என் மலர்
செய்திகள்

அதிமுக கூட்டணி- தேமுதிகவுடன் இன்று உடன்பாடு ஏற்பட வாய்ப்பு
அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. 7 தொகுதிகள் கேட்டு வலியுறுத்தி வருவதால் கூட்டணி ஒப்பந்தம் தாமதமாகியுள்ளது. எனினும் இன்று உடன்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. #LSPolls #ADMK #DMDK #BJP
சென்னை:
அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாரதிய ஜனதாவுக்கு 5 தொகுதிகளும், பா.ம.க.வுக்கு 7 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த கூட்டணியில் தே.மு.தி.க.வைச் சேர்க்க திட்டமிடப்பட்டது. இதற்காக பா.ஜனதா தலைவர்கள் சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்தின் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்து பேசினர். அப்போது தே.மு.தி.க. தரப்பில் பா.ம.க.வுக்கு கொடுக்கப்பட்டது போல 7 தொகுதிகளை கண்டிப்பாக ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை அ.தி.மு.க. ஏற்கவில்லை.
இதன் காரணமாக அ.தி.மு.க. அணியில் தே.மு.தி.க. இணைவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து விஜயகாந்தின் மனதை மாற்றி எப்படியாவது கூட்டணிக்கு சம்மதிக்க வைக்க வேண்டும் என்பதில் அ.தி.மு.க., பா.ஜனதா தலைவர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
ஆனால் விஜயகாந்த் தனது முடிவில் இருந்து பின் வாங்காமல் தொடர்ந்து பிடிவாதம் பிடித்து வருகிறார்.
கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பாக பாரதிய ஜனதா தலைவர்கள் மட்டுமே விஜயகாந்தை சந்தித்து பேசி இருந்த நிலையில், அ.தி.மு.க. தலைவர்கள் யாரும் அவரை சந்திக்காமலேயே இருந்தனர். இதனால் அ.தி.மு.க., தங்களுக்கு உரிய மரியாதை அளிக்கவில்லை என்று விஜயகாந்த் அதிருப்தியில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.
நேற்று முன்தினம் இரவு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம், விஜயகாந்தை திடீரென சந்தித்து பேசினார். அப்போது அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணிக்கு வருமாறு விஜயகாந்துக்கு நேரடியாகவே அழைப்பு விடுக்கப்பட்டது.

கூட்டணியில் சேருவது தொடர்பாக தே.மு.தி.க. தரப்பில் இருந்து ‘கிரீன்சிக்னல்’ கிடைத்து விட்டதாகவும், இதன் தொடர்ச்சியாகவே ஓ.பன்னீர்செல்வம், விஜயகாந்தை சந்தித்து பேசியதாகவும் தகவல்கள் வெளியானது. இதனால் அ.தி.மு.க. அணியில் இணைவது பற்றி விஜயகாந்த் நேற்றே அறிவிப்பார் என்று எதிர் பார்க்கப்பட்டது.
கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய விஜயகாந்த் கூட்டணி தொடர்பாக எந்த முடிவையும் அறிவிக்காமலேயே வீட்டுக்கு புறப்பட்டு சென்று விட்டார்.
அ.தி.மு.க. அணியில் தே.மு.தி.க.வைச் சேர்ப்பதற்காக கடந்த மாதம் 20-ந் தேதியில் இருந்தே அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை தொடங்கி விட்டது. அன்று தான் பியூஸ்கோயல், விஜயகாந்தை சந்தித்து பேசினார். இதன் பிறகு பல கட்டங்களாக ரகசிய பேச்சுவார்த்தையும் நடந்துள்ளது. இறுதியாக ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசி விட்டார்.
ஆனால் அ.தி.மு.க. அணியில் இணைவது பற்றி விஜயகாந்த் தரப்பில் இருந்து இன்னும் எந்தவிதமான தகவல்களும் வெளியாகாமலேயே உள்ளது. அரசியல் களத்தில் வட மாவட்டங்களில் செல்வாக்குமிக்க கட்சியாக திகழும் பா.ம.க.வுக்கு போட்டியாகவே தே.மு.தி.க. வளர்ச்சி கண்டுள்ளது.
இதனால் அக்கட்சிக்கு இணையான அல்லது அதற்கும் அதிகமான தொகுதிகளை கேட்டுப்பெற்றால் மட்டுமே கூட்டணிக்கு சம்மதிக்க முடியும் என்று விஜயகாந்த் தொடர்ந்து கூறி வருகிறார்.
இதன் காரணமாகவே அ.தி.மு.க. - தே.மு.தி.க. கூட்டணி அமைவதில் இழுபறி நீடித்துக் கொண்டிருக்கிறது. இதனை பேச்சுவார்த்தை மூலம் விரைவில் முடிவுக்கு கொண்டு வர அ.தி.மு.க. பா.ஜனதா தலைவர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
அ.தி.மு.க. கூட்டணியில் பாரதிய ஜனதாவுக்கு 5 தொகுதிகளும், பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு விட்டன. கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு இடமும், ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக் கட்சிக்கு ஒரு இடமும் கொடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி தொகுதி என்.ஆர். காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 15 இடங்களை கூட்டணி கட்சிகளுக்கு அ.தி.மு.க. விட்டுக் கொடுத்துள்ளது. இன்னும் 25 தொகுதிகள் மட்டுமே மிச்சமிருக்கிறது. இதில் தே.மு.தி.க.வுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கி விட்டு தி.மு.க.வை போல 20 தொகுதிகளில் போட்டியிடலாம் என்று அ.தி.மு.க. கருதுகிறது.
ஆனால் விஜயகாந்தோ 7 தொகுதிகளை எப்படியாவது கேட்டுப்பெற்று விட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். பாரதிய ஜனதா கட்சியும், விஜயகாந்தை விட்டு விடக்கூடாது என்பதில் மிகுந்த கவனமுடன் உள்ளது. இதனால் இந்த விஷயத்தில் ஜெயிக்கப்போவது அ.தி.மு.க.வா? தே.மு.தி.க.வா? என்பதே இப்போது மிகப்பெரிய கேள்வியாகி உள்ளது.
இருப்பினும் அ.தி.மு.க.- தே.மு.தி.க. இடையே இன்று தொகுதி உடன்பாடு ஏற்பட உள்ளது. தே.மு.தி.க.வுக்கு 7 தொகுதிகள் கிடைக்குமா? இல்லை 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படுமா? என்பது அப்போது தெரிந்து விடும்.
இது தொடர்பான கூட்டணி ஒப்பந்தம் இன்று ஏற்பட்டால் மாலையில் நடக்கும் மோடி தலைமையிலான கூட்டத்தில் விஜயகாந்தும், பிரேமலதாவும் பங்கேற்பார்கள்.
இன்று உடன்பாடு ஏற்படாமல் போனால் அ.தி. மு.க.- தே.மு.தி.க. கூட்டணி நாளை இறுதி செய்யப்படவே வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. #LSPolls #ADMK #DMDK #BJP
அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாரதிய ஜனதாவுக்கு 5 தொகுதிகளும், பா.ம.க.வுக்கு 7 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த கூட்டணியில் தே.மு.தி.க.வைச் சேர்க்க திட்டமிடப்பட்டது. இதற்காக பா.ஜனதா தலைவர்கள் சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்தின் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்து பேசினர். அப்போது தே.மு.தி.க. தரப்பில் பா.ம.க.வுக்கு கொடுக்கப்பட்டது போல 7 தொகுதிகளை கண்டிப்பாக ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை அ.தி.மு.க. ஏற்கவில்லை.
இதன் காரணமாக அ.தி.மு.க. அணியில் தே.மு.தி.க. இணைவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து விஜயகாந்தின் மனதை மாற்றி எப்படியாவது கூட்டணிக்கு சம்மதிக்க வைக்க வேண்டும் என்பதில் அ.தி.மு.க., பா.ஜனதா தலைவர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
ஆனால் விஜயகாந்த் தனது முடிவில் இருந்து பின் வாங்காமல் தொடர்ந்து பிடிவாதம் பிடித்து வருகிறார்.
கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பாக பாரதிய ஜனதா தலைவர்கள் மட்டுமே விஜயகாந்தை சந்தித்து பேசி இருந்த நிலையில், அ.தி.மு.க. தலைவர்கள் யாரும் அவரை சந்திக்காமலேயே இருந்தனர். இதனால் அ.தி.மு.க., தங்களுக்கு உரிய மரியாதை அளிக்கவில்லை என்று விஜயகாந்த் அதிருப்தியில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.
நேற்று முன்தினம் இரவு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம், விஜயகாந்தை திடீரென சந்தித்து பேசினார். அப்போது அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணிக்கு வருமாறு விஜயகாந்துக்கு நேரடியாகவே அழைப்பு விடுக்கப்பட்டது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், தே.மு.தி.க.வுடனான கூட்டணி விரைவில் முடிவாகும் என்றார்.

கூட்டணியில் சேருவது தொடர்பாக தே.மு.தி.க. தரப்பில் இருந்து ‘கிரீன்சிக்னல்’ கிடைத்து விட்டதாகவும், இதன் தொடர்ச்சியாகவே ஓ.பன்னீர்செல்வம், விஜயகாந்தை சந்தித்து பேசியதாகவும் தகவல்கள் வெளியானது. இதனால் அ.தி.மு.க. அணியில் இணைவது பற்றி விஜயகாந்த் நேற்றே அறிவிப்பார் என்று எதிர் பார்க்கப்பட்டது.
கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய விஜயகாந்த் கூட்டணி தொடர்பாக எந்த முடிவையும் அறிவிக்காமலேயே வீட்டுக்கு புறப்பட்டு சென்று விட்டார்.
அ.தி.மு.க. அணியில் தே.மு.தி.க.வைச் சேர்ப்பதற்காக கடந்த மாதம் 20-ந் தேதியில் இருந்தே அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை தொடங்கி விட்டது. அன்று தான் பியூஸ்கோயல், விஜயகாந்தை சந்தித்து பேசினார். இதன் பிறகு பல கட்டங்களாக ரகசிய பேச்சுவார்த்தையும் நடந்துள்ளது. இறுதியாக ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசி விட்டார்.
ஆனால் அ.தி.மு.க. அணியில் இணைவது பற்றி விஜயகாந்த் தரப்பில் இருந்து இன்னும் எந்தவிதமான தகவல்களும் வெளியாகாமலேயே உள்ளது. அரசியல் களத்தில் வட மாவட்டங்களில் செல்வாக்குமிக்க கட்சியாக திகழும் பா.ம.க.வுக்கு போட்டியாகவே தே.மு.தி.க. வளர்ச்சி கண்டுள்ளது.
இதனால் அக்கட்சிக்கு இணையான அல்லது அதற்கும் அதிகமான தொகுதிகளை கேட்டுப்பெற்றால் மட்டுமே கூட்டணிக்கு சம்மதிக்க முடியும் என்று விஜயகாந்த் தொடர்ந்து கூறி வருகிறார்.
இதன் காரணமாகவே அ.தி.மு.க. - தே.மு.தி.க. கூட்டணி அமைவதில் இழுபறி நீடித்துக் கொண்டிருக்கிறது. இதனை பேச்சுவார்த்தை மூலம் விரைவில் முடிவுக்கு கொண்டு வர அ.தி.மு.க. பா.ஜனதா தலைவர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
அ.தி.மு.க. கூட்டணியில் பாரதிய ஜனதாவுக்கு 5 தொகுதிகளும், பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு விட்டன. கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு இடமும், ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக் கட்சிக்கு ஒரு இடமும் கொடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி தொகுதி என்.ஆர். காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 15 இடங்களை கூட்டணி கட்சிகளுக்கு அ.தி.மு.க. விட்டுக் கொடுத்துள்ளது. இன்னும் 25 தொகுதிகள் மட்டுமே மிச்சமிருக்கிறது. இதில் தே.மு.தி.க.வுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கி விட்டு தி.மு.க.வை போல 20 தொகுதிகளில் போட்டியிடலாம் என்று அ.தி.மு.க. கருதுகிறது.
ஆனால் விஜயகாந்தோ 7 தொகுதிகளை எப்படியாவது கேட்டுப்பெற்று விட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். பாரதிய ஜனதா கட்சியும், விஜயகாந்தை விட்டு விடக்கூடாது என்பதில் மிகுந்த கவனமுடன் உள்ளது. இதனால் இந்த விஷயத்தில் ஜெயிக்கப்போவது அ.தி.மு.க.வா? தே.மு.தி.க.வா? என்பதே இப்போது மிகப்பெரிய கேள்வியாகி உள்ளது.
இருப்பினும் அ.தி.மு.க.- தே.மு.தி.க. இடையே இன்று தொகுதி உடன்பாடு ஏற்பட உள்ளது. தே.மு.தி.க.வுக்கு 7 தொகுதிகள் கிடைக்குமா? இல்லை 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படுமா? என்பது அப்போது தெரிந்து விடும்.
இது தொடர்பான கூட்டணி ஒப்பந்தம் இன்று ஏற்பட்டால் மாலையில் நடக்கும் மோடி தலைமையிலான கூட்டத்தில் விஜயகாந்தும், பிரேமலதாவும் பங்கேற்பார்கள்.
இன்று உடன்பாடு ஏற்படாமல் போனால் அ.தி. மு.க.- தே.மு.தி.க. கூட்டணி நாளை இறுதி செய்யப்படவே வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. #LSPolls #ADMK #DMDK #BJP
Next Story






