என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • சென்னையில் கிடைக்கும் உணவு தனக்கு மிகவும் பிடிக்கும் .
    • டென்னிஸ் விளையாடுவது ரொம்ப பிடிக்கும்.

     சென்னை:

    சென்னை, ராயப்பேட்டையில் உள்ள வணிக வளாகத்தில் அமைந்துள்ள ஆடம்பர கேளிக்கை விடுதி ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இந்திய அணியின் ருதுராஜ் கெய்க்வாட் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னைக்கு மீண்டும் வருவது மகிழ்ச்சி .சென்னை எப்போதும் தனக்கு அன்பையும் ஆதரவையும் அளித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

    சென்னையில் கிடைக்கும் உணவு தனக்கு மிகவும் பிடிக்கும் . கிரிக்கெட் வீரர்களிலேயே தனக்கு மிகவும் பிடித்தவர் தோனி. தான் கிரிக்கெட் வீரராகாமல் இருந்திருந்தால், டென்னிஸ் வீரராகியிருப்பேன். எனக்கு டென்னிஸ் விளையாடுவது ரொம்ப பிடிக்கும். என தெரிவித்தார்.

    • பிரேசில் அணி இதுவரை குரோஷியாவிடம் தோற்றது இல்லை.
    • நாளை நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் 2-வது அரை இறுதியில் அர்ஜென்டினா-நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.

    தோகா:

    22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 20-ந்தேதி தொடங்கிய இந்த போட்டி தற்போது விறு விறுப்பான நிலைக்கு சென்றுள்ளது.

    32 நாடுகள் இந்த போட்டியில் பங்கேற்றன. கடந்த 2-ந்தேதியுடன் 'லீக்' ஆட்டங்கள் முடிந்தன. இதன் முடிவில் 16 நாடுகள் 'நாக் அவுட்' சுற்றுக்கு முன்னேறின. 2-வது சுற்று ஆட்டங்கள் 3-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை நடந்தது.

    2-வது சுற்று முடிவில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ், 5 முறை உலக கோப்பையை வென்ற பிரேசில், 2 தடவை சாம்பியனான அர்ஜென்டினா, 1966-ம் ஆண்டு சாம்பியனான இங்கிலாந்து, 3 முறை 2-வது இடத்தை பிடித்த நெதர்லாந்து, கடந்த முறை 2-வது இடத்தை பிடித்த குரோஷியா, 1966-ம் ஆண்டு 3-வது இடத்தை பிடித்த போர்ச்சுக்கல், ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்த மொராக்கோ ஆகிய 8 நாடுகள் கால் இறுதிக்கு முன்னேறின.

    அமெரிக்கா, ஆஸ்திரேலியா, போலந்து, செனகல், ஜப்பான், தென் கொரியா, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து ஆகியவை 2-வது சுற்றில் வெளியேற்றப்பட்டன.

    2 நாட்கள் ஓய்வுக்கு பிறகு கால் இறுதி ஆட்டங்கள் நாளை (9-ந்தேதி) தொடங்குகிறது. வெள்ளிக்கிழமை 2 கால் இறுதியும், சனிக்கிழமை 2 கால் இறுதி ஆட்டமும் நடக்கிறது.

    நாளை இரவு 8.30 மணிக்கு நடைபெறும் முதல் கால் இறுதி ஆட்டத்தில் பிரேசில்-குரோஷியா அணிகள் மோதுகின்றன. அல்ரையானில் உள்ள எஜிகேசன் சிட்டி ஸ்டேடியத்தில் இந்த போட்டி நடக்கிறது.

    பிரேசில் அணி 'லீக்' ஆட்டங்களில் செர்பியாவை 2-0 என்ற கணக்கிலும், சுவிட்சர்லாந்தை 1-0 என்ற கணக்கிலும் வீழ்த்தியது.

    கேமரூனிடம் 0-1 என்ற கோல் கணக்கில் தோற்றது. 2-வது சுற்று ஆட்டத்தில் தென் கொரியாவை 4-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. அந்த அணி 7 கோல்கள் போட்டுள்ளன. 2 கோல்கள் வாங்கியுள்ளது.

    பிரேசில் அணி குரோஷியாவை வீழ்த்தி 12-வது முறையாக அரை இறுதிக்குள் நுழையும் ஆர்வத்தில் இருக்கிறது. ஜெர்மனி அணி தான் அதிகபட்சமாக 13 தடவை அரைஇறுதிக்கு நுழைந்து இருந்தது. 4 முறை சாம்பியனான அந்த அணி கடந்த 2 உலக கோப்பையிலும் 'லீக்' சுற்றிலேயே வெளியேறியது.

    கடந்த உலக கோப்பையில் பிரேசில் அணி கால் இறுதி ஆட்டத்தில் பெல்ஜியத்திடம் 1-2 என்ற கோல் கணக்கில் தோற்று இருந்தது. அது மாதிரியான நிலைமை தற்போது வந்து விடக் கூடாது என்பதில் அந்த அணி கவனமாக இருக்கும்.

    உலக தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் பிரேசில் அணியில் பல நட்சத்திர வீரர்கள் உள்ளனர். ரிச்சர்லிசன் 3 கோல் அடித்து முத்திரை பதித்து உள்ளார்.

    நெய்மர், வின்சியஸ் ஜூனியர், கேசிமிரோ, கேப்டன் தியோகோ சில்வா போன்றோரும் மிகவும் நல்ல நிலையில் உள்ளனர்.

    உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் முதன்மையாக கருதப்படும் பிரேசில் அணி குரோஷியாவை நம்பிக்கையுடன் எதிர் கொள்ளும். அந்த அணி இதுவரை குரோஷியாவிடம் தோற்றது இல்லை.

    குரோஷியா அணி 3-வது முறையாக அரை இறுதிக்கு நுழையும் வேட்கையில் இருக்கிறது. அந்த அணி இதுவரை தோல்வி எதையும் தழுவவில்லை. குரூப் போட்டிகளில் கனடாவை 4-1 என்ற கணக்கில் வென்றது. மொராகோ, பெல்ஜியத்து டன் கோல் எதுவுமின்றி 'டிரா' செய்தது

    2-வது சுற்றில் பெனால்டி ஷீட் அவுட்டில் ஜப்பானை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. குரோஷியா அணியில் கேப்டன் மாட்ரிச், பெரிசிக் போன்ற முன்னணி வீரர்கள் உள்ளனர்.

    இரு அணிகள் மோதிய ஆட்டத்தில் பிரேசில் 3-ல் வெற்றி பெற்றது. ஒரு ஆட்டம் டிரா ஆனது. 2006 உலக கோப்பையில் 1-0 என்ற கோல் கணக்கிலும், 2014 உலக கோப்பையில் 3-1 என்ற கணக்கிலும் பிரேசில் வெற்றி பெற்று இருந்தது.

    நாளை நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் 2-வது அரை இறுதியில் அர்ஜென்டினா-நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.

    • சர்வதேச அளவில் கிரிக்கெட்டில் புதிய ஃபீல்டிங் செட்டப்களை கொண்டு வருவதில் இந்தியா பிரபலமாக உள்ளது.
    • அனைவரும் முன்னேறி வரும் சூழலில் இந்தியா மட்டும் பழைய முறையிலேயே உள்ளது.

     டாக்கா:

    இந்திய கிரிக்கெட் அணியில் இருப்பதிலேயே மிகவும் பழைய ஃபார்முலாவை பயன்படுத்தி வருவதாக முன்னாள் வீரர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    வங்கதேச அணியுடனான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 3 போட்டிகள் கொண்ட தொடரிலும் 2 - 0 என தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 271 ரன்களை குவித்தது.

    இதன்பின்னர் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 266 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இந்த தோல்வியின் மூலம் இந்தியாவின் ஃபார்ம் மிக மோசமாக இருப்பது வெட்ட வெளிச்சமாக தெரியவந்துள்ளது. நியூசிலாந்துடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரை தோற்ற இந்தியா, சீனியர்களுடன் விளையாடியும் வங்கதேசத்திடம் வீழ்ந்தது.

    குறிப்பாக விராட் கோலி, ஷிகர் தவான் ஆகியோர் ஏமாற்றியதால் ரசிகர்கள் அதிருப்தியில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவின் தோல்வி குறித்து முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் பேசியுள்ளார்.

    சர்வதேச அளவில் கிரிக்கெட்டில் புதிய ஃபீல்டிங் செட்டப்களை கொண்டு வருவதில் இந்தியா பிரபலமாக உள்ளது. ஆனால் வெள்ளைப்பந்து கிரிக்கெட் என்று வரும்போது இந்தியாவின் அணுகுமுறை மிக மிக பழமையானது. அனைவரும் முன்னேறி வரும் சூழலில் இந்தியா மட்டும் பழைய முறையிலேயே உள்ளது.

    இங்கிலாந்தின் நடவடிக்கை 2015-ம் ஆண்டு உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணி முதல் சுற்றிலேயே வெளியேறியது. அதன்பின்னர் அவர்களின் அணியில் பல கடினமான முடிவுகளை எடுத்தனர். இதனால் சில ஆண்டுகளிலேயே இங்கிலாந்து அணி நல்ல மாற்றங்களை கண்டது. எனவே இந்தியாவும் அது போன்ற கடின முடிவுகளை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

    ஐபிஎல் வந்ததில் இருந்து இந்தியா ஒரு முறை கூட டி20 உலகக்கோப்பையை வெல்லவில்லை. கடந்த 5 ஆண்டுகளாக 50 ஓவர் கிரிக்கெட்டிலும் பெரிய வெற்றிகளை பெறவில்லை. நமது தவறுகளில் இருந்து எதையுமே அவர்கள் கற்றுக்கொள்ளவில்லை. எனவே உடனடியாக அணுகுமுறைகளில் மாற்றத்தை கொண்டு வந்தே தீர வேண்டும் என வெங்கடேஷ் கூறியுள்ளார்.

    இந்த கருத்துக்கு முன்னாள் வீரர் விரேந்தர் சேவாக் ஆதரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், " இந்தியா தூக்கத்தில் இருந்து கண்விழிக்க வேண்டும், அனைத்தையும் மாற்ற வேண்டும்" எனக்குறிப்பிட்டுள்ளார்.

    இந்தியா- வங்கதேசம் இடையே அடுத்ததாக 3வது ஒருநாள் போட்டி வரும் டிசம்பர் 10ம் தேதியன்று சட்டோகிராம் நகரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • வீரர்கள் தொடர்ந்து போட்டிகளில் விளையாடி கொண்டு இருக்க முடியாது.
    • அவர்களுடைய பணிச் சுமையையும் நாம் கண்காணிக்க வேண்டும்.

    மிர்பூர்:

    வங்காளதேசத்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி தோற்று தொடரை இழந்தது.

    மிர்பூரில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய வங்காள தேசம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 271 ரன் எடுத்தது. இதனால் இந்தியாவுக்கு 272 ரன் இலக்காக இருந்தது.

    8-வது வீரராக ஆடிய மெகிதி ஹசன் மிராஸ் சதம் அடித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். அவர் 83 பந்தில் 100 ரன்னும் (8 பவுண்டரி, 4 சிக்சர்), மகமதுல்லா 77 ரன்னும் (7 பவுண்டரி) எடுத்தனர். வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டும், முகமது சிராஜ், உம்ரான் மாலிக் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    வங்காளதேசம் ஒரு கட்டத்தில் 6 விக்கெட் இழப்புக்கு 69 ரன் என்ற மோசமான நிலையில் இருந்தது. இந்த சாதகமான நிலையை இந்திய அணி தக்க வைத்து கொள்ளவில்லை.

    பின்னர் விளையாடிய இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 266 ரன் எடுத்தது. இதனால் 5 ரன்னில் தோற்றது.

    ஸ்ரேயாஸ் அய்யர் 82 ரன்னும் (6 பவுண்டரி, 3 சிக்சர்) அக்‌ஷர் படேல் 56 ரன்னும் (2 பவுண்டரி, 3 சிக்சர்), காயத்துடன் ஆடிய கேப்டன் ரோகிச் சர்மா 51 ரன்னும் (3 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்தனர். எபாதத் உசேன் 3 விக்கெட்டும், மெகிதி ஹசன் மிராஸ், சகீப் அல் ஹசன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    ஏற்கனவே முதல் போட்டியில் இந்திய அணி 1 விக்கெட்டில் தோற்றது. தற்போது மீண்டும் தோற்றதால் ஒரு நாள் தொடரை இழந்தது. 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் காயம் காரண மாக ரோகித் சர்மா, தீபக் சாஹர், குல்தீப் சென் ஆகியோர் ஆடவில்லை.

    நேற்றைய போட்டிக்கு பிறகு ரோகித் சர்மா கூறியதாவது:-

    எனது கை விரலில் எலும்பு முறிவு எதுவும் ஏற்படவில்லை. இதனால் நான் பேட்டிங் செய்ய வந்தேன். வங்காளதேச அணியின் 6 விக்கெட்டுகளை 69 ரன்னுக்குள் வீழ்த்திய பிறகு 271 ரன்கள் எடுக்க விட்டது மிகப்பெரிய தவறாகும்.

    எங்களது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்படவில்லை. தொடக்கத்தில் அபாரமாக வீசினார்கள். மிடில் ஓவரிலும், கடைசி கட்டத்திலும் ரன்களை வாரி கொடுத்தனர். இது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்த குறைகளை நிவர்த்தி செய்வது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். ஹசன் மிராஸ், மகமதுல்லா சிறப்பாக ஆடினார்கள். அவர்களது பார்ட்னர் ஷிப்பை உடைக்க முடியவில்லை.

    எங்களது அணியில் உள்ள சில வீரர்களுக்கு காயம் பிரச்சினை இருந்தது. இதன் அடிப்படை காரணம் குறித்து யோசிக்க வேண்டும். வீரர்கள் முழு உடல் தகுதி இல்லாமல் அணியில் விளையாடுகிறார்கள். அப்படி இருந்தால் உங்களால் வெற்றி பெற முடியாது.

    இந்திய அணிக்காக ஆடும் போது 100 சதவீத உடல் தகுதியுடன் இருக்க வேண்டும். இது குறித்து ஆய்வு செய்வது அவசியம்.

    வீரர்கள் தொடர்ந்து போட்டிகளில் விளையாடி கொண்டு இருக்க முடியாது. அவர்களுடைய பணிச் சுமையையும் நாம் கண்காணிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கையில் போடப்பட்ட தையலோடு, பேட் செய்த அவர் 28 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்தார்.
    • அதிர்ஷ்டவசமாக, எலும்பு முறிவு இல்லை, அதனால் என்னால் பேட்டிங் செய்ய முடிந்தது என்று ரோஹித் கூறினார்.

    இந்தியா -வங்காளதேச அணிகளுக்கு இடையே நேற்று நடந்த இரண்டாவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி சிறப்பாக விளையாடி 271 ரன்கள் எடுத்தது. 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய களமிறங்கியது.

    இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 266 ரன்கள் எடுத்தனர். எனவே, வங்காளதேச அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி ஒரு நாள் தொடரை வென்றது.

    இந்த போட்டியில் கைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக பாதியிலேயே களத்தில் இருந்து வெளியேறினார் கேப்டன் ரோகித் சர்மா. இதனால் அவர் பேட்டிங்கின் போதும் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கவில்லை. ஒரு கட்டத்தில் இந்திய அணி தொடர்ந்து விக்கெட்களை இழந்து தோல்வியின் விளிம்புக்கு சென்ற நிலையில் ஒன்பதாவதாக வீரராக களமிறங்கினார்.

    கையில் போடப்பட்ட தையலோடு, கிளவுஸை வெட்டி பேட் செய்த அவர் 28 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்தார். இதில் 3 பவுண்டரிகளும் 5 சிக்ஸர்களும் அடக்கம். ஆனாலும் கடைசி வரை போராடியும் அவரால் இந்திய அணியை வெற்றிப் பெறவைக்க முடியவில்லை. ஆனாலும் அவரின் போராட்ட குணத்தை ரசிகர்கள் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.

    அந்த வகையில் ரோகித் சர்மாவின் மனைவி ரித்திகா சஜ்தே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனதில் தோன்றுவதை அப்படியே வெளியே சென்று செய்யும் உனக்குள் இருக்கும் மனிதனை பார்க்கையில் மிகவும் பெருமையாக உள்ளது. ஐ லவ் யூ என பதிவிட்டுள்ளார்.

    போட்டிக்கு பின் பேசிய ரோஹித், கட்டை விரலில் இடப்பெயர்ச்சி இருப்பதாக ஒப்புக்கொண்டார். ஆனால் அவருக்கு எலும்பு முறிவு ஏற்படவில்லை என்பதையும் உறுதிப்படுத்தினார். ஹிட்மேனால் அவர் எவ்வளவு காலம் வெளியேறுவார் என்பதை தெளிவுபடுத்த முடியாத நிலையில், தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அவரை 3வது ஒருநாள் போட்டியில் இருந்து விலக்கினார்.

    "இது (கட்டைவிரல் காயம்) பெரிதாக இல்லை. சில இடப்பெயர்வு மற்றும் சில தையல்கள். அதிர்ஷ்டவசமாக, எலும்பு முறிவு இல்லை, அதனால் என்னால் பேட்டிங் செய்ய முடிந்தது என்று ரோஹித் கூறினார். பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் டிராவிட், ரோஹித் தனது கட்டைவிரல் காயத்தை பகுப்பாய்வு செய்ய மும்பைக்கு விமானத்தில் செல்வார் என்று கூறினார். சோதனைக்குப் பிறகுதான் அவர் டெஸ்ட் தொடரில் பங்கேற்க முடியும் என தெளிவுபடுத்தியுள்ளார்.

    • அவருக்கு இந்திய அணியில் சில போட்டிகள் விளையாட வாய்ப்புக் கிடைத்தது.
    • உம்ரான் மாலிக் 140 மற்றும் 150 கிமீவேகங்களில் பந்துவீசி அசத்தி வருகிறார்.

    கடந்த ஆண்டே தனது அதிவேகப் பந்துகளால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் உம்ரான் மாலிக். இந்நிலையில் இந்த ஆண்டு மேலும் மெருகேறி பேட்ஸ்மேன்களை திணறவைத்து வருகிறார். இதையடுத்து அவருக்கு இந்திய அணியில் சில போட்டிகள் விளையாட வாய்ப்புக் கிடைத்தது. தற்போது வங்காள தேசம் அணிக்கான தொடரில் விளையாடி வருகிறார்.

    உம்ரான் பந்துவீச்சு குறித்து சுனில் கவாஸ்கர் கூறியதாவது:-

    சச்சின் டெண்டுல்கரின் ஆட்டத்துக்குப் பிறகு இவரின் ஆட்டத்தை நான் ஆர்வமாக பார்க்கிறேன் எனக் கூறி அவரைக் கொண்டாடியுள்ளார். உம்ரான் மாலிக் 140 மற்றும் 150 கிமி வேகங்களில் பந்துவீசி அசத்தி வருகிறார்.

    • வங்காள தேச அணிக்கெதிரான முதல் ஆட்டத்தில் கடைசி விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை
    • 2-வது போட்டிகளில் இலக்கை எட்ட முடியாமல் 5 ரன்னில் இந்தியா தோல்வி அடைந்தது.

    இந்தியா- வங்காள தேச அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் நாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறும் நிலையில் இருந்தது. ஆனால், கடைசி விக்கெட்டை வீழ்த்த முடியாமல் தோல்வியை சந்தித்தது.

    மெஹிதி ஹசன் ஆட்டமிழக்காமல் 39 பந்தில் 38 ரன்கள் சேர்க்க, வங்காள தேசம் கடைசி விக்கெட்டுக்கு 51 ரன்கள் எடுத்தது.

    நேற்று நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் ஒரு கட்டத்தில் வங்காளதேசம் 69 ரன்களுக்குள் 6 விக்கெட்டை இழந்திருந்தது. அதன்பின் மெஹிது மெஹ்முதுல்லா ஜோடி அபாரமாக விளையாடியது, மெஹிதி சதம் அடிக்க வங்காளதேசம் 271 ரன்கள் குவித்துவிட்டது.

    பின்னர் களம் இறங்கிய இந்திய அணி 266 ரன்கள் அடித்தது. இதனால் இந்திய அணி தோல்வியை சந்தித்தது.

    இந்திய பேட்ஸ்மேன்கள் யாரும் சரியாக விளையாடவில்லை. இந்த நிலையில் இந்திய வீரர்களின் ஃபார்ம் குறித்து சேவாக் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    அதில் ''நம்முடைய பெர்ஃபார்மன்ஸ் கிரிப்டோ கரன்சியை விட வேகமாக சரிந்து விட்டது. அதில் இருந்து மீண்டு வர வேண்டியது அவசியம். எழுந்திருங்கள்'' எனப் பதிவிட்டுள்ளார்.

    டி20 உலகக் கோப்பையில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோரை தவிர்த்து மற்ற வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் ஒரு விக்கெட் கூட வீழ்த்த முடியாமல் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

    • நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் வங்காளதேச அணி 7 விக்கெட்டுக்கு 271 ரன்கள் சேர்த்தது.
    • மெஹிதி ஹசன் மிராஸ் 100 ரன்களுடனும் (83 பந்து, 8 பவுண்டரி, 4 சிக்சர்) களத்தில் இருந்தனர்.

    மிர்புர்:

    இந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் வங்காளதேச அணி திரில் வெற்றியை பெற்றதுடன், தொடரையும் வசப்படுத்தியது. இதில் 6 விக்கெட்டுகளை விரைவாக பறிகொடுத்து தள்ளாடிய வங்காளதேச அணியை 7-வது விக்கெட்டுக்கு ஆல்-ரவுண்டர்கள் மக்முதுல்லாவும், மெஹிதி ஹசன் மிராசும் கைகோர்த்து காப்பாற்றினர்.

    முந்தைய ஆட்டத்தின் ஹீரோவான மெஹிதி ஹசன் மிராஸ் இந்திய பந்து வீச்சை பின்னியெடுத்து உள்ளூர் ரசிகர்களை குஷிப்படுத்தினார். சதத்தை எட்ட கடைசி ஓவரில் அவருக்கு 15 ரன் தேவைப்பட்டது. ஷர்துல் தாக்குர் வீசிய இறுதி ஓவரில் 2 சிக்சர் பறக்க விட்ட அவர் கடைசி பந்தில் தனது 'கன்னி' சதத்தை பூர்த்தி செய்தார்.

    நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் வங்காளதேச அணி 7 விக்கெட்டுக்கு 271 ரன்கள் சேர்த்தது. மெஹிதி ஹசன் மிராஸ் 100 ரன்களுடனும் (83 பந்து, 8 பவுண்டரி, 4 சிக்சர்), நசும் அகமது 18 ரன்களுடனும் (11 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தனர். அவர்கள் கடைசி 10 ஓவர்களில் 102 ரன்கள் குவித்தனர்.

    பின்னர் 272 ரன்கள் இலக்கை நோக்கி இந்திய அணி ஆடியது. ஆனால் 50 ஓவர்களில் இந்திய அணியால் 9 விக்கெட்டுக்கு 266 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் 5 ரன் வித்தியாசத்தில் வங்காளதேசம் திரில் வெற்றியை ருசித்தது. இதனிடையே வங்காளதேச அணியின் ஆல்-ரவுண்டர் மெஹிதி ஹசன் மிராஸ் இந்த ஆட்டத்தில் பேட்டிங்கில் 8-வது வரிசையில் களம் புகுந்து சதம் அடித்துள்ளார். ஒரு நாள் போட்டி வரலாற்றில் 8 மற்றும் அதற்கு கீழ் வரிசையில் இறங்கி ஒரு வீரர் சதம் விளாசுவது இது 2-வது முறையாகும். இதற்கு முன்பு அயர்லாந்தின் சிமி சிங் 2021-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் 8-வது வரிசையில் இறங்கி 100 ரன்கள் அடித்திருந்தார்.

    • இதுவரை நடந்த இரு போட்டிகளிலும் வங்காளதேசம் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
    • நேற்றைய போட்டியில் ரோகித் சர்மா 28 பந்துகளில் 3 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் என 51 ரன்களை விளாசினார்.

    மிர்பூர்:

    இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த இரு போட்டிகளிலும் வங்காளதேசம் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

    நேற்று நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் காயம் காரணமாக கடைசி கட்டத்தில் இறங்கி அதிரடியாக ஆடிய ரோகித் சர்மா 28 பந்துகளில் 5 சிக்சர்கள், 3 பவுண்டரிகள் என 51 ரன்களை விளாசினார்.

    இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 500-க்கும் மேற்பட்ட சிக்சர்கள் அடித்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்தார்.

    ஒருநாள் போட்டிகளில் 256 சிக்சர்களும், டி20 தொடரில் 182 சிக்சர்களும், டெஸ்ட் தொடரில் 64 சிக்சர்களும் ரோகித் சர்மா விளாசியுள்ளார்.

    சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக சிக்சர்கள் (553) அடித்த வீரர்கள் பட்டியலில் மேற்கிந்தியத் தீவின் கிறிஸ் கெயில் முதலிடத்தில் உள்ளார். இரண்டாம் இடத்தில் ரோகித் சர்மா உள்ளார்.

    • 2-வது ஒருநாள் போட்டியில் 5 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது வங்காளதேச அணி.
    • அத்துடன், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது.

    மிர்புர்:

    இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக வங்காளதேசம் சென்றுள்ளது.

    இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரின் முதல் ஆட்டத்தில் வங்காளதேச அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

    நேற்று நடந்த 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்காளதேச அணி 2-0 என தொடரை வென்றது.

    இந்நிலையில் , வங்காளதேச அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருந்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் , குல்தீப் சென் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர் என இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

    • டெஸ்ட் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலை ஐசிசி நேற்று வெளியிட்டது.
    • இந்தியாவின் ரிஷப் பண்ட் 5-வது இடத்திலும், ரோகித் சர்மா 9-வது இடத்திலும், விராட் கோலி 11-வது இடத்திலும் உள்ளனர்.

    துபாய்:

    சர்வதேச டெஸ்ட் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி நேற்று வெளியிட்டது. அதில் பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் மார்னஸ் லபுசேன் 935 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    சமீபத்தில் பெர்த்தில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டின் போது இரட்டை சதம் மற்றும் சதம் அடித்தார். இதனால் அவர் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    அடுத்து, 2-வது இடத்தில் ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் உள்ளார். பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 3-வது இடத்திலும், இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் 4வது இடத்திலும் உள்ளார்.

    இந்திய வீரர்களில் ரிஷப் பண்ட் 5-வது இடத்திலும் ,கேப்டன் ரோகித் சர்மா 9-வது இடத்திலும், முன்னாள் கேப்டன் விராட் கோலி 11-வது இடத்திலும் உள்ளனர்.

    • வங்காளதேச அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியது.
    • விரலில் ஏற்பட்ட காயத்தையும் பொருட்படுத்தாமல் டி20 பாணியில் அதிரடி காட்டிய ரோகித் வெற்றியை நெருங்கினார்.

    மிர்புர்:

    வங்காளதேசத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி போராடி தோல்வி அடைந்தது. முதலில் ஆடிய வங்காளதேச அணி 271 ரன்கள் சேர்த்தது. அடுத்து ஆடிய இந்தியா 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 266 ரன்களே எடுத்தது. இதனால் வங்காளதேசம் 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அத்துடன் ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியது.

    இப்போட்டியில் பீல்டிங் செய்தபோது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் கட்டைவிரலில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் பேட்டிங்கின்போது 9வது வீரராக களமிறங்கினார்.

    இந்தியா 213 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து திணறியது. 46வது ஓவரில் தீபக் சாஹரின் விக்கெட்டை இந்தியா இழந்ததும், ரோகித் பேட்டிங் செய்ய வந்தார். விரலில் ஏற்பட்ட காயத்தையும் பொருட்படுத்தாமல் டி20 பாணியில் அதிரடி காட்டிய ரோகித் வெற்றியை நெருங்கினார். கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவை என்ற நிலையில் ரோகித் நிச்சயம் இலக்கை எட்டுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் கடுமையாக போராடிய அவரால் 14 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. மொத்தம் 28 பந்துகளை எதிர்கொண்ட அவர், 5 சிக்சர்கள் மற்றும் 3 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 51 ரன்கள் எடுத்து கடைசி பந்து வரை சேஸிங்கை உயிர்ப்புடன் வைத்திருந்தார்.

    இப்போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தபோதிலும், காயத்தின் வலியையும் பொருட்படுத்தாமல் ரோகித் சர்மா ஆடிய விதம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சமூக வலைத்தளங்களில் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். குறிப்பாக டுவிட்டரில் ரசிகர்கள் பாராட்டு மழை பொழிந்துள்ளனர்.

    'தலை வணங்குகிறேன் ரோஹித் சர்மா. கட்டைவிரல் காயத்துடன் பேட்டிங் செய்வதற்கு துணிச்சலான முடிவை எடுத்தார். அத்துடன் ஆட்டமிழக்காமல் 51 ரன்கள் எடுத்துள்ளார். ஆட்டத்தில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருந்தபோதும், அவர் தனது சக்தி முழுவதையும் கொடுத்து வெற்றியை நெருங்கினார். காயம்பட்ட கட்டைவிரலுடன் என்ன ஒரு அதிரடி..!' என ரசிகர்கள் ரோகித்தை பாராட்டி உள்ளனர்.

    ×