என் மலர்tooltip icon

    விளையாட்டு

    சிட்னியில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்ட ஆஸ்திரேலிய வீரர்கள் இன்று தங்களுடைய குடும்பத்துடன் இணைந்தனர்.
    இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் 9-ந்தேதி ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடங்கியது. போட்டி தொடங்குவற்கு 14 நாட்களுக்கு முன் ஆஸ்திரேலிய வீரர்கள் இந்தியா வந்து, தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு, பின்னர் அணியில் இணைந்தனர். மே 4-ந்தேதி வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதன் காரணமாக போட்டிகள் ரத்து செய்யப்பட்டது.

    இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியா செல்ல அந்நாட்டு அரசு தடைவிதித்திருந்ததால், மாலத்தீவு சென்று அங்கிருந்து ஆஸ்திரேலியா செல்ல வீரர்கள் முடிவு செய்தனர்.

    கடந்த 15-ந்தேதி மாலத்தீவில் இருந்து புறப்பட்ட ஆஸ்திரேலிய வீரர்கள் சிட்னி சென்றடைந்தனர். வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆஸ்திரேலியா கொரோனாவிற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது.

    மேக்ஸ்வெல்

    இதனால் வீரர்கள் சிட்னி ஓட்டலில் தங்கியிருந்தனர். இந்த நிலையில் நேற்றுடன் 14 நாட்கள் தனிமைப்படுத்திய கெடு முடிவடைந்ததால் இன்று ஆஸ்திரேலிய வீரர்கள் குடும்பத்துடன் இணைந்தனர்.

    ஸ்மித்

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பிடித்துள்ள பேட் கம்மின்ஸ் காதலி கர்ப்பமாக உள்ளார். அவரை கண்டதும் கட்டிப்பிடித்து உணர்ச்சியை வெளிப்படுத்தினார். அவரது பார்ட்னர் பாஸ்டன் கண்ணீர் தழும்ப வரவேற்றார்.
    47-வது கோபா அமெரிக்க கால்பந்து போட்டி கடந்த ஆண்டு ஜூ ன் 12-ந்தேதி முதல் ஜூலை 12 வரை நடைபெற வேண்டியது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த போட்டி தள்ளிவைக்கப்பட்டது.

    பியூனஸ்அயர்ஸ்:

    தென் அமெரிக்க கண்டத்தில் நடைபெறும் கால்பந்து போட்டிகளில் மிகவும் பிரசித்தி பெற்றது கோபா அமெரிக்க கால்பந்து ஆகும்.உலக கோப்பை, ஐரோப்பிய கோப்பைக்கு அடுத்து புகழ் பெற்றது இந்த போட்டி ஆகும்.

    47-வது கோபா அமெரிக்க கால்பந்து போட்டி கடந்த ஆண்டு ஜூ ன் 12-ந்தேதி முதல் ஜூலை 12 வரை நடைபெற வேண்டியது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த போட்டி தள்ளிவைக்கப்பட்டது.

    இந்த நிலையில் கோபா அமெரிக்க கால்பந்து போட்டி அர்ஜென்டினாவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 14 முதல் ஜூலை 11-ந்தேதி வரை இந்த போட்டி நடக்கிறது.

    அர்ஜென்டினாவுடன் இணைந்து கொலம்பியாவும் இந்த போட்டியை நடத்தும் என்று முன்பு அறிவிக்கப்பட்டது. தற்போது போட்டியை நடத்தும் வாய்ப்பை கொலம்பியா இழந்துள்ளது. அர்ஜென்டினா மட்டுமே இந்த போட்டியை நடத்துகிறது.

    இந்த போட்டியில் 10 அணிகள் பங்கேற்கினன்றன. அவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் பிரேசில், கொலம்பியா, ஈக்வடார், பெரு, வெனிசுலா ஆகிய நாடுகளும், ‘பி’ பிரிவில் அர்ஜென்டினா, சிலி, பொலிவியா, உருகுவே, பராகுவே ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.

    ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் 2 பிரிவிலும் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் கால் இறுதிக்கு தகுதிபெறும்.

    29-ந்தேதியுடன் லீக் ஆட்டம் முடிகிறது. ஜூலை 3 மற்றும் 4-ந்தேதிகளில் கால் இறுதியும், 6 மற்றும் 7-ந்தேதியில் அரை இறுதியும், ஜூலை 11-ந்தேதி இறுதிப் போட்டி நடக்கிறது.

    கோபா அமெரிக்க கால்பந்து போட்டியில் உருகுவே அதிகபட்சமாக 15 முறை சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. அந்த அணி கடைசியாக 2011-ல் வெற்றி பெற்றது.

    அதற்கு அடுத்தபடியாக அர்ஜென்டினா 14 தடவை கோபா அமெரிக்க கோப்பையை கைப்பற்றியது. அந்த அணி கடைசியாக 1993-ல் வெற்றிபெற்றது.

    பிரேசில் 9 முறை சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. பராகுவே, சிலி, பெரு ஆகியவை தலா 2 முறையும், கொலம்பியா, பொலிவியா தலா 1 முறையும் கோப்பையை கைப்பற்றி உள்ளன.

    உலகில் 4-ம் நிலை வீரரும், கடந்த ஆண்டு அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்றவருமான டொமினிக் தீம் (ஆஸ்திரியா) தொடக்க சுற்றிலேயே அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறினார்.

    பாரீஸ்:

    கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நேற்று தொடங்கியது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் 6-வது வரிசையில் உள்ள அலெக்சாண்டர் சுவரேவ் (ஜெர்மனி ) சக நாட்டைச் சேர்ந்த ஆஸ்கர் ஒட்டேயை எதிர்கொண்டார்.

    இதில் சுவரேவ் 3-6, 3-6, 6-2, 6-2, 6-0 என்ற செட் கணக்கில் கடும் போராட்டத்திற்கு பிறகு வெற்றி பெற்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு 2 மணி 49 நிமிடங்கள் தேவைப்பட்டது.

    மற்றொரு ஆட்டத்தில் 5-வது வரிசையில் உள்ள ஸ்டெபானோஸ் சிட்சிபாஸ் (கிரீஸ்) ஜெர்மி சார்டியை (பிரான்ஸ்) எதிர்கொண்டார். இதில் சிட்சிபாஸ் 7-6 (8-6), 6-3, 6-1 என்ற நேர்செட் கணக்கில் வென்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    மற்ற ஆட்டங்களில் 16-வது வரிசையில் உள்ள டிமிட்ரோவ் (பல்கேரியா) நிஷிகோரி (ஜப்பான்) 11-வது நிலை வீரரான அகுக் (ஸ்பெயின்), பேபியோ பாக்னி (இத்தாலி) ஆகியோர் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.

    உலகில் 4-ம் நிலை வீரரும், கடந்த ஆண்டு அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்றவருமான டொமினிக் தீம் (ஆஸ்திரியா) தொடக்க சுற்றிலேயே அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறினார்.

    ஸ்பெயினை சேர்ந்த பேப்லோ 4-6, 5-7, 6-3, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் டொம்னிக்தீம்மை தோற்கடித்தார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் 11-வது இடத்தில் இருக்கும் பெட்ரா கிவிட்டோவா (செக் குடியரசு) 6-7 (3-7), 7-6 (7-5), 6-1 என்ற நேர் செட் கணக்கில் பெல்ஜியத்தை சேர்ந்த கிரிட்டை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்ற ஆட்டங்களில் 3-ம் நிலை வீராங்கனையான சபலென்கா, 15-வது வரிசையில் உள்ள விக்டோரியா அசரென்கா (பெலாரஸ்), 23-ம் நிலை வீராங்கனையான மேடிசன் கெய்ஸ் (அமெரிக்கா) ஆகியோர் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.

    ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டங்களை செப்டம்பர் 18-ந் தேதி முதல் அக்டோபர் 10-ந் தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்துவது என்று திட்டமிடப்பட்டுள்ளது.

    மும்பை:

    14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் ஐ.பி.எல். போட்டியை கால வரையின்றி தள்ளி வைக்க வேண்டிய கட்டாயம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு (பி.சி.சி.ஐ.) ஏற்பட்டது.

    29 ஆட்டங்கள் முடிந்த நிலையில் எஞ்சிய 31 ஆட்டங்களை நடத்திவிட வேண்டும் என்பதில் பி.சி.சி.ஐ. தீவிரமாக உள்ளது. 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு முன்பு இந்த போட்டியை நடத்த கிரிக்கெட் வாரியம் முடிவு செய்து உள்ளது.

    அதன்படி ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டங்களை செப்டம்பர் 18-ந் தேதி முதல் அக்டோபர் 10-ந் தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்துவது என்று திட்டமிடப்பட்டுள்ளது. போட்டி அட்டவணை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு பின்னர் வெளியிடப்படுகிறது.

    இந்தநிலையில் ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டங்கள் நடைபெறும் தினத்தில் வெஸ்ட் இண்டீசின் கரிபீயன் பிரிமியர் ‘லீக்’ போட்டி (சி.பி.எல்.) நடைபெறுகிறது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டத்தில் பங்கேற்பத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    கரிபீயன் ‘லீக்’ போட்டி ஆகஸ்டு 28-ந் தேதி தொடங்குகிறது. செப்டம்பர் 19-ந் தேதி வரை இந்த போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் விளையாடி விட்டு வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஐ.பி.எல். கொரோனா பாதுகாப்பு வளையத்தில் இணைய வேண்டும். இதனால் ஒரு சில ஆட்டங்களை விளையாட முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது.

    இதன் காரணமாக கரிபீயன் பிரிமியர் ‘லீக்’ போட்டியை முன்கூட்டியே தொடங்க கோரி வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்துடன் பி.சி.சி.ஐ. பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

    இதுதொடர்பாக பி.சி.சி.ஐ. நிர்வாகி ஒருவர் கூறும்போது, “வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். கரீபியன் ‘லீக்’ போட்டியை முன்கூட்டியே முடிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

    அப்படி முன்கூட்டியே முடிக்கும் பட்சத்தில் வீரர்கள் பாதுகாப்பு வளையத்தில் இருந்து ஐ.பி.எல். கொரோனா பாதுகாப்பு வளையத்துக்கு மாற உதவும். 3 நாள் கட்டாய தனிமைப்படுத்தல் காலமும் முன்கூட்டியே நிறைவடையும்” என்றார்.

    இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தால் வெஸ்ட் இண்டீசை சேர்ந்த முக்கிய வீரர்கள் சிலர் ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டங்களின் சில போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்படும்.

    பிராவோ(சென்னை சூப்பர் கிங்ஸ்), பொல்லார்ட் (மும்பை இந்தியன்ஸ்), கிறிஸ் கெய்ல், நிக்கோலஸ் பூரன் (பஞ்சாப் கிங்ஸ்), ஹெட்மயர் (டெல்லி கேபிட்டல்ஸ்), ஜேசன் ஹோல்டர் (சன் ரைசஸ் ஐதராபாத்), சுனில் நரீன் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) உள்ளிட்டவர்களால் முதல் சில ஆட்டங்களில் விளையாட முடியாது.

    இதேபோல கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் கரிபீயன் ‘லீக்’கில் விளையாடும் டிரினிடாட் மற்றும் டொபோகோ அணியின் பயிற்சியாளராக உள்ளார். 

    கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீசில் நேற்று தொடங்கியது.
    பாரிஸ்:

    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீசில் நேற்று தொடங்கியது. களிமண் தரைப் போட்டியான இதில் நேற்று ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உலக தரவரிசையில் 4-வது இடத்தில் இருப்பவரும், பிரெஞ்சு ஓபனில் 2 முறை இறுதிப்போட்டி வரை முன்னேறியவருமான டொமினிக் தீம் (ஆஸ்திரியா), 68-ம் நிலை வீரரான பாப்லோ அந்துஜாரை (ஸ்பெயின்) எதிர்கொண்டார்.

    அனுபவம் வாய்ந்த டொமினிக் தீம் முதல் இரு செட்டுகளை கைப்பற்றிய நிலையில் எஞ்சிய 3 செட்டுகளை வரிசையாக பறிகொடுத்து அதிர்ந்து போனார்.

    சுமார் 4 மணி 28 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் 35 வயதான பாப்லோ அந்துஜார் 4-6, 5-7, 6-3, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் டொமினிக் தீமை வெளியேற்றி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    கிராண்ட்ஸ்லாம் ஆட்டம் ஒன்றில் டொமினிக் முதல் 2 செட்டை வென்று அதன் பிறகு சறுக்குவது இது 2-வது முறையாகும். அத்துடன் 8-வது முறையாக பிரெஞ்சு ஓபனில் பங்கேற்ற அவர் முதல் சுற்றுடன் நடையை கட்டுவது இதுவே முதல் தடவையாகும்.
    ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 75 கிலோ உடல் எடைப்பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பூஜாராணி, மாவ்லோனோவாவை பதம் பார்த்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.
    துபாய்:

    ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் பிரிவில் நேற்றிரவு நடந்த 75 கிலோ உடல் எடைப்பிரிவின் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் பூஜாராணி 5-0 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் மாவ்லோனோவாவை எளிதில் பதம் பார்த்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.

    மேரிகோம்


    51 கிலோ பிரிவின் இறுதி ஆட்டத்தில் 6 முறை உலக சாம்பியனான இந்திய மூத்த வீராங்கனை மேரிகோம், கஜகஸ்தானின் நஸிம் கைஜாபாயை எதிர்கொண்டார். இதில் மேரிகோம் முதல் ரவுண்டில் தடுப்பாட்ட பாணியை கையாண்டதுடன் சில குத்துகளும் விட்டார். அடுத்த இரு ரவுண்டுகளில் இருவரும் ஆக்ரோஷமாக ஆடினர். இருப்பினும் எதிராளியின் கை சற்று ஓங்கியது. முடிவில் நடுவர்களின் தீர்ப்பின் அடிப்படையில் மேரிகோம் 2-3 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார். இதனால் மேரிகோம் வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று. ஆசிய குத்துச்சண்டையில் ேமரிகோம் வசப்படுத்திய 7-வது பதக்கம் (5 தங்கம், 2 வெள்ளி) இதுவாகும்.

    64 கிலோ பிரிவில் இந்தியாவின் லால்பாட்சாய்ஷி 2-3 என்ற கணக்கில் மிலனா சப்ரோனோவாவிடம் (கஜகஸ்தான்) தோற்று வெள்ளிப்பதக்கத்தை பெற்றார். தங்கப்பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.7 லட்சமும், வெள்ளிப்பதக்கம் கைப்பற்றியவர்களுக்கு ரூ.3½ லட்சமும் பரிசாக வழங்கப்பட்டது.
    சர்வதேச மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் நேற்று முன்தினம் நடந்த இத்தாலி கிராண்ட்பிரிக்கான தகுதி சுற்றில் கலந்து கொண்ட வீரர்களில் ஒருவரான ஜாசன் துபாஸ்குயர் விபத்தில் சிக்கினார்.
    சர்வதேச மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் நேற்று முன்தினம் நடந்த இத்தாலி கிராண்ட்பிரிக்கான தகுதி சுற்றில் கலந்து கொண்ட வீரர்களில் ஒருவரான ஜாசன் துபாஸ்குயர் (சுவிட்சர்லாந்து) விபத்தில் சிக்கினார். இவரது மோட்டார் சைக்கிள் மீது மற்றொரு மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியதில் தூக்கி வீசப்பட்டு பல அடி தூரம் பல்டி அடித்து விழுந்தார்.

    இதில் பலத்த காயமடைந்த 19 வயதான ஜாசன் துபாஸ்குயர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவரது மூளையில் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் மரணம் அடைந்தார். அவரது சாவு, மோட்டார் சைக்கிள் பந்தய வீரர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
    சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் அடித்த ஒரே வீரரான இந்திய முன்னாள் வீரர் சச்சின் தெண்டுல்கர் கிரிக்கெட் வாழ்க்கையில் இரண்டு வருத்தங்கள் உண்டு என கூறியுள்ளார்.
    மும்பை:

    டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவரும், சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் அடித்த ஒரே வீரருமான இந்திய முன்னாள் வீரர் 48 வயதான சச்சின் தெண்டுல்கர் நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

    சச்சின் தெண்டுல்கர்


    எனது கிரிக்கெட் வாழ்க்கையில் இரண்டு வருத்தங்கள் உண்டு. இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கருடன் இணைந்து நான் ஒரு போதும் விளையாடியதில்லை. இளம் வயதில் அவர் தான் எனது பேட்டிங் ஹீரோ. நான் சர்வதேச கிரிக்கெட்டில் கால்பதிப்பதற்கு 2 ஆண்டுக்கு முன்பாக அவர் ஓய்வு பெற்று விட்டார். இதனால் அணியில் ஒரு வீரராக அவருடன் இணைந்து ஆடவில்லையே என்ற ஏக்கம் எப்போதும் உண்டு.

     சச்சின் தெண்டுல்கர், சுனில் கவாஸ்கர்


    எனக்குள் இருக்கும் இன்னொரு வருத்தம் என்னவென்றால் எனது சிறுவயது நாயகன் வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் விவியன் ரிச்சர்ட்சுக்கு எதிராக விளையாட வேண்டும் என்ற ஆசை நிறைவேறாமல் போனது தான். அதிர்ஷ்டவசமாக அவருக்கு எதிராக கவுண்டி கிரிக்கெட்டில் ஆடியிருக்கிறேன். ஆனால் சர்வதேச களத்தில் அவரை எதிர்த்து விளையாட முடியாமல் போய் விட்டதே என்ற வருத்தம் இன்னும் உண்டு. இத்தனைக்கும் நான் சர்வதேச கிரிக்கெட்டுக்கு வந்து 2 ஆண்டுகள் கழித்து தான் விவியன் ரிச்சர்ட்ஸ் (1991-ம் ஆண்டில்) ஓய்வு பெற்றார். ஆனால் சில ஆண்டுகள் இந்தியாவும், வெஸ்ட் இண்டீசும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளாததால் அவரை களத்தில் சந்திக்கும் வாய்ப்பு கிட்டாமல் போய் விட்டது.

    இவ்வாறு தெண்டுல்கர் கூறினார்.
    ஆசிய குத்துச்சண்டை 51 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை மேரி கோம் 2-3 எனத் தோல்வியடைந்து தக்க பதக்கத்தை தவறவிட்டார்.
    ஆசிய குத்துச்சண்டை 51 கிலோ எடைப்பிரிவு இறுதிப் போட்டியில் கஜகஸ்தான் வீராங்கனை நசீமை எதிர்கொண்டார் மேரி கோம். அனுபவம் வாய்ந்த மேரி கோம் தன்னைவிட 11 வயது குறைவான வீராங்கனையை எதிர்கொண்டபோதிலும், நசீமே ஆதிக்கம் செலுத்தினார்.

    மூன்றாவது மற்றும் இறுதிச் சுற்றில் மேரி கோம் கடுமையாக முயற்சித்தும் நசீமை அவரால் வீழ்த்த முடியவில்லை. இறுதியில் 2-3 என்ற கணக்கில் மேரி கோம் தோல்வியடைந்தார்.

    இதன்மூலம், 6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மேரி கோம் ஆசிய குத்துச்சண்டையில் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.

    மேரி கோம் அரையிறுதியில் மங்கோலிய வீராங்கனை லுட்சாய்கானை 4-1 என வீழ்த்தியிருந்தார். ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் ஐந்து முறை தங்கப்பதக்கம் வென்ற மேரி கோமுக்கு இது 2-வது வெள்ளி பதக்கமாகும்.
    வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் செய்து தென்ஆப்பிரிக்கா அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.
    தென்ஆப்பிரிக்கா என்றாலே சர்வதேச கிரிக்கெட்டில் அவர்களுக்கென என ஒரு இடம் உண்டு. பந்து வீச்சு, பேட்டிங், பீல்டிங் என மூன்று துறைகளிலும் அசத்தக் கூடியவர்கள். ராசியில்லாத அணி என்பதை தவிர்த்து அந்த அணியிடம் எந்தவிதமான பலவீனத்தையும் காண முடியாது.

    கல்லீஸ், டொனால்டு, பொல்லாக், டி வில்லியர்ஸ், குளுஸ்னர், கிர்ஸ்டன், ஹசிம் அம்லா என ஜாம்பவான்கள் விளையாடிய அணி. ஆனால் கடந்த இரண்டு வருடங்களால் அந்த அணியால் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை.

    டு பிளிஸ்சிஸ் கேப்டன் பதவியில் இருந்து விலகிய பின் டி காக் மூன்று வடிவிலான அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவருடைய பணிச்சுமை காரணமாக டெஸ்ட் அணி கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

    நீண்டகால கேப்டனாக தொடக்க பேட்ஸ்மேன் டீன் எல்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது தலைமையில்தான் தென்ஆப்பிரிக்கா அணி வெஸ்ட் இண்டீஸ் சென்று இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி ஜூன் 10-ந்தேதி தொடங்குகிறது.

    தென்ஆப்பிரிக்கா அணி 2019-ல் இருண்டு 9 டெஸ்ட் கிரிக்டெக் போட்டியில் விளையாடியுள்ளது. இதில் ஐந்து போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது.

    இந்த நிலையில் தென்ஆப்பிரிக்காவிற்கான வழயில் மீண்டும் கிரிக்கெட்டிற்கு திரும்ப வேண்டியது அவசியம் புதுக்கேப்டன் டீன் எல்கர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து டீன் எல்கர் கூறுகையில் ‘‘தற்போது நாங்கள் புது அத்தியாயம். நாங்கள் அதிகமான போட்டியில், சிறப்பாக விளையாட வேண்டியது அவசியம். கடந்த காலகட்டத்தில் நாங்கள் மிகவும் சீராக இருக்கவில்லை என்பதை நாங்கள் அறிவோம்.

    எங்களுடைய உச்சக்கட்ட திறமை இன்று வெளிப்படவில்லை. வழக்கமான கிரிக்கெட்டில் கொஞ்சம் அதிகமான தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, எங்களுடைய பாணியில் மீண்டும் நல்ல நிலைக்கு திரும்புவது அவசியம்.

    நாங்கள் எப்போதும் சிறந்த பேட்டிங் ஆர்டரை வைத்துள்ளோம். அதேபோல் வேகப்பந்து வீச்சாளர்களையும் வைத்துள்ளோம். இதுதான் தென்ஆப்பிரிக்கா வழி. மிகப்பெரிய சதம், ஐந்து விக்கெட் வீழ்த்தி, பழைய நிலைக்கு திரும்புவது அவசியம். கடந்த சில வருடங்களுக்கு முன் எப்படி இருந்ததோ, அதேபோல் மீண்டும் முன்னேற்ற அடைய முடியும் என்பதுபோல் உணர்கிறேன். இதுதான் என்னுடைய மிகப்பெரிய இலக்கு. இதற்காக கடுமையாக உழைக்க வேண்டும் என்பது எனக்குத் தெரியும்’’ என்றார்.
    வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட, ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டு செப்டம்பர்- அக்டோபரில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    இந்தியாவில் ஆறு மைதானங்களில் ஐபிஎல் 2021 சீசன் டி20 கிரிக்கெட் போட்டிகள் ஏப்ரல் 9-ந்தேதி தொடங்கி நடைபெற்றது. சுமார் ஒருமாத காலம் சிறப்பான வகையில் போட்டிகள் சென்ற நிலையில், மே 3-ந்தேதி கொல்கத்தா அணி வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதன்பின் டெல்லி அணி வீரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மே 4-ந்தேதி ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று பிசிசிஐ-யின் சிறப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் - அக்டோபரில் மீதமுள்ள கிரிக்கெட் போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வந்த பேட் கம்மின்ஸ், எஞ்சிய போட்டிகளில் விளையாடமாட்டார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து டேவிட் வார்னர், பேட் கம்மின்ஸ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பேட் கம்மின்ஸ் நீண்ட நாட்களாக பயோ-பபுள் பாதுகாப்பு வளையத்தில் இருந்து விளையாடியுள்ளார். மீண்டும் ஐபிஎல் போட்டிக்கு திரும்பாததற்கு அதுவும் ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது.
    ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
    இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் மைதானத்தில் அடுத்த மாதம் 18-ந்தேதி இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி-யின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெறுகிறது.

    இதில் வெற்றி பெறும் அணிக்கு சாம்பியன் பட்டம் வழங்கப்படும். இரண்டு வருடங்களில் டெஸ்டில் தலைசிறந்த அணியாக கருதப்படும். 

    இங்கிலாந்து சூழ்நிலை நியூசிலாந்துக்கு சாதகமாக இருக்கும் என கருதப்படுகிறது. அதேவேளையில் இந்தியாவும் சரியான வகையில் தயாராகும் என்பதில் சந்தேகமில்லை.

    நியூசிலாந்து அணியில் டிரென்ட் போல்ட், டிம் சவுத்தி, கைல் ஜேமிசன், நீல் வாக்னர் ஆகிய தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.

    இதில் நீல் வாக்னர், இந்தியாவுக்கு எதிராக ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், உலகக்கோப்பை இறுதி போட்டியை போன்றது என்று தெரிவித்துள்ளார்.

    நீல் வாக்னர்

    இதுகுறித்து நீல் வாக்னர் கூறுகையில் ‘‘இது எனக்கு உலகக்கோப்பை இறுதிப் போன்று போன்றது. நியூசிலாந்து அணிக்காக இதுவரை நான் ஒருநாள் அல்லது டி20 கிரிக்கெட் அணிக்காக விளையாட முடியாதது மிகப்பெரிய ஏமாற்றம். இனிமேல் ஒயிட் பால் கிரிக்கெட் அணியில் இடம் கிடைக்கும் என நான் நினைக்கவில்லை.  உலகக்கோப்பை இறுதிப் போட்டி போன்று, முழு உத்வேகத்துடன் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் விளையாட வேண்டும் என்பதில்தான் கவனம்.

    டெஸ்ட் கிரிக்கெட் கடினமானது. உலகின் பல்வேறு பகுதியில் விளையாடுவது எளிதானது அல்ல. மிகவும் சவாலானது. கடினமான சூழ்நிலையில் உங்களுடைய திறமை மற்றும் சிறந்த வீரருக்கு எதிராக திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பை நீங்கள் பெற முடியும்’’ என்றார்.
    ×