரன் களம் இறங்கி பவர் பிளேயை உற்சாகப்படுத்துவார் என நினைக்கையில் டோனி கெய்க்வாட்டை களமிறக்கினார். அப்போதே சிஎஸ்கே ரசிகர்கள் ஜர்க் ஆகினர். ஏற்கனவே கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த தவறிய ருத்துராஜ் கெய்க்வாட், தொடக்க வீரரகாக களம் இறக்கப்பட்டதும் கூடுதல் நெருக்கடியை சந்தித்தார்.

    முதல் ஓவரை டிரென்ட் போல்ட் வீசினார். இவரின் ஸ்விங் பந்தை எதிர்கொள்ள திணறிய இளம் வீரரான ருத்துராஜ் கெய்க்வாட் ஐந்தாவது பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அப்போது சாம் கர்ரனை களம் இறக்கியிருக்க  வேண்டியதுதானே என ரசிகர்கள் முணுமுணுத்தனர். தொடர் தோல்வியால் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும் டோனியின் இந்த முதல் தவறு முற்றிலும் தவறாக அமைந்தது.

    ராயுடுவை வீழ்த்திய சந்தோஷத்தில் டிரென்ட் போல்ட்

    அடுத்து அம்பதி ராயுடு பும்ரா வீசிய 2-வது ஓவரின் 4-வது பந்தில் 2 ரன்கள் எடுத்த நிலையில் நடையை கட்டினார். ஒரு போட்டியில் மட்டுமே வாய்ப்பு கிடைத்து அதன்பின் நீக்கப்பட்ட ஜெகதீசன், இன்று நான் யார்? என்பதை நிரூபிக்க களம் இறங்கினார். ஆனால் பும்ராவின் பந்தில் சிக்கி முதல் பந்திலேயே நடையை கட்டினார்.

    3-வது ஓவரை டிரென்ட் போல்ட் வீசினார். இந்த ஓவரில் ஐந்தாவது பந்தில் சிஎஸ்கே-யின் நங்கூரம் என அழைப்படும் டு பிளிஸ்சிஸ் 1 ரன்னில் வெளியேறினார். கண்ணை மூடி திறப்பதற்குள் 2.5 ஓவரில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் 4 பேர் 3 ரன்கள் எடுப்பதற்குள் பெவிலியன் திரும்பியதால், 2.5 ஓவரிலேயே சென்னை அணியின் தோல்வி உறுதி செய்யப்பட்டது.

    ஒருவேளை சாம் கர்ரன் தொடக்க வீரராக களம் இறக்கப்பட்டிருந்தால் ஒருமுனையில் நிலைத்து நின்று போட்டியை மாற்றியிருக்கலாம்.

    ஜடேஜா 7 ரன்னிலும், வழக்கம்போல எம்எஸ் தோனி 16 ரன்னிலும் நடையை கட்ட, 30 ரன்னுக்குள் 6 விக்கெட்டை இழந்தது சிஎஸ்கே. சாம் கரன் கடைசி வரை போராடி 52 ரன்கள் அடிக்க பந்து வீச்சாளர்கள் நம்பிக்கையுடன் பந்து வீசும் அளவிற்கு 114 ரன்கள் அடித்தது.

    சிஎஸ்கே அணியில் தீபக் சாஹர், இம்ரான் தாஹிர், ஷர்துல் தாகூர், சாம் கர்ரன் என பந்து வீச்சாளர்கள் இருந்ததால் ரசிகர்கள் தங்களது நம்பிக்கையை விடாமல் இருந்தனர்.

    ஆனால் தொடக்க வீரர்களாக சென்னையின் பந்துவீச்சை நாலாபுறமும் விரட்டி அடித்து துவம்சம் செய்து சிஎஸ்கே ரசிகர்களின் நம்பிக்கை குழி தோண்டி புதைத்தனர்.

    12.2 ஓவரிலேயே இலக்கை எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபாரமாக வீழ்த்தியது இஷான் 37 பந்துகளில் 68 ரன்கள் 37 பந்துகளில் 66 ரன்களும், டி காக் 46 ரன்களும் அடித்தனர்.

    தீபக் சாஹர், ஹசில்வுட் பந்து வீச்சு எடுபடாத போதிலும், நியூ பால் உள்பட போட்டி முழுவதும் சாம் கர்ரனை பந்து வீச அழைக்காதது ஏன்? என்பது டோனிக்குதான் வெளிச்சம்.

    இந்த முறையும் பேட்டிங், பவுலிங் என ஒட்டுமொத்தமாக சொதப்ப, பிளே-ஆப்ஸ் சுற்றில் இருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டது சிஎஸ்கே.

    ஒரு சதவீதம் கூட ஈடுகொடுக்க முடியாமல் போனது சிஎஸ்கே ரசிகர்களுக்கு கடும் வருத்தத்தை கொடுத்துள்ளது.
    ஐபிஎல் கிரிக்கெட்டில் சாதனை அணியாக வலம் வந்த சென்னை சூப்பர் கிங்சின் வீழ்ச்சிக்கு சில முக்கிய காரணங்களை நிபுணர்கள் முன்வைக்கிறார்கள்.
    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பங்கேற்ற எல்லா சீசனிலும் அடுத்த சுற்றுக்குள் (பிளே-ஆப்) கால்பதித்த ஒரே அணி என்ற சென்னை சூப்பர் கிங்சின் பெருமை நேற்றோடு தகர்ந்து விட்டது. நடப்பு ஐ.பி.எல். தொடரில் சென்னை அணி இதுவரை 11 ஆட்டங்களில் ஆடி 8-ல் தோற்று இருக்கிறது. ஒரு சீசனில் சென்னை அணியின் மோசமான செயல்பாடு இது தான். இதற்கு முன்பு அதிகபட்சமாக 7 ஆட்டங்களில் (2010-ம் ஆண்டு) தோற்று இருந்தது.

    3 முறை சாம்பியன், 5 முறை 2-வது இடம் என்று ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சாதனை அணியாக வலம் வந்த சென்னை சூப்பர் கிங்சின் வீழ்ச்சிக்கு சில முக்கிய காரணங்களை நிபுணர்கள் முன்வைக்கிறார்கள்.

    * ஐ.பி.எல். தொடங்குவதற்கு முன்பாக நட்சத்திர பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா, சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் இருவரும் கொரோனா அச்சத்தால் விலகினர். சென்னை அணியின் பேட்டிங் முதுகெலும்பாக அறியப்படும் ரெய்னாவின் (193 ஆட்டத்தில் 5,368 ரன் குவித்தவர்) விலகல் பேரிடியாக விழுந்தது. ஏனோ, அணி நிர்வாகம் அவர்களுக்கு பதிலாக மாற்று வீரரை தேர்வு செய்யவில்லை. இருக்கிற வீரர்களை வைத்து சமாளித்துக் கொள்ளலாம் என்ற ‘கணக்கு’ பொய்த்து போனது.

    * கேப்டன் டோனியின் சில முடிவுகளும் எதிர்மறை விளைவை தந்தன. ‘ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பவர்’ என்று வர்ணிக்கப்படும் டோனி தொடக்க ஆட்டங்களில் 7-வது வரிசையில் இறங்கியது சலசலப்பை ஏற்படுத்தியது. மிகவும் பின்வரிசையில் ஆடும் போது, தன்னை நிலை நிறுத்திக்கொள்ளவே சற்று நேரம் பிடிக்கும். அதற்குள் நெருக்கடி உருவாகி, ஆட்டம் தோல்வியில் முடிந்து விடும். பிறகு எதிர்ப்பு கிளம்பவே தனது பேட்டிங் வரிசையை மாற்றிக்கொண்டார்.

    * இளம் வீரர்களை ஓரங்கட்டி விட்டு தொடர்ந்து சொதப்பிய கேதர் ஜாதவுக்கு (8 ஆட்டத்தில் 62 ரன்) மீண்டும் மீண்டும் வாய்ப்பு வழங்கியது விமர்சனத்திற்கு உள்ளானது. ஜாதவ் தேவையான நேரத்தில் மட்டையை சுழட்டாமல் மந்தமாக ஆடி வெறுப்பேற்றியதுடன் சில ஆட்டங்களில் தோல்விக்கு காரணமாக ரசிகர்களால் வறுத்தெடுக்கப்பட்டார்.

    * நீண்ட இடைவெளிக்கு பிறகு (14 மாதங்களுக்கு பிறகு) களம் கண்ட டோனியின் பேட்டிங் எடுபடவில்லை. 39 வயதான அவரது ஆட்டத்திறன் வெகுவாக குறைந்து விட்டதை கண் கூடாக பார்க்க முடிந்தது. வழக்கமாக டோனி களத்தில் நின்றால் எதிரணி ‘கிலி’ அடையும். இன்றோ நிலைமை தலைகீழ். 11 ஆட்டங்களில் 180 ரன்களே எடுத்திருக்கிறார். ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. மற்ற வீரர்களின் பேட்டிங்கும் ஒருங்கிணைந்து அமையவில்லை.

    * இந்தியாவில் ஐ.பி.எல். கிரிக்கெட் நடக்கும் போது வெளியூரில் தோற்றாலும் சென்னை சேப்பாக்கம் மைதானம் தங்களது கோட்டை என்பதை எப்போதும் சென்னை அணியினர் நிரூபித்து இருக்கிறார்கள். இங்கு பெறும் வெற்றிகள் தான் சென்னை அணியின் முன்னேற்றத்துக்கு ஆணிவேராக அமையும். இந்த முறை ஐ.பி.எல். அமீரகத்துக்கு மாற்றப்பட்டதால் அங்குள்ள சீதோஷ்ண நிலைக்கு தக்கபடி மூத்த வீரர்களால் திறம்பட செயல்பட முடியவில்லை. 18 வீரர்களை பயன்படுத்தி பார்த்தும் இதுவரை அணி ‘செட்’ ஆகவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் எனும் கப்பலில் நிறைய ஓட்டைகள் உள்ளன. ஒரு ஓட்டையை அடைத்தால் இன்னொரு ஓட்டை விழுந்து விடுகிறது என்று முன்பு எப்போதும் இல்லாத வகையில் டோனியின் புலம்பலே அணி பலவீனத்துக்கு சான்று.

    * சென்னை அணி வீரர்களின் சராசரி வயது 30.5. இந்த ஐ.பி.எல்.-ல் அதிக வயது கொண்ட வீரர்களை கொண்ட அணி சென்னை தான். இந்த தடவை அனுபவம் கைகொடுக்காததால் வயதான அணி என்ற பிம்பத்தை உடைக்க அடுத்த ஆண்டு அணி நிர்வாகம் இளம் ரத்தத்தை பாய்ச்ச அதிரடி முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    இஷான் கிஷன் அரைசதம் விளாச அவருக்கு குயின்டான் டி காக் ஒத்துழைப்பு கொடுக்க சிஎஸ்கே 10 விக்கெட் வித்தியாசத்தில் துவம்சம் செய்தது மும்பை இந்தியன்ஸ்.
    ஐபிஎல் தொடரின் 41-வது லீக் ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. ருத்துராஜ் கெய்க்வாட் (0), டு பிளிஸ்சிஸ் (1), அம்பதி ராயுடு (2), ஜெகதீசன் (0) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் 3 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்திருந்தது. முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதை போல அதன்பின் விக்கெட் மளமளவென சரிந்தது. ஜடேஜா 7 ரன்னிலும், டோனி 16 ரன்னில் ஆட்டமிழக்க சென்னை 6.4 ஓவரில் 30 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுக்களை இழந்துள்ளது.

    சாம் கர்ரன் தனிநபராக போராடி 47 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் அரைசதம் அடிக்க சிஎஸ்கே 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்தது. மும்பை அணி சார்பில் போல்ட் 4 ஓவரில் 18 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். பும்ரா 2 விக்கெட்டும், ராகுல் சாஹர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் 115 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணியின் குயின்டான் டி காக், இஷான் கிஷன் ஆகியோர் களம் இறங்கினர். இஷான் கிஷன் அதிரடி காட்ட, டி காக் நிதானமாக விளையாடினார்.

    இஷான் கிஷன் சிறப்பாக விளையாடி அரைசதம் அடிக்க, மும்பை இந்தியன்ஸ் 12.2 ஓவரிலேயே 116 ரன்கள் அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இஷான் கிஷன் 37 பந்தில் 6 பவுண்டரி, 5 சிக்சருடன் 68 ரன்களுடனும், குயின்டான் டி காக் 37 பந்தில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் 46 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
    எம்எஸ் டோனி, டு பிளிஸ்சிஸ் என முக்கிய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க சாம் கர்ரன் தாக்குப்பிடித்து விளையாடினார்.
    ஐபிஎல் தொடரின் 41-வது லீக் ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ருத்துராஜ் கெய்க்வாட், டு பிளிஸ்சிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை டிரென்ட் போல்ட் வீசினார். இந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் ருத்துராஜ் கெய்க்வாட் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த அம்பதி ராயுடு பும்ரா வீசிய அடுத்த ஓவரின் 4-வது பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 2 ரன்கள் மட்டுமே அடித்தார். அடுத்து வந்த ஜெகதீசன் முதல் பந்திலேயே நடையை கட்டினார். இதனால் 3 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்தது.

    4-வது விக்கெட்டுக்கு டு பிளிஸ்சிஸ் உடன் டோனி ஜோடி சேர்ந்தார். 3-வது ஓவரை போல்ட் வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தில் டு பிளிஸ்சிஸ் 1 ரன் எடுத்த நிலையில் வெளியேறினார். அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் 3 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்திருந்தது.

    5-வது விக்கெட்டுக்கு எம்எஸ் டோனியுடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். பும்ரா வீசிய 4-வது ஓவரில் சென்னை அணிக்கு 3 பவுண்டரி கிடைத்தது. 6-வது ஓவரை போல்ட் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் ஜடேஜா 7 ரன் எடுத்த நிலையில்  வெளியேறினார்.

    6-வது விக்கெட்டுக்கு டோனியுடன் சாம் கர்ரன் ஜோடி சேர்ந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் 6 ஓவர்களில் 24 ரன்கள் எடுப்பதற்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்து திணறியது.

    7-வது ஓவரை ராகுல் சாஹர் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தை சிக்சருக்கு தூக்கிய டோனி, அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். டோனி 16 ரன்னில் ஆட்டமிழக்க சென்னை 6.4 ஓவரில் 30 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுக்களை இழந்துள்ளது.

    ஷர்துல் தாகூர் (20 பந்தில் 11 ரன்) ஒத்துழைப்பு கொடுக்க, சாம் கர்ரன் அணியை இழுத்துச் சென்றார். 9.3 ஓவரில் 50 ரன்னைக் கடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் 18.4 ஓவரில் 100 ரன்னைக் கடந்தது.

    போல்ட் வீசிய கடைசி ஓவரில் 3 பவுண்டரி அடித்த சாம் கர்ரன் 46 பந்தில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் அரைசதம் அடித்தார். கடைசி பந்தில் க்ளீன் போல்டானார். சிஎஸ்கே-வுக்கு கடைசி ஓவரில் 13 ரன்கள் கிடைக்க 9 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்துள்ளது.

    மும்பை அணி சார்பில் 4 ஓவரில் 18 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். பும்ரா 2 விக்கெட்டும், ராகுல் சாஹர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
    அம்பதி ராயுடு, டு பிளிஸ்சிஸ், ஜெகதீசன், ருத்துராஜ் கெய்க்வாட், ஜடேஜா அடுத்தடுத்து ஆட்டமிழக்க சென்னை சூப்பர் கிங்ஸ் திணறி வருகிறது.
    ஐபிஎல் தொடரின் 41-வது லீக் ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ருத்துராஜ் கெய்க்வாட், டு பிளிஸ்சிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை டிரென்ட் போல்ட் வீசினார். இந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் ருத்துராஜ் கெய்க்வாட் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த அம்பதி ராயுடு பும்ரா வீசிய அடுத்த ஓவரின் 4-வது பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 2 ரன்கள் மட்டுமே அடித்தார். அடுத்து வந்த ஜெகதீசன் முதல் பந்திலேயே நடையை கட்டினார். இதனால் 3 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்தது.

    4-வது விக்கெட்டுக்கு டு பிளிஸ்சிஸ் உடன் டோனி ஜோடி சேர்ந்தார். 3-வது ஓவரை போல்ட் வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தில் டு பிளிஸ்சிஸ் 1 ரன் எடுத்த நிலையில் வெளியேறினார். அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் 3 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்திருந்தது.

    5-வது விக்கெட்டுக்கு எம்எஸ் டோனியுடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். பும்ரா வீசிய 4-வது ஓவரில் சென்னை அணிக்கு 3 பவுண்டரி கிடைத்தது. 6-வது ஓவரை போல்ட் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் ஜடேஜா 7 ரன் எடுத்த நிலையில் ஜடேஜா வெளியேறினார்.

    6-வது விக்கெட்டுக்கு டோனியுடன் சாம் கர்ரன் ஜோடி சேர்ந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் 6 ஓவர்களில் 24 ரன்கள் எடுப்பதற்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்து திணறியது.

    7-வது ஓவரை ராகுல் சாஹர் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தை சிக்சருக்கு தூக்கிய டோனி, அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். டோனி 16 ரன்னில் ஆட்டமிழக்க சென்னை 6.4 ஓவரில் 30 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுக்களை இழந்துள்ளது.
    ஷார்ஜாவில் நடைபெற இருக்கும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. அந்த அணியில் ரோகித் சர்மா விளையாடவில்லை.
    ஐபிஎல் தொடரின் 41-வது லீக் ஆட்டம் ஷார்ஜாவில் 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    உடல்நலம் சரியில்லாத காரணத்தினால் ரோகித் சர்மா இன்றைய போட்டியில் விளையாடவில்லை. இதனால் பொல்லார்ட் கேப்டனாக செயல்படுகிறார். அவர் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. கேதர் ஜாதவ், சாவ்லா, வாட்சன் நீக்கப்பட்டு ருத்து ராஜ், ஜெகதீசன், இம்ரான் தாஹிர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    மும்பை அணி விவரம்:

    1. குயின்டான் டி காக், 2. சவுரப் திவாரி, 3. சூர்யகுமார் யாதவ், 4. இஷான் கிஷன், 5. ஹர்திக் பாண்ட்யா, 6. பொல்லார்ட், 7. குருணால் பாண்ட்யா, 8. நாதன் கவுல்டர் நைல், 9. ராகுல் சாஹர், 10. டிரென்ட் போல்ட், 11. பும்ரா.

    சி.எஸ்.கே. அணி விவரம்:-

    1. சாம் கர்ரன், 2. டு பிளிஸ்சிஸ், 3. அம்பதி ராயுடு,  4. என். ஜெகதீசன், 5. எம்எஸ் டோனி, 6. ருத்துராஜ் கெய்க்வாட், 7. ஜடேஜா, 8. தீபக் சாஹர்,  9.ஷர்துல் தாகூர், 10. ஹசில்வுட், 11. இம்ரான் தாஹிர்.
    கிரிக்கெட் போட்டியில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும். சில ஆடுகளத்தில் டாஸ் வென்றாலே போட்டியை வென்றதற்கு சமம் என்பார்கள். இந்த ஐபிஎல் தொடரில் எப்படி என்று பார்ப்போம்.
    ஐபிஎல் தொடர் என்றாலே கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகம் அடைந்து விடுவார்கள். அந்த அளவிற்கு பந்துகள் சிக்சருக்கும், பவுண்டரிக்கும் பறக்கும். மேலும், சேஸிங் செய்யும் அணி மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தும். இதனால் டாஸ் வென்ற அணிகள் கண்ணை மூடிக்கொண்டு சேஸிங்கை தேர்ந்தெடுப்பார்கள்.

    ஆனால், இந்த சீசனில் சேஸிங் எடுத்த அணிகள் எல்லாமல் முதலில் தோல்விகளை சந்தித்தன. முதல் 13 போட்டிகளில் டாஸ் வென்று தோல்விகளை சந்தித்தது.

    இந்தத் தொடரில்தான் டாஸ் வென்ற அணிகள் இதுவரை அதிக அளவில் தோல்விகளை சந்தித்துள்ளன. இதுகுறித்து பார்க்கலாம்.

    இந்த சீசனில் இதுவரை நடைபெற்ற 40 போட்டிகளில் டாஸ் வென்ற அணி 13 முறைதான் வெற்றி பெற்றது. 27 முறை தோல்வியை சந்தித்துள்ள.

    2015-ல் 59 போட்டிகளில் 28 வெற்றி, 29 தோல்வி 2008-ல் 58 போட்டிகளில் 28 வெற்றி 30 தோல்வி 2013-ல் 46 போட்டிகளில் 36 வெற்றி, 40 தோல்வி 2012-ல் 75 போட்டிகளில் 33 வெற்றி 41-ல் தோல்விகளை சந்தித்துள்ளன.

    பஞ்சாப் அணி டாஸ் வென்ற மூன்று போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. ராஜஸ்தான் 5-ல் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. டெல்லி 4-ல் ஒன்றிலும், கேகேஆர் 6-ல் இரண்டிலும், ஆர்சிபி 5-ல் இரண்டிலும், ஐதரபாத் 7-ல் மூன்றிலும், மும்பை 4-ல் இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளன.

    முதல் 14 போட்டிகளில் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்த அணிகள் இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கடைசி 20 போட்டிகளில் 3 முறை பீல்டிங் கேட்டது. இதில் 2 முறை வெற்றி பெற்றுள்ளது.
    10 போட்டிகளில் 3-ல் மட்டுமே வெற்றி பெற்றிருந்தாலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேற முடியும் என சிஎஸ்கே ரசிகர்கள் நம்பிக்கையில் உள்ளனர்.
    ஐபிஎல் தொடங்கிய 2008-ம் வருடத்தில் இருந்து 2019 வரை நடைபெற்ற தொடர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறாமல் இருந்தது கிடையாது. இந்த முறை அதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை.

    இதுவரை 10 போட்டிகளில் 3-ல் மட்டுமே வெற்றி பெற்று பாயின்ட் டேபிளில் கடைசி இடத்தில் உள்ளது. மீதமுள்ள நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று கீழ்கண்ட மாதிரி நடைபெற்றால் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு வாய்ப்பு உண்டு என ரசிகர்கள் நம்பிக்கையில் உள்ளனர்.

    சென்னை அணி மும்பை, ஆர்சிபி, கொல்கத்தா, பஞ்சாப் அணிகளுடன் விளையாட வேண்டியுள்ளது. இந்த நான்கிலும் வெற்றி பெற்றாக வேண்டும். அதேவேளையில் தற்போது முதல் மூன்று இடங்களில் இருக்கும் மும்பை. ஆர்சிபி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் தங்களுடைய வெற்றியை அப்படியே தொடர வேண்டும்.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நான்கு போட்டிகளில் ஒன்றில் மட்டுமே ஜெயிக்க வேண்டும். ஐதராபாத், பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இரண்டு போட்டிகளுக்கு மேல் ஜெயிக்கக் கூடாது. இப்படி நடந்தால் சென்னை 14 புள்ளிகளுடன் டெல்லி, மும்பை, ஆர்சிபி அணிகளுடன் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது.
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று தனது 11-வது ஆட்டத்தில் பலம் வாய்ந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக மோதுகிறது.

    சார்ஜா:

    13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 3 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தடுமாறி வருகிறது. இதுவரை 10 ஆட்டத்தில் விளையாடி 3-ல் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது.இதனால் 6 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.

    பிளேஆப் சுற்று வாய்ப்பில் இருக்க வேண்டும் என்றால் அடுத்த 4 ஆட்டங்களிலும் கண்டிப்பாக வெற்றிபெற வேண்டும். அதேவேளையில் மற்ற அணிகளின் சில ஆட்டங்களின் முடிவுகள் சாதகமாக அமைய வேண்டும்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று தனது 11-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்சுடன் மோதுகிறது. சார்ஜாவில் இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங்கில் வாட்சன், டுபிளிசிஸ், அம்பதி ராயுடு ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். ஆனால் மிடில்-ஆர்டர் வரிசை மிகவும் மோசமாக இருக்கிறது. கடந்த ஆட்டத்தில் (ராஜஸ்தானுக்கு எதிராக) சென்னை 20 ஓவரில் 125 ரன் மட்டுமே எடுத்தது.

    இறுதிக்கட்டத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தாததால் குறைந்த ஸ்கோரை எடுத்து தோல்வியை சந்தித்தது. எனவே மிடில்- ஆர்டர் வரிசையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது மிகவும் அவசியம்.

    பந்து வீச்சில் தீபக்சாஹர், ‌ஷர்துல்தாகூர், ஜடேஜா ஆகியோர் உள்ளனர். ஆல் ரவுண்டர் பிராவோ காயம் காரணமாக விலகி உள்ளதால் அவருக்கு பதில் நிகிடி அல்லது இம்ரான் தாகிர் ஆகியோரில் ஒருவர் இடம் பெற வாய்ப்பு உள்ளது.

    அதேபோல் இளம் வீரர் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது. வெற்றி கட்டாயத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று களம் இறங்குகிறது. பலம் வாய்ந்த மும்பை அணிக்கு எதிராக வெற்றி பெற வேண்டும் என்றால் அனைத்து துறையிலும் சிறந்த பங்களிப்பை சென்னை வீரர்கள் அளிக்க வேண்டும்.

    மும்பை இந்தியன்ஸ் அணி 9 ஆட்டத்தில் விளையாடி 6-ல் வெற்றிபெற்று 12 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. அந்த அணியில் ரோகித்சர்மா, குயின்டன் டிகாக், சூர்ய குமார் யாதவ், இசான்கி‌ஷன், ஹர்திக்பாண்ட்யா, பொல்லார்ட் போன்ற பேட்ஸ்மேன்கள் உள்ளனர். பந்துவீச்சில் பும்ரா, போல்ட், குர்னல்பாண்ட்யா ஆகியோர் உள்ளனர்.

    மும்பை அணி பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் சம பலத்துடன் உள்ளது. அந்த அணி 7-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. இரு அணிகள் மோதிய முந்தய ஆட்டத்தில் சென்னை அணி வெற்றிபெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

    ராஜஸ்தான் அணிக்கு எதிராக சிறந்த முறையில் பாட்னர்ஷிப் அமைத்து வெற்றிக்கு வித்திட்ட மனீஸ்பாண்டே விஜய்சங்கருக்கு கேப்டன் வார்னர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    துபாய்:

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் துபாயில் நேற்று நடந்த 40-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சை வீழ்த்தியது.

    முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன் எடுத்தது. சாம்சன் 36 ரன்னும், பென் ஸ்டோக்ஸ் 30 ரன்னும் எடுத்தனர்.

    ஐதராபாத் தரப்பில் ஜேசன்ஹோல்டர் 3 விக்கெட்டும், விஜய்சங்கர், ரஷித்கான் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினர். பின்னர் விளையாடிய ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் டேவிட் வார்னர் (4 ரன்), பேர்ஸ்டோவ் (10ரன்) விரைவில் ஆட்டம் இழந்தனர்.

    அதன்பின் மனீஷ் பாண்டே-விஜய்சங்கர் ஜோடி சிறப்பாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றது. ஐதராபாத் 18.1 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 146 ரன் எடுத்து வெற்றிபெற்றது.

    மனீஷ்பாண்டே 83 ரன்னும் (47 பந்து, 4 பவுண்டரி, 8 சிக்சர்), விஜய்சங்கர் 52 ரன்னும் (51 பந்து, 6 பவுண்டரி) எடுத்து அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர்.ராஜஸ்தான் தரப்பில் ஆர்ச்சர் 2 விக்கெட் வீழ்த்தினார்.

    ஐதராபாத் அணி 4-வது (10 ஆட்டம்) வெற்றியை பெற்றது. ராஜஸ்தான் 7-வது தோல்வியை (11 ஆட்டம்) சந்தித்தது. வெற்றி குறித்து ஐதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் கூறியதாவது:-

    இந்த வெற்றி ஒரு அற்புதமான செயல்பாடு. டாசின் போது நான் சேசிங்கை தேர்வு செய்தது பற்றி நீங்கள் கேள்வி எழுப்பலாம். பவர் பிளேவுக்கு பிறகு நாங்கள் அவர்களை கட்டுக்குள் கொண்டுவந்தோம். மொத்தத்தில் நாங்கள் எதிர்பார்த்த விளையாட்டு இதுதான்.

    இந்த போட்டியில் நான் ஆச்சரியம் அடைந்தேன். ஏனென்றால் இந்த போட்டி உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சுகளுக்கு எதிராக இருந்தது. இதில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். ஜேசன் ஹோல்டர் அணியில் சேர்ந்திருப்பது கூடுதல் பலமாக இருக்கிறது.

    அவரது உயரம், அனுபவம் நல்ல பலன் அளிக்கிறது. அவர் இன்று பேட்டிங் செய்யவில்லை. ஆனாலும் அவர் அனைத்து துறையிலும் சிறப்பாக செயல்படக்கூடியவர்.

    மிடில்-ஆர்டர் வரிசையில் (மனீஷ்பாண்டே-விஜய் சங்கர்) சிறப்பாக விளையாடியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ரன் இலக்கை அடைய அவர்கள் நல்ல அடித்தளம் அமைப்பார்கள் அல்லது பெரிய ஸ்கோரை திரட்டுவார்கள் என்பதை நிரூபித்து காட்டினார்கள்.

    எங்களது அணி அநேகமாக முதலில் பேட்டிங் செய்து இலக்கை நிர்ணயித்து அதில் வெற்றிபெறுவதில் சிறந்ததாக இருக்கிறது. ஆனால் கடந்த 2 போட்டிகளின் அடிப்படையில் இந்த ஆட்டத்தில் சேசிங்கை தேர்வு செய்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ராஜஸ்தான் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் கூறும்போது, ‘நாங்கள் ஆட்டத்தை சிறப்பாக தொடங்கினோம் என்று நினைக்கிறேன். ஆர்ச்சர் தொடக்கத்திலேயே 2 பெரிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆனால் அதை நாங்கள் பயன்படுத்திக் கொள்ள தவறிவிட்டோம். ஆடுகளம் நன்றாக இருந்தது. சில காரணங்களால் அங்கு சிறிது பனியின் தாக்கம் இருந்தது.

    ஆர்ச்சரை தொடர்ந்து அவரது 3-வது ஓவரை வீச வைக்க எனது மனதில் எண்ணம் இருந்தது. இது பற்றி சில வீரர்களுடன் கலந்துரையாடினேன். அவரை தொடர்ந்து 3-வது ஓவரை வீச வைத்திருக்க வேண்டும்’ என்றார்.

    இந்த தோல்வி மூலம் ராஜஸ்தான் ராயல்சின் பிளேஆப் சுற்று வாய்ப்பு மங்கியுள்ளது.

    ஐபிஎல் தொடரில் மிகவும் பின்தங்கியிருக்கும் சிஎஸ்கே வீரர்களை தட்டியெழுப்பி உற்சாகப்படுத்தும் வகையில் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
    சென்னை:

    ஐபிஎல் தொடரில் 3 முறை கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, இந்த சீசன் மிகவும் மோசமான சீசனாக அமைந்துள்ளது. துவக்கத்தில் சிறப்பாக விளையாடி மும்பை அணியை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆட்டம் போகப்போக உற்சாகம் இழந்தது. மொத்தம் விளையாடிய 10 போட்டிகளில் 3-ல் மட்டுமே வெற்றி பெற்று, புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. பிளே-ஆப் சுற்றுக்கான வாய்ப்பு ஏறக்குறைய முடிந்துவிட்டது.

    இந்நிலையில், ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சென்னை வீரர்களை தட்டியெழுப்பி உற்சாகப்படுத்தும் வகையிலான இடுகையை பகிர்ந்துள்ளார். ‘நம்மால் வெல்ல முடியும், நாம் வெல்ல வேண்டும், நாம் வெல்வோம்’ என ஜடேஜா கூறி உள்ளார்.

    இதன்மூலம் பிளே ஆப் சுற்றில் இடம்பெற அடுத்து வரும் போட்டிகளில் வீரர்கள் தொடர்ந்து போராடுவார்கள் என சி.எஸ்.கே. ரசிகர்களுக்கு அவர் உறுதியளித்திருக்கிறார். எனவே, அடுத்து வரும் போட்டியில் சென்னை அணியின் வழக்கமான அதிரடியை பார்க்கலாம்.
    ×