search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்கு எண்ணும் இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார்
    X
    வாக்கு எண்ணும் இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார்

    வாக்கு எண்ணிக்கையில் புதிய திருப்பம்- உச்சகட்ட பரபரப்பில் வேலூர்

    வேலூர் பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், முன்னணி நிலவரம் அடுத்தடுத்து மாறி வருவதால் பரபரப்பான சூழல் காணப்படுகிறது.
    வேலூர்:

    வேலூர் பாராளுமன்ற பொதுத்தேர்தல் கடந்த 5-ந் தேதி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. சார்பில் ஏ.சி.சண்முகம், தி.மு.க. சார்பில் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி உள்பட 28 பேர் போட்டியிட்டனர். ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. துவக்கத்தில் அதிமுக வேட்பாளர் ஏ.சி சண்முகம் முன்னிலை பெற்றார். பின்னர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை பெற்றார். இவ்வாறு சிறிது நேரம் இருவரும் மாறி மாறி முன்னிலை பெற்றதால் கடும் போட்டி நிலவியது.

    காலை 10 மணி நிலவரப்படி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் மீண்டும் முந்தினார். காலை 10 மணி நிலவரப்படி ஏ.சி.சண்முகம் 85200 வாக்குகளும், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 77467 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி 3950 வாக்குகளும் பெற்றிருந்தனர். ஏ.சி.சண்முகம் 7733  வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். நோட்டாவுக்கு 1461 வாக்குகள் கிடைத்திருந்தன. 

    அடுத்த சுற்றிலும் ஏ.சி.சண்முகம் தொடர்ந்து முன்னிலை வகித்தார். ஒருகட்டத்தில் திமுக வேட்பாளரை விட ஏ.சி.சண்முகம் 13250 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். அதன்பின்னர் அவரது வாக்குகள் சரிவதும், உயர்வதுமாக இருந்தது. குறிப்பாக திமுக வேட்பாளரின் வாக்கு சதவீதம் வெகுவாக அதிகரித்தது.

    கதிர் ஆனந்த், ஏ.சி.சண்முகம்

    11.30 மணி நிலவரப்படி ஏ.சி.சண்முகம் 3896 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். அவர் 2 லட்சத்து 45 ஆயிரத்து 273 வாக்குகளும், கதிர் ஆனந்த் 2 லட்சத்து 41 ஆயிரத்து 377  வாக்குகளும் பெற்றிருந்தனர். அதன்பின்னர் கதிர் ஆனந்தின் கை ஓங்கியது. அதிமுக வேட்பாளரை பின்னுக்குத் தள்ளி முன்னிலை பெற்றார். 12 மணி நிலவரப்படி கதிர் ஆனந்த் 12158 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். 

    இவ்வாறு முன்னணி நிலவரம் அடுத்தடுத்து மாறியதால் வாக்கு எண்ணும் இடத்தில் பரப்பான சூழல் காணப்பட்டது. 
    Next Story
    ×