என் மலர்
விளையாட்டு

லீட்ஸ்:
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
5 போட்டி கொண்ட தொடரில் இதுவரை நடந்த 2 டெஸ்ட் முடிவின்படி இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆனது. 2-வது டெஸ்டில் இந்தியா 151 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த டெஸ்டில் வெற்றி பெற்று இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெறும் ஆர்வத்தில் உள்ளது. அதே நேரத்தில் ஜோரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்யும் வேட்கையில் இருக்கிறது.
முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் சென்னையை சேர்ந்த முன்னணி சுழற்பந்து வீரரான அஸ்வின் சேர்க்கப்படவில்லை. ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு ஏற்றதாக இருந்ததால் இந்தியா 4 வேகப்பந்து வீரர்களுடன் களம் இறங்கியது. இதனால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
3-வது டெஸ்டில் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்று விராட் கோலியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
அணி மாற்றம் செய்யப்படுவதற்கு எந்த காரணமும் இல்லை. 2-வது டெஸ்டில் வெற்றி பெற்ற அணி சிறந்தது. வெற்றி நிறைந்த அணியை மாற்றி தொந்தரவு செய்ய யாரும் விரும்ப மாட்டார்கள். ஏனென்றால் லாட்சில் பெற்ற வெற்றி நம்ப முடியாதது. மிகவும் சிறப்பானது.
அஸ்வின் இடம் பெறுவாரா? என்பதில் எதுவும் நடக்கலாம். ஆடுகளத்தின் தன்மையை பொறுத்து எல்லாம் இருக்கிறது. நாங்கள் சம பலத்துடன் தான் விளையாடுவோம்.
முகமது சிராஜ் திறமையான பந்து வீச்சாளர். ஆஸ்திரேலியா தொடர் அவருக்கு உத்வேகத்தையும் நம்பிக்கையையும் கொடுத்துள்ளது. அவர் ஒருபோதும் சவால்களில் இருந்து பின்வாங்க மாட்டார்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.



டோக்கியோ:
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் முடிந்தவுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் நடத்தப்படும்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சமீபத்தில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து முடிந்தன. அதைத் தொடர்ந்து தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி டோக்கியோவில் இன்று தொடங்குகிறது. செப்டம்பர் 5-ந் தேதி வரை இந்த போட்டி நடக்கிறது.
இதில் 163 நாடுகளில் இருந்து 4,537 வீரர்- வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். 22 விளையாட்டுகளில் 540 போட்டிகள் நடைபெற உள்ளது.
பாராலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 54 பேர் கொண்ட அணி பங்கேற்கிறது. இவ்வளவு அதிகமானோர் இதற்கு முன்பு கலந்து கொண்டது கிடையாது.
கடந்த 2016 ரியோ பாராலிம்பிக் போட்டியின் உயரம் தாண்டுதலில் தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு தங்கப்பதக்கம் வென்றார். ஈட்டி எறிதலில் ஜகாரியாவும் தங்கம் வென்றார். இவர்கள் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.
வில்வித்தை, பேட்மிண்டன், துப்பாக்கிசுடுதல், நீச்சல், டேபிள் டென்னிஸ், டேக்வாண்டோ, வலுதூக்குதல் உள்பட 9 விளையாட்டுகளில் இந்தியா கலந்து கொள்கிறது.
பாராலிம்பிக் தொடக்க விழா இன்று மாலை நடக்கிறது. இதில் தமிழக வீரர் மாரியப்பன் தேசிய கொடியை ஏந்தி செல்வார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் தேசிய கொடியை அவர் ஏந்தி செல்லவில்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்டவருடன் அவர் தொடர்பில் இருந்ததால் மாரியப்பன் அதில் இருந்து விலகி உள்ளார்.
மாரியப்பனுக்கு பதிலாக ஈட்டி எறிதல் வீரர் டெக்சந்த் தேசிய கொடியை ஏந்திச் செல்கிறார். மாரியப்பன் உள்ளிட்ட 5 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
லீட்ஸ்:
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 5 டெஸ்ட் தொடரில் நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் டிரா ஆனது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்தியா 151 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி லீட்சில் நாளை (25-ந் தேதி) தொடங்குகிறது.
முதல் டெஸ்டில் கடைசி நாள் ஆட்டத்தில் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு இருந்தது. ஆனால் மழையால் முடிவு பாதிக்கப்பட்து. லார்ட்ஸ் டெஸ்டில் இந்தியா தோல்வி நிலைக்கு சென்று அதில் இருந்து மீண்டு யாரும் எதிர்பார்க்காத வகையில் வெற்றியை பெற்றது.
இதே போல 3-வது டெஸ்டிலும் இந்தியாவின் அதிரடி தொடருமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டியிலும் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெறும் ஆர்வத்தில் உள்ளது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சமபலத்துடன் திகழும் இந்திய அணி மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.
பேட்டிங்கில் லோகேஷ் ராகுல் (244 ரன்), ரோகித் சர்மா (152) ஆகியோர் மிகவும் நல்ல நிலையில் உள்ளனர். கடந்த டெஸ்டின் 2-வது இன்னிங்சில் ரகானேவும், புஜாராவும் இயல்பான ஆட்டத்துக்கு திரும்பியது அணிக்கு சாதகமான நிலையே.
கேப்டன் விராட்கோலி, ரிஷப் பண்ட், ஜடேஜா ஆகியோர் பேட்டிங்கில் முத்திரை பதிக்க கூடியவர்கள். லார்ட்ஸ் மைதானத்தில் கடைசி நேர ஆட்டக்காரர்களான முகமது ஷமியும், பும்ராவும் பேட்டிங்கில் சாதித்தனர்.
கடந்த 2 டெஸ்டிலும் இந்தியா 4 வேகப்பந்து வீரர்களுடன் களம் இறங்கியது. இதில் பும்ரா 12 விக்கெட்டும் , முகமது சிராஜ் 11 விக்கெட்டும், ஷமி 7 விக்கெட்டும், இஷாந்த் சர்மா 5 விக்கெட்டும் கைப்பற்றி உள்ளனர்.
நாளைய போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் இருக்குமா? என்பது தெரியவில்லை. முதல் 2 போட்டியைப் போலவே இந்த டெஸ்டிலும் 4 வேகப்பந்து வீரர்களுடன் களம் இறங்கினால் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்காது.
ஒரு வேளை ஆடுகளம் சுழற்பந்துக்கு ஏற்ற வகையில் இருக்கும் என்று கருதப்பட்டால் மட்டுமே அஸ்வினுக்கு வாய்ப்பு உள்ளது. லீட்ஸ் ஆடுகளம் சுழற்பந்துக்கு சாதகமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அஸ்வின் இடம் பெற்றால் இஷாந்த் சர்மா நீக்கப்படுவார்.
கடந்த டெஸ்டில் காயத்தால் ஆட முடியாத வேகப்பந்து வீரர் ஷர்துல் தாகூர் இடம்பெறும் பட்சத்தில் இஷாந்த் சர்மா கழற்றிவிடப்படுவார்.
ஜோரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி கடந்த டெஸ்டில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்யும் வேட்கையில் உள்ளது.
ஆனால் இங்கிலாந்து அணி தற்போது பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் பலவீனத்துடன் இருக்கிறது. கேப்டன் ஜோரூட் ஒருவரே பேட்டிங்கில் சிறப்பான நிலையில் இருக்கிறார். அவர் 2 சதம் உட்பட 386 ரன் எடுத்துள்ளார். அவரை நம்பிதான் அணியே இருக்கிறது. பந்துவீச்சில் ஆண்டர்சன், ராபின்சன் தலா 9 விக்கெட் கைப்பற்றி உள்ளனர்.
தோல்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்து வேகப்பந்து வீரர் மார்க்வுட் இந்த டெஸ்டில் ஆடவில்லை. இது இங்கிலாந்துக்கு பாதிப்பாகும். ஏற்கனவே ஜோப்ரா ஆர்ச்சர், ஸ்டுவர்ட் பிராட், கிறிஸ்வோக்ஸ், பென்ஸ்டோக்ஸ் ஆகியோர் டெஸ்ட் தொடரில் ஆடவில்லை. மார்க்வுட் இடத்தில் சகிப்மெக்மூத் இடம் பெறுவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
பேட்டிங் பலவீனமாக இருப்பதால் டாம் சிப்லிக்கு பதிலாக டேவிட்மலான் இடம் பெற்றுள்ளார். ஜோஸ்பட்லர், பேர்ஸ்டோவ், மொய்ன்அலி ஆகியோர் திறமையை வெளிப்படுத்த வேண்டிய நெருக்கடியில் உள்ளனர்.
இரு அணிகளும் நாளை மோதுவது 129-வது டெஸ்ட் ஆகும். இதுவரை நடந்த 128 போட்டியில் இந்தியா 30-ல், இங்கிலாந்து 48-ல் வெற்றி பெற்றுள்ளன. 50 டெஸ்ட் டிரா ஆனது.
இந்த போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது. சோனி டெலிவிஷன் நெட்வொர்க்கில் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.






