என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • புதுவை உப்பளத்தில் உள்ள ராஜீவ்காந்தி உள்விளையாட்டு அரங்கில் அகில இந்திய அளவில் கராத்தே தேக்வாண்டோ கிக் பாக்சிங் போட்டிகள் கடந்த 6-ந் தேதி தொடங்கி வரை நடைபெற்றது.
    • போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. விளையாட்டு வீரர்கள் நலச்சங்க தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார்.

    புதுச்சேரி:

    புதுவை உப்பளத்தில் உள்ள ராஜீவ்காந்தி உள்விளையாட்டு அரங்கில் அகில இந்திய அளவில் கராத்தே தேக்வாண்டோ கிக் பாக்சிங் போட்டிகள் கடந்த 6-ந் தேதி தொடங்கி வரை நடைபெற்றது.

    சப்-ஜூனியர், ஜூனியர், சீனியர் ஓபன் ஆகிய பிரிவுகளில் நடைபெற்ற இப்போட்டிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள், வீரர், வீராங்கனைகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

    போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. விளையாட்டு வீரர்கள் நலச்சங்க தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார். போலீஸ் ஐ.ஜி சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு கோப்பைகளை வழங்கினார். ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை புதுவை சேர்ந்த சங்கவி வென்றார்.

    அவருக்கு பரிசுக் கோப்பையும், 12 கிராம் தங்க நாணயமும் வழங்கப்பட்டது. 2-வது இடம் வென்ற புதுவையை சேர்ந்த சந்தோஷ்குமாருக்கு தங்க நாணயமும், கோப்பையும் வழங்கப்பட்டது. 3-வது பரிசு வென்ற யாமினிக்கு கோப்பையும், தங்க நாணயமும் வழங்கப்பட்டது.

    விழாவில் புதுவை விளையாட்டு வீரர்கள் நலச்சங்க சேர்மன் என்.ஆர்.ராஜா, தேசிய நடுவர்கள் மோகன், அமித்ராஜ், சந்துரு, பிரவீன்குமார், அய்யனார், விநாயகம், ராஜ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • முத்தியால்பேட்டை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. பிரகாஷ்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
    • வாக்களித்த மக்களுக்கு எப்படி எல்லாம் நல்ல திட்டங்கள் செயல்படுத்த முடியும் என்ற சிந்தித்து, அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும்.

    புதுச்சேரி:

    முத்தியால்பேட்டை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. பிரகாஷ்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஏனாம் சட்டமன்ற உறுப்பினரிடம் பெரும் எதிர் பார்ப்பை பார்த்து தான் அந்த தொகுதி மக்கள் வாக்களித்துள்ளனர். அந்த எதிர்பார்ப்பை

    எப்படி எல்லாம் பூர்த்தி செய்ய வேண்டும், அதற்கு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை விடுத்து அரசியல் முதிர்ச்சி பெற்ற முதல்-அமைச்சர் ரங்கசாமியை அவதூறாக பேசுவது கண்டனத்துக்குரியது.

    தற்போது தான் பேசியதை தவறாக புரிந்து செய்தி வெளியிட்டுள்ளதாக கூறும் ஏனாம் எம். எல்.ஏ. சிந்தித்து செயல்பட வேண்டும். வாக்களித்த மக்களுக்கு எப்படி எல்லாம் நல்ல திட்டங்கள் செயல்படுத்த முடியும் என்ற சிந்தித்து, அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும்.

    சுயேச்சை எம்.எல்.ஏ.வாக தேர்வானாலும் தற்போது ஆளும் கட்சி கூட்டணியில் உள்ள பா.ஜனதாவுக்கு ஆதரவளித்து வரும் நிலையில், அந்த கட்சியை சேர்ந்த 2 அமைச்சர்களிடம் தனது ெதாகுதிக்கு வேண்டிய திட்டங்களை நிறை வேற்றிக் கொள்ள முயற்சி செய்யவேண்டும். அதை தவிர்த்து முதல்- அமைச்சர் பற்றி தரக்குறைவாக பேசுவது தவறானதாகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கோவில்களுக்கும் ஒரு கால பூஜைக்காக தலா 20 ஆயிரம் நிதியை இந்து சமய அறநிலையத்துறைசார்பில் தி.மு.க. எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி கோவில் நிர்வாகிகளிடம் வழங்கினார்.
    • தி.மு.க. நிர்வாகிகள் தங்கமணி, மனோஜ், பாலாஜி, ரகுமான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதியில் உள்ள நேதாஜி நகர் -2 பகுதியில் அமைந்துள்ள தேசமுத்து மாரியம்மன் கோவில், மற்றும் நேதாஜி நகர் -3 பகுதியில் அமைந்துள்ள பெரியபாளையத்தம்மன் கோவில் ஆகிய 2 கோவில்களுக்கும் ஒரு கால பூஜைக்காக தலா 20 ஆயிரம் நிதியை இந்து சமய அறநிலையத்துறைசார்பில் தி.மு.க. எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி கோவில் நிர்வாகிகளிடம் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் கோவில் அறங்காவல் குழு நிர்வாகிகள் மற்றும் உப்பளம் தொகுதி செயலாளர் சக்திவேல், அவைத்தலைவர் ரவி, மாநில ஆதிதிராவிடர் துணை அமைப்பாளர் தங்கவேல், மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜி,மாநில மீனவர் அணி விநாயகமூர்த்தி, மாநில பிரதிநிதி காத்தலிங்கம், கிளை செயலாளர்கள் செல்வம் மற்றும் ராகேஷ், கவுதமன், தி.மு.க. நிர்வாகிகள் தங்கமணி, மனோஜ், பாலாஜி, ரகுமான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • நான் கடந்த சட்டசபை தேர்தலில் ஏனாம் தொகுதியில் போட்டியிட்டேன்.
    • புதுவை அரசு சுற்றுலாவை மேம்படுத்த மிகுந்த கவனம் செலுத்தி தேவையான நிதியை ஒதுக்கி வருகிறது.

    புதுச்சேரி:

    புதுவை பிராந்தியமான ஏனாமில் நலத்திட்டங்களை நிறைவேற்றக்கோரி பா.ஜனதா ஆதரவாளரான சுயேச்சை எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் கடந்த 6-ந்தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால் கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக்குக்கு நேற்று திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவருக்கு உடனடியாக டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இருப்பினும் அவர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு ஆதரவாக ஏனாம் பகுதி மக்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த நிலையில் கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக், முதலமைச்சர் ரங்கசாமி குறித்து அவதூறாக பேசியதுடன், அவர் ஏனாம் வந்தால் அவருக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று தெரிவித்து இருந்தார். இதை கண்டித்து என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் புதுவையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் முதலமைச்சர் ரங்கசாமி ஏனாம் செல்ல முடிவு செய்தார். அதன்படி நேற்று அங்கு நடைபெற்ற மக்கள் கலாசார நிறைவு விழாவில் ரங்கசாமி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    நான் கடந்த சட்டசபை தேர்தலில் ஏனாம் தொகுதியில் போட்டியிட்டேன். எனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். என்னால் உடனடியாக இங்கு வரமுடியவில்லை . ஏனாம் மக்கள் கலாச்சார நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்பதால் கலந்துகொண்டுள்ளேன். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.

    புதுவை அரசு சுற்றுலாவை மேம்படுத்த மிகுந்த கவனம் செலுத்தி தேவையான நிதியை ஒதுக்கி வருகிறது. புதுவையின் அனைத்து பிராந்திய பகுதிகளான காரைக்கால், மாகி, ஏனாம் ஆகியவை அனைத்தும் முழுமையாக வளர்ச்சி அடைய வேண்டும் என்பதுதான் அரசின் எண்ணம்.

    அரசின் ஒருசில திட்டங்களை நிறைவேற்ற தாமதம் ஆகலாம். அதற்கு நம்மிடம் முழு அதிகாரம் இல்லாதது தான் காரணம். எனவே எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற முடியாத சூழ்நிலை உள்ளது.

    நமது அரசு மத்திய அரசின் உதவியோடு சிறப்பான நிலையை அடைய அனைத்து நடவடிக்கைகள் எடுக்கும். மத்திய அரசிடம் கூடுதல் நிதியை பெறவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். மத்திய அரசு புதுவையில் ஜி20 மாநாட்டின் பிரதிநிதிகள் கூட்டம் நடத்த அனுமதி அளித்துள்ளது. இது நமக்கு கிடைத்த பெருமை.

    புதுவை அரசின் டெல்லி பிரதிநிதியான மல்லாடி கிருஷ்ணாராவ் ஏனாம் மக்கள் குறைகள் குறித்து மனுவாக அளித்துள்ளார். இதில் குறிப்பாக ஏனாமில் சூதாட்ட விடுதிகள் அமைக்க கூடாது என்பது தான். சூதாட்டம் மிகவும் மோசமானது. எந்த இடத்திலும் சூதாட்ட விடுதி இருக்கக்கூடாது என்பது தான் அரசின் எண்ணம். எனவே சூதாட்ட விடுதிகளுக்கு அரசு அனுமதி அளிக்காது. புதுவை மக்களின் வளர்ச்சிக்காக எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கைகளை ஏற்று, அவற்றை விரைவில் நிறைவேற்றப்படும்.

    இவ்வாறு முதலமைச்சர் ரங்கசாமி பேசினார்.

    விழாவில் எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே .டி. ஆறுமுகம், கே.எஸ்.பி. ரமேஷ், பாஸ்கரன், லட்சுமிகாந்தன், மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    • புதுவை மாநிலம் ஏனாம் பிராந்தியம் ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றங்கரையோரம் உள்ளது. ஏனாம் பிராந்தியத்தில் மக்கள் நல திட்டங்கள், வளர்ச்சி பணிகள் புறக்கணிக்கப்படுவதாக அந்த தொகுதியின் சுயேட்சை எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் கடந்த 1½ ஆண்டுகளாக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.
    • இதனிடையே முதல்-அமைச்சரை தான் தவறாக விமர்சிகக்வில்லை என்றும், தன்னுடைய பேச்சு தவறாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளதாக கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் விளக்கம் அளித்தார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலம் ஏனாம் பிராந்தியம் ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றங்கரையோரம் உள்ளது.

    ஏனாம் பிராந்தியத்தில் மக்கள் நல திட்டங்கள், வளர்ச்சி பணிகள் புறக்கணிக்கப்படுவதாக அந்த தொகுதியின் சுயேட்சை எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் கடந்த 1½ ஆண்டுகளாக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். அதோடு, ஏனாம் பிராந்தியத்தில் மக்கள் நல திட்டங்களை நிறைவேற்ற கோரி கடந்த சில மாதங்களுக்கு முன்பு சட்டமன்ற வளாகத்தில் உண்ணாவிரத போரா ட்டத்தை நடத்தினார்,

    அப்போது முதல்- அமைச்சர் ரங்கசாமியுடன் நடந்த பேச்சுவார்த்தையில், 15 கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதி அளிக்கப்பட்டது. ஆயினும் கோரிக்கைகள் இதுநாள் வரை நிறைவேற்றி தரப்படவில்லை என கூறப்படுகிறது.

    கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததை கண்டித்து நேற்று முன்தினம் முதல் ஏனாமில் கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவருடன் அவரது ஆதரவாளர்களும் உண்ணாவிரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு நேற்று கடையடைப்பு போராட்டமும் நடைபெற்றது.

    3-வது நாளாக இன்றும் ஏனாம் எம்.எல்.ஏ. வின் போராட்டம் தொடர்கிறது இதனிடையே, முதல்- அமைச்சர் ரங்கசாமியை ஏனாம் எம்.எல்.ஏ. அநாகரீகமாகவும், அவதூறாகவும பேசியதாக தகவல் வெளியானது இதனையடுத்து என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முதல்-அமைச்சரின் ஆதரவாளர்கள் புதுவையில் மறியல், உருவபடம் எரிப்பு உள்ளிட்ட போராட்டம் நடத்தினர்.

    இதனிடையே முதல்-அமைச்சரை தான் தவறாக விமர்சிகக்வில்லை என்றும், தன்னுடைய பேச்சு தவறாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளதாக கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் விளக்கம் அளித்தார்.மக்கள் நல திட்டங்களை தடுக்கும் முன்னாள் அமைச்சர் மல்லாடியைதான் விமர்சித்து பேசியதாகவும் அவர் கூறினார்.

    இந்த நிலையில், ஏனாமில், நேற்று முன்தினம் தொடங்கிய கலைவிழா இன்று நிறைவு பெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் ரங்கசாமி நேற்றிரவு ஏனாமிற்கு காரிலேயே புறப்பட்டார். அவருடன் அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம் எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ்.பி. ரமேஷ், லட்சுமிகாந்தன் உள்ளிட்டோரும் 10 வாகனங்களில் சென்றனர்.

    இன்று மதியம் 12.45 மணிக்கு அவர்கள் விஜயவாடா சென்றடைந்தனர், முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் அவர்களை வரவேற்றார். முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அங்குள்ள ஓட்டலில் ஓய்வு எடுத்தனர். அங்கிருந்து அவர்கள் மதியம் 3 மணிக்கு புறப்பட்டு ஏனாம் செல்ல உள்ளனர்.

    இதனிடையே ஏனாமில் எம்.எல்.ஏ. போராட்டத்தினால் பதட்டம் நிலவுகிறது. ஆந்திர மாநில எல்லை முதல் ஏனாம் முழுவதும் வழிநெடுகிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    கலைவிழா நடைபெறும் பாலயோகி மைதானத்தை சுற்றிலும் போலீஸ் காவல் பலப்படுத்தப்பட்டுள்ளது, ரங்கசாமி செல்லும் பாதைகளிலு் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.இன்று மாலை 7 மணிக்கு நிறைவு விழா நடக்கிறது. அதில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பங்கேற்று பேசுகிறார்.

    விழாவை புறக்கணிப்பதாக ஸ்ரீநிவாஸ் அசோக் எம்.எல்.ஏ. அறிவித்துள்ளார்.

    • ஏனாம் தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி ஸ்ரீனிவாஸ் அசோக் முதல்-அமைச்சர் ரங்கசாமி குறித்து அவதூறாக பேசியதாக கூறி புதுவை முழுவதும் என்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம், மறியல், உருவ பொம்மை எரிப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
    • பின்னர் திடீரென போராட்டக்காரர்கள் கொல்லப்பள்ளி ஸ்ரீனிவாஸ் அசோக்கின் உருவ பொம்மை எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    புதுச்சேரி:

    ஏனாம் தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி ஸ்ரீனிவாஸ் அசோக் முதல்-அமைச்சர் ரங்கசாமி குறித்து அவதூறாக பேசியதாக கூறி புதுவை முழுவதும் என்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம், மறியல், உருவ பொம்மை எரிப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    ஊசுடு தொகுதி என்.ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் பத்துக்கண்ணு சந்திப்பில் மாநில பிரதிநிதி வைத்தியநாதன் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. பின்னர் கொல்லப்பள்ளி ஸ்ரீனிவாஸ் அசோக் எம்.எல்.ஏ.வுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    இந்தப் போராட்டத்தில் அகரம் ஆசிரியர் கணேசன், சேதராப்பட்டு தங்கம், தாமோதரன், சிங்காரவேல், குமரேசன், ரவி, முத்தாலு வெங்கடேசன், காத்தவராயன், ஜனார்த்தனன், சக்திமுருகன், பாஸ்கர், அன்பரசன், முருகையன், பாலு, கோனேரி அரி, வீரப்பன், ரகுராமன், ஆறுமுகம், கணேசன் உள்ளிட்ட என்.ஆர் காங்கிரஸ் நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட என்.ஆர். காங்கிரஸ் கட்சியினரால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் திடீரென போராட்டக்காரர்கள் கொல்லப்பள்ளி ஸ்ரீனிவாஸ் அசோக்கின் உருவ பொம்மை எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வில்லியனூர் இன்ஸ்பெக்டர் வேலயன் தலைமையிலான போலீசார் வந்து அனைவரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

    • புதுவை கவுண்டன் பாளையம் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு தின தொடக்க விழா நடைபெற்றது.
    • மேலும் விளையாட்டு களின் அவசியத்தை எடுத்துக் கூறி சிறப்புரையாற்றினார். புதுவை மாநில கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார்.

    புதுச்சேரி:

    புதுவை கவுண்டன் பாளையம் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு தின தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். தலைமை விருந்தினராக சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தார்.

    மேலும் விளையாட்டு களின் அவசியத்தை எடுத்துக் கூறி சிறப்புரையாற்றினார். புதுவை மாநில கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார்.

    பள்ளி முதல்வர் கவிதா சுந்தர்ராஜன், கவுண்டன் பாளையம் ஊர் தலைவர் ஜெகதீஸ்வரன், என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் கோபி, பள்ளியின் மூத்த அலுவலக அதிகாரி மரிய ஸ்டெல்லா, பள்ளியின் ஆலோசகர் ரத்தின பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மாணவர்களின் அணி நடை , யோகாசனம், நடனம், பிரமிடு , போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பந்து சேகரிப்பு போட்டி, பெற்றோர்களுக்கு லக்கி சர்கிள் போன்ற போட்டிகள் நடைபெற்றன. இது அனைவரையும் கவரும் வண்ணம் அமைந்திருந்தது.

    விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் பொறுப்பாளர் ஜஸ்டின்,ப ள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் கார்த்திக் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் செய்திருந்தனர். 

    • சென்னையை அடுத்து ள்ள மாமல்லபு ரத்தில் தமிழ் ரத்னா விருது 2022 வழங்கும் விழா நடைபெற்றது.
    • இதன் மூலம் இவர்கள் புதுவைக்கு பெருமை சேர்ப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது' என தெரிவித்தார்.

    புதுச்சேரி:

    சென்னையை அடுத்து ள்ள மாமல்லபு ரத்தில் தமிழ் ரத்னா விருது 2022 வழங்கும் விழா நடைபெற்றது.

    இதில் சமூக நலனுக்காக பணியாற்றிய சேவகர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விருதுகளை வழங்கி பாராட்டினார்.

    புதுவையை சேர்ந்த யுவர் பேக்கர்ஸ் நிறுவனர் கிருஷ்ணராஜூக்கு சிறந்த இளம் வயது சமூக சேவகருக்கான 'யுவ ரத்னா 2022' விருது வழங்கப்பட்டது. விருதை வழங்கி பேசிய கவர்னர் தமிழிசை, பிளாஸ்டிக் இல்லாத புதுவையை உருவாக்கிட கிருஷ்ணராஜூ திறம்பட செயல்பட்டு வருவதாகவும், இதேபோல் பிரதமர் மோடியின் திட்டமான காசநோய் இல்லா பாரதத்தை உருவாக்குவோம் என்பதை நிறைவேற்றும் விதமாக யுவர் பேக்கர்ஸ் மிகப் பெரிய பங்காற்றி வருகிறது.

    இதன் மூலம் இவர்கள் புதுவைக்கு பெருமை சேர்ப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது' என தெரிவித்தார். அவரை தொடர்ந்து பேசிய யுவர் பேக்கர்ஸ் நிறுவனர் கிருஷ்ணராஜூ, ' தாங்கள் எனக்கு விருது வழங்கியதால் மகிழ்ச்சி அடைகிறேன்.

    அதேசமயம் விருதிற்காக மட்டும நான் சேவை செய்யவில்லை , மக்களு க்காகவும் இளைய சமுதாயத்தினருக்கும் சிறந்த சுற்றுச்சூழலை உருவாக்கி கொடுப்பது எங்கள் கடமையென உழைத்து வருகிறோம்' என கூறினார்.

    • புதுவை மாநிலத்தில் தி.மு.க., ஆட்சி காலத் தில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி அறிமுகப்படுத்தப்பட்டு ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
    • எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் சாலை மற்றும் சாக்கடை வசதி செய்ய மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்ட தி.மு.க. அமைப்பாளர் நாஜிம் எல்.எல்.ஏ நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை மாநிலத்தில் தி.மு.க., ஆட்சி காலத் தில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி அறிமுகப்படுத்தப்பட்டு ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது படிப்படியாக உயர்த்தி, தற்போது ரூ.2 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த நிதியை செலவு செய்ய வழிகாட்டு நெறிமுறையை அரசு வழங்கியுள்ளது.

    அதன்படி தொகுதி மேம்பாட்டு நிதியில் தெரு விளக்குகள் கூட போட அனுமதிக்க முடியாத நிலை உள்ளது. ஆனால் எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதி யில் செலவு செய்வதில் சிக்கல் இல்லை. பள்ளிகளுக்கு பெஞ்ச் நாற்காலி, குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் போன்றவற்றை எம். பி., நிதியில் பெறமுடியும்.

    எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் சாலை மற்றும் சாக்கடை வசதி செய்ய மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சபா நாயகரை சந்தித்து

    எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதிக்கான வழி ப்முறைகளை பின்பற்றி எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதிக்கான வழிமுறை களை மாற்றியமைக்க கோரினோம். சபாநாயகர் மனு தருமாறு கூறியுள்ளார். மனு வழங்க உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புதுவை உப்பளம் தொகுதிக்குட்பட்ட தமிழ்த்தாய் நகரில் உள்ள கம்பன் வீதியில் எல் வடிவ வாய்க்காலை தனிநபரின் சொந்த பயன்பட்டிற்காக சிமெண்ட் வைத்து வாய்க்காலை மூடி இருந்தார்.
    • உடனே சிமெண்ட் வைத்து மூடிய வாய்க்காலை உடைக்கும் படி அறிவுறுத்தினார். எம்.எல்.ஏ.வின் வேண்டுதலை ஏற்று உடனே மூடிய வாய்க்காலை சீர் செய்து கொடுத்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை உப்பளம் தொகுதிக்குட்பட்ட தமிழ்த்தாய் நகரில் உள்ள கம்பன் வீதியில் எல் வடிவ வாய்க்காலை தனிநபரின் சொந்த பயன்பட்டிற்காக சிமெண்ட் வைத்து வாய்க்காலை மூடி இருந்தார்.

    இதனால் அங்கு வாய்க்காலில் மழை நீர் மற்றும் கழிவு நீர்கள் செல்ல தடையாக இருந்தது.

    இதனை அப்பகுதி பொதுமக்கள் தொகுதி எம்.எல்.ஏ.அனிபால் கென்னடியிடம் முறையிட்டனர்.

    உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த வீட்டில் உள்ளவர்களிடம் இது குறித்து விசாரித்தார். அந்த வாய்க்காலில் கேபிள் செல்வதினால் அதனை சிமெண்ட் வைத்து மூடி உள்ளேன் என்று வீட்டின் உரிமையாளர் தெரிவித்தனர்.

    உடனே சிமெண்ட் வைத்து மூடிய வாய்க்காலை உடைக்கும் படி அறிவுறுத்தினார். எம்.எல்.ஏ.வின் வேண்டுதலை ஏற்று உடனே மூடிய வாய்க்காலை சீர் செய்து கொடுத்தனர்.

    பின்னர் மின் துறையிடம் செல்போனில் பேசி வாய்க்கால் சீராக ஓடும் அளவிற்கு கேபிளை கீழே புதைக்கும் படி அறிவுறுத்தினார்.

    மின் துறையினரும் அவ்வாறு செய்து கொடுப்பதாக உறுதியளித்தனர்.

    இதில் தொகுதி செயலாளர் சக்திவேல், அவைதலைவர் ரவி, மாநில இளைஞர் அணி ராஜி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • புதுவை மக்கள் பாதுகாப்பு பேரியக்க தலைவர் கராத்தே வளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
    • நமது மாணவர்கள் முன்னேற்ற த்திற்காக கல்வி ஊக்கத்தொகை மேலும் மாநில மக்களுக்காக பல நல்ல திட்டங்கள் அளித்தவர்.

    புதுச்சேரி:

    புதுவை மக்கள் பாதுகாப்பு பேரியக்க தலைவர் கராத்தே வளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிரு ப்பதாவது:-

    ஏனாம் எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி அசோக்கை வன்மையாக கண்டிக்கிறோம்.

    மக்களைப் பற்றியே சிந்தித்துக் கொண்டி ருப்பவர் முதல்-அமைச்சர் ரங்கசாமி. நமது மாநிலத்திற்கு அவர் செய்த நன்மைகள் பல.

    நமது மாணவர்கள் முன்னேற்ற த்திற்காக கல்வி ஊக்கத்தொகை மேலும் மாநில மக்களுக்காக பல நல்ல திட்டங்கள் அளித்தவர். குறிப்பாக, மிக சிறிய மக்கள் தொகை கொண்ட ஏனாம் பிராந்தியத்திற்கு பல கோடி ரூபாய்களை அளித்த தனால் மற்ற பிராந்திய மக்கள் மற்றும் புதுவை பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.

    மேலும் அந்த சிறு ஏனாம் பகுதிக்கு தொடர்ந்து அமைச்சரவையில் இடம் கொடுத்தவர். இதனால், அனைவரின் அவதூறு பேச்சுகளுக்கும் ரங்கசாமி ஆளானார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இவ்வாறு முதல்-அமைச்சர் ரங்கசாமி செய்த நன்மைகளை எல்லாம் மறந்துவிட்டு தான் தோன்றித்தனமாக முதல்-அமைச்சர் குறித்து அவதூறாக பேசிய ஏனாம் எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக்கை புதுவை மாநில மக்கள் பாதுகாப்பு பேரியக்கம் சார்பாக வன்மையாக கண்டிக்கிறது. இவர் மீது புதுவை அரசு காவல்துறை வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • அ.திமு.க. நிறுவனர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் விழாவை புதுவை மாநிலத்தில் சிறப்பாக கொண்டாடுவது குறித்து புதுவை தெற்கு மாநில அ.ம.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மோந்தி ரேஸ் வீதி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
    • மேலும் உறுப்பின ர்களுக்கான விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    அ.திமு.க. நிறுவனர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் விழாவை புதுவை மாநிலத்தில் சிறப்பாக கொண்டாடுவது குறித்து புதுவை தெற்கு மாநில அ.ம.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மோந்தி ரேஸ் வீதி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. தெற்கு மாநில அ.ம.மு.க. செயலாளர் யூ.சி. ஆறுமுகம் தலைமை தாங்கினார்.

    அவைத்தலைவர் ஹரிகிருஷ்ணன், இணைச் செயலாளர் தரணி தேவி, துணை செயலாளர்கள் பொக்கிலை மற்றும் முருகன், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சீதாராமன், தொழிற்சங்க பேரவை செயலாளர் சுரேஷ், முத்தியால்பேட்டை ராஜா, ஏம்பலம் தொகுதி செயலாளர் முருகன், அரியாங்குப்பம் தொகுதி செயலாளர் சரவணன், ராஜ் பவன் தொகுதி செயலாளர் கோடீஸ்வரன், உப்பளம் தொகுதி செயலாளர் பரிதிமாற் கலைஞன் மற்றும் நிர்வாகிகள் துரைசாமி, ராமு, முத்துகிருஷ்ணன், ராமநாதன், சிவனேசன், அருண், வேல்முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்

    மேலும் உறுப்பின ர்களுக்கான விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டது.

    ×