search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூர் தொகுதியில் வேட்பாளர்கள் முன்னிலை நிலவரம்
    X
    வேலூர் தொகுதியில் வேட்பாளர்கள் முன்னிலை நிலவரம்

    வேலூர் வாக்கு எண்ணிக்கை நிலவரம்- ஏ.சி.சண்முகத்தை பின்னுக்கு தள்ளிய கதிர் ஆனந்த்

    வேலூர் பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், ஆரம்பத்தில் பின்தங்கியிருந்த திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் தற்போது பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
    வேலூர்:

    வேலூர் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. துவக்கத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி சண்முகம் முன்னிலை பெற்றார். பின்னர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை பெற்றார். இவ்வாறு சிறிது நேரம் இருவரும் மாறி மாறி முன்னிலை பெற்றதால் கடும் போட்டி நிலவியது.

    ஒருகட்டத்தில் திமுக வேட்பாளரை விட ஏ.சி.சண்முகம் 13250 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். அதன்பின்னர் அவரது வாக்குகள் சரிவதும், உயர்வதுமாக இருந்தது. 

    வாக்கு எண்ணும் பணி

    11.30 மணி நிலவரப்படி ஏ.சி.சண்முகம் 3896 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். அவர் 2 லட்சத்து 45 ஆயிரத்து 273 வாக்குகளும், கதிர் ஆனந்த் 2 லட்சத்து 41 ஆயிரத்து 377 வாக்குகளும் பெற்றிருந்தனர். அதன்பின்னர் கதிர் ஆனந்தின் கை ஓங்கியது. அதிமுக வேட்பாளரை பின்னுக்குத் தள்ளி முன்னிலை பெற்றார். படிப்படியாக அவரது வாக்குகள் அதிகரிக்கத் தொடங்கியது. 

    மதியம் 1.30 மணி நிலவரப்படி கதிர் ஆனந்த் 11 ஆயிரத்து 644 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். அவர் மொத்தம் 4 லட்சத்து 68 ஆயிரத்து 870 வாக்குகள் பெற்றிருந்தார். அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 4 லட்சத்து 57 ஆயிரத்து 226 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி 25 ஆயிரத்து 953 வாக்குகளும் பெற்றிருந்தனர். அதன்பின்னர் ஏ.சி.சண்முகத்தின் வாக்குகள் சற்று அதிகரித்தது. 
    Next Story
    ×