search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீல் வாக்னர்
    X
    நீல் வாக்னர்

    எனக்கு உலகக்கோப்பை இறுதிப் போட்டி போன்றது: நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் சொல்கிறார்

    ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
    இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் மைதானத்தில் அடுத்த மாதம் 18-ந்தேதி இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி-யின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெறுகிறது.

    இதில் வெற்றி பெறும் அணிக்கு சாம்பியன் பட்டம் வழங்கப்படும். இரண்டு வருடங்களில் டெஸ்டில் தலைசிறந்த அணியாக கருதப்படும். 

    இங்கிலாந்து சூழ்நிலை நியூசிலாந்துக்கு சாதகமாக இருக்கும் என கருதப்படுகிறது. அதேவேளையில் இந்தியாவும் சரியான வகையில் தயாராகும் என்பதில் சந்தேகமில்லை.

    நியூசிலாந்து அணியில் டிரென்ட் போல்ட், டிம் சவுத்தி, கைல் ஜேமிசன், நீல் வாக்னர் ஆகிய தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.

    இதில் நீல் வாக்னர், இந்தியாவுக்கு எதிராக ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், உலகக்கோப்பை இறுதி போட்டியை போன்றது என்று தெரிவித்துள்ளார்.

    நீல் வாக்னர்

    இதுகுறித்து நீல் வாக்னர் கூறுகையில் ‘‘இது எனக்கு உலகக்கோப்பை இறுதிப் போன்று போன்றது. நியூசிலாந்து அணிக்காக இதுவரை நான் ஒருநாள் அல்லது டி20 கிரிக்கெட் அணிக்காக விளையாட முடியாதது மிகப்பெரிய ஏமாற்றம். இனிமேல் ஒயிட் பால் கிரிக்கெட் அணியில் இடம் கிடைக்கும் என நான் நினைக்கவில்லை.  உலகக்கோப்பை இறுதிப் போட்டி போன்று, முழு உத்வேகத்துடன் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் விளையாட வேண்டும் என்பதில்தான் கவனம்.

    டெஸ்ட் கிரிக்கெட் கடினமானது. உலகின் பல்வேறு பகுதியில் விளையாடுவது எளிதானது அல்ல. மிகவும் சவாலானது. கடினமான சூழ்நிலையில் உங்களுடைய திறமை மற்றும் சிறந்த வீரருக்கு எதிராக திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பை நீங்கள் பெற முடியும்’’ என்றார்.
    Next Story
    ×